Search

உங்களுக்கு நிச்சயம் வேலை வேண்டுமா? அப்ப இந்த படிப்பை படியுங்க…

 கல்லூரி படிப்பை முடித்தவர்கள் அனைவரும் அடுத்த கட்டமாக ஏதேனும் ஒரு வேலையை நாடி செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால் அதில் ஒரு சிலருக்கு மட்டுமே பணி நியமனம் கிடைக்கிறது. அதற்கு காரணம் எந்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது என முன்னதே அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு தங்களது பட்டபடிப்பை தேர்வு செய்து படிக்க வேண்டும். நல்ல வேலையை பெற்று தருவதற்கு பல்வேறு படிப்புகள் உள்ளது. பள்ளி படிப்பை முடித்தவர்கள் அனைவரும் அதற்கு மேல் என்ன படிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவில் உதவி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில் மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெறுவதுதான் அடிப்படையாக கருதப்படுகிறது. ஏனெனில் அது தான் அனைத்து பணிகளுக்கும் முதன்மையாக கருதப்படுகிறது. அடுத்த கட்டமாக உயர்கல்வி பக்கம் செல்வோம். பள்ளிகல்வியை முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் உயர்கல்வியில் என்னென்ன துறைகள் உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் தேர்ந்தெடுக்கும் படிப்பு தான் நம்மை அடுத்த படிக்கு கொண்டு செல்லும். நம்முடைய எதிர்காலத்தை தேர்வு செய்யும் தருணம்தான் இந்த உயர்கல்வி படிப்பு. அந்த வகையில் அதிக வேலை வாய்ப்பை தரும் கல்வி தகுதிகளாக தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, கலை அறிவியல் கல்வி, சிறுதொழில் கல்வி எனப் பல வகையான கல்வி முறைகள் உள்ளன. எனவே அவற்றை பற்றி தெளிவான தொகுப்பை காண்போம்.

தொழிற்கல்வி(Vocational Education):


முதலில் தொழிற்கல்வி படிப்பை பற்றி அறிவோம். தொழிற்கல்வி படிப்பு என்பதில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் ஆகியவை தான் தொழிற்கல்வி. இதில் சேர்வதற்கு மேல்நிலை படிப்பில் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். உயர்மதிப்பெண் பெற்றவர்கள் தங்கள் கல்வி தகுதிக்கு ஏற்ற பாடப் பிரிவுக்கு விண்ணபிக்க முடியும். மருத்துவம் போன்ற படிப்பில் நுழைவு தேர்வுகள் உள்ளன.

அதிக மதிப்பெண் உள்ளவர்கள் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என அனைவரும் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து அதற்கு உரிய காலத்தில் படித்து முடிப்பார்கள். மேலும் கல்லூரிகளில் எவ்வாறு தங்களுது திறன்களை வளர்த்து கொள்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. அதுவே நாம் எந்த இடத்தில் வேலை செய்ய போகிறோம் என்பதை முடிவு செய்யும். தங்களின் தகுதிக்கு ஏற்ப உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை செய்யும் வாய்ப்புகள் உண்டு.

தற்பொழுது தொழிற்கல்வி படிப்பில் பல முன்னேற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் தற்பொழுது மாணவர்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பத்துறை, நுண்ணியல் தொழில்நுட்பத் துறை தொடர்பான தொழிற் படிப்புகள் கற்பிக்கப்பட்டுகிறது. வேதியியல், விலங்கியல் துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் முதல் வேளாண்மை, சுற்றுச்சூழல், மருத்துவம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் வரை அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் சிறந்த வேலைவாய்ப்பு துறையாக இது செயல்பட்டு வருகிறது.

தொழில்நுட்பக் கல்வி(Technical Education):


பள்ளி படிப்பான பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த படிப்பில் சேரலாம். தங்களின் உயர் மதிப்பெண்களுக்கு ஏற்ப தாங்கள் விரும்பிய துறையை தேர்வு செய்து தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கலாம். இதில் பொறியியல் துறையில் உள்ளது போல பல்வேறு துறைகள் இந்த தொழில்நுட்பக் கல்விலும் உள்ளது. இதில் சேர்ந்து படிப்பவர்களுக்கு நிச்சயம் அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பள்ளியில் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றவர்களை போல ஒரே வழியில் போகாமல் வேறுபட்ட முறையில் இடைநிலையாசிரியர் கல்விப் பயிற்சி இரண்டாண்டுகள் படித்து தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து கொள்ளலாம். செவிலியர் பயிற்சி, கூட்டுறவுப் பயிற்சி போன்றவற்றில் சேர்ந்து பயிற்சி பெற்று வேலை வாய்ப்புகளைப் பெறலாம். தொழில்நுட்பக் கல்வி படிப்பில் கூட நிறைய வேலை வாய்ப்பு உள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்வி(Arts and Science Education):


பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பில் சேரலாம். களை மற்றும் அறிவியல் கல்வியில் ஏராளமான துறைகள் உள்ளன. அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், பொருளியல், வரலாறு, கணக்குப் பதிவியல், கணிப்பொறியியல், வணிகவியல் போன்ற பிரிவுகள் உள்ளன. இதில் சேர்ந்து இளங்கலைப் பட்டமும் அதன்பின்னர் முதுகலைப் பட்டமும் பெறலாம். மேலும் கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து இளம் கல்வியியல் பட்டமும் பெற்று கொள்ளலாம்.

இந்த பட்டப் படிப்புகளை படிப்பதன் மூலம் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாய்ப்புகள் பெறலாம். அவை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம், நடுவண் அரசுத் தேர்வாணையம், வங்கித் துறை, ஆயுள் காப்பீட்டுத் துறை, தொடர் வண்டித்துறை போன்ற துறைகள் உள்ளன. இவற்றில் பணி புரிய வேண்டும் என்றால் முதலில் அந்த துறையில் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் வேலை வாய்ப்பை பெற முடியும்.

இவற்றை பற்றிய தகவல்கள் நாளேடு, வானொலி, தொலைக்காட்சி, முதலிய ஊடகங்களின் மூலம் அறிய முடியும். இதனை பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு தங்கள் தகுதிக்கு ஏற்ப விண்ணபிக்கலாம். மேலும் மாவட்ட வேலை வாய்ப்பகத்தின் மூலமும் வேலை வாய்ப்பை பெற முடியும்.

சிறுதொழில் கல்வி(Small Business Education):

சிறுதொழில் கல்வி

படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைவரும் இதில் சேர்ந்து படித்து பயன் பெறலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர், தேர்ச்சி அடையாதவர் என அனைவரும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்ந்து பயன் பெற முடியும். தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு அல்லது ஈராண்டு பயிற்சிப் பெற்றால் பணியில் சேர முடியும்.

இத்தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பல்வேறு துறைகள் உள்ளன. அவை கம்மியர், கடைசல் பிடிப்பவர் கட்டட வரைவாளர், நில அளவையாளர், தச்சர், படிப்புகளும், இயந்திரம், வாகனம், தொலைக்காட்சி குளிரூட்டும் கருவி, கைபேசி, கணினி முதலியவற்றைப் பழுதுபார்க்கும் படிப்புகளும் உள்ளன. நமது விருப்பத்திற்கேற்ப தேவையான துறைகளில் சேர்ந்து படித்து வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

இராணுவம், காவல்துறைப் பணி(Military, Police Work):

police work

இராணுவம், காவல்துறைப் பணி என்பது மக்களுக்காக சேவை செய்யும் ஒரு துறையாகும். இதற்கு தேவையான தகுதியாக கருதப்படுவது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் இராணுவம், காவல்துறையில் பணி புரிய முடியும். இவற்றிற்கு தேர்ந்தெடுக்கும் முறை என்பது முதலில் உடற்கூறு தேர்வாகும். அதன் பின்னர் எழுத்து தேர்வு நடைப்பெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களே பணியில் சேர முடியும்.

ஓட்டுநர், நடத்துனர் முதலிய பணிகளுக்கு உடற்கூறு தகுதியுடையவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும். மேலும் மக்கள் நலப் பணியாளர், சத்துணவு அமைப்பாளர் போன்ற பணிகளிலும் சேர முடியும். இப்பணி குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பார். அதன்பின், ஊடகங்களில் வெளியிடப்படும்.

Police

அரசு பணியில்தான் சேர வேண்டும் என்று எண்ணாமல், ஒவ்வொருவரும் சுயதொழில் தொடங்க வேண்டும். இவற்றின் மூலம் வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும், அப்பொழுது தான் வேலை இல்லா திண்டாட்டம் குறையும். சுயதொழில் தொடங்குவதற்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும். அவற்றிக்கான பயற்சி, கடனுதவி போன்றவற்றை அரசே வழங்குகிறது.

வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும். எவற்றையும் ஒரு தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டால் நிச்சயம் ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெற முடியும். வேலையை பெறும் போது அது நாட்டிற்கும் வீட்டின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SACON RECRUITMENT 2023 NOTIFICATION OUT | VACANCY FOR RESEARCH PERSONNEL UNDER PROJECT

 

நிறுவனத்தின் பெயர்சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் – Salim Ali Centre for Ornithology and Natural History (SACON)
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.sacon.in/
வேலைவாய்ப்பு வகைCentral Government Jobs 2023
பதவிField Biologist
சம்பளம்மாதம் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும்

SACON QUALIFICATION DETAILS:

சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் வேலை செய்ய ஆர்வமுள்ள 12th படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

SACON APPLICATION FEE:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

SACON JOB LOCATION:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு கோயம்புத்தூரில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது

SACON RECRUITMENT 2023 SELECTION PROCESS?

சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம், தனது பணியாளர்களை Written Test, Personal Interview, Medical Test, Walkin Interview அடிப்படையில் தேர்வு செய்கிறது.

HOW TO APPLY FOR SACON RECRUITMENT 2023:

SACON ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க 15-02-2023 என்ற கடைசி தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். அதன் இறுதி தேதிக்குப் பிறகு அப்ளை செய்யும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும், விண்ணப்பிக்கும் முன் விவரங்களை கவனமாக படிக்கவும்.

SACON IMPORTANT DATES:

Start Date06-02-2023
Last Date15-02-2023

SACON RECRUITMENT 2023 NOTIFICATION PDF


LATEST AAVIN RECRUITMENT 2023 JOBS OPENING FOR MANAGER, EXECUTIVE, ASSISTANT, TECHNICIAN VACANCY, CHECK ELIGIBILITY, SALARY DETAILS..

 AAVIN Recruitment 2022: Tamilnadu Co-operative Milk Producers Federation Limited (Aavin) has announced job openings for 322 Manager, Executive, Assistant, Technician positions as part of its recruitment drive for 2022. Candidates who are interested and qualified can apply for the online on Updating Soon 2022. AAVIN is only recruiting applicants online for this notification. You can download the application form from the official website at https://aavin.tn.gov.in/web/guest/home/. Candidates must complete and submit the AAVIN application form to the organization’s address. Any application submitted after Updating Sook 2022 will be rejected.

AAVIN Organization Details:

rganization NameTamilnadu Co-operative Milk Producers Federation Limited (Aavin)
Official Websitehttps://aavin.tn.gov.in/web/guest/home/
Job TypeTN Government Jobs 2023
RecruitmentAAVIN Recruitment 2023
Head Office AddressAavin Illam, TCMPF Ltd., 3A, Pasumpon Muthuramalinganar Salai, Nandanam, Chennai – 600 035, Tamil Nadu

AAVIN RECRUITMENT 2023 SUMMARY

Name of the JobManager, Executive, Assistant, Technician
No of Vacancies322 Posts
Job locationJobs in Tamil Nadu
Pay scaleAs Per Norms
Selection ProcessWritten Test, Interview, and Document Verification
Last DateUpdating Soon
Apply ModeOnline

AAVIN MANAGER, EXECUTIVE, ASSISTANT, TECHNICIAN JOB NOTIFICATION 2022 DETAILS:

The most recent AAVIN Manager, Executive, Assistant, Technician Recruitment 2022 information is provided below, including the required AAVIN Job education, AAVIN Job age limit, AAVIN Job application fee, AAVIN Job salary details, AAVIN Application Process, and AAVIN Job apply link.

AAVIN VACANCY DETAILS:

The Tamil Nadu Co-operative Milk Producers Federation Limited has announced 322 Manager, Executive, Assistant, Technician Recruitment 2023 positions. Check out the information on the position that is provided below.

Post NameVacancies
Senior Factory Assistant (In TCMPF Ltd, In DCMPU’s)50
Manager (Vety) (In TCMPF Ltd, In DCMPU’s)24
Extension Officer Grade-II (In DCMPU’s)22
Junior Executive (Office) (In TCMPF Ltd, In DCMPU’s)35
Technician (Operation) (In TCMPF Ltd, In DCMPU’s)36
Deputy Manager (Dairying) (In TCMPF Ltd, In DCMPU’s)23
Manager (Admin) (In TCMPF Ltd, In DCMPU’s)06
Manager (Civil) (In TCMPF Ltd)01
Technician(Boiler) (In TCMPF Ltd, In DCMPU’s)08
Junior Executive (Typing) (In TCMPF Ltd, In DCMPU’s) More07
Total322 Posts

AAVIN RECRUITMENT 2023 SELECTION PROCESS:

The Tamilnadu Co-operative Milk Producers Federation Limited often follows the procedures outlined below when hiring candidates.

Written Test, Interview, and Document Verification
Interested candidates can apply Online @ AAVIN’s official website

HOW TO APPLY FOR LATEST AAVIN RECRUITMENT 2023:

To apply for the AAVIN Online Recruitment 2023, follow the steps outlined below.

  1. Visit the AAVIN Website, which is located at https://aavin.tn.gov.in/web/guest/home/
  2. Find the AAVIN Career/Advertising menu.
  3. Look for and choose the AAVIN Manager, Executive, Assistant, Technician Job Notification.
  4. Download and view the job announcement for the AAVIN Manager, Executive, Assistant, Technician.
  5. Check your eligibility and continue.
  6. Completely fill out the form and attach all required papers.
  7. Self attest all the documents.
  8. Whenever necessary, pay the application fees.
  9. Make a duplicate of your application in picture form.
  10. Before November 02, 2022, send the application to the specified address.

AAVIN NOTIFICATION 2023 IMPORTANT DATES:

Start DateUpdating Soon
Last DateUpdating Soon

AAVIN Job Notification and Application Links

AAVIN 2023 Notification Link
AAVIN Recruitment Official Website



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வங்கி வேலை தேடுபவரா நீங்கள்? Advisor, Consultant பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு! நம்ம தமிழகத்திலே வேலை செய்யலாம்! உடனே இமெயிலில் அப்ளை பண்ணுங்க!

 SIDBI Recruitment 2023: இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் Advisor, Consultant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. B.E, B.Tech, ICAI, Master Degree படித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அதன் அதிகாரபூர்வ https://www.sidbi.in/en என்ற இணையதளத்திலிருந்து முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். SIDBI Bank Jobs 2023 வேலைக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள 12/02/2023 என்ற இறுதி தேதி முடிவதற்குள் SIDBI Bank Vacancy 2023-க்கு ஆன்லைன் அப்ளை பண்ணலாம்.

நிறுவனத்தின் பெயர்Small Industries Development Bank of India (SIDBI)
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.sidbi.in/
வேலைவாய்ப்பு வகைBank Jobs 2023
பதவிAdvisor, Consultant
கல்வித்தகுதிB.E, B.Tech, ICAI, Master Degree
பணியிடங்கள்Bengaluru, Chennai, Lucknow, Mumbai, New Delhi

SIDBI காலி பணியிடங்கள்:

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் Advisor, Consultant பதவிக்கு 19 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SIDBI JOBS-க்கான வயது வரம்பு:

SIDBI Vacancyக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 35 முதல் 57 வயது வரை இருக்க வேண்டும்.

SIDBI RECRUITMENT 2023 பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ SIDBI இணையதளத்திற்குச் செல்லவும் https://www.sidbi.in
  • தொழில்/விளம்பர (Career/ Advertisement) மெனுவைத் தேடுங்கள்
  • Advisor, Consultant Job Notification என்று தேடி அதில் கிளிக் செய்யவும்
  • SIDBI ஆலோசகர் வேலை அறிவிப்பைப் பதிவிறக்கி பார்க்கவும்
  • உங்கள் தகுதியைச் சரிபார்த்து மேலும் செல்லவும்
  • அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்
  • பிறகு ஆவணங்களையும் ஸ்கேன் செய்யவும்
  • விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை 12/02/2023 க்கு முன் recruitment@sidbi.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

SIDBI JOB VACANCY 2023 தேர்வு செய்யப்படும் முறை:

வங்கியில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இப்பணிக்கு பணியாளர்கள் நேர்க்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

SIDBI RECRUITMENT 2023 IMPORTANT DATES:

SIDBI Bank-ல் பணியாற்ற ஆர்வமுள்ளவங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடக்க தேதி06-02-2023
கடைசி தேதி12-02-2023

SIDBI JOBS 2023 NOTIFICATION IMPORTANT LINKS:

SIDBI Recruitment 2023 Notification pdf


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஆயுஷ் மருத்துவமனைகளில் டாக்டர் வேலை: விண்ணப்பிக்க பிப்.28-ம் தேதியே கடைசி நாள்!

 Govt Jobs: தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் [South India Multi-State Agriculture Co-operative Society Ltd -SIMCO] இயங்கி வரும் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மருத்துவமனைகளில் பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இம்மாதம் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்19
பணியிட வகைஹோமியோபதி மருத்துவர் -6ஆயுர்வேத மருத்துவர் - 6யுனானி மருத்துவர் - 1யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர் - 6
கல்வித் தகுதிB.H.M.S - Bachelor of Homeopathy and Surgery
வயது வரம்பு23 -35 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்
சம்பளம்15800 - 35500
விண்ணப்ப படிவம்விண்ணப்ப படிவங்களை www.simcoagri.com என்ற இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
கடைசி நாள்28.02.2023 மாலை 4.30 PM மணி வரை

விண்ணப்பம் செய்வது எப்படி?  

மேற்படி பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச்சான்றிதழ். தொழில்நுட்பத்தகுதிச்சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய நகல்களில் சுயசான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர், SOUTH INDIA MULTHSTATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD. [SIMCO] டவுன் ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர்- 632004. என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Jobs in Chennai: சென்னையில் அதிகம் வேலைவாய்ப்புகள் தரும் துறைகள் என்னென்ன தெரியுமா?

 சென்னையில் 2025ம் ஆண்டு  வாக்கில், திறன்வாய்ந்த  (Skilled/Semi Skilled) பணியாளர்களின் தேவை 1.8  லட்சமாக இருக்கும் என்று (1,84,327) மதிப்படப்படுகிறது. ஆனால், வெறும்  83,657 திறன் வாய்ந்த மனித வளங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமான பணிகளுக்கு பணி அமர்த்தப்பட முடியாத நிலை இருப்பதாகவும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வறிக்கை கணிக்கிறது.

சென்னையில் அதிகம் வேலை தரும் துறைகள் என்ன.... இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பது குறித்து இங்கு விளக்கமாக பாப்போம்

சென்னையின் பொருளாதாரம் என்ன?  சென்னை மிகவும் தொழிற்வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் ஒன்று. மாநிலத்தின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சென்னையின் பங்களிப்பு மட்டும் 4.8% ஆகும்.

சென்னையின் பொருளாதாரம், பெரிதும் சேவைத் துறையைச் சார்ந்தது. ஒட்டுமொத்த பொருளாதாரத்தில், சேவைத் துறையின் பங்களிப்பு 85% ஆகும். தொழிற்துறையின் பங்களிப்பு 14% ஆகவும்,  வேளாண் துறையின் பங்களிப்பு சற்றேரக்குறைய 1% ஆகவும் உள்ளன.  சென்னை பொருளாதார கட்டமைப்பில் சேவைத் துறையில் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்

துறை வாரியான பங்களிப்பு: வங்கிகள், வணிகப் பணிகள், காப்பீட்டுத் துறை ஆகிய மூன்று துறைகள் மட்டும் சென்னை பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 31% பங்களிப்பை அளிக்கின்றன. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகளின் பங்களிப்பு 26% ஆக உள்ளன. 


அதிகம் வேலை தரும் துறைகள் என்ன?  மொத்த பணியாளர்களில் கிட்டத்தட்ட 37% பேர் வாகனம் ஓட்டுவது, வியாபாரத் துறை மற்றும் பழுது பார்க்கும் (Transportation, Trade, Repair services) வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்துறையில் 18% பேரும், வங்கிகள், வணிகப் பணிகள் மற்றும் காப்பீட்டுத் துறையில் 18% பேரும் ஈடுபட்டு வருகின்றனர். நிர்வாக அமைப்பில் 11% பெரும், கட்டுமானத் துறையில் 7% பெரும் பணி செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்

எனவே, சென்னையைப் பொறுத்த வரையில்,  வாகனம் ஓட்டுவது, வியாபாரத் துறை, மற்றும் பழுது பார்க்கும் துறை (Transportation, Trade, Repair services), வங்கிகள் துறை (Banking), தொழிற்துறை ( Manufacturing) ஆகியவை இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறைகளாக உள்ளன.

இளைஞர்கள் பற்றாக்குறை:

தமிழ்நாடு அரசின், 2018 திறன் இடைவெளி மதிப்பீடு ஆய்வறிக்கையின் படி, 2025ம் ஆண்டின்  வாக்கில், சென்னையில் திறன்வாய்ந்த  (Skilled/Semi Skilled) பணியாளர்களின் தேவை 1.8  லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், வெறும்  83,657 திறன் வாய்ந்த மனித வளங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமான பணிகளுக்கு பணி அமர்த்தப்பட முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2025ல் சென்னையில்,  தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையில் மட்டுமே கிட்டத்தட்ட  48,524 திறன் வாய்ந்த இளைஞர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. உற்பத்தி துறையில் 23,543 இளைஞர்களும், ரியல் எஸ்டேட் துறையில் 18,013 இளைஞர்களும் தேவைப்படுகின்றனர். எனவே, வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களும், புதிய நல்ல வேலைக்கு செல்ல வேண்டி போராடும் இளைஞர்களும் சென்னையின் தொழில் சந்தையின் தன்மை அறிந்து திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

புகைப்பழக்கம் நுரையீரலை மட்டுமல்ல மூளையையும் அதிகம் பாதிக்கும் - எச்சரிக்கும் நிபுணர்கள்!

 புகைப்பழக்கம் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். ஆனால் இந்த தீய பழக்கம் மூளை ஆரோக்கியத்திலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

நமது உடல் உடலை போலவே நமது மூளைக்கும் இயற்கையாகவே வயதாகும் மற்றும் முதுமை அடையும். அதே வேளையில் இது ஒரு குறிப்பிட்ட வயது வரை நடக்க தொடங்குவதில்லை. ஒருவரின் மரபணு மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளை பொறுத்து மூளை முதுமையடையும். ஆனால் புகைபழக்கம் என்பது ஒருவரின் மூளையை இயல்பை விட வேகமாக வயதாக்கும் ஒரு சுற்றுச்சூழல் காரணியாக இருக்க கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்த ஆபத்தான பழக்கம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பான மூளையை பல வழிகளில் பாதிக்கிறது.

பிரெயின் வால்யூம் இழப்பு:

மூளையின் சைஸ் மற்றும் வால்யூம் உள்ளிட்டவை அதிக நுண்ணறிவு மற்றும் சிறந்த அறிவாற்றல் செயல்பாடுகளுடன் தொடர்புடையவை. புகைப்பிடித்தல் மூளையின் சப்கார்டிகல் பகுதிகளை (subcortical brain region) பாதிக்கிறது. மூளையின் சப்கார்டிகல் பகுதிகள் இன்பம், ஹார்மோன் உற்பத்தி, உணர்ச்சி மற்றும் நினைவாற்றலுடன் தொடர்புடையவை. புகைப்பிடிப்பவர்களுக்கு வயது தொடர்பான மூளை வால்யூம் லாஸ் ஏற்படும் அபாயம் உள்ளது.

டிமென்ஷியாவிற்கு காரணமாகும் புகைப்பழக்கம்:

புகைப்பழக்கம் டிமென்ஷியா ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என்பதற்கு வலுவான சான்றுகள் இருப்பதாக அல்சைமர்ஸ் சொசைட்டி தெரிவித்துள்ளது. புகைப்பிடிக்கும் அனைவருக்கும் டிமென்ஷியா வரும் என்பதில்லை. எனினும் நிகோடின் நுகர்வை படிப்படியாக குறைப்பதன் மூலமும், முழுவதுமாக புகைப்பழக்கத்தை நிறுத்துவதன் மூலமும் டிமென்ஷியா ஆபத்தை ஒருவர் குறைத்து கொள்ளலாம்.

பக்கவாதம் ஏற்படும் அபாயம்:

அதிகமாக புகையிலை பயன்படுத்துவதால் உண்டாகும் ஆபத்துகளை World Stroke Organization சுட்டிக்காட்டி இருக்கிறது. புகைப்பழக்கத்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் வெகுவாக அதிகரிப்பதாக இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 20 சிகரெட் பிடிப்பவருக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு புகை பிடிக்காதவர்களை விட 6 மடங்கு அதிகம். ஆயிரக்கணக்கான கேடு விளைவிக்கும் கெமிக்கல்ஸ் Tobacco smoke-ல் உள்ளன. இவற்றை பயன்படுத்துபவர்களின் நுரையீரலில் இருந்து ரத்த ஓட்டத்தில் கலக்கின்றன இந்த கேடு விளைவிக்கும் கெமிக்கல்கள். கெமிக்கல்ஸ் ரத்த ஓட்டத்தில் கலப்பது செல்களை சேதப்படுத்துவதோடு மற்றும் உடல் செயல்படும் விதங்களிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறத்து. இதனால் ரத்த ஓட்ட அமைப்பில் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயங்களை அதிகரிக்கிறது.

அறிவாற்றலில் பாதிப்புகள்:

டிமென்ஷியா என்பது சிந்திக்கும் திறன், நினைவாற்றல், இயல்பான நடத்தை ஆகியவற்றைப் பாதிக்கும் நிலையாகும். முன்னரே கூறியபடி புகைப்பழக்கம் ஒருவரின் மூளை வயதை துரிதப்படுத்தலாம். இது ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை அதிகரிப்பதன் மூலம் அல்சைமர் நோய் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. தவிர உயர் ரத்த அழுத்தம், ஹை கொலஸ்ட்ரால் மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற வாஸ்குலர் கண்டிஷன்ஸ் டிமென்ஷியா ஏற்படுவதற்கான அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தூக்கமின்மை மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் சிக்கல் உள்ளிட்ட அபாயங்களும் புகைப்பழக்கத்துடன் தொடர்புடையவை. இந்த நிலைமைகளும் டிமென்ஷியா உண்டாகும் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பிரெயின் கேன்சர்:

புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோய்க்கு மட்டுமல்ல மூளை புற்றுநோய்க்கும் தொடர்புடையது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வேக் ஃபாரஸ்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் நிகோடின் நுரையீரல் புற்றுநோய் செல்களை மூளைக்குள் மாற்றுவதை ஊக்குவிப்பதை கண்டறிந்துள்ளனர். இவர்கள் தங்கள் ஆய்விற்காக 281 நுரையீரல் கேன்சர் நோயாளிகளை பரிசோதித்தனர். ஆய்வின் முடிவில் புகைப்பிடிப்பவர்களுக்கு மூளை புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக சாத்தியங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip