Search

உஷார்.. தர்பூசணியில் இப்படியும் நடக்குது கலப்படம்.. பார்த்து வாங்குவது எப்படி?

 கோடை காலத்தில் அதிகம் உண்ணப்படும் பழங்களில் ஒன்றாக தர்பூசணி உள்ளது. கோடை வெயிலில் இருந்து உடலை நீரேற்றமாக வைக்கவும், உடல் சூட்டை தணிக்க என ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை கொடுள்ளது தர்பூசணி. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும், இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. கோடைக்காலத்தில் இது அதிகளவில் விற்பனையாவதால் இதிலும் கூட கடப்படம் செய்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?. கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணி நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது.

சிவப்பான தர்பூசணி ஏன் ஆபத்தானது? : சிட்டிகிரீனின் கூற்றுப்படி, விற்பனையாளர்கள் பழுக்காத தர்பூசணியை விரைவாக பழுக்க வைக்க ஆக்ஸிடாஸின் (Oxytocin) ரசாயனத்தைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆக்ஸிடாஸின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. இதனால், வயிற்று வலி, நரம்பு தளர்ச்சி, பேதி போன்ற பல பிரச்னைகள் ஏற்படும்.

சில சமயங்களில் நாம் தர்பூசணி வாங்க கடைக்கு செல்லும் போது, அடர் சிவப்பு நிறத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். இப்படிப்பட்ட தர்பூசணிகளைப் பார்த்தவுடன் ஆஹா.. இது நல்லா இனிக்கும் என நினைத்து நாம் யோசிக்காமல் வாங்கிவிடுவோம். ஆனால், இந்த நிறம் ஒரு வியாபார உத்தி என உங்களுக்கு தெரியுமா?. இரசாயனங்களை பயன்படுத்தி பழங்களில் சிவப்பு நிறத்தை கொண்டு வருகின்றனர். அவை, ஆரோக்கியமானவை அல்ல. 

நீங்கள் கடையில் வாங்கும் தர்பூசணி இயற்கையாக பழுத்ததா இல்லை இரசாயனம் கொண்டு வலுக்க வைத்ததா என்பதை எப்படி கண்டு பிடிக்கலாம் என இந்த தொகுப்பில் காணலாம்.

இன்னும் சிலர் தர்பூசணியில் விரைவாக பழுக்க கால்சியம் கார்பைடு-யை (Calcium Carbide) பயன்படுத்துகின்றனர். இது ஈரத்துடன் சேரும்போது எத்திலீனை வெளியிடுகிறது. இதனால், காய் வேகமாக பழுக்கிறது. இதை சாப்பிடுவதால் தலைவலி அல்லது புற்றுநோய் கூட ஏற்படலாம். செயற்கையாக பழுத்த அல்லது ரசாயனம் கலந்த தர்பூசணியை எப்படி அடையாளம் காண்பது? :


0 Comments:

Post a Comment