தமிழ்நாட்டில் புதிய கேந்திரிய வித்யாலயா (KV) பள்ளி துவக்கம். மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு

 
தேனி மாவட்டம்


கேந்திரிய வித்யாலயாப் பள்ளி நடப்பாண்டிலிருந்து (2026-2027) செயல்பட உள்ளது-மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
826131



தேனி நகராட்சியில் கேந்திரிய வித்யாலயாப் பள்ளி (KV School) அமைக்க மத்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டதுடன், இப்பள்ளிக்கான முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தேனி மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயாப் பள்ளி அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அருகில் நிரந்தரமாகப் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதுவரை, தற்காலிகமாக தேனி-அல்லிநகரம் நகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் செயல்பட உள்ளது. நடப்பாண்டிலிருந்து (2026-2027) 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவுடன் செயல்படத்தொடங்கும். பின்னர். தேவைக்கேற்ப மற்றும் உரிய நிர்வாக ஒப்புதலின் அடிப்படையில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.

மேலும், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை 30 நாட்களுக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பணி​யில் உள்ள ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை

 hindutamil-prod%2F2026-07-08%2F0csks8pc%2FIMGMadrasHighCourtBu219CDTOAE0

பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்கு நடத்​தப்​பட்ட சிறப்பு தகு​தித் தேர்வு (டெட்) முடிவு​களை வெளி​யிட கூடாது என்று இடைக்​காலத் தடை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்​டுள்​ளது.

கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, பணி​யில் உள்ள ஆசிரியர்​களும் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. ஐந்து ஆண்​டு​களில் பணி ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்​களுக்​குத் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெறு​வதற்​கான காலக்​கெடுவை மேலும் 3 ஆண்​டு​களுக்கு நீட்​டித்து உச்ச நீதி​மன்​றம் கடந்த மே மாதம் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், பிற்​படுத்​தப்​பட்ட, மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட, சீர் மரபினர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண்​களை 55-ல் இருந்து 50 சதவீத​மாக​வும், பட்​டியலின மற்​றும் பழங்​குடி​யினருக்​கான குறைந்​த​பட்ச மதிப்​பெண்​களை 45-ல் இருந்து 40 சதவீத​மாக​வும் குறைத்து தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்​பித்​தது.

இதே​போல் பொதுப் பிரி​வினருக்​கான குறைந்​த​பட்ச மதிப்​பெண்​களை 60-ல் இருந்து 50 சதவீத​மாக குறைக்க கோரி பொதுப்​பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்​ளிட்ட 3 ஆசிரியர்​கள், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஏற்​கெனவே வழக்கு தொடர்ந்​திருந்​தனர்.

அதில், பிஹாரில் பொதுப்​பிரி​வினருக்கு குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண்​கள் 50 சதவீத​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல தமிழகத்​தி​லும் பொதுப்​பிரி​வினருக்​கான மதிப்​பெண்​களைக் குறைக்க உத்​தர​விட வேண்​டும்.

பொதுப்பிரிவினர்

ஏற்​கெனவே முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர் பணிக்கு விண்​ணப்பிக்க பொதுப்​பிரிவு ஆசிரியர்​களுக்கு 50 சதவீத மதிபெண்​கள் மட்​டுமே நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக பரிசீலிக்க அரசுக்கு உத்​தர​விட வேண்​டும் என்று அவர்​கள் கோரி​யிருந்​தனர்

பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்​கான சிறப்பு தகு​தித் தேர்வு நடந்து முடிந்​துள்ள நிலை​யி்ல், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, பொதுப்​பிரிவு ஆசிரியர்​களுக்​கான தகு​தித் தேர்​வில் குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண்​களைக் குறைப்​பது தொடர்​பாகத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்​க​வுள்​ள​தாக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த கொள்கை முடிவை நீதி​மன்​றத்​தில் தெரிவிக்க ஏது​வாக வழக்கு விசா​ரணையை ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளி வைத்​துள்ள நீதிப​தி, அது​வரை சிறப்பு தகு​தித் தேர்​வுக்​கான முடிவு​களை வெளி​யிட கூடாது என்று இடைக்​காலத் தடை வி​தித்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க



அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 - முழு விவரம்

அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 - முழு விவரம்


*1. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்*

விவரம் விளக்கம்

**திட்ட காலம்** 01.07.2026 முதல் 30.06.2031 வரை - 5 ஆண்டுகள்

**மாத சந்தா** ₹390 - ஜூலை 2026 சம்பளத்தில் இருந்து பிடித்தம்

**யாருக்கு** அனைத்து அரசு ஊழியர்கள் + ஓய்வூதியர்கள் + குடும்பத்தினர்

**அட்டை** IFHRMS-ல் இருந்து Download செய்யப்படும் e-Card

*2. IFHRMS-ல் என்னென்ன Upload பண்ணனும்? Deadline: 15.07.2026*

1.  *ஊழியர் + குடும்ப உறுப்பினர்கள் விவரம்* - பெயர், உறவு, DOB

2.  *ஆதார் எண்* - அனைவருக்கும் கட்டாயம்

3.  *பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்* - JPG/PNG Format


*3. IFHRMS-ல் Entry செய்யும் Step*

1.  `ifhrms.tn.gov.in` Login பண்ணுங்க

2.  `Employee Login` → `Health Insurance 2026` Module-க்கு போங்க

3.  `Add Family Members` Click பண்ணி பெயர், ஆதார், உறவுமுறை Add பண்ணுங்க

4.  ஒவ்வொருவருக்கும் ஆதார் + போட்டோ Upload பண்ணுங்க

5.  `Submit` கொடுத்ததும் DDO-க்கு Approval-க்கு போகும்

6.  DDO Approve பண்ணதும் உங்க *e-Health Card* Download Option வரும்


*4. இந்த காப்பீட்டுல என்ன கிடைக்கும்?*

பழைய திட்டம் மாதிரியே `Cashless Treatment` 1044 நோய்கள் + அறுவை சிகிச்சைகள். 

Govt + Empaneled Private Hospital-ல் சிகிச்சை எடுக்கலாம்.


*5. முக்கிய குறிப்புகள்*

1.  *15.07.2026* க்குள் பண்ணலைனா அட்டை வராது. Hospital போனா பணம் கட்ட வேண்டியிருக்கும்

2.  *₹390* ஒவ்வொரு மாசமும் Salary-ல் பிடிக்கும். விருப்பம் இல்லைனு சொல்ல முடியாது - கட்டாய திட்டம்

3.  *புதிதா சேர்ற குழந்தை/திருமணம்* ஆனா அப்போ Update பண்ணிக்கலாம்


*DDO-க்களுக்கான அறிவுறுத்தல்*

உங்க அலுவலகத்துல உள்ள அனைவரும் 15.07.2026க்குள் பதிவு செய்தார்களா என DDO கட்டாயம் Check பண்ணனும்.


*சுருக்கமா:* `₹390 கொடுத்து 5 வருஷம் Cashless மருத்துவம். ஆனா 15.07.2026க்குள் IFHRMS-ல் ஆதார்+போட்டோ போடலைனா Card வராது`

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

2026-27 கல்வி ஆண்டிற்கான வேலை நாட்கள் விவரம். (திருத்தப்பட்ட வேலை நாட்கள் பட்டியல்).

824544

 2026-27 கல்வி ஆண்டிற்கான வேலை நாட்கள் விவரம். (திருத்தப்பட்ட வேலை நாட்கள் பட்டியல்).


வேலை நாட்கள் - 210

விடுமுறை நாட்கள் - 155

மொத்தம் - 365


*சனி வேலை நாட்கள்:*

செப்டம்பர் 19

டிசம்பர் 19

ஏப்ரல் 24


பள்ளி கடைசி வேலை நாள் 24.04.2027 சனிக்கிழமை.


கோடை விடுமுறை ஏப்ரல் 25 முதல் மே 31 வரை. (37 நாட்கள்)


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Income Tax விழிப்புணர்வு பதிவு


Income Tax விழிப்புணர்வு பதிவு

அன்பார்ந்த நண்பர்களே,

வருமான வரி தாக்கல் (IT Return) செய்வதற்கு முன், உங்களிடம் உள்ள Form 16A மற்றும் Form 16B ஆகிய இரண்டிலும் மொத்த சம்பளத் தொகை (Gross Salary) ஒரே மாதிரியாக உள்ளதா என்பதை கட்டாயம் சரிபார்க்கவும்.

வரி (TDS) தொகை சரியாக இருந்தால் மட்டும் போதாது. மொத்த சம்பளத் தொகையும் சரியாகப் பதிவாகியிருக்க வேண்டும்.

சில நேரங்களில், "மொத்த சம்பளம் குறைவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை; ரீஃபண்ட் கிடைக்கும்" என்று கூறப்படலாம். ஆனால், மொத்த சம்பளத்தை விட குறைவாக வருமான வரி தாக்கல் செய்வது எதிர்காலத்தில் கடன் பெறுதல், வருமான வரித்துறை விசாரணை, வட்டி மற்றும் அபராதம் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, Form 16A, Form 16B மற்றும் Income Tax Return (ITR) ஆகியவற்றில் மொத்த சம்பளத் தொகை ஒன்றுக்கொன்று பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும், சம்பளம் வழங்கும் அலுவலர்களும் சம்பள விவரங்களில் உள்ள பிழைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், வருமான வரித்துறையிடமிருந்து விளக்கம் கோரும் நோட்டீஸ் வர வாய்ப்பு உள்ளது.

இது விழிப்புணர்விற்காக மட்டுமே பகிரப்படும் பதிவு. 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு தகவல்

இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வானது  திங்கட்கிழமை( 06.07.2026) காலை 09.00 மணிக்கு  தொடங்கும். SGT (General (Tamil&English) க்கு வரிசை எண் 1 முதல் 1000 வரை உள்ள விண்ணப்பதாரர்களை வட்டாரக்கல்வி அலுவலர் மூலம் தகவல் அளித்து வரவழைக்கவும். மற்ற அனைத்து மொழிகளுக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் திங்கள் அன்றே நடைபெறும். இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் ஒன்றியத்திற்குள் மற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் நடந்த கலந்தாவில் மாறுதல் ஆணை பெற்றவர்களின் பெயர் மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்விற்கு  விண்ணப்பித்திருந்தாலும் இடம் பெறாது. தவறுதாக இடம் பெற்றிருந்தாலும் அவர்களை கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது.

 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் தேவை!!!

1000578002

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது!


பணியிடங்களின் விவரம்:

✅ முதுகலை பட்டதாரி ஆசிரியர்: 49 இடங்கள்

✅ பட்டதாரி ஆசிரியர்: 34 இடங்கள்

✅ இடைநிலை ஆசிரியர்: 115 இடங்கள்


விண்ணப்பிக்கும் முறை:

நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய இடம்:

அறை எண்: 310, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், கடலூர் மாவட்ட ஆட்சியரக வளாகம்.


தேதிகள்:

🗓️ 06.07.2026, 07.07.2026 மற்றும் 08.07.2026 (மூன்று நாட்கள் மட்டும்).


தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஊக்க ஊதியம் பெறும் ஆசிரியர்களின் திறனை மதிப்பீடு செய்ய உத்தரவு

ஊக்க ஊதிய உயர்வை தொடர்ந்து பெறும் ஆசிரியர்கள், தாங்கள் பெற்ற கூடுதல் அறிவு, திறன்களை கற்பித்தல் பணியின்போது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்துகின்றனரா என்பதை அவ்வப்போது மதிப்பீடு செய்வதற்கான நடைமுறையை தமிழக அரசு வகுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குன்னாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு: நான் 1999 ல் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். எம்.ஏ., பி.எட்.,தேர்ச்சியடைந்தேன். இதற்காக 2013 முதல் எனக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அது தவறானது என தணிக்கையில் ஆட்சேபனை எழுப்பப்பட்டது. எனது ஊதியம் மாற்றியமைக்கப்பட்டது. ஊக்க ஊதிய உயர்விற்காக வழங்கிய கூடுதல் தொகையை திரும்பப் பெற கொட்டாம்பட்டி வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டார். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

 மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்:

 மேல்நிலை கல்வி பாடத்திட்ட பாடங்களில் தகுதிகளை பெறும் இடைநிலை ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியானவர்கள். அதற்குரிய அரசாணை நடைமுறையில் உள்ளது. பிந்தைய நடவடிக்கைகள் மூலம் மனுதாரருக்கு ஏற்கனவே வழங்கிய சலுகையை முன்தேதியிட்டு பறிக்க முடியாது.அரசு வழக்கறிஞர்: பட்டப்படிப்பை முடித்ததற்காக வழங்கிய ஊக்க ஊதிய உயர்வு, நடைமுறையில் உள்ள அரசாணைகளுக்கு முரணானது. தணிக்கையின் போதுதான் இத்தவறு கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, மனுதாரரின் ஊதியம் திருத்தி அமைக்கப்பட்டு, வழங்கப்பட்ட கூடுதல் தொகை திரும்பப் பெற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு வாதம் நடந்தது.நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் இடைநிலை ஆசிரியர். மேல்நிலை கல்வி பாடத்திட்டத்தில் பொருளாதாரம் ஒரு பாடமாக இருந்தாலும், அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் ஊக்க ஊதிய உயர்வு கோர மனுதாரருக்கு உரிமை இல்லை.

நிரூபிக்கவில்லை

இடைநிலை ஆசிரியராக மனுதாரர் வழக்கமாக மேற்கொள்ளும் பணிகளுக்கும், அவர் பெற்ற பொருளாதார பட்டப்படிப்பு தகுதிக்கும் இடையே நேரடியான அல்லது நியாயமான தொடர்பு ஏதுமில்லை. அத்தகுதியின் மூலம் அவர் பெற்ற கூடுதல் அறிவு, அவர் கற்பிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் என்றோ அல்லது ஊக்க ஊதிய உயர்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் என்றோ மனுதாரர் நிரூபிக்கவில்லை. அரசாணைப்படி எம்.ஏ.,பொருளாதாரம் தகுதியை பெற்றதற்காக ஊக்க ஊதிய உயர்வு பெற மனுதாரர் தகுதியற்றவர். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.உயர்கல்வி தகுதி பெறுவதற்காக வழங்கப்படும் தொடர் முன்பணம் மற்றும் ஊக்குவிப்பு ஊதிய உயர்வு திட்டத்தை ரத்து செய்வது குறித்த கொள்கை முடிவை, அரசு 2020 ல் எடுத்தது. இருப்பினும், முந்தைய கொள்கை முடிவின் கீழ் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு ஊதிய உயர்வுகளை பல ஆசிரியர்கள் தொடர்ந்து பெற்று வருகின்றனர். ஊக்க ஊதிய உயர்விற்காக செலவிடப்படும் தொகை வரி செலுத்துவோரின் பணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஊக்க ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தை அது நிறைவேற்றும் வரையில் மட்டுமே இத்தகைய செலவினத்தை நியாயப்படுத்த முடியும்.

மதிப்பீடு

ஊக்க ஊதிய உயர்வை தொடர்ந்து பெறும் ஆசிரியர்கள், தாங்கள் பெற்ற கூடுதல் அறிவு, திறன்களை கற்பித்தல் பணியின்போது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்துகின்றனரா என்பதை அவ்வப்போது மதிப்பீடு செய்வதற்கான நடைமுறையை தமிழக அரசு வகுக்க வேண்டும்.அம்மதிப்பீட்டின் அடிப்படையில், ஊக்க ஊதிய உயர்வு பெற்று வரும் ஆசிரியர்களுக்கு சலுகையை தொடர்ந்து வழங்கலாமா என்பது குறித்து, அரசு முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பொறியியல் கலந்தாய்விற்கான கட்-ஆப்

 பொறியியல் கலந்தாய்விற்கான ரேங்க் பட்டியல் கலந்தாய்வு தேதி வெளியிடபட்டது இதில் கட் ஆஃப் மற்றும் ரேங்கின் படி மட்டுமே பங்கேற்க முடியும்


#Round 1


Cut-off: 200  –  171.333

Rank: 1 – 37,976


Choice Filling:


 20.07.2026 (10:00 AM) முதல் 22.07.2026 (5:00 PM) வரை


Tentative Allotment:


 24.07.2026 (10:00 AM)


Allotment Confirmation:


 24.07.2026 – 25.07.2026


Provisional Allotment:


 26.07.2026


College Joining:


 26.07.2026 – 30.07.2026


*Upward Allotment:*


 03.08.2026


#Round 2


Cut-off:171 – 135.75


Rank:37,977 – 1,31,093


*Choice Filling:*


 03.08.2026 – 05.08.2026


*Tentative Allotment*:


 07.08.2026


#Confirmation


 07.08.2026 – 08.08.2026


Provisional Allotment:


 09.08.2026


Joining: 09.08.2026 – 13.08.2026


Upward Allotment:


 17.08.2026


#Round 3


Cut-off: 135.5 – 77.500


Rank: 1,31,094 – 2,33,812


Choice Filling:


 17.08.2026 – 19.08.2026


Tentative Allotment:


 21.08.2026


Confirmation:


 21.08.2026 – 22.08.2026


Provisional Allotment:


 23.08.2026


Joining: 23.08.2026 – 27.08.2026


Upward Allotment


 31.08.2026

-------------------------


01.07.2026 – 06.07.2026 –


🚫 குறைகள்/புகார்கள் தெரிவிக்கும் காலம்.


13.07.2026 – 14.07.2026 – 


சிறப்புப் பிரிவு கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர்)


15.07.2026 – 18.07.2026 – 


பொதுப் பிரிவு சிறப்புக் கலந்தாய்வு.


அனைவருக்கும் இந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கி அடுத்தமாதம் 31ம் தேதி வரை நடைபெறும் பதற்றம் இன்றி பொறுமையாக காத்திருக்கவும்


பொறியியல் கலந்தாய்வு தொடர்பாக உங்கள் சந்தேகங்களை தெளிவு படுத்த இந்த உதவி எண்களை பயன் படுத்தவும்


📞 9790475329 8056535424


7.5 %சதவீத இட ஒதிக்கீடு No என்று இருந்தால் உரிய காரணத்தை அறிந்து உடனடியாக சரி செய்து கொள்ளவும்... 


இந்த ஆண்டு கட் ஆஃப் குறைந்து உள்ளதால் பல மாணவர்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு உள்ளது உங்களுக்கு வரும் அழைப்பை நம்பி ஏமாற வேண்டாம் 


குறிப்பு


*உங்கள் ரேங்க் பட்டியல் வெளியீட்டில் பிரச்சனை உள்ள மாணவர்கள் 6 ஆம் தேதிக்குள் சரி செய்து கொள்ளவும்.*


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் மறு தேர்வு முடிவு ஜூலை 20-ல் வெளியீடு

 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு முடிவுகளை ஜூலை 20-ம் தேதி வெளியிட தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.

நாடுமுழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

20 லட்சம் பேர் அதன்படி, பலத்த பாதுகாப்புடன் நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெற்றது. நாடுமுழுவதும் 551 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், சிங்கப்பூர் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் சுமார் 5,500 மையங்களில் நடந்த தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் 307 தேர்வுமையங்களில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், சென்னையில் 43 மையங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் தேர்வு எழுதினர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை வரும் 20-ம் தேதி வெளியிட தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பணி நிரவல் கலந்தாய்வு தொடர்பான இடைக்கால தடை –ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:-

 நீதிமன்ற உத்தரவு இன்னும் நீதிமன்ற இணையதளத்தில் (Court Website) பதிவேற்றம் செய்யப்படாததால், பணி நிரவல் (Deployment) கலந்தாய்வுக்கு உண்மையில் தடை கிடைத்துள்ளதா இல்லையா? என்ற சந்தேகம் பல ஆசிரியர்களிடம் உள்ளது.


இதுகுறித்து தற்போதைய நிலை வருமாறு:


✅ பணி நிரவல் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மை.


✅ இருப்பினும், இந்தத் தடை நீண்ட காலத்திற்கு அல்ல. தற்போது ஆகஸ்ட் மாதம் வரை மட்டுமே இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளது.


✅ இந்த இடைக்கால தடை தொடக்கக் கல்வித்துறைக்கு (Elementary Education Department) மட்டுமே பொருந்தும். பள்ளிக்கல்வித்துறைக்கு (School Education Department) இது பொருந்தாது.


✅ காரணம், இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பவர்கள் தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே.


✅ மேலும், ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வை (General Transfer Counselling) நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.


இந்த அடிப்படை விஷயங்களை ஆசிரியர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.


இன்று மாலைக்குள் அல்லது நாளை, பணி நிரவல் கலந்தாய்வுக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை தொடர்பான நீதிமன்ற உத்தரவு நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.


அந்த உத்தரவு வெளியான பிறகே, மனுதாரர்கள் தாக்கல் செய்த கோரிக்கைகளில் (Prayer) எவற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது, எவற்றில் என்ன கருத்து தெரிவித்தது என்பது முழுமையாகத் தெரியவரும்.


இந்த வழக்கில் மனுதாரர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கை:


*08.06.2026-ஆம் தேதி வெளியிடப்பட்ட* *Na.Ka.No.032782/C3/E1/2026 மற்றும்* *Na.Ka.No.009324/D1/2026 ஆகிய* *சுற்றறிக்கைகளை,* *தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை* *ஆசிரியர்களை* *(Secondary Grade* *Teachers) பணி நிரவல்* *செய்வது தொடர்பாக ரத்து செய்ய வேண்டும்.* *மேலும்,* *2022 மற்றும் 2023* *ஆண்டுகளுக்கான பதவி உயர்வு குழுப்* *பட்டியலை (Panel) சிறப்பு விதிகளின்படி* *தயாரித்து, முதலில்* *ஆண்டு வாரியாக பதவி உயர்வு கலந்தாய்வை* *நடத்தி,அதன்* *பின்னரே* *தேவையெனில் சட்டப்படி பணி நிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பதே* *அவர்களின் முதன்மை கோரிக்கையாகும்.*


நீதியரசர் இந்தக் கோரிக்கைகளுக்கு என்ன பதில் அளித்துள்ளார் என்பது, விரைவில் வெளியாகும் முழுமையான நீதிமன்ற உத்தரவைப் பார்த்த பிறகே உறுதியாகத் தெரியவரும்.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க