டிப்ளமோ படித்து பணியில் இருப்பவர்கள் பகுதி நேர பிஇ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

  பாலிடெக்​னிக் டிப்​ளமோ படித்து பணி​யில் இருப்​பவர்​கள், பகுதி நேர பிஇ படிப்​பில் சேர விண்​ணப்​பிக்​கலாம் என, தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநர் பி.ரத்​தின​சாமி நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பு: தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககத்​தின் கட்​டுப்​பாட்​டின் கீழ் இயங்​கும் 6 அரசு பொறி​யியல் கல்​லூரி​கள் மற்​றும் 2 அரசு உதவி பெறும் பொறி​யியல் கல்​லூரி​களில், நடப்பு கல்வி ஆண்​டில் (2026-27) பகுதி நேர பிஇ படிப்​பில் சேர ஆன்​லைனில் விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

பொறி​யியல் டிப்​ளமோ படித்து வேலை​வாய்ப்பு பெற்று ஓராண்டு பணிபுரிந்த அல்​லது பணிபுரிந்து கொண்​டிருப்​போர் இதற்கு விண்​ணப்​பிக்க தகு​தி​யுடைய​வர் ஆவர். அவர்​கள் www.ptbe-tnea.com என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். தேவை​யான சான்​றிதழ்​களை​யும் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். பதிவு கட்​ட​ணம் ரூ.900. எஸ்​சி, எஸ்டி வகுப்​பினருக்கு ரூ.450 மட்​டும்.

ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க கடைசி நாள் ஜூலை 12-ம் தேதி. கூடு​தல் விவரங்​களை மேற்​குறிப்​பிட்ட இணைய தளத்​தில் விரி​வாக அறிந்​து கொள்​ளலாம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

கல்வித்துறையை உலகத் தரத்திற்கு உயர்த்த விரிவான செயல் திட்டம் - முதல்வரிடம் பாலகுருசாமி அறிக்கை சமர்ப்பிப்பு

  தமிழகப் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித்துறைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி விரிவான செயல் திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுசார் பொருளாதாரத்தின் எழுச்சியால் உலகளாவிய கல்விச் சூழல் வேகமாக மாறி வருகிறது. இத்தகைய சூழலில், கல்வியின் தரம், ஆராய்ச்சித் திறன் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில், 2026---2031 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான விரிவான திட்ட பரிந்துரைகள் இந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன.  அவர் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 பள்ளி மாணவர்களின் அடிப்படை வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்த மாநில அளவிலான சிறப்பு இயக்கம் உருவாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

மேலும், கோடிங், டிஜிட்டல் கல்வி, நிதி அறிவு, காலநிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி போன்ற எதிர்காலத் திறன்களை பாடத்திட்டத்தில் இணைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.ஆசிரியர்களுக்கான தொடர் தொழில்முறைப் பயிற்சிக்காக 'ஆசிரியர் சிறப்பு அகாடமிகள்' நிறுவுதல், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், இணைய வசதிகள் மற்றும் மாணவர்களுக்கான மனநல ஆலோசனை மையங்களை ஏற்படுத்துதல் ஆகிய திட்டங்களும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

உயர்கல்வித் துறையில், காலியாக உள்ள துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகப் பதவிகளை உடனடியாக நிரப்புதல், பாடத்திட்டங்களை தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்புதல் ஆகியவை முக்கிய பரிந்துரைகளாக இடம்பெற்றுள்ளன. பல்கலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் வகையில் கட்டாய தொழிற்பயிற்சி முறை அறிமுகப்படுத்தப்படுவதுடன், ஏ,ஐ., ரோபோட்டிக்ஸ், சைபர் பாதுகாப்பு, பசுமை ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பு மையங்கள் அமைக்க வேண்டும்.


மாணவர்களிடையே புதுமை மற்றும் தொழில்முனைவு திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட்அப் மையங்கள், காப்புரிமை ஆதரவு திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி நிதி உதவிகளை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டங்களைக் கண்காணிக்க முதல்வர் தலைமையில் உயர் மட்ட 'தமிழ்நாடு கல்வி மாற்றுக் குழு' அமைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி அறிவு மற்றும் புதுமை மையமாக உருவாகும் என்றும், கல்வித் தரம் மற்றும் வேலைவாய்ப்பு திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயரும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


740745





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்: கல்வித் துறை உத்தரவு

  

hindutamil-prod%2F2026-06-15%2F2l5skj6a%2F4

அரசுப் பள்​ளி​களில் 250 மாணவர்​களுக்கு ஓர் உயர்கல்வி வழி​காட்டி ஆசிரியர் இருக்க வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் படிக்​கும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையி​லான மாணவர்​களுக்கு உயர்​கல்வி குறித்த வழி​காட்​டு​தல்​களை வழங்​கி, சேர்க்​கையை உறுதி செய்​வதற்​காக, பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் ‘உயர்​கல்வி வழி​காட்டி திட்​டம்’ செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

இத்​திட்​டத்​தின்​கீழ் ஒவ்​வொரு அரசு உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​யிலும், வகுப்பு ஆசிரியர்​கள் உயர்​கல்வி வழி​காட்​டிகளாக நியமிக்​கப்​படு​கின்​றனர்.

கல்​லூரிக் கல்​வி, தொழிற்​கல்வி படிப்​பு​கள் மற்​றும் அதற்​கான நுழைவுத் தேர்​வு​கள் குறித்த தகவல்​களை அவர்​கள் மாணவர்​களுக்கு தெரிவிக்​கின்​றனர். பின்​தங்​கிய மற்​றும் சிறப்பு கவனம் தேவைப்​படும் மாணவர்​களைக் கண்​டறிந்​து, அவர்​கள் உயர்​கல்​வியைத் தொடர்​வதை உறுதி செய்​வதற்​கான நடவடிக்​கைகளை​யும் மேற்​கொள்​கின்​றனர்.

இந்​நிலை​யில், இத்​திட்​டம் தொடர்​பாக மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்கு மாதிரிப் பள்​ளி​கள் உறுப்​பினர் செயலர் இரா.சுதன் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: உயர்​கல்வி வழி​காட்டி திட்​டத்​தின் கீழ் கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசுப் பள்​ளி​களில் உயர்​கல்வி வழி​காட்டி ஆசிரியர்​களை நியமிக்க தலைமை ஆசிரியர்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டது. அந்த ஆசிரியர்​களின் பெயர்​களை ‘எமிஸ்’ தளத்​தில் பதிவு செய்​யு​மாறும் அறி​வுறுத்​தப்​பட்​டது.

ஜூன் 30-ம் தேதிக்குள்..

அனைத்து மாணவர்​களுக்​கும் உயர்​கல்வி பற்​றிய விழிப்​புணர்வு மற்​றும் தகவல்​கள் முழு​மை​யாக சென்​றடைந்​தால் மட்​டுமே அவர்​கள் உயர்​கல்வி தொடர்​வதை உறு​தி​செய்ய முடி​யும்.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

நீட் தேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலியின் பயன்பாட்டுக்கு தற்காலிக தடை

  

டெலிகிராம் செயலிக்கு தடை


நாடு முழுவதும் நீட் தேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலியின் பயன்பாட்டுக்கு தற்காலிக தடை விதிப்பு

ஜூன் 21ல் நீட் மறுதேர்வு நடக்கவுள்ளதால் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தடை; நீட் தேர்வுக்கான வினாத்தாள் டெலிகிராம் மூலம் கசிந்ததாக புகார் எழுந்த நிலையில் மத்திய அரசு நடவடிக்கை



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: பெரியார் பிறந்த நாளில் தொடங்க முதல்வர் உத்தரவு

  

​முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்​யப்​படு​வ​தாக முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். பெரி​யாரின் பிறந்த நாளான செப்​.17-ம் தேதி இத்​திட்​டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்​கு​மாறு சமூக நலத் துறை அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

கடந்த திமுக ஆட்​சி​யில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்​கப் பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த 2022 செப்​.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இத்​திட்​டத்தை அப்​போதைய முதல்​வர் ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார்.

பின்​னர், அரசு உதவி​பெறும் தொடக்​கப் பள்​ளி​களுக்​கும் இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டது. விரி​வாக்க திட்​டத்தை ஸ்டா​லின் 2023 ஆக.25-ம் தேதி தொடங்​கி​வைத்​தார். தற்​போது 17.55 லட்​சம் மாணவ, மாணவி​கள் இத் திட்​டத்​தால் பயன்​பெற்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக அரசு பொறுப்​பேற்​றுள்ள நிலை​யில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவி​களுக்கு விரி​வாக்​கம் செய்ய ஏது​வாக, பெரி​யார் பிறந்த நாளான செப்​.17-ம் தேதி தொடங்​கு​வதற்கு நடவடிக்கை மேற்​கொள்​ளு​மாறு சமூக நலத் துறை அதி​காரி​களுக்கு முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​னார்.

மேலும் ‘‘சமூக நலம், மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்​படுத்​தப்​படும் திட்​டங்​களை, பயனாளர்​களான குழந்​தைகள், பெண்​கள், திருநங்​கைகள், மூத்த குடிமக்​களிடம் தடை​யின்​றி, துரித​மாக கொண்டு சேர்க்க வேண்​டும். குழந்​தைகள் பாது​காப்​பில் கவனம் செலுத்த வேண்​டும். போதைப் பொருள் பழக்​கத்​துக்கு ஆளா​காத​படி அவர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும். அந்த பழக்​கத்​துக்கு ஆளான குழந்​தைகளை மீட்டு மறு​வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்​றும் அறி​வுறுத்​தி​னார். இந்த கூட்​டத்​தில் சமூக நலம், மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் ஜெகதீஸ்​வரி, தலை​மைச் செயலர் சாய்​கு​மார் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

முதல்​வரின் காலை உணவுத் திட்ட விரி​வாக்​கம் குறித்​து, கூட்​டத்​தில் பங்​கேற்ற உயர் அதி​காரி​களிடம் கேட்​ட​போது, ‘‘முதலில் அரசு நடுநிலைப் பள்​ளி​களில் மட்​டும் இத்​திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வதா அல்​லது அரசு மற்​றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்​ளி​களி​லும் சேர்த்தே அமல்​படுத்​து​வதா என்​பது பின்​னர் அறிவிக்​கப்​படும். அப்​போது​தான் எத்​தனை மாணவ, மாணவி​கள்​ பயன்​பெறு​வார்​கள்​ என்​ற விவரம்​ தெரிய​வரும்​’’ என்​று தெரி​வித்​தனர்​.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மருத்துவ படிப்புக்கான நீட் மறுதேர்வு: ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்க



 

தொழில்​நுட்ப பிரச்​சினை​யால் நீட் மறு​தேர்​வுக்​கான ஹால் டிக்​கெட்டை பதி​விறக்​கம் செய்ய முடி​யாமல் மாணவர்​கள் கடும் சிரமத்​துக்கு உள்​ளா​னார்​கள். தொழில்​நுட்ப பிரச்​சினை சரிசெய்​யப்​பட்டு வரு​வ​தாக​வும், அனைத்து மாணவர்​களும் ஹால்​டிக்​கெட்டை பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம் என்​றும் தேசிய தேர்வு முகமை அறி​வித்​துள்​ளது.

தேர்வு ரத்து: மருத்​து​வம் மற்​றும் பல் மருத்​துவ படிப்பு மாணவர் சேர்க்​கைக்​காக நீட் (யுஜி) நுழைவுத்​தேர்வு நடத்​தப்​படு​கிறது அந்த வகை​யில், நடப்பு கல்வி ஆண்டு சேர்க்​கைக்​கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடந்​தது. வினாத்​தாள் கசிந்​த​தால் அத்​தேர்வு ரத்​துசெய்​யப்​படு​வ​தாக​வும் மறு நீட் தேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்​தப்​படும் என்று தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) அறி​வித்​தது. இதைத்​தொடர்ந்து நீட் மறு​தேர்​வுக்​கான ஹால் டிக்​கெட்டை மாணவர்​கள் ஜூன் 15-ம் தேதி முதல் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம் என தெரி​வித்​தது.

நாடு முழுவதும்... அதன்​படி, நீட் தேர்வு மாணவர்​கள் தங்​களுக்​கான ஹால் டிக்​கெட்டை நேற்று என்​டிஏ இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்ய முயன்​றனர். ஆனால், இணை​யதளத்​தில் ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக மாணவர்​கள் ஹால்​டிக்​கெட்டை பதி​விறக்​கம் செய்​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டது. இணை​யதளத்​தில் பக்​கம் திறக்​காதது, பதி​விறக்​கம் செய்​யும்​போது பாதி​யில் நின்​று​விடு​வது என பல்​வேறு பிரச்​சினை​களை நாடு முழு​வதும் மாணவர்​கள் எதிர்​கொண்​டனர்.

இதற்​கிடையே, என்​டிஏ வெளி​யிட்ட அறி​விப்​பில், நாடு முழு​வதும் இது​வரை 4 லட்​சம் மாணவர்​கள் ஹால்​டிக்​கெட்டை பதி​விறக்​கம் செய்​திருப்​ப​தாக​வும், விரை​வில் தொழில்​நுட்ப கோளாறு சரிசெய்​யப்​பட்டு அனைத்து மாணவர்​களும் ஹால் ​டிக்​கெட் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலா்ம் என உறு​தி​யளித்​துள்​ளது.

மன உளைச்சல்: வினாத்​தாள் கசிந்து தேர்வு ரத்​து, மறு​தேர்​வு, அதற்​கான ஹால்​ டிக்​கெட் பதி​விறக்​கம் செய்​வ​தில் சிக்​கல், மறு தேர்வு எழு​தாதவர்​களுக்கு கட்​ட​ணத்தை திருப்பி அளிப்​ப​தில் பிரச்​சினை என நீட் தேர்வு விவ​காரத்​தில் மாணவர்​கள் கடும்​ மனஉளைச்​சலுக்​கு ஆளாகி​யுள்​ளனர்​.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பம்: அவகாசம் ஜூன் 23-ம் தேதி வரை நீட்டிப்பு

  

தமிழகத்​தில் உள்ள கால்​நடை மருத்​து​வப் படிப்​பு​களுக்கு 16 ஆயிரம் மாணவ, மாணவி​கள் ஆன்​லைனில் விண்​ணப்​பித்​துள்​ளனர். விண்​ணப்​பிக்​கும் அவகாசம் 23-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் சென்​னை, நாமக்​கல், திருநெல்​வேலி, ஒரத்​த​நாடு, சேலம் தலை​வாசல், உடுமலைப்​பேட்​டை, தேனி வீர​பாண்டி ஆகிய 7 இடங்​களில் கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​கள் உள்​ளன. இந்த கல்​லூரி​களில் ஐந்​தரை ஆண்​டு​கள் கொண்ட கால்​நடை மருத்​து​வம், பராமரிப்பு படிப்​புக்கு (பி​விஎஸ்சி - ஏ.ஹெச்) 660 இடங்​கள் இருக்​கின்​றன.

இதில் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு 15 சதவீத இடங்​கள் வழங்​கப்​படு​கின்​றன. திரு​வள்​ளூர் மாவட்​டம் கோடு​வெளி​யில் உள்ள உணவு, பால்​வளத் தொழில்​நுட்​பக் கல்​லூரி​யில் உணவுத் தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 60 இடங்​கள், பால்​வளத் தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் உள்​ளன. இதில் உணவுத் தொழில்​நுட்ப படிப்​பில் 6 இடங்​களும், பால்​வளத் தொழில்​நுட்ப படிப்​பில் 3 இடங்​களும் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு வழங்​கப்​படு​கின்​றன.

ஓசூர் மத்​தி​கிரி​யில் உள்ள கோழி​யின உற்​பத்​தி, மேலாண்​மைக் கல்​லூரி​யில் கோழி​யின தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள், உணவு தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் உள்​ளன. சேலம் மாவட்​டம் தலை​வாசல் பகு​தி​யில் உள்ள இணைப்​புக் கல்​லூரி​யில் உணவுத் தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள், பால்​வளத் தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் உள்ளன. 3 பி.டெக். பட்​டப் படிப்​பு​களும் 4 ஆண்​டு​கள் கொண்​ட​வை.

இந்​நிலை​யில், பிவிஎஸ்சி - ஏ.ஹெச் மற்​றும் பி.டெக். படிப்​பு​களுக்கு நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணை​யதளத்​தில் விண்​ணப்​பிப்​பது கடந்த மே 25-ம் தேதி தொடங்​கியது. பிவிஎஸ்சி - ஏ.ஹெச். படிப்​புக்கு 10,678 பேர், பி.டெக். படிப்​பு​களுக்கு 5,356 பேர் என மொத்​தம் 16,034 மாணவர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர்.

விண்​ணப்​பிக்​கும் அவகாசம் ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி​யுடன் முடிவ​தாக ஏற்கனவே அறிவிக்​கப்​பட்டிருந்தது. இந்நிலை​யில், மாணவர்​களின் கோரிக்​கையை ஏற்று, ஜூன் 23-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​நேரம், வெளி​நாட்​டினர். வெளி​நாடு வாழ் இந்​தி​யர், அவர்​களது வாரிசுகள், அவர்​களது நிதி ஆதரவு பெற்றவர்​களுக்கு இந்த கெடு நீட்​டிக்​கப்​பட​வில்​லை. அவர்​கள் 17-ம் தேதி மாலை 5 மணிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். இந்த அனைத்து படிப்​பு​களுக்​கும் பிளஸ்2 மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர்​ சேர்க்​கை நடை​பெறு​வது குறிப்​பிடத்​தக்​கது.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஆசிரியர்கள் குறைதீர்க்கும் முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 5- வேலை நாட்களுக்குள் தீர்வு கான தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2026 - 2027 தகவல்

  

2026-2027  ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் அளிக்க உள்ளவர்கள் தங்களின் தனிப்பட்ட 8 இலக்க Emis Id மூலம் ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்திட வேண்டிய தேதி 15-06-2026 முதல் 22-06-2026 முடிய என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!! ஒருவர் ஒன்றியத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய மூன்றுக்கும் ஒரு முறையில் மூன்று கட்டத்திலும் டிக் கொடுத்து பதிவு செய்தால் போதும். ஒவ்வொரு கலந்தாய்வுக்கும் தனித்தனியாக விண்ணப்பம் பதிவு செய்திட வேண்டியது இல்லை. Beo Approve செய்தவுடன்  ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக 3 காப்பிகள் பிரிண்ட் எடுத்து கையொப்பம் இட்டு தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று Beo அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்பதை அவசியம் கவனத்தில் கொள்ளுங்கள்!

👇👇👇

https://whatsapp.com/channel/0029VaALwicAu3aFvcBQEF2F



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

NEET UG Re-Examination (21.06.2026) - Hall Ticket Download - Direct Link

 National Tcsting Agency will conduct the National Eligibility cum Entrance Test /NEET (UG) - 2026 on 21 June 2026 (Sunday) from 02:00 P.M. to 05:15 P.M.(Indian Standard Time). The Admit Cards are being released as per the following schedule



2026 இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


ஜூன் 21 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது ; தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை

தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்

  தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு விவரம்; தனித்தேர் வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 17 முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை தேர்வுத்துறை இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணைய வழியில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தேர்வுக் கட்டணம் ரூ.125, இணைய வழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும்.

இதற்கிடையே மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 9, 10-ம் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு தேர்வுக் கட்டணத்துடன் ரூ.500 கூடுதலாக செலுத்த வேண்டும். முதன் முதலாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் பள்ளி பதிவுத் தாள் நகல், சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே 8-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வி அடைந்த பாடங்களை எழுதுவதற்கு விண்ணப்பிப் பவர்கள் முந்தைய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும். இது தவிர அனைத்து தனித் தேர்வர்களும் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் கூடிய சுய முகவரி உறையை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இணைய வழியிலான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங் கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வு குறித்த விரிவான கால அட்டவணை உள்ளிட்ட தகவல் களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பொது ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது?

  


1. பொது ‘டெட்' தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் பிஎட் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.

2. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.


3. தமிழகத்தில் கடைசியாக 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் டெட் தேர்வு நடத்தப்பட்டது.

4. 2026-ம் ஆண்டுக்கான கால அட்டவணைப்படி, மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

5. பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6. என்சிடிஇ விதிமுறைப்படி ஆண்டுக்கு இருமுறை தேர்வு நடத்தப்பட வேண்டும், ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) இதை முறையாகப் பின்பற்றுவதில்லை என தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

7. பொது டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட்டு விரைந்து தேர்வை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க