Search

மிளகு முதல் இஞ்சி வரை... நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த கிட்சனில் இருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

 

இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ள சர்க்கரை நோய். என்னதான் இதற்கு இன்சுலின் முதல் பல்வேறு மருந்து மாத்திரைகள் நாம் சாப்பிட்டாலும் பயனில்லை.

இன்றைக்கு மாறிவரும் உணவுப்பழக்கங்கள் நம்முடைய உடல் நலத்தையும் முற்றிலும் பாதித்துவிட்டது. குறிப்பாக இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ள சர்க்கரை நோய். என்னதான் இதற்கு இன்சுலின் முதல் பல்வேறு மருந்து மாத்திரைகள் நாம் சாப்பிட்டாலும் பயனில்லை. நம்முடைய உணவுமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும், இல்லாவிடில் பல எண்ணற்ற நோய்களையும் நாம் பெறக்கூடும். எனவே இந்நேரத்தில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஆயுர்வேத மூலிகைள் என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

மிளகு: எந்த விஷமுள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும் சிறிதளவு மிளகு சாப்பிடுங்கள் போதும். விஷத்தை முறித்துவிடும் என்பார்கள் நம்முடைய முன்னோர்கள். ஆம் அந்தளவிற்கு மிளகில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. குறிப்பிட்ட உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவியாக உள்ளது.

நாவல் பழம்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த பழம் என்றால் அது நாவல் பழம் தான். இப்பழங்களில் உள்ள துவர்ப்பு தன்மையும், ஜம்போலினின் என்ற குளுக்கோசைடு உடலில் ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டை தடுக்க கூடியது. எனவே சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கு தினமும் 4-5 நாவல் பழங்கள் அல்லது இலைகளை மென்று சாப்பிடலாம். இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

இஞ்சி: இஞ்சியில் வைட்டமின்கள் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம்,பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதில் உள்ள ஹைப்போலிபிடெமிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நீரழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்திருக்க உதவுகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் காலையில் எழுந்தவுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவையும் குறைக்க முடியும்.

நெல்லிக்காய்: சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகளில் முக்கியமானது நெல்லிக்காய். இதில் உள்ள வைட்டமின் சி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக உள்ளது. இதோடு இதில் உள்ள நார்ச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தில் உள்ள குளுக்கோஸை மெதுவாக வெளியிடும் வேலை செய்கின்றது. எனவே நீரழிவு நோயாளிகள், நெல்லிக்காயை ஜூஸாகவோ அல்லது அப்படியே ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடும் போது சர்க்கரை அளவைக் குறைத்துக் கொள்ள முடியும்.

வெந்தயம்: நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த ஆயுர்வேத மருந்தாக உள்ளது வெந்தயம். முளைகட்டிய வெந்தயத்தைத் தினமும் நீங்கள் சாப்பிடும் போது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கிறது. இது டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம். இதோடு உடல் பருமனைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

ஜின் செக் (Ginseg): அமுக்கரா, தண்ணீர் விட்டான் போன்ற கிழங்கு வகையைச் சார்ந்தது தான் ஜின்செக். இது வெளிநாடுகளில் அதிகளவில் கிடைக்கிறது. இதில் உள்ள நோயெதிர்ப்பு பண்புகள் இரத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் அதிகளவில் உள்ளதால் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே சரக்ரை நோய் உள்ளவர்கள் தினமும் அரை டீஸ்பூன் பட்டை பொடியை உணவில் சேர்க்க வேண்டும். இது சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, உடல் எடை கட்டுப்பாடுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதய நோய்க்கான அபாயத்தையும் குறைக்கிறது.


இந்த ஆயுர்வேத மூலிகைப் பொருள்களைப் போன்று பாகற்காய் ஜுஸ், கடலைப்பருப்பு, வேப்பிலை, ஆவாரம் பூ, கிரீன் டீ, ஆளி விதை போன்ற பொருள்களையும் சர்க்கரை நோயாளிகள் தினமும் உங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் சர்க்கரை அளவை நிர்வகிக்க முடியும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.


 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment