Search

டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுமா..? ஆயுர்வேத நிபுணர் கூறும் நன்மைகளும்... தீமைகளும்...

 நம் நாட்டில் பலருக்கு டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே நகராது. அப்படிப்பட்ட டீ பிரியர்கள் இருக்கும் இன்றைய நிலையில், டீ குடிப்பது உண்மையாகவே ஆரோக்கியமானதா என்றால் முழுவதுமாக ஆம் என்று சொல்லி விட முடியாது.

நம்முடைய நாட்டில் மட்டும் டீக்கென்று தனி மரியாதை உண்டு. காபி பிரியர்கள் போல இந்த டீக்கு அடிமையான தனி கூட்டமே உண்டு. இதை வெறும் பானமாக இல்லாமல் இந்தியர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறி இருக்கிறது. டீயை பொறுத்தவரை அதன் முக்கிய சிறப்பே நாம் விரும்பும் சுவைக்கு ஏற்றார் போல விதம் விதமாக தயாரிக்க முடியும் என்பது தான்.

சாதாரண டீ, எலுமிச்சை டீ, பிளாக் டீ, ஏலக்காய் டீ, தந்தூரி டீ போன்ற பலவிதமான வகைகளில் தயாரிக்க முடியும். இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று நான்கு முறையாவது டீ குடித்தே ஆக வேண்டும் என்று இருப்பவர்களும் உண்டு. ஆனால் இப்படி அடிக்கடி டீ குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை! டீ குடிப்பதால் இருக்கும் நன்மைகள் போல, தீமைகள் உள்ளன.


பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் டிம்பிள் ஜன்க்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேநீரைப் பற்றி ஒரு பெரும் விழிப்புணர்வு ஏற்படும் அளவுக்கு பதிவிட்டு இருக்கிறார்.

News18

டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

டாக்டர் டிம்பிளின் இன்ஸ்டாகிராம் பதிவில், டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் தேநீரில் உள்ள பாலிபெனால்ஸ் எனும் வேதி பொருள் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவதில் மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் சரியான செரிமானத்திற்கும் கார்டியோவாஸ்குலர் என்ற நோய் ஏற்படுாமல் தடுக்கவும் உதவுகிறது. உடல் எடையை சரியான அளவில் வைத்து கொள்ளவும் உதவுகிறது.


தேநீரில் சுவையூட்டும் மணமூட்டும் பொருட்களான ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, கருப்பு மிளகு ஆகியவை இயற்கையாகவே மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இவற்றை தேநீர் தயாரித்து கலந்து குடிக்கும் போது அவை பாக்டீரியாக்களை கொல்வதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

டீ குடிப்பதால் ஏற்படும் கெடுதல்கள்:

டீயில் கலக்கப்படும் அதிகப்படியான சர்க்கரை உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காபியை விட, தேநீரில் சர்க்கரை தூக்கலாக குடிப்பது பலருக்கும் பிடிக்கும். அதிக சர்க்கரை ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்! ஒத்து, ரத்தத்தில் கலக்கும் போது உடல் சக்தியை முழுவதுமாக உறிஞ்சுவதுடன் மேலும் டீ குடிக்க வேண்டும் என்று ஆவலையும் உண்டாக்குகிறது. இது கிட்டத்தட்ட அடிமையாவது போன்ற மனநிலையை உண்டாக்கும்.

இதனால் நீங்கள் எப்போதெல்லாம் மன அழுத்தத்துடனும் சோர்வாகவோ, தலைவலி அல்லது சக்தி குறைவாக இருப்பதாக உணர்கிறேர்களோ அப்பொழுதெல்லாம் டீ குடித்தால் சரியாகிவிடும் என்ற எண்ணம் இயற்கையாகவே உங்களுக்கு ஏற்பட்டு விடும்.


டீ பற்றிய கசப்பான உண்மை:

தேநீர் தயாரிக்க தரம் குறைந்த தேயிலைகளை பயன்படுத்தும் போது, டானின்ஸ்கள் என்னும் வேதிப்பொருளை அதிக அளவில் வெளியிடுகிறது. இவை வயிற்றில் அமிலம் சுரப்பதை அதிகரித்து அசிடிட்டிக்கு வழிவகுக்கிறது.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment