Search

Google Pay-PhonePe-Paytm-ல் பணத்தை தவறாக அனுப்பிவிட்டீர்களா? எப்படி அந்த பணத்தை திரும்ப பெறுவது?

 யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பயன்பாடுகள் நாட்டில் மிகவும் விருப்பமான கட்டண முறைகளில் ஒன்றாக உள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பும்போது, ஃபோன் எண்ணை தவறான UPI ஐடிக்கு பணத்தை மாற்ற நேரிடலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) டிஜிட்டல் சேவைகள் மூலம் தவறான பரிவர்த்தனைகளிலிருந்து பணத்தைப் பெறுவதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

பொதுவாக, UPI மூலம் மொத்த பரிவர்த்தனைகள் 88 சதவீதம் அதிகரித்து 19.65 பில்லியனாக உள்ளது. இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டின் Q3 உடன் ஒப்பிடும்போது 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 71 சதவிகிதம் அதிகரித்து ரூ 32.5 லட்சம் கோடியாகவும் உள்ளது. இதில், நபர் டு நபர் (P2P)ஆனது அதிகம் உபயோகிக்கப்படும் கட்டண முறையாகும். இது மொத்த பரிவர்த்தனை அளவின் 42 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்று வேர்ல்ட்லைன் இந்தியாவின் Q3 2022க்கான இந்தியா டிஜிட்டல் கொடுப்பனவு அறிக்கை கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தவறாக அனுப்பப்பட்ட பரிவர்த்தனைகளுக்குப் பிறகு பணத்தைத் எப்படி திரும்பப்பெறலாம்.
1.ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட நபர் முதலில் பயன்படுத்தப்படும் கட்டண முறையில் புகார் அளிக்க வேண்டும். அந்த நபர் Google Pay, PhonePe அல்லது Paytm போன்ற UPI ஐடிகளை பயன்படுத்தி, தவறான நிறுவனத்திற்கு பணத்தைப் பரிமாற்றியிருந்தால், அந்தச் சம்பவத்தை அவர் முதலில் Paytm, Google Pay மற்றும் PhonePe போன்ற பயன்பாடுகளின் வாடிக்கையாளர் சேவைக்குத் தெரிவிக்க வேண்டும்.

2. அதேபோல், பாதிக்கப்பட்ட நபர் NPCI போர்ட்டலிலும் புகார் அளிக்கலாம். npci.org.in என்ற இணையதள பக்கத்தில், புகார்தாரர்கள் Dispute Redressal Mechanism tab மூலம் அங்கு பிரிவின் கீழ் ஆன்லைன் படிவத்தில் புகாரளிக்கலாம்.

3. அந்த படிவத்தில் UPI பரிவர்த்தனை ஐடி, மெய்நிகர் கட்டண முகவரி, பரிமாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற தகவல்களை அதில் நிரப்ப வேண்டும்.

4. இதுதவிர, புகார் அளிப்பவர்கள் வங்கி பரிவர்த்தனை குறித்து அறிக்கை பதிவேற்றம் செய்யும்படி அதில் கேட்கப்படும். இது பரிவர்த்தனைக்காக கணக்கில் இருந்து கழிக்கப்பட்ட தொகையைக் காண்பிக்க வேண்டும்.

5. இதனையடுத்து, புகார் அளிப்பவர் Incorrectly transferred to another account என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

6. பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தால், புகார் அளிப்பவர், கட்டணச் சேவை வழங்குநர் (PSP) வங்கியிடம் புகாரளிக்கலாம். அப்போதும் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால், இறுதியாக பயனர் வாடிக்கையாளர் வங்கி குறைதீர்ப்பாளரை (Banking Ombudsman) அல்லது டிஜிட்டல் புகார்களுக்கான (Ombudsman for Digital) குறைதீர்ப்பாளரை அணுகலாம்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ரிசர்வ் வங்கியின் ஒம்புட்ஸ்மேன் என்றால் என்ன?
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஒம்புட்ஸ்மேன் என்பது, பிரிவு 8ன் திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் உள்ள சில சேவைகளில் குறைபாடுகளுக்கு எதிரான வாடிக்கையாளர் புகார்களை நிவர்த்தி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒரு மூத்த அதிகாரி ஆவார். இதன் கீழ், UPI, Bharat QR குறியீடு மற்றும் பிறவற்றின் மூலம் பணம் செலுத்தும் பரிவர்த்தனைகள் தொடர்பான சிக்கலைத் தீர்க்க கூகுள் பே போன்பே போன்றவற்றில் அல்லது PSP வங்கிகள் தோல்வியடைந்தால் புகார் அளிப்பவர்கள் இதன் மூலம் கடைசியாக புகார்களை பதிவு செய்யலாம். இது, தவறாக அனுப்பப்பட்ட பணம் திரும்பு பெறப்படாமல் இருப்பது மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பெறப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக புகார்களை அளிக்கலாம்.


0 Comments:

Post a Comment