Search

தமிழக மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் வேலை – சம்பளம்: ரூ.18,536/-

 

தமிழக மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் வேலை – சம்பளம்: ரூ.18,536/-

தருமபுரி, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகில் 1 வருட கால ஒப்பந்த அடிப்படையில்‌, பணிபுரிய புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.11.2022-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடங்கள்:

Social Worker எனப்படும் சமூகப்பணியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல்‌ கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Social Worker சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,536/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Social Worker கல்வி தகுதி:

சமூகப்பணியாளர்‌ (Social Worker) பட்டதாரி (10+2+3 மாதிரி) சமூகப்பணி 7 சமூகவியல்‌ / சமூக அறிவியல்‌ பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. இப்பணியில்‌ பணிபுரிந்த அனுபவம்‌ உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌ மற்றும்‌ கணிணியில்‌ பணிபுரிந்த அனுபவம்‌ இருக்க வேண்டும்‌.

அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிக்கான தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன்‌ (Passport Size)கூடிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 21.11.2022 அன்று மாலை 5.45 மணிக்குள்‌ கீழ்கண்ட முகவரியில்‌ வந்து சேரும்‌ வகையில்‌ அனுப்பப்பட வேண்டும்‌.

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌,
மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌,
சமூகப்பாதுகாப்புத்துறை,
மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌,
தருமபுரி.

Download Notification 2022 Pdf
Download Application Form 

Click here to join WhatsApp group for Daily employment news  

0 Comments:

Post a Comment