Search

சளி இருக்கும்போது இந்த 4 விஷயங்களை மட்டும் பண்ணாதீங்க.. நிலமையை இன்னும் மோசமாக்கும்.!

 குளிர்காலம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்று வரும் நிலையில் பெருந்தொற்று கட்டுப்பாடுகள் பெரிய அளவில் இல்லாததால் இன்ஃப்ளூயன்ஸா நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக டெல்லியில் காய்ச்சல் பாதிப்பு 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தற்காத்து கொள்ள அல்லது நிலைமை மோசமாகாமல் தவிர்க்க , பாதுகாப்பு ஏன் முக்கியம் என்பதையும், என்னென்ன செய்ய வேண்டும் மற்றும் செய்ய கூடாது என்பதையும் ஒருவர் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

தடுப்பூசிகள் மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகள் ஃப்ளூவிலிருந்து அதிக மக்களை பாதுகாக்க உதவும். காய்ச்சல், சளி, ஜலதோஷம், இருமல், மூக்கு ஒழுகுதல்/மூக்கடைப்பு, உடல்வலி போன்ற ஃப்ளூ அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் பாதிப்பை சிறப்பாக நிர்வகிக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் இங்கே:

அதிகமாக உழைக்கவோ வெளியே செல்லவோ கூடாது: ஃப்ளூ (சளிக்காய்ச்சல்) பாதிப்பு ஏற்பட்ட முதல் சில நாட்களுக்கு நீங்கள் உங்கள் உடலை பெரிதாக வருத்தி கொள்ளாமல் நன்கு ஓய்வெடுக்க வேண்டும். சளி மற்றும் ஜலதோஷம் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நாட்களை ஓய்வெடுக்க நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். போர்வையை போர்த்தி கொண்டு நன்றாக தூங்கலாம், இல்லையெனில் விரும்பிய புத்தகங்களை படிக்கலாம், டிவி பார்க்கலாம். ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள். கொஞ்சம் குணமடைந்தது போல இருக்கிறது என நீங்கள் ரெஸ்ட் எடுக்காமல் வெளியே சென்று வந்தால் நிலைமை மோசமாக கூடும். எனவே வேலை, பள்ளி அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்திக்க வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

குறைந்த அளவு திரவங்களை எடுத்து கொள்ள கூடாது: சளிக்காய்ச்சலின் அறிகுறிகளை கட்டுப்படுத்த ஏராளமான திரவங்களை குடிப்பது அவசியம். சிக்கன் நூடுல் சூப் போன்ற வின்டர் சூப்ஸ், இஞ்சி மற்றும் கெமோமில் போன்ற காஃபின் இல்லாத சூடான ஹெர்பல் டீ-க்கள் போன்றவை காய்ச்சலை எதிர்த்து போராட முக்கியமானவை. காய்ச்சல் அறிகுறிகளை குறைக்க சுடுநீரில் லெமன் பிழிந்து குடிப்பது, ஃப்ரெஷ்ஷான பழங்களில் ஜூஸ் போட்டு குடிப்பது உள்ளிட்டவை நன்மைகளை அளிக்கும்.

மோசமான உணவுப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்: உடல்நிலை சரியில்லாத போது உங்களால் அதிகம் சாப்பிட முடியாவிட்டாலும் அல்லது விரும்பாவிட்டாலும் நல்ல ஊட்டச்சத்து மிக்க ஆகாரம் முக்கியம். எனவே ஆரஞ்சு, மாதுளை, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பல சீசன் பழங்களையும், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு (சக்கரவள்ளி கிழங்கு) போன்ற குளிர்கால காய்கறிகளையும் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கியத்தில் குறைந்த கவனம் செலுத்த கூடாது: காய்ச்சல் அறிகுறிகளை போக்க நீங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக மூக்கடைப்பு இருந்தால் சுவாசத்தை சீராக்க ஸ்டீம் ப்ரீத் (ஆவி பிடித்தல்) எடுக்கலாம் அல்லது ஹாட் ஷவர் செய்யலாம். ஒருவேளை அறிகுறிகள் மோசமடைந்தால் மருத்துவரை அணுக வேண்டும். இதனால் உங்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்கும் மற்றும் எதிர்பார்க்கும் நிவாரணமும் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி: இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு தடுப்பூசி போட்டு கொள்வதன் மூலம் தடுக்க கூடிய நோயாகும். இது தொடர்பான சிக்கல்களில் பாதுகாக்க மக்கள் பின்பற்ற கூடிய பல நடவடிக்கைகள் உள்ளன. சளி, காய்ச்சலிலிருந்து தற்காத்து கொள்ள நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை பின்பற்றும் நேரம் பெரியவர்கள் வருடாந்திர ஃப்ளூ தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும். சமீபத்திய வேரியன்ட்டிற்கு ஏற்ப காய்ச்சல் தடுப்பூசிகள் உருவாக்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி பெறுவது முக்கியமானது.

பின்பற்ற வேண்டியவை: சோப்பு அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிடைசரை பயன்படுத்தி கைகளை அடிக்கடி கழுவுதல், கண்கள், மூக்கு அல்லது வாயை தொடுவதை தவிர்ப்பது மற்றும் அடிக்கடி தொடும் பொருட்களை கிருமி நீக்கம் செய்வது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். நெரிசலான இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும்.


இந்த 8 பிரச்சனை இருக்கவங்க வேர்க்கடலையை அளவா சாப்பிடுங்க..!

 ஏழைகளின் பாதாம் நிலக்கடலையில், உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் B போன்ற சத்துக்கள் உள்ளன. இருப்பினும், நிலக்கடலையை நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என உங்களுக்கு தெரியுமா? அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை இங்கே காணலாம்.

அதீத ரத்தப்போக்கு : நிலக்கடலை இரத்த உறைதலை தடுப்பதால், மாதவிடாய் காலத்தின் போது அதிகளவு இரத்தப்போக்கு ஏற்படும். வேர்க்கடலையில் உள்ள கூறுகள் சில்லுமூக்கு (மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்) பிரச்சனைக்கும் வழிவகுக்கிறது.

உடல் எடை அதிகரிப்பு : நிலக்கடலையில் அதிக கலோரி உள்ளதால், இது உடல் எடையை அதிகரிக்கும். எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அல்லது டயட்டில் இருப்பவர்கள் வேர்க்கடலையை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.

ஆற்றல் உற்பத்தி குறைவு : ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 உடலின் ஆற்றல் உற்பத்திக்கு பயன்படும் கொழுப்பு அமிலங்கள். நிலக்கடலையில் ஒமேகா 6 அமிலம் மட்டுமே இருப்பதால், உடலில் ஆற்றல் உற்பத்தி குறைவாக இருக்கும்.

அலர்ஜி பிரச்சனை : ஒவ்வாமை என்று கூறப்படும் சில அலர்ஜி பிரச்சனைக்கு வேர்க்கடலை வழிவகுக்கும். வேர்க்கடலை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால், அரிப்பு, வீக்கம், தோல் சிவத்தல் அல்லது தொண்டை மற்றும் வாய் பகுதியில் கூச்ச உணர்வு, மூக்கில் நீர் வடிதல் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மாரடைப்பு அபாயம் : அதிக அளவு நிலக்கடலை உட்கொள்வதால், உடலில் அதிக அளவு கொழுப்பு உற்பத்தி செய்யப்படும். இதனால், பக்கவாதம், மாரடைப்பு, செரிமான பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஊட்டச்சத்து அதிகரிப்பு : நிலக்கடலை ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களில் ஒன்று. ஆனால், இதில் உள்ள சத்துக்கள் சமநிலையில் இல்லை. இந்த சமநிலையற்ற தன்மையால் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் பெறுவதில் சமநிலையற்ற தன்மை நிலவுகிறது.

இரத்த அழுத்த பிரச்சனை : வேர்க்கடலை அதிகமாக உட்கொள்ளுவதால் உடலில் உப்பு அதிகரிக்கும். இதனால், இரத்த அழுத்த பிரச்சனைகள் உண்டாகிறது. சில வகை வேர்க்கடலையில் உள்ள அதிகப்படியான சோடியம், இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும்..

இரத்த உறைதலை தடுக்கும் : நிலக்கடலையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் இரத்த உறைதல் செயல்பாட்டை தடுக்கிறது. உடலில் காயம் உண்டாகும் போது ஏற்படும் அதிகளவு இரத்தப்போக்கினை கட்டுப்படுத்த இரத்தம் உறைதல் அவசியம். வேர்க்கடலையில் உள்ள சேர்மங்கள் இந்த செயல்பாட்டை தடுக்கிறது. எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் நாம் அளவாக எடுத்துக்கொண்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பேரிச்சம் பழம் தரும் 8 நன்மைகளை பற்றி தெரியுமா? தினமும் தவறாமல் சாப்பிட சொல்லும் காரணம் இதுதான்..!

 வெயில் காலங்களை விட குளிர், காலங்களில் நம் உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகும். அந்த வகையில், ஆரோக்கிய உணவுகளை குளிர் காலத்தில் எடுத்து கொண்டால் நோய் கிருமிகள் நம்மை அண்டாமல் தடுக்கலாம். குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நிறைந்தவற்றை சாப்பிட வேண்டும். இவை அனைத்துமே பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை குளிர் காலங்களில் சாப்பிட்டு வருவதால் எப்படிப்பட்ட நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்பதை பற்றி இனி அறியலாம்.

எலும்புகள் வலு பெற : குளிர் காலத்தில் சூரிய ஒளி நம்மீது குறைவாக படுவதால், உடலில் வைட்டமின் டி உற்பத்தி குறைவாக இருக்கும். எலும்புகளுக்கு வலு சேர்க்க வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது. எனவே பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்வதால் எலும்புகள் உறுதியாகும். மேலும் இப்பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். இதில் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளதால் பற்கள் வலுவாக இருக்க உதவும்.

மூட்டு வலி : குளிர் காலங்களில் மூட்டு வலி உள்ளோருக்கு இதன் பாதிப்பு மேலும் அதிகமாகும். பேரீச்சம் பழத்தில் மெக்னீஷியம் மற்றும் தசை வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளதால் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தரும்.

மாரடைப்பு பாதிப்பை குறைக்கும் :  உடலில் வெப்பநிலை குளிர் காலங்களில் குறைவதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு மற்றும் அதிக இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதை காலை மற்றும் மாலையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டு வந்தால் குளிர் காலத்தில் ஏற்படும் மந்த தன்மை நீங்கும்.

வெதுவெதுப்பாக இருக்க செய்யும் : உடலுக்கு தேவையான வெப்பத்தை குளிர் காலங்களில் பேரீச்சம் பழம் தர உதவும். எனவே இதை சாப்பிடுவதால் உங்களை எப்போதும் வெதுவெதுப்பாக வைத்து கொள்ளலாம்.

ஆற்றல் தருபவை : பொதுவாக குளிர் காலங்களில் எந்நேரமும் மந்தமாகவும், சோர்வாகவும் இருப்போம். உங்களுக்கு உடனடி எனர்ஜியை தர சில பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டாலே போதும். மேலும் உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டால் உங்களுக்கு அதிக ஆற்றல் கிடைக்கும்.

இரும்புச்சத்து : இன்று பல பெண்கள் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் பெரிதளவில் மாற்றம் அடைந்துள்ளது. எப்போதும் சோர்வாக இருப்பது, முடி கொட்டும் பிரச்சனை, குறைந்த எதிர்ப்பு சக்தி, மங்கிய தோல், கர்ப்ப காலத்தில் கருக்கலைப்பு உண்டாகும் அபாயம் போன்ற பாதிப்புகள் இரத்த சோகையினால் ஏற்படுகிறது. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பேரீச்சம் பழம் பெரிதும் உதவும். எனவே இதை சாப்பிட்டு வருவதால் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் மற்றும் கர்ப்பிணி பெண்களின் கரு வளர்ச்சிக்கும் இது உதவும்.

செரிமான பிரச்சனை : குளிர் காலத்தில் உடலின் செயல்பாடுகள் மெதுவாக நடப்பதால் நார்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் செரிமான பிரச்சனை உண்டாகாது. பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் செரிமானத்தை சீராக்குவதோடு, குடல் புற்றுநோய் பாதிப்பையும் குறைக்கிறது.

சருமத்திற்கு ஊட்டம் தரும் : பெரும்பாலும் குளிர் காலத்தில் தோலில் சுரக்க கூடிய இயற்கை எண்ணெய்யின் அளவு குறைந்து விடுவதால் சருமம் மிகவும் வறண்டு போகும். பேரிச்சம் பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ளதால், உங்கள் சருமத்தை இளமையாக வைக்க இது உதவும் மற்றும் செல்களின் பாதிப்பையும் குணமாக்கும். இவ்வளவு அற்புத பயன்களை தனக்குள் ஒளிந்திருக்கும் இந்த பேரீச்சம் பழத்தை, குளிர் காலங்களில் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

இனிப்பு பலகாரங்கள் செய்யலாம் : பண்டிகை காலங்களில் நீங்கள் சர்க்கரைக்கு பதில் பேரீச்சம் பழம் சேர்த்து இனிப்பு பலகாரங்களை தயார் செய்யலாம். இதனால் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். உங்கள் பண்டிகையும் இனிப்புடன் நிறைவைடையும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உஷார்..! டாய்லெட்டில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் மூலம் வரும் ஆபத்து..!

 டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தினால் மூலம் அல்லது அந்த இடத்தில் கட்டிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்தும் பலரும் சென்ற வேலையை முடிக்காமல் நீண்ட நேரம் செல்ஃபோனை பயன்படுத்துவதில் மும்முரமாக இருப்பார்கள். இப்படித்தான் சீனாவில் மணிக்கணக்கில் செல்ஃபோன் பயன்படுத்தியதில் அவரின் குடலே வெளியே வந்துவிட்டதாக செய்திகள் வைரலாகப் பரவின.

இந்நிலையில் இந்த ஆய்வு நிச்சயம் பலரையும் விழிப்படையச் செய்யும். நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்துவதால் கீழ் மலக்குடலில் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது என்று விவரிக்கிறார் ஆய்வின் மருத்துவர் ஜார்விஸ்.

பொதுவாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிரமம், கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் உபாதைகள் போன்ற காரணங்களால் மூலம் நோய் வரும்.

மூலம் என்பது ஒரு நாளில் நீண்ட நேரம் அமர்வதால் வராது. தினம் தினம் அப்படி அமர்ந்திருப்பது நிச்சயம் மூலத்தை உண்டாக்கும் என்கிறது ஆய்வு. இந்த டாய்லெட்டில் நீண்ட நேரம் அமரும் பழக்கம் இன்று செல்ஃபோன்களால் மட்டுமல்ல. இதற்கு முன் பிடித்த புத்தகத்தை டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு படிக்கும் பழக்கம் இருந்தது.

மூலம் வருவதற்கு முன் அறிகுறிகளாக எரிச்சல், அரிப்பு, ரத்தக் கசிவு, கட்டிகள், மலம் கழித்த பின்னரும் கழிக்காத உணர்வு போன்றவை பட்டியலிட்டுள்ளனர்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் மூலம் வராமல் தவிர்க்க நார்ச்சத்து , தினமும் உடற்பயிற்சி, டாய்லெட்டிற்கு செல்ஃபோன் எடுத்துச் செல்வதை தவிர்த்தல் போன்ற விஷயங்களை மேற்கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மத்திய அரசின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் வேலை: சென்னை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

 பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களான பாலவாக்கம், சின்ன நீலாங்கரை. சின்னாண்டி குப்பம், ஈஞ்சம்பாக்கம், நைனார் குப்பம் ஆகிய இந்த 5 கிராமங்களில் காலியாக உள்ள 5 பல்நோக்கு சேவை பணியாளர்கள் (Sagar Mitre) பணியிடங்களை ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேற்படி, மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும். 01.07.2022 அன்றைய தேதிபடி வயது 35-க்குள் இருக்க வேண்டும். மாதாந்திர ஊக்க ஊதியம் ரூ.15,000/- வழங்கப்படும்.

கல்வித் தகுதி: மீன்வள அறிவியல் (Fisheries Science), கடல் உயிரியல் (Marine Biology) மற்றும் விலங்கியல் (Zoology), ஆகிய பிரிவுகளில் முதுகலை / இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) நுண்ணுயிரியல் (Microbiology), தாவரவியல் (Botany) மற்றும் உயிர் வேதியியல் (Biochemistry) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், தகவல் தொழில்நுட்பம் (IT) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விருப்பமுள்ள நபர்கள் 28.02.2023 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பணியில் சேரும் முன் சரியான சம்பளத்தை கேட்டுப்பெறுவது எப்படி?

 இன்றைக்கு பெரும்பாலோனோர், ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக மாதச் சம்பளத்தை பெற்று வருவதாகவும், அதில் பெரும்பாலும், 60% ஊழியர்கள் பேரம் பேசி ஊதியத்தை பெறாமல் பணியில் சேர்வதாகவும் 'Glassdoor'  என்ற நிறுவனம் தெரிவிக்கிறது. இதில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அதிக வருமானப் பணிகளில் சேர்வதற்கான திறன்களைப் பெற்றிருக்கும் இளைஞர்கள் கூட குறைந்த ஊதியத்தில் சேர ஒப்புக் கொள்கின்றனர். இதற்கு, முக்கியக் காரணம், பேரம் பேசினால் பணிவாய்ப்பை இழந்து விடுவோம் என்ற அச்சம். ஆனால், இது தேவையற்ற அச்சம் என்றே நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

சரியான ஊதியத்தை பெறுவது எப்படி?  நேர்காணல்  முடிந்தவுடன், பணி அழைப்பு கடிதம் (Job Offer letter) பெற்றவுடன், உடனடியாக சம்மதிக்காமல்  சிறிது காலம் எடுத்துக் கொள்ளுங்கள். அழைப்புக் கடிதத்தில் அடிகோடிட்டு காட்டப்பட்டுள்ள சம்பள விவரங்களை முழுமையாக வாசியுங்கள். அடிப்படை சம்பளம், சலுகைத் தொகை (Compensation Package) , போனஸ் ஆகியவற்றை விரிவாக கணக்கிடுங்கள். சலுகைத் தொகுப்பில் ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு, குடும்பத்தினருக்கான ஆயுள் காப்பீடு ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கலாம். அத்துடன் வருமான வரி சட்டத்தின் கீழ்  உள்ள பிடித்தங்கள் மற்றும் விலக்குகள் ஆகியவற்றை தெரிந்து  கொள்ளுங்கள்.

உதாரணமாக, திட்ட மேற்பார்வையாளர் (Project Supervisor) பதவிக்கான அழைப்பு கடிதத்தில் நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் CTC  வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என  எடுத்துக் கொள்வோம். இதில்,  பிடித்தங்கள் போக  உங்கள் கையில் ரூ.35,000 வருவதாக எடுத்துக் கொள்வோம்.  இந்த பணிக்கான சம்பள வரம்புகளை Glassdoor, Linkedin, Payscale போன்ற இணையதளங்கள் மூலம் ஒப்பீட்டுக் கொள்ள முடியும்.  அதே பணிக்கு மற்றொரு நிறுவனத்தில் பணிபுரியும் நபரின் சம்பளம் குறித்து ஆய்வு செய்து கண்டறிய முடியும். இத்தகைய  ஒப்பீட்டின் மூலம், விரைவான, தீர்க்கமான முடிவை நம்மால் எடுக்க முடியும்.

ஒருவேளை, பிடித்தம்போக  நீங்கள் எதிர்ப்பார்த்த சம்பளம் கிடைக்கவில்லை என்றால், அது குறித்து மனிதவள அதிகாரியை (HR) தொடர்பு கொண்டு வெளிப்படையாக பேசுங்கள். சம்பளம் பெற நினைக்கும் காரணங்களை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துங்கள். அப்போது உங்கள் பணியும், நீங்கள் கேட்கும் சம்பள தொகையும் முறையாக இருந்தால் அதை உயர் அதிகாரிகள் ஏற்கொள்ள வாய்ப்புள்ளது.

அதேநேரம் நீங்கள் கேட்கும் சம்பளத்தை  HR ஏற்றுக்கொள்வார் என்பதும் உறுதியல்ல. அதற்கு நீங்கள் கேட்கும் சம்பள தொகை அவர்கள் அந்த பதவிக்கு ஒதுக்கிய வரம்புக்குள் இருக்க வேண்டும். எனவே, அவர் சொல்லும் பதிலை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் எதிர்ப்பார்த்த சம்பளத்தை  கேட்காமலேயே இருந்தால் அது மிகப்பெரிய தவறாக மாறிவிடும். எனவே நீங்கள் கேட்கும் சம்பள தொகை முறையாக இருந்தால் அது கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடவேண்டாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


திண்டுக்கல் மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறையில் வேலை : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

 தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை, மிஷன் வாட்சல்யா திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சமூக பணியாளர் ஒரு பணியிடத்திற்கு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக பணியாளருக்கு தொகுப்பூதியமாக 18.536/- ஒரு மாதத்திற்கு வழங்கப்படும். சமூக பணியாளர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் (10 + 2+3). சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், சமூக பணி மற்றும் கணினி இயக்குதலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பதவிக்கான தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் நேரில் பெற்று அல்லது மாவட்ட அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 28ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பிளசிங்ஸ், பிளாட் எண்.4, 2-வது குறுக்குத் தெரு (மாடி), எஸ்.பி,ஆர் நகர், மாவட்ட ஆச்சரியரகம் (அஞ்சல்), திண்டுக்கல் - 624 004, தொலைபேசி எண். 0451 - 2904070 ஆகும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. S.E.T.C பேருந்து கழகத்தில் 685 ஓட்டுநர் - நடத்துனர் பணியிடங்கள்: முழு விவரம் இதோ!

 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ், மாநிலத்தில் நீண்ட தூர பயண சேவைகளை  அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வழங்கி வருகிறது. இதில், காலியாக உள்ள  685  ஓட்டுநர் உடன்  நடத்துனர் (Driver Cum Conductor) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (18 மாதங்கள் பூர்த்தியாகிருத்தல் வேண்டும்), நடத்துனர் உரிமம் (Conductor Licence) இருக்க வேண்டும். 

கூடுதல் தகுதி: St. john Ambulance Association-ஆல்  வழங்கப்பட்ட முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உயரம் குறைந்த பட்சம் 160 செ.மீ, எடை குறைந்தபட்சம் 50 கிலோ இருத்தல் வேண்டும். கண் திறன் குறைபாடு இருக்கக் கூடாது.

ஊதிய விகிதம்:  ரூ.17,500 முதல் ரூ. 56,200 வரை

தெரிவு முறை: மேலாண்மை இயக்குனர் தலைமையிலான தேர்வுக்குழு,வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை: (i) கல்வித் தகுதி, வயது, சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமம், ஓட்டுநர் தகுதித் திறன், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தகுதித் திறன் ; (ii) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதவி செய்தவர்கள் ஆகிய இரண்டின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 122 ஓட்டுநர் பணியிடங்கள்: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

 TNSTC Kumbakonam Driver Recruitment 2023:  தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட்-ல்  காலியாக உள்ள 122 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 8358 ஓட்டுநர் எண்ணிக்கையில், 31.07.2022  அன்றைய நிலவரப்படி  ஓட்டுநர் எண்ணிக்கை 8136 ஆக உள்ளது. 222 காலி இடங்களில், 203 பேர் விரைவாக பணியமர்த்தப்பட வேண்டும் என்று  போக்குவரத்துத் துறை  வாரியம் (STU Board)  ஒப்புதல் அளித்து இருந்தது.

இந்த காலி இடங்கள் நிரப்புதல் குறித்து,  முதன்மைச் செயலாளர் (போக்குவரத்துத் துறை), இதர போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அரசு கூடுதல் செயலாளர் (நிதி ) நடத்திய ஆய்வு கூட்டத்தில், காலி இடங்களில் 60% இடங்கள் (122) நிரப்ப முடிவெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில்,  தமிழ்நாடு அரசு நேற்று (கும்பகோணம்) லிமிடெட்-ல்  காலியாக உள்ள 122 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை வெளியிட்டது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் நியமனம் செய்ய தகுதியான நபர்கள் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன  ஊட்டுவதற்கான  ஓட்டுநர் உரிமம் (18 மாதங்கள் பூர்த்தியாகிருத்தல் வேண்டும்) உரிமை இருக்க வேண்டும். முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உயரம் குறைந்த பட்சம் 160 செ.மீ, எடை குறைந்தபட்சம் 48 கிலோ இருத்தல் வேண்டும். கண் திறன் குறைபாடு இருக்கக் கூடாது.  வயது வரம்பு 24 -40க்குள் இருக்க வேண்டும். பிசி/ எம்பிசி/எஸ்சி/எஸ்டி பிரிவினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

செய்முறைத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

ஊதிய விகிதம்: ரூ.17,500 முதல் ரூ. 56,200 வரை

முன் அனுபவம்: 18 மாதங்களுக்கு குறையாமல் கன ரக வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் இருக்க வேண்டும்.  

தெரிவு முறை: மேலாண்மை இயக்குனர் தலைமையிலான தேர்வுக்குழு,வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சென்னையில் பிப்.17-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

 சென்னை: சென்னையில் பிப். 17-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன என சென்னை மாவட்டஆட்சியர் சு.அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து பிப்.17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமைநடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி, ஆலந்தூர்சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது

இம்முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகியகல்வித் தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வுசெய்ய உள்ளன. இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இதில் கலந்துகொள்பவர்கள் தங்களது விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news