Search

கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி..! - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

 மத்திய அரசின் டிஆர்டிஓ பிரிவில் இயங்கும் கடற்படை ஆயுதங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தும் நிறுவனமான கடற்படை அறிவியல் & தொழில்நுட்ப ஆய்வகம் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொழிற்பயிற்சியின் விவரங்கள்:

கல்விஎண்ணிக்கைஉதவித்தொகை
B.Tech/B.E24ரூ.9,000/-
Technician17ரூ.8,000/-
ஐடிஐ22ரூ.8,000-6,000/-

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் கல்வித்தகுதி பிரிவுகள்:

இயந்திர பொறியியல், கடற்படை கட்டிடக் கலைஞர், கணினி அறிவியல் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல், CNC ஆபரேட்டர், கணினி ஆபரேட்டர், எலக்ட்ரீஷியன், வெல்டர், ட்யூனர், ஃபிட்டர், மெக்கானிஸ்ட்.

வயது வரம்பு :

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். 2019,2022 மற்றும் 2021 ஆண்டுகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களின் கல்வித்தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பப்படிவம்

விண்ணப்பிக்கும் முறை:

தொழிற்பயிற்சிக்கு www.mhrdnats.gov.in மற்றும் www.apprenticeshipindia.gov.in என்ற இணையத்தளத்தில் கண்டிப்பாகப் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி : admin.dept.nstl@gov.in 

10.12.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 Click here to join WhatsApp group for Daily employment news 


0 Comments:

Post a Comment