Search

புதுச்சேரியில் மாபெரும் வேலைவாய்ப்புமுகாம்.. 600க்கும் மேற்பட்டோருக்கு கிடைத்தது வேலை!

 புதுச்சேரியில் நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமால் 600க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைத்துள்ளது.

வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீன் தயாள்உபத்தியாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் மாநில அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் உடன் இணைந்து இந்த திட்டம் சார்பில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் சுமார் 1,800க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நேர்காணல் மூலம் முதல் கட்டமாக 600க்கும் மேற்பட்ட நபர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை கடிதமும் வழங்கப்பட்டது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் புதுச்சேரி மற்றும் சென்னை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment