நீட் மறு தேர்வுக்கு ஜூன் 20 வரை பயிற்சி

 தமிழகத்​தில் நீட் தேர்​வுக்​காக அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்​களுக்கு இலவச பயிற்சி அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடை​பெறவுள்​ளது.

இதையடுத்து மறு தேர்​வுக்​கான குறுகிய கால பயிற்​சியை பள்​ளிக்​கல்​வித் துறை ஏற்​பாடு செய்​துள்​ளது. அதன்​படி நீட் தேர்​வில் பங்​கேற்​க​வுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்​களை தயார்ப்​படுத்​தும் நோக்​கில் மாவட்ட அளவி​லான பயிற்சி முகாம் ஜூன் 20-ம் தேதி வரை நடை​பெற இருக்​கிறது.

இந்த முகாமில் மாணவர்​கள் நீட் தேர்​வுக்​குத் தயா​ராகும் வகை​யில் பாட​வாரி​யாகப் பயிற்​சிகள், மாதிரித் தேர்​வு​கள் மற்​றும் கல்​வி​யியல் நிபுணர்​களின் வழி​காட்​டு​தல்​கள் வழங்​கப்பட உள்​ளன.

இதில் மாணவ-​மாணவி​கள் பங்​கேற்​பதை தலைமை ஆசிரியர்​கள் வாயி​லாக உறு​தி ​செய்ய வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் வெளி​யிடப்பட்ட சுற்​றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

PM POSHAN Update - New version 4.0.3

 656440

PM POSHAN Update

Noon Meal Monitoring application for Taminadu state govts schools

PM POSHAN Noon Meal App Version


New version 4.0.3

Update date 21.05.2026

Link 👇


https://play.google.com/store/apps/details?id=in.co.bsnl.chennai.pmp

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!

 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI - 600 006


SSLC EXAMINATION - JULY-2026

SUPPLEMENTARY EXAMINATION TIME TABLE

Examinations Commence at 10.00 a.m. Ends at 01.15 p.m

660321

சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட 22 தனியார் பள்ளிகள்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

 


சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட 22 தனியார் பள்ளிகள்: நாமக்கல் மாவட்டம் 

1) பள்ளிபாளையம் கோல்டன் நர்சரி பள்ளி
2) பள்ளிபாளையம் கலைவாணி நர்சரி பள்ளி
3) பள்ளிபாளையம் எவர்கிரீன் இண்டர்நேசனல் நர்சரி பள்ளி
4) நாமக்கல் டைம் கிட்ஸ் நர்சரி ஸ்கூல்
5) ஏபிசி கிட்ஸ்
6) ஹனி பனி கிட்ஸ்
7) ஆரஞ்சு அகாடமி
8) சன் பிளவர்
9) அக்ஸ்ரம்
10) ஸ்பார்க்கில் அகாடமி
11) யுரோ கிட்ஸ்
12) மகிழம்
13) துளிர்
14) ஸ்கூல் ஆப் மாண்ட்டசரி
15) செல்லப்பம்பட்டி ஸ்மைலிஸ் வித்யாஷ்ரமம்
16) எர்ணாபுரம் ஆல்பாபெட்ஸ் பிரி ஸ்கூல்
17) நல்லிபாளையம் தீக்ஷா விஷனரி பள்ளி
18) சேந்தமங்கலம் துலிப் கார்டன் நர்சரி பள்ளி
19) பொத்தனூர் ஆப்பிள் நர்சரி பள்ளி
20) எருமப்பட்டி காவேரி மழலையர் பள்ளி
21) பவித்திரம் எஸ்.எம்.எஸ் நர்சரி பள்ளி
22) என்.கந்தம்பாளையம் காந்தி சிபிஎஸ்இ பள்ளி

♦️மேற்கண்ட 22 பள்ளிகளில் பொதுமக்கள் யாரும் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

♦️மாணவர்களின் பெற்றோர்கள் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளை சேர்த்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

♦️மேற்கண்ட 22 பள்ளிகளிலும், 2026-27 ஆம் கல்வி ஆண்டு முதல் எக்காரணம் கொண்டும் செயல்படக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

♦️இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றால் சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்கா மூர்த்தி எச்சரித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

 


தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு 

கடும் வெயில் காரணமாக ஜூன் 1ல் பள்ளிகளை திறக்கக் கூடாது என பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கை வைத்த நிலையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு என தெரிவிப்பு


665756



மக்கள் தொகை கணக்கெடுப்புபணியில் ஆசிரியர்கள் - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

மக்கள் தொகை கணக்கெடுப்புபணி  தீவிரம் 

ஆசிரியர்கள் இளநிலை உதவியாளர்கள் நியமிக்க மற்றும் மேற்பார்வையாளர்கள் அடையாளம்  காண்பது குறித்தான முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்






மென்பொருள் இயக்கம் தடைபட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்குவதில் சிக்கல்

 



மென்பொருள் இயக்கம் தடைப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ேம மாத ஊதியத்தை வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே மே மாத சம்பளம் குறித்த காலத்தில் கிடைக்குமா? என்கிற அச்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர சுமார் 7 லட்சம் பேர் ஓய்வூதியதார்களாகவும், குடும்ப ஓய்வூதியதாரர்களாகவும் அரசின் ஓய்வூதிய பணபலன்களை மாதம் தோறும் பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் கடைசிநாளில் அதாவது 30 அல்லது 31ம் தேதி வங்கி கணக்கில் சம்பளம் ஏறுவது வழக்கமாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாத சம்பள பட்டியல் ஒருங்கிணைந்த நிதி மனிதவள மேலாண்மை (ஐஎப்எச்ஆர்எம்எஸ்) அமைப்பின் ஆன்லைனில் சமர்பிக்கப்படும். இப்பட்டியல் மாதம்தோறும் 15ம் தேதியே வெளியாகிவிடும்.

அந்தந்த கல்வி நிறுவனங்களின் சம்பள பட்டியலை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக பிரிவு ஊழியர்கள் எடுத்துக் கொண்டு போய் கருவூலத்தில் 25ம் தேதிக்குள் சமர்ப்பிப்பர். பிறகு மாத இறுதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் நடப்பு மே மாதத்திற்கான சம்பள பட்டியல் விபரங்கள் குறிப்பிட்ட மென்பொருள் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. 15ம் தேதியே ஏற்ற வேண்டிய பட்டியல் 22ம் தேதி வரை ஏற்ற முடியாத காரணத்தால், ஊதிய விபரங்களை கருவூலத்திற்கு அனுப்பி வைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மென்பொருள் நிறுவனத்தின் சாப்ட்வேர் இன்னமும் திறக்கப்படவில்லை என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகையும் வரவுள்ள நிலையில், சம்பளம் குறித்த நேரத்தில் கிடைக்குமா? என்ற சந்தேகம் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஆட்டிப் படைக்கிறது. த.வெ.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வினை அறிவித்தது. கடந்த ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், இனி வரும் காலங்களில் அகவிலைப்படி காலதாமதமாக அறிவித்தாலும் அகவிலைப்படி அறிவித்த மாத சம்பளத்தோடு, அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை ஆகியவற்றை இணைத்து வழங்கப்படும் என உறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை முந்தைய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நிறைவேற்றி வந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்தும், அதனை வழங்க இயலாத நிலை இன்று வரை காணப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வை மட்டுமல்லாது மாத ஊதியத்தையும் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சம்பள பட்டியல் மற்றும் 4 மாதத்திற்கான அகவிலைப்படி இணைந்து வழங்கிட, மென்பொருள் நிறுவனமே கணக்குகளை சரி செய்து விரைந்து வெளியிட வேண்டும். ஆனால் அரசுடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது எனக்கூறி கொண்டு, மென்பொருள் நிறுவனம் இந்த பிரச்னையை தீர்க்க மறுப்பதாக கூறப்படுகிறது. புதிதாக பதவியேற்றுள்ள அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உள்ளனர். கருவூலத்திற்கு சம்பள பட்டியல் இதுநாள் வரை செல்லாத நிலையில், வரும் 31ம் தேதி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுமா என்ற கவலையும் வாட்டி வதைக்கிறது.

நீட் தேர்வு முறையில் அடுத்த ஆண்டு முதல் என்னென்ன மாற்றங்களுக்கு வாய்ப்பு?

 மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்புக்குப் பின் அடுத்த ஆண்டில் இருந்து நீட் தேர்வு முறை மாறுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சக ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த் தேர்வு முறை தொடர்பான சீர்திருத்தங்கள் மீது மத்திய சுகாதார அமைச்சகம் மவுனம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டில் இருந்து நீட் தேர்வை கணினி வாயிலாக நடத்தப்போவதாக கல்வித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், நீட் தேர்வை பல அமர்வுகள் மற்றும் கட்டங்களாக நடத்துவது, தேர்வுக்கான முயற்சி எண்ணிக்கைக்கு மற்றும் வயது வரம்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பது போன்ற பிற பரிந்துரைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. உயர்நிலைக் குழுவின் இந்தப் பரிந்துரைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விரைவில் ஓர் இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக, அடுத்த ஆண்டில் இருந்து நீட் நுழைவுத் தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுவதுடன், வேறு பல முக்கிய மாற்றங்களும் நடைமுறைக்கு வரும்.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழுவின் முன்பு தேசியத் தேர்வு முகமையின் (என்டிஏ) அதிகாரிகள் ஆஜராகி இருந்தனர்.

இதேபோன்று, 2024-இல் நிகழ்ந்த வினாத்தாள் கசிவுக்குப் பிறகு டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழு அமர்த்தப்பட்டது. இதன் சார்பில் தேர்வை மேம்படுத்துவதற்கு அக்குழு சுகாதார அமைச்சகத்திடம் மூன்று முக்கியப் பரிந்துரைகளை முன்வைத்திருந்தனர்.

இவற்றை , என்டிஏவின்அதிகாரிகள் ஆஜரான நிலைக்குழுவின் முன்பு பகிர்ந்துகொண்டனர். அந்தப் பரிந்துரைகளில், பேனா மற்றும் காகித முறையை விடுத்து கணினி வாயிலாகத் தேர்வை நடத்தக் கூறியிருந்தனர்.


இத்துடன் தேர்வை பல அமர்வுகள் மற்றும் கட்டங்களாக நடத்துவதும், தேர்வுக்கான முயற்சி எண்ணிக்கைக்கு மற்றும் வயது வரம்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பது ஆகிய மூன்று அம்சங்களும் குறிப்பிட்டிருந்தனர்.


இவற்றில் கடைசிப் பரிந்துரை மட்டும் தற்போது சுகாதார அமைச்சகத்தின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது. இந்தப் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக சுகாதார அமைச்சகத்திடம் ஒரு புதிய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக என்டிஏ, நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.


இளங்கலை மருத்துவப்

படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்தத் தேர்வுக்கான தரநிலைகளைத் தீர்மானிப்பது மத்திய சுகாதார அமைச்சகம்தான். சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தும் தரநிலைகளுக்கு உட்பட்டு நீட் தேர்வை நடத்துவர் என்டிஏவின் பணியாகும்.


அடுத்த ஆண்டிலில் இருந்து கணினி வாயிலாக நடத்தப்படும் என்று அறிவிப்பதற்கு முன்னதாக, சுகாதார அமைச்சகத்துடன் பலமுறை கல்வி அமைச்சகம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருந்தது. எனினும், அப்போது எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இது குறித்து என்டிஏ அதிகாரிகள் வட்டாரத் தகவல்களின்படி, நீட் தேர்வுக்குச் சுகாதார அமைச்சகம் ஒரு குறிப்பிட்ட வயது வரம்பையும், முயற்சி எண்ணிக்கைக்கு உச்ச வரம்பையும் நிர்ணயிக்கத் திட்டமிடுகிறது. இது சாத்தியமானால், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


SSLC பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

 SSLC பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

648035

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்:

மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 22.05.2026 அன்று பிற்பகல் முதல் பெற்றுக் கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் சென்று SSLC Provisional Mark Certificate என்பதை Click செய்து தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

II. விடைத்தாள் ஒளிநகலுக்கு விண்ணப்பம் செய்தல்:

விடைத்தாள் ஒளிநகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 22.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணி முதல் 27.05.2026 மாலை 5.00 மணி (புதன்கிழமை) (24.05.2026 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) வரை விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் ஒளிநகல் (Scan Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம் ரூ.275/- தேர்வர்கள் விடைத்தாட்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.

விடைத்தாள் ஒளிநகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

விடைத்தாளின் ஒளிநகலினை (Scan Copy) இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் www.dge.tn.gov.in இணையதளத்திலும் வெளியிடப்படும்.

அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, நீட் மறு தேர்விற்கான குறுகிய கால பயிற்சி முகாம் (Crash Course Camp) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!

 647827


அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, நீட் மறு தேர்விற்கான குறுகிய கால பயிற்சி முகாம் (Crash Course Camp) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!

DSE - Medical Competitive Exam Crash Course Proceedings.pdf

👇👇👇

Download here

எண்ணும் எழுத்தும் திட்டம் 2026-27 கல்வி ஆண்டு முதல் தொடராது..

 

 

2026 - 2027 கல்வியாண்டின் பாடப்புத்தகத்திலேயே எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகமும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்...

எண்ணும் எழுத்தும் திட்டம் 2026-27 கல்வி ஆண்டு முதல் தொடராது.பாடப்புத்தகங்கள் மட்டுமே