Chennai University–Samsung கூட்டணி! – 5,000 மாணவர்களுக்கு AI, Big Data, IoT & Coding Training

     மாணவர்களுக்கு Future-ready Skill Development!

சென்னை பல்கலைக்கழகம்Samsung நிறுவனத்துடன் இணைந்து, 5,000 மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI), Big Data, IoT மற்றும் Coding துறைகளில் முக்கியமான தொழில்நுட்ப பயிற்சி வழங்கும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது 🚀


⚡ Quick Info – Training Programme Overview

  • 🏫 பல்கலைக்கழகம்: சென்னை பல்கலைக்கழகம்
  • 🏢 கூட்டணி நிறுவனம்: Samsung
  • 🎓 பயனாளர்கள்: 5,000 மாணவர்கள்
  • 💡 பயிற்சி துறைகள்: AI, Big Data, IoT, Coding
  • 📍 திட்டம்: Samsung Innovation Campus
  • ⏳ பயிற்சி காலம்: 2 மாதங்கள் (AI Course)

🏛️ Samsung Innovation Campus – என்ன திட்டம்

இந்த பயிற்சி திட்டம்
University of Madras
மற்றும்
Samsung
இணைந்து தொடங்கிய Samsung Innovation Campus என்ற சிறப்பு Skill Development திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்
மாணவர்களை Industry-ready Professionals ஆக உருவாக்குவது

முதல் கட்ட AI பயிற்சி – முழு விவரம்

முதல் கட்டமாக 👇

  • 🎓 50 மாணவர்கள் தேர்வு
  • 🧠 Artificial Intelligence (AI) பயிற்சி
  • 📚 துறைகள்:
    • கணினி அறிவியல் (Computer Science)
    • தகவல் தொழில்நுட்பம் (IT)
    • வணிக நிர்வாகம் (MBA)
    • கணினிப் பயன்பாடுகள் (Computer Applications)
    • வர்த்தகம் (Commerce)

⏳ AI பயிற்சி கால அளவு

  • 📅 2 மாதங்கள்
  • 🕒 270 மணிநேரம் – வகுப்பறை பயிற்சி
  • 🧩 80 மணிநேரம் – Capstone Project

🌐 IoT & Big Data பயிற்சி விவரம்


IoT & Big Data Courses-க்கு மொத்தமாக
👉 240 மணிநேரப் பயிற்சி வழங்கப்படும்.

இதில் 👇

  • 🏫 160 மணிநேரம் – வகுப்பறை பயிற்சி
  • 🛠️ 80 மணிநேரம் – Project-based Training

💻 Coding & Programming Training

👨‍💻 Coding மற்றும் Programming துறையில் 👇

  • ⏱️ 80 மணிநேர பயிற்சி
  • 🧠 Hackathon-க்காக
    👉 3 நாட்கள் சிறப்பு பயிற்சி & போட்டி

🎯 இந்த கூட்டணி ஏன் முக்கியம்?

  • 🚀 Industry-demand skills கற்றுக்கொள்ள வாய்ப்பு
  • 💼 Job-ready & future-proof career
  • 🧠 Practical + Project-based learning
  • 🌍 Global company exposure (Samsung)

👉 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பெரிய வாய்ப்பு.


📢 முக்கிய அறிவிப்பு

இந்த பயிற்சி திட்டம்
Samsung Innovation Campus
மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தகுதியான மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ✅

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அலுவலராக பதவி உயர்வு: பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவு

     மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தகுதியான பள்ளி தலைமை ஆசிரியர்களின் விவரங் களை அனுப்பி வைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான பணியிடங்களுக்கு 2026-27-ம் ஆண்டுக்கான உத்தேச காலிப்பணியிடங்கள் குறித்து அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, ஆணைகள் எதிர்நோக் கப்படுகின்றன.

பெயர் பட்டியல் தயாரிப்பு: மேலும், பணி மாறுதல் மூலம் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்குவதற்கு தகுதியானவர்கள் பெயர்ப் பட்டியலும் தயார் செய்யப்பட உள்ளது. இதற்கான முன்னுரிமைப் பட்டியலில் இருந்து தகுதியான தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள, தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.


வழிகாட்டுதல்கள்: இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும். வருங்காலத்தில் இதில் புகார் ஏதும் பெறப்பட்டால், பரிந்துரை செய்த முதன்மைக் கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 'நீட்' ; கட் - ஆப் மேலும் உயர்வு அரசு பள்ளி மாணவர்களே கவனம்

     இளநிலை மருத்து படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் (என்.டி.ஏ.,) நடத்தப்படுகிறது.


கடந்த ஆண்டு, நன்றாக படித்த மாணவர்கள் கூட இயற்பியல் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கண்ணீருடன் வெளியேறினர். இந்நிலையில், மாணவர்கள் திட்டமிட்டு தயாராகவேண்டும் என கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


பொதுவாக கடினமாக கருதப்படும், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் 75 கேள்விகளை எதிர்கொள்ள, 180 நிமிடங்கள் வழங்கப்படும். 'நீட்' தேர்வை பொறுத்தவரையில், 180 கேள்விகளை 180 நிமிடத்தில் எதிர்கொள்ளவேண்டும். இதனால், படிப்பதை காட்டிலும் அதிக மாதிரி தேர்வுகளை எதிர்கொள்ளவேண்டியது அவசியம்.


இதுகுறித்து, கல்வியாளர் அஸ்வின் கூறியதாவது:

மே மாதம் வழக்கமாக 'நீட்' தேர்வுகள் நடைபெறும். பொதுத்தேர்வுக்கு படிக்கும் போதே 'நீட்' தேர்வை கருத்தில் கொண்டு ஆழமாக புரிந்து படிப்பது அவசியம்.


பெரும்பாலும் மாணவர்கள் உயிரியல், வேதியியல் பாடங்களை எளிதாக எதிர்கொண்டு விடுவார்கள். இயற்பியல் பிரிவு கேள்விகள் கடினமாகத்தான் இருக்கும். ஆழமாக புரிந்து பதில் அளிக்கவேண்டும். ஒரு நிமிடத்தில் ஒரு கேள்வி என்பதால் அதிக பயிற்சி தேவை.



படித்துக்கொண்டே இருக்காமல், படித்ததை 'ரிவைஸ்' செய்ய, அவகாசம் எடுத்துக்கொள்ளவேண்டும். 'ரிவைஸ்' செய்து முடித்தபின் சிறு குறிப்புகள் எடுத்து, கையேடு ஒன்று பராமரிப்பது தேர்வு சமயத்தில் உதவும். அதிகமாக மாதிரி தேர்வுகளை எழுதி நேர மேலாண்மை பழகவேண்டும். கிடைக்கும் நேரங்களை தற்போது சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.


குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீடு என அலட்சியமாக இல்லாமல் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இரண்டாம், மூன்றாம் முறை தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் கட்-ஆப் மதிப்பெண்களும் தொடர்ந்து அதிகரிக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு படிக்கவேண்டும்.


இவ்வாறு, அவர் கூறினார்.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் உள்ள பல்வேறு திட்டங்கள்


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் உள்ள பல்வேறு திட்டங்கள் Various schemes in the Tamil Nadu School Education Department!!


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மாணவர்களின் கல்வித் தரம், ஊட்டச்சத்து மற்றும் உயர் கல்வியை ஊக்குவிக்க 2026-ஆம் ஆண்டில் பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:



தமிழ்ப் புதல்வன் திட்டம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழி) 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. புதுமைப் பெண் திட்டம்: அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: அரசுத் தொடக்கப் பள்ளிகளில் (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், வருகையை அதிகரிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.



எண்ணும் எழுத்தும் இயக்கம்: 2025-ஆம் ஆண்டிற்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக இது செயல்படுத்தப்படுகிறது.


இல்லம் தேடி கல்வி: கோவிட்-19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்க மாணவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தன்னார்வலர்கள் மூலம் கற்பிக்கப்படும் திட்டமாகும். நான் முதல்வன் திட்டம்: பள்ளி மாணவர்களுக்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் எதிர்காலத் தொழில் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.




தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரிப் பள்ளிகள்: அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தி, மாணவர்களுக்குச் சிறப்பான கற்றல் சூழலை உருவாக்க இவை அமைக்கப்பட்டுள்ளன.


வானவில் மன்றம்: அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் மற்றும் தேடலைத் தூண்டும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி: முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் முன்னெடுப்பாகும்.


இலவச நலத்திட்டங்கள்: மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், மிதிவண்டிகள் மற்றும் மடிக்கணினிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.







இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Pension Commutation என்றால் என்ன? - கணக்கீடு செய்வது எப்படி?

     




கம்யூட்டேசன் என்றால் என்ன

ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் , உள்ளாட்சி பணியாளர்கள் தாங்கள் பெற இருக்கும் ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை ஒப்புவிப்பு செய்து அதனைத் தொகுத்து ஒட்டுமொத்தத் தொகையாக பெற்றுக் கொள்வதே கம்யூட்டேசன் ஆகும் . 


இவ்வாறு பெறும் கம்யூட்டேசன் தொகை வட்டியும் முதலுமாக 15 ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது . கம்யூட்டேசனின் கடந்த கால கதை ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் 1925 ம் ஆண்டில் சிவில் ஓய்வூதியர்கள் ( தொகுப்பு ) விதிகளின்படியும் . தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மெட்ராஸ் சிவில் ஓய்வூதியர்கள் ( தொகுப்பு ) விதிகளின்படியும் , கம்யூட்டேசன் வழங்கப்பட்டது . 


அப்போது ஓய்வுதியத்தில் 50 சதவீதம் வரை ஒப்புவிப்பு செய்து ஒட்டுமொத்த தொகை பெறும் நிலை இருந்தது . அவ்வாறு 50 சதவீதம் ஒப்புவிப்பு செய்த பின்னர் எஞ்சியுள்ள 50 சதவீதம் மட்டிலுமே தமது வாழ்நாள் முழுவதும் பெறும் ஓய்வுதியமாக இருந்து . பின்னர் அரசாணை 242 நிதி ஒய்வூதியம் ) நாள் . 14.1981 ன்படி கம்யூட்டேசன் செய்த தொகை அசல் வட்டியுடன் 15 ஆண்டுகள் பிடித்தம் செய்யப்பட்டு 15 ஆண்டுகள் முடிவற்றதும் முழு ஓய்வூதியம் பெறும் ( fenestration ) முறை நடைமுறைக்கு வந்தது .


1950 ம் வருடத்திய தளர்தத்ப்பட்ட ஓய்வூதிய விதிகளின்படி கம்யூட்டேசன் செய்யும் தொகை 50 சதவிதத்தில் இருந்து ஓய்வூதியத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்றாயிற்று 1998 ம் ஆண்டில் இது 40 சதவீதம் என்று அதிகரித்தாலும் கூட 2003 ல் மீண்டும் மூன்றில் ஒரு பகுதி என்ற முறை மீண்டும் அமுலுக்கு வந்தது . 


1.12.1963 முதல் ஓய்வூதியர் கம்யூட்டோன் செய்யும் தேதியில் உள்ள அவரது வயதின் அடிப்படையில் ஒப்படைப்பு செய்து பெறும் தொகையினை காணக்கிடக் காரணி ( Factor ) கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டு அந்த அட்டவணையின்படி கம்யூட்டோன் தொகை வழங்கும் முறை வந்தது . 1.12.1953 முதல் அமுல்படுத்தப்பட்ட அட்டவணை போதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்டு 1.5.2009 முதல் புதிய அட்டப்பாண அமுலுக்கு வந்து அதுவே தற்போது நடைமுறையில் உள்ளது .


 கம்யூட்டேசன் கணக்கிடும் முறையும் திருப்பி செலுத்தும் காலமும் 1.1.2006 முதல் அமுல்படுத்தப்பட்ட ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் . 318 நிதித் ஓய்வூதியம் ) துறை நாள் . 23.7.2009 ன்படி தயாரிக்கப்பட்ட அட்டவணையின்படி வயது 20 முதல் வயது 81 வரையில் உள்ளவர்கள் ஓய்வூதியத்தினை கம்பட்டேசன் செய்வதற்கான காரணிகள் உள்ள திருத்திய அட்டவணையினை வெளியிட்டுள்ளது . 

இதன்படி 58 வது வயதில் ஓய்வு பெறும் ஒருவர் கம்பூட்டோன் பெறுவதற்கான காரணி 8.371 ஆரும் . அதாவது கம்யூட்டோன் பெறப்படும் அசல் தொகை சற்று ஏறக்குறைய 8 வருடம் 3 மாதத்தில் முடிவடையும் எனக் கொள்ளலாம் . ஓய்வூதியர் அவர் பெறுகின்ற ஓய்வதியத்தில் அதிகபட்சமாக மூன்றில் ஒரு பகுதியினை மட்டிலுமே கம்யூட்டேஷன் செய்ய முடியும் .


கணக்கீடு: 

ஓய்வுபெறும் ஊழியர், தனது ஓய்வூதியத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை (பெரும்பாலும் 40% வரை) மொத்தமாகப் பெற விண்ணப்பிக்கலாம்.


ஊழியரின் வயது மற்றும் அரசு விதிமுறைகளின்படி, எவ்வளவு தொகை மொத்தமாக கிடைக்கும் என்பது கணக்கிடப்படும்.


அதற்கேற்ப, ஒரு குறிப்பிட்ட தொகை மொத்தமாக வழங்கப்படும்.

இந்த மொத்த தொகைக்கு ஈடாக, அவரது மாதாந்திர ஓய்வூதியத்தில் அந்தப் பகுதி கழிக்கப்படும், மீதமுள்ள தொகை மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும். 















இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Pension Gratuity Calculation Table - தெரிந்து கொள்ளலாமா ? (PF)

     

பணிக்கொடை என்பது அரசு/அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும். பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது


அரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறை

பணி ஓய்வின் போது பணிக்கொடை கணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம் ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.


இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn)

அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படை ஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்பு ஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகியவற்றின் கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.


பணிக்காலம் கணக்கிடுதல்

ஓய்வு (Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது 4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமே பணிக்கொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.


32 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால் 33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள் 5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள் மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.


பணிக்கொடை கணக்கீடு

மொத்தப் பணி செய்த ஆண்டிற்கு அரை மாத ஊதியம் வீதம், குறைந்த பட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறரை (16½) மாத ஊதியமும் பணிகொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு ரூபாய் 20 இலட்சம்.


பணிக்கொடை வருவாய்க்கு வருமான வரி சட்டம் 10 (10)-இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.


அரசு மற்றும் அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டிய தொகைகள் நிலுவை இருப்பின், அதனை பணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.


பணியின் போது காலமான ஊழியர்களுக்கு பணிக்கொடை

பணியின் போது இறந்த அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச பணிக்காலம் கணக்கில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இறந்தவர்களுக்கு இரண்டு மாத ஊதியமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இறந்தவர்களுக்கு ஆறு மாத ஊதியமும், ஐந்து முதல் 20 ஆண்டுகளுக்குள் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத ஊதியமும், 20 ஆண்டும் அதற்கு மேலும் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு அரை மாத ஊதியம் வீதம் கணக்கிட்டு பணிக்கொடை வழங்க வேண்டும். 






1.இந்த ஓய்வூதிய பணிக்கொடை,ஓய்வூதியத்துடன் , 55 வயதில் ஓய்வுபெறும் போது ஆண்களுக்கும்,20 வயதில் ஓய்வுபெறும் ஆசிரியைகளுக்கும் கிடைக்கும்.

2,இந்த அட்டவணையில்  சிவப்பு நிறத்தில் அட்டவணை இட்டுள்ள பகுதியை மட்டும் கவனியுங்கள்.ஓய்வூதிய பணிக்கொடையை எப்படி ,என்ன வீதத்தில் கணிக்கப்படுகின்றது என்று அறியலாம்.


3.இந்த கணிப்புக்கு ஓய்வுபெறும்போது ,இறுதியாக பெற்ற சம்பளமும் சேவைக்காலமுமே அடிப்படையானதாகும்.10,15 வருட சேவை என்று அட்டவணையில் இருந்தாலும் ,வைத்திய தகுதின்மை இன்றி ஓய்வுபெற குறைந்தது 20 வருட சேவைக்கலாம் வேண்டும்.


4.ஓய்வுபெறும்போது கிடைப்பது குறைக்கப்பட்ட ஓய்வூதியம்.(Reduced Pension)ஆகும்.ஆனால்  ஓய்வூதிய பணிக்கொடையைக் 

கணிக்கும்போது குறைக்கப்படாத ஓய்வூதியத்தை (Unreduced Pension ) 24 மாதத்தால்  பெருக்கி தருவார்கள் .10 வருடங்களின் பின்னர் குறைக்கப்படாத ஓய்வூதியம் கிடைக்கும் .இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 10 வீதமாகும் .




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிஉயர்வு நிலுவைக்கான நிலைமைக் குறிப்பு - பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சமர்ப்பிப்பு!

     97314

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிஉயர்வு நிலுவைக்கான நிலைமைக் குறிப்பு - பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சமர்ப்பிப்பு!

High School HM Promotion - Position Note.pdf

👇👇👇👇

Download here


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TAPS அரசாணை எண் 7ல் உள்ள உண்மைகள்!

     TAPS அரசாணை எண் 7ல் உள்ள உண்மைகள்!


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


தமிழ்நாடு அரசின் நிதித்துறை (PGC) அரசாணை எண் 07 நாள்.09.01.2026ன்படி தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டமான TAPS 01.01.2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி,


1. 01.01.2026 முதல் பணி நியமனம் செய்யப்படும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு TAPS கட்டாயம்.


2. 01.01.2026க்கு முன் பணியேற்று தற்போது பணியிலுள்ள அனைத்து CPS ஊழியர்களும் TAPSன் கீழ் கொண்டுவரப்படுவர்.

அவ்வாறு கொண்டுவரப்படுவோர் பணி ஓய்வின்போது அவர்களது விருப்பத்தின் பேரில்,


-> TAPS படியோ அல்லது அதற்கு ஈடாக CPSல் என்ன பெற்றிருப்பார்களோ அதன்படியோ பலன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


-> பணி ஓய்வின் போது TAPS படி பயன்பெற விரும்பினால் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.


-> ஓய்வூதியத்தில் ஒரு பகுதியைத் தொகுத்துப் பெறவும் (Commutation) அனுமதிக்கப்படுவர்.


3. TAPSல் தகுதியுள்ள ஊழியரது 10% மாதாந்திர பிடித்தத்தைக் கொண்டு அவரது இறுதி மாத ஊதியத்தில் (BP+DA) 50% மாதாந்திர ஓய்வூதியமாக, வழங்கப்படும். இதற்கான கூடுதல் நிதித்தேவையை அரசு ஏற்கும்.


4. ஓய்வூதியர் இறுந்துவிட்டால், தகுதியுள்ள குடும்ப உறுப்பினருக்கு அவரது இறுதி மாத ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.



5. இந்த ஓய்வூதியத்திற்கும் குடும்ப ஓய்வூதியத்திற்கும் அகவிலைப்படியானது ஆண்டிற்கு இருமுறை கூடுதலாக வழங்கப்படும்.


6. பணி ஓய்வு / பணிக்கால இறப்பின் போது ஊழியரது பணிக்காலத்தின் அடிப்படையில் அதிகபட்சம் ரூ.25,00,000/-ற்கு மிகாமல் பணிக்கொடை (Gratuity) வழங்கப்படும். 


7. 01.01.2026க்கு முன்னர் CPSல் ஓய்வுபெற்றோருக்கு பணிக்காலத்தின் அடிப்படையில் சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.


8. மேலேகண்ட அனைத்து பலன்களுக்குமான விதிமுறைகள், அப்பலன்களைப் பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகள், செயல்பாட்டு நெறிமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அரசால் தனியாக அறிவிக்கப்படும்.


10. சட்டரீதியான & கணக்கீட்டுத் தேவைகள் பூர்த்தியான பின்னர் 01.01.2026ஐ அடிப்படையாகக் கொண்டு TAPS நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.


மேற்கண்டவை மட்டுமே அரசாணையில் உள்ளன. இதனையடுத்து TAPS குறித்த அனைத்து விதிமுறைகளும் முழுமையாக வெளியான பின்பு தான், யாருக்கு எதனடிப்படையில் எவ்வளவு Pension / Gratuity கிடைக்கும் என்பது தெரியவரும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க