சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15.03.2026 அன்று அறிவித்தது.
அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் - Orders
BEO / HS HM / HSSS HM Promotion - Department Exam - ஆசிரியர் தேர்ந்தெடுக்க வேண்டிய துறைத்தேர்வுக்கான தாள்கள்
ஆசிரியர் தேர்ந்தெடுக்க வேண்டிய துறைத்தேர்வுக்கான தாள்கள்
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
பள்ளி துணை ஆய்வர்
வட்டார கல்வி அலுவலர்
மாவட்ட கல்வி அலுவலர்
முதன்மை கல்வி அலுவலர்
மேற்கண்ட பதவிகளில் பதிவு உயர்வு மூலம் செல்ல விரும்புபவர்கள் குறிப்பிட்ட தேர்வுகளை தேர்ச்சி பெற்றால் மட்டுமே அதற்கான முன்னுரிமை பட்டியலில் இடம் பற இயலும். நேரடி நியனம் பெறுபவர்கள் குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் தான் தகுதிக்கான பருவம் நிறைவு செய்யப்படும்
2025 - 26 கல்வி ஆண்டு வேலை நாட்கள் - மாத வாரியாக
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் - 2025-26 கல்வி ஆண்டு வேலை நாட்கள்
School Working & Holidays List 2025 - 2026 - Single Page (New Revised) - For Attendance Closing
பள்ளி நாட்காட்டி 2025 - 2026 | அனைத்து தகவல்களும் ஒரே பக்கத்தில் - School Academic Calendar - Single Page (New Revised)
மும்மொழிக் கொள்கையை 7 நாளில் அமல்படுத்த வேண்டும்: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்
தேசிய கல்விக் கொள்கையின்படி 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கையை 7 நாட்களில் செயல்படுத்த வேண்டுமென சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ இயக்குநர் பிரக்யா எம்.சிங், அனைத்து விதமான பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: 2026-27-ம் கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பில் இருந்து மும்மொழி திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதுவரை அமல்படுத்தாத மற்ற பள்ளிகளும், இந்த அறிவிப்பு வெளியான 7 நாட்களுக்குள் திட்டத்தை செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். 3-வது மொழிகளுக்கான பாடப்புத்தகங்கள் விரைவில் கிடைக்கப்பெறும்.
அதேநேரம் உள்ளூரில் கிடைக்கும் புத்தகங்கள், கற்பித்தல் வளங்களை பயன்படுத்தி 6-ம் வகுப்பில் இருந்து மும்மொழியை பள்ளிகள் கற்பிக்க வேண்டும்.
இதுதவிர பள்ளிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த மும்மொழி விவரங்களை இறுதிசெய்து, தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஒரு பள்ளி 6-ம் வகுப்பில் எந்த 3-ம் மொழியை அறிமுகம் செய்கிறதோ, அதே மொழிதான் அந்த பள்ளிக்கான 9, 10-ம் வகுப்புகளில் விருப்பப் பாடமாக இருக்கும். எனவே, அனைத்துப் பள்ளிகளும் மும்மொழி அமல் செய்வதை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை
ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் ஏப்.16-ம் தேதி முடிவடைகின்றன.
இதையடுத்து, 17-ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என விடப்படுகிறது. அதே வேளையில், வரும் 25-ம் தேதி வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து விடைத்தாள் மதிப்பீடு, மாணவர் சேர்க்கை பணி, நிர்வாகப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
புதிய பாடநூல்கள் அறிமுகம்
பள்ளிகளுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான (2026-27) வகுப்பு ஜூன் 1-ம் தேதி தொடங்கும். வரும் கல்வியாண்டு முதல் ஒன்று முதல் 3-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் 3 வரை மாவட்ட அளவில் பணியிடை பயிற்சி அளிக்கப்படும்.
எனவே, 1, 2, 3 ஆகிய வகுப்பு குழந்தைகளுக்கு மட்டும் ஜூன் 4-ம் தேதி முதல் வகுப்பு நடைபெறும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
G.O 46 - GPF Withdrawal - Maximum limit Amendments to rule 15-B of General Provident Fund (Tamil Nadu) Rules Issued Notified
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய Year End Forms (2025 - 2026
BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய Year End Forms (2025 - 2026)
Primary & Upper Primary
👇👇👇👇
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
Booth Slip விநியோகம் குறித்த தகவல்
ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியா்களை இடமாற்றக் கோரிய மனு முடித்துவைப்பு
ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியா்களை இடமாற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில், எந்த உத்தரவும் பிறப்பிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.
15.04.2026 அன்று இரண்டாவது தேர்தல் பயிற்சி வகுப்பு - மாவட்ட ஆட்சித் தலைவர் கடிதம்
இரண்டாவது தேர்தல் பயிற்சி வகுப்பு 15.4.2026 அன்று நடைபெற உள்ளதாக தகவல்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் அனைத்து வகை அரசு பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு ஏப். 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து, 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதிப் பருவத் தோ்வுகள் ஏப். 10 முதல் 24-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட ஆண்டு நாள்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெறுவதால், பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதையடுத்து 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தோ்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. அதன்படி 1 முதல் 9-ஆம் வகுப்புக்கான விரிவான தோ்வுக் கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.
அதன்படி, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.17 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-27 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் ஜூன் 1ஆம் தேதியான திங்கள்கிழமை அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், “அரசு / அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப். 16 ஆம் தேதி நிறைவடைகின்றன. ஏப். 17 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.
ஏப். 25ஆம் தேதிவரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்.கே.ஜி / யூ.கே.ஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணி வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி சார்ந்த நிர்வாகப் பணிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலைக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.
2026-27ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில் ஜூன் 1 ஆம் தேதியான திங்கட்கிழமை முதல் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
வரும் கல்வியாண்டு முதல் 1-3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்” என தெரிவிக்கப்படுகிறது.
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி - ஆசிரியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு
தமிழ்நாடு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளன. ஏப்ரல் 20-க்குள் திருத்தும் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 10,877 மாணவர்களும். ஆங்கிலம் பொதுத் தேர்வை 10,369 மாணவர்களும், கணிதம் பொதுத் தேர்வை 11,284 மாணவர்களும், அறிவியல் தேர்வு எழுத 11,341 மாணவர்களும், சமூக அறிவியல் தேர்வை 11,228 மாணவர்களும் தனித்தேர்வர்களும் எழுதவில்லை. ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற விருப்பமொழி பாடத்தேர்வை 118 பேர் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத் துறை இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை செய்து முடிக்கத் தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கையை, பாடப் பிரிவு, பயிற்று மொழி வாரியாக சரியாக கணக்கிட்டு உடனே அவர்களை பணியில் இருந்து விடுவித்து முகாம் பணிக்கு அனுப்ப வேண்டும். தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும்.
மதிப்பீட்டுப் பணிகளை தாமதமின்றி குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இதற்காக, தங்களது நிர்வாகத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து 10-ம் வகுப்பு பாடம் நடத்தும் தகுதியான பாட ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்து, தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்க வேண்டும். எந்த பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாத வகையில் கண்காணிக்க வேண்டும். மதிப்பீட்டுப் பணிக்கு அனுப்பும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதிக்குள் நியமன ஆணையை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதன்மை தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள், ஏப்ரல் 10-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட வேண்டும். அரசுத் தேர்வுத் துறை வழங்கியுள்ள விடைக்குறிப்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெரிவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 13-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் உதவி தேர்வாளர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தம் செய்ய வேண்டும். இந்த பணிகளை 20-ம் தேதிக்குள் அதாவது 6 நாட்களில் நடத்தி முடிவுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மே20ம் தேதி வெளியாகும் எனவும் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 - 5th Std - Term 3 - Summative Assessment (SA) Marks Entry செய்யலாம் - Direct Link
TN SED App Update,