Search

DEE - முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Appல் அக்டோபர் 09க்குள் உள்ளீடு செய்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

IMG_20241005_160404

DEE - முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Appல் உள்ளீடு செய்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.


2024-25ஆம் கல்வி ஆண்டு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED செயலியில் உள்ளீடு செய்தல் சார்ந்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது .

1. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவத் தொகுத்தறி தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை TNSED செயலியில் ஆசிரியர்கள் உள்ளீடு செய்திடல் வேண்டும் .

 2. விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை ( 60 மதிப்பெண்கள் ) கேள்விவாரியாக அக்டோபர் 09 ஆம் தேதிக்குள் உள்ளீடு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் இணைப்பில் கண்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளது. 

3. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது சார்ந்த விவரத்தினை தெரிவிக்குமாறும் ஆசிரியர்கள் இப்பொருள் சார்ந்து தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேற்படி மதிப்பெண்களை உள்ளீடு செய்தல் சார்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறார்கள் .

DEE Circular - SA Mark Entry - Term 1 - 2024-25 Proceedings 👇

Download here 


🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Literacy Club & Quiz Club - DSE Proceedings!!!

 

IMG_20241005_224605

In the reference letter cited above , it has been stated that the Club activities at the school level for classes 6 to 9 shall be carried out as per the academic calendar for the year 2024-25 in the periods allotted for the club activities up to the month of April 2025 .

DSE - Literacy Club & Quiz Club - Download here



🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு: 7 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல்

 

1322301

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் முன்பு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தது.


இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கும் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி அந்த ஆண்டு 1,325 சிறப்பு ஆசிரியர்பணியிடங்களுக்கு டிஆர்பி போட்டித் தேர்வை நடத்தியது. முதல்கட்டமாக 2019-ல் ஓவியம்,தையல், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியர்களும், அதன்பிறகு 2020-ல் உடற்கல்வி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.


தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்அடிப்படையில் சிறப்பு ஆசிரியர் பதவிக்கான பொது தேர்வு பட்டியலுடன் தமிழ்வழி ஒதுக்கீடு தற்காலிக தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது. ஆனால், தமிழ்வழி ஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளால் தேர்வுப் பட்டியல் பின்னர் ரத்து செய்யப்பட்டது.


இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நீண்ட காலமாக நடைபெற்று, பின்னர் அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்தன. ஆனாலும் தமிழ்வழி ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படவில்லை.


தமிழ்வழி ஒதுக்கீடு அல்லாத பொது பட்டியலில் தேர்வானவர்கள் அடுத்தடுத்து பணியில் சேர்ந்து, பலர் பதவி உயர்வும் பெற்றுவிட்டனர். இதற்கிடையே, பொது தேர்வு பட்டியலில்ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர் ஆகிய சிறப்பு ஒதுக்கீட்டு காலியிடங்கள் அந்தந்த இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அதற்கான தேர்வுப் பட்டியல் கடந்த 2021 அக்.12 அன்றுவெளியிடப்பட்டது.


3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அந்த தேர்வுப் பட்டியலை சம்பந்தப்பட்ட துறைக்கு(பள்ளிக் கல்வி, சமூக பாதுகாப்புத் துறை, மாநகராட்சி நிர்வாகம்)முழுமையாக அனுப்பவில்லை. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்களில் சிலர்நீதிமன்ற உத்தரவை பெற்று பணியில் சேர்ந்து வருகின்றனர்


இதனிடையே சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வுப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாததால் தேர்வர்கள் கடும் மனஉளைச்சலில் உள்ளனர்.


இதுகுறித்து தேர்வர்கள் கூறும்போது, "தமிழ்வழி ஒதுக்கீடு இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிடுவது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஒருவேளை இந்த ஒதுக்கீட்டில் தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த இடங்களை தமிழ்வழி அல்லாத பொதுப்பிரிவுக்கு மாற்றி குறிப்பிட்ட இடஒதுக்கீட்டு பிரிவினரைக் கொண்டே நிரப்ப முடியும். எனவே, தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வுப் பட்டியலை டிஆர்பி உடனே வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Earned Leave Deduction Clarifications

 ஈட்டிய விடுப்பு - ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்க வேண்டும் என பெறப்பட்ட புகார் கடிதம் தொடர்பாக....தெளிவுரை

 Earned Leave Deduction Clarifications - Download here





🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

உங்களுக்கு ப்ரீ டயாபடீஸ் இருக்கா..? ஆரம்பநிலையிலேயே அதை கட்டுப்படுத்தும் வழிகள்.!

 தற்போது நீரழிவு நோய் என்பது இந்தியாவில் அதிக அளவு மக்களை பாதித்து வரும் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபடீஸ் என்பது நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஒரு எச்சரிக்கை அறிகுறியாக அமைகிறது. ப்ரீ டயாபடீஸ் என்பது பெயர் குறிப்பிடுவதைப் போலவே டயாபடீஸ் போல அதிக அளவு சர்க்கரை இல்லாவிட்டாலும் வழக்கத்தை விட சற்று கூடுதலான ரத்த சர்க்கரை அளவுகளை கொண்டுள்ள ஒரு நிலையாகும். நமது உடல் இன்சுலினுக்கு எதிர்ப்பு திறனை வெளிப்படுத்த ஆரம்பிக்கும் நிலை ப்ரீ டயாபடீஸ் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு வேலை உங்களுக்கு ப்ரீ டயாபடீஸ் இருந்தால் அடுத்த ஒரு வருடத்தில் உங்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 10 சதவீதம் உள்ளது. மேலும் உங்களுடைய வாழ்நாளில் வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தோராயமாக 70% இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே இந்த ப்ரீ டயாபடீஸ் நிலையை ஒருவரால் கட்டுப்படுத்த முடியுமா? நிச்சயமாக முடியும். அதனை தெரிந்து கொள்வதற்கு முன்பு ப்ரீ டயாபடீஸ் நிலையை எப்படி அடையாளம் காண்பது என்பதை பார்க்கலாம்.


ப்ரீ டயாபடீஸ் நிலையை உணர்த்தும் அறிகுறிகள் ப்ரீ டயாபடீஸ் வெளிப்படுத்தும் பொதுவான அறிகுறிகளில் அதிக தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை அடங்கும். சர்க்கரை அளவுகள் அதிகரிப்பதால் நமது சிறுநீரகங்கள் தொடர்ந்து கடுமையாக பாடுபட்டு ரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸை உறிஞ்சுகிறது. இதனால் நீர்ச்சத்து இழப்பு உண்டாகி, அதிக தாகம் ஏற்படுகிறது.

அடுத்தபடியாக சோர்வு ப்ரீ டயாபடீஸ் நிலைக்கான மற்றொரு அறிகுறி. ஆற்றலுக்கு தேவையான குளுக்கோஸை உறிஞ்சுவதில் உடல் கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்கும் காரணத்தால் ஒருவர் எப்பொழுதும் சோர்வாகவும், சோம்பேறித்தனமாகவும் உணர்கிறார்.


மேலும் உடல் எடையில் திடீரென்று ஏற்படும் மாற்றங்கள் ப்ரீ டயாபடீஸ் நிலையின் அறிகுறிகள். இது தவிர சருமத்தில் குறிப்பாக கழுத்து அல்லது அக்குள் பகுதிகளில் கருமை நிறத் தட்டுகளும் ஃப்ரீ டயாபடீஸ் நிலைக்கான எச்சரிக்கை அறிகுறி.

ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிப்பதால் கண்களில் உள்ள லென்ஸ் பாதிக்கப்பட்டு ஒரு சிலர் மங்கலான பார்வையை அனுபவிக்கின்றனர்.

News18

ஃப்ரீ டயாபடீஸ் நிலையை கட்டுப்படுத்த உதவும் வைத்தியங்கள்

ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றினாலே உங்களுடைய ரத்த சர்க்கரை அளவுகளை குறைத்து, நீரழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை நீங்கள் குறைக்கலாம். அவ்வாறான சில வைத்தியங்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

ப்ரீ டயாபடீஸ் நிலையை கட்டுப்படுத்துவதற்கு உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சரிவிகித உணவு அவசியம். பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடவும். அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் கலோரி அதிகமாக உள்ள தின்பண்டங்களை தவிர்த்து விடுங்கள்.

ப்ரீ டயாபடீஸ் நிலையை கட்டுப்படுத்துவதற்கு நிச்சயமாக நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சி செய்வது நல்லது. உதாரணமாக நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது அல்லது நீச்சல் போன்றவற்றை நீங்கள் செய்யலாம்.அதிகப்படியான உடல் எடை காரணமாக இன்சுலின் உணர்திறன் ஏற்பட்டு, வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு போதுமான அளவு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அவ்வப்போது ரத்த சர்க்கரையை அளவுகளை கண்காணித்து அதில் ஏற்படக்கூடிய மாற்றங்களை பொறுத்து உங்கள் உணவுகளை மாற்றி அமைப்பது நல்லது.
நல்ல தரமான தூக்கம் பெறுவது குளுக்கோஸ் அளவை திறம்பட கட்டுப்படுத்துவதற்கு உதவும். எந்தவித தடங்கல்களும் இல்லாத 7 முதல் 9 மணி நேர தூக்கம் அவசியம். ஏனெனில் தரமற்ற தூக்கம் ஒரு சில ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைத்து அதனால் ப்ரீ டயாபடீஸ் நிலை மோசமாகலாம்.

நாள்பட்ட மன அழுத்தம் ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரித்து அதனால் இன்சுலின் உணர்திறன் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு தியானம், யோகா, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி அல்லது இயற்கையோடு நேரத்தை செலவிடுதல் போன்ற விஷயங்களை நீங்கள் செய்யலாம். இந்த குறிப்புகளை பின்பற்றி ப்ரீ டயாபடீஸ் நிலையை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் ஏற்படுவதை நீங்கள் நிச்சயமாக தவிர்க்கலாம்.

தமிழ்நாடு வருமான வரித் துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

 

dinamani%2Fimport%2F2022%2F2%2F16%2Foriginal%2Fincome_tax53

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அறிவிப்பு எண்.26(5)/Estt/Sports/2024


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:


பணி: Income Tax Inspectors – 11


தகுதி: ஏதாதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 5.10.2024 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800


பணி: Tax Assistants – 11


ஏதாதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு மணி நேரத்தில் 8 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200


பணி: Multi-Tasking Staff – 11


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 5.10.2024 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200


தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து தகுதியானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை: https://sports.tnincometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காந கடைசி நாள்: 5.10.2024


மேலும் விளையாட்டு பிரிவுகள் வாரியான காலியிடங்கள் மற்றும் தகுதிகள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

NHIS - பெற்றோர்களின் பெயர்களை சேர்த்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கும் திருமணமான அரசு ஊழியர்களின் விவரம் கோரி கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவு!!!

 

IMG_20241004_212025

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களது பெற்றோர்களின் பெயர்களை சேர்த்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கும் திருமணமான அரசு ஊழியர்களின் விவரம் கோரி கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவு!!!

NHIS - Parents Name Proceedings - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை வெளியீடு

 தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2018-ல் புதிதாக தொடங்கப்பட்ட 52 மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் வரை ஊதியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சோ.மதுமதி அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களுக்கும் இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


தமிழகத்தில் கடந்த 2018-ல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகிய பணியிடங்கள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் என்ற பெயரில் செயல்பட உத்தரவிடப்பட்டது.


ALSO READ:

»   முன்வினை பாவங்கள் தீர்க்கும் காஞ்சிபுரம் புண்ணிய கோட்டீஸ்வரர்


»    வேண்டுவன அளித்திடும் ‘ஓம் நமோ நாராயணாய’


தொடர்ந்து, அதே ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட 52 மாவட்டக் கல்வி அலுவலகங்கள் உரிய இடங்களில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அதேபோன்று, பழைய அலுவலகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பணியிடங்களும் புதிய அலுவலகத்துக்கு பணி நிரவல் மூலம் மாற்றம் செய்யப்பட்டன.


பணி நிரவல் மூலம் நிரப்பப்பட்ட நிரந்தர பணியிடங்கள் போக மீதமுள்ள 197 தற்காலிக பணியிடங்களுக்கு கடந்த 2021 ஆக.10 முதல் 2024 மே 31-ம் தேதி வரை தற்காலிக தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டு முடிவடைந்து விட்டது. இதையடுத்து கடந்த ஆக.31 வரை ஊதியம் வழங்க இரு முறை தற்காலிக நீட்டிப்பு வழங்கப்பட்டது.


இந்நிலையில், இந்த 197 பணியிடங்களுக்கு நிகழாண்டு செப்.1 முதல் அடுத்த ஆண்டு பிப்.28 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதிய கொடுப்பாணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர், அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


அதனை ஏற்று மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலகப் பணியிடங்களாக மாற்றம் செய்து, 52 அலுவலகங்களிலுள்ள 197 தற்காலிக பணியிடங்களுக்கு 1.9.2024 முதல் 31.11.2024 வரை மூன்று மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது.


மேற்கண்ட அலுவலர்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

வருமான வரி ரீபண்ட் வருகிறது புதிய விதிமுறை

 

Tamil_News_lrg_3748303

தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள், சுலபமாக 'ரீபண்ட்' பெற புதிய விதிமுறையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது


வருமான வரி கணக்கை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறியவர்கள், தாமதத்திற்கான சரியான காரணத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.


விபத்து, வெள்ளம், இயற்கை பேரழிவு உட்பட உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை ஏற்கப்படும். இவர்கள், அதிகமாக கட்டிய வரித்தொகையை திரும்ப பெறுவதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படும். இதற்கு தீர்வு காண எளிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வருமான வரி ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இவர்கள் பரிசீலிக்கும் 'ரீபண்ட்' தொகைக்கான வரம்பு 50 லட்சம் ரூபாயிலிருந்து, 1 கோடிரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு, 3 கோடி ரூபாய்க்கு அதிகமான 'ரீபண்ட்' தொகை பற்றி வருமான வரி வாரியம் பரிசீலித்தது. தற்போது அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கலாம்.


இதன்படி,


 வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட ஆண்டில் 1 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் 'ரீபண்ட்' விண்ணப்பங்களை ஏற்க அல்லது நிராகரிக்கும் அதிகாரம் வருமான வரி முதன்மை ஆணையர்கள்/வருமான வரி ஆணையர்களுக்கு வழங்கப்படுகிறது


 ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் 3 கோடி ரூபாய்க்கு குறைவாகவும் இருந்தால், விண்ணப்பங்களை ஏற்க அல்லது நிராகரிக்கும் அதிகாரம் வருமான வரி தலைமை ஆணையர்களுக்கு உண்டு


 மூன்று கோடி ரூபாய்க்கு அதிகமான 'ரீபண்ட்' தொகை மீது முடிவு எடுக்கும் அதிகாரம் முதன்மை தலைமை வருமான வரி ஆணையருக்கு வழங்கப்படுகிறது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

LOs Competency Based Test - SCERT Proceedings

 IMG_20241005_111406

6 முதல் 9ஆம் வகுப்பு வரை 4 கட்டங்களாக 07.10.2024 முதல் 31.01.2015 வரை கற்றல் விளைவுகள் / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு - Learning Outcomes (LOs) & Competency Based  Assessment Exam - நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள், Time Table & வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் முறை வெளியீடு - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 12-09-2024...

LOs Competency Based Test - SCERT Proceedings - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

இதய ஆரோக்கியத்திற்கு தீவிர பிரச்சனைகளை தரும் 3 மனித கண்டுபிடிப்புகள்..!

 டிரான்ஸ் ஃபேட்ஸ் , ஏர் பொல்யூஷன் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் போன்ற கண்டுபிடிப்புகள், ஆரம்பத்தில் அந்தந்த தொழில்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், இதய ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களாகவே இருக்கின்றன.

டிரான்ஸ் ஃபேட்ஸ், காற்று மாசுபாடு மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் போன்ற கண்டுபிடிப்புகள் அழற்சி/வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்ட உடல்நலப் பிரச்சனைகளில் சமநிலையின்மையை ஏற்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.

இந்த அபாயங்களைக் குறைப்பதற்கும், இதயத்தைப் பாதுகாப்பதற்கும் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள், பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் அவசரத் தேவையை இந்த கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.

நவீன வசதி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தேடுவதில், மனிதர்கள் இதய ஆரோக்கியத்தில் மிகவும் கவனக்குறைவாக இருக்கிறார்கள். இது கடுமையான தாக்கங்களைக் கொண்ட பல உடல்நலக் கேடுகளை உருவாக்கியுள்ளது. டிரான்ஸ் கொழுப்புகள், காற்று மாசுபாடு மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் போன்ற கண்டுபிடிப்புகள், ஆரம்பத்தில் அந்தந்த தொழில்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், இதய ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களாகவே இருக்கின்றன.

மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த பொருட்கள் இதய நோய்களுக்கு எவ்வாறு பங்களிக்கின்றன மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுக்கான அவசரத் தேவையை இது எவ்வாறு வலியுறுத்துகிறது என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.

News18

1. டிரான்ஸ் கொழுப்புகள்:

தாவர எண்ணெய்களின் ஹைட்ரஜனேற்றம் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட டிரான்ஸ் கொழுப்புகள், சுவை, அமைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் தொழில்துறை நன்மைகள் இருந்தபோதிலும், டிரான்ஸ் கொழுப்புகள் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன, குறிப்பாக இதயத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

இதய ஆரோக்கியத்தில் தாக்கம்: டிரான்ஸ் கொழுப்புகள் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்) கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன, பொதுவாக “கெட்ட” கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது, அதே நேரத்தில் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (எச்டிஎல்) கொழுப்பு அல்லது “நல்ல” கொழுப்பைக் குறைக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு தமனிகளில் கொழுப்பு படிவுகளை உருவாக்குவதற்கு பங்களிக்கிறது. எனவே கரோனரி தமனி நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், டிரான்ஸ் கொழுப்புகள் வீக்கம் மற்றும் எண்டோடெலியல் செயலிழப்பை ஊக்குவிப்பதோடு, இதய நோய் அபாயங்களை அதிகரிக்கிறது.

ஒழுங்குமுறை மற்றும் குறைப்பு முயற்சிகள்: அவற்றின் தீங்கின் பெரும் சான்றுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, உணவு விநியோகத்தில் இருந்து டிரான்ஸ் கொழுப்புகளை குறைக்க அல்லது அகற்றுவதற்கான விதிமுறைகளை பல நாடுகள் செயல்படுத்தியுள்ளன. இருப்பினும், சில பதப்படுத்தப்பட்ட உணவுகளில், குறிப்பாக கடுமையான கட்டுப்பாடுகள் குறைவாக உள்ள பகுதிகளில் டிரான்ஸ் கொழுப்புகள் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன.

2. காற்று மாசுபாடு:

காற்று மாசுபாடு, முதன்மையாக வாகன புகைகள், தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் விளைவாக உலகளாவிய சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது. நுண் துகள்கள் (PM2.5), நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) மற்றும் பிற மாசுபடுத்திகள் சுவாச மற்றும் இதய அமைப்புகளில் ஊடுருவி, இதய ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
இதய ஆரோக்கியத்தின் மீதான தாக்கம்: காற்று மாசுபாட்டின் நீண்டகால வெளிப்பாடு மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அரித்மியாக்கள் ஆகியவற்றின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. PM2.5 போன்ற மாசுக்கள் நுரையீரலுக்குள் ஆழமாக ஊடுருவி இரத்த ஓட்டத்தில் நுழைவதால் முறையான வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களுக்கு சேதம் ஏற்படலாம். இது பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது அதாவது, தமனிகளை கடினப்படுத்துதல் மற்றும் குறுகுதல் போன்ற பிரச்சனைகளின் மூலம் இது இருதய சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.

பாதிக்கப்படக்கூடிய மக்கள்: நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள், குறிப்பாக அதிக போக்குவரத்து அல்லது தொழில்துறை மண்டலங்களுக்கு அருகிலுள்ள குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசுபாடு தற்போதுள்ள இதய நிலைமைகளை மோசமாக்குவது மட்டுமல்லாமல், ஆரம்பகால தொடக்கத்திற்கும் பங்களிக்கிறது அல்லது ஆரோக்கியமான நபர்களுக்கும் இதய நோய் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.

News18

3. மைக்ரோபிளாஸ்டிக்ஸ் :

மைக்ரோபிளாஸ்டிக்ஸ், 5 மி.மீ.க்கும் குறைவான அளவிலான சிறிய பிளாஸ்டிக் துகள்கள், பெரிய பிளாஸ்டிக் கழிவுகளின் சிதைவின் காரணமாக சுற்றுச்சூழலில் எங்கும் காணப்படுகின்றன. அவை கடல்கள், மண், உணவு மற்றும் நாம் சுவாசிக்கும் காற்றிலும் கூட கலந்துள்ளன, இது மனிதர்களால் கவனக்குறைவாக உட்கொள்ளுதல் மற்றும் உள்ளிழுக்க வழிவகுக்கிறது.

இதய ஆரோக்கியத்தில் தாக்கம்: இதுகுறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் வெளிவரும் நிலையில், ஆரம்ப ஆய்வுகள் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இதய நோய்களுக்கு பங்களிக்கக்கூடும் என்று கூறுகின்றன. மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உடலுக்குள் நுழைந்ததும், அழற்சி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் நாளமில்லாச் செயலிழப்பைத் தூண்டக்கூடிய இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அனைத்து காரணிகளுக்கும் வழிவகுக்கும். நுண்ணுயிர் பிளாஸ்டிக்குகள் பித்தலேட்ஸ் மற்றும் பிஸ்பெனால் ஏ (பிபிஏ) போன்ற நச்சு இரசாயனங்களையும் கொண்டு செல்லக்கூடும், அவை அதிகரித்த இரத்த அழுத்தம் மற்றும் பிற இதய நோய் ஆபத்து காரணிகளுடன் தொடர்புடையவை.

பரவலான இருப்பு மற்றும் நீண்ட கால விளைவுகள்: குடிநீர், கடல் உணவு மற்றும் உப்பில் கூட மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கண்டறியப்பட்டுள்ளது. மைக்ரோபிளாஸ்டிக்களுக்கு நீண்டகால வெளிப்பாட்டின் நீண்டகால தாக்கங்கள் இன்னும் உள்ளன என ஆய்வு செய்யப்படுகிறது, ஆனால் இதய நிலைகளை மோசமாக்கும் அவற்றின் திறன் வளர்ந்து வருவது கவலையை தருகிறது.

அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுதல்: தணிப்பு மற்றும் தடுப்பு

டிரான்ஸ் கொழுப்புகள், காற்று மாசுபாடு மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஆகியவற்றுடன் தொடர்புடைய இருதய அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கு பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது.

ஒழுங்குமுறை நடவடிக்கைகள்: உணவுப் பொருட்களில் உள்ள டிரான்ஸ் கொழுப்புகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கங்களும், ஒழுங்குமுறை அமைப்புகளும் செயல்படுத்த வேண்டும். தூய்மையான ஆற்றல் மூலங்கள் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் கழிவை கட்டுப்படுத்த வேண்டும்.

பொது விழிப்புணர்வு: இந்த மாசுபாடுகளுடன் தொடர்புடைய அபாயங்களைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிப்பது, பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்ளலைக் குறைத்தல், மாசுபட்ட பகுதிகளைத் தவிர்ப்பது மற்றும் நிலையான தயாரிப்புகளை ஆதரிப்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை தனிநபர்கள் தேர்வு செய்வது அவசியம்.

தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகள்: சீரான உணவைப் பராமரித்தல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஏர் பியூரிஃபையர்களை பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டின் வெளிப்பாட்டைக் குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தனிநபர்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முன்முயற்சியான நடவடிக்கைகளை எடுக்கலாம்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கணுமா..? உங்க ரூம கிளீன் பண்ணாலே போதும் - ஆய்வில் வினோத தகவல்.!

 மன அழுத்தத்தை குறைப்பதற்கு பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்தும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்து விட்டதா? கவலையே படாதீங்க. இந்த பதிவில் உங்களுக்கான அற்புதமான ஒரு டிப்ஸ் காத்திருக்கு. மன அழுத்தத்தை குறைப்பதற்கு இந்த விஷயத்தை நீங்கள் பின்பற்றினால் நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

எப்பொழுதும் அவசர அவசரமாக கடைசி நேரத்தில் எந்த ஒரு விஷயத்தையும் செய்பவர்களின் அறை அல்லது மேசை ஒழுங்கற்று இருப்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஆனால் இதுவே பெரும்பாலான சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பவர்களின் அறை சுத்தமாக இருப்பதையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இதற்கு பின்னணியில் முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. உங்களுடைய அறையை சுத்தம் செய்வது உங்களுடைய மனநலனை பல வகையில் மேம்படுத்துவதற்கு உதவும். ஆச்சரியமாக உள்ளதா? ஆம், அது பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

வீட்டை ஒழுங்குப்படுத்தி அதனை சுத்தம் செய்வதால் உங்களுக்கு நல்ல இரவு தூக்கம் கிடைக்கிறது. 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒழுங்காக அமைக்கப்படாத அறையில் படுத்து உறங்கும் பொழுது அது ஒருவருடைய தூக்கத்தின் தரத்தை மோசமாக பாதிக்கிறது. அதுவே சுத்தமான அறையில் படுத்து உறங்குவது ஒருவருடைய தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.

உங்களுடைய அறையை அடுக்கி வைத்து சுத்தம் செய்யும் பொழுது உங்களுடைய கவனத்திறன் மேம்படுத்தப்படுகிறது. இது ஹார்வேர்ட் பிசினஸ் ரிவ்யூ, 2020 நடத்தப்பட்ட ஆய்வு மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உங்களுடைய அறையை நீங்கள் சுத்தம் செய்யும் பொழுது அதனால் உங்களுக்கு மனதெளிவு ஏற்படும். இது தேவையற்ற தடங்கல்களை தவிர்த்து உங்களுடைய உடலில் டோபமைன் என்ற மகிழ்ச்சி ஏற்படுத்தும் ஹார்மோன் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. இதனால் உங்களுடைய முடிவு எடுக்கும் திறன் மேம்படுத்தப்படுகிறது.

News18

உங்களுடைய அறையில் உள்ள பொருட்களை நீங்கள் அடுக்கி வைக்கும் பொழுது உங்களுடைய மனநிலை மேம்படுத்தப்படுகிறது. சுத்தம் செய்வதனால் உங்கள் மூளை ஆக்டிவேட் செய்யப்பட்டு அதனால் நீங்கள் ரிலாக்ஸாக உணர்வீர்கள். சுத்தமான அறையில் இருப்பவர்களின் மனநிலை சாந்தமாக இருக்கும் என்பது 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.

உங்களுடைய அறையை நீங்கள் ஒழுங்கமைக்கும் பொழுது உங்களுடைய மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும். இதுவும் 2020 ஆம் ஆண்டு ஹார்வேர்ட் பிசினஸ் ரிவ்யூ ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. கலைந்து கிடக்கும் பொருட்களை அடுக்கி வைப்பதால் குழப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்படும். இதன் விளைவாக உங்களை சுற்றி உள்ள சூழ்நிலையை உங்களால் கட்டுப்படுத்த முடியும்.

எனவே இந்த எளிமையான விஷயத்தை செய்வதன் மூலமாக நமக்கு இவ்வளவு பலன்கள் கிடைக்கும் போது, உங்களுடைய மனநலனை மேம்படுத்த உங்கள் அறையை இன்றே சுத்தம் செய்ய ஆரம்பியுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Central Bank of India-வில் Office Assistant வேலை – ஊதியம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

Central Bank of India-வில் Office Assistant வேலை – ஊதியம்: ரூ.40,000/- ||விண்ணப்பிக்கலாம் வாங்க!

Central Bank of India ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Office Assistant, Faculty, Gardener பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

Central Bank of India காலிப்பணியிடங்கள்:

Central Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Office Assistant, Faculty, Gardener பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Office Assistant கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Central Bank of India வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Office Assistant ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12,000/- முதல் ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Central Bank of India தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.10.2024 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.98,000/- || தேர்வு கிடையாது!

 

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.98,000/- || தேர்வு கிடையாது!

ஆயில் இந்தியா ஆனது Consultant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Oil India காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Consultant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் 10 முதல் 15 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Grade F பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Oil India வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Consultant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.98,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oil India தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து recruitment.phq@oilindia.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 01.11.2024 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group