Search

சத்து குறையாமல் காய்கறிகளை சாப்பிட...

 இன்றைய காலக்கட்டத்தில் ரசாயன கலப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவு குறைபாடு காரணமாக வளர் இளம்பெண்கள் ரத்த சோகையினாலும், பிற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம். 

* காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு நல்ல தண்ணீரில் 10 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். அப்போது தோலில் உள்ள பூச்சி மருந்துகளின் தாக்கம் குறையும்.

 * காய்கறிகளை வெட்டிய பிறகு எக்காரணம் கொண்டும் கழுவக்கூடாது. 

* கருணைக்கிழங்கு தவிர, பிற கிழங்கு வகைகளை குறைவாக பயன்படுத்த வேண்டும். 

* மாவுச்சத்து மிகுந்த, கடினமான காய்கறிகளை மட்டும் அதிக நேரம் வேக வைக்கலாம். கொடிக்காய்கள், நீர்ச்சத்து மிகுந்த காய்களை 3 அல்லது 5 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது. 

* காய்கறிகளை எண்ணெய்யில் வதக்குதல், பொரித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

* ஈரமான பருத்தித்துணி அல்லது மண்பானை, பிரிட்ஜ் ஆகியவற்றில் காய்கறிகளை பாதுகாக்கலாம்.

 * கேரட், தக்காளி, வெள்ளரி, தேங்காய், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை சமைக்காமல் பயன்படுத்த வேண்டும். 

* காய்கறிகளை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும். அந்த தண்ணீரை வீணாக்காமல் பருகலாம்.

* ஒவ்வொரு பருவகாலங்களிலும் விளையும் காய்கறிகளை மட்டும் பயன்படுத்துவது மிக சிறந்தது ஆகும்.


 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment