Search

குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் வரை கடன் உதவி... பெண்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

 தேசிய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிதி, மேம்பாட்டுக் கழகம் (NBCFDC), பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் (New Swarnima Scheme For women) சிறு வணிகம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் அளித்து வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பெறுவதற்கான பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தை கீழ் விண்ணப்பிக்கலாம்..

பொதுவாக, இதுபோன்ற கடன் திட்டங்களில், ஒட்டு மொத்த திட்டத் தொகையில் பயனாளிகள்  குறைந்தது 5 முதல் 10% வரை பங்களிப்பு செய்ய வேண்டும். ஆனால், இந்த திட்டத்தில் அத்தகைய நிபந்தனைகள் ஏதுமில்லை.

சுயமான தொழில் தொடங்க இருக்கும் பெண்கள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வெறும் 5% வட்டியில் ரூ 2 லட்சம் வரை கடன் உதவி பெறலாம். இந்த வட்டி விகிதம்  ஏனைய இதர திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். கடன் தொகையை, 3 முதல் 8 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்த அவகாசம் அளிக்கப்படுகிறது.

அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் , மண்டல மேலாளர் (அல்லது) அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்/ நகர கூட்டுறவு வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் அலுவலரை அணுகவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment