சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான Chennai Petroleum Corporation Limited (CPCL) சார்பில் ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (JEA)-IV பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 60 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
JEA-IV பணியில் மெக்கானிக்கல் பிரிவில் 10 இடங்கள், உற்பத்தி பிரிவில் 40 இடங்கள், எலக்ட்ரிக்கல் பிரிவில் 5 இடங்கள், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் 5 இடங்கள் என மொத்தம் 60 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதியாக சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது B.Sc. Chemistry பட்டப்படிப்புடன் 3 ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்களின் வயது 1.7.2026 அன்று 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரிவுகளுக்கு ஏற்ப 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் வயது தளர்வு வழங்கப்படுகிறது.
தேர்வு முறையில் கணினி வழித் தேர்வு (CBT), Skill/Proficiency மற்றும் Physical Test (SPPT) இடம்பெறும்.இப்பணிக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பங்கள் 14.8.2026 முதல் 11.9.2026 வரை ஆன்லைனில் பெறப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் CPCL-ன் வேலைவாய்ப்பு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மனிதர்களின் தனிப்பட்ட திறன்களான தகவல் தொடர்பு, தலைமைத்துவம் மற்றும் தலைமைத்துவப் பண்புகளுக்குச் சந்தையில் எப்போதும் பெரும் வரவேற்பு இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கோடிங் திறன்கள் இல்லாமலேயே, மனிதர்களின் இயல்பான திறன்களை அடிப்படையாகக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் 10 சிறந்த வேலை வாய்ப்புகள் குறித்து லிங்க்ட்இன் (LinkedIn) அமைப்பின் '2026 ஜாப்ஸ் ஆன் தி ரைஸ்' (2026 Jobs on the Rise) அறிக்கை வெளியிட்டுள்ளது.
மூலோபாய ஆலோசகர் (Strategic Advisor & Independent Consultant): AI தொழில்நுட்பம் தரவுகளைத் தொகுத்துத் தந்தாலும், ஒரு நிறுவனத்தின் அனுபவம் சார்ந்த முடிவுகள், நுட்பமான தீர்வுகளை வழங்குவதற்கு மனிதர்களின் அனுபவப்பூர்வமான வழிகாட்டுதல் அவசியமாகிறது.
வீட்டு விற்பனை நிபுணர் (New Home Sales Specialist): வீடு வாங்குவது மனிதர்களின் உணர்வுபூர்வமான மற்றும் நிதி சார்ந்த முடிவாகும். வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, வீடுகளை நேரில் காண்பித்து, பேசி ஒப்பந்தம் முடிப்பதற்கு மனிதர்களின் நேரிடைத் தொடர்பு தேவைப்படுகிறது.
சுகாதார காப்பீட்டுத் தொகைப் பரிசீலனை நிபுணர் (Healthcare Reimbursement Specialist): மருத்துவக் காப்பீடு, பில்லிங் மற்றும் விதிகளைப் புரிந்து கொண்டு நோயாளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதில் மனிதர்களின் நிபுணத்துவம் தேவைப்படுகிறது.
கட்டுமானத் திட்டத் தலைவர் (Construction Project Lead): கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டுத் தொழிலாளர்களை வழிநடத்துதல், நேர மேலாண்மை மற்றும் களத்தில் வரும் தடங்கல்களை உடனுக்குடன் சரி செய்ய நேரடித் தலைமைப்பண்பு அவசியம்.சுற்றுலா ஆலோசகர் (Travel Advisor and Tour Planner): வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்பப் பயணத் திட்டங்களை வகுத்துத் தருவது மற்றும் எதிர்பாராத சிக்கல்களைக் கையாள்வதில் இவர்களின் பங்கு அதிகம்.
மனநல செவிலியர் (Psychiatric Nurse Practitioner): மனநலப் பாதுகாப்பு, நோயாளிகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் மருந்து மேலாண்மை போன்ற பணிகளுக்குப் பரிவு, இரக்கம் மற்றும் மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பண்பு மிக முக்கியம்.
பின்னணி விசாரணை அதிகாரி (Background Investigator): நபர்களின் விவரங்கள், ஆவணங்களின் உண்மைத்தன்மை மற்றும் தகுதிகளைத் தீர விசாரித்து உறுதிப்படுத்துவதற்குத் துல்லியமான கவனிப்பும் மனிதர்களின் கூர்மையான பார்வையும் மிக முக்கியம்.
பொது விவகாரங்கள் நிபுணர் (Public Affairs Specialist): அரசு, ஊடகம் மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான தொடர்பைப் பேணுவதற்கும், கொள்கை ரீதியிலான முடிவுகளைக் கையாள்வதற்கும் அரசியல் விழிப்புணர்வும் தொடர்பியல் திறனும் தேவை.
வணிக வளர்ச்சி அதிகாரி (Business Development Executive - BDE): புதிய வணிக வாய்ப்புகளைக் கண்டறிதல், கூட்டு ஒப்பந்தங்களை ஏற்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் தொடர்புகளைப் பேணுதல் போன்ற பணிகள் மனிதர்களின் தனிப்பட்ட பேச்சுவார்த்தைத் திறனை நம்பியே உள்ளன.
விளம்பர விற்பனை நிபுணர் (Media Buyer and Advertising Sales Specialist): சந்தைப் போக்குகளைப் புரிந்து கொண்டு, சரியான தளங்களில் பிராண்டுகளை விளம்பரப்படுத்த வாடிக்கையாளர்களுடன் பேசி உறவை வளர்ப்பதில் இவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
Railway Recruitment Board – RRB சார்பில் Junior Engineer/Assistant பணிகளுக்கான Recruitment 2026 அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Recruitment மூலம் இந்தியா முழுவதும் மொத்தம் 3993 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட துறையில் Diploma அல்லது Bachelor’s Degree qualification கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு மாதம் ₹35,400 சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் முழுவதும் Online முறையில் நடைபெறுகிறது. தகுதியானவர்கள் 13.09.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும். Railway Jobs தேடும் Diploma மற்றும் Degree candidates கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது.
Quick Info
விவரம்தகவல்
நிறுவனம்Railway Recruitment Board – RRB
பதவிJunior Engineer / Assistant
காலிப்பணியிடங்கள்3993
கல்வித் தகுதிDiploma / Bachelor’s Degree in relevant fields
வேலை இடம்All Over India
சம்பளம்₹35,400 மாதம்
விண்ணப்ப முறைOnline
தொடக்க தேதி14.08.2026
கடைசி தேதி13.09.2026
காலிப்பணியிடங்கள் மற்றும் சம்பள விவரம்
பதவி: Junior Engineer / Assistant
மொத்த காலிப்பணியிடங்கள்: 3993
சம்பளம்: ₹35,400 மாதம்
இந்த RRB Recruitment மூலம் இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையிலான Junior Engineer/Assistant காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிப்பதற்கு முன் post-wise qualification, eligible discipline, age relaxation, examination fee மற்றும் selection procedure உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் Official Notification-ல் சரிபார்க்கவும்.
இந்த வேலைவாய்ப்பு ஏன் முக்கியம்?
ஒரே Railway Recruitment மூலம் 3993 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Diploma / Degree qualification கொண்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
மாத சம்பளம் ₹35,400 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் Railway Jobs தேடும் candidates-க்கு பயன்படும் Recruitment ஆகும்.
Conclusion
Railway sector-ல் வேலை பெற விரும்பும் Diploma மற்றும் Degree candidates இந்த RRB Recruitment 2026 அறிவிப்பை கவனிக்கலாம். Junior Engineer/Assistant பணிகளில் மொத்தம் 3993 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Online விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2026. விண்ணப்பிக்கும் முன் தங்களுடைய educational qualification, branch eligibility, age limit, application fee மற்றும் selection process ஆகியவற்றை Official Notification-ல் கட்டாயம் சரிபார்க்கவும்.
மேலே சம்பளக் கணக்கு அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்டுவள்ளவாறு 25.08.2026-க்குள் NHIS புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை சார்பான விவரம் பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட பணியாளர்களே 25.08.2026க்குள் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்களே பொறுப்பு என்ற விவரமும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு 2026-2027ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் தொகை செலுத்த கோருதல் - சார்ந்து. 15.09.2026க்குள்
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள், பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆகியோரைத் துணைத் தலைவர்களாகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தினுள் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடக்க / நடுநிலை /உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக்குலேஷன் மற்றும் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து இணைப்புக் கட்டணத் தொகையினை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் பெற்று பெறப்பட்டத் தொகையை ஒரே வங்கி வரைவாக தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
எனவே, மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தங்கள் ஆளுகையின் கீழுள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலிருந்து கீழ்க்கண்டவாறு 2026-2027ஆம் ஆண்டிற்குரிய இணைப்புக்கட்டணத் தொகையினை சென்னையில் (Payable at Chennai) "The Secretary & Treasurer, Tamilnadu State Parent Teacher Association, Chennai-6" 15.09.2026-க்குள் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அரசு அரசு உதவி பெறும் தனியார் நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / CBSE பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.
மதிப்புமிகு இணை இயக்குனர் - NSS அவர்களின் 14.07.26 அன்று தெரிவிக்கப்பட்ட கடிதத்தின் படி அனைத்து வகை பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில், அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் சமுதாயத்திற்கு பயன்மிக்க/ சுற்றுச் சூழலுக்கு உகந்த / புதுமையான திட்டம்/ தொடர்பான கண்டுபிடிப் களுக்குரிய கருத்துருவை
5 மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் பெற்று , கீழ்க்கண்ட இணைய வழியில் பள்ளி மூலம் உடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்
தற்போது களஞ்சியம் செயலியில் (KALANJIYAM APP) குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதில் பதிவேற்றம் செய்யப்படும் உறுப்பினர்கள் மட்டுமே NHIS 2026 கார்டில் பெயர் சேர்க்கப்படும் என்பதால் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் மிக அவசரமாக தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அவர்களின் புகைப்படங்களோடு 25-08-2026க்குள் இதில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
சேலம் மாவட்ட கருவூல அலகு
வழிமுறைகள்
1. KALANJIYAM APP பதிவிறக்கம் செய்யவும். ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப் பட்டுயிருந்தால் KALANJIYAM APP Update செய்ய வேண்டும்
2. பின்னர் களஞ்சியம் செயலியில் Update Profile பட்டனை அழுத்தி உள்ளே செல்லவும்
3. இதில் Family Member Details / குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் என்பதனை அழுத்தி உள்ளே செல்லவும்
4. இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் இருந்ததால் அதில் புகைப்படத்தை இணைக்க வேண்டும். புதியதாக குடும்ப உறுப்பினர்கள் சேர்க்க விரும்பினால் மேல் பகுதியில் add member என்ற தேர்வினை பயன்படுத்தி வினாக்களுக்கு தங்களிடம் உள்ள உண்மையான தகவல்களை பூர்த்தி செய்து புதிய உறுப்பினரை சேர்க்கலாம் .
5. புகைப்படத்தை இணைக்க மேலே புகைப்படத்திற்கு அருகில் பேனா படத்தை அழுத்த வேண்டும்
6. அதில் இரண்டு தேர்வுகள் காட்டப்படும் முதலாவது நேரடியாக புகைப்படம் எடுப்பது இரண்டாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை Update செய்வது
7. இதில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து புகைப்படத்தை பெறவும் பின்னால் கீழே உள்ள Adjustment பயன்படுத்தி படத்தை தேவையான அளவிற்கு மாற்றி Update செய்யவும்.
**இது மிக மிக அவசரமாக செய்ய வேண்டிய பணி என்பதால் அனைத்து அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 25-08-2026 க்குள் செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.