Search

திருச்சி சுகாதாரத் துறையில் 119 செவிலியர் பணியிடங்கள் அறிவிப்பு: உடனே விண்ணப்பியுங்கள்

  திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  திருச்சி மாவட்ட பொது சுகாதார சங்கம் மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

பதவியின் பெயர் : செவிலியர்கள் (ஒப்பந்த அடிப்படை) 

பணியிடங்களின் எண்ணிக்கை: 119 

கல்வித்தகுதி: செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc., Nursing) / தமிழ் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum registered under TN nursing council),

வயது வரம்பு: 12.01.2023 அன்று, 50 வயது பூர்த்தி அடைந்திருக்க கூடாது.

ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம்: ரூ.18,000/-

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது

3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: ஜனவரி 31ம் தேதி மாலை 5.00 மணிக்குள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி 620 020. தொலைபேசி எண். 0431-2333112, மின்னஞ்சல் முகவரி dphtry@nic.in ஆகும்.


 Click here to join WhatsApp group for Daily employment news 

0 Comments:

Post a Comment