10ஆம் வகுப்பு தேர்ச்சி…தமிழ் வளர்ச்சி & செய்தி துறையில் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது

 Tamil Development and Information Department Recruitment 2026: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு திரைப்பட பிரிவு, சென்னை – 02 ல் காலியாக உள்ள ஒரு 02 திறன்மிகு உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.

துறைகள்தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை
Tamil Nadu Film Division, Tamil Development and Information Department
காலியிடங்கள்02
பணிகள்திறன்மிகு உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி20.03.2026
பணியிடம்சென்னை – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tn.gov.in/



தமிழ்நாடு திரைப்பட துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்காலியிடங்கள்
திறன்மிகு உதவியாளர்02

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


பணியின் விவரம்தகுதிகள்
திறன்மிகு உதவியாளர்விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.03.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2026

    தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:

    1. விண்ணப்பத் தயாரிப்பு: ஒரு வெள்ளைத்தாளில் உங்களின் முழுமையான விவரங்களை (Bio-Data) எழுத வேண்டும்.
    2. தேவையான விவரங்கள்:
      • பெயர்
      • தந்தையின் பெயர்
      • முகவரி (தொடர்பு எண்ணுடன்)
      • பிறந்த தேதி மற்றும் வயது
      • கல்வித் தகுதி
      • பணி அனுபவம் (ஏதேனும் இருப்பின்)
    3. கையொப்பம்: விண்ணப்பத்தின் இறுதியில் உங்களது கையொப்பத்தை மறக்காமல் இடவும்.
    4. அனுப்பும் முறை: தயார் செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தலைமை தயாரிப்பாளர் (மு.கூ.பொ), தமிழ்நாடு திரைப்பட பிரிவு, கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை – 600 002.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here

    குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் தங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

IT Jobs: மதுரையிலேயே ஐடி வேலை ரெடி.. மார்ச் 7 ம் தேதி இண்டர்வியூ.. அழைக்கும் HCL

 மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் மார்ச் 7 ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது.

மதுரையில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி 'செமி டெக் என்ட்ரி லெவல் டேலண்ட்' என்ற பெயரில் சர்வீஸ் டெஸ்க் எல் -1 அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்திருக்க வேண்டும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கட்டாயமாக ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். சர்வீஸ் நவ் அல்லது ஏதாவது டிக்கெட்டிங் டூலில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.


பணி ்அனுபவம் எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். 24X7 என்ற அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் இல்லாதவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.


கண்டிஷன் என்ன? அதன்படி ஐடி சர்வீஸ் டெஸ்க், டிக்கெட்டிங், நெட்வொர்க்/ஹார்ட்வேர்/சாப்ட்வேர் ட்ரபிள்சூட்டிங், வாய்ஸ்/சாட் சப்போர்ட், ஐடி பேக் ஆபிஸ் ஆபரேஷன்ஸ், டிஏடி/எஸ்எல்ஏ மற்றும் கிளைன்ட் மேனேஜ்மென்ட் (Must) உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். இன்டர்ன்ஷிப் என்பது அனுபவமாக எடுத்து கொள்ளப்படாது. கடந்த ஒரு மாதத்தில் எச்சிஎல் இண்டர்வியூவில் பங்கேற்றவர்களுக்கு அனுமதி கிடையாது. மார்ச் 7 ல் இண்டர்வியூ தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இண்டர்வியூ என்பது மார்ச் 7 ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இண்டர்வியூ நடக்கும்.

இதனால் முன்கூட்டியே செல்வது நல்லது. இண்டர்வியூவுக்கு செல்வோர் கண்டிப்பாக ரெஸ்யூம், ஆதார் கார்டு ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. நியமனம் எங்கு? இண்டர்வியூவின்போது ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதனை அங்கேயே கேட்டு கொள்ளலாம். கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

 பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here



சென்னையில் ரூ.33 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. செம சான்ஸ்! யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

     சென்னை: சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா பராமரிப்பாளர் பணியிடங்களானது நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.33 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் போன்ற விவரங்களை இங்கு காணலாம்.

சென்னை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூங்காக்கள் உள்ளன. மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை மாநகராட்சியே மேற்கொண்டு வருகிறது. இதற்காக தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பணியிடங்கள் விவரம்: தற்போது காலியாக இருக்க கூடிய பராமரிப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். மொத்தம் 20 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பூங்காக்களில் பராமரிப்பாளராக நியமிக்கப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ (தோட்டக்கலை) அல்லது பி.எஸ்.சி (தோட்டக்கலை / வனவியல் / வேளாண்மை / தாவரவியல்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். சம்பளம் எவ்வளவு: மாதம் ரூ. 33 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். எந்த வகையிலும் பணி நிரந்தரம் கோர முடியாது.

விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. மாநகராட்சி வெளியிட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும். தங்கள் சுயவிவரம் அடங்கிய பயோடேட்டா, கல்வி சான்று, அனுபவ சான்று ஆகியவற்றை இணைது நேரிலோ அல்லது தபாலிலோ 25.03.2026 க்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Superintending Engineer, Park and Play field Department, Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai - 600003.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு அடித்த ஜாக்பாட்.. சென்னையிலேயே ஐடி வேலை ரெடி

 சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் (IT Jobs) நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.



அந்த வகையில் தற்போது Freshers - Process Associate/ Customer Service Reporesentative - Semi Voice Process - Power Point பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அனுபவம் வேண்டாம் இந்த பணிக்கு அனுபவம் எதுவும் வேண்டாம். அதேவேளையில் விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் ஓராண்டுக்குள் பணி அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம். மேலும், ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது பட்ட மேற்படிப்பை முடித்திருந்தால் மட்டுமே போதும். பாட வாரியாக பார்த்தால் பிபிஏ, பிகாம், பிசிஏ, பிஎஸ்சி, எம்பிஏ, எம்ஏ, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை 2024 மற்றும் 2025ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

ஆங்கிலம் தெரிய வேண்டும் அதேவேளையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஷிப்ட் எப்படி? பவர் பாயிண்ட் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். மேலும் நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல், priyankas.manna@hcltech.com முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


'கேப்' வசதி உண்டு இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் பற்றிய தகவல் அனுப்பி வைக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here



G.O - 05 - அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை SMC மூலம் தற்காலிகமாக நிரப்பிட அனுமதி - அரசாணை

     

அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) மூலம் தற்காலிகமாக நிரப்பிட அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு! (22.01.2026)







இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TRUST Exam - Selected Students List

     

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6
தமிழ்நாடு ஊரகத்திறனாய்வுத் தேர்வு, டிசம்பர் -2025
TAMIL NADU RURAL STUDENTS TALENT SEACH EXAMINATION (TRUST)



தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் (சென்னை மாவட்டம் தவிர்த்து) ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு 06.12.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. 

இணையதளத்தில் இத்தேர்வின் மதிப்பெண் விவரங்கள் 20.012026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணாக்கர்கள் (50 மாணவியர் 50 மாணவர்கள்) தெரிவுப்பட்டியல் இன்று (05.03.2026) வெளியிடப்படுகிறது. இந்த ஊக்கத் தொகைக்கான தெரிவுப்பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Other Examinations தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் என்ற பக்கத்தில் கண்டறியலாம். 

மேலும், இத்தெரிவு பட்டியல், மாணவ மாணவியரின் தகுதி குறித்து பள்ளிக் கல்வி இயக்ககத்தால் உறுதி செய்யப்பட்டு பின்னரே பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Click Here to Download - TRUST - Selection Students List - Dec 2025- Pdf





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தமிழ்நாட்டில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

     

357988

தமிழ்நாட்டில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும்| என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.


45 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் வீட்டின் நிலை, வசதிகள், சொத்துக்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 33 கேள்விகள் இடம் பெறும்.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M & E/M

     

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

1,2,3 rd Ennum Ezhuthum Empty Format - Download here

4 & 5th Ennum Ezhuthum Empty Format -  Download here

Term III Lesson Plan

March - 2026

SET : 10

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அறைக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் `அலைபேசி பயன்பாட்டு உறுதிமொழிச் சான்று` ஒப்படைக்க வேண்டும் - DGE செயல்முறைகள்!

     


353113

அறைக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் `அலைபேசி பயன்பாட்டு உறுதிமொழிச் சான்று` ஒப்படைக்க வேண்டும் - DGE செயல்முறைகள்!

முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், மார்ச். 2026. பத்தாம் வகுப்பு மேல்நிலை பொதுத் தேர்வுகள் தொடர்பாக, தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை தவறாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



1 அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள். நிலையான பறக்கும் படையினர் அறைக் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து வகை தேர்வு மையப் பணியாளர்களும். ஒவ்வொரு தேர்வு நாளன்றும் தத்தம் கைப்பேசிகளை தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்துவிட்டு, இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் உறுதிமொழி சான்றினை பூர்த்தி செய்து முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கவேண்டும்.

2. ஒவ்வொரு அறையிலும் அறைக் கண்காணிப்பாளர்கள் வினாத்தாட்களை தேர்வர்களுக்கு வழங்கியபின், மீதமுள்ள வினாத்தாட்களை அதே உறையினுள்ளிட்டு Cellotape கொண்டு Seal செய்து முதன்மைக் கண்காணிப்பாளர் துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். வினாத்தாள் மீதம் ஏதுமில்லாத உறைகளையும் முதன்மைக் கண்காணிப்பாளர் துறை முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இவ்வாறு பெறப்பட்ட அனைத்து உறைகளையும் கட்டாகக் கட்டி அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். மீதமுள்ள வினாத்தாட்களுடன் வழித்தட அலுவலரிடம் தவறாமல் ஒப்படைக்கவேண்டும்.

3. விடைத்தாள் சேகரிப்பு மையங்களின் தொடர்பு அலுவலர்கள் இவ்வாறு பெறப்படும் வினாத்தான் உறைகளிலிருந்து வினாத்தாள்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெற்று உறைகளை தனிக் கட்டுகளாகக் கட்டி அனைத்து தேர்வுகள் முடிவடைந்தவுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.

👇👇👇👇👇👇

 DGE - Additional Instructions to Chiefs - Proceedings - Download here




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

GPF முன்பண எடுப்புத்தொகை (Advance Amount Withdrawal) அதிகபட்சம் ₹50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

     350704

மேலும் கண்டறிக

GENERAL PROVIDENT FUND - Withdrawal from the General Provident Fund Maximum limit Amendments to rule 15-B of General Provident Fund (Tamil Nadu) Rules - Issued Notified.

GPF முன்பண எடுப்புத்தொகை (Advance Amount Withdrawal) அதிகபட்சம் ₹50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.46 - GPF Advance Amount Hike

👇👇👇

Download here






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

G.0 52 - பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தினை ₹15,000/-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!

     

பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தினை ₹12,500/-லிருந்து ₹15,000/-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!



பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியத்தை ரூ.15,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மே மாதத்திற்கு மட்டும் சிறப்பு நிதியாக ரூ.10,000 வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ஊதியம் ரூ.12,500 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2,500 உயர்த்தப்பட்டு ரூ.15,000 ஆக அதிகரித்துள்ளது. இதனால் 2026-27ஆம் ஆண்டு தொடர் செலவினமாக ரூ.44.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மார்ச் 9 இல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்

     



 

3500

புதுக்கோட்டை:  உள்ளூர் விடுமுறை


புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9 இல் உள்ளூர் விடுமுறை

விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 14 ந் தேதி சனிக்கிழமை வேலை நாளாக

அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க