Higher Sec School HM Panel – தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல் - DSE Proceedings

   Education News (கல்விச் செய்திகள்)

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2025 இல் உள்ளவாறு அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் ( நிலை -1 ) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல் - தொடர்பாக .


Click Here to Download - DSE - Higher Sec School HM Panel - Director Proceedings - Pdf



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

கலைத்திருவிழா " - 2025-26 மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கான புத்தொளி நடத்துதல் பெற்ற பயிற்சி முகாம்

Education News (கல்விச் செய்திகள்)

 IMG_20250423_102033

பள்ளி மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணரவும் . நடைமுறையில் உள்ள கலை மரபுகள் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும் . ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலை வடிவங்களில் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தவும் 2022 -23 ஆம் ஆண்டு முதல் பள்ளி . வட்டாரம் , மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.


 அவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகளாக மாநில அளவில் வெற்றி பெற்ற மாவணவர்களின் கலைத்திறன்களை மேலும் மேம்படுத்தும் விதமாகவும் , அவர்களின் கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் விதமாகவும் , அவர்கள் மென்மேலும் கலை வடிவங்களில் சிறந்து விளங்குவதற்கான அவரவர்தம் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கக்தில் , அந்தந்த கலைப்பிரிவின் வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களுக்கான கோடைகால சிறப்பு புத்தொளி பயிற்சி முகாம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

👇👇👇👇

SPD Proceedings - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

Education News (கல்விச் செய்திகள்) 


தொடக்கக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 2025-26 - ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க அறிவுரை வழங்குதல் - தொடர்பாக .

IMG_20250423_155336

2025-26 - ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை கடந்த 3 நாட்களில் தினந்தோறும் பெறப்படும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் குறைந்த அளவிலேயே நடைபெற்றுள்ளது என தெரிய வருகிறது . நடப்பாண்டில் 5 இலட்சம் மாணவர்களை இலக்காக கொண்டு மாணவர் சேர்க்கை பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


 எனவே , அனைத்து அரசு / அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதி மற்றும் அருகாமை குடியிருப்பு பகுதிகளில் உள்ள 5 வயது நிரம்பிய மற்றும் பள்ளி வயது பிள்ளைகளை அரசின் நலத்திட்டங்களை எடுத்து கூறி உடனடியாக அரசு பள்ளிகளில் சேர்க்கை செய்வதற்கு ( Spot admission ) மேற்கொள்ளவேண்டும் . இப்பணியை பள்ளி வேலை நேரத்தில் மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் அறிவுறுத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 மேலும் , இந்த முக்கியமான பணியை கருத்தில் கொண்டு , மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி அதனை உடனுக்குடன் இவ்வியக்கத்தில் மூலம் அனுப்பப்பட்டுள்ள Google Form- ல் தினந்தோறும் பூர்த்தி செய்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ல் பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

 IMG-20250423-WA0020

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிவடைய உள்ளது . 25.04.2025 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி

IMG-20250423-WA0014

ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30.04.2025 எனத் தெரிவிக்கப்படுகிறது . 2025-2026 ஆம் கல்வியாண்டில் . 02.06.2025 ( திங்கள் கிழமை ) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது . எனவே . 02.06.2025 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

கலைத் திருவிழா போட்டி: வெற்றியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி

  Education News (கல்விச் செய்திகள்)
 

 கலைத் திருவிழா போட்டிகளில் மாநில அளவிலான போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் மே 19 முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் 2022-23-ம் ஆண்டு முதல் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலைத் திறமைகளை மேலும் மேம்படுத்தும் விதமாகவும், அவர்களின் கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.


அதன்படி ஓவியம், சிற்பம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், வீதி நாடகம் மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றில் சிறந்த வல்லுநர்களை கொண்டு மாணவர்களுக்கு மே 19 முதல் 24-ம் தேதி வரை 6 நாட்கள் பயிற்சி முகாம் சென்னையில் நடத்தப்பட இருக்கிறது.


இதில் கலந்து கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு உரிய தகவலை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும். அந்த மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று சென்னையில் நடக்கும் பயிற்சி முகாமில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்? முதல்வருக்கு பாராட்டு விழா!

 

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்தால், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு தகவல்


பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்தால், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தவிருப்பதாக பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


சட்டப் பேரவையில் இன்று (ஏப். 24) ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.


பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம்; அதனை மறுக்கவில்லை. பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவது குறித்து முதல்வர் சரியான முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.


இதனையடுத்து, அமைச்சர் அன்பில் மகேஸின் உரை வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக, அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அவர் தெரிவித்ததாவது, 14 ஆண்டாக 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை போன்ற பாடங்களில் பணிபுரிகின்றனர். இன்றைய விலைவாசி உயர்வில், தற்போது வழங்கப்படும் ரூ. 12,500 சம்பளத்தை வைத்துக் கொண்டு, குடும்பத்தை நடத்த முடியவில்லை. மே மாதம் சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் ஒருபோதும் இல்லாமல் பணிபுரிவதால் வாழ்வாதாரம் இழந்துள்ளார்கள்.


எனவே, பணி நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் மட்டுமே, இனி எஞ்சிய காலத்தை நிம்மதியாக வாழ முடியும் சூழ்நிலையில் உள்ளனர்.


இதுகுறித்து முதல்வருக்கு தெரிவிக்க நேரிலும், தபாலிலும் மனு கொடுத்து வருகிறோம்; போராட்டங்களும் நடத்தியுள்ளோம். எனவே, 12 ஆயிரம் குடும்பங்கள் பலனடைய, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே முதல்வர் 110 விதியில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, சிறப்பாசிரியர்களாகப் பணியமர்த்தி அறிவிக்க வேண்டும்.


அவ்வாறு பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டால், முதல்வருக்கு பாராட்டு விழாவும் எடுக்க உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோடை விடுமுறையில் மாணவர்கள் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் சார்ந்து DSE செயல்முறைகள்!

 கோடை விடுமுறையில் மாணவர்கள் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் சார்ந்து DSE செயல்முறைகள்!

Screenshot_20250424_163705

பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2025-2026

 IMG_20250424_164314

பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2025-2026!

Policy Note 2025-26👇👇👇

Download here

BEL நிறுவனத்தில் Project Engineer-I வேலை – ஊதியம் : ரூ.50,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

 BEL நிறுவனத்தில் Project Engineer-I வேலை – ஊதியம் : ரூ.50,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Project Engineer-I பணிக்கென காலியாக உள்ள 21 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Engineer-I பணிக்கென காலியாக உள்ள 21 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


  • தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.50,000/-வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.04.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Cognizant நிறுவனத்தில் Senior Associate காலிப்பணியிடங்கள் – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

Cognizant நிறுவனத்தில் Senior Associate காலிப்பணியிடங்கள் – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

Cognizant Technology Solutions ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Cognizant பணியிடங்கள்:

Senior Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Associate கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Associate ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Cognizant-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Cognizant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

நீட்' தேர்வு மையம் விபரம் வெளியீடு

 இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, தேர்வு நடக்கும் நகரங்கள் பட்டியலை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, தேசிய தேர்வு முகமையின் தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான இளநிலை நீட் தேர்வு, மே 4ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வு, நாட்டின், 552 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில், 14 நகரங்களில் நடக்க உள்ளது.

இதற்கு விண்ணப்பித்தோர், தங்களின் தேர்வு மையம் அமைந்துள்ள நகரம் பற்றிய விபரத்தை, தங்களின், 'லாகின்'க்குள் சென்று அறியலாம். இது தேர்வு மையம் பற்றிய தகவல் மட்டுமே; நுழைவுச்சீட்டு பின்னர் வெளியிடப்படும்.

இதை தரவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால், 011 - 4075 9000 மற்றும் 6922 7700 என்ற தொலைபேசி எண்ணிலோ, 'neetug2025@nta.ac.in' என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்டம்தோறும் உயர் கல்வி வழிகாட்டி மையங்கள் - பள்ளிக் கல்வித் துறை விரைவில் அறிவிப்பு

 பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக மாவட்டம்தோறும் வழிகாட்டி மையங்களை அமைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விவரங்கள், விழிப்புணர்வு தகவல்கள் விளக்கப்பட்டு வருகின்றன.


தொடர்ந்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேக வழிகாட்டி மையங்களை தொடங்க தற்போது பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி மாவட்டங்களின் எல்லை அளவை பொறுத்து முதல்கட்டமாக 2 அல்லது 3 வழிகாட்டி மையங்கள் அமைக்கப்பட உள்ளன இவற்றில் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க உதவுதல், அதற்கான பயிற்சிகளுக்கு வழிகாட்டுதல், பிளஸ் 2 முடித்து உயர் கல்வியில் சேருவற்கான ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதுதவிர பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஆங்காங்கே நடைபெறும் வன்முறை சம்பவங்களை தவிர்ப்பதற்காக நீதி போதனை வகுப்புகளை கட்டாயமாக்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளை துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நாளை (ஏப்.25) வெளியிட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

   Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Guest Faculty பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Guest Faculty பணிக்கென ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree in M.A. English / Ph.D தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வகுப்புக்கு ரூ.1500/- என மாதம் ரூ.50,000/- ஊதியமாக வழங்கப்படும்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து centrehead.kkl@pondiuni.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

GRI திண்டுக்கலில் Guest Faculty காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || இறுதி வாய்ப்பு!

   Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

GRI திண்டுக்கலில் Guest Faculty காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || இறுதி வாய்ப்பு!

காந்திகிராம கிராமிய நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MA / M.Sc / M.Phil / PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு காந்திகிராம கிராமிய நிறுவனத்தின் நிபந்தனைகளின்படி ஊதியமாக வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 23.04.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

ரூ.42,000/- சம்பளத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || நேர்காணல் மூலம் தேர்வு!

   Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ரூ.42,000/- சம்பளத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || நேர்காணல் மூலம் தேர்வு!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ஆனது Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,000/- முதல் ரூ.42,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)