Search

காலையில் காபி குடித்த பின்னர் பல் துலக்குபவரா நீங்கள்..? இந்த எச்சரிக்கை உங்களுக்குதான்!

 நம்மில் பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் காபி குடித்து விட்டு பின்னர் பல் துலக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறோம். இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் . இதுகுறித்து விளக்கிய துவாரகாவில் உள்ள Align Dental Clinic இன் மூத்த ஆலோசகர் ஆர்த்தடான்டிஸ்ட், டாக்டர் பிரேர்னா பஹுஜா “காபி என்பது பலருக்கும் விருப்பமான பானமாக இருந்து வருகிறது. ஆனால் இது பல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என தெரிவித்துள்ளார்.

நல்ல வாய் சுகாதாரத்தை பராமரிப்பதில் பல் துலக்குவது இன்றியமையாத பகுதியாகும், ஆனால் காபி குடித்த பின்னர் உடனடியாக பல் துலக்குவது சரியானது அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா? காபி குடித்த பிறகு பல் துலக்குவதற்கு 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

News18

“காபி என்பது பலருக்கு விருப்பமான தினசரி பானம், ஆனால் இது பல் ஆரோக்கியத்திற்கு சில குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. பற்களில் கறைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி நிரந்தர பற்சிப்பி சேதம் மற்றும் பல் சிதைவுக்கு வழிவகுக்கும், குறிப்பாக சர்க்கரையுடன் உட்கொள்ளும்போது பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

காபியில் உள்ள அமிலத்தன்மை பற்சிப்பியை தற்காலிகமாக வலுவிழக்கச் செய்கிறது, மேலும் அது சேதமடைய வாய்ப்புள்ளது என்று அவர் கூறுகிறார். பற்சிப்பி மென்மையாக இருப்பதால் காபி குடித்த உடனேயே பல் துலக்குவது சிராய்ப்பை ஏற்படுத்துகிறது. இது பற்சிப்பி அரிப்பு, கூச்சம், மற்றும் சொத்தை பற்களுக்கு வழிவகுக்கும். கூடுதலாக சர்க்கரை ஈறுகளில் புண் அல்லது இரத்தப்போக்கு மற்றும் பீரியண்டால்ட் நோய்க்கு பங்களிக்கும். பீரியண்டால்ட் நோய் வந்தால் பற்கள் தளர்வாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பற்சிப்பி சேதத்தை குறைக்க, உங்கள் பல் துலக்குவதற்கு முன் காபி குடித்த பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருப்பது நல்லது என டாக்டர் பஹுஜா கூறுகிறார். இந்த காத்திருப்பு காலம் உங்கள் உமிழ்நீரை அமிலத்தை நடுநிலையாக்க அனுமதிக்கிறது. இந்த நேரத்தில், உங்கள் வாயை தண்ணீரில் கழுவுவது கறைகள் சேராமல் அகற்றவும், அமிலத்தன்மையைக் குறைக்கவும் உதவும், இது உங்கள் பற்சிப்பிக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இதனால் உங்கள் பற்சிற்பி வலிமையாகிறது.
பற்பசையில் கவனம் தேவை…..

காபி கறைகளை அகற்ற நினைத்தால் சரியான பற்பசையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். உங்கள் பற்களை திறம்பட சுத்தம் செய்யும் போது பற்சிப்பியைப் பாதுகாக்க குறைந்த RDA மதிப்பு (30-80 வரை) கொண்ட டூத் பேஸ்டை தேர்வுசெய்யுமாறு டாக்டர் பஹுஜா பரிந்துரைக்கிறார்.

மேலும் பேக்கிங் சோடா போன்ற பொருட்கள் மேற்பரப்பு கறைகளை மெதுவாக அகற்றும். பற்சிப்பியை வலுப்படுத்தவும், சிதைவைத் தடுக்கவும், உங்கள் பற்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு ஃவுளூரைடு அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

வாய்வழி சுகாதார நடைமுறைகள் :

டாக்டர் பஹுஜாவின் கூற்றுப்படி, காபி குடித்தாலும், பற்கள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிசெய்ய, இந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றலாம்:

  • தண்ணீர் குடிப்பது உங்களை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது மற்றும் காபி சாப்பிட்ட பிறகு உருவாகும் கறைகளை அகற்ற உதவும். மேலும் காபி குடித்த பிறகு உங்கள் வாயை தண்ணீரில் கழுவுவது எச்சங்களை கழுவவும் அமிலங்களை நடுநிலையாக்கவும் உதவும்.

  • சர்க்கரை இல்லாத பற்பசையை பயன்படுத்துங்கள், இது உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டி, உங்கள் வாயை சுத்தப்படுத்துகிறது மற்றும் உங்கள் பற்சிப்பியைப் பாதுகாக்கிறது. மேலும் உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்கிறது.

  • ஆப்பிள், கேரட், செலரி போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரித்து, இயற்கையாகவே உங்கள் பற்களை சுத்தப்படுத்துகிறது.

  • ஆன்டிசெப்டிக் அல்லது ஃவுளூரைடு மவுத்வாஷைப் பயன்படுத்துவது பாக்டீரியாவைக் குறைக்கும் மற்றும் பற்சிப்பியை வலுப்படுத்தும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment