Search

Constipation: மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும் 5 உணவுகள்

 

நாள்பட்ட மலச்சிக்கலில் இருந்து விடுபட 5 உணவுகளை ஆயுர்வேத நிபுணர் பரிந்துரைக்கிறார். அவைகுறித்து பார்ப்போம்.

ஒரு நல்ல செரிமான ஆரோக்கியம் என்பது உங்கள் நல்வாழ்வு, மனநிலையை இயக்கும் கண்ணுக்கு தெரியாத சக்தியாகும். எவ்வாறாயினும், நமது குடலின் சீரான செயல்பாடு பாதிக்கப்படும் போது, அது உங்கள் நாள் முழுவதையும் கெடுத்துவிடும். உங்களுக்கு சங்கடமான உணர்வை ஏற்படுத்துகிறது.

 மலச்சிக்கலைச் சமாளிப்பது சவாலானது மற்றும் அது நாள்பட்டதாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கலாம். மேலும் பல சமயங்களில் குமட்டல், வீக்கம் மற்றும் மோசமான பசியின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்.

பலர் தங்கள் ஒழுங்கற்ற குடல் இயக்கங்களை மலமிளக்கி மாத்திரைகள் மூலம் நிர்வகிக்கிறார்கள். ஆனால் அவற்றை அதிகமாகப் பயன்படுத்துவது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். வாழ்க்கை முறை நடவடிக்கைகள், குறிப்பாக உணவுமுறை மாற்றங்கள் மூலம் நிலைமையை பெரிய அளவில் மேம்படுத்தலாம்.

நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை உண்டால் மலச்சிக்கல் வராது.

"மலச்சிக்கல் என்பது இரைப்பை குடலுடன் தொடர்புடைய பொதுவான பிரச்னையாகும். இது மலம் கழிப்பதில் சிரமத்தால் வகைப்படுத்தப்படுகிறது. பெருங்குடலில் உள்ள மலம் காய்ந்து கடினமடையும் போது இந்த பிரச்சினை எழுகிறது, 

மலச்சிக்கலுக்கான பொதுவான காரணங்கள் போதிய நீர் எடுக்காதது மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளாதது, உட்கார்ந்த வாழ்க்கை முறை, இறைச்சி நிறைந்த உணவு போன்ற பல்வேறு காரணிகள் ஆகும்," என்கிறார் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் மதுமிதா கிருஷ்ணன்.

மலச்சிக்கல் கை, கால்களில் வீக்கம், அசௌகரியம், வாய்வு, வலி, தலைவலி மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். 

நாள்பட்ட மலச்சிக்கலுக்கான உணவுக் குறிப்புகள்

டாக்டர் கிருஷ்ணன் பரிந்துரைத்தபடி, நாள்பட்ட மலச்சிக்கலைத் தடுக்க, ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்பட்ட பல வழிகளில், 5 வழிகள் உள்ளன.

1. பாதாமை உணவில் சேர்க்கவும்

நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கள் சந்திக்கும் ஒரு பிரச்னையாக இருந்தால், அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். மலச்சிக்கலைக் கணிசமான அளவில் தடுக்க உதவும் பாதாம் அத்தகைய உணவுகளில் ஒன்றாகும். ஆயுர்வேதத்தில், பாதாம் அதன் மருந்தியல் பண்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டு, 'போஷகா' அல்லது அனைத்து உடல் திசுக்களையும் ஆதரிக்கும் 'பிரிம்ஹானா', மற்றும் 'பால்யா' என வகைப்படுத்தப்படுகிறது. தசை வலிமையின் வளர்ச்சியை அதிகரிக்க. 

மேலும், பாதாம் நரம்பு மண்டலத்தைத் தூண்டும் 'வதனாதி உத்தேஜகா' என்றும்; நிறம் மற்றும் தோல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகின்றன என்றும் தெரிகிறது. 

நீங்கள் நாள்பட்ட மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் உணவில் ஒரு சில பாதாம் பருப்புகளை உட்கொள்வது ஒரு சிறந்த மீட்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையாகும். 

2. உங்கள் உணவில் கரிம எண்ணெய்களின் உட்கொள்ளலை அதிகரிக்கவும்

உயர்தர எண்ணெய்கள் அல்லது கொழுப்புகள் திசுக்களை உயவூட்ட உதவுகின்றன. இதனால் சரியான அளவு எண்ணெய் அல்லது கொழுப்பு மலத்தில் இருக்கும். பெரும்பாலான எண்ணெய்கள் பொதுவாக உறுதுணையாக இருந்தாலும், எள் எண்ணெய், நெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை வாதத்திற்கான சிறந்த எண்ணெய்கள் அல்லது கொழுப்புகள் ஆகும்.

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மாற்றங்களைச் சேர்த்துக்கொள்வது சில நேரங்களில் மெதுவாக முடிவுகளைக் காண்பிக்கும். எனவே, உங்கள் உணவில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் நெய் போன்ற உயர்தர எண்ணெய்கள் அல்லது கொழுப்புகளைச் சேர்ப்பது உதவும்.

ஒரு ஆய்வில், நெய் பியூட்ரிக் அமிலத்தின் வளமான ஆதாரமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமிலம் குடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி மல இயக்கத்தை எளிதாக்குகிறது. கூடுதலாக, நெய் போன்ற கொழுப்புகள் மலச்சிக்கலின் அறிகுறிகளான வயிற்று வலி மற்றும் வீக்கம் போன்றவற்றைத் தணிக்கும். எனவே, உங்கள் உணவில் மிதமான அளவு நெய்யை சேர்ப்பது ஒரு பயனுள்ள தொடக்க புள்ளியாக இருக்கும்.

3. பலவகையான பழங்கள்

பழங்கள் உங்கள் உணவில் புத்துணர்ச்சியூட்டுபவை. பழுத்த வாழைப்பழங்கள், உரிக்கப்படும் ஆப்பிள்கள், பருத்த கொடிமுந்திரி போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதிகபட்ச பலனைப் பெற, உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது பின் பழங்களை உட்கொண்டு, அவற்றை நன்கு மென்று சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

4. பூண்டு:

மலச்சிக்கலைப் போக்க பூண்டு, எளிய உப்பு போன்றவை சிறந்த சமநிலைப்படுத்திகள் ஆகும். இவற்றை உணவில் எடுக்கும்போது குடலில் உள்ள நீரின் அளவை அதிகரிக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாது.

5. மூலிகைகள்:

நாள்பட்ட மலச்சிக்கலுக்கு மிகவும் பயனுள்ளதாக சில மூலிகைகள் உள்ளன. திரிபலா அல்லது அமலாகி (எம்பிலிகா அஃபிசினாலிஸ்), ஹரிடகி (டெர்மினாலியா செபுலா) மற்றும் விபிதாகி (டெர்மினாலியா பெல்லாரிகா) ஆகியவற்றின் கலவையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கலவையில் அவை அனைத்து திரிதோஷங்களையும் சமநிலைப்படுத்துகின்றன மற்றும் இந்த நிலையில் தேவைப்படும் லேசான மலமிளக்கியின் தரத்தைக் கொண்டுள்ளன. பொதுவாகப் பயன்படுத்தப்படும் மற்றொரு மூலிகையானது ஸ்வர்ணபத்ரி அல்லது சென்னா (காசியா அங்கஸ்டிஃபோலியா) அதன் மலமிளக்கிய பண்புகளால் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகைப்பொடிகள் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது ஆயுர்வேத மையங்களில் கிடைக்கும். 

🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment