Search

சென்னை புழல் சிறையில் வேலை; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 
சென்னை மாவட்டம் புழல், மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், லாரி ஓட்டுனர் மற்றும் நெசவு போதகர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


சமையலர் (Cook)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சமையல் பணிகளில் 2 வருட அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,900 – 58,500

லாரி ஓட்டுனர் (Lorry Driver)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கனரக வாகன
 ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 19,500 – 71,900

நெசவு போதகர் (Weaving Instructor)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 19,500 – 71,900

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத்
தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://chennai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில்
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து,
பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு
அனுப்ப வேண்டும்.

முகவரி: சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை -1, புழல்,
சென்னை - 66

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://chennai.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

0 Comments:

Post a Comment