5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2026-27-ம் கல்வியாண்டுக்கான தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர் மிகு சட்டப் பள்ளியிலும், பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளிலும் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும்) உள்ள 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு வருகிற 18ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வரை சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in என்ற அதி காரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் 3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க


”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்.

 நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்.


மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும்.

நீட் தேர்வு அறிமுகமான காலம் முதலே தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க வேண்டும்.

வினாத்தாள் கசிவு புகாரில் தற்போது நடந்து முடிந்த நீர் தேர்வை தேசியத் தேர்வு முகமை ரத்து செய்துள்ளது.

நீட் தேர்வால் கிராமப்புற அரசுப் பள்ளி, ஏழை மாணவர்கள், தமிழ்வழி மாணவர்கள், பின்தங்கிய குடும்ப மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

*நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை.*

2026-2027 ஆம் கல்வி ஆண்டு - கற்றல் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 

623295

2026-2027 ஆம் கல்வி ஆண்டு -  கற்றல் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - விலையில்லா நலத்திட்ட பொருட்களை பெற்று பள்ளிகளுக்கு அனுப்புதல் , அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DEE  - School reopen preparedness.pdf

👇👇👇👇

Download here




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு

 


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60% ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; 2026 ஜனவரி முன்தேதியிட்டு இது வழங்கப்படும்


கடைசியாக கடந்தாண்டு நவம்பரில் 55% ஆக இருந்த அகவிலைப்படி 3% உயர்த்தி 58% ஆக வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

622654




TET சீராய்வு மனு விசாரணைக்கு வருகிறது

 ஆசிரியர் தகுதித் தேர்வு உச்ச நீதிமன்றம் (Special Bench) சீராய்வு மனுக்கள் (68) 13.05.2026 , பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்கப்பட இருக்கின்றன

 

617580

விரைவில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள்

 கணக்கெடுப்பு!

பள்ளிகளில் காலி பணியிட ஆசிரியர்கள் விபரங்கள்

பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

விரைவில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள்

617324

SERC Chennai Recruitment 2026 – ITI, Diploma Candidates-க்கு Apprentice வேலைவாய்ப்பு! Walk-in Interview மூலம் தேர்வு

 ITI மற்றும் Diploma படித்த candidates-க்கு Chennai-ல் Central Government Research Centre Apprentice வாய்ப்பு! CSIR-Structural Engineering Research Centre சார்பில் Trade Apprentice மற்றும் Technician Apprentice பணிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SERC Chennai Recruitment 2026 மூலம் மொத்தம் 29 Apprentice காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு online application இல்லாமல், eligible candidates நேரடியாக Walk-in Interview-க்கு செல்லலாம். தேர்வு செய்யப்படும் candidates-க்கு மாதம் ₹10,500 முதல் ₹12,000 வரை stipend வழங்கப்படும்.

கல்வித் தகுதி

Trade Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் candidates, சம்பந்தப்பட்ட trade-ல் ITI முடித்திருக்க வேண்டும்.

Technician Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் candidates, சம்பந்தப்பட்ட துறையில் Diploma முடித்திருக்க வேண்டும்.

Apprentice training வாய்ப்பை தேடும் freshers மற்றும் technical qualification கொண்ட candidates-க்கு இது நல்ல opportunity ஆக இருக்கும்.

தேர்வு முறை

இந்த recruitment-க்கு candidates Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேவையான ஆவணங்கள், educational certificates, ID proof, application form போன்றவற்றுடன் candidates நேரடியாக interview venue-க்கு செல்ல வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

இந்த SERC Chennai Apprentice recruitment-க்கு Application Fee இல்லை. Eligible candidates free-ஆ Walk-in Interview-ல் கலந்து கொள்ளலாம்.

Walk-in Interview தேதி

Walk-in Interview Date: 20.05.2026

Candidates interview date அன்று நேரத்திற்கு முன்பாக venue-க்கு சென்று registration/document verification process-ல் கலந்து கொள்ள வேண்டும்.

Walk-in Venue

CSIR-Structural Engineering Research Centre,
Taramani,
Chennai – 600113.

எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் candidates official notification-ஐ download செய்து முழுமையாக படிக்க வேண்டும். அதன் பிறகு application form-ஐ print எடுத்து, தேவையான details-ஐ சரியாக fill செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட application form, original certificates, self-attested copies, ID proof மற்றும் notification-ல் குறிப்பிடப்பட்ட documents உடன் 20.05.2026 அன்று Walk-in Interview venue-க்கு நேரில் செல்ல வேண்டும்.

Official Website: https://www.serc.res.in/

APPLICATION FORM: CLICK HERE

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)

முடிவு

SERC Chennai Recruitment 2026 என்பது ITI மற்றும் Diploma படித்த candidates-க்கு Chennai-ல் Apprentice training பெற நல்ல வாய்ப்பு. மொத்தம் 29 காலியிடங்கள் உள்ளதால், தகுதியான candidates official notification-ஐ சரிபார்த்து 20.05.2026 அன்று Walk-in Interview-ல் கலந்து கொள்ளலாம்.

டேட்டா சயின்ஸ், ஏரோநாட்டிக்ஸ் பிரிவுகளில் சென்னை ஐஐடியில் ஆன்லைனில் நடத்தப்படும் 4 ஆண்டு பி.எஸ். பட்டப் படிப்புகள்

 டேட்டா சயின்​ஸ், எலெக்ட்​ரானிக் சிஸ்​டம், ஏரோ​நாட்​டிக்ஸ் உள்​ளிட்ட பிரிவு​களில் 4 ஆண்டு ஆன்​லைன் பி.எஸ். பட்​டப் படிப்​பு​களில் மாணவர் சேர்க்​கைக்​கான அறி​விப்பை சென்னை ஐஐடி வெளி​யிட்​டுள்​ளது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்​றவர்​கள் மே 31-ம் தேதி வரை விண்​ணப்​பிக்கலாம்.

இது தொடர்​பாக சென்னை ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அனைத்து தரப்பு மாணவர்​களுக்​கும் உயர்​தரக் கல்வி அளிக்​கும் வகை​யில் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்​ளி​கேஷன்​ஸ், எலெக்ட்​ரானிக் சிஸ்​டம், மேனேஜ்மென்ட் அண்ட் டேட்டா சயின்​ஸ், ஏரோ​நாட்​டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்​னாலஜி ஆகிய 4 வித​மான பி.எஸ். பட்​டப் படிப்​பு​களை சென்னை ஐஐடி ஆன்​லைனில் வழங்கி வரு​கிறது.

இவை 4 ஆண்டுக்கால படிப்புகள். மாணவர்​கள் இதை தனி பட்​டப் படிப்​பாகவோ, வழக்​க​மான கல்​லூரி பட்​டப் படிப்​புடன் சேர்ந்தோ படிக்​கலாம். இதற்​கான வகுப்​பு​கள் பெரும்​பாலும் ஆன்​லைனில் நடத்​தப்​படும். நாடு முழு​வதும் பல்​வேறு மையங்​களில் நேரடி தேர்​வு​கள் நடத்​தப்​படும்.

மாணவர்​கள் தங்​கள் வசதிக்கு ஏற்ப படிப்​பைத் தொடரலாம். அவர்​களது படிப்​புக் காலத்​துக்கு ஏற்ப சான்​றிதழ், டிப்​ள​மா, பட்​டம், பி.எஸ். பட்​டம் என வழங்​கப்​படும். இப்​படிப்​பு​களில் சேர, பிளஸ்-2 தேர்ச்சி போதும். வயது வரம்பு கிடை​யாது.

ஜேஇஇ நுழைவுத் தேர்வு தேர்ச்​சி​யும் அவசி​யம் இல்​லை. தகு​தி​காண் நடை​முறை மூலம் மாணவர்​கள் சேர்க்​கப்​படு​வார்​கள்.

இதில் சேர விரும்​புவோர் https://study.iitm.ac.in என்ற இணை​யதளம் வாயி​லாக மே 31-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம். கூடு​தல் விவரங்​களை இணை​யதளத்​தில் விரி​வாக அறிய​லாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.



CTET 2026 September - notification

 CTET 2026 September - notification  

PUBLIC NOTICE

The Central Board of Secondary Education will conduct the 22nd Edition of Central Teacher Eligibility Test (CTET) on 06th September, 2026 (Sunday) (Paper- I and Paper-II). The online application process will start from 11.05.2026. The last date for submitting the online application is 10.06.2026 (11:59 PM). The test will be conducted in twenty seven languages in 132 cities all over the country.

611302

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

 பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சென்​னை​யில் உள்ள அரசு திரைப்​படக் கல்​லூரி​யில் சேர விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக, தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக அரசின் எம்​ஜிஆர் திரைப்​படம் மற்​றும் தொலைக்​காட்சி பயிற்சி நிறு​வனம் சென்னை தரமணி​யில் அமைந்​துள்​ளது.

இக்​கல்​லூரி​யில் ஒளிப்​ப​திவு, டிஜிட்​டல் இன்​டர்​மீடியட், ஒலிப்​ப​திவு, இயக்​கம் மற்​றும் திரைக்​கதை எழுதுதல், எடிட்​டிங், அனிமேஷன் மற்​றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 6 பாடங்​களில் இளங்​கலை பட்​டப்​படிப்பு (பேச்​சிலர் ஆஃப் விஷுவல் ஆர்ட்​ஸ்) வழங்​கப்​படு​கிறது.

இப்​படிப்​பு​களில் வரும் கல்வி ஆண்​டில் (2026-27) சேரு​வதற்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

மாணவர்​கள் இதற்​கான விண்​ணப்​பப் படிவம் மற்​றும் விளக்​கக் கையேட்டை www.filminstitute.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் மே 12 (இன்​று) முதல் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம்.

பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பத்தை விண்​ணப்​பக் கட்​ட​ணம் மற்​றும் தேவை​யான ஆவணங்​களு​டன் ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்​குள் ஆன்​லைனில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். மேற்​கண்ட பட்​டப் படிப்​பு​களுக்கு விண்​ணப்​பிக்க பிளஸ்-2 முடித்​திருக்க வேண்​டும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு - Director Proceedings

 உயர்நிலைபள்ளிகளில் காலியாக உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் சார்ந்த விவரம் கோருதல் - சாரபு.


பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு/நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் 01.12.2025 நிலவரப்படி காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரங்களை பார்வை 3-ல் காண் இவ்வியக்கக செயல்முறைகளின் மூலம் கோரப்பட்டது. 

தற்சமயம், தற்போதுள்ள நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரத்தினை (31.05.2026-ல் ஓய்வு பெறும் தலைமையாசிரியர்களின் பணியிடத்தினையும் சேர்த்து) இணைப்பில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் (படிவம்1 மற்றும் 2) பூர்த்தி செய்து SOFT COPY-யினை c1tndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட பிரதியினை 15/05/2026க்குள் இவ்வியக்கத்திற்கு அனுப்பிவைத்திட வேண்டும். 
மேலும், ஒவ்வொரு மாதமும் பிரதி 5ஆம் தேதிக்குள் தங்களது மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரத்தினை தவறாமல் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



கண்காணிப்பாளர் பதவியிலிருந்து DEO / JD -ன் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு!

 கண்காணிப்பாளர் பதவியிலிருந்து DEO / JD -ன் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு பொதுப்பணி - மாவட்டக் கல்வி அலுவலரின் / இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் பதவிக்கு 15.03.2026 அன்றுள்ளவாறு கண்காணிப்பாளர்களின் உத்தேச பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் - சேர்க்கை. நீக்கம், திருத்தம் கோருதல் -சார்ந்து.

DSE - PA Panel Tentative - Proceeding.pdf

👇👇👇👇

Download here

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் எத்தனை? - பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுப்பு

 அரசுப் பள்​ளி​களில் காலி​யாக​வுள்ள இடைநிலை ஆசிரியர், பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யிடங்​களின் விவரங்​களை அனுப்​பக் கோரி பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்வி இணை இயக்​குநர் (பணி​யாளர் பிரிவு) அனைத்து மாவட்ட முதன்​மை கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை​: அரசு, நகராட்​சி, உயர் நிலை, மேல்நிலைப் பள்​ளி​களில் 31.5.2025 நில​வரப்​படி, அனைத்​துப் பாட பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் இடைநிலை ஆசிரியர்​களின் நிரப்​பத் தகுந்த காலிப்​பணி​யிடங்​களை மே 20-க்குள் பள்​ளிக்​கல்வி இயக்​குநர் அலு​வல​கத்​துக்கு அனுப்ப வேண்​டும்.

அவ்​வாறு காலிப் பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2025-ல் ஆசிரியர் இல்லாமல் உபரி எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கருதக் கூடாது.


அதேபோல், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர்களையும் காலிப் பணியிடங்களாகக் கருதக்கூடாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மேலும், காலிப்பணியிட விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பும்போது தற்போதைய நிலவரப்படி அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத் தகுந்த காலியிடங்கள் என்பதையும், இப்பணியிடம் அப்பள்ளியில் ஐஎப்எச்ஆர்எம்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்த பின்னரே படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்