Search

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலத்தில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

 திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட வன பயிற்சிநர் (district resource person) திறன் வளர்ப்பு பயிற்சி பிரிவு (IB&CB)என்ற ஒரு தற்காலிக பணியிடத்திற்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணி முற்றிலும் தற்காலிகமானது இதன் மூலம் பணி நிரந்தரம் அல்லது வேறு சலுகைகள் முன்னுரிமை ஏதும் கோர இயலாது என்று தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இதில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduation, Master Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும் . தகுதி இல்லாத மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

மேலும், விவரங்களுக்கு https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடவும் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் (10.04.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment