எல்லா சீசன்களிலும் நமக்கு எளிதாக கிடைக்கும் ஒரு பழம் பப்பாளி ஆகும். இதில் டயட்ரி ஃபைபர் சத்து, அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் கேன்சர் ஏற்படும் அபாயம் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் பப்பாளி பழமானது உடல் எடை மேலாண்மைக்கும் பயனுள்ளதாக இருக்கும். எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், பப்பாளி பழம் அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம்... பப்பாளி சாப்பிடுவது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும். இந்த பழத்தை யார் எல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
கர்ப்பிணிப் பெண்கள்: கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிட கூடாது. ஏனென்றால் இந்த பழத்தில் லேடெக்ஸ் என்ற ஒரு கலவை உள்ளது. இது கருப்பை சுருக்கங்களை (uterine contractions) ஏற்படுத்தி கருக்கலைப்பு அல்லது முன்கூட்டிய பிரசவத்திற்கு வழிவகுக்கும். தவிர பப்பாளியில் உள்ள பப்பேன் என்ற நொதி கருக்கலைவிற்கு காரணமாகி விடக் கூடும்.
சீரற்ற இதய துடிப்பு கொண்டவர்கள்: பப்பாளி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனினும் சீரற்ற இதய துடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம் அவ்வளவு நல்லதல்ல. இதில் சயனோஜெனிக் கிளைகோசைட்ஸ் எனப்படும் அமினோ ஆசிட் மிதமான அளவில் உள்ளது. இது செரிமான அமைப்பில் ஹைட்ரஜன் சயனைடை உருவாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட அளவில் எடுத்து கொண்டால் பப்பாளி எந்தத் தீங்கும் விளைவிக்காது. இருப்பினும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளின் பிரச்சனை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பப்பாளி பழத்தால் இதே போன்ற எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.
லேடெக்ஸ் அலர்ஜி: லேடெக்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் இருக்கும் கைட்டினேஸஸ் எனப்படும் நொதிகள், லேடெக்ஸ் புரதங்களுடன் கிராஸ்-ரியாக்ட் புரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் கண்களில் நீர் வடிதல் உள்ளிட்டவை அறிகுறிகளாகும். சிலருக்கு பப்பாளியின் வாசனை கூட வராது.
சிறுநீரக கற்கள்: வலுவான ஆன்டிஆக்சிடன்ட்டான வைட்டமின் சி பப்பாளி பழத்தில் அதிகமாக உள்ளது. ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஊட்டச்சத்தை அதிகமாக உட்கொள்வது நிலைமையை மோசமாக்கும். வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வதால், கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயமும் அதிகரிக்கிறது.
ரத்த சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள்: நீரிழிவு நோயை நிர்வகிக்க பப்பாளி ஒரு சிறந்த வழி. எனினும் குறைந்த ரத்த சர்க்கரை அளவு (ஹைபோகிளைசீமியா) உள்ளவர்களுக்கு இந்த பழம் அவ்வளவு நல்லதல்ல. இந்த பழத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் இயற்கை பண்புகள் உள்ளன. எனவே ஏற்கனவே ஹைபோகிளைசீமியா நிலை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவானது ஆபத்தான அளவிற்குக் குறையக் கூடும்.
February 18, 2025
Papaya | பப்பாளி சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்.. இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..!
தினமும் 30 நிமிடங்கள் நடந்தாலே.. நம் உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா..?
உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்னஸாகவும் வைத்திருக்க ஜிம் செல்ல வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட நேரம் நடைபயிற்சி செய்தாலே போதும் என்கிறார்கள் நிபுணர்கள்.
நாம் நடந்த பிறகு நம் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? ஒரு எளிய, நிதானமான நடைப்பயணம் பல அதிசயங்களைச் செய்யும்! உங்கள் மனநிலையை அதிகரிப்பதில் இருந்து உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவது வரை, தினசரி நடைப்பயணம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் எதிர்பார்க்காத வழிகளில் மாற்றும்.
தினமும் 30 நிமிடங்கள் நடப்பது உங்கள் உடலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நாங்கள் உங்களிடம் சொன்னால் நம்புவீர்களா? இதற்காக நீங்கள் நடக்கும் அடிகளை எண்ணவோ அல்லது வியர்வை சிந்தவோ தேவையில்லை. ஒரு எளிய, நிதானமான நடைப்பயணம் பல அதிசயங்களைச் செய்யும்! உங்கள் மனநிலையை அதிகரிப்பதில் இருந்து உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவது வரை, தினசரி நடைப்பயணம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் எதிர்பார்க்காத வழிகளில் மாற்றும். குறைத்து மதிப்பிடப்படும் நடைப்பயிற்சியின் சில சிறந்த நன்மைகள் இதோ!
உங்கள் எலும்புகள் வலுவடைகின்றன : நடைப்பயிற்சி என்பது எடை தாங்கும் பயிற்சி. அதாவது உங்கள் எலும்புகள் ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட வேண்டும். இது எலும்பு அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. வயதாகும்போது எலும்புப்புரை மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. உங்கள் எலும்புக்கூட்டை உறுதியாகவும் வலுவாகவும் வைத்திருக்க, இதை ஒரு பயிற்சியாக வைத்துப் கொள்ளுங்கள்!
உங்கள் மனநிலையை உற்சாகப்படுத்தும் : கொஞ்சம் எரிச்சலாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்கிறீர்களா? 30 நிமிட நடைப்பயிற்சி இந்த நிலைமையை மாற்றும்! நடைப்பயிற்சி "நல்ல உணர்வு" ஹார்மோன்கள் என்றும் அழைக்கப்படும் எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இது பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் கூட குறைக்க உதவுகிறது. இதை ஒரு இலவச சிகிச்சை அமர்வாகக் கருதுங்கள்.
நல்ல தூக்கத்திற்கு உதவும் : இரவில் புரண்டு புரண்டு படுக்கிறீர்களா? தினசரி நடைப்பயிற்சி உங்கள் தூக்க சுழற்சியை சீராக்க உதவும். இதனால் தூங்குவது எளிதாகி, ஆழ்ந்த தூக்கம் வரும். நடைபயிற்சி மன அழுத்தத்தைக் குறைத்து, உங்கள் உடலின் இயற்கையான தாளத்தை சீராக்க உதவுகிறது, இதனால் ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கம் வரும்.
இனி மதிய வேளையில் தூக்கம் வராது : இது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் உங்கள் உடலை நகர்த்துவது உண்மையில் அதிக சக்தியைத் தருகிறது. நடைபயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உங்கள் செல்களுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இனி மந்தமான மதியத்திற்கு விடைகொடுங்கள். உங்கள் தினசரி நடைப்பயிற்சி காபியை விட சிறந்ததாக இருக்கலாம்!
நோய்க்கு எதிரான கவசம் : தொடர்ந்து நடப்பது இதய நோய், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்புகளைக் குறைக்கும். இது இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் உங்கள் இதயத்தை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது. ஆரோக்கியமான எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கான எளிதான வழிகளில் ஒன்று எளிமையான நடைப்பயணமாகும்.
எளிதாக கலோரிகளை எரிக்கலாம் : ஜிம்மிற்குச் செல்லாமல் ஆரோக்கியமான எடையை பராமரிக்க விரும்புகிறீர்களா? கலோரிகளை எரிக்கவும், அதிகப்படியான எடையைத் குறைக்கவும் நடைப்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். கூடுதலாக, இது உங்கள் கால்கள், உடலின் மையப்பகுதி மற்றும் இடுப்புகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் தீவிரமான உடற்பயிற்சிகளின் தொந்தரவு இல்லாமல் உங்களுக்கு நுட்பமான உடற்பயிற்சி ஊக்கத்தை அளிக்கிறது.
Diabetes Tips | நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா..? நிபுணர்கள் சொல்வது என்ன..?
நீரிழிவு நோய் சமீப காலமாக பலருக்கும் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. வயது வித்தியாசமின்றி அனைவரையும் இந்த நோய் பாதிக்கிறது. நீரிழிவு நோய் வருவது ஒரு பெரிய பிரச்சனை என்றாலும், அது வந்த பிறகு உங்கள் உணவுப் பழக்கத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா? இல்லையா? என்ற கேள்விக்கான பதிலை இப்போது பார்ப்போம்.
கரும்பு அல்லது பனை சாற்றில் இருந்து வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கியமான தாதுக்கள் உள்ளன. அதனால்தான் வெல்லம் சாப்பிடுவது ஆயுர்வேதத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் நல்லதா?. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெல்லம் இயற்கையானது என்றாலும், அதில் அதிக கிளைசெமிக் குறியீடு (GI) உள்ளது. இதன் பொருள் இது ரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடுவது ஆபத்தானது.
வெல்லம் சர்க்கரையை விட ஜீரணிக்க சிறிது நேரம் எடுக்கும். ஆனால் அதன் விளைவு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. எனவே, அதை சாப்பிடுவது ரத்த சர்க்கரையில் திடீர் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். வெல்லத்தில் கலோரிகள் அதிகம். அடிக்கடி உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கும். இது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
வெல்லத்தில் அதிக அளவு சுக்ரோஸ் (ஒரு வகை சர்க்கரை) உள்ளது. இது உடலில் விரைவாக குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, வெல்லம் சாப்பிட யாராவது உங்களுக்கு அறிவுறுத்தினாலும், அதைப் பின்பற்ற வேண்டாம்.
வெல்லத்தை தொடர்ந்து உட்கொண்டால், உடல் குறைவான இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இது கடுமையான நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் மற்றும் வெளியில் இருந்து இன்சுலின் எடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இல்லையென்றால் மிகக் குறைந்த அளவில் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது. வெல்லம் சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகத் தோன்றினாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஏற்றதல்ல. எனவே எதையும் சாப்பிடுவதற்கு முன்பு, மருத்துவரை அணுக வேண்டும்.
உங்க குடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படிங்க..!
உங்கள் செரிமான அமைப்பு உணவை பதப்படுத்தும் வேகம், செரிமான ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டியாகும். இது ஊட்டச்சத்து உறிஞ்சுதல், கழிவு நீக்கம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதிக்கிறது. மந்தமான குடல் செயபாடு வீக்கம், மலச்சிக்கல் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் அதிகப்படியான குடல் இயக்கம், ஊட்டச்சத்து உறிஞ்சிதலில் கேடு விளைவிக்கும். வழிவகுக்கும். உங்கள் குடல் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
செரிமான செயல்முறை
நீங்கள் உணவை மென்று விழுங்கியவுடன், அது இரைப்பை குடல் பாதை வழியாக நகர்கிறது பின்னர் அது இந்த உறுப்புகள் வழியாக செல்கிறது: வயிற்றில் கலக்கப்பட்டு ஜீரணிக்கப்படுகிறது; ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது சிறு குடல்; கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தண்ணீர் மற்றும் உப்புகளை பிரித்தெடுக்கிறது பெரிய குடல்..
குடல் இயக்கம் என்றால் என்ன?
குடல் இயக்கம் என்பது செரிமான அமைப்பு வழியாக உணவின் இயக்கத்தைக் குறிக்கிறது. இது நமது குடலில் உள்ள டிரில்லியன் கணக்கான பாக்டீரியாக்களால் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் செயல்முறையாகும். இந்த நுண்ணுயிரிகள் உணவை உடைப்பதிலும், நோயெதிர்ப்பு மண்டல வளர்ச்சியை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் குடல் நுண்ணுயிரியை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமாக்குகிறது.
இந்த பாக்டீரியாக்கள் மற்றும் அவற்றின் துணைப் பொருட்கள் இல்லாமல், உணவை திறம்பட நகர்த்தும் உடலின் திறன் குறைந்து, அசௌகரியம், மலச்சிக்கல் மற்றும் செரிக்கப்படாத பொருட்களின் குவிப்புக்கு வழிவகுக்கும்.
குடல் போக்குவரத்து (Gut Transit) நேரம் என்றால் என்ன?
குடல் போக்குவரத்து நேரம் என்பது உணவு முழு செரிமானப் பாதை வழியாகவும் பயணிக்க எடுக்கும் நேரத்தைக் குறிக்கிறது. இந்த கால அளவு நபருக்கு நபர் மாறுபடும். சராசரியாக, உணவு உடலைக் கடந்து செல்ல சுமார் 23 முதல் 24 மணி நேரம் ஆகும். ஆனால் இதன் வரம்பு 12 முதல் 73 மணி நேரம் வரை இருக்கலாம்.
குடல் செயல்பாட்டு நேரம் மெதுவாக இருக்கும்போது, அது குடல் இயக்கம் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. இது பெருங்குடலில் பாக்டீரியா செயல்பாட்டில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. மனிதர்களைப் போலவே, குடல் பாக்டீரியாக்களுக்கும் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இருப்பினும், நார்ச்சத்து பெருங்குடலை அடைய அதிக நேரம் எடுத்தால், இந்த நுண்ணுயிரிகள் ஜீரணிக்கும் புரதத்திற்கு மாறக்கூடும். இந்த மாற்றம் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உருவாக்கி, வீக்கம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
வீட்டிலேயே உங்கள் குடல் வேகத்தைச் சரிபார்க்கலாம்
7 முதல் 10 நாட்களுக்கு இனிப்பு சோளம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பின்னர் ஒரு கைப்பிடி அளவு இனிப்புச் சோளம் அல்லது சோளத்தை சாப்பிடுங்கள். நேரம் மற்றும் தேதியைக் குறித்து வைத்துக்கொள்ளவும்.
.அடுத்த சில நாட்களுக்கு உங்கள் மலத்தைக் கவனித்து, சோளத்தின் வெளிப்புற ஓடுகளை நீங்கள் முதலில் கவனிக்கும்போது பதிவு செய்யவும்.
இது உறுதியான மருத்துவ பரிசோதனை இல்லையென்றாலும், இந்த எளிய முறை உணவு முழு செரிமானப் பாதை வழியாகவும் பயணிக்க எடுக்கும் நேரத்தின் நியாயமான மதிப்பீட்டை வழங்குகிறது. சோளம் 12 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் தோன்றினால், உங்கள் செரிமானம் வேகமாக இருப்பதாக அர்த்தம். 48 மணிநேரம் அல்லது அதற்கு மேல் எடுத்தால், உங்கள் Gut Transit மெதுவாக இருக்கிறது என அர்த்தம்.
வைட்டமின் பி12 உறிஞ்சுதலை எளிமையாக்கும் உணவுகள்.. இவற்றை தவறாமல் சாப்பிடுங்க..!
மேலும், ஆற்றல் உற்பத்தி, நோயெதிர்ப்பு செயல்பாடு, இரத்தம் உறைதல், எலும்புகள் மற்றும் திசுக்களின் பராமரிப்பு ஆகியவற்றில் வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலானது உணவு மற்றும் பிற மூலங்களிலிருந்து வைட்டமின்களைப் பெறுகிறது. அதிலும் உடலில் இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால், பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன.
வைட்டமின் பி 12 என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. இந்த வைட்டமின் பி 12 குறைபாடு ஆனது பெரும்பாலும் உணவுப் பழக்கவழக்கங்கள், மருத்துவ நிலைமைகள் அல்லது பி 12 ஐக் குறைக்கும் சில மருந்துகளின் பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படுகிறது. வயது அதிகரிக்கும் போது, உணவில் இருந்து பி12-ஐ உறிஞ்சும் திறனும் குறைகிறது. அதனால் வயதானவர்களிடம் இந்தக் குறைபாடு அதிகமாக காணப்படுகிறது. அதிலும் இந்த குறைபாடு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் பி12 ஆனது நரம்பு திசு, மூளை செயல்பாடு, சிவப்பு இரத்த அணுக்கள் ஆகியவற்றிற்கு இது முக்கியமானது. இது குறித்து அனுபவம் வாய்ந்த மருத்துவர் திவ்யா நாஸ் கூறியதாவது, வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. நம் உடலும் அதைச் சரியாக உறிஞ்சிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
தயிர், இட்லி, தோசை போன்ற புளித்த உணவுகள் குடல் பாக்டீரியாவை அதிகரிக்கும். இது வைட்டமின் பி12 ஐ எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் இருப்பது குடல் ஆரோக்கியத்தை சீராக்க உதவும். இதன் விளைவாக, உடல் வைட்டமின் பி12 உறிஞ்சுவதை மேம்படுத்தப்படுகிறது.
வைட்டமின் பி 12 உறிஞ்சுவதை காஃபின் தலையிடுகிறது. எனவே, சாப்பிட்ட உடனேயே டீ, காபி போன்றவற்றை குடிக்காமல் இருப்பது நல்லது. மேலும், கீரை, பருப்பு, பீட்ரூட் ஆகியவை இரத்த சிவப்பணு உற்பத்தியை மேம்படுத்துகின்றன. இதன் விளைவாக, வைட்டமின் பி 12 உடலில் சிறப்பாகப் உறிஞ்சப்படுகின்றன.
பால் பொருட்கள் மற்றும் காளான்களை அதிகம் சமைப்பதால், அதில் உள்ள வைட்டமின் பி12 அழிக்கப்படுகிறது. எனவே அதற்கு பதிலாக, லேசாக சமைக்கவும். ஆரோக்கியமான செரிமான அமைப்பு வைட்டமின் பி12 உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. எனவே நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
Cervical Cancer | கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 4 விஷயங்கள்!
கடந்த 2022 இல் மட்டும் இந்த புற்றுநோயால் சுமார் 3.5 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளன. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை வாயின் செல்களில் உருவாகிறது. கருப்பையின் கீழ் பகுதியில் பிறப்புறுப்புடன் இது இணைகிறது. இந்த புற்றுநோய் குறித்து பெரும் அச்சுறுத்தல் இருந்தாலும், ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கலாம் அல்லது திறம்பட சிகிச்சையளிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதிக ஆபத்துள்ள ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தான், பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்பது, பாலியல் தொடர்பு மூலம் பரவும் ஒரு பொதுவான தொற்று ஆகும். தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, உலகளவில் 70% கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களுக்கு எச்பிவி 16 மற்றும் எச்பிவி 18 ஆகியவை அதிக ஆபத்தை விளைவிப்பதாக தெரிவித்துள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள் பெரும்பாலும் புலப்படுவதில்லை. இதனால் அதைக் கண்டறிவது பெண்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது. எனவே, பெண்கள் இந்த புற்றுநோய் பற்றி அறிந்திருக்க வேண்டும் மற்றும் அதன் அபாயத்தைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிக்க வேண்டாம்: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள் பெரும்பாலும் வெளிப்படையாக இல்லை என்றாலும், அசாதாரண ரத்தப்போக்கு (குறிப்பாக உடலுறவுக்குப் பிறகு), தீவிர இடுப்பு வலி அல்லது அசாதாரண வெளியேற்றம் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
வழக்கமான பரிசோதனை: பாப் ஸ்மியர் சோதனைகள் அல்லது எச்பிவி சோதனைகள் போன்ற வழக்கமான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகள், கருப்பை வாயில் அசாதாரண சூழல் அல்லது அசாதாரண செல் செயல்பாடுகளைக் கண்டறிய உதவும். குறிப்பாக, 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகிறது. இதன் வழக்கமான பரிசோதனைகள், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியவும், உயிரைக் காக்கவும் உதவுகிறது.
எச்பிவி தான் முக்கிய காரணம்: பெரும்பாலான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வழக்குகள், ஹீயூமன் பாப்பிலோமா வைரஸால் (HPV) ஏற்படுகின்றன. இது பாலியல் தொடர்புகளின் போது பரவும் ஒரு பொதுவான தொற்று ஆகும். அனைத்து எச்பிவி தொற்றுகளும் புற்றுநோய்க்கு வழிவகுக்காது என்றாலும், சில தொடர்ச்சியான தொற்றுகள் இதன் ஆபத்தை அதிகரிக்கும். எனவே, எச்பிவி தடுப்பூசியை போட்டுக் கொள்வது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும்.
வாழ்க்கை முறை தேர்வுகள்: வழக்கமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஒருவரது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதும் அடங்கும். மேலும், புகைப்பிடிப்பதை விட்டுவிட்டு பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வதும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
February 6, 2025
சளி, இருமல், நோய் எதிப்பு சக்தி.. குழந்தைக்கு தரும் பாலில் இந்த ஒரு மசலாவை கலந்து கொடுங்க..
இரவில் குழந்தைக்கு பாலில் இலவங்கப்பட்டை சேர்ப்பது தூக்கம், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, மூளை செயல்பாடு மற்றும் சளி, இருமல் போன்றவற்றுக்கு உதவும்.
உங்கள் குழந்தை போதுமான ஊட்டச்சத்து பெறுகிறதா என்ற கவலை உங்கள் மனதில் அடிக்கடி எழுகிறதா? ஒரு கிளாஸ் பால் உங்கள் குழந்தை தவறவிடும் ஊட்டச்சத்துக்களை ஈடுசெய்யும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?உங்கள் குழந்தைக்கு இரவில் வழக்கமாக ஒரு கிளாஸ் பால் கொடுக்கிறீர்கள் என்றால், அதில் ஒரு எளிய மசாலா பொருளை சேர்ப்பது அவர்கள் குடிக்கும் பாலின் சுவை மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அது என்ன மசாலா என்று கேட்கிறீர்களா, இலவங்கப்பட்டை தன அது. உங்கள் குழந்தை இரவில் குடிக்கும் பாலில் இந்த அற்புத மசாலாவை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே..
நம் அன்றாட சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலா பொருளாக உள்ளது ஒரு லேசான இனிப்பு சுவையை கொண்டுள்ள இலவங்கப்பட்டை. பாலில் இதை சேர்ப்பது உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- இலவங்கப்பட்டை வழங்கும் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, சிறந்த தூக்கத்திற்கு உதவும் அதன் திறன். இந்த மசாலா பொருளில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைக்கவும், அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இதை சூடான பாலில் சேர்க்கும் போது நல்ல தரமான தூக்க கிடைக்கும் வகையிலான கலவையை உடலில் உருவாக்கும். பாலின் சூடு மற்றும் இலவங்கப்பட்டையின் இயற்கை தன்மை இரண்டும் சேர்ந்து படுக்கை நேரத்திற்கு ஏற்ற பானமாக அமைந்து நன்கு தூங்க உதவுகிறது.
- இலவங்கப்பட்டையில் இயற்கையாகவே காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு போன்றவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. செரிமான கோளாறு அல்லது அஜீரண பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு, இலவங்கப்பட்டை கலந்து ஒரு கப் சூடான பால் கொடுப்பது வயிறு உப்பசம் மற்றும் வாயு தொல்லையை குறைக்க உதவும். செரிமான நொதிகளின் உற்பத்தியை மேம்படுத்த, நம் உடல் உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதை உறுதி செய்ய மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது.
- குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள், இலவங்கப்பட்டையில் அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்து போராடி, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, இதன் மூலம் நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது. எனவே வழக்கமான அடிப்படையில் இரவில் உங்கள் குழந்தைக்கு கொடுக்கும்பாலில் இலவங்கப்பட்டை சேர்ப்பதனால், உங்களின் குழந்தையினுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
- ரத்த சர்க்கரை அளவை இலவங்கப்பட்டை ஒழுங்குபடுத்துகிறது. உங்கள் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருந்தால் அல்லது நீரிழிவு அபாயத்தில் இருந்தால் டயட்டில் இலவங்கப்பட்டை சேர்ப்பது ரத்த சர்க்கரை லெவலை கட்டுப்படுத்த உதவும். இரவு நேரம் குடிக்கும் பாலில் சிறிதளவு இலவங்கப்பட்டை சேர்ப்பது ஆரோக்கியமான குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு கணிசமாக பங்களிக்கும்.
- மூளை செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த மற்றும் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்க உதவும் சேர்மங்கள் இலவங்கப்பட்டையில் உள்ளன. எனவே படிப்பில் கவனம், மன தெளிவு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த மசாலா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே குழந்தைக்கு இரவில் கொடுக்கும் பாலில் இதனை சேர்ப்பது குழந்தைகள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் சிறந்த செயல்திறனை பேணுவதற்கு உதவும்.
- குளிர் சீசனில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலுக்கு இயற்கை தீர்வாக இலவங்கப்பட்டை இருக்கும். இதில் ஆன்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, எனவே தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவும். இலவங்கப்பட்டை சேர்க்கப்பட்ட ஒரு கப் சூடான பால் தொண்டை வலியைத் தணிக்கும், இருமலை குறைக்கும். இதனால் உங்கள் குழந்தை இரவில் மிகவும் சௌகரியமாக தூங்க முடியும்.
உங்கள் குழந்தைக்கு இரவில் வழக்கமாக ஒரு கிளாஸ் பால் கொடுக்கிறீர்கள் என்றால், அதில் ஒரு எளிய மசாலா பொருளை சேர்ப்பது அவர்கள் குடிக்கும் பாலின் சுவை மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அது என்ன மசாலா என்று கேட்கிறீர்களா, இலவங்கப்பட்டை தன அது. உங்கள் குழந்தை இரவில் குடிக்கும் பாலில் இந்த அற்புத மசாலாவை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே..
நம் அன்றாட சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலா பொருளாக உள்ளது ஒரு லேசான இனிப்பு சுவையை கொண்டுள்ள இலவங்கப்பட்டை. பாலில் இதை சேர்ப்பது உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- இலவங்கப்பட்டை வழங்கும் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, சிறந்த தூக்கத்திற்கு உதவும் அதன் திறன். இந்த மசாலா பொருளில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைக்கவும், அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இதை சூடான பாலில் சேர்க்கும் போது நல்ல தரமான தூக்க கிடைக்கும் வகையிலான கலவையை உடலில் உருவாக்கும். பாலின் சூடு மற்றும் இலவங்கப்பட்டையின் இயற்கை தன்மை இரண்டும் சேர்ந்து படுக்கை நேரத்திற்கு ஏற்ற பானமாக அமைந்து நன்கு தூங்க உதவுகிறது.
- இலவங்கப்பட்டையில் இயற்கையாகவே காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு போன்றவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. செரிமான கோளாறு அல்லது அஜீரண பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு, இலவங்கப்பட்டை கலந்து ஒரு கப் சூடான பால் கொடுப்பது வயிறு உப்பசம் மற்றும் வாயு தொல்லையை குறைக்க உதவும். செரிமான நொதிகளின் உற்பத்தியை மேம்படுத்த, நம் உடல் உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதை உறுதி செய்ய மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது.
- குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள், இலவங்கப்பட்டையில் அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்து போராடி, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, இதன் மூலம் நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது. எனவே வழக்கமான அடிப்படையில் இரவில் உங்கள் குழந்தைக்கு கொடுக்கும்பாலில் இலவங்கப்பட்டை சேர்ப்பதனால், உங்களின் குழந்தையினுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
- ரத்த சர்க்கரை அளவை இலவங்கப்பட்டை ஒழுங்குபடுத்துகிறது. உங்கள் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருந்தால் அல்லது நீரிழிவு அபாயத்தில் இருந்தால் டயட்டில் இலவங்கப்பட்டை சேர்ப்பது ரத்த சர்க்கரை லெவலை கட்டுப்படுத்த உதவும். இரவு நேரம் குடிக்கும் பாலில் சிறிதளவு இலவங்கப்பட்டை சேர்ப்பது ஆரோக்கியமான குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு கணிசமாக பங்களிக்கும்.
- மூளை செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த மற்றும் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்க உதவும் சேர்மங்கள் இலவங்கப்பட்டையில் உள்ளன. எனவே படிப்பில் கவனம், மன தெளிவு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த மசாலா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே குழந்தைக்கு இரவில் கொடுக்கும் பாலில் இதனை சேர்ப்பது குழந்தைகள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் சிறந்த செயல்திறனை பேணுவதற்கு உதவும்.
- குளிர் சீசனில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலுக்கு இயற்கை தீர்வாக இலவங்கப்பட்டை இருக்கும். இதில் ஆன்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, எனவே தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவும். இலவங்கப்பட்டை சேர்க்கப்பட்ட ஒரு கப் சூடான பால் தொண்டை வலியைத் தணிக்கும், இருமலை குறைக்கும். இதனால் உங்கள் குழந்தை இரவில் மிகவும் சௌகரியமாக தூங்க முடியும்.
காலை உணவிற்கு தெரியாம கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. நாள் முழுவதும் நெஞ்செரிச்சலா இருக்கும்.!
காலையில் வெறும் வயிற்றில் நெஞ்செரிச்சல், வாயு தொல்லை ஏற்படுவதற்கு மோசமான உணவு, வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் காரணம். சிட்ரஸ் பழங்கள், காபி, டீ, பிஸ்கட், வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் நெஞ்செரிச்சல், வாயு தொல்லை போன்றவை அடிக்கடி ஏற்படுகிறது. மோசமான உணவு, மோசமான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் வெறும் வயிற்றில் வாயு உருவாவதற்கு காரணமாக இருக்கலாம். சாப்பிடும்போதும், குடிக்கும்போதும் தெரியாமல் காற்றை விழுங்குவது, நீண்ட நேரம் பசியோடு இருப்பது, ஒழுங்கற்ற உணவு முறை, மன அழுத்தம் மற்றும் கவலை போன்றவற்றால் வயிற்றில் வாயு உருவாகும். இது தவிர காலையில் நாம் சாப்பிடும் சில உணவுகள், வயிற்றில் வாயு மற்றும் ஆசிட் உருவாக காரணமாகிறது. மேலும், சில உணவுகள் வயிற்றில் ஆசிட்-ஐ உருவாக்குகின்றன. இதன் காரணமாக, வயிற்றில் ஆசிட் ரிஃப்ளக்ஸை ஏற்படுத்தும்.
வயிற்றில் வாயுத்தொல்லை உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவை உண்ணவும், உணவை நன்கு மென்று சாப்பிடவும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். காலையில் வெறும் வயிற்றில் வாயு மற்றும் அசிடிட்டி இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
1. தக்காளி மற்றும் சிட்ரஸ் பழங்கள்: சிலர் அதிகாலையில் ஆரஞ்சு சாப்பிடுவதை விரும்புவார்கள். சிலர் காலை உணவாக தக்காளி சாப்பிடுவார்கள். இவற்றையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நாள் முழுவதும் வயிற்றில் ஆசிட் உருவாகிக்கொண்டே இருக்கும். உண்மையில், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி போன்றவை ஆசிட்-ஐ உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இது வெறும் வயிற்றில் ஆசிட் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த பொருட்களில் சிட்ரிக் ஆசிட் மற்றும் மாலிக் ஆசிட் உள்ளது, இது ஆசிட் உற்பத்தியை அதிகரிக்கிறது.
2. ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்கவும்: சீஸ், பட்டர் போன்றவற்றை காலையில் சாப்பிட்டால் வயிற்றில் ஆசிட் உருவாகும். இந்த பொருட்களில் நிறைய கொழுப்பு உள்ளது. எனவே இந்த கொழுப்பை உடைக்க நிறைய ஆசிட் தேவைப்படும். இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்றில் அதிக ஆசிட் உற்பத்தியாகும். எனவே அவற்றைத் காலையில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களுக்கான நிறுவனம் கூறியுள்ளது.
3. காபி மற்றும் டீ: நீங்கள் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கிறீர்களா? அப்படிப்பட்ட தவறை ஒருபோதும் செய்யாதீர்கள், ஏனெனில் அது வயிற்றில் அதிகப்படியான ஆசிட்-ஐ ஏற்படுத்தும். எனவே காபி அல்லது டீ குடிக்கும் முன், முதலில் ஏதாவது சாப்பிடுங்கள், அதன் பிறகு டீ அல்லது காபி குடிக்கவும். டீ மற்றும் காபியில் உள்ள காஃபின் வயிற்றில் ஆசிட் உற்பத்தியை அதிகரிக்கிறது.
4. பிஸ்கட் மற்றும் குக்கீகள்: சிலர் காலை உணவாக ஒரு கப் டீ அல்லது காபி உடன் பிஸ்கட் சாப்பிடுவார்கள். இந்த இரண்டு கலவைகளும் வயிற்றுக்கு மிகவும் மோசமானவை. இவை இரண்டும் வயிற்றில் அசிடிட்டியை அதிகரிக்கும். பிஸ்கட்டில் ரிஃப்பைன்டு சுகர் மற்றும் மாவு பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் காஃபின் அசிடிட்டியை உருவாக்கும்.
5. வறுத்த உணவு காலையில் வறுத்த உணவுகளை சாப்பிடவே கூடாது. இதில் சோலே பத்துரா, பூரி சப்ஜி, கச்சோரி, சமோசா ஆகியவை அடங்கும். இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் குடல் பிரச்சனைகள் ஏற்படும். அதிகாலையில் அதை ஜீரணிக்க, அதிக என்சைம் மற்றும் பித்தநீர் தேவைப்படுகிறது, ஆனால் இது நடக்கவில்லை என்றால், ஆசிட் உற்பத்தி அதிகரிக்கிறது.
காஃபியுடன் இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் வேகமாக உடல் எடை குறையும்..!
மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்று பிளாக் காபி. பிளாக் காபி என்பது பால் அல்லது சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கப்படும் காபி. பிளாக் காபியை தினமும் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பிளாக் காபியில் உள்ள காஃபின் கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கிறது மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கவும் உதவுகிறது.
பிளாக் காபியை சில உணவுகளுடன் இணைக்கும்போது உடல் எடையை விரைவாக குறைக்கவும் உதவுகிறது. சரியான உணவுடன் இணைந்து அருந்துவது கொழுப்பை எரிக்கவும், பசியைக் குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஊக்குவிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. விரைவான எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக பிளாக் காபியுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய 5 உணவுகள் இங்கே.
1. அவகேடோ பழம் : அவகேடோ பழம் ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதை பிளாக் காபியுடன் இணைக்கும்போது, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் காஃபின் ஆகியவற்றின் சீரான கலவையை வழங்குகின்றன. இது நமக்கு தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி, பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது.
2. முட்டைகள் : பிளாக் காபியுடன் முட்டைகளை சேர்த்து சாப்பிடுவது உடற்பயிற்சி செய்பவர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், நாள் முழுவதும் உங்களை முழுமையாகவும், திருப்தியாகவும் உணர வைக்கும். எனவே தினமும் இரண்டு முட்டைகளை உங்கள் அன்றாட உணவு பட்டியலில் இணைத்து கொள்ளுங்கள்.
3. கிரேக்க தயிர் : கிரேக்க தயிர் காலை உணவு அல்லது சிற்றுண்டிக்கு திருப்திகரமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். கூடுதல் ஊட்டச்சத்திற்காக நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பெர்ரிகள் அல்லது சிறிது சியா விதைகளைச் சேர்க்கவும். இதன் மூலம் உங்களுக்கு தேவையான சீரான உணவு கிடைக்கும்.
4. நட்ஸ் மற்றும் விதைகள் : பிளாக் காபியுடன் நட்ஸ் மற்றும் விதைகளை சேர்த்து சாப்பிடுவது பசியைத் தடுக்க உதவுகின்றன மற்றும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. உங்கள் காலை காபியுடன் ஒரு சிறிய கைப்பிடி அளவு பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள் மற்றும் ஆளி விதை, சூரிய காந்தி விதைகள் போன்ற விதைகளையும் சேர்த்து கொள்வது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவும், நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும்.
5. பெர்ரி : பெர்ரிகளை பிளாக் காபியுடன் இணைப்பது உங்கள் காலை பானத்தின் சுவையை அதிகரிக்கும். அதே நேரத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு கொழுப்பை எரிக்கவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
January 28, 2025
ஜப்பானியர்கள் ஏன் எப்போதும் ஸ்லிமாகவே இருக்கிறார்கள்? இந்த காரணங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?
ஜப்பானியர்களின் தோற்றம் உலகளவில் அனைவரையும் கவர்ந்துள்ளது. பொம்மைகளைப் போல அழகாகவும், கொழுப்பு இல்லாத முகத்துடன், பளபளப்பான சருமத்துடனும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் உண்டு. அவர்களின் வாழ்க்கை முறையின் சில சிறப்பம்சங்களே இதற்கு காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த 5 இரகசியங்களை பின்பற்றுவதன் மூலம் நீங்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.
உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை: ஜப்பானியர்கள் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். இது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
மெதுவாக சாப்பிடுதல்: ஜப்பானியர்கள் உணவை மெதுவாக சாப்பிடுகிறார்கள். இது அவர்களின் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. மென்று சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்கள் சரியாக சேர்கின்றன. இதனால் கொழுப்பு சேராமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிறிய அளவிலான உணவுகள்: ஜப்பானியர்கள் சிறிய அளவில் உணவுகளை உண்கிறார்கள் மற்றும் சமச்சீர் உணவைப் பராமரிக்கிறார்கள். சிறிய கிண்ணங்களில் சிறிய அளவிலான உணவுகளை பரிமாறுகிறார்கள். இது செரிமானத்திற்கும் உதவுகிறது.
பதப்படுத்தப்படாத உணவுகள்: ஜப்பானிய உணவு முறையில் புதிய, பதப்படுத்தப்படாத உணவுகள் அதிகம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைப்பதால் கொழுப்பு மற்றும் சர்க்கரை உட்கொள்ளல் குறைகிறது. பாதுகாப்புகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்பதால் கொழுப்பு கல்லீரல் முதல் கொலஸ்ட்ரால் தொடர்பான பிரச்சனைகள் வரை பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆரோக்கிய பானங்கள்: ஜப்பானியர்கள் அதிக கிரீன் டீ அல்லது பிற ஆரோக்கிய பானங்களை அருந்துகிறார்கள். இது கூடுதல் கலோரிகள் சேர்க்காமல் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது சருமத்திற்கும் உடலுக்கும் நல்லது.
அரிசி பயன்பாடு: ஜப்பானியர்கள் தங்கள் அன்றாட உணவில் அரிசியை சேர்த்துக் கொள்கிறார்கள். சிறிய அளவில் பிசுபிசுப்பான அரிசியை உண்பதன் மூலம் அவர்கள் தங்கள் இளமை மற்றும் உயிர்ச்சக்தியைப் பராமரிக்கிறார்கள்.
வேலை-வாழ்க்கை சமநிலை: ஜப்பானியர்கள் வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு சமநிலையைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். வேலை உடன், அவர்கள் தங்கள் பொழுதுபோக்கு மற்றும் ஆர்வங்களுக்கும் நேரம் கொடுக்கிறார்கள்.
ஆரோக்கியத்தில் கவனம்: ஜப்பானியர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள் மற்றும் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுகிறார்கள்.
சுற்றுச்சூழல் மற்றும் மன ஆரோக்கியம்: ஜப்பானில் தூய்மையான சூழல் நிலவுகிறது. இது மக்களின் உடல் நலத்திற்கு நல்லது. மேலும், ஜப்பானியர்கள் நேர்மறை சிந்தனைக் கொண்டவர்கள். இது அவர்களின் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.
நீண்ட ஆயுட்காலம்: ஜப்பான் உலகின் மிக உயர்ந்த சராசரி ஆயுட்காலம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். அவர்களின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் ரகசியம் அவர்களின் தனித்துவமான வாழ்க்கை முறையில் உள்ளது.
ஜப்பானியர்கள் பொதுவாக மிகவும் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள். நோய்கள் அவர்களை நெருங்குவதில்லை. அவர்கள் நீண்ட ஆயுட்காலத்துடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானிய வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் நாமும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
January 18, 2025
Blockages In Heart: இதயத்தில் அடைப்புகள் உள்ளதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள்..!
Blockages In Heart | மார்பு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு, மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது உடற்பயிற்சியின் போது தாடை அல்லது கைகளில் குறிப்பாக தோள்பட்டை பகுதிகளில் வலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடலில் இருக்கும் ஒரு சிக்கலை இவை குறிக்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே இதய ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது. இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் அறிகுறிகளை சரியாக புரிந்து கொள்வது நம்முடைய அல்லது நமக்கு நெருக்கமானவர்களின் உயிரை காக்கக் கூடும். இதயத்தில் அடைப்புகள் உள்ளதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
பிளட் பேனல்ஸ் மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம்கள் (EKGs) போன்ற மேம்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் இதய பாதிப்புகளை கண்டறிய தேவைப்படும் அவசியமான நோய் அறிதல் கருவிகளாக இருந்தாலும், இதயத்தில் ஏதேனும் அடைப்புகள் உள்ளதா? என்பதை கண்டறிய நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய பரிசோதனைகள் உள்ளன. இதய கோளாறு இருப்பதற்கான அறிகுறிகள் உங்கள் உடலில் இருக்கிறதா என்பதை எவ்வாறு கண்டறிவது என்பதை பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெர்மி விளக்கி உள்ளார்.
உங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதை கவனிப்பதன் முக்கியத்துவம்...
- நம் உடலில் ஏதாவது பாதிப்புகள் இருக்கும்போது உடல் பெரும்பாலும் சிக்னல்களை வெளிப்படுத்துகிறது. எனவே இந்த அறிகுறிகளை கூர்ந்து கவனித்து பாதிப்புகளை வெளிப்படுத்தும் சிக்னல் தான் இது என்பதை புரிந்து கொள்வது இதயத்தில் இருக்கும் அடைப்புகளை கண்டறிவதற்கான சாத்தியமான முதல் படியாகும்.
- உடல் செயல்பாடுகளின் போதோ அல்லது உடல் உழைப்பின் போதோ இதயத்திற்கு அதிக ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் தேவைப்படுகிறது. உதாரணமாக அடைப்பு இருந்தால், அடைப்புக்குக் கீழே உள்ள பகுதி உரிய ரத்த விநியோகமின்றி பாதிக்கப்படும். இது அசௌகரிய உணர்வு ஏற்பட அல்லது வலி ஏற்பட வழிவகுக்கும். அதேநேரம் நீங்கள் ஓய்வெடுக்கும் போது, இதயத்திற்கான ஆக்ஸிஜன் தேவை குறைகிறது. மேலும் இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்கியபோது தோன்றிய அறிகுறிகள் தற்காலிகமாக மறைந்து போகக்கூடும்.
- மார்பு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு, மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது உடற்பயிற்சியின் போது தாடை அல்லது கைகளில் குறிப்பாக தோள்பட்டை பகுதிகளில் வலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடலில் இருக்கும் ஒரு சிக்கலை இவை குறிக்கலாம். எனிமும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த அறிகுறிகள் ஓய்வெடுத்த பிறகும் நீடிக்கிறதா அல்லது குறைகிறதா என்பது தான். இந்த அறிகுறிகள் ஏற்பட காரணம் தமனிகளில் (arteries) ஏற்படும் அடைப்பு இதயத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவது தான்.
அறிகுறிகள் இல்லாதது இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துமா?
மேற்கண்ட அறிகுறிகள் இருப்பதால் மட்டுமே உங்கள் தமனிகளில் அடைப்புகள் இருக்கிறது என்று அர்த்தமில்லை. ஏனென்றால் பாதிப்புகள் கண்டறியப்பட்ட சிலருக்கு குறிப்பிடத்தக்க அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்த போதும் அடைப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த நிலை "silent ischaemia" என்று அழைக்கப்படுகிறது. எனவே தான் வயதிற்கு பின்னர் அனைவருமே, குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், புகைப்பழக்கம் கொண்டவர்கள், நீரிழிவு நோய் அல்லது இதய நோயின் குடும்ப வரலாறு போன்ற ஆபத்து காரணிகளை கொண்டவர்கள் வழக்கமான அடிப்படையில் சுகாதார பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டில் செய்யக்கூடிய எளிய சோதனை
இதயத்தில் இருக்கும் அடைப்பை கண்டறிய வீட்டிலேயே துல்லியமான முடிவை தர கூடிய சோதனை எதுவும் இல்லை என்றாலும், நம்முடைய அன்றாட நடவடிக்கைகளின் போது உடலில் ஏற்படும் எதிர்வினைகளைக் கவனிப்பது நமக்கு மிக முக்கியம். நீங்கள் கவனிக்க வேண்டியவை குறித்து பார்க்கலாம்.
மார்பு அசௌகரியம்
உடற்பயிற்சியின் போது மார்பில் இறுக்கம், அழுத்தம் அல்லது வலி போன்ற எந்தவொரு உணர்வையும் நாம் முக்கியமானதாக கருத வேண்டும். குறிப்பாக இந்த அறிகுறிகள் நாம் ஓய்வெடுக்கும் போது குறைந்துவிட்டால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.
வலி பரவல்
தாடை, இடது கை அல்லது முதுகு வரை வலி பரவுவது இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதை குறிக்கலாம்.
மூச்சுத்திணறல்
உங்களின் அன்றாட செயல்பாடுகளின்போது வழக்கத்திற்கு மாறாக மூச்சுத்திணறல் ஏற்படுவது உங்கள் இதயம் ரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய சிரமப்படுவதை குறிக்கலாம்.
சோர்வு
மார்பு வலி இல்லாவிட்டாலும், தொடர்ச்சியாக அல்லது அசாதாரண சோர்வு உங்களுக்கு நீடிக்கிறது என்றால் அது இதய பிரச்சனைகள் இருப்பதை குறிக்கும் நுட்பமான அறிகுறியாக இருக்கலாம்.
மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சிகிச்சையை தாமதப்படுத்துவது மாரடைப்பு உள்ளிட்ட கடும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். உங்கள் இதயம் மற்றும் தமனிகளின் நிலையை மதிப்பிட EKG, மன அழுத்த சோதனை அல்லது இமேஜிங் ஆய்வுகள் போன்ற சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.
இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க சில எளிய வழிமுறைகள்...
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் லீன் ப்ரோட்டீனை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேநேரம் நிறைவுற்ற கொழுப்புகள், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளை எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்துங்கள்.
வழக்கமான அடிப்படையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் செயல்பாட்டில் ஈடுபடுங்கள்.
நாள்பட்ட மன அழுத்தம் இதயத்தைப் பாதிக்கலாம். தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
புகைப்பழக்கம் ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது மற்றும் அடைப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இப்பழக்கம் இருந்தால் நிறுத்துவது உங்கள் இதயத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்படும் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் உயர் ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் போன்ற ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
அறிகுறிகள் இல்லாதது இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துமா?
மேற்கண்ட அறிகுறிகள் இருப்பதால் மட்டுமே உங்கள் தமனிகளில் அடைப்புகள் இருக்கிறது என்று அர்த்தமில்லை. ஏனென்றால் பாதிப்புகள் கண்டறியப்பட்ட சிலருக்கு குறிப்பிடத்தக்க அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்த போதும் அடைப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த நிலை "silent ischaemia" என்று அழைக்கப்படுகிறது. எனவே தான் வயதிற்கு பின்னர் அனைவருமே, குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், புகைப்பழக்கம் கொண்டவர்கள், நீரிழிவு நோய் அல்லது இதய நோயின் குடும்ப வரலாறு போன்ற ஆபத்து காரணிகளை கொண்டவர்கள் வழக்கமான அடிப்படையில் சுகாதார பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டில் செய்யக்கூடிய எளிய சோதனை
இதயத்தில் இருக்கும் அடைப்பை கண்டறிய வீட்டிலேயே துல்லியமான முடிவை தர கூடிய சோதனை எதுவும் இல்லை என்றாலும், நம்முடைய அன்றாட நடவடிக்கைகளின் போது உடலில் ஏற்படும் எதிர்வினைகளைக் கவனிப்பது நமக்கு மிக முக்கியம். நீங்கள் கவனிக்க வேண்டியவை குறித்து பார்க்கலாம்.
மார்பு அசௌகரியம்
உடற்பயிற்சியின் போது மார்பில் இறுக்கம், அழுத்தம் அல்லது வலி போன்ற எந்தவொரு உணர்வையும் நாம் முக்கியமானதாக கருத வேண்டும். குறிப்பாக இந்த அறிகுறிகள் நாம் ஓய்வெடுக்கும் போது குறைந்துவிட்டால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.
வலி பரவல்
தாடை, இடது கை அல்லது முதுகு வரை வலி பரவுவது இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதை குறிக்கலாம்.
மூச்சுத்திணறல்
உங்களின் அன்றாட செயல்பாடுகளின்போது வழக்கத்திற்கு மாறாக மூச்சுத்திணறல் ஏற்படுவது உங்கள் இதயம் ரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய சிரமப்படுவதை குறிக்கலாம்.
சோர்வு
மார்பு வலி இல்லாவிட்டாலும், தொடர்ச்சியாக அல்லது அசாதாரண சோர்வு உங்களுக்கு நீடிக்கிறது என்றால் அது இதய பிரச்சனைகள் இருப்பதை குறிக்கும் நுட்பமான அறிகுறியாக இருக்கலாம்.
மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சிகிச்சையை தாமதப்படுத்துவது மாரடைப்பு உள்ளிட்ட கடும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். உங்கள் இதயம் மற்றும் தமனிகளின் நிலையை மதிப்பிட EKG, மன அழுத்த சோதனை அல்லது இமேஜிங் ஆய்வுகள் போன்ற சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.
இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க சில எளிய வழிமுறைகள்...
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் லீன் ப்ரோட்டீனை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேநேரம் நிறைவுற்ற கொழுப்புகள், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளை எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்துங்கள்.
வழக்கமான அடிப்படையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் செயல்பாட்டில் ஈடுபடுங்கள்.
நாள்பட்ட மன அழுத்தம் இதயத்தைப் பாதிக்கலாம். தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
புகைப்பழக்கம் ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது மற்றும் அடைப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இப்பழக்கம் இருந்தால் நிறுத்துவது உங்கள் இதயத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்படும் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் உயர் ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் போன்ற ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
6-6-6 Walking Rule: உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தை 6-6-6 நடைப்பயிற்சி விதியுடன் மாற்றி அமையுங்கள்!
6-6-6 Walking Rule | 6-6-6 நடைப்பயிற்சி விதியானது உங்கள் வாழ்க்கை முறையில் வழக்கமான உடற்பயிற்சியை இணைப்பதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் இணக்கத்தை வழங்குகிறது. வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் நடைமுறைகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்துகொள்வதன் மூலம், நிலையான நடைப்பயிற்சியின் நன்மைகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தீவிரத்தை அமைத்துக்கொள்வதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளலாம்.
பரபரப்பான அலுவலக வேலைகளுக்கு மத்தியில், உடற்பயிற்சிக்கான நேரத்தைக் கண்டுபிடிப்பது சவாலானதாக இருக்கலாம். ஜிம் அல்லது யோகா வகுப்புகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு, 6-6-6 என்ற நடைப்பயிற்சி விதி தீர்வை வழங்குகிறது. உங்கள் நடைப்பயிற்சியின் பல்வேறு அம்சங்களில் ஆறாவது எண்ணை உள்ளடக்கிய இந்த எளிதான பின்பற்றக்கூடிய அணுகுமுறை, அதன் எளிமை மற்றும் பிஸியான வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ற ஒன்றாக பிரபலமடைந்து வருகிறது.6-6-6 நடைப்பயிற்சி விதியானது, ஒரு சீரான மற்றும் கட்டமைக்கப்பட்ட நடைப்பயிற்சியை ஊக்குவிக்கிறது. முதலில் 6 நிமிட வார்ம்-அப்புடன் தொடங்கவும். காலை 6 அல்லது மாலை 6 மணிக்குள் 60 நிமிட நடைப்பயிற்சியில் ஈடுபடவும். அடுத்த 6 நிமிடம் ரிலாக்ஸாக இருக்கவும். இந்த சீரான அமைப்பு இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது, மன நலனை மேம்படுத்துதல் மற்றும் உடல் செயல்பாடுகளை உங்கள் அன்றாட வழக்கத்தின் நிலையான பகுதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
6 நிமிட வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் ஆகியவற்றின் செயல்திறன்
- 6 நிமிட வார்ம்-அப் உங்கள் உடலியல் தயார் நிலையை படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் நடைப்பயணத்தின் உடல் தேவைகளுக்கு உங்கள் உடலை முதன்மைப்படுத்துகிறது. இது படிப்படியாக உங்கள் இதயத் துடிப்பை உயர்த்தி, உங்கள் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் அதிகரித்த பணிச்சுமைக்கு உங்கள் இதய அமைப்பை தயார் செய்கிறது.
- 6 நிமிட கூல்-டவுன் படிப்படியாக ஓய்வெடுக்கும் நிலைக்குத் திரும்ப உதவுகிறது. ரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றங்களைத் தடுக்கிறது மற்றும் மீட்புக்கு உதவுகிறது. இது உங்கள் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை படிப்படியாகக் குறைக்க அனுமதிக்கிறது.
- தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி ஏற்படும் அபாயத்தையும் இது குறைக்கிறது. உடற்பயிற்சியின் ஒரு வடிவமாக குறைத்து மதிப்பிடப்படும் நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்யும்போது பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
கார்டியோவாஸ்குலர் ஆரோக்கியம்: நடைப்பயிற்சி என்பது ஒரு ஏரோபிக் செயல்பாடாகும். இது உங்கள் இதய தசையை பலப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. வழக்கமான நடைபயிற்சி புற தமனி நோய் (பிஏடி) அபாயத்தை குறைப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
6-6-6 நடைப்பயிற்சி விதியானது, ஒரு சீரான மற்றும் கட்டமைக்கப்பட்ட நடைப்பயிற்சியை ஊக்குவிக்கிறது. முதலில் 6 நிமிட வார்ம்-அப்புடன் தொடங்கவும். காலை 6 அல்லது மாலை 6 மணிக்குள் 60 நிமிட நடைப்பயிற்சியில் ஈடுபடவும். அடுத்த 6 நிமிடம் ரிலாக்ஸாக இருக்கவும். இந்த சீரான அமைப்பு இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது, மன நலனை மேம்படுத்துதல் மற்றும் உடல் செயல்பாடுகளை உங்கள் அன்றாட வழக்கத்தின் நிலையான பகுதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
6 நிமிட வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் ஆகியவற்றின் செயல்திறன்
- 6 நிமிட வார்ம்-அப் உங்கள் உடலியல் தயார் நிலையை படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் நடைப்பயணத்தின் உடல் தேவைகளுக்கு உங்கள் உடலை முதன்மைப்படுத்துகிறது. இது படிப்படியாக உங்கள் இதயத் துடிப்பை உயர்த்தி, உங்கள் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் அதிகரித்த பணிச்சுமைக்கு உங்கள் இதய அமைப்பை தயார் செய்கிறது.
- 6 நிமிட கூல்-டவுன் படிப்படியாக ஓய்வெடுக்கும் நிலைக்குத் திரும்ப உதவுகிறது. ரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றங்களைத் தடுக்கிறது மற்றும் மீட்புக்கு உதவுகிறது. இது உங்கள் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை படிப்படியாகக் குறைக்க அனுமதிக்கிறது.
- தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி ஏற்படும் அபாயத்தையும் இது குறைக்கிறது. உடற்பயிற்சியின் ஒரு வடிவமாக குறைத்து மதிப்பிடப்படும் நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்யும்போது பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
கார்டியோவாஸ்குலர் ஆரோக்கியம்: நடைப்பயிற்சி என்பது ஒரு ஏரோபிக் செயல்பாடாகும். இது உங்கள் இதய தசையை பலப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. வழக்கமான நடைபயிற்சி புற தமனி நோய் (பிஏடி) அபாயத்தை குறைப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எடை மேலாண்மை: 60 நிமிட விறுவிறுப்பான நடைபயிற்சி, பல கலோரிகளை எரித்து, எடை இழப்பு அல்லது பராமரிப்பிற்கு பங்களிக்கும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் ஆற்றலுக்காக கொழுப்பைப் பயன்படுத்துவதற்கான உடலின் திறனை மேம்படுத்துகிறது.
எலும்பு ஆரோக்கியம்: நடைப்பயிற்சி என்பது எடை தாங்கும் பயிற்சியாகும். இது எலும்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் பலவீனமான எலும்புகள் என வகைப்படுத்தப்படும் எலும்புப்புரையை தடுக்க உதவுகிறது. இது வயதானவர்களுக்கும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் மிகவும் முக்கியமானது.
மனநிலை மேம்பாடு: நடைப்பயிற்சி உட்பட உடற்பயிற்சி, மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைத் தணிக்கும் இயற்கையான முறையில் மனநிலையை உயர்த்தக்கூடிய எண்டோர்பினை வெளியிடத் தூண்டுகிறது. நடைப்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. இது உங்கள் உடலுடன் இணைத்து, உங்கள் மனதையும் தெளிவுபடுத்தும். அத்துடன் உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும். உங்கள் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி பயணத்தை மாற்ற 6-6-6 விதியை பின்பற்றி பயன் பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப் பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.)
படிக்கட்டுகளில் ஏறுவது 10,000 ஸ்டெப்ஸ் நடப்பதை விட அதிக பலன் அளிக்குமா..? ஆய்வில் வெளியான தகவல்!
நடைபயிற்சி செய்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்; எலும்புகள் வலுவடையும்; உடல் எடை குறையும்; என பல விதமான் நன்மைகளை அடுக்கி கொண்டே செல்லலாம். தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது சிறந்தது என நிபுணர்களின் கூற்றுப்படி கூறுகின்றனர். ஏனெனில் இது உடல் இயக்கம் மற்றும் உடலின் சமநிலையை மேம்படுத்தவும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
நடைபயிற்சி செய்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்; எலும்புகள் வலுவடையும்; உடல் எடை குறையும்; என பல விதமான் நன்மைகளை அடுக்கி கொண்டே செல்லலாம். தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது சிறந்தது என நிபுணர்களின் கூற்றுப்படி கூறுகின்றனர். ஏனெனில் இது உடல் இயக்கம் மற்றும் உடலின் சமநிலையை மேம்படுத்தவும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
ஆனால் இந்த எளிய உடற்பயிற்சியின் பலன்களை நீங்கள் கூடுதலாக பெற நினைத்தால் உங்கள் எடை இழப்புக்கான முயற்சிகளை இன்னும் துரிதப்படுத்த நினைத்தால் 10,000 ஸ்டெப்ஸ்கள் நடப்பதற்கு பதில் படிக்கட்டுகளில் ஏறுவது பயனுள்ளதாக இருக்கும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ எங்கு வேண்டுமானாலும் இதை எளிதாக மேற்கொள்ளலாம்.
வாக்கிங் ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றாலும், கலோரிகளைக் குறைக்க அல்லது குறைந்த நேரத்தில் விரும்பிய முடிவுகளைப் பெற நிறைய நேரம் எடுக்கும். இதனிடையே சமீபத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 4,50,000 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வானது நடைபயிற்சிக்கு மாற்றாக படிக்கட்டுகளில் ஏறுவதை விரைவான உடல் எடை குறைப்பிற்கு பரிந்துரைத்துள்ளது. படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சியானது குறைந்த நேரத்தில் பயனுள்ள நன்மைகளை வழங்க கூடியதாக இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது.
Atherosclerosis என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நாளொன்றுக்கு 5 flights அளவிலான படிக்கட்டுகளில் ஏறுவது அல்லது தோராயமாக 50 படிகள் ஏறுவது இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை 20% குறைப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்கட்டுகளில் அடிக்கடி ஏறுவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியை குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறுத்தியவர்களுக்கு இதய நோய் பாதிப்புக்கான ஆபத்து 32 சதவீதம் அதிகரித்ததாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வாக்கிங்குடன் ஒப்பிடும்போது, படிக்கட்டுகளில் ஏறுவது ஒரு மேல்நோக்கிய வாக்கிங் என்பதற்கு சமம். ஏனெனில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக உடலை நகர்த்தி கொண்டு நடக்க வேண்டும் என்பதோடு இது அதிக கலோரிகளை எரிக்கும் எனவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
December 17, 2024
மற்றவர்களை விட நீங்கள் குளிரை அதிகமா உணர்கிறீர்களா..? 'இந்த' வைட்டமின் குறைபாடு இருக்கலாம்!
குளிர்காலம் வந்துவிட்டால், ஜாக்கெட்டுகள், சால்வைகள் மற்றும் பிற சூடான ஆடைகள் பல வீடுகளில் இருந்து வெளியே வந்திருக்கலாம். சிலர் மற்றவர்களை விட குளிர்ச்சியாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம் அல்லது அனுபவித்திருக்கலாம். ஆனால் பலர் இதற்குப் பின்னால் உள்ள காரணத்தைக் கண்டறிய முயற்சிப்பதில்லை, இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உங்களைச் சுற்றியுள்ளவர்களை விட நீங்கள் குளிரால் நடுங்கினால், உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததே காரணம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உங்கள் உடல் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின்கள் மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் இந்த கடுமையான குளிர் ஏற்படுகிறது.
உடல் வெப்பநிலையை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது..?
உடல் வெப்பநிலையை பராமரிப்பது தெர்மோர்குலேஷன் என்று அழைக்கப்படுகிறது. இரும்பு, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் போன்ற வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் இந்த செயல்முறையைத் தடுக்கலாம். இந்த வைட்டமின்கள் இல்லாததால், உங்கள் உடலின் வெப்பத்தைத் தக்கவைக்கும் திறனைக் குறைக்கிறது மற்றும் நீங்கள் அதிக குளிர்ச்சியை உணர்கிறீர்கள்.
இந்த செயல்முறையின் காரணமாக தோராயமாக நமது உடல் 98.6°F (37°C) என்ற வெப்பநிலையை பராமரிக்கப்படுகிறது. மூளை, ரத்த நாளங்கள் மற்றும் வியர்வை சுரப்பிகள் போன்ற அனைத்தும் வெப்ப நிலையை சீராக்குவதற்கு ஒன்றாக இணைந்து வேலை செய்கின்றன. இது குளிர்ச்சியான சூழ்நிலையில் கூட நம்மை சூடாக வைத்திருப்பதையும், வெப்பமான சூழ்நிலையில் கூட நம்மை குளிர்ச்சியாக இருப்பதையும் உறுதி செய்கிறது. இருப்பினும் இந்த சமநிலை ஒரு சில காரணிகளால் சீர்குலைக்கப்படலாம். அவை,
-வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள்
-அளவுக்கு அதிகமான வெப்ப நிலைகள்
-வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள்
ஊட்டச்சத்துக்கும் குளிர் உணர்வுக்கும் இடையே உள்ள தொடர்பு:
நமது உடலில் உள்ள பல ஊட்டச்சத்துக்களில், தெர்மோ ரெகுலேஷன் செயல்முறை சீராக நடைபெறுவதற்கு வைட்டமின் B12, ஃபோலேட் மற்றும் வைட்டமின் C போன்றவை அவசியம். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து வேலை செய்து போதுமான அளவு சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி மற்றும் ஆக்சிஜன் போக்குவரத்தை உறுதி செய்கிறது, இது உடலின் வெப்பநிலையை பராமரிப்பதற்கான முக்கிய கூறுகளாகும்.
உடலில் வெப்பத்திற்கு இரும்பு ஏன் தேவைப்படுகிறது?
உடலில் ஹீமோகுளோபின் தயாரிக்க இரும்புச்சத்து தேவை. ஹீமோகுளோபின் இரத்த சிவப்பணுக்களில் உள்ளது மற்றும் அது உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. உடலில் இரும்புச் சத்து குறையும் போது, ஹீமோகுளோபின் குறைந்து, ஆக்ஸிஜன் சரியாக உடலுக்குச் செல்லாமல், தசைகளில் வெப்பம் உருவாகாது. இதன் காரணமாக, மக்கள் அதிக குளிர், சோர்வு, பலவீனம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
வைட்டமின் பி12 குறைபாடு:
வைட்டமின் பி12 உடலின் சிவப்பு அணுக்கள் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமானது. உடலில் வைட்டமின் பி 12 இல்லாவிட்டால், இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி செய்யப்படாவிட்டால், இது இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இதனால், கை, கால் போன்ற பாகங்கள் குளிர்ச்சியடைகின்றன.
ஃபோலேட் குறைபாடு
ஃபோலேட் என்பது சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதற்கு வைட்டமின் B12 உடன் இணைந்து வேலை செய்கிறது. ஃபோலேட் குறைபாடு ஏற்பட்டால் உங்களுக்கு குளிர், சோர்வு மற்றும் மோசமான ரத்த ஓட்டம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். மேலும், ஃபோலேட் குறைபாடானது பெரும்பாலும் திசுக்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜனை கொண்டு சேர்க்காது.
வைட்டமின் சி மற்றும் இரும்பு உறிஞ்சுதல்:
தோல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் சி முக்கியமானது. ஆனால் உடலில் அது குறையும்போது குளிர் அதிகமாகத் தொடங்குகிறது. இரும்புச்சத்து உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் கேள்விப்படுகிறீர்கள், ஆனால் சில சமயங்களில் அதை சாப்பிட்ட பிறகும் இரும்புச்சத்து குறைபாட்டை உணருவீர்கள், ஏனெனில் உடலில் வைட்டமின் சி இல்லை. உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி அவசியம்.
மற்றவர்களை விட உங்களுக்கு சளி அதிகமாக இருந்தால், உங்கள் உடலில் இந்த வைட்டமின்களில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம். எனவே இதுபோன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உங்கள் மருத்துவரை அணுகவும்.
குளிர் காலத்தில் காலையில் வாக்கிங் செல்வது ஆபத்தானதா...? நிபுணர் சொல்வது என்ன...?
நாட்டில் குளிர் சீசன் துவங்கி உள்ள நிலையில், இந்த ஜில் கிளைமேட்டில் காலை சீக்கிரம் எழுந்து விறுவிறுப்பாக வாக்கிங் செல்ல பலரும் விரும்புவார்கள். ஆனால் ஏற்கனவே சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளிர்காலத்தில் காலை நடைபயிற்சி செய்வது பரிந்துரைக்கப்படாமல் போகலாம்.
குருகிராமில் இருக்கும் சிகே பிர்லா மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் குல்தீப் குமார் குரோவர் பேசுகையில், குளிர் சீசனில் நிலவும் குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று மூச்சுக்குழாயை இறுக்கமாக்குகிறது மற்றும் சுவாசிப்பதை மிகவும் கடினமாக்குகிறது. இது வீசிங், இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, குளிர் சீசனானது ஆஸ்துமா அல்லது சிஓபிடி பிரச்சனையால் ஏற்கனவே அவதிப்படுபவர்களுக்கு சற்று கடினமான சூழலாக இருக்கும். ஏனெனில் இது போன்ற நபர்களின் நுரையீரலை இன்னும் கடினமாக்கும். குளிர்ந்த காற்றை வெப்பமாக்க மற்றும் ஈரப்பதமாக்க அவர்களின் உடல் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். தவிர ஆண்டின் இந்த சீசனில் எழும் மற்றொரு முக்கிய கவலை காற்று மாசு அதிகரிப்பு ஆகும். அதிகாலையில் மாசுபாடு மிகவும் பொதுவானது. ஏனெனில் குளிர்காலத்தில் இருக்கும் temperature inversions கார் போன்ற வாகனங்களில் இருந்து வெளியேறும் மற்றும் தரைக்கு அருகில் உள்ள தொழிற்சாலை உமிழ்வுகள் போன்ற மாசுபாடுகளை தக்கவைக்கிறது.
இது வளிமண்டலத்தில் அதிக அளவிலான தீங்கு விளைவிக்கும் மாசு துகள்களை ஏற்படுத்துவதோடு, நம் நுரையீரலை எரிச்சலூட்டுகிறது. அழற்சி / வீக்கத்தை தீவிரப்படுத்துகிறது. ஏற்கனவே சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் அறிகுறிகளை மோசமாக்குகிறது. மேலும், இது போன்ற மாசுக்கள் நிறைந்த காற்றை ஆஸ்துமா அல்லது வேறு ஏதேனும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் சுவாசிப்பது மேலும் பிரச்சனையை தீவிரமாகும் என்பதால், அவர்கள் வெளிப்புறத்தில் செய்யும் வாக்கிங் போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை மிகவும் கடினமாக்குகிறது என்று டாக்டர் குரோவர் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், குளிர் சீசனில் பரவலாக காணப்படும் வறண்ட மற்றும் குளிர்ந்த காற்று டிஹைட்ரேஷனை ஏற்படுத்துகிறது, இது சுவாச மண்டலத்தை சேதப்படுத்தும். மேலும் குளிர்ந்த காற்று தொண்டை மற்றும் காற்று பாதைகளை உலர்த்தும் தன்மை கொண்டது என்பதால் இந்த சூழல் சுவாசிப்பதை மிகவும் அசௌகரியமானதாக, கடினமானதாக ஆக்குகிறது. ஏற்கனவே டிஹைட்ரேஷனுக்கு உள்ளானவர்களுக்கு, வயதானவர்கள் அல்லது நாள்பட்ட மருத்துவ நிலைமைகள் உள்ளவர்களுக்கு இது அதிக இருமலை ஏற்படுத்தும் மற்றும் அவர்களுக்கு இருக்கும் சுவாச பிரச்சனை சார்ந்த அறிகுறிகளை அதிகரிக்கச் செய்யும் என்றார்.
தவிர குளிர்காலம் சளி, காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட தொற்றுகள் பரவும் உச்ச சீசனாக உள்ளது. மேலும் குளிர் காற்று நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியைக் குறைக்கிறது. எனவே, உடல் மேற்கண்ட தொற்றுகளால் எளிதில் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. குளிர்காலத்தில் காலை சிறிது நேரம் வாக்கிங் செல்ல விரும்புவோர் வெளியில் செல்வதற்கு முன் வீட்டிற்குள் ப்ரீஹீட் செய்வது, காற்றை moisten-ஆக்க ஸ்கார்வ்ஸ் அல்லது மாஸ்க் பயன்படுத்துவது மற்றும் ஹைட்ரேஷனாக இருப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி குளிர் காலத்தில் வாக்கிங் செல்வது பாதுகாப்பாக இருக்கும் என்கிறார்.