எல்லா சீசன்களிலும் நமக்கு எளிதாக கிடைக்கும் ஒரு பழம் பப்பாளி ஆகும். இதில் டயட்ரி ஃபைபர் சத்து, அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் கேன்சர் ஏற்படும் அபாயம் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் பப்பாளி பழமானது உடல் எடை மேலாண்மைக்கும் பயனுள்ளதாக இருக்கும். எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், பப்பாளி பழம் அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம்... பப்பாளி சாப்பிடுவது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும். இந்த பழத்தை யார் எல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
கர்ப்பிணிப் பெண்கள்: கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிட கூடாது. ஏனென்றால் இந்த பழத்தில் லேடெக்ஸ் என்ற ஒரு கலவை உள்ளது. இது கருப்பை சுருக்கங்களை (uterine contractions) ஏற்படுத்தி கருக்கலைப்பு அல்லது முன்கூட்டிய பிரசவத்திற்கு வழிவகுக்கும். தவிர பப்பாளியில் உள்ள பப்பேன் என்ற நொதி கருக்கலைவிற்கு காரணமாகி விடக் கூடும்.
சீரற்ற இதய துடிப்பு கொண்டவர்கள்: பப்பாளி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனினும் சீரற்ற இதய துடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம் அவ்வளவு நல்லதல்ல. இதில் சயனோஜெனிக் கிளைகோசைட்ஸ் எனப்படும் அமினோ ஆசிட் மிதமான அளவில் உள்ளது. இது செரிமான அமைப்பில் ஹைட்ரஜன் சயனைடை உருவாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட அளவில் எடுத்து கொண்டால் பப்பாளி எந்தத் தீங்கும் விளைவிக்காது. இருப்பினும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளின் பிரச்சனை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பப்பாளி பழத்தால் இதே போன்ற எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.
லேடெக்ஸ் அலர்ஜி: லேடெக்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் இருக்கும் கைட்டினேஸஸ் எனப்படும் நொதிகள், லேடெக்ஸ் புரதங்களுடன் கிராஸ்-ரியாக்ட் புரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் கண்களில் நீர் வடிதல் உள்ளிட்டவை அறிகுறிகளாகும். சிலருக்கு பப்பாளியின் வாசனை கூட வராது.
சிறுநீரக கற்கள்: வலுவான ஆன்டிஆக்சிடன்ட்டான வைட்டமின் சி பப்பாளி பழத்தில் அதிகமாக உள்ளது. ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஊட்டச்சத்தை அதிகமாக உட்கொள்வது நிலைமையை மோசமாக்கும். வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வதால், கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயமும் அதிகரிக்கிறது.
ரத்த சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள்: நீரிழிவு நோயை நிர்வகிக்க பப்பாளி ஒரு சிறந்த வழி. எனினும் குறைந்த ரத்த சர்க்கரை அளவு (ஹைபோகிளைசீமியா) உள்ளவர்களுக்கு இந்த பழம் அவ்வளவு நல்லதல்ல. இந்த பழத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் இயற்கை பண்புகள் உள்ளன. எனவே ஏற்கனவே ஹைபோகிளைசீமியா நிலை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவானது ஆபத்தான அளவிற்குக் குறையக் கூடும்.
February 18, 2025
Papaya | பப்பாளி சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்.. இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..!
தினமும் 30 நிமிடங்கள் நடந்தாலே.. நம் உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா..?
உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்னஸாகவும் வைத்திருக்க ஜிம் செல்ல வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட நேரம் நடைபயிற்சி செய்தாலே போதும் என்கிறார்கள் நிபுணர்கள்.
நாம் நடந்த பிறகு நம் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? ஒரு எளிய, நிதானமான நடைப்பயணம் பல அதிசயங்களைச் செய்யும்! உங்கள் மனநிலையை அதிகரிப்பதில் இருந்து உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவது வரை, தினசரி நடைப்பயணம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் எதிர்பார்க்காத வழிகளில் மாற்றும்.
தினமும் 30 நிமிடங்கள் நடப்பது உங்கள் உடலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நாங்கள் உங்களிடம் சொன்னால் நம்புவீர்களா? இதற்காக நீங்கள் நடக்கும் அடிகளை எண்ணவோ அல்லது வியர்வை சிந்தவோ தேவையில்லை. ஒரு எளிய, நிதானமான நடைப்பயணம் பல அதிசயங்களைச் செய்யும்! உங்கள் மனநிலையை அதிகரிப்பதில் இருந்து உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவது வரை, தினசரி நடைப்பயணம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் எதிர்பார்க்காத வழிகளில் மாற்றும். குறைத்து மதிப்பிடப்படும் நடைப்பயிற்சியின் சில சிறந்த நன்மைகள் இதோ!
உங்கள் எலும்புகள் வலுவடைகின்றன : நடைப்பயிற்சி என்பது எடை தாங்கும் பயிற்சி. அதாவது உங்கள் எலும்புகள் ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட வேண்டும். இது எலும்பு அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. வயதாகும்போது எலும்புப்புரை மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. உங்கள் எலும்புக்கூட்டை உறுதியாகவும் வலுவாகவும் வைத்திருக்க, இதை ஒரு பயிற்சியாக வைத்துப் கொள்ளுங்கள்!
உங்கள் மனநிலையை உற்சாகப்படுத்தும் : கொஞ்சம் எரிச்சலாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்கிறீர்களா? 30 நிமிட நடைப்பயிற்சி இந்த நிலைமையை மாற்றும்! நடைப்பயிற்சி "நல்ல உணர்வு" ஹார்மோன்கள் என்றும் அழைக்கப்படும் எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இது பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் கூட குறைக்க உதவுகிறது. இதை ஒரு இலவச சிகிச்சை அமர்வாகக் கருதுங்கள்.
நல்ல தூக்கத்திற்கு உதவும் : இரவில் புரண்டு புரண்டு படுக்கிறீர்களா? தினசரி நடைப்பயிற்சி உங்கள் தூக்க சுழற்சியை சீராக்க உதவும். இதனால் தூங்குவது எளிதாகி, ஆழ்ந்த தூக்கம் வரும். நடைபயிற்சி மன அழுத்தத்தைக் குறைத்து, உங்கள் உடலின் இயற்கையான தாளத்தை சீராக்க உதவுகிறது, இதனால் ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கம் வரும்.
இனி மதிய வேளையில் தூக்கம் வராது : இது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் உங்கள் உடலை நகர்த்துவது உண்மையில் அதிக சக்தியைத் தருகிறது. நடைபயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உங்கள் செல்களுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இனி மந்தமான மதியத்திற்கு விடைகொடுங்கள். உங்கள் தினசரி நடைப்பயிற்சி காபியை விட சிறந்ததாக இருக்கலாம்!
நோய்க்கு எதிரான கவசம் : தொடர்ந்து நடப்பது இதய நோய், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்புகளைக் குறைக்கும். இது இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் உங்கள் இதயத்தை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது. ஆரோக்கியமான எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கான எளிதான வழிகளில் ஒன்று எளிமையான நடைப்பயணமாகும்.
எளிதாக கலோரிகளை எரிக்கலாம் : ஜிம்மிற்குச் செல்லாமல் ஆரோக்கியமான எடையை பராமரிக்க விரும்புகிறீர்களா? கலோரிகளை எரிக்கவும், அதிகப்படியான எடையைத் குறைக்கவும் நடைப்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். கூடுதலாக, இது உங்கள் கால்கள், உடலின் மையப்பகுதி மற்றும் இடுப்புகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் தீவிரமான உடற்பயிற்சிகளின் தொந்தரவு இல்லாமல் உங்களுக்கு நுட்பமான உடற்பயிற்சி ஊக்கத்தை அளிக்கிறது.
Diabetes Tips | நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா..? நிபுணர்கள் சொல்வது என்ன..?
நீரிழிவு நோய் சமீப காலமாக பலருக்கும் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. வயது வித்தியாசமின்றி அனைவரையும் இந்த நோய் பாதிக்கிறது. நீரிழிவு நோய் வருவது ஒரு பெரிய பிரச்சனை என்றாலும், அது வந்த பிறகு உங்கள் உணவுப் பழக்கத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா? இல்லையா? என்ற கேள்விக்கான பதிலை இப்போது பார்ப்போம்.
கரும்பு அல்லது பனை சாற்றில் இருந்து வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கியமான தாதுக்கள் உள்ளன. அதனால்தான் வெல்லம் சாப்பிடுவது ஆயுர்வேதத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் நல்லதா?. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெல்லம் இயற்கையானது என்றாலும், அதில் அதிக கிளைசெமிக் குறியீடு (GI) உள்ளது. இதன் பொருள் இது ரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடுவது ஆபத்தானது.
வெல்லம் சர்க்கரையை விட ஜீரணிக்க சிறிது நேரம் எடுக்கும். ஆனால் அதன் விளைவு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. எனவே, அதை சாப்பிடுவது ரத்த சர்க்கரையில் திடீர் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். வெல்லத்தில் கலோரிகள் அதிகம். அடிக்கடி உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கும். இது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
வெல்லத்தில் அதிக அளவு சுக்ரோஸ் (ஒரு வகை சர்க்கரை) உள்ளது. இது உடலில் விரைவாக குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, வெல்லம் சாப்பிட யாராவது உங்களுக்கு அறிவுறுத்தினாலும், அதைப் பின்பற்ற வேண்டாம்.
வெல்லத்தை தொடர்ந்து உட்கொண்டால், உடல் குறைவான இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இது கடுமையான நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் மற்றும் வெளியில் இருந்து இன்சுலின் எடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இல்லையென்றால் மிகக் குறைந்த அளவில் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது. வெல்லம் சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகத் தோன்றினாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஏற்றதல்ல. எனவே எதையும் சாப்பிடுவதற்கு முன்பு, மருத்துவரை அணுக வேண்டும்.
உங்க குடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படிங்க..!
உங்கள் செரிமான அமைப்பு உணவை பதப்படுத்தும் வேகம், செரிமான ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டியாகும். இது ஊட்டச்சத்து உறிஞ்சுதல், கழிவு நீக்கம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதிக்கிறது. மந்தமான குடல் செயபாடு வீக்கம், மலச்சிக்கல் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் அதிகப்படியான குடல் இயக்கம், ஊட்டச்சத்து உறிஞ்சிதலில் கேடு விளைவிக்கும். வழிவகுக்கும். உங்கள் குடல் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
செரிமான செயல்முறை
நீங்கள் உணவை மென்று விழுங்கியவுடன், அது இரைப்பை குடல் பாதை வழியாக நகர்கிறது பின்னர் அது இந்த உறுப்புகள் வழியாக செல்கிறது: வயிற்றில் கலக்கப்பட்டு ஜீரணிக்கப்படுகிறது; ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது சிறு குடல்; கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தண்ணீர் மற்றும் உப்புகளை பிரித்தெடுக்கிறது பெரிய குடல்..
குடல் இயக்கம் என்றால் என்ன?
குடல் இயக்கம் என்பது செரிமான அமைப்பு வழியாக உணவின் இயக்கத்தைக் குறிக்கிறது. இது நமது குடலில் உள்ள டிரில்லியன் கணக்கான பாக்டீரியாக்களால் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் செயல்முறையாகும். இந்த நுண்ணுயிரிகள் உணவை உடைப்பதிலும், நோயெதிர்ப்பு மண்டல வளர்ச்சியை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் குடல் நுண்ணுயிரியை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமாக்குகிறது.
இந்த பாக்டீரியாக்கள் மற்றும் அவற்றின் துணைப் பொருட்கள் இல்லாமல், உணவை திறம்பட நகர்த்தும் உடலின் திறன் குறைந்து, அசௌகரியம், மலச்சிக்கல் மற்றும் செரிக்கப்படாத பொருட்களின் குவிப்புக்கு வழிவகுக்கும்.
குடல் போக்குவரத்து (Gut Transit) நேரம் என்றால் என்ன?
குடல் போக்குவரத்து நேரம் என்பது உணவு முழு செரிமானப் பாதை வழியாகவும் பயணிக்க எடுக்கும் நேரத்தைக் குறிக்கிறது. இந்த கால அளவு நபருக்கு நபர் மாறுபடும். சராசரியாக, உணவு உடலைக் கடந்து செல்ல சுமார் 23 முதல் 24 மணி நேரம் ஆகும். ஆனால் இதன் வரம்பு 12 முதல் 73 மணி நேரம் வரை இருக்கலாம்.
குடல் செயல்பாட்டு நேரம் மெதுவாக இருக்கும்போது, அது குடல் இயக்கம் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. இது பெருங்குடலில் பாக்டீரியா செயல்பாட்டில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. மனிதர்களைப் போலவே, குடல் பாக்டீரியாக்களுக்கும் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இருப்பினும், நார்ச்சத்து பெருங்குடலை அடைய அதிக நேரம் எடுத்தால், இந்த நுண்ணுயிரிகள் ஜீரணிக்கும் புரதத்திற்கு மாறக்கூடும். இந்த மாற்றம் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உருவாக்கி, வீக்கம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
வீட்டிலேயே உங்கள் குடல் வேகத்தைச் சரிபார்க்கலாம்
7 முதல் 10 நாட்களுக்கு இனிப்பு சோளம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பின்னர் ஒரு கைப்பிடி அளவு இனிப்புச் சோளம் அல்லது சோளத்தை சாப்பிடுங்கள். நேரம் மற்றும் தேதியைக் குறித்து வைத்துக்கொள்ளவும்.
.அடுத்த சில நாட்களுக்கு உங்கள் மலத்தைக் கவனித்து, சோளத்தின் வெளிப்புற ஓடுகளை நீங்கள் முதலில் கவனிக்கும்போது பதிவு செய்யவும்.
இது உறுதியான மருத்துவ பரிசோதனை இல்லையென்றாலும், இந்த எளிய முறை உணவு முழு செரிமானப் பாதை வழியாகவும் பயணிக்க எடுக்கும் நேரத்தின் நியாயமான மதிப்பீட்டை வழங்குகிறது. சோளம் 12 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் தோன்றினால், உங்கள் செரிமானம் வேகமாக இருப்பதாக அர்த்தம். 48 மணிநேரம் அல்லது அதற்கு மேல் எடுத்தால், உங்கள் Gut Transit மெதுவாக இருக்கிறது என அர்த்தம்.
வைட்டமின் பி12 உறிஞ்சுதலை எளிமையாக்கும் உணவுகள்.. இவற்றை தவறாமல் சாப்பிடுங்க..!
மேலும், ஆற்றல் உற்பத்தி, நோயெதிர்ப்பு செயல்பாடு, இரத்தம் உறைதல், எலும்புகள் மற்றும் திசுக்களின் பராமரிப்பு ஆகியவற்றில் வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலானது உணவு மற்றும் பிற மூலங்களிலிருந்து வைட்டமின்களைப் பெறுகிறது. அதிலும் உடலில் இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால், பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன.
வைட்டமின் பி 12 என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. இந்த வைட்டமின் பி 12 குறைபாடு ஆனது பெரும்பாலும் உணவுப் பழக்கவழக்கங்கள், மருத்துவ நிலைமைகள் அல்லது பி 12 ஐக் குறைக்கும் சில மருந்துகளின் பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படுகிறது. வயது அதிகரிக்கும் போது, உணவில் இருந்து பி12-ஐ உறிஞ்சும் திறனும் குறைகிறது. அதனால் வயதானவர்களிடம் இந்தக் குறைபாடு அதிகமாக காணப்படுகிறது. அதிலும் இந்த குறைபாடு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் பி12 ஆனது நரம்பு திசு, மூளை செயல்பாடு, சிவப்பு இரத்த அணுக்கள் ஆகியவற்றிற்கு இது முக்கியமானது. இது குறித்து அனுபவம் வாய்ந்த மருத்துவர் திவ்யா நாஸ் கூறியதாவது, வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. நம் உடலும் அதைச் சரியாக உறிஞ்சிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
தயிர், இட்லி, தோசை போன்ற புளித்த உணவுகள் குடல் பாக்டீரியாவை அதிகரிக்கும். இது வைட்டமின் பி12 ஐ எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் இருப்பது குடல் ஆரோக்கியத்தை சீராக்க உதவும். இதன் விளைவாக, உடல் வைட்டமின் பி12 உறிஞ்சுவதை மேம்படுத்தப்படுகிறது.
வைட்டமின் பி 12 உறிஞ்சுவதை காஃபின் தலையிடுகிறது. எனவே, சாப்பிட்ட உடனேயே டீ, காபி போன்றவற்றை குடிக்காமல் இருப்பது நல்லது. மேலும், கீரை, பருப்பு, பீட்ரூட் ஆகியவை இரத்த சிவப்பணு உற்பத்தியை மேம்படுத்துகின்றன. இதன் விளைவாக, வைட்டமின் பி 12 உடலில் சிறப்பாகப் உறிஞ்சப்படுகின்றன.
பால் பொருட்கள் மற்றும் காளான்களை அதிகம் சமைப்பதால், அதில் உள்ள வைட்டமின் பி12 அழிக்கப்படுகிறது. எனவே அதற்கு பதிலாக, லேசாக சமைக்கவும். ஆரோக்கியமான செரிமான அமைப்பு வைட்டமின் பி12 உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. எனவே நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
Cervical Cancer | கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 4 விஷயங்கள்!
கடந்த 2022 இல் மட்டும் இந்த புற்றுநோயால் சுமார் 3.5 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளன. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை வாயின் செல்களில் உருவாகிறது. கருப்பையின் கீழ் பகுதியில் பிறப்புறுப்புடன் இது இணைகிறது. இந்த புற்றுநோய் குறித்து பெரும் அச்சுறுத்தல் இருந்தாலும், ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கலாம் அல்லது திறம்பட சிகிச்சையளிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதிக ஆபத்துள்ள ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தான், பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்பது, பாலியல் தொடர்பு மூலம் பரவும் ஒரு பொதுவான தொற்று ஆகும். தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, உலகளவில் 70% கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களுக்கு எச்பிவி 16 மற்றும் எச்பிவி 18 ஆகியவை அதிக ஆபத்தை விளைவிப்பதாக தெரிவித்துள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள் பெரும்பாலும் புலப்படுவதில்லை. இதனால் அதைக் கண்டறிவது பெண்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது. எனவே, பெண்கள் இந்த புற்றுநோய் பற்றி அறிந்திருக்க வேண்டும் மற்றும் அதன் அபாயத்தைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிக்க வேண்டாம்: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள் பெரும்பாலும் வெளிப்படையாக இல்லை என்றாலும், அசாதாரண ரத்தப்போக்கு (குறிப்பாக உடலுறவுக்குப் பிறகு), தீவிர இடுப்பு வலி அல்லது அசாதாரண வெளியேற்றம் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
வழக்கமான பரிசோதனை: பாப் ஸ்மியர் சோதனைகள் அல்லது எச்பிவி சோதனைகள் போன்ற வழக்கமான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகள், கருப்பை வாயில் அசாதாரண சூழல் அல்லது அசாதாரண செல் செயல்பாடுகளைக் கண்டறிய உதவும். குறிப்பாக, 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகிறது. இதன் வழக்கமான பரிசோதனைகள், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியவும், உயிரைக் காக்கவும் உதவுகிறது.
எச்பிவி தான் முக்கிய காரணம்: பெரும்பாலான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வழக்குகள், ஹீயூமன் பாப்பிலோமா வைரஸால் (HPV) ஏற்படுகின்றன. இது பாலியல் தொடர்புகளின் போது பரவும் ஒரு பொதுவான தொற்று ஆகும். அனைத்து எச்பிவி தொற்றுகளும் புற்றுநோய்க்கு வழிவகுக்காது என்றாலும், சில தொடர்ச்சியான தொற்றுகள் இதன் ஆபத்தை அதிகரிக்கும். எனவே, எச்பிவி தடுப்பூசியை போட்டுக் கொள்வது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும்.
வாழ்க்கை முறை தேர்வுகள்: வழக்கமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஒருவரது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதும் அடங்கும். மேலும், புகைப்பிடிப்பதை விட்டுவிட்டு பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வதும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
February 6, 2025
சளி, இருமல், நோய் எதிப்பு சக்தி.. குழந்தைக்கு தரும் பாலில் இந்த ஒரு மசலாவை கலந்து கொடுங்க..
இரவில் குழந்தைக்கு பாலில் இலவங்கப்பட்டை சேர்ப்பது தூக்கம், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, மூளை செயல்பாடு மற்றும் சளி, இருமல் போன்றவற்றுக்கு உதவும்.
உங்கள் குழந்தை போதுமான ஊட்டச்சத்து பெறுகிறதா என்ற கவலை உங்கள் மனதில் அடிக்கடி எழுகிறதா? ஒரு கிளாஸ் பால் உங்கள் குழந்தை தவறவிடும் ஊட்டச்சத்துக்களை ஈடுசெய்யும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?உங்கள் குழந்தைக்கு இரவில் வழக்கமாக ஒரு கிளாஸ் பால் கொடுக்கிறீர்கள் என்றால், அதில் ஒரு எளிய மசாலா பொருளை சேர்ப்பது அவர்கள் குடிக்கும் பாலின் சுவை மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அது என்ன மசாலா என்று கேட்கிறீர்களா, இலவங்கப்பட்டை தன அது. உங்கள் குழந்தை இரவில் குடிக்கும் பாலில் இந்த அற்புத மசாலாவை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே..
நம் அன்றாட சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலா பொருளாக உள்ளது ஒரு லேசான இனிப்பு சுவையை கொண்டுள்ள இலவங்கப்பட்டை. பாலில் இதை சேர்ப்பது உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- இலவங்கப்பட்டை வழங்கும் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, சிறந்த தூக்கத்திற்கு உதவும் அதன் திறன். இந்த மசாலா பொருளில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைக்கவும், அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இதை சூடான பாலில் சேர்க்கும் போது நல்ல தரமான தூக்க கிடைக்கும் வகையிலான கலவையை உடலில் உருவாக்கும். பாலின் சூடு மற்றும் இலவங்கப்பட்டையின் இயற்கை தன்மை இரண்டும் சேர்ந்து படுக்கை நேரத்திற்கு ஏற்ற பானமாக அமைந்து நன்கு தூங்க உதவுகிறது.
- இலவங்கப்பட்டையில் இயற்கையாகவே காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு போன்றவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. செரிமான கோளாறு அல்லது அஜீரண பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு, இலவங்கப்பட்டை கலந்து ஒரு கப் சூடான பால் கொடுப்பது வயிறு உப்பசம் மற்றும் வாயு தொல்லையை குறைக்க உதவும். செரிமான நொதிகளின் உற்பத்தியை மேம்படுத்த, நம் உடல் உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதை உறுதி செய்ய மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது.
- குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள், இலவங்கப்பட்டையில் அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்து போராடி, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, இதன் மூலம் நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது. எனவே வழக்கமான அடிப்படையில் இரவில் உங்கள் குழந்தைக்கு கொடுக்கும்பாலில் இலவங்கப்பட்டை சேர்ப்பதனால், உங்களின் குழந்தையினுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
- ரத்த சர்க்கரை அளவை இலவங்கப்பட்டை ஒழுங்குபடுத்துகிறது. உங்கள் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருந்தால் அல்லது நீரிழிவு அபாயத்தில் இருந்தால் டயட்டில் இலவங்கப்பட்டை சேர்ப்பது ரத்த சர்க்கரை லெவலை கட்டுப்படுத்த உதவும். இரவு நேரம் குடிக்கும் பாலில் சிறிதளவு இலவங்கப்பட்டை சேர்ப்பது ஆரோக்கியமான குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு கணிசமாக பங்களிக்கும்.
- மூளை செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த மற்றும் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்க உதவும் சேர்மங்கள் இலவங்கப்பட்டையில் உள்ளன. எனவே படிப்பில் கவனம், மன தெளிவு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த மசாலா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே குழந்தைக்கு இரவில் கொடுக்கும் பாலில் இதனை சேர்ப்பது குழந்தைகள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் சிறந்த செயல்திறனை பேணுவதற்கு உதவும்.
- குளிர் சீசனில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலுக்கு இயற்கை தீர்வாக இலவங்கப்பட்டை இருக்கும். இதில் ஆன்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, எனவே தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவும். இலவங்கப்பட்டை சேர்க்கப்பட்ட ஒரு கப் சூடான பால் தொண்டை வலியைத் தணிக்கும், இருமலை குறைக்கும். இதனால் உங்கள் குழந்தை இரவில் மிகவும் சௌகரியமாக தூங்க முடியும்.
உங்கள் குழந்தைக்கு இரவில் வழக்கமாக ஒரு கிளாஸ் பால் கொடுக்கிறீர்கள் என்றால், அதில் ஒரு எளிய மசாலா பொருளை சேர்ப்பது அவர்கள் குடிக்கும் பாலின் சுவை மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அது என்ன மசாலா என்று கேட்கிறீர்களா, இலவங்கப்பட்டை தன அது. உங்கள் குழந்தை இரவில் குடிக்கும் பாலில் இந்த அற்புத மசாலாவை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே..
நம் அன்றாட சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலா பொருளாக உள்ளது ஒரு லேசான இனிப்பு சுவையை கொண்டுள்ள இலவங்கப்பட்டை. பாலில் இதை சேர்ப்பது உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- இலவங்கப்பட்டை வழங்கும் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, சிறந்த தூக்கத்திற்கு உதவும் அதன் திறன். இந்த மசாலா பொருளில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைக்கவும், அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இதை சூடான பாலில் சேர்க்கும் போது நல்ல தரமான தூக்க கிடைக்கும் வகையிலான கலவையை உடலில் உருவாக்கும். பாலின் சூடு மற்றும் இலவங்கப்பட்டையின் இயற்கை தன்மை இரண்டும் சேர்ந்து படுக்கை நேரத்திற்கு ஏற்ற பானமாக அமைந்து நன்கு தூங்க உதவுகிறது.
- இலவங்கப்பட்டையில் இயற்கையாகவே காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு போன்றவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. செரிமான கோளாறு அல்லது அஜீரண பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு, இலவங்கப்பட்டை கலந்து ஒரு கப் சூடான பால் கொடுப்பது வயிறு உப்பசம் மற்றும் வாயு தொல்லையை குறைக்க உதவும். செரிமான நொதிகளின் உற்பத்தியை மேம்படுத்த, நம் உடல் உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதை உறுதி செய்ய மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது.
- குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள், இலவங்கப்பட்டையில் அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்து போராடி, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, இதன் மூலம் நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது. எனவே வழக்கமான அடிப்படையில் இரவில் உங்கள் குழந்தைக்கு கொடுக்கும்பாலில் இலவங்கப்பட்டை சேர்ப்பதனால், உங்களின் குழந்தையினுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
- ரத்த சர்க்கரை அளவை இலவங்கப்பட்டை ஒழுங்குபடுத்துகிறது. உங்கள் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருந்தால் அல்லது நீரிழிவு அபாயத்தில் இருந்தால் டயட்டில் இலவங்கப்பட்டை சேர்ப்பது ரத்த சர்க்கரை லெவலை கட்டுப்படுத்த உதவும். இரவு நேரம் குடிக்கும் பாலில் சிறிதளவு இலவங்கப்பட்டை சேர்ப்பது ஆரோக்கியமான குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு கணிசமாக பங்களிக்கும்.
- மூளை செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த மற்றும் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்க உதவும் சேர்மங்கள் இலவங்கப்பட்டையில் உள்ளன. எனவே படிப்பில் கவனம், மன தெளிவு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த மசாலா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே குழந்தைக்கு இரவில் கொடுக்கும் பாலில் இதனை சேர்ப்பது குழந்தைகள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் சிறந்த செயல்திறனை பேணுவதற்கு உதவும்.
- குளிர் சீசனில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலுக்கு இயற்கை தீர்வாக இலவங்கப்பட்டை இருக்கும். இதில் ஆன்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, எனவே தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவும். இலவங்கப்பட்டை சேர்க்கப்பட்ட ஒரு கப் சூடான பால் தொண்டை வலியைத் தணிக்கும், இருமலை குறைக்கும். இதனால் உங்கள் குழந்தை இரவில் மிகவும் சௌகரியமாக தூங்க முடியும்.