Search

குளிர்காலத்தில் அடிக்கடி சளி பிடிப்பதற்கான 5 காரணங்கள் இவைதான்..!

 குளிர்காலம் வந்தாலே பல்வேறு நோய்கிருமிகளும் கூடவே வந்துவிடும். குளிர்காலத்தில் நாம் எதிர்பார்க்காத விதமாக நோய்வாய்ப்படுதல், சளி மற்றும் பிற நோய்த்தொற்றுகளின் பாதிப்பும் வந்துவிடுகிறது. அதே போன்று, குளிர் காலத்தில் உடலின் தட்ப வெப்ப நிலை மிகவும் குறைவாக இருக்கும். எனவே, எளிதில் பல நோய்த்தொற்றுகள் நமது உடலை எளிதில் தாக்க கூடும். குறிப்பாக குளிர்காலத்தில் திடீரென நோய்வாய்ப்படும் அபாயத்திற்கு காரணம் என்ன? அதன் பின்னால் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

வறண்ட குளிர்காலக் காற்று : குளிர்காலத்தில், காற்று மிகவும் வறண்டு, அதில் உள்ள ஈரப்பதம் ஆவியாகிறது, அதாவது வைரஸ் துகள்கள் காற்றில் நீண்ட நேரம் இதனால் இருக்கக்கூடும். குளிர் மற்றும் வறண்ட காற்று ஆஸ்துமா அல்லது சிஓபிடி (நாட்பட்ட நுரையீரல் நோய்) போன்ற நாள்பட்ட சுவாச நிலைகளால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் எரிச்சலடையச் செய்யலாம். இது ஜலதோஷம், நிமோனியா அல்லது காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களையும் மோசமாக்கும்.

தனிப்பட்ட சுகாதாரம் : குளிர் காலத்தில் தனிப்பட்ட நபரின் சுகாதாரத்தை கவனத்தில் கொள்ளல் வேண்டும். இருமல் மற்றும் தும்மலின் போது வாயை மூடிய படி இருப்பது நல்லது. மேலும், உங்கள் கைகளை அவ்வப்போது கழுவவும் அல்லது சுத்தப்படுத்தவும். வெளியில் இருக்கும் போதெல்லாம் முகக்கவசம் அணிந்து, நோய்வாய்ப்பட்டவர்களிடம் இருந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவும்

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை : மன அழுத்தம் மற்றும் மோசமான தூக்கம் உங்கள் மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் உடல் நலனையும் கூட பாதிக்கிறது. மன அழுத்தம் உங்கள் மன அமைதியை பாதிக்கலாம். மன அழுத்தம் மற்றும் அமைதியான தூக்கம் இல்லாமல் இருப்பது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதற்கு வழிவகுக்கும். மேலும், இதனால் நீங்கள் ஜலதோஷத்தால் பாதிக்கப்படலாம். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உங்களை நோய்த்தொற்றுகள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட அனுமதிக்காது.

வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுதல் : வெளியில் வெப்பநிலை குறைவாக இருப்பதால், வீட்டிற்குள்ளே அதிக நேரத்தை செலவிடுகிறோம். குளிர் காலத்தில் உட்கார்ந்த நிலையில் அதிக நேரம் நாம் இருப்பதாலும், நமது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து நோய்வாய்ப்படுத்துகிறது. வீடுகளில் உள்ள தூசி துகள்கள் பொதுவான ஒவ்வாமைக்கு உங்களை ஆளாக்கலாம். மேலும், நீண்ட நேரம் வீட்டில் இருப்பதால், வைரஸ்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பு அதிகம். சளி, காய்ச்சல் மற்றும் பிற நோய்களின் பாதிப்புக்கும் வழி வகுக்கிறது.

குறைந்த வெப்பநிலை : குளிர்காலத்தில் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் பல வைரஸ்களில் ரைனோவைரஸ்களும் ஒன்றாகும். இந்த வைரஸ்கள் உடல் வெப்பநிலைக்குக் கீழே உள்ள வெப்பநிலையில் சிறப்பாக உயிர் வாழும். நாம் குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது நமது மூக்கில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்குவதால், வெள்ளை இரத்த அணுக்கள் நம் மூக்கில் உள்ள சளி சவ்வுகளை அடைவதைத் தடுக்கின்றன. குறைந்த வெப்பநிலை என்பது நோய் கிருமிகளின் பாதிப்புக்கு நம்மை எளிதில் ஆட்படுத்துகிறது.




0 Comments:

Post a Comment