Agri Info: Educational News Tamil

Education News, Employment News in tamil

Showing posts with label Educational News Tamil. Show all posts
Showing posts with label Educational News Tamil. Show all posts

March 2, 2025

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Unit - 6 & Set - 8 ) Lesson Plan

March 02, 2025 0

 Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025



Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Unit - 6 ) Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Unit - 6 ) Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 8 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 8 ) Lesson Plan - T/M - Download here

EMIS தளத்தில் தகவல் பதிவேற்ற பணிச்சுமை குறைப்பு - இன்று (01.03.2025) முதல் நடைமுறைக்கு வருகிறது?

March 02, 2025 0
IMG_20250301_083113

EMIS தளத்தில் தகவல் பதிவேற்ற பணிச்சுமை குறைப்பு - இன்று (01.03.2025) முதல் நடைமுறைக்கு வருகிறது?

SPD - Relief from EMIS Work - Download here

State Board, CBSE, ICSE இடையேயான வித்தியாசம் என்ன தெரியுமா..? எது பெஸ்ட் தெரியுமா..? முழுசா படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

March 02, 2025 0

 இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேலும், 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் 80.33% ஆகும். இதை தொடர்ந்து, தொழில்துறை அமைப்பான அசோசம் நடத்திய கணக்கெடுப்பின்படி, தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பின்பற்றப்படும் கல்வி முறைகள் பற்றி இப்பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.



அதாவது, இந்தியாவில் State Board, CBSE, ICSE, NIOS மற்றும் AISSCE என ஐந்து முக்கிய கல்வி வாரியங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பாடத்திட்டங்கள், கற்றல் முறைகள், மதிப்பீட்டு அளவுகோல்கள் மற்றும் தேர்வுகளை நடத்துவதற்கான வாரியங்களை கொண்டுள்ளன. இருப்பினும் தமிழகத்தில் 3 கல்வி வாரியங்கள் மட்டுமே பரவலாக அறியப்படுகிறது.




அதில் முதலாவதாக, “மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ” ஆகும். இது, மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. மேலும், இது பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையே தேசிய அளவில் ஒரே கல்வி தரத்தை வழங்கி வருகிறது. இந்த வாரியம் மூலம் தேசிய அளவில் ஒரே பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது.



 இரண்டாவதாக, “மாநில கல்வி வாரியம் (State Board)” ஆனது மாநில அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளையும் நிர்வகிக்கிறது. இம்முறையில் மாநில அரசால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது. இறுதியாக, “இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியம்(ICSE)” ஆனது அதன் சர்வதேச கல்வித் தரநிலைகள் மற்றும் விரிவான பாடத்திட்டத்திற்கு பெயர் பெற்றது. மேலும், ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கும் ICSE வாரியம், மாணவர்களுக்கு பரந்த அளவிலான கல்வி மற்றும் தொழில்முறை நோக்கங்களை கற்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி வாரியங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அதற்கென சொந்த கல்வி வாரியத்தைக் கொண்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான தேர்வுத் தரங்களை தீர்மானிக்கிறது.

மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சலுகைகள்: தேர்வுத் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு

March 02, 2025 0

 எதிர்பாராத விபத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுத் தேர்வில் கூடுதல் நேர சலுகைகள் வழங்க வேண்டுமென தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வில் பங்கேற்கும் தகுதியான மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் போன்ற உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.




மேலும், சலுகைகள் கோரியிருந்த நிலையில் ஆணைகள் பெறாத நிலையில், அந்த மாணவர்களுக்கு உதவி இயக்குநர்கள் தங்கள் அளவிலேயே அனுமதி வழங்கி அதற்கான பின்னேற்பாணையை பெற்றுகொள்ளலாம். இதன்பின் சலுகைகள் கோரி விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், எதிர்பாராத விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செயது வழிமுறைகளின்படி அனுமதி வழங்க வேண்டும்.


மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் அந்தந்த மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநர்களே முடிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதேபோல்,வழிகாட்டுதலில் இடம்பெறாத நோய்களுக்கு சலுகைகள் வழங்கக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

March 1, 2025

10, 11, 12 பொதுத்தேர்வுகள்: - உதவி எண்கள் அறிவிப்பு

March 01, 2025 0

 தேர்வு மையங்களிலுமாக மொத்தம் 25,57,354 தேர்வர்கள் 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர்.

இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 45,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 மேலும் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க சுமார் 4800 க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மேனிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 20,476 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்கு, சொல்வதை எழுதுபவர், தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள்/ தேர்வர்கள்/ பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

 தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்வுக் கட்டுப்பாட்டு அறை – தொடர்பு எண்கள்

அலைபேசி தடை:-9498383075 / 9498383076

தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

 அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதரத் தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

February 28, 2025

TNSET 2025 Hall Ticket Released!

February 28, 2025 0

  Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250228_084941_909

TNSET 2025 Hall Ticket Released!
The TNSET Hall Ticket is now available for download on the TRB website.
📌 Login Details:
✅ Registration Number – Your TNSET Application Number (Check your old admit card)
✅ Password – Your Date of Birth in this format: DD/MM/YYYY (Example: 10/05/1997)
⚠️ Important: Enter the slashes (/) in your date of birth. Without them, it will show an "Invalid Registration Number" error.
📌 Hall Ticket Details:
Your exam date and shift will be mentioned on the hall ticket. Check it carefully to avoid confusion.
📢 Download your hall ticket now and get ready for the exam! Wishing you all the best! 🎯

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி

February 28, 2025 0

 

Education News (கல்விச் செய்திகள்)
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு சம்பந்தமான சடங்குகளை நிறைவேற்ற ஏதுவாக வருகின்ற 02.03.2025 முதல் 31.03.2025 வரை 30 நாட்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

IMG_20250228_062134_wm

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

பள்ளி ஆண்டு விழா - ஆண்டு அறிக்கை ( மாதிரி...)

February 28, 2025 0

Education News (கல்விச் செய்திகள்)

 

IMG-20250228-WA0015

பள்ளி ஆண்டு விழா - ஆண்டு அறிக்கை ( மாதிரி...)

School Annual day report 2025.pdf

👇👇👇👇

Download here




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

School Calendar - March 2025

February 28, 2025 0

 

Education News (கல்விச் செய்திகள்)
School Calendar - March 2025

IMG_20230621_215553

பள்ளி நாட்காட்டி - மார்ச் 2025
🟢📍மார்ச் - 2025  பள்ளி நாள்காட்டி.
01-03-2025 -சனி - ஆசிரியர் குறை தீர் நாள் 
03-03-2025 - திங்கள் - +2 பொதுத் தேர்வு ஆரம்பம்.
05-03-2025- புதன் - 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பம்.
28-03-2025 -வெள்ளி -10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பம்.
22-03-2025 - சனி - பள்ளி முழு வேலை நாள்.
*🌟அரசு விடுமுறை நாள்
31-03-2025 - திங்கள் - ரம்ஜான் பண்டிகை 
*🌟RL /R H வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்...
04-03-2025 - செவ்வாய் - அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள்
05-03-2025 - புதன் - சாம்பல் புதன்
12-03-2025 - புதன் - மாசி மகம்
27-03-2025 - வியாழன் - ஷபே காதர்

IMG-20250227-WA0024

IMG-20250227-WA0025

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

February 27, 2025

IFHRMS kalanjium leave apply... Salary deduction?

February 27, 2025 0

 

Education News (கல்விச் செய்திகள்)
images

நண்பர்களே வணக்கம் 🙏

IFHRMS kalanjium leave apply...

Salary deduction???

தற்போது நமது விடுப்பு களை களஞ்சியம் வழியாக விண்ணப்பித்து வருகிறோம்...

CL/RL தவிர பிற விடுப்பு எனில் *சம்பளம் பிடித்தம்* செய்கிறது என்று குற்றச்சாட்டு பரவலாக வருகிறது 🙏

1) *சரியான விடுப்பு* தான் விண்ணப்பித்து உள்ளாரா என்பதை *உறுதி செய்து* கொள்ளுங்கள்..

நாம் மருத்துவ விடுப்பு *ML* என்று சொல்லும் விடுப்பின் உண்மையான பெயர்

 *மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு* .

*Unearned Leave on MC* ( medical certificate).

சிலர் *EOL with MC* என தவறாக விண்ணப்பித்து விடுகிறார்கள்.

( இது *loss of pay* விடுப்பு)

எனவே *leave approval* செய்யும் முன் *விண்ணப்பித்த விடுப்பு* சரியா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் *தவறு* எனில் நீங்களே *reject* செய்து விடுங்கள்.

2) *EOL with MC* பார்க்காமல் *approve* செய்து விட்டோம்.

 *Ticket I'd* போட்டு தான் *cancel* செய்ய வேண்டும்.

3) *UEL on MC சரியாக* தான் விண்ணப்பித்து உள்ளார் இருப்பினும் *ஊதியம் பிடித்தம்* செய்து உள்ளது?

*தகுதி காண் பருவத்தில்* மருத்துவ விடுப்பு அனுமதி இல்லை நாம் அனைவரும் அறிந்ததே...

அவர் தகுதி காண் *பருவம் முடித்து விட்டார் என நமக்கு தெரியும் ஆனால்* IFHRMS kalanjium இல் அந்த பணியாளருக்கு *தகுதி காண் பருவம் entry* இல்லாமல் இருக்கும் அதனால் தான் இப்படி நிகழ்கிறது...

 *தகுதி காண் பருவம் பதிவு மேற்கொள்ள* ...

IFHRMS/களஞ்சியம் *steps/flow chart* .

4) Initiator I'd login...

HR

Employee profile

Regularisation & probation...

Regularisation details --- complete it...

(Person type... Employee...

Employee id....(Type)

Go ..

Action...

Probation declaration details... Check it...

If not...

Create....

Complete the probation entry....

Approve it...

Do mark for retry....

Check the bill....

5) duty pay .

Leave pay .. என சரியாக பிரிந்து வந்து இருக்கும்...

( பிரிந்து வருவது problem இல்லை) ..

மொத்த தொகை சரியாக இருக்கும்...

உங்கள் நிலையில் இதை சரி செய்து கொள்ளலாம்....

தகவலுக்காக...

 *க.செல்வக்குமார்*

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

EMIS Website ல் மாணவர் சேர்க்கைப் படிவம் தற்காலிகமாக நீக்கம்

February 27, 2025 0

 EMIS%20Website

Education News (கல்விச் செய்திகள்)



இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி (ந.க.எண் : 002596/ஜெ2/2025; நாள் : 18.02.2025) 2025-2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1, 2025 முதல் தொடங்க இருப்பதால் பழைய மாணவர் சேர்க்கைப் படிவம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பப் படிவம் விரைவில் இங்கு கொடுக்கப்படும்.


EMIS%20Website%201

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

‘என்ஜினீயரிங் படிப்புடன் பி.எட் முடித்தால் பள்ளிகளில் ஆசிரியராகலாம்' தமிழக அரசு அனுமதி

February 27, 2025 0

 

Education News (கல்விச் செய்திகள்)
அரசு வேலை வாய்ப்புகளில் எந்தெந்த பட்டப்படிப்புகள், எந்த பட்டப்படிப்புக்கு இணையானது என்பது குறித்து, இணை கல்விக்குழு கூடி ஆராய்ந்து அதற்கான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இணை கல்விக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், உயர்கல்வித்துறை அரசாணை ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது. 

அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:- கொல்கத்தா மாநிலம் மேற்கு வங்க பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் பி.டெக் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, அரசு வேலை வாய்ப்புகளில், பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பட்டப்படிப்புக்கு இணையானது. 

அதேபோல், பி.இ. பட்டப்படிப்புடன் பி.எட் (இயற்பியல், அறிவியல்) முடித்தவர்கள், பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணிக்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

TRUST - Tentative Official Answer Key Published

February 27, 2025 0

 

Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250226_181216

08.02.2025 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) . சம்பந்தமான தற்காலிக விடைக்குறியீடு ( Tentative Key Answer ) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று ( 26.02.2025 ) வெளியிடப்பட்டுள்ளது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் இருப்பின் , அவற்றை 05.03.2025 - க்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.👇👇👇

TRUST - Answer Key - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள் நடத்த திட்டம்: மார்ச் 9 வரை கருத்துகேட்பு

February 27, 2025 0

 

Education News (கல்விச் செய்திகள்)
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுதோறும் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். இதன் மீதான கருத்துகளை பொதுமக்கள், ஆசிரியர்கள் மார்ச் 9-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த வாரியம் மத்திய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த பாடத்திட்டத்தின்கீழ் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் சில மாற்றங்களை செய்து வரைவு அறிக்கையை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது.


அதன்விவரம் பின்வருமாறு: சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டில் முதல்கட்டமாக பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருமுறை நடத்தப்படும். அதாவது முதல்கட்டமாக பிப்.17 முதல் மார்ச் 6-ம் தேதி வரையும், 2-ம் கட்டமாக மே 5 முதல் 20-ம் தேதி வரையும் பொதுத் தேர்வுகள் நடைபெறும்.


இந்த தேர்வெழுத 26 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்விரு தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளலாம். பிப்ரவரியில் எழுதும் தேர்வில் பெறும் மதிப்பெண்ணில் மாணவர்கள் மனநிறைவு கொண்டால், மே மாதம் நடைபெறும் தேர்வை எழுத வேண்டியதில்லை. அதேநேரம் மதிப்பெண்களை உயர்த்த விரும்பினால் மே மாத தேர்வையும் மாணவர்கள் எழுதலாம். இந்த மாற்றங்கள் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளவும், மனஅழுத்தத்தை தவிர்க்கவும், பாடங்களை புரிந்து கொண்டு படிக்கவும் வழிவகை செய்யும்.


மேலும், இரண்டாம் கட்டத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்ணாகக் கருதப்படும். அதேபோல் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள் எளிது மற்றும் கடினம் என இரு வகைகளாகப் பிரிக்கப்படும். அதில், விரும்பும் வினாத்தாளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அவற்றில் கடினமான வினாத்தாளை தேர்வு செய்யும் மாணவர்கள் மட்டுமே குறிப்பிட்ட பாடங்கள் சார்ந்த பிரிவில் பட்டப் படிப்புகள் மற்றும் தொடர்புடைய பிற உயர்கல்வி பிரிவுகளை பயில முடியும்.


முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ் 1 வகுப்பில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டும். மேலும், இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துகளை பொதுமக்கள், ஆசிரியர்கள் மார்ச் 9-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://www.cbse.gov.in/ எனும் வலைத்தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

February 25, 2025

ஊதியம் வழங்கும் நாளுக்கு, குறைந்தபட்சம் 2 நாட்கள் முன்னதாக ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவு!

February 25, 2025 0

 

Education News (கல்விச் செய்திகள்)
ஊதியம் வழங்கும் நாளுக்கு, குறைந்தபட்சம்  2 நாட்கள் முன்னதாக ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவு!

👇👇👇👇

DAAS letter to PAOs and TOs Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு மந்தண அறிக்கைகள் (Confidential Reports) எழுதுதல் - அரசாணை வெளியீடு!

February 25, 2025 0

 

Education News (கல்விச் செய்திகள்)

பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு மந்தண அறிக்கைகள் (Confidential Reports) எழுதுதல் - அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.32- ACR Reports - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: இறுதிகட்ட பணிகளில் தேர்வுத் துறை தீவிரம்

February 25, 2025 0

 

Education News (கல்விச் செய்திகள்)
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் போன்ற இறுதிகட்ட பணிகளை தேர்வுத் துறை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 வகுப்பில் 8.21 லட்சம் மாணவர்கள், பிளஸ் 1-ல் 8.23 லட்சம் பேர், பத்தாம் வகுப்பில் 9.13 லட்சம் பேர் என மொத்தம் 25.57 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 11, 12-ம் வகுப்புகளுக்கு தலா 3,316 மையங்களும், பத்தாம் வகுப்புக்கு 4,113 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வறை கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படை அலுவலர் நியமனம் உட்பட இறுதிகட்ட பணிகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.


இது குறித்து தேர்வுத் துறை அலுவலர்கள் சிலர் கூறும்போது, ''பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,426 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல், பொதுத் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 11-ம் வகுப்பு தேர்வுக்கு 44,236 பேரும், 12-ம் வகுப்புக்கு 43,446 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்க பத்தாம் வகுப்புக்கு 4,858-ம், 11, 12-ம் வகுப்புக்கு தலா 4,470-ம் நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான இறுதி சரிபார்ப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதுதவிர மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 300 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் வசதிக்காக கடந்த ஆண்டைவிட தேர்வு மையங்களின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள் திருத்துதல் பணிக்காக தமிழகம் முழுவதும் சுமார் 150 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன'' என்றனர்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )