Search

உலர் பழங்களை பால் அல்லது தண்ணீர் எதில் ஊறவைக்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

 
உலர் பழங்களை உட்கொள்வதன் மூலம் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எளிதாகப் பெற முடியும். பொதுவாக பழங்களை அந்தெந்த சீசன்களில் நாம் ப்ரெஷாக சாப்பிட முடியும். இதனை அனைத்து நாட்களிலும் சாப்பிடும் வகையில் உலர வைக்கப்படுகிறது. உதாரணமாக திராட்சை, அத்திப்பழம், கிவி உள்ளிட்ட பழங்களை நாம் பார்த்திருப்போம். இந்த உலர் பழங்களிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைத்துள்ளது. தினமும் ஒரு கைப்பிடி உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம், வைட்டமின் ஈ, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், ஜிங்க் மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்.


முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு முன் சில மணி நேரம் ஊறவைப்பது நல்லது. ஆயுர்வேதத்தின் படி இந்த முறை ஆரோக்கியமானது என்று கருதப்படுகிறது மற்றும் நவீன ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி ஊறவைத்து சாப்பிடுவது சரியானதாக கருதப்படுகிறது. உண்மையில் உலர் பழங்களை ஊறவைப்பது அவற்றில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்களை நாம் எளிதாக பெற முடியும்.

News18

உலர் பழங்களை எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும் மற்றும் உலர்ந்த பழங்களை ஊறவைக்க தண்ணீர் அல்லது பால் இவற்றில் இதனை பயன்படுத்தப்பட வேண்டும்? என்ற கேள்வி பொதுவாக அனைவருக்கும் இருக்கும்.

இதற்கான பதில், உலர்ந்த பழங்களை தண்ணீர் மற்றும் பால் இரண்டிலும் ஊறவைக்கலாம் என்பது தான். உலர் பழங்களை பால் மற்றும் தண்ணீர் இரண்டிலும் ஊறவைப்பதால் வெவ்வேறு நன்மைகள் உள்ளன. அதுகுறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

உலர்ந்த பழங்களை தண்ணீரில் ஊறவைத்தால் கிடைக்கும் நன்மைகள்….

உலர் பழங்களை தண்ணீரில் ஊறவைத்த பிறகு அதில் உள்ள பைடிக் அமிலத்தின் அளவு குறையத் தொடங்குகிறது. இந்த அமிலம் இரைப்பையை அடைந்து செரிமான அமைப்பை சேதப்படுத்தி அஜீரண பிரச்சனையை அதிகரிக்கும் எனவே, தண்ணீரில் ஊறவைத்த உலர்ந்த பழங்களை உட்கொள்வதால் இந்த பிரச்சனை வராமல் தவிர்க்க முடியும்.

உலர் பழங்களை தண்ணீரில் ஊற வைக்கும் போது முதல் நாள் இரவு தூங்க செல்வதற்கு முன் ஊறவைத்து விட்டு, மறுநாள் காலை அதனை எடுத்து சாப்பிடலாம். ஆனால், உலர் பழங்களை பாலில் ஊறவைத்தால் அவற்றை நீண்ட நேரம் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதாவது உலர்ந்த பழங்களை பாலில் சுமார் 1-2 மணி நேரம் ஊறவைத்து பிறகு உடனடியாக உட்கொள்ளலாம். பாலில் ஊறவைத்த உலர் பழங்களை சாப்பிடுவதால் புரதம், கால்சியம் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment