Search

3,167, கிளை போஸ்ட் மாஸ்டர் காலியிடங்கள்: 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. மிஸ் பண்ணாதீங்க

 


"இந்திய அஞ்சல் துறையில் (INDIA POST) " எவ்வித தேர்வுகளும் இல்லாமல் நேரடியாக (Only Merit) 10 வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் "GDS-கிராமிய அஞ்சலக ஊழியர்" வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Notification - Download here....

வெல்லம் கலந்த காபி ‘சுகர் ப்ரீ’ காபியா... நிபுணர்கள் கூறுவது என்ன!

வெல்லம் கலந்த காபி ‘சுகர் ப்ரீ’ காபியா... நிபுணர்கள் கூறுவது என்ன!

வெல்லம் பல இந்திய உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய இயற்கை இனிப்பு ஆகும். பழங்காலத்திலிருந்தே, வெல்லம் சமையலறையில் மட்டுமல்ல, ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வெல்லம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. வெல்லத்தில்  ஃபோலிக் அமிலம், இரும்பு, கால்சியம், செலினியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள்உள்ளன. இந்த சத்துக்கள் பல நோய்களை உடலில் இருந்து விலக்கி வைக்கிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் உண்மையில் சர்க்கரைக்கு நல்ல மாற்றா? சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட இது இயற்கையானது என்று ஏன் நினைக்கிறோம்? இந்தக் கூற்றை ஆராய்ந்து, வெல்லத்தின் ஊட்டச்சத்து மதிப்பை சிறப்பாக ஆராய்ந்து, சர்க்கரையுடன் ஒப்பிடலாம்.

அகமதாபாத் அப்பல்லோ மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் ஷஷிகாந்த் நிகம், வெல்லம் என்பது கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருளின் ஒரு வடிவம் என்று விளக்குகிறார். இதில் 65-70 சதவீதம் சுக்ரோஸ் உள்ளது, அதே சமயம் வெள்ளை சர்க்கரையில் 99.5 சதவீதம் சுக்ரோஸ் உள்ளது. வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் சுக்ரோஸ் குறைவாக இருப்பதால், அதை உட்கொண்ட பிறகு குளுக்கோஸ் அளவு மெதுவாக அதிகரிக்கிறது என்று டாக்டர். நிகாம் கூறுகிறார். இரத்த சர்க்கரை அளவில் வெல்லத்தின் தாக்கம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட குறைவு தான். ஆனால் கிளைசெமிக் இன்டெக்ஸ் எனப்படும் ஒரு முக்கிய காரணி காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது அவ்வளவு நல்லதாக கருதப்படுவதில்லை.

வெல்லம் மற்றும்  சர்க்கரை ஒரு ஒப்பீடு

இரத்த சர்க்கரையில் தேங்காய் வெல்லம் மற்றும் டேபிள் சர்க்கரையின் விளைவுகளை ஒப்பிடும் சமீபத்திய ஆய்வில் இதே போன்ற வடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கரும்புச் சர்க்கரையை விட வெல்லத்தில் உள்ள புரதச் சத்து அதிகம். எனினும் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரைக்கு சிறந்த மாற்றாக வெல்லம் உட்கொள்ளலாம் ஆய்வு பரிந்துரைக்கவில்லை. 

சத்துக்கள் நிறைந்த வெல்லம்

பல இந்திய பாரம்பரிய உணவுகளில் வெல்லம் ஒரு பகுதியாகும். கரும்பு உற்பத்தி மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் வெல்லம் எப்போதும் நம் வீடுகளில் விரும்பப்படுகிறது. பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், குறிப்பாக இரும்பு மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல ஆதாரமாக வெல்லம் உள்ளது என்று டாக்டர் நிகம் விளக்குகிறார். வைட்டமின் பி12 நிறைந்த வெல்லம் சந்தையில் எளிதாகக் கிடைக்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஆரோக்கியத்தை மட்டுமல்ல கால்சியத்தையும் எலும்பையும் குலைக்கும் பழக்கங்கள்

 

ஆரோக்கியத்தை மட்டுமல்ல கால்சியத்தையும் எலும்பையும் குலைக்கும் பழக்கங்கள்

கால்சியம் சத்தானது, உடல் வளர்ச்சிக்கும், எலும்புகளின் உறுதிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது. கால்சியம் சத்து குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும் என்பது பரவலாக அனைவருக்கும் தெரிந்த உண்மை. வலிமையான மற்றும் ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு கால்சியம் மற்றும் விட்டமின் டி ஆகிய இரண்டு ஊட்டச் சத்துகளும் அவசியம் ஆகும். விட்டமின் டி எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும்.

கால்சியம் சத்து குறைவதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கால்சியம் குறைபாட்டால் குறைவதால் இரத்த ஓட்டம் சீர்குலைகிறது. இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை குறைவதால் இரத்த அழுத்தம் உண்டாகிறது. இதயத்திற்கு சீராக இரத்தம் செல்வதில்லை.  இதனால் இதயநோய்கள் உண்டாகிறது இப்படி பல நோய்கள் ஏற்படும் அபாயத்தை கொண்டிருக்கிறது கால்சியம் குறைபாடு.

ஆனால், நோய் ஏற்படும் அபாயம் ஒரு புறம் என்றால், கால்சியம் குறைபாடு ஆரோக்கியத்தை குலைக்கும். நமது உடலில் எலும்புகள் வலுவுடன் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் பல நேரங்களில் நாம் செய்யும் தவறுகளால், நாமே நமது எலும்புகளை சேதப்படுத்துகிறோம். எலும்புகளுக்குத் தேவையான கால்சியத்தை குறைக்கும் வேலைகளை நாமே செய்கிறோம். நாம் செய்யும் என்னென்ன விஷயங்கள் நமது உடலின் கால்சியத்தை காலி செய்கின்றன என்பது தெரியுமா?  

தேநீர் மற்றும் காபி

இந்தியாவில் டீ, காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு பஞ்சமே இல்லை, நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் விழிப்பதே, காபி அல்லது தேநீர் போன்ற பானங்களில் தான். அவற்றில் காபி, கால்சியத்தை குறைக்க காரணமாகிறது என்பது தெரியுமா? நமது உடலில் உள்ள எலும்புகளின் அடர்த்தியை குறைப்பதில் காபிக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனவே முடிந்தவரை காபி அருந்துவதைத் தவிர்க்கவும்.

இனிப்பு உணவு
இனிப்புகளை சாப்பிடுவது சர்க்கரை நோயை அதிகரிக்கும் என்று பொதுவாக நாம் நினைக்கிறோம், ஆனால் சர்க்கரை நுகர்வு என்பது நம் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால்தான் சர்க்கரை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை குறைந்த அளவில் சாப்பிடுங்கள் என மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர்.

மதுபானம்
ஆல்கஹால் பல நோய்களை ஏற்படுத்துவது மற்றும் ஆரோக்கியத்தை குலைக்கும் பண்புகளைக் கொண்டது என்பது தெரியும். ஆனால், மது அருந்துவது எலும்புகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது. மது அருந்துவதால், எலும்புகளின் வளர்ச்சி நின்று, எலும்பின் அடர்த்தியும் குறையத் தொடங்குகிறது, எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

அதிக உப்பு பொருட்கள்
அதிக சோடியம் நமது எலும்புகளுக்கு தீங்கு விளைவிப்பதால், ஆஸ்டியோபோரோசிஸ் நோயின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இதில், எலும்புகள் மெல்லியதாகவும் பலவீனமாகவும் மாறும், இதன் காரணமாக எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே சிப்ஸ், பிரெஞ்ச் ஃப்ரைஸ், ஊறுகாய் போன்ற உணவுகளை அதிகம் உண்பதை தவிர்ப்பது நல்லது.  

சோடா பானம்
செரிமானத்திற்கு என்றும், சுவைக்காகவும் குளிர்பானங்களை அருந்துகிறோம், ஆனால் சோடா கலந்த குளிர்பானங்கள் நமது எலும்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன, பழச்சாறுகள் அடங்கிய இயற்கை பானங்களை மட்டும் குடிப்பது நல்லது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஆங்கிலம் கற்க ஆசையா...? இதையும் முயற்சிக்கலாம்

 'கிராமர்' (இலக்கணம்) என்பதிலேயே முக்கியத்துவம் கொடுக்காமல், ஆங்கிலத்தை மிக சுலபமாகவும் கற்கலாம். 

ஆங்கில திரைப்படங்களை சப்டைட்டிலுடன் பாருங்கள். இசை ஆல்பங்களை பாடல்வரிகளுடன் இசையுங்கள். இதுவும் கற்றல்தான். 

மொழி கற்பது எந்த தேவைக்காக என்பதை முடிவு செய்துவிட்டு உணவு, பயணம், இலக்கியம் என விருப்பம் எதுவோ அதுதொடர்பான வார்த்தைகளைக் கற்கலாம். 

கற்றது வரையில் மொழியை உரையாடிப் பழகுங்கள். பட்லர் இங்கிலீஷ், தரம் பற்றி மனம் குமையாமல் கற்பது அவசியம். 

மொழியைக் கற்க குழுவாக முயற்சிக்கிறீர்களா? அல்லது தனியாக படிப்பதே சந்தோஷமா என்பது உங்களின் சாய்ஸ்தான். 

முடிந்தவரை எளிதில் இலவசமாகக் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்துங்கள்.

 பிறருடன் பேசிப் பழகினால் மட்டுமே மொழியைப் பேசுவதில் பாஸ் மார்க் வாங்கமுடியும். மொழியைப் பேச முயற்சிக்கும் முன் 90 சதவிகிதம் அந்த மொழியை காது கொடுத்து கேளுங்கள்.

 சரளமாக பேசுவது என்பது உங்களது தேவை சார்ந்தது. மொழியைக் கற்கையில் சின்ன சின்ன பயிற்சிகளையும், அதில் கிடைத்த வெற்றிகளையும் கொண்டாடிவிட்டு, அடுத்த பகுதியை உற்சாகமாகப் படியுங்கள்.

குழந்தைகளின் Self Motivation-ஐ அதிகரிக்க பெற்றோர்கள் எப்படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்..?

 இன்றைய காலத்தில் வளரும் குழந்தைகள் அனைவருடனும் போட்டி போட்டு வளர்கின்ற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்வில் எந்த நிலைக்கு சென்றாலும், யாரேனும் ஒருவரோடு போட்டி போட்டு தான் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது. சில சமயங்களில் அவர்கள் மேற்கொள்ளும் சில முயற்சிகள் தோல்வியிலும் முடியலாம். ஆனால் இதுபோன்று விஷயங்களுக்கு எல்லாம் அவர்கள் மனம் துவண்டு போய்விடக்கூடாது. எவ்வளவுதான் பாதிப்புகள் கஷ்டங்கள் வந்தாலும் அதிலிருந்து தானாகவே மீண்டு எழுந்து தன்னுடைய இலக்கை நோக்கி செல்ல வேண்டும்.



இதுபோன்ற குணாதிசயங்களை பெறுவதற்கு குழந்தைகள் தன்னைத்தானே ஊக்குவித்துக் கொண்டு தன்னுடைய இலக்கை நோக்கி நடப்பவராக இருக்க குழந்தைகளை சுய உந்துதல் உடையவர்களாக வளர்ப்பதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. ஒரு பெற்றோர் தன் குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கிய குணநலன்களில் இந்த சுய உந்துதலும் ஒன்றாகும். இதை பெற்றோர் தங்களுடைய குழந்தைக்கு சரியாக கற்றுக் கொடுத்து விட்டால் குழந்தைகள் தங்களுடைய வாழ்க்கையை தாங்களே பார்த்துக் கொள்வார். இவ்வாறு பெற்றோர் சுய உந்துதலுடன் குழந்தைகளை வளர்ப்பதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.

எட்ட கூடிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்: குழந்தைகளுக்கு சுய உந்துதலை கற்றுக் கொடுக்க முதலில் அவர்களுக்கு எட்ட கூடிய ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். மேலும் அந்த இலக்கை அடைவதற்கு அவர்களாகவே திட்டங்களை தீட்டி அந்த இலக்கை நோக்கி செல்லும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது குழந்தைகள் எந்த விஷயத்தை முதலில் செய்ய வேண்டும் என்றும் ஒருவேளையின் முக்கியத்துவத்தை பற்றியும் நன்றாக அறிந்து கொள்வர். ஒருவேளை அவர்கள் இலக்கை நோக்கி செல்வதில் கஷ்டப்படும் பட்சத்தில் சிறிய உதவிகளை செய்து அவர்களை ஊக்கப்படுத்தலாம்.

முயற்சிதான் முக்கியம், முடிவுகள் அல்ல: எப்போதும் ஒரு இலக்கை அடைவதற்கு செய்ய வேண்டிய முயற்சியை பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் முடிவு எப்படி வேண்டுமானால் இருக்கட்டும் ஆனால் நம்மால் முடிந்த 100% உழைப்பையும் முயற்சியையும் நாம் அளிக்க வேண்டும்.

அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வது தான் சுய உந்துதலை ஊக்கப்படுத்த முக்கிய வழியாகும். தங்களுடைய செயல்களுக்கு தாங்கள் தான் பொறுப்பு என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் சிறு வயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும்.

தெளிவான எதிர்பார்ப்புகளை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்: உங்கள் பிள்ளைகளின் செயல் திறனை பற்றியும் நடத்தைகளை பற்றியும் அவர்களிடம் தெளிவாக பேசி புரிய வைக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் அவர்களுக்கு தங்களைப் பற்றியும் பெற்றோர் தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றி தன்னுடைய வளர்ச்சியிலும் அவர்கள் கவனம் செலுத்த முடியும்.

தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுக்க வேண்டும்: தங்களுடைய சொந்த வாழ்க்கையை முடிவு செய்வதற்கும், பிடித்த விஷயங்களை செய்வதற்கும் அவர்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பிடித்து தேர்ந்தெடுத்த ஒரு செயலை செய்யும்போது அவர்களின் அனைத்து வித விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள். முதல் ஏதேனும் தவறு நடந்தாலும் தாங்கள் தவறுக்கு தாங்கள் தான் பொறுப்பு என்பது உணர்ந்து அதை சரி செய்ய முயற்சி செய்வார்கள்.

குறைத்து மதிப்பிடப்படும் சுற்றுலா தலங்கள்... அழகு கொஞ்சும் இந்த இடங்களை நீங்களும் மிஸ் பண்ணிடாதீங்க..

 எண்ணற்ற டூரிஸ்ட் ஸ்பாட்களை கொண்டுள்ள இந்தியாவில் பிரபலமான பல இடங்கள் ஆண்டு முழுவதும் கூட்டமாகவே தான் காணப்படுகின்றன. எனினும் கூட்டம் அதிகம் இல்லாத அதே சமயம் மிகவும் அழகான டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களுக்கு செல்ல பலர் விரும்புகிறார்கள்.

மக்கள் கூட்டத்தில் கலந்து கூட்டத்தில் ஒருவராக இயற்கை அழகை ரசிப்பதை விட, கூட்டம் அதிகம் இல்லாத சுற்றுலா தலங்களுக்கு சென்று அங்கிருப்பவற்றை ரசிப்பது சந்தோஷம் மற்றும் உற்சாகத்துடன் மனநிம்மதியையும் சேர்த்து தரும். அந்த வகையில் நீங்கள் இனிவரும் காலங்களில் பிளான் செய்ய வேண்டிய கூட்டம் அதிகம் இல்லாத அதே நேரம் குறைத்து மதிப்பிடப்பட்ட சில அற்புத டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களை பற்றி இங்கே நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

மாண்டு (மத்திய பிரதேசம்) : ஆப்கானிஸ்தான் கட்டிடக்கலைக்கு இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளின் தாயகமாக மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள மாண்டு (Mandu) இருக்கிறது. ஒரு பழங்கால நகரமான மாண்டு மேற்கு மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியின் தார் நகரிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. காலத்தால் அழியாத நினைவுச்சின்ன அழகுகள், பிரமாண்டமான அரண்மனைகள் மற்றும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட நுழைவாயில்கள் மாண்டுவின் வளமான மற்றும் நீண்ட வரலாற்றுக்கு சாட்சியாக இங்கு நிற்கின்றன. நீங்கள் இங்கு சுற்றுலா வர திட்டமிட்டால் ஜஹாஸ் மஹால், ஹோஷாங் ஷா கல்லறை, பாஸ் பகதூர் அரண்மனை மற்றும் இன்னும் இருக்கும் பல இடங்களை காண தவறாதீர்கள்.

பதான் (குஜராத்) : குஜராத் மாநிலத்தில் உள்ள அழகான பழங்கால வரலாற்று நகரங்களில் ஒன்று பதான். நீங்கள் ஒரு வரலாற்று ஆர்வலர் என்றால் கட்டாயம் இந்த இடத்தை மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டும். சௌதா நாட்டு அரசன் வனராஜன் சௌதா என்பவரால் கிமு 745-ல் கோட்டையுடன் இந்த நகரம் கட்டப்பட்டது. சுமார் 650 ஆண்டுகள் குஜராத்தின் தலைநகராக இருந்த கோட்டை நகரம் இது. குஜராத்தின் முன்னாள் தலைநகராக இருந்த பதான் உலகின் மிகச்சிறந்த கையால் செய்யப்பட்ட ஜவுளிகளில் ஒன்றான படோலா புடவைகளுக்கு பிரபலமான இடமாகும். இங்கே மிகவும் குறுகலான பாதைகளில் மார்க்கெட்கள்அமைந்துள்ளன. ராணி கி வாவ் (படிக்கட்டுக் கிணறு), அற்புதமான ஜெயின் கோவில்கள் மற்றும் பல இங்குள்ள முக்கிய சிறப்பம்சங்கள்.

உனகோடி (திரிபுரா) : அகர்தலாவில் இருந்து சுமார் 180 கிமீ தொலைவில் அமைந்துள்ள Unakoti-யில் 7-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுமார் லட்சக்கணக்கான செதுக்கப்பட்ட உருவங்கள் உள்ளன. இது ஒரு பழமையான சைவத்தலமாகும். வடகிழக்கு இந்தியாவில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களில் இதுவும் ஒன்றாகும். யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் உனகோடி இடம் பிடித்துள்ளது. ட்ரெக்கிங், ஹைக்கிங் மற்றும் பலவற்றுக்கு ஏற்ற இடமாக இது இருக்கிறது. பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களும், கற்சிற்பங்களுமாக இந்த பகுதி காட்சியளிக்கிறது.

காஸ் மலர் பீடபூமி (சதாரா) : மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பூக்கள் நிறைந்த இந்த பீடபூமி வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தாலும் வார நாட்களில் சென்றால் கண்களுக்கான விருந்தை, பசுமையை நன்றாக அனுபவிக்கலாம். இந்த இடம் கடந்த ஜூன் 2012-ல் யுனெஸ்கோவால் உயிர் பன்முகத்தன்மை தளமாக (bio-diversity site) அறிவிக்கப்பட்டது.

லம்பசிங்கி (ஆந்திரா) : தென்னிந்தியாவின் காஷ்மீர்நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இருக்கிறது. ஆந்திராவின் Lambasingi என்ற இடம் தான் இந்த பெருமையை பெற்றுள்ளது. தென்னிந்தியாவிலேயே மிகவும் குளிரான இந்த பகுதியின் சராசரி 0 -10 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பதால் டூர் செல்ல சிறந்த இடமாகவும், வெப்ப அலைகளில் இருந்து தப்பிக்கவும் உதவுகிறது. பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளின் தாயகமாக மற்றும் மாசற்ற இயற்கை அழகை கொண்டதாக இந்த லம்பசிங்கி பகுதி இருக்கிறது.

தவாங் (அருணாச்சலப் பிரதேசம்) : நீங்கள் பிரபலமான டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களுக்கு செல்வதை தவிர்க்க விரும்பினால் அதற்கு இணையாக அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் தவாங் பகுதிக்கு டூர் செல்லலாம். பசுமையால் சூழப்பட்ட மற்றும் அழகான ஏரிகள் நிறைந்த இந்த இடம் நிச்சயமாக உங்களை உற்சாகமாக வைக்குமே தவிர ஏமாற்றாது. வடகிழக்கு இந்தியாவில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதி, இயற்கை அழகிற்காக மட்டுமல்லாமல், 400 ஆண்டுகள் பழமையான மடாலயத்திற்கும் பிரபலமானது. புத்த மடாலயங்களில் ஒன்றான தவாங் மடாலயம் (Tawang Monastery) ஒரு முக்கிய யாத்திரை மையமாக திகழ்கிறது.


மன அழுத்தமா.. ஒரு டிராவல் போயிட்டு வாங்கனு ஏன் சொல்றாங்க தெரியுமா..?

 


பரபரப்பான வாழ்க்கையில் இருந்து விடுபடவும், மன அழுத்ததிலிருந்து விடுதலை பெறவும் பலர் மனதிற்கு இதமான சில பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். ஒருவர் உடலையும், மனதையும் சரியான சமநிலையில் வைத்துக்கொள்ள இதுபோன்ற பயணங்கள் மேற்கொள்வது மிகவும் உதவிகரமானதாக இருக்கும். இது தவிர தியானம் செய்வதும், யோகாசனம் செய்வது, மசாஜ் சென்டர்களுக்கு செல்வது சாகச பயணங்களை மேற்கொள்வது போன்றவையும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.

வெல்னஸ் டிராவல் எனப்படும் இந்த ஆரோக்கிய பயணங்களை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு நீங்கள் ஆரோக்கிய பயணங்களை மேற்கொள்ளும் நேரங்களில் உங்களது மன அழுத்தத்தை குறைப்பது பற்றியும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும், தெளிவான சிந்தனைகளும், நன்றாக உறங்குவதற்கும் அவை எவ்வாறு உதவி செய்கின்றன என்பதை பற்றி பார்ப்போம்.

மன அழுத்தத்தை குறைக்க உதவும்: தினசரி ஒரே விதமான வாழ்க்கை முறைகளை பின்பற்றி, ஒரே விதமான செயல்களை செய்து நமது உடலும் மனமும் மிகவும் சோர்வடைந்திருக்கும். இது போன்ற சமயங்களில் இந்த ஆரோக்கிய பயணங்களை மேற்கொண்டு உடலுக்கும் மனதிற்கும் சற்று ஓய்வு அழித்து புத்துணர்ச்யூட்டும் விதமாக நாம் மாற்றி கொள்ள வேண்டும். முக்கியமாக இது போன்ற பயணங்களின் போது யோகாசனம் செய்வது தியானம் செய்வது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இவற்றின் மூலம் மனம் தெளிவாகவும், மிகவும் ரிலாக்ஸாகவும் இருக்க உதவும். இதைத் தவிர மலையேற்றம், நீச்சல் போன்றவையும் நம் மனதை அமைதியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும்.

உடல் இயக்கங்கள் அதிகரிப்பு: நீண்ட நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கும், ஒரே விதமான வேலை செய்பவர்களுக்கும் இந்த ஆரோக்கிய பயணத்தின் போது உடல் இயக்கங்களை அதிகரிக்கும் விதமான வேலைகளை செய்ய வேண்டும். யோகாசனம் செய்வது மலை, ஏறுவது, ஃபிட்னஸ் வகுப்புகளுக்கு செல்வது ஆகியவை இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும் வலுவான தசைகளை கட்டமைக்கவும் உதவும்.

சிறப்பான மனநிலை : யோகாசனம் செய்வதும், தியானம் செய்வதும் நம்முடைய மனதை பக்குவப்படுத்துவதோடு மிகவும் தெளிவாக சிந்திக்கவும் வைக்கிறது. இதன் மூலம் தேவையற்ற மன அழுத்தங்கள் மனக்கவலைகளில் இருந்து நம்மால் எளிதாக வெளிவர முடியும். நீங்கள் உங்களது வழக்கமான இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்வதும், உங்களது சுற்றுச்சூழலை மாற்றி அமைப்பதும், சுத்தமான காற்றை சுவாசிப்பதும் கூட உங்களது மனநிலையில் நல்ல மாறுதல்களை அளிக்கக்கூடும். இயற்கையோடு ஒன்றி இருப்பது என்பதே ஒரு சிகிச்சை முறை ஆகும்.

நல்ல உறக்கம்: ஆரோக்கிய பயணங்களை மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு நல்ல உறக்கம் கிடைக்கும். தினசரி வாழ்க்கையில் இருந்து விடுபடுவதும், புதிய சூழ்நிலையில் உங்களை உட்படுத்திக் கொண்டு அதற்கு ஏற்றபடி நடந்து கொள்வதுமே மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும். மலையேற்றம், நீச்சல்  ஆகியவை உடலை மிகவும் களைப்பாக்கி மிக எளிதில் உறங்குவதற்கு உதவுகிறது.

அதிகரித்த சுய விழிப்புணர்வு: மேலே கூறிய அனைத்தையும் விட ஆரோக்கிய பயணங்களை மேற்கொள்வதினால் கிடைக்கும் முக்கிய பயனே நமது சுய விழிப்புணர்வை அதிகப்படுத்துவது ஆகும். நமது அன்றாட பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட்டு, புதிய பழக்கங்களுக்கு உட்படுவதன் மூலமாக ஒருவர் தன்னை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் மிகத் தெளிவாக சிந்திக்கவும் முடியும். இதனால் சுய விழிப்புணர்வு ஒருவருக்கு அதிகரிக்கும்.


நீங்கள் புத்திசாலி என நினைக்கிறீர்களா.? இந்த பழக்கங்கள் உங்களிடம் இருக்கானு செக் பண்ணிக்கோங்க..

 எப்போதுமே ஒரு கூட்டத்தில் புத்திசாலிகளை மட்டும் தனியாக அடையாளம் கண்டு கொள்ள அனைவராலும் முடியாது. மேலும் அவர்கள் எப்போதும் தங்களை மறைத்துக் கொண்டுதான் வாழ விரும்புவார்கள். அனைவருமே தாங்கள் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் பலரால் அது முடிவதில்லை. புத்திசாலிகள் தங்களுக்கு என்ன சில குறிப்பிட்ட பழக்கங்களை வைத்துள்ளனர். இவற்றைக் கொண்டு நாம் அவர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். மேலும் அவர்களது பழக்கவழக்கங்களில் சிலவற்றை நாமும் பின்பற்றலாம். அந்த வகையில் புத்திசாலிகளிடம் பொதுவாக காணப்படும் பழக்கங்களை பற்றி இப்போது பார்ப்போம்.

தங்களுக்குத் தெரிந்ததை காண்பித்துக் கொள்ள மாட்டார்கள்: புத்திசாலிகள் பொதுவாக தங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்து விட்டது என்றால் அதைப் பற்றி வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். அதைப் பற்றி மேலும் அதிகமாக தெரிந்து கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

மற்றவர்களை கவனிப்பார்கள் : இவர்கள் எப்போதும் மற்றவர்கள் செய்யும் செயல்களை உன்னிப்பாக கவனிப்பார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் எப்படி செய்கிறார்கள் அவர்களிடம் உள்ள நிறைய குறைகள் ஆகியவற்றை எடை போடுவார்கள்.

சுதந்திரமாக செயல்படுவார்கள் : தனிப்பட்ட வாழ்க்கையோ வேறு எதுவும் பிரச்சனையாக இருந்தாலும் தனியாக மற்றவரின் உதவியின்றி அந்த பிரச்சனையை எதிர்கொண்டு தீர்த்து வைக்க முயற்சி செய்வார்கள்.

பெருமை பேசுதல் : புத்திசாலி நபர்கள் எப்போதும் தங்களைப் பற்றி அதிகமாக பெருமையாக பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். முக்கியமாக மற்றொருவர் முன்னிலையில் தற்பெருமை பேசுபவர் என்பது அவர்களுக்கு கிடையவே கிடையாது. எப்போதும் அமைதியான மனநிலையிலேயே இருக்க விரும்புவார்கள்.

நிலைமையை கணிக்க கூடியவர்கள் : இவர்கள் எப்போதும் பல்வேறு விஷயங்களை ஒன்றாக சேர்த்து அதன் மூல காரணத்தை அறிய முற்படுவார்கள். தனித்தனியாக பிரிந்து உள்ள விஷயங்களை சரியான விதத்தில் ஒன்று சேர்ந்து அதன் முக்கியமான நோக்கத்தை தெரிந்து நிலைமையை எளிதாக கணிப்பார்கள்.

வாசிப்பு : அதிக அளவு புத்திசாலித்தனமாக உள்ள பலரும் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார்கள். புத்தகத்தின் மூலமாகவே அவர்கள் உலகத்தின் பல்வேறு விஷயங்களையும் தெரிந்து கொண்டு தங்களது அறிவாற்றலை பெருக்கிக் கொள்கிறார்கள்.

கேள்விகள் : இவர்கள் எப்போதும் அதிகமாக கேள்வி கேட்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். தனக்குத் தோன்றும் பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை தெரிந்து கொண்டு தங்களது அறிவாற்றலை பெருக்கிக் கொள்வார்கள்.

மற்றவர்களின் நடத்தையை கண்டுகொள்ள மாட்டார்கள் : மிகவும் அடாவடித்தனமான நடத்தை உடைய மனிதர்களை இவர்கள் அறவே மதிக்க மாட்டார்கள். அது போன்ற மனிதர்களை புறந்தள்ளி தன்னுடைய வழியில் சென்று கொண்டிருப்பார்கள்.

அதிகம் பேச மாட்டார்கள் : இவர்கள் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு விவரிக்க வேண்டும் எனில் மிக சுருக்கமாக எளிமையான முறையில் விவரித்து விடுவார்கள். தேவையற்ற அதிகமான வார்த்தைகளை வளவளவென்று பேசி மற்றவர்களின் நேரத்தை வீணடிக்க விரும்ப மாட்டார்கள்.


குளிர்காலத்தில் முதியவர்கள் இதையெல்லாம் கடைப்பிடிப்பது அவசியம்..!

 குளிர்காலத்தில் பொதுவாகவே ஒரு சில உடல் நல பாதிப்புகள் ஏற்படும். சாதாரணமாக மற்ற காலத்தை விட, குறைவான வெப்ப நிலையால் வலி, செரிமானக் கோளாறு, உடல் இயக்கத்தில் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, உள்ளிட்ட பல விதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். குளிரால் ரத்த ஓட்டத்தின் வேகம் கொஞ்சம் குறையும். மேலும், ஹைப்போதெர்மியா என்ற உடல் வெப்பம் வேகமாக குறையும் குறைபாடு, உயிருக்கே ஆபத்தாக முடியும். மேலும், குளிர்காலத்தில் திசுக்கள் விரிவாக்கம் அடையும், இதனால் அழற்சி மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படும். எனவே, உங்கள் வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

முதியவர்களின் உடல் வெப்பமாக இருக்க வேண்டும் : குளிர்காலத்தில் உடலின் வெப்பத்தை அதிகரிக்க அல்லது தக்கவைக்க, கம்பளி ஆடைகள், கையுறைகள், காலுறைகள், தொப்பி, ஆகியவற்றை முதியவர்கள் அணிய வேண்டும். குளிரில் உடல் நடுங்காமல், வெப்பமாக இருந்தால், நோய்வாய்ப்படாமல் பாதுகாக்க முடியும்.

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் : குளிர்காலத்தில் ஜில்லென்று இருக்கிறது, நாள் முழுவதும் படுக்கையிலேயே இழுத்து போர்த்தி கொண்டு தூங்கலாம் என்று தான் நினைப்போம். முதியவர்களுக்கும் அப்படித்தான் இருக்கும். ஆனால் இளமையாக இருப்பவர்கள் போலவே முதியவர்களும் ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும். நாள் முழுவதும் அமர்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும் இருப்பது மூட்டுக்களை இறுக்கமாக்கி வலி மற்றும் அழற்சியை ஏற்படுத்தும்.

எனவே அவர்கள் உடல் ரீதியாக ஏதாவது ஒரு வேலையை செய்து கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உதாரணமாக வீட்டுக்குள்ளேயே நடக்கலாம், அல்லது சின்ன சின்ன ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் செய்யலாம். எளிமையான வீட்டு வேலைகளை செய்யலாம். இவ்வாறு செய்யும்போது உடலில் ரத்த ஓட்டம் சீராகி, உடல் குளிர்ச்சியடைவதிலிருந்து பாதுகாக்கும். இது அவர்களுக்கு ஆற்றலையும் கொடுக்கும்.

வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும் : குளிர்காலத்தில் நல்ல சூடான நீரில் குளிப்பது இதமானதாக இருக்கும். இருப்பினும் எவ்வளவு சூடாக குளிக்கிறோமோ, அந்த அளவுக்கு சரும பாதிப்பும் ஏற்படும். சருமம் வறட்சியாக காணப்படும். அதுமட்டுமில்லாமல் சூடான நீரில் குளித்த பின்பு, சிறிது நேரத்திலேயே உடல் சில்லென்று மாறி நடுங்க ஆரம்பிக்கும். எனவே வயதானவர்கள் சூடான நீரில் குளிப்பதை தவிர்த்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால் அவர்களுக்கு ரிலாக்ஸாக இருக்கும். மூட்டுகளில் வலி மற்றும் அழற்சி இருந்தால் அவர்கள் தங்கக்கூடிய அளவுக்கு சூடான நீரால் ஒத்தடம் கொடுக்கலாம்.

தண்ணீர் குடிக்க வேண்டும் : பொதுவாகவே குளிர்காலத்தில் அதிக அளவுக்கு தாகம் எடுக்காது என்பதால் தண்ணீர் குடிக்கும் அளவு குறைந்துவிடும். ஆனால் தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தாகம் எடுக்காமலேயே உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே சருமத்துக்கு மட்டும் அல்லாமல் உடலுறுப்புகள் இயல்பாக இயங்குவதற்கு தேவையான அளவுக்கு தண்ணீரை குடிக்க வேண்டும். சூடாக அல்லது சாதாரண டெம்பரேச்சரில் இருக்கும் தண்ணீரை குடிப்பதை விட, வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லது. தண்ணீர் நிறைய குடிக்க முடியவில்லை என்றால் கிரீன் டீ, லெமன் டீ, பிளாக் டீ, சுக்கு காப்பி போன்ற பானங்களையும் குடிக்கலாம்.

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி மிகவும் முக்கியம். அதே போல, வைட்டமின் சி நிறைந்த உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் அவசியம்.


Bank Job Vacancy : டிகிரி படித்தவர்களுக்கு ரூ.80,000 சம்பளத்தில் வங்கி மேனேஜர் வேலை!

 வங்கித்துறையில் வேலை வாங்க வேண்டும் என ஆர்வமாக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அருமையான வாய்ப்பு. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India), ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (Specialist Officer) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் யுபிஐயின் அதிகாரப்பூர்வ தளமான Unionbankofindia.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான ஆன்லைன் பதிவு செயல்முறை ஜனவரி 23 அன்று தொடங்கப்பட்டது. பிப்ரவரி 12, 2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விரிவான தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலை சரிபார்க்கவும்.

காலியிட விவரம்: 

தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்): 3.

சீனியர் மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்): 34.

மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்): 5.

கல்வி தகுதி:

தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் CA பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சீனியர் மேனேஜர் பதவிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேனேஜர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்) - 25 முதல் 40 ஆண்டுகள்.

சீனியர் மேனேஜர் (கிரெடிட் அதிகாரி) - 25 முதல் 35 வயது.

மேனேஜர் (கடன் அதிகாரி) - 22 முதல் 35 வயது.

வயது தளர்வு:

OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும், SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும். இது குறித்த மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வைபோயிடலாம்.

சம்பள விவரம்:

தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்) பதவிக்கு, ரூ. 76,010 முதல் ரூ. 89,890 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

சீனியர் மேனேஜர் (கடன் அதிகாரி) பதவிக்கு, ரூ. 63,840 முதல் ரூ. 78,230 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்) பதவிக்கு, ரூ. 48,170 முதல் ரூ. 69,810 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேலே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ. 850 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் 150 ரூபாய் செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வு செயல்முறை:

ஆன்லைன் தேர்வு.

குழுமுறையில் கலந்துரையாடல்.

தனிப்பட்ட நேர்காணல்.

எப்படி விண்ணப்பிப்பது?

முதலில், அதிகாரப்பூர்வ இணையதளமான www.unionbankofindia.co.in ஐப் பார்வையிடவும்.

பின்னர், “Recruitment” பகுதிக்கு செல்லவும்.

இப்போது, “Click Here to Apply Online for Manager, Chief Manager and Senior Manager Posts” என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது, ஒரு புதிய பக்கம் திறக்கும். உங்களை பதிவு செய்து உள்நுழையவும்.

தேவையான விவரங்களை நிரப்பி, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்கவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news