Search

DEO to CEO Promotion - G.O Released - 31.07.24


IMG_20240731_190358

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் -மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திலிருந்து முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

GO.No187- DEO to CEO Promotion👇👇👇

Download here



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SMC - பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - நிதி விடுவித்தல் - SPD Proceedings

 IMG_20240731_190900

பள்ளிக்  கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி -2024 2026 - ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - நிதிவிடுவித்தல் - சார்பு SPD Proceedings 

fund Proceedings - SMC Reconstitution including budget & Annexures👇👇👇

Download here


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SMC - Important Dates & Schedule - All Schools

 

SMC - Important Dates & Schedule


பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கால அட்டவணை


02.08.2024 - அனைத்துப் பெற்றோர்கள் கூட்டம்


10.08.2024 - முதல் 50% தொடக்கப் பள்ளிகள்


17.08.2024 - மீதமுள்ள 50% தொடக்கப் பள்ளிகள்


24.08.2024 - உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்


31.08.2024 - நடுநிலைப் பள்ளிகள்



SMC%20Schedule%20copy

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஏன் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை..? காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..!

 உங்களின் சொந்த சாதனைகள், உங்களின் பலம் என்ன என்பது குறித்து நினைத்துப் பாருங்கள். அடுத்தவர்களோடு ஒப்பிடுவதை விட உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை சோசியல் மீடியாவை தவிர்ப்பது நல்லது.

நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையா?

மகிழ்ச்சியற்ற உணர்வை நாம் அனைவருமே சில நேரங்களில் அனுபவிக்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் நம் வாழ்வில் பல்வேறு காரணிகளால் நமக்கு மகிழ்ச்சியில்லா சூழல் ஏற்படுகிறது. இந்தக் காரணங்களை சரியாக புரிந்துகொள்வதன் மூலம், நேர்மறையான மாற்றங்களைச் செய்து, மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை வாழ நம்மால் முடியும். இந்தக் கட்டுரையில் மகிழ்ச்சியின்மைக்கான பொதுவான காரணங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதில் வரக்கூடிய சவால்களை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி தெளிவாக பார்ப்போம்.

News18

அடுத்தவர்களை மகிழ்விப்பது : 

அடுத்தவர்களை மகிழ்விப்பவராக இருப்பது மகிழ்ச்சியின்மைக்கு வழிவகுக்கும், ஏனெனில் இது உங்கள் சொந்த நலனை விட மற்றவர்களின் கவனம் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்கும். மற்றவர்களிடமிருந்து தொடர்ச்சியாக கவனத்தைக் கோர விரும்புவது உங்கள் சொந்த தேவைகளையும் விருப்பங்களையும் புறக்கணிப்பதற்கு ஈடாகும். இதனால் அதிருப்தி, மனக்கசப்பு மற்றும் மோதல் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். அடுத்தவர்களிடம் ‘இல்லை’ ‘வேண்டாம்’ என்று கூறப் பழகுங்கள். உங்களைச் சுற்றி எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் சொந்த மகிழ்ச்சி மற்றும் இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

வேலை-வாழ்க்கையில் சமநிலையை பேணுதல் : 

வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. உங்கள் தொழில் மற்றும் கேரியரில் நீங்கள் சிறந்து விளங்கலாம். ஆனால் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் செலவிடும் நேரத்தை புறக்கணித்தால், நீங்கள் குறிப்பிடத்தக்க மன மற்றும் உணர்வு ரீதியான துயரங்களை அனுபவிக்க நேரிடும். அதிகப்படியாக வேலை செய்வது மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

உங்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதே நேரத்தில், வீட்டிற்கு வந்தும் அலுவலக வேலைகள் செய்வதை தவிர்க்கவும். உங்களுக்கு மகிழ்ச்சியையும் தளர்வையும் தரும் செயல்களில் ஈடுபடுங்கள்.

மற்றவர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்த்தல் : 

ஒவ்வொரு தனிநபரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகள், தனிப்பட்ட நலன்கள் இருக்கும். தொடர்ந்து உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது, உங்கள் சுயமரியாதையை பலவீனப்படுத்தி, மகிழ்ச்சியற்ற உணர்வுகளை அதிகரிக்கும். சமூக ஊடகங்கள் மற்றும் சமூக அழுத்தங்கள் பெரும்பாலும் இந்த போக்கை அதிகரிக்த்து, நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை வளர்ப்பதோடு ஒருவரின் சுய மதிப்புற்கு தீங்கு விளைவிக்கும்.
உங்களின் சொந்த சாதனைகள், உங்களின் பலம் என்ன என்பது குறித்து நினைத்துப் பாருங்கள். அடுத்தவர்களோடு ஒப்பிடுவதை விட உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை சோசியல் மீடியாவை தவிர்ப்பது நல்லது.

உங்களின் சொந்த சாதனைகள், உங்களின் பலம் என்ன என்பது குறித்து நினைத்துப் பாருங்கள். அடுத்தவர்களோடு ஒப்பிடுவதை விட உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை சோசியல் மீடியாவை தவிர்ப்பது நல்லது.

உங்களிடம் இல்லாததை நினைத்து கவலைப்படாதீர்கள் : 

எப்போதும் நேர்மறையான அணுகுமுறையை பராமரிப்பது அவசியமாகும். உங்களிடம் இல்லாததை நினைத்து வருத்தப்படுவதை விட உங்களிடம் உள்ளதைப் பாராட்டுவதில் கவனம் செலுத்துங்கள். நன்றியுணர்வு மற்றும் பணிவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்களின் பலம், உறவுகள் மற்றும் அனுபவங்களைப் பாராட்டுவதில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கையின் சிறிய சந்தோஷங்களை மகிழ்ச்சியாக தழுவிக்கொள்ளுங்கள்.

டாக்ஸிக் உறவுமுறையை சரி செய்தல் : 

நச்சுத்தன்மை எண்ணம் கொண்ட நபர்களால் நீங்கள் சூழப்பட்டிருந்தால், அது உங்களின் ஆற்றலை, சுயமரியாதையைக் குறைத்து உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்கலாம். ஒருவரை ஏமாற்றுவது, விமர்சிப்பது அல்லது தொடர்ந்து எதிர்மறையான நடத்தை ஆகியவை அனைத்தும் டாக்ஸிக் உறவில் இருக்கும். இவை அனைத்தும் உங்களின் மன அழுத்தம் மற்றும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கு பங்களிக்கின்றன.

உங்கள் மகிழ்ச்சியையும் சுய மதிப்பையும் தொடர்ந்து நாசப்படுத்தும் நபர்களிடமிருந்து எப்போதும் விலகியே இருங்கள். பரஸ்பர மரியாதை மற்றும் ஆதரவின் அடிப்படையில் உறவுகளுடன் பழகுங்கள். உங்கள் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு சாதகமாக பங்களிப்புச் செய்யும் நட்புகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நீங்கள் தினமும் உடலுக்கு தேவையான நார்ச்சத்தை உட்கொள்கிறீர்களா..? அவசியத்தை தெரிஞ்சுக்கோங்க..!

 ஒரு மனிதருக்கு குடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இலகுவான குடல் இயக்கத்திற்கும் நார்ச்சத்து இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியர்களின் தினசரி உணவில் சேர்க்கப்படும் உணவு பொருட்கள் பெரும்பாலும் போதுமான நார்ச்சத்தை கொண்டிருப்பதில்லை. இது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

நார்ச்சத்தின் அவசியம் என்ன?

நமது உடலில் செரிமான மண்டலத்தில் நார்ச்சத்தின் பங்கு முக்கியமானதாக உள்ளது. குடல்கள் சீராக இயங்குவதற்கும், மலசிக்கல் ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் நார்ச்சத்து அவசியமானதாகும். மேலும் இரத்ததில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தை குறைத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துவதிலும் நார்ச்சத்து முக்கிய பங்காற்றுகிறது. நாம் உணவு உட்கொள்ளும் போது வயிறு நிறைந்தது போன்ற உணர்வை கொடுத்து, அதிகப்படியான கலோரிகள் உட்கொள்வதை தடுப்பதும் இந்த நார்ச்சத்தின் வேலை தான்! மேலும் இதய கோளாறுகள் ஏற்படுவதை தடுப்பது மட்டுமின்றி, நீரிழிவு நோய் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கும் நார்ச்சத்து பெருமளவு பங்காற்றுகிறது.

News18

நம் உடலுக்கு எவ்வளவு நார்ச்சத்து தேவை?

ஒருவருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நார்ச்சத்து தேவை என்பது பாலினம், உடல் ஆரோக்கியம், வயது போன்ற பல்வேறு காரணிகளை கொண்டு மாறுபடும். அமெரிக்க ஹார்ட் அசோசியன் அறிக்கையின்படி சராசரியாக பெண்களுக்கு ஒரு நாளைக்கு 25-28 கிராம் அளவிலான நார்ச்சத்தும், ஆண்களுக்கு 38 கிராம் அளவிலான நார்ச்சத்தும் தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக ஆண் பெண் இருவருமே மேலே குறிப்பிட்டுள்ள அளவில் பாதியளவு நார்ச்சத்தை மட்டுமே உட்கொள்கின்றனர்.

நார்ச்சத்து மிகுந்த உணவு பொருட்கள்:

  • முழு தானியங்கள்: முழு தானிய வகைகளான பிரவுன் ரைஸ், கோதுமை ரொட்டி, ஓட்ஸ் ஆகியவற்றில் அதிகளவிலான ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளன.

  • பழங்கள் மற்றும் காய்கறிகள் : தோலோடு கூடிய பழ வகைகள், காய்கறிகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் அதிகளவு, ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன.

  • பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்: பீன்ஸ், கொண்டை கடலை, மற்றும் பட்டாணி ஆகியவற்றில் அதிக அளவிலான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை சூப், சாலட் அல்லது சைட் டிஷ் ஆகவும் உட்கொள்ளலாம். இதனால் அளப்பரிய நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். இதை தவிர கொட்டை மற்றும் விதை வகைகளை சேர்ந்த பாதாம் பருப்பு, சியா விதை, பூசணி விதை ஆகியவை அதிகளவு நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளன. மேலும் இவற்றில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளன.


    அதிகளவு நார்ச்சத்தை எடுத்து கொண்டால் என்னாகும்?

    நார்ச்சத்து உடலுக்கு தேவையானதாக இருந்தாலும் அதுவும் அளவோடு தான் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக நார்ச்சத்து நம் உடலில் சேரும் போது இரைப்பையில் அசவுகரியத்தை உண்டாக்கும். மேலும் வயிறு வீக்கம், வயிற்று போக்கு மற்றும் வாயு தொல்லை போன்ற பல உபாதைகள் ஏற்பட வழிவகை செய்யும்.

    அதுமட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான கால்சியம், மக்னீசியம், இரும்பு சத்து, ஜிங்க் ஆகியவை செரிமானத்தின் போது உறிஞ்சபடுவதையும் தடுக்கிறது. மேலும் ஒருவரின் உடலில் நார்ச்சத்து அதிகமாக இருந்தால், அது உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சிவிடும். இதன் காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மலச்சிக்கல் போன்ற பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது.

    எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கையில் நார்ச்சத்தானது உடலுக்கு தேவையான அளவில் இருக்கும் போது உடல் எடையை கட்டுக்குள் வைத்தல், ஆரோக்கியமான செரிமான மண்டலம் போன்ற பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. தினசரி உணவில் சீரான அளவில் நார்ச்சத்து இருக்குமாறு பார்த்துக் கொண்டால் அதனால் நமக்கு பல்வேறு வித நன்மைகள் உண்டாகும் என்பதில் ஐயமில்லை.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Airpods-களை பயன்படுத்துவது மூளை புற்றுநோயை உண்டாக்குமா..? அதிர்ச்சி தகவல்..!

 வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ்களாக அறியப்படும் AirPods-கள் தனியாக இருக்கும் போதும், பயணங்களின் போதும் விரும்பும் மியூசிக் மற்றும் பாடல்களை கேட்டு ரசிக்க உறுதுணையாக இருக்கின்றன. ஆனால் அவ்வப்போது சோஷியல் மீடியாக்கள் மற்றும் நலம் விரும்பிகள் AirPods-ஆல் வெளியிடப்படும் மின்காந்த கதிர்வீச்சின் (electromagnetic radiation) ஆபத்துகள் பற்றி யூஸர்களை எச்சரிப்பதை பார்க்க முடிகிறது.

இதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன் கேன்சரை உண்டாக்கும் அல்லது அறிவாற்றலில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சில சோஷியல் மீடியா போஸ்ட்கள் எச்சரிப்பதை பாரக்க முடிகிறது. ஆனால் இந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன் டிவைஸ்களை பயன்படுத்துவது மூளை கட்டிகள் அல்லது கேன்சரை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கக்கூடிய உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

News18

அதே போல இது போன்ற டிவைஸ்கள் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள், இனப்பெருக்க ஆரோக்கியம் சார்ந்த கோளாறுகள், நினைவாற்றல் பிரச்சனைகள் ஆகியவை எலக்ட்ரோமேக்னட்டிக் ஃபீல்ட்ஸ்களுடன் தொடர்புடையதாக இருக்கும் சில சாத்தியமான தாக்கங்களாக இருக்கின்றன.

கேன்சர் ஏற்படுவதற்கான அபாயத்தை airpods அதிகரிக்கும் என்பதற்கு ஏதேனும் நிரூபிக்கப்பட்ட ஆதாரம் உண்டா?

கேன்சர் அபாயத்தில் airpods-கள் ஏற்படுத்தும் விளைவுக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு மற்றும் கேன்சருக்கான International Agency for Research on Cancer உள்ளிட்டவை செல்போன்கள் மற்றும் வயர்லெஸ் டிவைஸ்களில் இருந்து வெளிவரும் எலெக்ட்ரோமேக்னட்டிக் ஃபீல்ட்ஸை ’ கேன்சரை உண்டாக்க கூடியது’ என குறிப்பிட்டாலும், இப்படி சொல்வதற்கான நேரடி தொடர்பு எதுவும் நிரூபிக்கப்படவில்லை.


HCG Cancer Centre-ஐ சேர்ந்த ஸ்கல் பேஸ் சர்ஜரி நிபுணர் டாக்டர் கவுரவ் மெடிகேரி பேசுகையில், AirPods மற்றும் பிரெயின் ட்யூமர்ஸ் இடையேயான தொடர்பை உறுதிப்படுத்த தற்போது எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. எனவே யூஸர்கள் தங்கள் ஏர்போட்ஸ்களை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றாலும் வயர்லெஸ் டிவைஸ்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான முக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வுகள் என்ன சொல்கின்றன.?

பொதுவாக AirPods வெளியிடும் ரேடியேஷனின் அளவுகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவும், FCC மற்றும் ICNIRP போன்ற ஒழுங்குமுறை ஏஜென்சிகள் வகுத்துள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறவில்லை என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. ப்ளூடூத் இயர்போன்கள். மொபைல்களை காட்டிலும் குறைவான அளவில் கதிரியக்க அதிர்வெண் அலைகளை (radiofrequency waves) வெளியிடுவதாக அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி கூறுகிறது.

அதே போல வயர்லெஸ் ஃபோன் உபயோகமானது மூளை புற்றுநோய் அல்லது மற்ற தலை கட்டிகளின் அபாயத்துடன் தொடர்புடையதா என்பதைப் புரிந்துகொள்ள நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, வயர்லெஸ் ஃபோன் பயன்பாடு மற்றும் பெரியவர்களுக்கு தலையில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை ஆதரிக்கவில்லை. நீண்ட கால பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகளை முடிவு செய்ய போதுமான தரவு இல்லை என அண்ட் ஆய்வு கூறியுள்ளது.

பக்கவிளைவுகள்:

பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணேஷ் தொடர்ந்து நீண்ட நேரம் airpods-களை பயன்படுத்துவதால் ஏற்படும் சில பக்கவிளைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.


வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ்களாக அறியப்படும் AirPods-கள் தனியாக இருக்கும் போதும், பயணங்களின் போதும் விரும்பும் மியூசிக் மற்றும் பாடல்களை கேட்டு ரசிக்க உறுதுணையாக இருக்கின்றன. ஆனால் அவ்வப்போது சோஷியல் மீடியாக்கள் மற்றும் நலம் விரும்பிகள் AirPods-ஆல் வெளியிடப்படும் மின்காந்த கதிர்வீச்சின் (electromagnetic radiation) ஆபத்துகள் பற்றி யூஸர்களை எச்சரிப்பதை பார்க்க முடிகிறது.

இதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன் கேன்சரை உண்டாக்கும் அல்லது அறிவாற்றலில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சில சோஷியல் மீடியா போஸ்ட்கள் எச்சரிப்பதை பாரக்க முடிகிறது. ஆனால் இந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன் டிவைஸ்களை பயன்படுத்துவது மூளை கட்டிகள் அல்லது கேன்சரை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கக்கூடிய உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

விளம்பரம்

News18

அதே போல இது போன்ற டிவைஸ்கள் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள், இனப்பெருக்க ஆரோக்கியம் சார்ந்த கோளாறுகள், நினைவாற்றல் பிரச்சனைகள் ஆகியவை எலக்ட்ரோமேக்னட்டிக் ஃபீல்ட்ஸ்களுடன் தொடர்புடையதாக இருக்கும் சில சாத்தியமான தாக்கங்களாக இருக்கின்றன.

கேன்சர் ஏற்படுவதற்கான அபாயத்தை airpods அதிகரிக்கும் என்பதற்கு ஏதேனும் நிரூபிக்கப்பட்ட ஆதாரம் உண்டா?

கேன்சர் அபாயத்தில் airpods-கள் ஏற்படுத்தும் விளைவுக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு மற்றும் கேன்சருக்கான International Agency for Research on Cancer உள்ளிட்டவை செல்போன்கள் மற்றும் வயர்லெஸ் டிவைஸ்களில் இருந்து வெளிவரும் எலெக்ட்ரோமேக்னட்டிக் ஃபீல்ட்ஸை ’ கேன்சரை உண்டாக்க கூடியது’ என குறிப்பிட்டாலும், இப்படி சொல்வதற்கான நேரடி தொடர்பு எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

விளம்பரம்

HCG Cancer Centre-ஐ சேர்ந்த ஸ்கல் பேஸ் சர்ஜரி நிபுணர் டாக்டர் கவுரவ் மெடிகேரி பேசுகையில், AirPods மற்றும் பிரெயின் ட்யூமர்ஸ் இடையேயான தொடர்பை உறுதிப்படுத்த தற்போது எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. எனவே யூஸர்கள் தங்கள் ஏர்போட்ஸ்களை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றாலும் வயர்லெஸ் டிவைஸ்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான முக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வுகள் என்ன சொல்கின்றன.?

பொதுவாக AirPods வெளியிடும் ரேடியேஷனின் அளவுகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவும், FCC மற்றும் ICNIRP போன்ற ஒழுங்குமுறை ஏஜென்சிகள் வகுத்துள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறவில்லை என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. ப்ளூடூத் இயர்போன்கள். மொபைல்களை காட்டிலும் குறைவான அளவில் கதிரியக்க அதிர்வெண் அலைகளை (radiofrequency waves) வெளியிடுவதாக அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி கூறுகிறது.

விளம்பரம்

அதே போல வயர்லெஸ் ஃபோன் உபயோகமானது மூளை புற்றுநோய் அல்லது மற்ற தலை கட்டிகளின் அபாயத்துடன் தொடர்புடையதா என்பதைப் புரிந்துகொள்ள நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, வயர்லெஸ் ஃபோன் பயன்பாடு மற்றும் பெரியவர்களுக்கு தலையில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை ஆதரிக்கவில்லை. நீண்ட கால பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகளை முடிவு செய்ய போதுமான தரவு இல்லை என அண்ட் ஆய்வு கூறியுள்ளது.

மூளைக் கட்டியின் ஆரம்பகால 9 அறிகுறிகள்.?
மூளைக் கட்டியின் ஆரம்பகால 9 அறிகுறிகள்.?

பக்கவிளைவுகள்:

பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணேஷ் தொடர்ந்து நீண்ட நேரம் airpods-களை பயன்படுத்துவதால் ஏற்படும் சில பக்கவிளைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.

விளம்பரம்
  • 85 டெசிபலுக்கும் அதிகமான ஒலிகளை நீண்ட நேரம் காதுக்கு அருகில் வைத்து கேட்பது உள்காதில் இருக்கும் முடி செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும், இது சத்தத்தால் ஏற்படும் காது கேளாமைக்கு வழிவகுக்கும்.

  • காதில் பயன்படுத்தும் டிவைஸ்களை சரியாக சுத்தம் செய்யாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது காது தொற்று மற்றும் எரிச்சல் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

  • இந்த டிவைஸை பயன்படுத்துவது காதில் மெழுகு குவிய வழிவகுக்க கூடும். இது காது கேளாமை, காது எரிச்சல், tinnitus மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

  • காதுகளுக்கு மிக அருகில் இருக்கும் டிவைஸ்களை பயன்படுத்தி நீண்ட நேரம் இசையை கேட்பது ஹெட்ஃபோன் பயன்படுத்துபவர்களின் அறிவாற்றல் செயல்பாட்டை குறைப்பதாக ஆய்வு கூறுகிறது.

மூளை புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

மூளையில் அசாதாரண செல்கள் வளர்ந்து பெருகும் போது மூளை கேன்சர் ஏற்படுகிறது. இதற்கான சரியான காரணங்கள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் ஆரோக்கியமான மூளை உயிரணுக்களில் உள்ள மரபணு மாற்றங்கள் இதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது. வயது ஏறுவது, ஏற்கனவே குடும்பத்தில் ஒருவருக்கு மூளை புற்றுநோய் இருந்த வரலாறு நீண்டகால புகைப்பழக்கம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள், பிளாஸ்டிக், ரப்பர், பெட்ரோலியம் மற்றும் சில துணிகள் போன்ற புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களுடன் நெருக்கமாக வேலை செய்தல் மற்றும் Epstein-Barr வைரஸ் தொற்று உள்ளிட்டவை infectious mononucleosis-ஐ ஏற்படுத்தும் என்கிறார் டாக்டர் கணேஷ்.

இது குறித்து பேசிய டாக்டர் கௌரவ் “ மூளை கட்டி உருவாகும் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.
நியூரோஃபைப்ரோமாடோசிஸ் டைப் 1 மற்றும் லி-ஃப்ரூமேனி சிண்ட்ரோம் போன்ற சில அரிய மரபணு நிலைமைகள் மூளைக் கட்டிகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன” என்கிறார். நீங்கள் தினசரி ஹெட்ஃபோன் பயன்படுத்துபவர் என்றால் தினமும் அதிகபட்சம் 60 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரம் பயன்படுத்தும்படி WHO பரிந்துரைக்கிறது. அதே போல ஒலியளவை 70dB-க்கு கீழே வைக்க முயற்சிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

மூளை புற்றுநோயை தடுப்பதற்கான வழிகள்:

  • கேன்சரை ஏற்படுத்தும் அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ள ரசாயனங்கள், கன உலோகங்கள் மற்றும் கதிர்வீச்சு ஆகியவற்றுக்கு வெளிப்படுவதை கட்டுப்படுத்துங்கள்.

  • பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் லீன் ப்ரோட்டீன்ஸ் நிறைந்த சீரான டயட்டை பின்பற்றுங்கள்.

  • தினசரி மிதமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை உறுதி செய்யுங்கள்.

  • அதிக மனஅழுத்தம் கேன்சர் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் தியானம் அல்லது யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீர்.. உங்களுக்கு இந்த பிரச்சனைகளே இனி இருக்காது..!

 நமது அனைவரது வீடுகளிலும் இருக்கும் ஒரு முக்கிய உணவு பொருள் வெந்தயம். வெந்தயம் நமது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. மேலும் வெந்தயத்தில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வெந்தயம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், எடை குறைப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை அதனை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. மேலும் வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரிலும் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. வெந்தய நீர் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது, இது மூட்டு அசௌகரியத்தை குறைக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

News18

இதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும், வெந்தய நீர் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது. நீங்கள் தினமும் ஒரு கிளாஸ் வெந்தய விதை தண்ணீரை குடித்து வந்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். அதுகுறித்து இங்கு விரிவாக காண்போம்.,

நெஞ்செரிச்சலை குணமாக்க : 

வெந்தய தண்ணீரை தினமும் அருந்தி வந்தால் நெஞ்செரிச்சல் குணமாகும். வெந்தய விதைகள் குடல் உட்பகுதியில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, நெஞ்செரிச்சலின் தீவிரத்தை குறைத்து, இயற்கையான ஆன்டாக்சிட் ஆக செயல்படுகிறது. குறிப்பாக வெந்தய தண்ணீர் இரைப்பை குடல் அழற்சியைப் போக்க உதவுகின்றன.

பொலிவான சருமம் :

வெந்தயத்தில் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன, அவை சருமத்தை மென்மையாக்குகின்றன மற்றும் ஈரப்பதமாக்குகின்றன. வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம், கரோட்டின் மற்றும் வைட்டமின் சி தோல் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது, பெட்ரோலியம் சார்ந்த லோஷன்கள் பயன்படுத்துபவர்கள் அதற்கு பதிலாக வெந்தய தண்ணீரை பயன்படுத்தலாம்.

எடை இழப்பு : 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக வெந்தய தண்ணீரை அருந்தலாம். வெந்தய தண்ணீரில் உள்ள அதிக நார்ச்சத்து இயற்கையாகவே பசியை அடக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கிறது : 

தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெந்தய விதை தண்ணீரைக் குடிப்பதால், இயற்கையாகவே இரத்த டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும். மேலும் விந்தணு எண்ணிக்கையையும் அதிகரித்து, டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உதவுகிறது. எனவே குழந்தையின்மை பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இந்த தண்ணீரை குடித்து வரலாம்.

நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது : வெந்தய விதை தண்ணீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறிகளைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் தாராளமாக வெந்தய தண்ணீரை அருந்தலாம்.

முதல் நாள் இரவு ஒரு கைப்பிடி அளவு வெந்தயத்தை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரை மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்லது.

குறிப்பு : வெந்தயம் குளிர்ச்சி என்பதால் அளவாக அருந்தவும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சோஷியல் மீடியாக்கள் குழந்தைகளின் செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா..? இதை பெற்றோர்கள் கட்டுப்படுத்தும் வழிகள்.!

 இன்றைய நவீன உலகில் இளம் வயதினர் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லா வயதினரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அது முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கோவிட்-19 இன் தொடக்கத்தில் இருந்து, மக்களிடையே இன்டர்நெட் அக்சஸ் பயன்பாடு வேகமாக அதிகரித்தது, ஏனெனில் அந்த காலகட்டத்தில் நாம் ஒரு நபரிடம் தொடர்பு கொள்ளவோ அல்லது சமூக ரீதியாக தொடர்பு கொள்ளவோ ஒரே வழி இதுதான். அதேசமயம் இதனை பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது. அத்துடன் சமூக ஊடகங்களிலேயே அவர்கள் நேரத்தை வீணடிக்கின்றனர்.
சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக மாணவர்கள் பல விஷயங்களைக் கண்டறியவும், அவர்களின் அறிவை மேம்படுத்தவும், தொலைதூரத்திலிருக்கும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவும் மிகப்பெரிய தளங்களாகும். நாம் அனைவரும் அறிந்தபடி, சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன, ஏனெனில் இது மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க உதவுகிறது. இப்போதெல்லாம் குழந்தைகள் சமூக தளங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சந்திக்கும் எதிர்மறையான விளைவுகளானது அவர்களின் படிப்பை மோசமாக பாதிக்கிறது.


News18

சைபர்புல்லிங் என்பது உலகளவில் உள்ள முக்கிய கவலைகளில் ஒன்றாகும், இது சமூக ஊடகங்களில் இணையத்தில் மற்றொரு நபரைக் கையாளவும், அவமானப்படுத்தவும் மற்றும் தீங்கு விளைவிக்கவும் நிறைய நடக்கிறது. மாணவர்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுவதற்கும், உணர்ச்சிவசப்படுவதற்கும் இதுவே காரணம். மேலும் குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும். சமூக ஊடகங்களில் அதிகப்படியான ஈடுபாடு மாணவர்களை அவர்களின் கல்வியிலிருந்து திசை திருப்புகிறது.

சாதாரணமாக 13 வயது நிறைவடைந்தவுடன் மட்டுமே சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். ஆனால் போலி விவரங்களை வைத்து இன்று சமூக வலைத்தளங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் 13 வயது நிறைவடைந்தாலும், பெரும்பாலான வெப்சைட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சமூக ஊடக செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் ஆப்ஸின் நன்மை தீமை குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும்.

13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது அவசியமாகும்.

பாதுகாப்பான இன்டர்நெட் அக்சஸை பெற்றோர்கள் பயன்படுத்துவதும், அதன் நன்மைகளை குழந்தைகளுக்கு கற்பிப்பதும் அவசியம் ஆகும். ஏனெனில், குழந்தைகள் அதன் நன்மைகளை புரிந்துகொண்டு அவற்றை பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் தூக்க முறை பாதிக்கப்படுகிறது.சமூக ஊடகங்களின் முக்கிய எதிர்மறை விளைவுகளில் ஒன்று, மாணவர்களுக்குத் தேவையான தூக்கத்தின் அளவு குறைவதாகும். தூக்கமின்மை மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. குறிப்பாக மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க ஆரோக்கியமான தூக்கம் கட்டாயமாகும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நீங்க தினமும் தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா..? உங்க பிரச்சனைக்கு காரணமே இதுதான்.. உடனே செக் பண்ணுங்க.!

 

தூக்கமின்மை அல்லது அமைதியற்ற இரவுகளுடன் போராடுவது விரக்தியையும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும். தூக்கமின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒன்று மெக்னீசியம் குறைபாடு ஆகும். ஒரு அறிக்கையின்படி, பெரியவர்களில் 10 இல் 9 பேருக்கு அவர்களின் உடலில் போதுமான மெக்னீசியம் இல்லை மற்றும் அவர்களில் பெரும்பாலோர் மெக்னீசியத்தை பற்றி அறிந்திருக்கமாட்டார்.

மெக்னீசியம் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான அவசியமான ஒரு முக்கியமான மினெரல் ஆகும். இது வீக்கத்தை உருவாக்கும் காரணங்களை எதிர்த்து போராடுகிறது, இரத்த அழுத்ததை குறைக்கிறது, மேலும் தூக்கத்தின் தரத்தை உயர்த்துகிறது.

தூக்கப்பிரச்னை, தசை இறுக்கம், குறைவான ஆற்றல் ஆகியவை மக்னீசியம் சத்து குறைபாட்டின் அறிகுறிகள் என்றும், இந்த அறிகுறி உள்ளவர்கள் உணவைத் தாண்டி கூடுதல் மெக்னீசியம் சேர்க்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பலர் பரிந்துரைக்கின்றனர். பெரும்பாலான மக்கள் உடல் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு மெக்னீசியம் எடுத்துக் கொள்வதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் பல சத்துகளில் மெக்னீசியமும் ஒன்று.

News18

தூக்க ஹார்மோனை சீராக்கும் மெக்னீசியம் : 


மெக்னீசியம் உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்துவதற்கான பொறுப்புடைய நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை செயல்படுத்துகிறது. மெக்னீசியம் நீங்கள் தூங்குவதற்கு மட்டுமல்ல, ஆழ்ந்த மற்றும் ஆரோக்கியமான தூக்கத்தையும் மேம்படுத்த உதவுகிறது. மெக்னீசியம் நரம்பு மண்டலத்தின் மீது செயல்பட்டு, ஆழமான, அமைதியான தூக்கத்திற்கு பங்களிக்கிறது. குறிப்பாக, மெக்னீசியத்தின் போதுமான அளவு மெலடோனின் இயற்கையான உற்பத்தி மற்றும் வெளியீட்டை ஊக்குவிக்கிறது, இதன் காரணமாக தூக்கம்-விழிப்பு சுழற்சியை சீராக்க உதவுகிறது மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

மெக்னீசியம் குறைபாடு உங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும் :

குறைந்த மெக்னீசியம் அளவைக் கொண்ட நபர்கள் இரவில் அடிக்கடி விழித்தெழுதல், சீர்குலைந்த தூக்கம் மற்றும் மோசமான தூக்கத்தின் தரம் ஆகியவற்றை அனுபவிக்கலாம். மெக்னீசியம் குறைபாட்டை நிவர்த்தி செய்வது, இந்த அறிகுறிகளைக் குறைத்து தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

கடுமையான மெக்னீசியம் குறைபாடு அரிதானது என்றாலும், பலர் தங்கள் உணவில் போதுமான மெக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. மெக்னீசியம் குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளில் தசைப்பிடிப்பு, சோர்வு, எரிச்சல் மற்றும் தூங்குவதில் சிரமம் ஆகியவை அடங்கும்.
உணவுகளின் மூலம் மெக்னீசியம் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம். மெக்னீசியம் நிறைந்த உணவுகளான கீரை, பச்சை காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகள் (பாதாம், பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்றவை), பருப்பு வகைகள் (பீன்ஸ் மற்றும் பருப்பு போன்றவை), முழு தானியங்கள் (பழுப்பு அரிசி மற்றும் குயினோவா) மற்றும் டார்க் சாக்லேட் ஆகியவை அடங்கும். இந்த உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது இயற்கையாகவே உங்கள் மெக்னீசியம் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் காலப்போக்கில் சிறந்த தூக்கத்தை ஆதரிக்கிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip