Search

பெற்றோர்கள் கவனத்திற்கு... உங்கள் குழந்தைளுக்கு பற்சிதைவா..? தடுக்க இவற்றை செய்யுங்கள்!

பற்களில் உள்ள எனாமல் என்பது பல்லின் வெளிப்புறம் அமைந்திருக்கும் உறை போன்றது. நம் உடலிலேயே மிகவும் கடினமான திசு எனாமல் ஆகும். கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களால் ஆனது. இந்தத் தாதுக்கள் குறையும்போது, எனாமல் தேய ஆரம்பிக்கிறது. ஈறுகளுக்கு வெளியே தெரியும் பல்லின் ஒரு பகுதியான கிரீடத்தை இந்த எனாமல் உள்ளடக்கி வைத்திருக்கும். எனாமல் என்பது பளபளப்பாக இருக்கும் என்பதால், அதன் மூலம் ஒளியைக் காணலாம்.

எனாமல் சேதமடைந்தால் என்ன ஆகும்? பல் எனாமல் வலி ஏற்படுத்தக்கூடிய வெப்பநிலை மற்றும் வேதிப்பொருட்களிலிருந்து நம் பற்களை பாதுகாக்கிறது. நம் உடம்பில் எலும்புகள் உடைந்தால், அதனை எளிதாக சரி செய்து கொள்ளலாம். ஆனால் பற்கள் உடைந்தாலும், நொறுங்கினாலும் அதனை மீண்டும் வளர செய்ய முடியாது. எனவே எனாமல் பற்களை பாதுகாப்பதில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. பற்களில் எனாமல் சேதமடைந்தால், குழந்தைகளுக்கு பற்சொத்தை, சூடான அல்லது குளிர்ந்த பொருட்களை உட்கொண்டால் பற்கூச்சம், பற்களில் தொற்று ஆகியவை ஏற்படலாம். இப்போதெல்லாம், பற்சிதைவு என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். எனவே உங்கள் பிள்ளையின் உணவு பல் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். எனாமலுக்கு இடையூறு ஏற்படுத்தும் பல்வேறு உணவுப் பழக்கங்கள், வாய்வழி பராமரிப்பு மற்றும் பிற காரணிகள் குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.

குழந்தைகளின் பற்களை பராமரிக்கும் வழிமுறைகள் : குழந்தைகளின் பற்களில் பற்களில் உள்ள எனாமல் வளர்ச்சி நிலையில் இருக்கும். பெரியவர்களை விட மெல்லியதாக இருக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாய்வழி பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டுயது அவசியம். குழந்தைகளின் வாயை முறையாக பராமரிப்பது மூலம் எனாமல் வலுவடைந்து பற்கள் உடைவது தடுக்கப்படுகிறது. குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகும் கூட ஈறுகளில் ஏற்படக் கூடிய நோயைத் தடுக்க இது அவசியமாகிறது.

நாள் முழுவதும் தின்பண்டங்கள் உட்கொள்வது பற்களின் சிதைவுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. குறிப்பாக சர்க்கரை மற்றும் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் பற்கள் பாதிக்கப்படலாம். இது போன்ற பொருட்களை சாப்பிட்ட பிறகு சில மணி நேரம் வாயில் அதிகமாக அமிலம் சுரக்கும். எனவே தின்பண்டங்களை உட்கொண்டவுடன் வாயை கொப்பளிக்க வேண்டும். மேலும் அதிகப்படியான மிட்டாய்கள் அல்லது சர்க்கரை கலந்த உணவு, உட்கொள்வதால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

குழந்தைகளுக்கு Fluoride ஃபுளூரைட் இல்லாத டூத் பேஸ்டுகளை கொண்டு பல்துலக்குவதன் மூலம் அவர்களின் பற்களில் எனாமல் தேய்மானம் அடையாது. சில சமயங்களில் குழந்தைகள் பேஸ்டை விழுங்குவிடுவார்கள். எனவே இது உடல்நலனில் வேறு ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே குறைந்தது 6 வயது வரை அவர்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் ஃபுளூரைட் இல்லாததாக இருத்தல் நல்லது.

சாப்பிட்ட பிறகு பற்களில் எஞ்சியிருக்கும் உணவுத் துகள்கள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது, இது எனாமலை அரித்து துவாரங்களை ஏற்படுத்துகிறது. அதனால்தான் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்குவது அவசியம். உங்கள் பிள்ளையை சரியான வாய்வழிப் பராமரிப்பினை பழக்கப்படுத்துவது மூலம், நீங்கள் அவர்களின் பற்களை, உணவுத் துகள்கள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கலாம்.

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் டூத் பிரஷ் என்பது பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யாது. குறிப்பாக, பற்களுக்கு இடையே உள்ள சின்னஞ்சிறு இடைவெளியில் உணவுத் துகள்கள் மாட்டிக் கொள்ளும். எனவே பெரும்பாலான பல் மருத்துவர்கள் குழந்தைகளுக்கு மென்மையான அல்லது கூடுதல் மென்மையான பிரஷ்களை பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம் உணவுத் துகள்கள் எளிதில் வெளியேற்றப்படுவதுடன், குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக அமைகிறது. 


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எந்த விஷயத்திலும் சரியா கவனம் செலுத்த முடியலையா..? இதை செய்யுங்க.!

 ஒரு விஷயத்தில் முழுமையாக கவனம் செலுத்த முயற்சிக்கும் போது, நமக்கு கவனச்சிதறல் ஏற்படும். அட நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. நம்மால் ஒரு விஷயத்தில் ஏன் முழு கவனத்தையும் செலுத்த முடியவில்லை என யோசிப்போம்.கவனச்சிதறல் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் மற்றும் பலருக்கு இது சாதாரண விஷயமாகவும் இருக்கலாம்.

ஆனால், கவனச்சிதறல் அதிகமாக இருந்தால், அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் உங்களை நீங்கள் மேம்படுத்த சில உதவிக்குறிப்புகளை நாங்கள் கூறுகிறோம். இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு என்ன காரணம் என்பதை முதலில் நாம் பார்க்கலாம்.

நம்மில் பெரும்பாலோர், உணர்ச்சி ரீதியில் சோர்வாக இருக்கும்போது, ​​நாம் செய்ய வேண்டிய விஷயங்களை கடைசி நிமிடம் வரை அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என தள்ளிபோடுவோம். மனதளவில் நாம் ஆரோக்கியமாக இல்லை என்றால், பணிகளில் கவனம் செலுத்துவது கடினம்.

ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை செய்வதும் கவனச்சிதறலுக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். அதாவது, ஒரே நேரத்தில் அதிக வேலைகளை செய்ய முயற்சிப்பது, மற்ற வேளைகளில் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவதற்கான காரணம். இதனால், அதீத பணிச்சுமையை நீங்கள் உணர நேரிடும். இதனால், உங்கள் பணியில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும்.

இது தவிர, ஹைபராக்டிவிட்டி கோளாறால் (ADHD) பாதிக்கப்பட்டவர்கள் கவனக்குறைவு பிரச்னையை எதிர்கொள்வார்கள். இவர்கள் எளிதில் மற்ற விஷயத்தால் திசைதிருப்பப்படுவார்கள்.

நீங்கள் வேலை செய்யும் போதோ அல்லது படிக்கும் போதோ உங்கள் கவனம் சிதறினால், ஒரு காகிதத்தை எடுத்து குறிப்புகளை எடுக்க முயற்சிக்கவும். அந்த குறிப்பை உங்கள் கைகளால் எழுதவும். இப்படி செய்வது நம்மை அதிக ஈடுபாட்டுடன் வைத்திருக்கும். இதனால், நீங்க செய்யும் பணியில் முழு கவனத்தையம் செலுத்த முடியும்.

ஒருவர் தனது உடலுக்கும், மனதிற்கும் 6 முதல் 7 மணிநேரம் ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம். எனவே, தினமும் குறைந்தது 7 மணிநேரம் தூக்கம் அவசியம். உங்கள் மூளையையும் மனதையும் ஒருநிலைப்படுத்த தூக்கம் முக்கியமானது.

நீங்கள் வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்கவும். சத்தம் அதிகமாக இருக்கும் இடத்தில் நாம் வேலை அல்லது படித்தால் நமது ஆர்வம் குறையத்துவங்கும். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் பொது நாம் மட்டும் இப்படு இருக்கிறோமே என நினைக்க தூண்டும். எனவே, வெளிச்சம் உள்ள சுத்தமான மற்றும் நேர்த்தியான சூழல் நமது வேலையில் சரியாக கவனம் செலுத்த உதவும். இவை உங்களுக்கு பலன் கொடுக்க வில்லை என்றால், மருத்துவரை அணுகுவது நல்லது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இஞ்சியா..? சுக்குவா..? உடலுக்கு ஆரோக்கியம் சேர்ப்பது எது என்பதை விளக்கும் ஆயுர்வேத நிபுணர்..!

 இந்தியர்களின் சமையலறையில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுப் பொருள்களில் ஒன்றாக உள்ளது இஞ்சி. நம் முன்னோர்கள் காலங்காலமாக பல்வேறு மருத்துவ குணங்களுக்காக இஞ்சியைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல், குமட்டல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுக்கு இஞ்சி மிஞ்ச்குந்த பயனுள்ளதாக உள்ளது.

நாம் இஞ்சியை பிரெஷாகவும், காய வைத்து சுக்குவாகவும் பயன்படுத்துகிறோம். இவ்வாறு இரு முறைகளில் நாம் இஞ்சியைப் பயன்படுத்தினாலும் எது நமக்கு கூடுதல் ஆரோக்கியம் அளிக்கும் என்பதை நாம் ஒருபோதும் யோசித்திருப்பதில்லை. இந்நிலையில் தான் இதுக்குறித்து ஆயுர்வேத நிபுணர் ரேகா ராதாமோன், இஞ்சியை விட சுக்கு தான் நமக்கு உடலுக்கு சிறந்து என்கிறார். இன்ஸ்டாவில் இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

சுக்குவில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்:

வாயு பிரச்சனைக்குத் தீர்வு: நாம் இஞ்சியை பிரஸ்ஸாக சாப்பிடும் போது வாயு பிரச்சனை அதிகமாகும். எனவே தான் உலர் இஞ்சியை அதாவது சுக்குவை நாம் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். சுக்குவை இடித்து பொடியாக்கி சுடு தண்ணீரில் கலந்துக் குடிக்கலாம் அல்லது டீ-யாக செய்து சாப்பிடலாம். நிச்சயம் வாயு பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.


மலச்சிக்கலுக்குத் தீர்வு: சுக்கு அதவாது உலர் இஞ்சி என்பது மலமிளக்கியாக உள்ளது. வயிறு மந்த தன்மை மற்றும் மலச்சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், சிறிதளவு சுக்குவை சுடு தண்ணீரில் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

மூட்டுவலிக்குத் தீர்வு: மூட்டுவலி பிரச்சனை என்பது பலருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றாக உள்ள நிலையில், இதைக் குணப்படுத்த சுக்குவை நீங்கள் பயன்படுத்தலாம். சுக்குவை பொடியாக அரைத்துக் கொண்டு வலி உள்ள இடங்களில் பூசி வர மூட்டு வலி முழுமையாக குணமாகும். இவ்வாறு வாரத்திற்கு 2 நாள் அல்லது 3 நாள்கள் செய்தால் வலி சுத்தமாக இல்லாமல் போய்விடும்.

சளியைக்குறைத்தல்: பருவ காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு நாம் சுக்குவை உபயோகிக்கலாம். சுவாசக்குழாய் கோளாறுகளை சமாளிக்கவும் சுக்கு நமக்கு உதவியாக உள்ளது.

இதோடு மட்டுமின்றி தலைவலி, வாய் துர்நாற்றம், வயிறு எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு சுக்கு மிகுந்த பலனளிப்பதாக உள்ளது. எனவே நீங்கள் தினமும் உங்களது உணவு முறையில் தவறாமல் சுக்குவை நீங்கள் சேர்த்துக் கொள்ளும்போது பல விதமான உடல் நலப்பிரச்சனைகளுக்கு நீங்கள் தீர்வு காணமுடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அடிக்கடி தனியாக வெளியூர் செல்லும் பெண்களா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!

 

உலகம் முழுவதும் தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் ஆண்களோடு ஒப்பிடும்போது, பெண்கள் குறைந்த அளவில்தான் பயணம் செய்கிறார்கள். இதற்கு சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன என்றால் அது மறுப்பதற்கில்லை. இந்த பயணங்கள் புதிய நபர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பையும், அன்றாட வாழ்க்கையின் டென்ஷன்களில் இருந்து விடுபட்டு மனதை ரிலாக்ஸ் செய்ய ஒரு நல்ல அமைதியான நேரத்தையும் வழங்குகிறது.

தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது, ஒவ்வொரு பெண்ணும் ஒரு சுதந்திர பயணத்தை மேற்கொள்ள வேண்டும். தனியாகப் பயணிக்கும் பல பெண்கள் தங்கள் பாதுகாப்பைப் பற்றி அடிக்கடி கவலைப்படுகிறார்கள். ஆனால் அவ்வாறு கவலைப்படுவதை விட்டு, தனியாகப் பயணம் செய்யும்போது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

செல்லும் இடத்தை பற்றி நன்கு அறிதல் : நீங்கள் பயணம் செய்வதற்கு முன் நீங்கள் பார்வையிட விரும்பும் இடத்தைப் பற்றிய ஆழமான ஆராய்ச்சியானது, தவறான தகவல் மற்றும் தேவையற்ற தொந்தரவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். மேலும் நீங்கள் விரும்பும் இடத்திற்கு பயணிக்கும்போது தவிர்க்க வேண்டியவை பற்றிய தகவல்களையும் நீங்கள் சேகரிக்கலாம்.

தங்குமிடத்தை சரிபார்ப்பது : புதிய ஊர்களுக்கு சென்று தங்குவதற்கு இடம் தேடி அலைவது சிரமமாக இருக்கும் எனவே , தனியாக பயணம் செய்தால் தங்குமிடத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்வது மிகவும் பாதுகாப்பானது. மேலும், நீங்கள் தங்கியிருக்கும் சுற்றுப்புறத்தைப் பற்றிய உணர்வை முழுமையாகப் பெற, பகல் நேரத்தில் விடுதிக்கு வருவதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் தங்குமிடத்தைக் கண்டறிவது எளிதாக இருக்கும்.

உடமைகளை பத்திரமாக வைத்துக்கொள்வது : பெண்கள் தனியாக பயணம் செய்யும்போது அதிக அளவிலான பைகளை எடுத்து செல்வதைத் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு தேவையான அளவு பொருட்களை மட்டும் எடுத்து வைத்து, செல்வதால் உங்கள் பயணம் இலகுவாக இருக்கும், பெரிய சிரமம் எதுவும் இருக்காது. எப்போதும் பவர் பேன்க், ஹெட்ஃபோன் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். இவற்றை எல்லாம் மிகவும் பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியம்.

புதிய நட்பை ஏற்படுத்துவது : வெளியூர் பயணத்தின்போது அங்குள்ள உள்ளூர் மக்களுடன் பழகி ​புதிய நட்பை ஏற்படுத்தி, கொள்வது நல்லது. ஆனால் உங்கள் தங்குமிட விவரங்களை யாரிடமும் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. யாராவது அதிகமான கேள்விகளைக் கேட்டால் அவர்களின் கேள்விகளுக்கு பதிலாக வேறு செயல்களில் அவர்களை திசை திருப்பி அவ்விடத்தை விட்டு செல்வது நல்லது. முக்கியமாக நீங்கள் பயணம் செய்யும் இடங்கள் பற்றிய விவரங்களையும் தங்கும் இடங்கள் பற்றிய விவரங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்கவும். நீங்கள் உங்கள் வீட்டிற்குத் திரும்பிய பிறகு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆரோக்கியம் சார்ந்த பொருட்களை எடுத்துச் செல்வது : சரும ஆரோக்கியத்திற்காக நீங்கள் பயன்படுத்தும் பாடி லோஷன், சீரம், சன்ஸ்கிரீன் லோஷன், லிப் பாம், போன்றவற்றை எடுத்து வைத்து கொள்ளுங்கள். முக்கியமாக பயணத்தின் போது சிலருக்கு மாதவிடாய் ஏற்படுமாயின் சானிட்டரி பேடுகள், தலைவலி மருந்துகள், காய்ச்சல் மாத்திரைகள் ஆகியவற்றை எடுத்து வைத்து கொள்ளவேண்டும். கொரோனா பெருந்தொற்று காரணமாக முகக்கவசங்களை அணிவது, சானிடைசர்களை எடுத்துச் செல்வதும் அவசியம். இது போன்ற முன் ஏற்பாடுகளை செய்துகொள்வதன் மூலம் உங்களின் தனியாக பயணம் மேற்கொள்ளும் அனுபவம் சிறப்பாக அமையும்.


JIPMER நிறுவனத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

 JIPMER நிறுவனத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது Senior Financial Advisor, Controller of Examination பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Financial Advisor, Controller of Examination பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Financial Advisor கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree தேர்ச்சி பெற்று மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக Level 11 மற்றும் 12 அளவிலான ஊதியத்தில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..

JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Financial Advisor, Controller of Examination பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Financial Advisor கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree தேர்ச்சி பெற்று மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக Level 11 மற்றும் 12 அளவிலான ஊதியத்தில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.03.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.60 ஆயிரம் சம்பளம்... கோவை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 100க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிப்பு

 கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் (Urban Health and wellness centre) காலியாக உள்ள பல்வேறு  பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில்/ தற்காலிகமானதாகும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.02.2023 மாலை 5.00 மணி.

வரிசை எண்பணியிட வகைகாலி பணியிடம்வயதுசம்பளம்
1மருத்துவ அலுவலர்4945 வயது வரைரூ.60,000
2பல்நோக்குசுகாதாரப் பணியாளர்(சுகாதாரஆய்வாளர் நிலை–II )4935 வயது வரைரூ.14,0000
3சுகாதாரப் பணியாளர்4945 வயது வரைரூ.8500 

மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், எம்பிபிஎஸ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பல்நோக்குசுகாதாரப் பணியாளர் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட  சுகாதாரப் பணியாளர்/சுகாதார ஆய்வாளர் ஆகிய பிரிவுகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சுகாதாரப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான, விண்ணப்பப் படிவத்தை, கோயம்பத்தூர் மாவட்ட https://coimbatore.nic.in/  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:-

உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்

மாவட்ட நல்வாழ்வு சங்கம்

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்

219, பந்தய சாலை

கோயம்புத்தூர் – 641018.

தொலைபேசி எண்: 0422-2220351 ஆகும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.7 கடைசி நாள்!

 

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.7 கடைசி நாள்!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள Chief Risk Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி அறிவிப்பின் படி, ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TMB வங்கி வேலைவாய்ப்பு 2023 விவரங்கள்:
  • Chief Risk Officer பதவிக்கு என மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உலகளாவிய ஆபத்து வல்லுநர்கள் சங்கத்திலிருந்து நிதி இடர் மேலாண்மையில் நிபுணத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • 30.11.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும்.
  • பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வர வேண்டும். அவர்கள் நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 07.02.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF 


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நீங்கள் தூங்கும்போதும் பணம் சம்பாதிக்க வேண்டுமா? இந்த 5 டிப்ஸ் உங்களுக்குத்தான்!

 இன்றைய உலகில் நாம் பணத்துக்காக ஒரு பக்கம் ஓடியாடி உழைத்துக்கொண்டிருந்தாலும், நாம் ஏற்கெனவே உழைத்த பணம் நமக்காக உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி நம் பணம் நமக்காக உழைத்துக்கொண்டிருப்பதை பேசிவ் இன்கம் (Passive Income) என்று சொல்லலாம். உலகின் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளர் வாரன் பஃபெட் இதை இரண்டாவது வருமானம் எனக் குறிப்பிடுவார். அவர், `உங்கள் பணம், நீங்கள் தூங்கும்போதும் உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் சாகும் வரைக்கும் உழைத்துக்கொண்டிருக்க வேண்டும்’ என்று சொல்லியிருப்பது, மிகவும் அர்த்தமுள்ளதாகும்.

செயல் சார்ந்த வருமானம்

நாம் தொழில், வணிகம் செய்து அல்லது வேலை பார்த்துச் சம்பாதிப்பது. அதாவது தொடர்ந்து ஒரு செயலை செய்து சம்பாதிப்பது ஆக்டிவ் இன்கம் (Active Income). அதாவது செயல் சார்ந்த வருமானம் ஆகும். நம் உடல் நிலை மற்றும் மனநிலை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் எனச் சொல்வதற்கில்லை. வயதாக வயதாக அதன் செயல்பாடு மற்றும் திறன் குறைய ஆரம்பிக்கும், அப்போது நாம் ஏற்கெனவே செயல் மூலம் உருவாக்கியது, செயலற்ற வருமானம் என்கிற பேசிவ் இன்கம் கொடுப்பதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் மற்றும் குடும்பத்தினரின் வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

பொதுவாக, செயலற்ற வருமானத்தைக் கீழ்க்கண்ட ஐந்து முக்கிய வழிகளில் உருவாக்க முடியும்.

1. வட்டி வருமானம், பென்ஷன்

இருப்பதிலேயே அதிக ரிஸ்க் இல்லாமல், சுலபமாகச் செயலற்ற வருமானத்தை உருவாக்க உங்களிடம் இருக்கும் பணத்தை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பென்ஷன் திட்டங்களில் போட்டு வைப்பதாகும். இப்படிப் போட்டு வைப்பதில் இரு பாதக அம்சங்கள் உள்ளன.

ஒன்று இவற்றின் மூலமான வருமானம் பணவீக்க விகிதம் அதாவது, விலைவாசி உயர்வு அளவுக்கு அல்லது அதை விடக் குறைவாக இருப்பதாகும். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு தற்போதைய நிலையில் ஆண்டுக்கு சுமார் 5% வட்டிதான் கிடைக்கிறது. பென்ஷன் பிளான்கள் மூலமான வருமானம் 5 - 6.5% ஆக உள்ளது. தற்போதைய நிலையில் சில்லறை பணவீக்க விகிதம் சுமார் 6% ஆக உள்ளது.

அடுத்து எஃப்.டி வட்டி வருமானம் மற்றும் பென்ஷன் தொகைக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். அதிக வரி வரம்பில் அதாவது 20%, 30%-ல் இருப்பவர்களுக்கு வரிக்கு பிந்தைய வருமானம் விலைவாசி உயர்வுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக சுமார் 4 - 5% ஆக இருக்கும். எனவே, பேசிக் இன்கம் உருவாக்க இந்த முறையைத் தவிர்ப்பது நல்லது. அதேநேரத்தில், பேசிவ் இன்கம்மில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், இவற்றைக் கவனிக்கலாம்.

2. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலமும் பேசிவ் இன்கமை உருவாக்கலாம். இதில் ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் வருமான எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடன் ஃபண்டுகள், கலப்பின ஃபண்டுகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்தப் பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யலாம். அல்லது முதலீட்டுத் தொகையை ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பிரித்து இந்த மூன்று வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம், வருமானத்துக்கு எக்காரணம் கொண்டும், டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்யக் கூடாது. காரணம், தற்போதைய நிலையில், டிவிடெண்டுக்கு முதலீட்டாளர் அவரின் வருமான வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.

சிறிது காலம் காத்திருந்து சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் பணத்தை எடுத்துப் பயன்படுத்தினால் அதிக வருமானம் கிடைப்பதோடு (காத்திருக்கும் காலத்தில் மூலதன ஆதாயம் அதிகரிக்க வாய்ப்பு), குறைவான வரி அல்லது வரி கட்ட வேண்டி இருக்காது.

கடன் ஃபண்ட் என்கிறபோது முதலீடு செய்து மூன்றாண்டு கழித்து எஸ்.டபிள்யூ.பி முறையில் பணம் எடுக்கும்போது லாபத்துக்குப் பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு, ஒருவர் எந்த வருமான வரம்பில் வந்தாலும் 20% வரி கட்டினால் போதும்.

இதுவே, ஈக்விட்டி ஃபண்ட் என்கிறபோது ஓராண்டு கழித்து யூனிட்களை விற்று லாபம் பார்க்கும்போது, லாபத்தில் ரூ. 1 லட்சம் வரைக்கும் வருமான வரி கிடையாது. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு ஒருவர் எந்த வரி வரம்பில் வந்தாலும் 10% வரி கட்டினால் போதும்.

இங்கே ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் கடன் ஃபண்டுகள் மூலமும் ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள் ஈக்விட்டி ஃபண்ட் மூலமும் பேசிவ் இன்கம் பெறத் திட்டமிடலாம்.

கடன் ஃபண்டுகள் மூலமான வருமானம் மூன்றாண்டு கழித்த நிலையில் வரிக்கு பிந்தைய நிலையில் எஃப்.டி வட்டியைவிட அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு மூலமான வருமானம் பணவீக்க விகிதத்தைவிட அதிகமாகவும், குறைவான வரி கட்டுவதாகவும் இருக்கும்.

3. பங்குச் சந்தை முதலீடு:

தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அடிப்படையில் வலுவான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது மூலம் நீண்ட காலத்தில் அதிக பேசிவ் இன்கம் கிடைக்கக் கூடும். நிறுவனம் வழங்கும் டிவிடெண்ட் வருமானம் மற்றும் பங்கின் விலை உயர்வு லாபமாக இருக்கும்.

ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் பங்குகளை விற்றால், லாபத்துக்கு முதல் ரூ. 1 லட்சத்துக்கு வரி கிடையாது. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு 10% வரி கட்ட வேண்டி வரும், நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்டுக்கும் முதலீட்டாளரின் வரி வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.

இந்த வரியைத் தவிர்க்கும் விதமாக அதிக விலை கொடுத்து நிறுவனங்கள் முதலீட்டாளர் களிடமிருந்து பங்குகளைத் திரும்ப வாங்கிக்கொள்வது அடிக்கடி நடக்கிறது. பேசிவ் இன்கம் தொடர்ந்து எதிர்பார்ப்பவர்கள், நிறுவனத்திடம் பங்கைக் கொடுத்துவிட்டு, குறைவான விலையில் சந்தையில் அந்தப் பங்கை வாங்கிக்கொள்வது லாபகரமாக அமையும்.

நீண்ட காலத்தில் பங்குச் சந்தை மூலமான வருமானம், பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக இருப்பதோடு, குறைவான வருமான வரி கட்டும் அனுகூலத்துடன் உள்ளது. இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் நிறுவனப் பங்குகளை ஓராண்டுக்கு மேல் விற்று லாபம் பார்க்கும்போது இவை அனைத்தும் சேர்ந்துதான் நிதி ஆண்டில் ரூ. 1 லட்சத்துக்கு வரி இல்லை.

4.ராயல்டி வருமானம்:

ஏதாவது ஒரு துறை குறித்துக் கூடுதல் விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்கள். இந்த விவரங்களை அனுபவத்தின் மூலம் அறிந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். அவர்கள் புத்தகங்கள் எழுதுவது, பிளாக் எழுதுவது, கோடிங் தெரிந்திருக்கும்பட்சத்தில் மொபைல் போன் ஆப் உருவாக்கி எழுதிக் கொடுப்பது மூலம் ஆண்டுதோறும் வருமானம் கிடைத்து வருமானம். யூடியூப் நடத்துவது மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம். இதில், ஒரு முறை உழைப்பைக் கொடுத்தால் போதும்.

ஆண்டாண்டுக்கு வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு, புத்தகம் விற்க விற்க ராயல்டி என்கிற சன்மானம் கிடைத்து வரும். இதே போல் யூடியூப் வீடியோவை பார்க்கப் பார்க்க வருமானம் வந்துகொண்டிருக்கும்.

இந்த வருமானத்தை எஃப்.டி, கடன் ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்து இரண்டாவதாகக் கூடுதல் பேசிவ் இன்கம் பெற முடியும்.

5.வாடகை வருமானம்:

ஏற்கெனவே சொந்த வீட்டில் இருப்பவர்கள் தங்கள் தேவைக்குப் போக கூடுதலாக இருக்கும் பகுதியை வாடகைக்கு விடலாம். அல்லது கூடுதல் அறைகளை கட்டி வாடகைக்கு விடலாம். இதன் மூலம் தொடர்ந்து பேசிவ் இன்கம் வந்துகொண்டிருக்கும்.

வணிக கட்டடங்களை வாங்கி வாடகைக்கு விடுவது மூலமும் வாடகைக்கு விட்டு பேசிவ் இன்கம் பெற முடியும். இதற்கு லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு தேவைப்படும்.

ஊட்டி, கொடைக்கானல், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் சுற்றுலா நோக்கில் பலர் வீடுகளை வாங்கி வைத்திருப்பார்கள். அவர்கள் தாங்கள் பயன்படுத்தாத காலத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாடகைக்கு விடுவது மூலம் பேசிவ் இன்கம் ஈட்ட முடியும். பயன்படுத்தாத கார் பார்க்கிங், அதிகம் பயன்படுத்தாத காரை வாடகைக்கு விட்டு சம்பாதிக்காலம்.

வாடகை வருமானம் வரிக்கு உட்பட்டது. கணவன், மனைவி இருவரும் வாடகை வருமானம் பெறுவது போல் இருந்தால் வரி கட்ட வேண்டி இருக்காது. அல்லது குறைவான வரி கட்ட வேண்டி இருக்காது. மேலும், வேறு வருமானம் இல்லை என்றாலும் அடிப்படை வருமான வரி வரம்புக்குள் வரவில்லை என்றால் வரி கட்ட வேண்டி இருக்காது.

இந்த பேசிவ் வருமானத்துக்கு முதலீடு செய்யும்போது ஒருவரின் வயதுக்கு ஏற்ப, ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப அசெட் அலோகேஷன்படி முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது மூலம் ரிஸ்கை கணிசமாகக் குறைத்து அதிக லாபம் பெற வாய்ப்புள்ளது. வாடகை வருமானம், ராயல்டி வருமானம் என்பது எல்லோருக்கும் கிடைப்பது கடினம். ஆனால், முதலீடு மூலமான பேசிவ் இன்கம் பெறுவது அனைவருக்கும் எளிதாக இருக்கும். அதற்கு இன்றே திட்டமிடலாமே..!

வேலை பழகும் இளைஞர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1500 நிதியுதவி : பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு

 

அடுத்த 3 ஆண்டுகளில், நாடு முழுவதும் வேலை பழகும்  இளைஞர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாதம் ரூ. 1500/- வரை உதவித்தொகையின் வழங்கப்படும் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு,  தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. தொழிற்சாலைகளில் வேலை பழகுநர்கள் (Apprentice) சேர்க்கையை அதிகரிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கும் நிறுவனங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் நபர் ஒன்றுக்கு ரூ.1500க்கு மிகாமல் (அல்லது வழங்கப்டும் ஊதியத்தில் 25%)  பங்கிட்டுத் தொகையாக மத்திய அரசு அளித்து வந்ததது. மாதத்திற்கு ரூ.7,500க்கு மிகாமல் ஊதியம் வழங்கும்  நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜுலை மாதம், இந்த திட்டத்தை  நேரடி பயனாளிகள் பரிமாற்ற திட்டத்தின் (Direct Beneficiary Transfer (DBT) scheme) ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தியது. இந்த புதிய முறையின் மூலம், மத்திய அரசு தனது பங்களிப்பு நிதியான ரூ.1500 உதவித் தொகையை,  வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு பதிலாக,  வேலை பழகுநர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று அறிவித்தது. முன்னோடியாக, சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் செயல்படுத்தி வந்த புதிய நடைமுறையை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். இதன், மூலம் நாடு முழுவதும் 47 லட்சம் வேலை பழகும் இளைஞர்கள் பலனடைய உள்ளனர் என்றும் தெரிவித்தார்.   


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

UPSC: இந்திய வனப் பணி தேர்வு - யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு..!

 இந்தியக் குடிமைப் பணிகளில் அடங்கிய இந்திய வனப் பணி தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தோராயமாக 150 இடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கப் பிப்ரவரி 21 ஆம் நாள் வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வனப் பணி தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். இந்திய வனத்துறையில் உள்ள முக்கிய பதவிகளுக்கு இத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வைப் போல் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் நடைபெறும்.

இத்தேர்வை எழுத வயது வரம்பாக 21 நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிரிவினருக்கு ஏற்ற வயது தளர்வுகள் உண்டு. கல்வித்தகுதியாக Animal Husbandry & Veterinary Science,Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology/ Agriculture, Forestry/Engineering போன்ற பாடங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ள தேர்வர்கள் https://www.upsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும். முதல் நிலை தேர்வுகள் 2023 மே மாதம் 28 ஆம் நாள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அதில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news