Search

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.7 கடைசி நாள்!

 

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.7 கடைசி நாள்!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள Chief Risk Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி அறிவிப்பின் படி, ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TMB வங்கி வேலைவாய்ப்பு 2023 விவரங்கள்:
  • Chief Risk Officer பதவிக்கு என மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உலகளாவிய ஆபத்து வல்லுநர்கள் சங்கத்திலிருந்து நிதி இடர் மேலாண்மையில் நிபுணத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • 30.11.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும்.
  • பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வர வேண்டும். அவர்கள் நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 07.02.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF 


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment