127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு!

 பள்ளிக்கல்வி அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், கணினிப்பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால், ஒரு கணினி ஆசிரியர் பணியிடம் கூட அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு உபரியாக உள்ள 127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. (13.03.2026)


127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு!


NHIS 2026 அரசு பணியாளர்களுக்கு e_Card - New Update

NHIS 2026 to Tamilnadu Government Employees:


தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 இன் படி பயனாளிகளுக்கான NHIS Identity Card அவர்களது IFHRMS ID  விபரங்களில் இருந்து e_Card ஆக வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

( G.O.Ms.No.122 Finance (Health insurance) Department  Dated 24.6.2026 (Para No. 14 , Page no 24)

இது தொடர்பாக 01.07.2026 அன்று நடைபெற்ற இயக்குனரக ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து பணியாளர்களுக்கும்   e_ ID CARD வழங்கப்பட ஏதுவாக அனைத்து பணியாளர்களின் e_SR-ல் அவர்களது   குடும்ப உறுப்பினர்கள் விவரத்தினை 13-07-2026 - க்குள் முழுமையாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

NHIS 2026 - ஆதார், புகைப்படம், மாற்றுத்திறனாளிகள் வகை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்ய உத்தரவு - Government Letter

NHIS 2026 - ஆதார், புகைப்படம், மாற்றுத்திறனாளிகள் வகை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்ய கருவூலகங்கள் மற்றும் கணக்குகள் துறை உத்தரவு!



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

PRASHAST App 2.0 for Health Screening of Students During the Academic Year 2026-2027 Regarding - SPD Letter



Samagra Shiksha - Inclusive Education Implementation of PRASHAST App 2.0 for Health Screening of Students during the Academic Year 2026-2027 Regarding.

PRASHAST is a school-based disability screening tool designed to help identify students who may require further assessment for disabilities recognized under the Rights of Persons with Disabilities (RPwD) Act, 2016. It serves as an initial screening and referral mechanism to facilitate timely identification and support.

The PRASHAST App also includes a Teacher Sensitization Module, designed to support teachers in effectively conducting the PRASHAST screening process



 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசுப் பள்ளிகளில் பாடநூல்கள் முழுமையாக விநியோகம் - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்



தமிழக பள்ளிக் கல்வியில் அரசுப் பள்ளிகளில் 4, 5 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் பயிற்சிக் கையேடுகள் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், அந்தப் பிரச்னையும் சரி செய்யப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் மெட்ரிக். பள்ளிகள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி திறக்கப்பட்டு கற்றல்-கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய கல்வியாண்டின் முதல் நாளில் இருந்தே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 4, 5 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களில் பலருக்கு சில பாடங்களுக்கான விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்படவில்லை என்றும், அதனால் அந்த மாணவா்கள் அருகில் உள்ள மாணவா்களின் புத்தகங்களைப் பாா்த்து கற்றலில் ஈடுபடுகின்றனா் என்ற தகவல் வெளியானது. இந்தத் தகவலை பள்ளிக்கல்வித் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: புதிய பாடத்திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கு வடிவமைக்கப்பட்ட பாடநூல்கள் எவ்வாறு முழுமையாக விநியோகிக்கப்பட்டதோ, அதேபோன்று 4, 5 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான பாடநூல்களும் அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய எண்ணிக்கையில் அனுப்பி வைக்கப்பட்டு, விநியோகமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் (சமக்ர சிக்ஷா) சாா்பில் வழங்கப்படும் பயிற்சிக் கையேடுகளின் விநியோகத்தில் மட்டுமே சற்று பற்றாக்குறை இருந்தது. அந்தப் பிரச்னையையும் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று விருதுநகா், விழுப்புரம், பரமக்குடி ஆகிய கல்வி மாவட்டங்களில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் சில மாணவா்களுக்கான பாடநூல்கள் பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கல்வி மாவட்டங்களின் அருகில் உள்ள பாடநூல் கழகத்தின் கிடங்குகளில் இருந்து பாடநூல்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பிரச்னையும் தீா்க்கப்பட்டது. எனவே, அரசுப் பள்ளிகளில் 4, 5 வகுப்பு மாணவா்களுக்கு சில பாடங்களுக்கான பாடநூல்கள் வழங்கப்படவில்லை என வெளியான தகவல் தவறானது.

பள்ளிக் கல்வியின் எமிஸ் தளத்தில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே பாடநூல்கள் அச்சிடப்படுவதால் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

மேலும், நிகழ் கல்வியாண்டில் ஜூன் மாதத்துக்குப் பிறகு 1 முதல் 5 வரையிலான வகுப்புகளில் புதிதாக சோ்க்கை பெற்ற மாணவா்களின் விவரங்கள் பெறப்பட்டு அவா்களுக்கான பாடநூல்களும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை வியாழக்கிழமைக்குள் (ஜூலை 9) முழுமையாக வழங்கப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.


 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Census 2027 - சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) குறித்த தகவல்கள்

 தமிழ்நாட்டில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) நடைபெறுகிறது



இதன் மூலம் பொதுமக்கள் நேரில் வருபவர்களுக்காகக் காத்திருக்காமல், தங்கள் இல்லம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக சுயமாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.

✅சுய கணக்கெடுப்பு செய்யும் முறை:

அதிகாரப்பூர்வ தளம்: 




 (Census of India Self-Enumeration Portal).


📝பதிவு செய்தல்: உங்கள் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி லாகின் (Login) செய்யவும்.


✍️தகவல் பதிவு: உங்கள் அடிப்படை விவரங்கள் மற்றும் குடியிருப்பு விவரங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்


🌸சரிபார்ப்பு (Validation): சுய கணக்கெடுப்பு முடிந்ததும் உங்களுக்கு ஒரு SE ID (சுய கணக்கெடுப்பு எண்) கிடைக்கும்.


🌹அதிகாரி வருகை:

 ஆகஸ்ட் மாதம் 

வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு (HLO) 01-08-2026 முதல் 30-08-2026 வரை

உங்கள் பகுதிக்கு நேரில் வரும் கணக்கெடுப்பு அதிகாரியிடம் இந்த SE ID-ஐ காண்பித்து தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தமிழ்நாட்டில் புதிய கேந்திரிய வித்யாலயா (KV) பள்ளி துவக்கம். மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு

 
தேனி மாவட்டம்


கேந்திரிய வித்யாலயாப் பள்ளி நடப்பாண்டிலிருந்து (2026-2027) செயல்பட உள்ளது-மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
826131



தேனி நகராட்சியில் கேந்திரிய வித்யாலயாப் பள்ளி (KV School) அமைக்க மத்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டதுடன், இப்பள்ளிக்கான முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தேனி மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயாப் பள்ளி அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அருகில் நிரந்தரமாகப் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதுவரை, தற்காலிகமாக தேனி-அல்லிநகரம் நகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் செயல்பட உள்ளது. நடப்பாண்டிலிருந்து (2026-2027) 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவுடன் செயல்படத்தொடங்கும். பின்னர். தேவைக்கேற்ப மற்றும் உரிய நிர்வாக ஒப்புதலின் அடிப்படையில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.

மேலும், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை 30 நாட்களுக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பணி​யில் உள்ள ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை

 hindutamil-prod%2F2026-07-08%2F0csks8pc%2FIMGMadrasHighCourtBu219CDTOAE0

பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்கு நடத்​தப்​பட்ட சிறப்பு தகு​தித் தேர்வு (டெட்) முடிவு​களை வெளி​யிட கூடாது என்று இடைக்​காலத் தடை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்​டுள்​ளது.

கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, பணி​யில் உள்ள ஆசிரியர்​களும் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. ஐந்து ஆண்​டு​களில் பணி ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்​களுக்​குத் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெறு​வதற்​கான காலக்​கெடுவை மேலும் 3 ஆண்​டு​களுக்கு நீட்​டித்து உச்ச நீதி​மன்​றம் கடந்த மே மாதம் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், பிற்​படுத்​தப்​பட்ட, மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட, சீர் மரபினர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண்​களை 55-ல் இருந்து 50 சதவீத​மாக​வும், பட்​டியலின மற்​றும் பழங்​குடி​யினருக்​கான குறைந்​த​பட்ச மதிப்​பெண்​களை 45-ல் இருந்து 40 சதவீத​மாக​வும் குறைத்து தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்​பித்​தது.

இதே​போல் பொதுப் பிரி​வினருக்​கான குறைந்​த​பட்ச மதிப்​பெண்​களை 60-ல் இருந்து 50 சதவீத​மாக குறைக்க கோரி பொதுப்​பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்​ளிட்ட 3 ஆசிரியர்​கள், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஏற்​கெனவே வழக்கு தொடர்ந்​திருந்​தனர்.

அதில், பிஹாரில் பொதுப்​பிரி​வினருக்கு குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண்​கள் 50 சதவீத​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல தமிழகத்​தி​லும் பொதுப்​பிரி​வினருக்​கான மதிப்​பெண்​களைக் குறைக்க உத்​தர​விட வேண்​டும்.

பொதுப்பிரிவினர்

ஏற்​கெனவே முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர் பணிக்கு விண்​ணப்பிக்க பொதுப்​பிரிவு ஆசிரியர்​களுக்கு 50 சதவீத மதிபெண்​கள் மட்​டுமே நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக பரிசீலிக்க அரசுக்கு உத்​தர​விட வேண்​டும் என்று அவர்​கள் கோரி​யிருந்​தனர்

பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்​கான சிறப்பு தகு​தித் தேர்வு நடந்து முடிந்​துள்ள நிலை​யி்ல், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, பொதுப்​பிரிவு ஆசிரியர்​களுக்​கான தகு​தித் தேர்​வில் குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண்​களைக் குறைப்​பது தொடர்​பாகத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்​க​வுள்​ள​தாக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த கொள்கை முடிவை நீதி​மன்​றத்​தில் தெரிவிக்க ஏது​வாக வழக்கு விசா​ரணையை ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளி வைத்​துள்ள நீதிப​தி, அது​வரை சிறப்பு தகு​தித் தேர்​வுக்​கான முடிவு​களை வெளி​யிட கூடாது என்று இடைக்​காலத் தடை வி​தித்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க



அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 - முழு விவரம்

அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 - முழு விவரம்


*1. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்*

விவரம் விளக்கம்

**திட்ட காலம்** 01.07.2026 முதல் 30.06.2031 வரை - 5 ஆண்டுகள்

**மாத சந்தா** ₹390 - ஜூலை 2026 சம்பளத்தில் இருந்து பிடித்தம்

**யாருக்கு** அனைத்து அரசு ஊழியர்கள் + ஓய்வூதியர்கள் + குடும்பத்தினர்

**அட்டை** IFHRMS-ல் இருந்து Download செய்யப்படும் e-Card

*2. IFHRMS-ல் என்னென்ன Upload பண்ணனும்? Deadline: 15.07.2026*

1.  *ஊழியர் + குடும்ப உறுப்பினர்கள் விவரம்* - பெயர், உறவு, DOB

2.  *ஆதார் எண்* - அனைவருக்கும் கட்டாயம்

3.  *பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்* - JPG/PNG Format


*3. IFHRMS-ல் Entry செய்யும் Step*

1.  `ifhrms.tn.gov.in` Login பண்ணுங்க

2.  `Employee Login` → `Health Insurance 2026` Module-க்கு போங்க

3.  `Add Family Members` Click பண்ணி பெயர், ஆதார், உறவுமுறை Add பண்ணுங்க

4.  ஒவ்வொருவருக்கும் ஆதார் + போட்டோ Upload பண்ணுங்க

5.  `Submit` கொடுத்ததும் DDO-க்கு Approval-க்கு போகும்

6.  DDO Approve பண்ணதும் உங்க *e-Health Card* Download Option வரும்


*4. இந்த காப்பீட்டுல என்ன கிடைக்கும்?*

பழைய திட்டம் மாதிரியே `Cashless Treatment` 1044 நோய்கள் + அறுவை சிகிச்சைகள். 

Govt + Empaneled Private Hospital-ல் சிகிச்சை எடுக்கலாம்.


*5. முக்கிய குறிப்புகள்*

1.  *15.07.2026* க்குள் பண்ணலைனா அட்டை வராது. Hospital போனா பணம் கட்ட வேண்டியிருக்கும்

2.  *₹390* ஒவ்வொரு மாசமும் Salary-ல் பிடிக்கும். விருப்பம் இல்லைனு சொல்ல முடியாது - கட்டாய திட்டம்

3.  *புதிதா சேர்ற குழந்தை/திருமணம்* ஆனா அப்போ Update பண்ணிக்கலாம்


*DDO-க்களுக்கான அறிவுறுத்தல்*

உங்க அலுவலகத்துல உள்ள அனைவரும் 15.07.2026க்குள் பதிவு செய்தார்களா என DDO கட்டாயம் Check பண்ணனும்.


*சுருக்கமா:* `₹390 கொடுத்து 5 வருஷம் Cashless மருத்துவம். ஆனா 15.07.2026க்குள் IFHRMS-ல் ஆதார்+போட்டோ போடலைனா Card வராது`

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

2026-27 கல்வி ஆண்டிற்கான வேலை நாட்கள் விவரம். (திருத்தப்பட்ட வேலை நாட்கள் பட்டியல்).

824544

 2026-27 கல்வி ஆண்டிற்கான வேலை நாட்கள் விவரம். (திருத்தப்பட்ட வேலை நாட்கள் பட்டியல்).


வேலை நாட்கள் - 210

விடுமுறை நாட்கள் - 155

மொத்தம் - 365


*சனி வேலை நாட்கள்:*

செப்டம்பர் 19

டிசம்பர் 19

ஏப்ரல் 24


பள்ளி கடைசி வேலை நாள் 24.04.2027 சனிக்கிழமை.


கோடை விடுமுறை ஏப்ரல் 25 முதல் மே 31 வரை. (37 நாட்கள்)


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Income Tax விழிப்புணர்வு பதிவு


Income Tax விழிப்புணர்வு பதிவு

அன்பார்ந்த நண்பர்களே,

வருமான வரி தாக்கல் (IT Return) செய்வதற்கு முன், உங்களிடம் உள்ள Form 16A மற்றும் Form 16B ஆகிய இரண்டிலும் மொத்த சம்பளத் தொகை (Gross Salary) ஒரே மாதிரியாக உள்ளதா என்பதை கட்டாயம் சரிபார்க்கவும்.

வரி (TDS) தொகை சரியாக இருந்தால் மட்டும் போதாது. மொத்த சம்பளத் தொகையும் சரியாகப் பதிவாகியிருக்க வேண்டும்.

சில நேரங்களில், "மொத்த சம்பளம் குறைவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை; ரீஃபண்ட் கிடைக்கும்" என்று கூறப்படலாம். ஆனால், மொத்த சம்பளத்தை விட குறைவாக வருமான வரி தாக்கல் செய்வது எதிர்காலத்தில் கடன் பெறுதல், வருமான வரித்துறை விசாரணை, வட்டி மற்றும் அபராதம் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, Form 16A, Form 16B மற்றும் Income Tax Return (ITR) ஆகியவற்றில் மொத்த சம்பளத் தொகை ஒன்றுக்கொன்று பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும், சம்பளம் வழங்கும் அலுவலர்களும் சம்பள விவரங்களில் உள்ள பிழைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், வருமான வரித்துறையிடமிருந்து விளக்கம் கோரும் நோட்டீஸ் வர வாய்ப்பு உள்ளது.

இது விழிப்புணர்விற்காக மட்டுமே பகிரப்படும் பதிவு. 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு தகவல்

இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வானது  திங்கட்கிழமை( 06.07.2026) காலை 09.00 மணிக்கு  தொடங்கும். SGT (General (Tamil&English) க்கு வரிசை எண் 1 முதல் 1000 வரை உள்ள விண்ணப்பதாரர்களை வட்டாரக்கல்வி அலுவலர் மூலம் தகவல் அளித்து வரவழைக்கவும். மற்ற அனைத்து மொழிகளுக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் திங்கள் அன்றே நடைபெறும். இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் ஒன்றியத்திற்குள் மற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் நடந்த கலந்தாவில் மாறுதல் ஆணை பெற்றவர்களின் பெயர் மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்விற்கு  விண்ணப்பித்திருந்தாலும் இடம் பெறாது. தவறுதாக இடம் பெற்றிருந்தாலும் அவர்களை கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது.

 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் தேவை!!!

1000578002

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது!


பணியிடங்களின் விவரம்:

✅ முதுகலை பட்டதாரி ஆசிரியர்: 49 இடங்கள்

✅ பட்டதாரி ஆசிரியர்: 34 இடங்கள்

✅ இடைநிலை ஆசிரியர்: 115 இடங்கள்


விண்ணப்பிக்கும் முறை:

நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய இடம்:

அறை எண்: 310, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், கடலூர் மாவட்ட ஆட்சியரக வளாகம்.


தேதிகள்:

🗓️ 06.07.2026, 07.07.2026 மற்றும் 08.07.2026 (மூன்று நாட்கள் மட்டும்).


தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க