Search

இந்த 8 பிரச்சனை இருக்கவங்க வேர்க்கடலையை அளவா சாப்பிடுங்க..!

 ஏழைகளின் பாதாம் நிலக்கடலையில், உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் B போன்ற சத்துக்கள் உள்ளன. இருப்பினும், நிலக்கடலையை நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என உங்களுக்கு தெரியுமா? அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை இங்கே காணலாம்.

அதீத ரத்தப்போக்கு : நிலக்கடலை இரத்த உறைதலை தடுப்பதால், மாதவிடாய் காலத்தின் போது அதிகளவு இரத்தப்போக்கு ஏற்படும். வேர்க்கடலையில் உள்ள கூறுகள் சில்லுமூக்கு (மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்) பிரச்சனைக்கும் வழிவகுக்கிறது.

உடல் எடை அதிகரிப்பு : நிலக்கடலையில் அதிக கலோரி உள்ளதால், இது உடல் எடையை அதிகரிக்கும். எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அல்லது டயட்டில் இருப்பவர்கள் வேர்க்கடலையை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.

ஆற்றல் உற்பத்தி குறைவு : ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 உடலின் ஆற்றல் உற்பத்திக்கு பயன்படும் கொழுப்பு அமிலங்கள். நிலக்கடலையில் ஒமேகா 6 அமிலம் மட்டுமே இருப்பதால், உடலில் ஆற்றல் உற்பத்தி குறைவாக இருக்கும்.

அலர்ஜி பிரச்சனை : ஒவ்வாமை என்று கூறப்படும் சில அலர்ஜி பிரச்சனைக்கு வேர்க்கடலை வழிவகுக்கும். வேர்க்கடலை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால், அரிப்பு, வீக்கம், தோல் சிவத்தல் அல்லது தொண்டை மற்றும் வாய் பகுதியில் கூச்ச உணர்வு, மூக்கில் நீர் வடிதல் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மாரடைப்பு அபாயம் : அதிக அளவு நிலக்கடலை உட்கொள்வதால், உடலில் அதிக அளவு கொழுப்பு உற்பத்தி செய்யப்படும். இதனால், பக்கவாதம், மாரடைப்பு, செரிமான பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஊட்டச்சத்து அதிகரிப்பு : நிலக்கடலை ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களில் ஒன்று. ஆனால், இதில் உள்ள சத்துக்கள் சமநிலையில் இல்லை. இந்த சமநிலையற்ற தன்மையால் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் பெறுவதில் சமநிலையற்ற தன்மை நிலவுகிறது.

இரத்த அழுத்த பிரச்சனை : வேர்க்கடலை அதிகமாக உட்கொள்ளுவதால் உடலில் உப்பு அதிகரிக்கும். இதனால், இரத்த அழுத்த பிரச்சனைகள் உண்டாகிறது. சில வகை வேர்க்கடலையில் உள்ள அதிகப்படியான சோடியம், இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும்..

இரத்த உறைதலை தடுக்கும் : நிலக்கடலையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் இரத்த உறைதல் செயல்பாட்டை தடுக்கிறது. உடலில் காயம் உண்டாகும் போது ஏற்படும் அதிகளவு இரத்தப்போக்கினை கட்டுப்படுத்த இரத்தம் உறைதல் அவசியம். வேர்க்கடலையில் உள்ள சேர்மங்கள் இந்த செயல்பாட்டை தடுக்கிறது. எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் நாம் அளவாக எடுத்துக்கொண்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment