Search

விமான நிலையத்தில் பணிபுரிவது உங்கள் கனவா? தாட்கோ நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு இதோ

 தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின  இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை தாட்கோ (தமிழ்நாடு ஆதி திராவடர் விட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் )நிறுவனம் வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது பி.டி.சி ஏவிஷேசன் அகடாமி நிறுவனம் (PTC Aviation Academy) மூலமாக விமான நிலையத்தில் விமான வாடிக்கையாளர் சேவை (Customer Service Executive Support) மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சியினை அளிக்கப்படவுள்ளது.

18 முதல் 25 வயது நிரம்பிய, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியன் பாஸ்போர்ட்-ஐ கட்டயாம்  வைத்திருக்க வேண்டும்.

இப்பயிற்சி மூன்று மாதம் விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20,000-த்தை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு AASSC (AEROSPACE SKILL SECTOR COUNCIL) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களான Indigo Airlines, Spice Jet, Go First, Vistra, Air India போன்ற புகழ் வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். எனவே இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment