Search

செவிலியர் பணிக்கான காலிப்பணியிடங்கள்.. விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கம் அறிவிப்பு..

 விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில்‌ நிரப்பப்பட இருக்கின்றன. இங்கே பணிபுரிய ஆர்வமுமம், தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. செவிலியர் பணிக்கான காலிப்பணியிடங்கள் : 13.

2. கல்வி தகுதி : செவிலியர்‌ பட்டயபடிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர்‌ பட்டம்‌ (B.Sc., Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. வயது வரம்பு : விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 22-02-2023 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4. மாத சம்பளம் : செவிலியர் (Staff Nurse) – ரூ.18,000/-

5. பணி நிபந்தனைகள்‌ : இந்த பதவி முற்றிலும்‌ தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படமாட்டாது. கொரோனா காலத்தில்‌ பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌.

6. விண்ணப்பிக்கும் முறை : ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/01/2023011269.pdf என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 25-01-2023 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்ப வேண்டும்.

7. விண்ணப்ப அனுப்ப வேண்டிய முகவரி : செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், விருதுநகர் மாவட்டம். விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயன் அடையலாம்.

 Click here to join WhatsApp group for Daily employment news 

0 Comments:

Post a Comment