டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வர்கள் 15-க்குள் கட்டணம் செலுத்த வேண்டும்
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குரூப்-1 மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்கள், அனைத்து அசல் சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து செப்.16-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.200-ஐ செப்.15-ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் அக்கட்டணத்தை செலுத்திய பின்னரே தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால், அத்தகைய விண்ணப்பதாரருக்கு மெயின் தேர்வெழுத விருப்பமில்லை எனக் கருதி அவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment