ரூ.62,000 சம்பளம் வரை சம்பளம்... செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் டிரைவர் வேலை - Agri Info

Education News, Employment News in tamil

February 21, 2023

ரூ.62,000 சம்பளம் வரை சம்பளம்... செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் டிரைவர் வேலை

 செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசுத்தலைப்பில் உள்ள 4 ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடத்திற்கு ரூ.19,500 முதல் தொடங்கி ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
ஈப்பு ஓட்டுநர்4ரூ.19,500 - 62,000

வயது வரம்பு:

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயதாக 34 ஆகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 42 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1988) -ன் படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்குக் குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் https://chengalpattu.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து உரியச் சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கவும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)

நூலக கட்டிடம் 2 வது தளம்,

மருத்துவக் கல்லூரி வளாகம்,

செங்கல்பட்டு - 603 001.

விண்ணப்பதார்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 08.03.2023 மாலை 5.45 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment