Search

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 பேருக்கு வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்

 மாநில அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில்  (State Express Transport Corporation)  காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver Cum Conductor) பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் துவங்குகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 685

வயது வரம்பு: 01.01.2023 அன்று 24 வயது பூர்த்தியாக இருக்க வேண்டும். பிசி/ எம்பிசி/எஸ்சி/எஸ்டி பிரிவினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஊட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் (18 மாதங்கள் பூர்த்தியாகிருத்தல் வேண்டும்)  இருக்க வேண்டும். முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். செல்லத்தக்க நடத்துனர் உரிமம் 01.01.2023க்கு முன்னர் பெற்றதாக இருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:  உயரம் குறைந்த பட்சம் 160 செ.மீ, எடை குறைந்தபட்சம் 48 கிலோ இருத்தல் வேண்டும். கண் திறன் குறைபாடு இருக்கக் கூடாது. காது கேட்கும் திறன் குறைபாடு இருக்கக் கூடாது. வளைந்த கால்கள், முழங்கால்கள் ஓட்டுதல் மற்றும் சமமான பாதங்கள் ஆகிய குறைபாடு இருக்கக் கூடாது.

மேற்படி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இணையதள விண்ணப்பங்களின் விரிவான நடைமுறை, தகுதி அளவுகோல்கள் மற்றும் இதர  பிற விவரங்கள் மேற்படி வலைதளத்தில் கிடைக்கின்றன. பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இணையதளம் 18.08.2023 முதல் 15.09.2023 வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1180 (ஜிஎஸ்டி உட்பட) ஆகும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.590 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment