காலை உணவிற்கு தெரியாம கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. நாள் முழுவதும் நெஞ்செரிச்சலா இருக்கும்.! - Agri Info

Adding Green to your Life

February 6, 2025

காலை உணவிற்கு தெரியாம கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. நாள் முழுவதும் நெஞ்செரிச்சலா இருக்கும்.!

 

காலையில் வெறும் வயிற்றில் நெஞ்செரிச்சல், வாயு தொல்லை ஏற்படுவதற்கு மோசமான உணவு, வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் காரணம். சிட்ரஸ் பழங்கள், காபி, டீ, பிஸ்கட், வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.


காலையில் வெறும் வயிற்றில் நெஞ்செரிச்சல், வாயு தொல்லை போன்றவை அடிக்கடி ஏற்படுகிறது. மோசமான உணவு, மோசமான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் வெறும் வயிற்றில் வாயு உருவாவதற்கு காரணமாக இருக்கலாம். சாப்பிடும்போதும், குடிக்கும்போதும் தெரியாமல் காற்றை விழுங்குவது, நீண்ட நேரம் பசியோடு இருப்பது, ஒழுங்கற்ற உணவு முறை, மன அழுத்தம் மற்றும் கவலை போன்றவற்றால் வயிற்றில் வாயு உருவாகும். இது தவிர காலையில் நாம் சாப்பிடும் சில உணவுகள், வயிற்றில் வாயு மற்றும் ஆசிட் உருவாக காரணமாகிறது. மேலும், சில உணவுகள் வயிற்றில் ஆசிட்-ஐ உருவாக்குகின்றன. இதன் காரணமாக, வயிற்றில் ஆசிட் ரிஃப்ளக்ஸை ஏற்படுத்தும்.

வயிற்றில் வாயுத்தொல்லை உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவை உண்ணவும், உணவை நன்கு மென்று சாப்பிடவும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். காலையில் வெறும் வயிற்றில் வாயு மற்றும் அசிடிட்டி இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.


1. தக்காளி மற்றும் சிட்ரஸ் பழங்கள்: சிலர் அதிகாலையில் ஆரஞ்சு சாப்பிடுவதை விரும்புவார்கள். சிலர் காலை உணவாக தக்காளி சாப்பிடுவார்கள். இவற்றையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நாள் முழுவதும் வயிற்றில் ஆசிட் உருவாகிக்கொண்டே இருக்கும். உண்மையில், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி போன்றவை ஆசிட்-ஐ உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இது வெறும் வயிற்றில் ஆசிட் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த பொருட்களில் சிட்ரிக் ஆசிட் மற்றும் மாலிக் ஆசிட் உள்ளது, இது ஆசிட் உற்பத்தியை அதிகரிக்கிறது.



2. ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்கவும்: சீஸ், பட்டர் போன்றவற்றை காலையில் சாப்பிட்டால் வயிற்றில் ஆசிட் உருவாகும். இந்த பொருட்களில் நிறைய கொழுப்பு உள்ளது. எனவே இந்த கொழுப்பை உடைக்க நிறைய ஆசிட் தேவைப்படும். இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்றில் அதிக ஆசிட் உற்பத்தியாகும். எனவே அவற்றைத் காலையில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களுக்கான நிறுவனம் கூறியுள்ளது.



3. காபி மற்றும் டீ: நீங்கள் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கிறீர்களா? அப்படிப்பட்ட தவறை ஒருபோதும் செய்யாதீர்கள், ஏனெனில் அது வயிற்றில் அதிகப்படியான ஆசிட்-ஐ ஏற்படுத்தும். எனவே காபி அல்லது டீ குடிக்கும் முன், முதலில் ஏதாவது சாப்பிடுங்கள், அதன் பிறகு டீ அல்லது காபி குடிக்கவும். டீ மற்றும் காபியில் உள்ள காஃபின் வயிற்றில் ஆசிட் உற்பத்தியை அதிகரிக்கிறது.



4. பிஸ்கட் மற்றும் குக்கீகள்: சிலர் காலை உணவாக ஒரு கப் டீ அல்லது காபி உடன் பிஸ்கட் சாப்பிடுவார்கள். இந்த இரண்டு கலவைகளும் வயிற்றுக்கு மிகவும் மோசமானவை. இவை இரண்டும் வயிற்றில் அசிடிட்டியை அதிகரிக்கும். பிஸ்கட்டில் ரிஃப்பைன்டு சுகர் மற்றும் மாவு பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் காஃபின் அசிடிட்டியை உருவாக்கும்.



5. வறுத்த உணவு காலையில் வறுத்த உணவுகளை சாப்பிடவே கூடாது. இதில் சோலே பத்துரா, பூரி சப்ஜி, கச்சோரி, சமோசா ஆகியவை அடங்கும். இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் குடல் பிரச்சனைகள் ஏற்படும். அதிகாலையில் அதை ஜீரணிக்க, அதிக என்சைம் மற்றும் பித்தநீர் தேவைப்படுகிறது, ஆனால் இது நடக்கவில்லை என்றால், ஆசிட் உற்பத்தி அதிகரிக்கிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment