ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் - DEE Proceedings
HM Transfer / Retirement - பொறுப்பு ஒப்படைக்கும் தலைமை ஆசிரியர்களின் / பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - Filled Form
நண்பர்களே வணக்கம் 🙏
சென்னை பல்கலை.யில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்: இளங்கலை படிப்பில் சேர மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வித் திட்டத்தில் இளங்கலை படிப்புகளில் சேர மே 23-ம் தேதிக்குள் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரீட்டா ஜான் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘ஏழை மாணவர்களுக்காக சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், வரும் கல்வி ஆண்டில் (2026-2027) இந்த இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் 2025-2026-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், தாய், தந்தையை இழந்த மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்குச் செல்லும் முதல் தலைமுறை மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் முழு விவரங்கள் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்களின் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) கொடுக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் (மே 23) விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து சான்றிதழ்களுடன் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்காக பள்ளியில் உள்ள திறன் வகுப்பறையில் செய்ய வேண்டியவை:
கோடை விடுமுறைக்காக பள்ளியில் உள்ள திறன் வகுப்பறையில் செய்ய வேண்டியவை:
1. கணினி மற்றும் திறன் பலகை முறையாக switch off செய்ய வேண்டும்.
2. பிறகு திறன் பலகையின் கீழ் உள்ள வெள்ளை நிற board ல் உள்ள இரண்டு switch களை off செய்ய வேண்டும்.
3. Tripper switch off செய்யக் கூடாது.
4. CCTV camera அருகில் உள்ள switch off செய்யக் கூடாது. UPS switches off செய்யக் கூடாது.
5. பள்ளி மின் இணைப்பு மீட்டர் அருகில் உள்ள Main board switch off செய்யக் கூடாது
6. திறன் வகுப்பறை கதவு ஜன்னல்களை முழுமையாக மூடி விட வேண்டும்.
7. திறன் பலகை மற்றும் கணினி மேசையை மெல்லிய துணி கொண்டு மூடி விட்டால், இந்த ஒரு மாதத்தில் தூசிகள் படியாமல் இருக்கும்.
8. கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், மழை சாரல் திறன் வகுப்பறையில் படாதவாறு கதவு மற்றும் ஜன்னல்கள் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.
9. CCTV கேமரா மேல் புறம் பொருத்தப் பட்டுள்ள switch board rack ன் கண்ணாடி கதவு நன்கு மூடப்பட்டுள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.
10. Switch board rack ன் உள்புறம் உள்ள எந்த switch ஐயும் off செய்யக் கூடாது. மேலும் இணைய இணைப்பு மற்றும் மோடம் switch off செய்யக் கூடாது. இவை 24 x 7 அனைத்து நாட்களிலும் on நிலையில் மட்டுமே இருக்க வேண்டும்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
மாணவர்களுக்கு வழங்க 4.11 கோடி பாடநூல்கள்: பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்
2026-27-ம் கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, 4.11 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பும்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ், 44 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 70 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாடநூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, வரும் 2026-27-ம் கல்வியாண்டில் மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் அச்சிட்டு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 88 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 2.71 கோடி புத்தகங்கள், விற்பனைக்காக 1.4 கோடி புத்தகங்கள் என மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படவேண்டும். இதில் 1, 2, 3-ம் வகுப்பு தவிர, இதர வகுப்புகளுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு,அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.
1, 2, 3-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அவற்றின் பாடநூல்கள் தயாரிப்பு முடியும் தருவாயில் உள்ளது. எனினும், அந்தப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.
இதுதவிர, தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் விற்பனை ஏப்.10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Smart Class - முழு ஆண்டு விடுமுறை நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் (Do's & Dont's)
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
TNSED App-ல் ( 22.04.26 ) வருகையினை பதிவு செய்யும் முறை :
TNSED App-ல் இன்றைய ( 22.04.26 ) வருகையினை பதிவு செய்யும் முறை :
22.04.26 Wednesday
Today Attendance ல்
Fully not working
Staff Attendance :
தேர்தல் பணியில் உள்ளோர் OD
விலக்கு பெற்றவர்கள் Present
LOB : Y / N
Attendance இடுங்கள்.
Student Attendance
Touch செய்ய வேண்டாம்
தொலைதூரக் கல்வி திட்ட மாணவர்கள் அரியர் தேர்வு எழுத மே மாதம் விண்ணப்பிக்கலாம் - சென்னை பல்கலை.
தொலைதூரக் கல்வி திட்ட மாணவர்கள் பழைய அரியர் தேர்வுகளை எழுத மே மாதம் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் செமஸ்டர் பாடத்திட்டத்தில் இளங்கலை, (A 18, C19, A19, C20, A20 பேட்ஜ்) முதுகலை (A18, C19, A19, C20, A20, C21, A21 பேட்ஜ்) படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பழைய அரியர் தேர்வுகளை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற கடைசியாக 2 வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. அவர்கள் டிச. 2025, ஜூன் 2026 தேர்வு அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, 2025 டிசம்பர் அமர்வுக்கான தேர்வுகள் வரும் ஜூன் மாதம் நடத்தப்பட உள்ளன. இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மே மாதத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள முகவரி www.ideunom.ac.in. பழைய அரியர் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வழங்கப்பட்டுள்ள இந்த கடைசி வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
JEE 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர் தமினா கிரிஷ் உட்பட 14 பேர் முழு மதிப்பெண்
ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் தமினா கிரிஷ் உட்பட 14 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும்.
இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 21 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த தேர்வை சுமார் 13 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 16-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்டத் தேர்வு ஏப்ரல் 2 முதல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 584 மையங்களில் 10 லட்சத்து 34,330 மாணவர்கள் எழுதினர்.
அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது. மாணவர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் தேர்வு முடிவுகளை அறியலாம். இந்த தேர்வில் மொத்தம் 14 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் மாணவர் தமினா கிரிஷ் முழு மதிப்பெண் பெற்றுள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இவ்விரு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அதிக மதிப்பெண் அடுத்தகட்ட ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கு கணக்கில் கொள்ளப்படும். பிரதானத் தேர்வு மே 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் ஏப்ரல் 23 முதல் மே 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வருகிற 26ம் தேதி வெளியீடு
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வருகிற 26ம் தேதி வெளியீடு
மாணவர்களின் நலன் கருதி நீண்ட தொலைவில் இல்லாமல் அவர்கள் விருப்பத்தின்படி நகரங்கள் ஒதுக்கீடு. மே மாதம் 3ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது, 99.2% மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு மையம் அமைந்துள்ள நகரம் ஒதுக்கீடு என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது
22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று ECINET PRO Module Appல் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்
தேர்தல் பணி - 22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ECINET PRO Module செயலியில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்
தேர்தல் பணிக்குச் செல்லும் அன்பர்களே ! உங்களுக்கான முக்கியமான பதிவு இது!
வாக்குப்பதிவு மைய தலைமை அலுவலர்களாக (PRO) நியமிக்கப் பட்டுள்ள வர்களுக்கானப் பதிவு இது.
நீங்கள் 2 அல்லது 3 பயிற்சிக் கூட்டங்களிலே இதுவரை கலந்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்கானப் பணிகளைத் தமிழில் வரிசைக்கிரமமாக எளிமைப்படுத்தித் தருகிறேன்.
இதன்படி, உங்கள் பணிகளை வரிசையாக மேற்கொண்டால் பதட்டமின்றியும் வெற்றிகரமாகவும் அமையும்.
1) உங்களுக்கென்று தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகள் இருந்தாலும், அதை மறந்து ஒரு தேர்தல் அலுவலராக நடுநிலையாக நடந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நேர்மையாகப் பணியாற்றுவது மிக முக்கியம்.. அதேபோல் நீங்கள் நேர்மையாகத்தான் நடந்து கொள்கிறீர்கள் என்ற தோற்றம் பிறர் பார்வையில் எழும்புவது அதைவிட மிக முக்கியம்.
2) உங்களுக்கான வாக்குப்பதிவு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன், உங்கள் சக குழுவினரை அடையாளம் கண்டு கொண்டு, அந்த நொடியிலிருந்து ஒரே குழுவாக இயங்க ஆரம்பியுங்கள்.
3) தேர்தலுக்கு முதல்நாள் 1 மணிக்குள் முக மலர்ச்சியுடன் வாக்குப்பதிவு மையத்தைச் சென்றடைந்து, உங்கள் தொலைபேசி எண்ணிலிருந்து தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள App ல் உங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்..
4) 22.04.2026 அன்று 2 மணிக்கு எல்லா அலுவலர்களும் உங்கள் மையத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்து கொண்டு, Appல் செய்தி அனுப்புங்கள்.
5) உங்கள் மையத்திற்குள் அரசியல் அடையாளங்கள், தலைவர்களின் படங்கள், வாசகங்கள் இல்லாமல் இருக்கிறதா என்பதைப் பாருங்கள்.
6) மையத்திலிருந்து 100 அடி மற்றும் 200 அடித் தொலைவில் அடையாளம் குறிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள்.
7) சக அலுவலர்களுடன் இணைந்து வாக்குப்பதிவு மையத்தை வாக்காளர்கள் எளிதாக வந்து செல்லும் வண்ணம் வடிவமையுங்கள். அலுவலர்கள், ஏஜெண்டுகள் அமர வேண்டிய இடத்தை முடிவு செய்யுங்கள்.
8 ) வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பெற்றுக் கொண்டு, அதனைச் சரி பாருங்கள். பேட்டரியை On செய்தும் Off செய்தும் இயக்கிப் பாருங்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களை எப்படி இணைப்பது என்பதை வீடியோவைப் பார்த்து தெளிவடைந்து கொள்ளுங்கள்..
VVPAT என்ற வாக்களிப்பதை உறுதி செய்யும் அச்சு எந்திரத்தின் மீது நேரிடையாக ஒளி எதுவும் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். VVPAT - பின்பக்க பட்டன் Off position ல் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
9) உங்களுக்கான மெட்டல் சீலைத் தனியாக எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
தேர்தலுக்குப் பிறகு வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்க வேண்டிய படிவம் 17 C போதுமான அளவில் இருக்கிறதா என்பதைச் சரிபாருங்கள்..
உங்கள் தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்களோ அத்தனை எண்ணிக்கையில் அந்தப் படிவம் கைவசம் இருப்பது மிக முக்கியம்.
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அந்தப் படிவம் போதுமான அளவில் நிச்சயம் வழங்கப்படாது.
எனவே இப்பொழுதே போதுமான அளவில் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். படிவ நகல் இத்துடன் இணைத்திருக்கின்றேன்.
10) உங்கள் மையத்திற்கான ஏஜெண்டுகளுக்கான நியமனக்கடிதம் வந்திருக்கிறதா என்பதைச் சரிபார்த்து, அவர்களுக்கான அடையாள அட்டைகளைத் தயார் செய்து, இரண்டையும் ஒரு கவரிலிட்டு தனியாக வையுங்கள். அவர்களைத் தொடர்பு கொண்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கே மாதிரி வாக்குப்பதிவிற்கு வரச் சொல்லி நினைவுபடுத்திவிடுங்கள்..
11) அடையாளமிடப்பட்ட வாக்காளர் பட்டியல், சரிபார்ப்பு வாக்காளர்பட்டியல் பெறப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்த்து எத்தனை வாக்காளர்கள்? ஆண்.. பெண்.. எத்தனை பேர் என்பதை தனியாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். (பெரும்பாலான பேர் இதைச் சரிபார்க்க தவறிவிடுவர். வாக்காளர் பட்டியலில் எல்லா பக்கங்களும் வரிசைக்கிரமமாக இருக்கிறதா என்பதைக் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும். பின் அடிக்கிறபொழுது ஏதேனும் ஒரு தாள் தவறுதலாக விடப்பட்டிருந்தால்.. மறுநாள் மிகவும் சிரமப்படுவீர்கள்)
12) Tender votes (கள்ள வாக்கு), Challenged votes (ஐயத்திற்குரிய வாக்கு) என்பது பற்றி தெளிவாகிக் கொள்ளுங்கள்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை.. ஆனால் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அடையாள அட்டையைக் கையில் கொண்டு வந்திருக்கின்றார் என்பதற்காக அவரை வாக்களிக்க அனுமதிக்கவேகூடாது. அது தண்டனைக்குரிய குற்றம்.
13) தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள போஸ்டர்களை உரிய இடத்தில் ஒட்டி வையுங்கள்.
14) தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அலுவலரை மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கலாம். அவர்களும் வாக்காளர்கள் எந்தக்கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.
15) 23.04.26 அன்று காலை 5 மணிக்கே ஆயத்தமாகுங்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் செய்து, ஏஜெண்டுகளை உள்ளே அனுமதித்து, அடையாள வில்லை அவர்களுக்கு வழங்கி, 6.30 மணிக்குள் மாதிரி வாக்குப்பதிவை நடத்திக் காட்டுங்கள்.
Clear
Ballot
Close
Total
Result
Clear
என்ற வரிசையில் இயந்திரத்தை இயக்குங்கள்.
குறைந்தபட்சம் 50 மாதிரி வாக்குகளைப் பதியச் செய்யுங்கள்.. அதற்கான நேரமிருக்குமா என்று பலரும் கவலைப்படுவதைப் பார்க்கிறேன்..
ஒரு வாக்குப்பதிவிற்கு 10 நொடிகள்தான்.. எனில் 50 பதிவிற்கு 500 நொடிகள்.. அதாவது கிட்டத்தட்ட 8 முதல் 10 நிமிடங்கள் வரைதான் ஆகும்..
அதன் பிறகு சீல் வைப்பதற்கு தனியே 10 நிமிடங்களே அதிகம்..
உங்களுக்கோ 1 மணி நேர அவகாசம் இருக்கிறது..
எனவே அது பற்றி கவலைப்படாதிருங்கள்.. பதட்டமும் அடையாதீர்கள்..
VVPAT டிரேயில் உள்ள சிலிப்புகளை வெளியே எடுத்து அதில் Mock poll ballot sheet என்ற ரப்பர் முத்திரையைப் பதிவு செய்து, அதையும் சீலிட்டு அதற்குரிய பையில் பத்திரப்படுத்தி.. அதை ஒரு டப்பாவில் அடைத்து சீல் வைத்து, முகவர்களிடம் கையெழுத்து பெற்று, பத்திரமாக வைத்திடுங்கள்..
#மிகமுக்கியம்..
Mock poll முடிந்த உடன் அனைத்தும் சரிபார்த்தல் முடிந்த பின்னர் மறுபடியும் Total பட்டனை அழுத்தவும். Total vote 0 என உள்ளதா என சரி பார்த்து விட்டு பின் polling ஆரம்பிக்கவும்.. இது மிக முக்கியம். ஏனெனில் நிறைய இடங்களில் mock poll ஓட்டை clear பண்ணாமல் polling ஆரம்பித்து விட்டு சிரமப்படுகின்றனர்.. (எக்காரணத்தை முன்னிட்டும் Close பட்டனை தொட்டுவிடாதீர்கள்)
Mock poll certificate ல் வந்திருக்கும் முகவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொள்ளுங்கள்.
எந்திரத்தை சீல் செய்யுங்கள்.
Green seal
Special tag
Strip seal
Address tag
எல்லாவற்றிலும் நீங்களும் கையெழுத்திட்டு, முகவர்களிடமும் கையெழுத்து பெற்று அதன்பின்னர் பொருத்துங்கள்.
*6.30 மணிக்கு Mock Poll Completed என App ல் பதிவு செய்யுங்கள்.*
16) சரியாக 7 மணிக்கு வாக்காளர் ரகசியம் பேணுவது சார்ந்த உறுதிமொழி எடுத்து வாக்குப்பதிவைத் துவக்குங்கள். VVPAT மற்றும் Control unit யை On செய்து கொள்ளுங்கள்..
17) 7 மணிக்கு தேர்தல் துவங்கிவிட்டது என்பதை App ல் பதிவிடுங்கள்..
18) அதன்பிறகு கீழ்க்கண்ட நேரங்களில் எத்தனை பேர் வாக்களித்திருக்கிறார்கள் என பதிவு செய்யுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை Evm total மற்றும் வாக்காளர் பட்டியலில் tick செய்த மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையைச் சரிபார்க்க வேண்டும்
9 மணி : _ _ _
11மணி: _ _ _
1 மணி : _ _ _
3 மணி : _ _ _
3.30. : _ _ _
4. : _ _ _
4.30. : _ _ _
5. : _ _ _
5.30. : _ _ _
6. : _ _ _
6.30. : ___
7.00. : ___
வாக்குப்பதிவை முடிக்க வேண்டியநேரம் இது.
அவ்வப்பொழுது வாக்குப்பதிவு மையத்திற்கு வெளியே சூழ்நிலையைக் கவனியுங்கள்..
மாலை 7 மணிக்கு, வரிசையில் வாக்காளர்கள் நின்றால், வரிசையில் நிற்கும் கடைசி நபரிடமிருந்து வரிசை எண்ணிடப்பட்ட டோக்கனை வழங்குங்கள். அவர்களை மட்டும் வாக்களிக்க அனுமதித்து விட்டு வாக்குப்பதிவை நிறுத்துங்கள்.
இயந்திரத்தில் CLOSE பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள். முன்னதாக TOTAL சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
19) முதியோர்கள், கைக்குழந்தை வைத்திருக்கிறவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து வாக்களிக்க வசதி செய்து கொடுங்கள்.
20) *BATTERY யை OFF செய்யுங்கள். சீல் வையுங்கள். இணைப்புகளைத் துண்டியுங்கள்.*
21) Agent களுக்கு வாக்குப்பதிவு கணக்குச் சீட்டு வழங்குங்கள்.
22) எல்லா நிகழ்வுகளையும் PROCEEDING OFFICER DIARYல் அவ்வப்பொழுது பதிவு செய்து வாருங்கள். அதுதான் பின்னால் பிரச்சனைகள் எதுவும் எழும்பினால் உங்களைக் காப்பாற்றும்.
7.00 மணிக்கு கீழ்க்கண்ட பதிவுகளை அனுப்புங்கள்.
VM _ _ _
VF _ _ _
VT _ _ _
23) எல்லாப் படிவங்களையும் தயார் செய்துவிட்டு, மண்டல அலுவலர் வந்ததும் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு, ரசீது பெற்றுக்கொள்ளுங்கள். (மெட்டல் சீல் மிக முக்கியம்)
*24) உங்களோடு பணியாற்ற வந்திருக்கும் பெண் அலுவலர்களுக்கும் / பெண் காவலர்களுக்கும் நீங்கள்தான் மூத்த சகோதரர் என்பதை மனதில் கொண்டு, தேர்தலுக்குப் பிறகு அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு திரும்பிச் செல்ல போதுமான வசதிகளும் பாதுகாப்பும் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்..
அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுங்கள்..
மாதவிடாய் காலத்தில் அவர்களில் எவரேனும் இருக்கலாம்..
அவர்களில் எவருக்கேனும் நீரிழிவு நோய் இருக்கலாம்..
கைக்குழந்தையை வீட்டில் விட்டு வந்திருக்கலாம்..
எல்லாத் தேவைகளையும் குறிப்பால் உணர்ந்து உதவி செய்யுங்கள்.
அவர்கள் நம் சகோதரிகள்..
25) முதல்நாளே தேர்தல் அலுவலர்களுக்கான மதிப்பூதியத்தைக் கணக்கிட்டு, உங்கள் கைப்பணத்திலிருந்து கவர் தயார் செய்து பிரித்து வைத்துவிட்டீர்கள் என்றால்.. தேர்தல் முடிந்தபிறகு சில்லறைக்கு என்ன செய்வது .. எப்படிப் பிரித்துக் கொடுப்பது என்ற கவலை தோன்றாமல் இருக்கும்..
அவ்வளவுதான்.. பதட்டமில்லாமல் இயங்குங்கள்..
எந்த முறைகேட்டையும் , நீங்கள் செய்யாதிருங்கள்..
எந்த முறைகேட்டையும் அனுமதிக்காதிருங்கள்..
எல்லா பணிகளும் நிறைவு பெற்ற பிறகு,
அனைத்துமுகவர்களுக்கும் , சக பணியாளர்களுக்கும் நன்றி சொல்லி கை குலுக்கி சந்தோஷமாய் வெளியே வாருங்கள்.
நாளை தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்.