PF ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 


.com/sortd-service/imaginary/v22-01/webp/medium/

பணியாளர் வருங்கால வைப்பு நிதி ( PF) திட்டத்தில் கட்டாயமாக சேர்வதற்கான மாதாந்திர அடிப்படை சம்பள வரம்பை தற்போதைய 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய விதிகளின்படி, மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை அடிப்படை சம்பளம் பெறுவோர் பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திலும் கட்டாயமாக சேர வேண்டும். இதற்கு மேல் சம்பளம் பெறுவோர் விருப்பத்தின் பேரில் சேரலாம். 20 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இந்த விதி கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது.

தற்போது 15,000 ரூபாய் சம்பள வரம்பின் அடிப்படையில், பணியாளர் 12 சதவீதமாக 1,800 ரூபாய் பங்களிப்பு செய்கிறார். நிறுவனமும் அதே அளவு பங்களிப்பை வழங்குகிறது. இதில், 3.67 சதவீதம் பி.எப். கணக்கிலும், 8.33 சதவீதம் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திலும் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிஎப் திட்டத்தில் கட்டாயமாக சேர்வதற்கான மாதாந்திர அடிப்படை சம்பள வரம்பை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

மேலும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது, நாளை விஸ்வகர்மா ஜெயந்தி. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி முக்கிய முடிவு எடுத்துள்ளார். தற்போதைய பி.எப். விதிகளின் படி சம்பள வரம்பு 15 ஆயிரம் ரூபாய் ஆக உள்ளது. இந்த வரம்பு 2014 ல் நிர்ணயம் செய்யப்பட்டது.

தற்போது இந்த வரம்பை 25 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தி உள்ளோம். 25 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் பெறுபவர்களும் பி.எப். வரம்பில் வருவார்கள். இதனால் 51 லட்சம் பணியாளர்கள் பலன்பெறுவார்கள். இதனால், அரசுக்கு ஆண்டுதோறும் 11,339 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். என்று அவர் கூறியுள்ளார்.சம்பள வரம்பு 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால், பணியாளரின் மாதாந்திர பி.எப்., பங்களிப்பு 3,000 ரூபாயாக அதிகரிக்கும். நிறுவனமும் அதே அளவு பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கும். இதன் வாயிலாக, பணியாளரின் பி.எப். சேமிப்பும், ஓய்வூதிய நிதிக்கான பங்களிப்பும் அதிகரித்து, நீண்டகால சமூக பாதுகாப்பு வலுப்பெறும். நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் நிறைவடைந்த பிறகு புதிய விதிமுறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

30 மாணவர்களுக்கும் குறைவாக 14,829 அரசு துவக்க பள்ளிகள்; தமிழகத்தை அதிர வைக்கும் சேர்க்கை சரிவு

 

தமிழகத்தில், 14 ஆயிரத்து 829 அரசு தொடக்கப் பள்ளிகளில், 30க்கும் குறைவான மாணவர்களே படித்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில், 24 ஆயிரத்து 349 அரசு தொடக்கப் பள்ளிகளில், 9 லட்சத்து 45 ஆயிரத்து 971 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. மாணவர் சேர்க்கை இன்றி, இந்தாண்டு, 246 அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.

வசதிகள் குறைவு

மேலும், 10 மாணவர்களுக்கு கீழ் படிக்கும் 3,027 பள்ளி, 20 மாணவர்களுக்கு கீழ் 6,635 பள்ளி, 30 மாணவர்களுக்கு கீழ், 5,167 பள்ளி என, மொத்தம், 14 ஆயிரத்து 829 பள்ளிகள் உள்ளன. இதன்படி, தமிழகத்தில், 60.90 சதவீத பள்ளிகளில், 30க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கல்வியாளர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இருந்தாலும், சில பெற்றோரிடம் தனியார் பள்ளியே சிறந்தது என்ற எண்ணம் உள்ளது. பல அரசு பள்ளிகளில் கட்டடம், கழிப்பறை, ஆய்வகம், விளையாட்டு மைதானம், ஸ்மார்ட் வகுப்பறை போன்ற வசதிகள் குறைவாக உள்ளன.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருந்தால் போதுமானது. இதன்படி, 30 மாணவர்களுக்கும் கீழ் உள்ள பள்ளிகளில், தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர், 10க்கும் கீழ் உள்ள பள்ளிகளில் தலைமையாசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களே, அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்த வேண்டி உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

அபாயம்

பெரும்பாலான அரசு தொடக்கப் பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் இல்லாததால், பெற்றோர் ஆரம்பத்திலேயே தனியார் பள்ளிகளை நாடுகின்றனர்.அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகப்படுத்த, மருத்துவ, தொழில் படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக் கும் மாணவர்கள் உயர்கல்வி பெற மாதம், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை உட்பட பல சலுகைகள் வழங்கப்பட்டன.இருப்பினும், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவதால், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு, அரசு வேலை பறிபோகும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

gallerye_044752480_4323943


 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 

 

newindianexpress2025-03-200unyf6ygSupreme-Court-of-India

பள்ளிகள் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் 15.12.2025 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்திரவிட கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிா்த்து கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.பின்னா் 15.12.2025 அன்று அந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா வித்யாலயாவை நிறுவுவதற்குத் தேவையான நிலத்தின் அளவை(களை) அடையாளம் காணுமாறு உத்தரவிட்டது.இந்த நிலையில், ஜவஹா் நவோதயா பள்ளிகள் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஏ.ஜி. மசிஹ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், “தமிழ்நாடு அரசு

 தங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ள
 வேண்டும். தமிழ்நாட்டு மண்ணில் ஹிந்தி
 கற்பிக்கப்படவே கூடாது என்ற நிலைப்பாடு
 இருக்கக்கூடாது.

உங்கள் மாநிலத்தில் நீங்கள் செய்துவரும் நல்ல விஷயங்களுடன் கூடுதலாக ஒன்றைச் சேர்த்துக்கொள்வது உங்கள் தரத்தைக் குறைத்துவிடாது. தில்லியிலிருந்து வரும் ஒரு விஷயம் சென்னையின் தரத்தைக் குறைத்துவிடாது. சென்னை மக்கள் தில்லியை அந்நியப்படுத்தக்கூடாது. அதேபோல், தில்லியும் சென்னையை அந்நியப்படுத்தக்கூடாது” எனத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “இது மாநிலத்தின் கொள்கைக்கு எதிரானது. இது தமிழுக்கு மேலாக ஹிந்தியை முன்னிறுத்துகிறது. இத்தகைய ஒருங்கிணைப்பு அரசியலமைப்பின் நோக்கமல்ல. இது மத்திய அரசு நடத்தும் பள்ளி அல்ல. ஒரு சங்கத்தால் நடத்தப்படும் பள்ளி. இதில் ஹிந்திதான் மேலோங்கி இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டப்படுகிறது. ஒவ்வொரு விவகாரத்திலும் தனித்தனி கொள்கைகள் இருக்கின்றன, அதனடிப்படையிலேயே செயல்பட முடியும்” எனத் தெரிவித்தார்.


இருப்பினும், தமிழ்நாடு அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், “ஹிந்திதான் பிரச்னை என்றால் மத்திய - மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தலாம். எங்கள் முந்தைய உத்தரவை அமல்படுத்துங்கள். நிலத்தை கையகப்படுத்துமாறு நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. இடத்தைக் கண்டறியுமாறு மட்டுமே கேட்கிறோம்.

நான் ஒரு கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நீங்கள் கூற முடியாது. இன்று கல்வித் துறை என்றால், நாளை வேறொன்றாக இருக்கலாம். உங்கள் மனதிலிருக்கும் இந்த இறுக்கமான நிலையை நீங்கள் தளர்த்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் 15.12.2025 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மூன்று மாதத்துக்குள் செயல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்வதற்கான வசதி தற்போது IFHRMS போர்ட்டலில்...

 images%20(2)


"சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்வதற்கான வசதி தற்போது IFHRMS போர்ட்டலில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முறை விதிமீறல்களைக் கண்காணிப்பதை எளிதாக்கும்," என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சமீபத்தில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், டிசம்பர் 31, 2025-வுடன் முடிவடையும் காலண்டர் ஆண்டிற்கான சொத்து விவர அறிக்கைகளை, அக்டோபர் 31, 2026-க்குள் தாக்கல் செய்ய ஊழியர்களுக்கு அறிவுறுத்துமாறு செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், நீதிபதிகள், TNPSC செயலாளர் மற்றும் சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் ஆகியோருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.சொத்து விவரம் தாக்கல் செய்யப்பட்ட தேதி ஊழியரின் 'ஆண்டு ரகசிய அறிக்கையில்' (Annual Confidential Report) பதிவு செய்யப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால், அது சேவை நடத்தை விதிகளின் மீறலாகக் கருதப்படும்.


 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தொலைந்த பள்ளிக்கல்வி சான்றிதழ்கள் அசல் நகல் பெற என்ன செய்ய வேண்டும்?

 

c+101


தொலைந்த பள்ளிக்கல்வி சான்றிதழ்கள் அசல் நகல் பெற என்ன செய்ய வேண்டும்?


 படி 1 (காவல் துறை அறிக்கை): சான்றிதழ் தொலைந்துவிட்டதென்றால், உடனடியாக தமிழ்நாடு காவல் துறையின் இணையதளத்தில் LDR (Lost Document Report) அல்லது ஆன்லைன் FIR பதிவு செய்து, அந்தப் புகாரின் நகலைப் பெற வேண்டும். 


 படி 2 (வட்டாட்சியர் சான்றிதழ்): காவல் துறை அறிக்கையை வைத்துக் கொண்டு, உங்களது பகுதி தாசில்தாரிடம் (Tahsildar) "சான்றிதழ் தேடியும் கிடைக்கவில்லை" என்ற சான்றிதழைப் (Non-Traceable Certificate) பெற வேண்டும். (குறிப்பு: சான்றிதழ் தீ விபத்திலோ அல்லது வெள்ளத்திலோ சேதமடைந்திருந்தால் நேரடியாக தாசில்தாரிடம் சான்றிதழ் பெறல.

படி 3 (பள்ளித் தலைமை ஆசிரியர் ஒப்புதல்): பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன், தாசில்தார் சான்றிதழ், LDR நகல் மற்றும் கட்டணம் செலுத்திய அரசாங்க சலான் (Challan) ஆகியவற்றை இணைத்து, நீங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் (Headmaster) சமர்ப்பிக்க வேண்டும்.

 படி 4 (அரசிதழ் வெளியீடு மற்றும் ஒப்புதல்): பள்ளித் தலைமை ஆசிரியர் அதனைச் சரிபார்த்து மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு (DEO Office) அனுப்புவார். அங்கு சான்றிதழ் தொலைந்தது குறித்த அறிவிப்பு அரசாங்க அரசிதழில் வெளியிடப்படும்.
படி 5 ( சான்றிதழ் பெறுதல்): அதன் பின்னர், சென்னை அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் புதிய இரண்டாம் படி (Duplicate) மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்பட்டு உங்களது பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளலாம்.



 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

செப்.17ம் தேதி உள்ளூர் விடுமுறை. - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 

3500

செப்.17ம் தேதி மதுரையில் உள்ளூர் விடுமுறை.


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி செப்.17ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.


அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.
இதை ஈடு செய்ய செப்.26ம் தேதி (சனி) பணிநாளாகச் செயல்படும்.



 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பள்ளி வளாகங்கள்/விளையாட்டு மைதானங்களை கற்றல்-கற்பித்தல் மற்றும் கல்விச் செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் - அரசாணை மற்றும் அரசிதழ் வெளியீடு.

 

1149835

பள்ளிக்கல்வித் துறை - அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி மற்றும் அனைத்து வகைத் தனியார் பள்ளி வளாகங்கள்/விளையாட்டு மைதானங்களை கற்றல்-கற்பித்தல் மற்றும் கல்விச் செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்துதல் - பள்ளி வளாகங்களில் அரசியல் கட்சிகள், மத சார்புடைய அமைப்புகள், சாதிய அமைப்புகளின் கூட்டங்கள், நிகழ்வுகள், சடங்குகள் மற்றும் பயிற்சிகளுக்கு முழுமையான தடை விதித்தல் அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

TN School Prohibition G.O. & Gazette

👇👇👇👇

Download here




 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

How to Update SMC Reconstitution Members Details in EMIS Portal? | SMC புதிய உறுப்பினர்கள் பதிவு செய்யும் முறை!

 1136491


How to Update SMC Reconstitution Members Details in EMIS Portal? | SMC புதிய உறுப்பினர்கள் பதிவு செய்யும் முறை!


💁‍♂️SMC மறுசீரமைப்பு உறுப்பினர்கள் தகவல்களை எமிஸ் (EMIS) தளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை!

💁‍♂️​அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் SMC (School Management Committee - பள்ளி 

💁‍♂️மேலாண்மைக் குழு) மறுசீரமைப்பு கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு,

💁‍♂️ புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

💁‍♂️​இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் விவரங்களை 

💁‍♂️TN-EMIS (Tamil Nadu Educational Management Information System) இணையதளத்தில் அல்லது செயலியில் 



💁‍♂️எவ்வாறு சரியாக உள்ளீடு/அப்டேட் (Update) செய்வது என்பது குறித்த தெளிவான வழிமுறைகள்

💁‍♂️ இந்த வீடியோவில் படிப்படியாக (Step-by-Step) விளக்கப்பட்டுள்ளன.

👇👇👇

https://youtu.be/BTTKaGQaYIA


 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிறைவு செய்துள்ள பள்ளிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களின் விவரங்களை *Member Registration* விருப்பத்தைத் தேர்வு செய்து எவ்வாறு பதிவு செய்வது என்பதற்கான செயல்முறை காணொளி

 


பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு  நிறைவு செய்துள்ள பள்ளிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களின் விவரங்களை *Member Registration* விருப்பத்தைத் தேர்வு செய்து எவ்வாறு பதிவு செய்வது என்பதற்கான செயல்முறை காணொளி இது.


மறுகட்டமைப்பு நிறைவடைந்த பள்ளிகள் உறுப்பினர் பதிவினை நிறைவு செய்வதற்கான கடைசி நாள் *18.09.2026 (வெள்ளிக்கிழமை)* ஆகும்.


நன்றி!




 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

இஸ்ரோ - பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள் அறிவிப்பு.

 

1158423

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி சார்பாக, 04-10-2026 முதல் 10-10-2026 வரை நடைபெற உள்ள உலக விண்வெளி வார விழாவை (World Space Week) முன்னிட்டு 9,10,11 மற்றும் 12 வகுப்பு பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சார்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம்.

கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் அவசியம். கட்டுரைகள் தெளிவாகவும் திருத்தமாகவும் மாணவ, மாணவியர்களின் கையெழுத்தில் A4(210 × 297 மி.மீ) அளவு தாளில் 4 பக்கங்களுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதியிருக்கவும் வேண்டும். போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவியர்களின் பெயர், வயது, வகுப்பு. பள்ளியின் பெயர், பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, தொலைபேசி / அலைபேசி எண் ஆகியவை முன்தாளில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த கட்டுரை தங்களால்தான் எழுதப்பட்டது என்பதை உறுதிப்படுத்த பள்ளியின் முதல்வர் / தலைமை ஆசிரியரிடமிருந்து ஒப்புதல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கட்டுரைகள் 25 செப்டம்பர் 2026 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்கும்படி தபால் மூலம் அனுப்புதல் வேண்டும்.


மூத்த நிர்வாக அதிகாரி,

இஸ்ரோ உந்து வளாகம் (ஐபிஆர்சி), மகேந்திரகிரி.

திருநெல்வேலி மாவட்டம், அஞ்சல் குறியீடு-627 133,

தமிழ்நாடு.


தபால் உறையின்மேல் "கட்டுரைப்போட்டி” என்று குறிப்பிடப்பட வேண்டும். தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பரிசு பெற்றவர்களின் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்பட்டு 2026 அக்டோபர் 9-ம் தேதி மகேந்திரகிரியில் நடக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும், தொலைபேசி எண் : 04637 281825.



 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மகப்பேறு விடுப்பு சார்ந்த மொத்த தகவல் தொகுப்பு அரசாணைகளுடன்..

 

157188-maternity-leave

அடிப்படை விதி 101 இன் படி திருமணமான பெண் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படுகிறது .

அது சார்ந்த மொத்த தகவல் தொகுப்பு அரசாணைகளுடன் பகிர்கிறேன்


தகவலுக்காக.

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம்

14/9/26


Google drive மூலம்  open செய்யலாம்

👇👇👇

https://drive.google.com/file/d/1JXvBmi0gs_Yu2Mbos_emiQg5lyUIjBhw/view?usp=drivesdk



 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

How to Update SMC Reconstitution Members Details in EMIS Portal? | SMC புதிய உறுப்பினர்கள் பதிவு செய்யும் முறை!

 

1136491


How to Update SMC Reconstitution Members Details in EMIS Portal? | SMC புதிய உறுப்பினர்கள் பதிவு செய்யும் முறை!


💁‍♂️SMC மறுசீரமைப்பு உறுப்பினர்கள் தகவல்களை எமிஸ் (EMIS) தளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை!

💁‍♂️​அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் SMC (School Management Committee - பள்ளி 


💁‍♂️மேலாண்மைக் குழு) மறுசீரமைப்பு கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு,



💁‍♂️ புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


💁‍♂️​இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் விவரங்களை 


💁‍♂️TN-EMIS (Tamil Nadu Educational Management Information System) இணையதளத்தில் அல்லது செயலியில் 


💁‍♂️எவ்வாறு சரியாக உள்ளீடு/அப்டேட் (Update) செய்வது என்பது குறித்த தெளிவான வழிமுறைகள்💁‍♂️ இந்த வீடியோவில் படிப்படியாக (Step-by-Step) விளக்கப்பட்டுள்ளன.

👇👇👇

https://youtu.be/BTTKaGQaYIA



 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மதிப்பீடு தேர்வு (Assessment) நடைபெறுதல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

 1162884

உயர்கல்வி வழிகாட்டித் திட்டம் - 2026-2027 ஆம் கல்வியாண்டில் பயிற்சி பெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மதிப்பீடு தேர்வு (Assessment) நடைபெறுதல் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ் நாடு மாதிரிப் பள்ளிகள், உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்..!!

பார்வையில் காணும் இவ்வலுவலக செயல்முறைகளில் மாவட்ட அளவில் பயிற்சிப் பெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், EMIS இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்த ஆசிரியர்களால் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வில் பங்குபெற முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது.


தற்போது, மாவட்ட அளவில் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள், சார்ந்த பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் பள்ளி அளவில் பயிற்சி வழங்குவதால், இம்மதிப்பீட்டுத் தேர்வினை மாவட்ட மற்றும் பள்ளி அளவில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் 21.09.2026 முதல் 30.09.2026 வரை EMIS இணையதளத்தில் இம்மதிப்பீட்டு தேர்வினை தவறாது மேற்கொள்ள சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அலுவலர்கள்



இணைப்பு:


EMIS இணையதளத்தில் மதிப்பீட்டுத் தேர்வு மேற்கொள்ள இணையதள முகவரி👇👇👇


https://exams.tnschools.gov.in/login


District 8th Assessment CEO Letter.pdf

👇👇👇👇

Download here



 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க