Search

சுகரை குறைக்கும் கொள்ளு..! இதை உணவில் எப்படி சேர்த்துகனும் தெரியுமா..?

 கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன.

சர்க்கரைநோய் தடுக்கும்: நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் அளவுகோல் `கிளைசெமிக் இண்டெக்ஸ்' எனப்படும். இந்த அளவீடு அதிகமாகும்போது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். ஆனால், கொள்ளு ஆன்டி- ஹைப்பர்கிளைசெமிக் (Antihyperglycemic) உணவு வகையை சேர்ந்தது. எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும். இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலாம். இதனால், பசியின்மை நீங்கும்; உடல் வலுவாகும்.

உடல் எடையை குறைக்கும்: சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

புரதம் நிறைந்தது: அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பல் தேய்க்கும்போது இரத்தக் கசிவு இருக்கா..? அப்போ இந்த ஈறுகள் பராபரிப்பில் கவனம் செலுத்துங்க..!

 ஒவ்வொருவருக்கும் பற்கள் என்பது மிகவும் முக்கியமானவை ஆகும். உணவை நன்றாக அரைத்து செரிமானத்தை எளிதாக்குவதுடன், நாம் விரும்பும் அனைத்து வகையான உணவுகளை உட்கொள்வதற்கு பற்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் முடியும். பற்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருப்பது ஈறுகள். ஈறுகள் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக நாம் பாதுகாக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்முடைய பற்களும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே முதலில் நம்முடைய ஈறுகளின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கியமான ஈறுகள் பிங்க் நிறத்தில் காட்சியளிக்கும். மேலும் நாம் பற் துலக்கும் போது அதிலிருந்து ரத்தம் வராமல் இருந்தால் மட்டுமே உங்களது ஈறுகள் ஆரோக்கியமாக உள்ளன என்று பொருள். ஆனால் உணவு பழக்கம், வயது, போன்ற பல்வேறு காரணிகள் நம்முடைய ஈறுகளின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. ஈறுகளை எவ்வாறு நாம் பாதுகாப்பது என்பதை பற்றிய சில குறிப்புகளை இப்போது பார்ப்போம்.

  • சரியான முறையில் தினசரி பற்களை சுத்தம் செய்ய வேண்டும்
  • தினசரி சரியாக பற்களை சுத்தம் செய்தால் தான் வாய் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
  • குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது மென்மையான டூத் பிரஷ் கொண்டு நமது பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
  • குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை நமது டூத் பிரஷை மாற்ற வேண்டும்.
  • பல் இடுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும்:

    நம்முடைய ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் தினசரி உணவு உண்ட பிறகு பற்களின் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் இதன் மூலம் பிளேக் எனப்படும் பற்களில் உண்டாகும் கெட்டியான மாசு படிவங்களையும் சுத்தம் செய்ய இது உதவுகிறது.

    ஒருவேளை நாம் உண்ட உணவு பொருட்கள் மற்றும் பிளேக் ஆகியவை பற்களில் நீண்ட நாட்களுக்கு இருந்தால் அவை நாளடைவில் கெட்டியாகி டார்டார் எனப்படும் கெட்டியான ஒரு படிவமாக மாறி பாக்டீரியாக்கள் வளர்வதற்கு வழி செய்து விடும். இது உண்டானால் உங்களால் சாதாரணமாக பல் துலக்குவத்தின் மூலம் அவற்றை நீக்க முடியாது. ஒரு பல் மருத்துவரை அணுகி தான் உங்கள் பற்களை சுத்தம் செய்ய வேண்டி இருக்கும்.

    புகைப்பிடித்தலை நிறுத்த வேண்டும்:

    புகைப்பிடிப்பது, பார்மசாலா, குட்கா போன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை ஈறுகளில் ரத்த ஓட்டத்தை குறைத்து பல்வேறு நோய் தொற்றுகள் உருவாக வழிவகை செய்கிறது. உங்கள் ஈறுகளில் ரத்தம் வடிவதை நீங்கள் கண்டறிந்தால் உடனடியாக புகை பிடிப்பது போன்ற அனைத்து பழக்கங்களையும் நிறுத்த வேண்டும்.

    உணவில் கவனம் தேவை:

    நாம் என்ன விதமான உணவை உட்கொள்கிறோம் என்பதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். அதிக சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்களை நாம் உட்கொள்ளும்போது அவை பல் சொத்தை ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பச்சை காய்கறிகளை நாம் அதிகம் உட்கொள்ள வேண்டும். இவை ஈறுகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

    சீரான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது:

    நாம் அவ்வப்போது சீரான இடைவெளியில் பல் மருத்துவரிடம் சென்று நமது பற்களை சோதனை செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை டார்டார் எனப்படும் பிரச்சனையினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் பல் மருத்துவரிடம் சென்று மட்டுமே நான் அதனை நீக்கிக் கொள்ள முடியும். எனவே சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு ஈறுகளில் உள்ள பிரச்சனையை கண்டறிந்து அதற்கு சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

தூங்கி எழுந்தவுடன் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா..? இது கூட காரணமாக இருக்கலாம்.!

 ஆரோக்கியமான உடலையும், மனதையும் பராமரிக்க மனிதனுக்கு நல்ல தூக்கம் அவசியம். சிலர் வெறும் தரையில் படுத்து உறங்கிவிடுவார்கள். ஆனால் தரையின் வெப்பநிலை நம் தூக்கத்தை தடுத்து விடக்கூடும். அதற்காக பாய், தரைவிரிப்பு பயன்படுத்துவார்கள். மெத்தையில் தூங்கினால் அருமையான தூக்கம் வரும். ஆனாலும் சிலருக்கு அதனால் உடல் வலி, முதுகு வலி போன்றவை ஏற்படுகின்றன. ஆனால் வசதியான உயர்தர மெத்தைகள் பயன்படுத்துபவர்கள் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.

ஏனெனில் உயர்தர மெத்தைகளை  10 முதல்  12 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தப்படலாம். ஆனால் தரமற்ற மெத்தைகளை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். அவை மாற்றப்படாவிட்டால், அது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அப்படி தரமற்ற மெத்தைகளை பயன்படுத்துவதால் என்னென்ன உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகின்றன? அவற்றை தடுக்க என்னமாதிரியான மெத்தைகளை பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதுகு, கழுத்து மற்றும் உடல் வலி : சிலருக்கு உடலில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்கலாம், ஆனால் காலை எழுந்தவுடன் முதுகுவலியால் அவதிப்படுவர். இதற்கான காரணம் அவர்கள் தூங்கும் மெத்தையுடன் அவர்கள் தொடர்புப்படுத்த மாட்டார்கள். காலையில் இதுபோன்ற வலிகள் உங்களுக்கு அடிக்கடி இருந்தால், உங்கள் மெத்தை தவறாக இருக்கலாம். இது போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட நல்ல மெத்தையை நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பினால் எடைக் குறைவான memory foam mattress-களை பயன்படுத்தலாம். இது வலிகள் ஏற்படாமல் தடுக்கும். இதனால் இரவு முழுவதும் நிம்மதியாக தூங்கலாம்.

ஒவ்வாமை பிரச்சினைகள் : உங்கள் மெத்தையில் dust mites எனப்படும் தூசிப் பூச்சிகள் இருந்தால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இதனால் தோல் மற்றும் சுவாசப்பிரச்சினைகள் ஏற்படலாம். மெத்தையில் ஏற்படும் துர்நாற்றங்களாலும் இதுபோன்ற அலர்ஜி பிரச்சினைகள் ஏற்படும். எனவே ஒரு தரமான மெத்தை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வாமை போன்ற பாதிப்புகளை குறைக்கும், ஏனெனில் இதில் உள்ள நச்சுத்தன்மையற்ற Foam-கள் சுவாசிக்கக்கூடிய hypoallergenic இருப்பதால் அவை உண்மையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

அதிக வியர்வை : தரமற்ற மெத்தைகளில் காற்று உட்புகாமல் இருப்பதால் அவை வெப்பமடைகிறது. இதனால் மெத்தையை பயன்படுத்துபவருக்கு அதிகமாக வியர்வை ஏற்பட வைக்கிறது. தரமான மெத்தையில் பயன்படுத்தப்படும் open-cell அமைப்பு, மெத்தையின் காற்று உட்புகுதலை மேம்படுத்தி, உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

தரமற்ற மெத்தைகள் : தரமற்ற மெத்தைகள் ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே பயன்படுத்தப்படக் கூடியவையாக உள்ளன. மேலும் அத்தகைய மெத்தைகளில் தூங்குவது முதுகுவலி, கழுத்து வலி, தூக்கமின்மை போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, அத்தகைய மெத்தைகள் போதுமான உங்களுக்கு சவுகரியமாக இல்லாதபோது அவற்றை மாற்றுவது முக்கியம் என்கிறார் Magniflex India நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஆனந்த் நிச்சானி.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


இந்த 10 பழங்களை டயட்டில் சேர்த்துக்கோங்க.. சீக்கிரமே உடல் எடையை குறைக்கலாம்..!

 எடை இழப்புக்கான டயட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகள்முக்கியமானவை. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இவற்றில் அடங்கி இருக்கின்றன.குறிப்பாக பழங்கள் நம்பமுடியாத அளவிற்கு ஊட்டச்சத்து மிக்கவை. இவற்றில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் நீரேற்றத்தை பராமரிக்கவும், நிறைவாக உணர உதவுகின்றன.

பழங்களை ஜூஸ் போட்டு சாப்பிடாமல் பச்சையாக சாப்பிடுவது அதிக சத்தானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் தண்ணீர் பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை நீர்த்துப்போக செய்கிறது. நீங்கள் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால் டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டிய பழங்களின் பட்டியல் இங்கே..

தக்காளி : தக்காளி காய்கறி அல்ல பழங்களின் பட்டியலில் இருக்க வேண்டியவை. இந்த சிவப்பு நிற பழங்களில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. Leptin எனப்படும் புரதம் உடல் எடை குறைவதற்கு தடையாக இருக்கிறது. ஆனால் தக்காளி இந்த புரதத்தை எதிர்த்து போராடுகிறது. எடையை வேகமாக குறைக்க விரும்புவோருக்கு தக்காளி மிகவும் உதவுகிறது. கேன்ட் தக்காளி மற்றும் கெட்ச்அப் உள்ளிட்டவை உண்மையான தக்காளி அல்ல, அவை ப்ரிசர்வேட்டிவ்கள் மற்றும் சர்க்கரைகள் நிறைந்தவை. இவை கொழுப்பை எரிப்பதற்கு பதிலாக கொழுப்பை அதிகரிக்க செய்யும்.

அவகேடோ (பட்டர் ஃப்ரூட்) : உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் ஃப்ரூட்டாக இருக்கும் அவகேடோவில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிரம்பியுள்ளன. எடை இழப்பு டயட்டில் அவகேடோ முக்கியமானது, ஏனெனில் பெரும்பாலான மக்கள் ஹெல்தி ஃபேட்ஸ்களை பெறுவதில்லை. ஹெல்தி ஃபேட்ஸ்கள் உடலின் மெட்டபாலிசம் ரேட்டை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. எடை இழப்புடன் தொடர்புடைய முக்கிய ஹார்மோன்களில் ஒன்றான டெஸ்டோஸ்டிரோன் அளவை ஆரோக்கிய கொழுப்புகள் அதிகரிக்கின்றன

ஆரஞ்சு : சுவையான மற்றும் சத்தான பழங்களாக இருக்கும் ஆரஞ்சுகள் உடல் எடையை குறைக்க பயனுள்ள பழங்களாகும். இவை குறைந்த கலோரிகள் கொண்டவை. நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சிட்ரஸ் லிமோனாய்ட்ஸ் இவற்றில் நிறைந்துள்ளன. சருமம், குருத்தெலும்பு, தசைநாண்கள், ரத்த நாளங்கள் உள்ளிட்டவற்றின் முக்கிய திசுக்களின் வளர்ச்சிக்கு தேவைப்படும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

தர்பூசணி : எடை இழப்பு என்று வரும் போது தர்பூசணி ஒரு அற்புத பழம். இது குறைந்த கலோரி மற்றும் அதிக நீர் உள்ளடக்கம் கொண்டது. பழத்தின் எடையில் சுமார் 90% நீர்ச்சத்து ஆகும். 100 கிராம் தர்பூசணியில் 30 கலோரிகள் மட்டுமே உள்ளது`. இந்த பழத்தில் தொப்பையை கரைக்க உதவும் Arginine எனப்படும் ஃபேட்-பர்னிங் அமினோ ஆசிட்ஸ் நிறைந்துள்ளன. இதில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் இதயம் மற்றும் தசை செயல்பாட்டிற்கு முக்கியமானது.

ஸ்ட்ராபெர்ரி : சுவையான மற்றும் சத்தான பழங்களில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இவை உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலான HDL-ன் லெவலை அதிகரிக்க உதவுகின்றன. கொழுப்பைக் குறைக்க உதவும் சூப்பர் பழமான ஸ்ட்ராபெர்ரியிடமிருந்து அதிக நன்மைகளை பெற அவற்றை ஃப்ரூட் ஸ்மூத்திகளுடன் கலக்கலாம். தவிர தயிர் அல்லது ஓட்ஸ் கஞ்சியில் ஸ்ட்ராபெர்ரிக்களை சேர்க்கலாம்.

கொய்யாப்பழம் : ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யாப்பழம் சிறந்த தேர்வு. இவற்றில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து நிறைவான உணர்வை அளித்து பசியை குறைக்கிறது. இதனால் ஆரோக்கியமற்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை தடுக்க உதவுகிறது. செரிமானத்திற்கு உதவும் கொய்யாவில் வைட்டமின் சி, லைகோபீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை புற்றுநோய் தடுப்பு மற்றும் தோல் அழற்சிக்கு உதவுகின்றன.

லைம் : லைம் (Lime ), லெமன் (Lemom ) ஆகிய இரண்டும் வெவ்வேறு ரக செடி இனங்கள் என்றாலும் நாம் இவற்றை எலுமிச்சை என்ற பொதுவான பெயரில் தான் அழைக்கிறோம். லைம் பழத்தில் ஃபிளாவனாய்ட்ஸ், லிமோனாய்ட்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன. எடை இழப்புக்கு உதவும் டிடாக்ஸ் ட்ரிங்ஸ்களுக்கு லைம் சிறந்த மூலப்பொருளாக உள்ளது. உகந்த வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளது.

லெமன் : லைமின் மூத்த சகோதரர் என்று லெமனை குறிப்பிடலாம். இது எடை இழப்புக்கு உதவும் சிறந்த பழமாகும். ஒரு லெமன் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி முழுவதையும் பூர்த்தி செய்ய கூடியது. வளர்சிதை மாற்ற விகிதத்தை சிறந்த விகிதத்தில் பராமரிக்க உதவுகிறது. இவற்றில் நிறைந்திருக்கும் சிட்ரஸ் லிமோனாய்ட்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.

பேரிக்காய் : ஒரு பேரிக்காயானது உங்கள் தினசரி நார்ச்சத்து தேவையில் 24%-ஐ பூர்த்தி செய்யும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 பேரிக்காய் சாப்பிடும் பெண்களுக்கு தேவையற்ற கலோரிகள் குவியும் வாய்ப்பு குறைவு என ஆய்வுகள் காட்டுகின்றன. இது கொலஸ்ட்ரால் இல்லாதது, இதில் கலோரிகளிலும் குறைவாக உள்ளது. மீடியம் சைஸ் பேரிக்காய் 100 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது.

கிரேப் ஃப்ரூட் : பைட்டோ கெமிக்கல்ஸ், வைட்டமின் சி நிறைந்துள்ளது கிரேப் ஃப்ரூட் நோய்களை எதிர்த்துப் போராட உதவுவதோடு தொப்பையில் இருக்கும் கொழுப்பை எரிக்கின்றன. தொடர்ச்சியாக 6 வாரங்களுக்கு உணவுக்கு முன் ஒரு கிரேப் ஃப்ரூட் சாப்பிட்டவர்கள் ஒரு அங்குல தொப்பையை இழந்துள்ளதாக சொல்கிறது ஒரு ஆய்வு.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


பாதாம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா..? கட்டுக்கதைகளை உடைக்கும் உண்மை..!

 கடலைப்பருப்பு, பொரிகடலை, சுண்டல், பயறு வகைகள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நம்மில் பலர் இதை நம்முடைய உணவுமுறைகளில் சாப்பிட்டு வந்தோம். இந்த வரிசையில் பலர் அக்ரூட் பழங்கள் மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடத் தொடங்கிவிட்டனர்.

ஆனாலும் பாதாமைத் தோலுடன் சாப்பிட வேண்டுமா? அல்லது ஊற வைத்து தோலை அகற்றி சாப்பிட வேண்டுமா? என்ற குழப்பம் அனைவருக்கும் ஏற்படும். இதோடு பாதாமில் அதிக கொழுப்புகள் இருப்பதால் உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? என்னென்ன நன்மைகள் உள்ளது? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்..

பாதாமில் ஆரோக்கிய நன்மைகள்:

நட்ஸ் வகைகளில் ஒன்றான பாதாமில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்ற பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பாதாமில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்த அளவைக்குறைப்பதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கலோரிகள்: பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பார்கள். அளவுக்கு அதிமாக சாப்பிட்டால் தான் அதிக கலோரிகள் உடலில் சேரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

உடல் எடையைக்குறைக்க விரும்பும் நபர்கள் பாதாமை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறைந்தது தினமும் பாதாம் பருப்பு 25 அல்லது 30 கிராம் அளவிற்கு நீங்கள் சாப்பிடும் போது, இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல் கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், கேடு விளைவிக்கும் கொலஸ்ட்ராலைக்குறைக்கவும் உதவியாக உள்ளது. மேலும் இதில் உள்ள அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகளவில் உள்ளதால் சில நோய்களின் அபாயத்தைத் தடுக்க உதவியாக உள்ளது.

இதோடு பாதாம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறது. சுவாசக்கோளாறுகள், இருமல், ஆண்மைக்குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் உறுதுணையாக உள்ளது.

ஊற வைத்த பாதாம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்:

பாதாமை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடும் போது ஆன்டிஆக்ஸிடன்ட்டின்கள் அதிகளவில் உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி மற்றும் போலிக் அமிலம் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

எனவே உங்களுடை அன்றாட உணவு முறையில் பாதாமை நீங்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இரைப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் உணவு பழக்கம் - விளக்கும் நிபுணர்கள்..!

 இரைப்பை புற்றுநோய் என்பது வயிற்றில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் உருவாகும் ஒரு நிலை. வயிற்றில் ஏற்படும் அசாதாரணங்கள் முழு செரிமான அமைப்பிலும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஸ்டொமக் கேன்சர் என்பது இரைப்பை உணவுக்குழாய் சந்திப்பில் இருந்து தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஸ்டொமக் கேன்சர் ( Stomach Cancer ) அதாவது இரைப்பை புற்றுநோயில் கேன்சர் செல்கள் மேலும் வளர்ச்சியடைவதில் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்று புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு சிறந்த வாழ்க்கை தரத்தை உறுதி செய்ய சில மாற்றங்கள் தேவைப்படுவதாக கூறுகிறார்கள் நிபுணர்கள். வயிற்றுப் புற்றுநோயின் அபாயத்தை டயட் எவ்வாறு பாதிக்கிறது மற்றும் பசி கிச்சைக்கு பின் டயட்டை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதற்கான நிபுணரின் அறிவுறுத்தலை இங்கே பார்க்கலாம்.

ஸ்டொமக் கேன்சர் அபாயத்தை டயட் எப்படி அதிகரிக்கிறது?

- அதிக உப்பு உட்கொள்ளல், பல பாரம்பரிய சால்ட்-ப்ரிசர்வ்ட் உணவுகளான க்யூர்ட் மீட், உப்பு சேர்க்கப்பட்ட மீன் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடும் ஒரு நபர் இரைப்பை புற்றுநோயை சந்திப்பதற்கான அதிக ஆபத்தில் இருக்கிறார்.

- மனிதர்கள் தங்கள் டயட் பழக்கத்திலிருந்து N-nitroso காம்பவுண்ட்ஸ்களுக்கு ஆளாகிறார்கள். காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற உணவுகளின் இயற்கையான கூறுகளான நைட்ரேட்ஸ்களை உட்கொண்ட பிறகு இந்த N-nitroso கலவைகள் நம் உடலில் உருவாக்கப்படுகின்றன. அதே போல N-nitroso காம்பவுண்ட்ஸ்கள் சில வகையான சீஸ் மற்றும் cured meat-களில் உணவு சேர்க்கையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

- ஒரு ஹை-pH சூழல் மற்றும் அதிக அளவு கேஸ்ட்ரிக் நைட்ரைட் ஆகியவை புற்றுநோய்க்கு முந்தைய இரைப்பை புண்களுடன் தொடர்புடையவை. வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் கடல் உணவுகள் மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றுடன் வயிற்று புற்றுநோய் ஆபத்து இணைக்கப்பட்டுள்ளது.

- பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான sausages, bacon, ham மற்றும் சால்ட்டட், ஃபெர்மென்ட்டட் அல்லது க்யூர்ட் மீட்ஸ்கள் போன்றவை புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கான உறுதியான சான்றுகளை கொண்ட Group 1 carcinogens-களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் புகையிலை மற்றும் ஆல்கஹாலும் அடக்கம்.

- அதிக உடல் எடையும் இரைப்பை புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது

ஸ்டொமக் கேன்சர் சிகிச்சைக்கு பிறகு பின்பற்ற வேண்டிய 3 முக்கிய டயட் மாற்றங்கள்:

- அதிக புரதம் மற்றும் கொழுப்பை உள்ளடக்கிய உணவுகளை கொஞ்சமாக அதே சமயம் குறிப்பிட்ட சீரான இடைவெளியில் சாப்பிட (ஒரு நாளைக்கு 6 முறை) சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. திரவ மற்றும் திட உணவுகளை தனித்தனியாக சாப்பிடுவது அவசியமாக இருக்கலாம். சிம்பிள் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ள உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் அவற்றால் டம்பிங் சிண்ட்ரோம் ஏற்படலாம்.

- டம்பிங் சிண்ட்ரோம் (Dumping syndrome) பொதுவாக குமட்டல், பலவீனம், அதிக வியர்வை, மயக்கம் மற்றும் சாப்பிட்ட உடனேயே வயிற்றுப்போக்கு உள்ளிட்டவற்றை அறுவைசிகிச்சைக்கு பிறகான முதல் சில ஆண்டுகளில் ஏற்படுத்துகிறது. இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி12, ஏ, டி, ஈ மற்றும் கே, புரதம், கால்சியம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றின் தவறான உறிஞ்சுதலின் (malabsorption) விளைவாக துர்நாற்றம் கொண்ட மலம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

-அதே போல வயிற்று புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று இரும்புச்சத்து குறைபாடு. இது ரத்த சோகையை ஏற்படுத்துகிறது. இரும்புச்சத்து குறைபாட்டிற்கான சிகிச்சையானது, நிலைமை எவ்வளவு கடுமையானது என்ற தீவிரத்தை சார்ந்தது. சூழ்நிலையை பொறுத்து, Elemental iron-ஐ வாய்வழியாகவோ அல்லது ஊசி மூலமோ கொடுப்பதை உள்ளடக்கியது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்: இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க!

 TN Private Josb: தமிழ்நாட்டில் பல்வேறு தொழிற்பிரிவுகளின் கீழ்  1 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் யாருடைய உதவியும் இல்லாமல், இதற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.

'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் கீழ் 97 காலியிடங்கள் : விண்ணப்பிக்க சில நாட்களே உள்ளன

 கிராமப்புற பகுதிகளில் வாழும் மக்கள் நிலையான வருமானத்தைப் பெற தமிழ்நாடு அரசு, " வாழ்ந்து காட்டுவோம்" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற வணிகச் சூழல் வளர்ச்சி, தொழில் திட்டங்களுக்கான நிதி விநியோகம், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகள் மற்றும் திட்ட மேலாண்மை போன்ற நான்கு கூறுகளை இத்திட்டம் கொண்டுள்ளது.  தற்போது, இந்த திட்டத்தின் கீழ் பணியாற்ற, பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள்: 

  • இளம் தொழில் வல்லுநர்கள் - 30 இடங்கள் உள்ளன
  •  திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) - 25 இடங்கள் உள்ளன
  • திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு) - 13 இடங்கள் உள்ளன
  • திட்ட நிர்வாக (கணக்கு) - 18 இடங்கள் உள்ளன
  • மாவட்ட நிர்வாக அதிகாரி - 2 இடங்கள் உள்ளன
  • திட்ட நிர்வாக (அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மின்) - 1
  • திட்ட நிர்வாகி ( தொழில் நிறுவனங்களுக்கான நிதி விநியோகம்) - 1
  • செயல் அதிகாரி - 1
  • வட்டார குழு தலைவர் - 8
  • இதர விவரங்கள்: பதவி வாரியான காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை சம்பள விதிகள் ஆகியவை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Vaazhndhu Kaattuvom Project - Department of Rural Development and Panchayat Raj) அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

    விண்ணப்பம் செய்வது எப்படி: இதற்கான விண்ணப்பங்களை https://tnjobs.tnmhr.com/Landing.aspx இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2023 ஆகும்.

    தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு முறை இருக்கும். அனைத்து பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு ஒரே நாளில் நடைபெறும். ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தாலும், 

      ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டும் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தூக்கமும் உடல் நலமும்: இரவில் நன்றாக தூங்கவேண்டுமா? - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்

 நமது உடல் கடிகாரத்தை பாதிக்கும் வகையில் இரவில் நாம் சரியாக உறங்காதிருப்பது, மன அழுத்தம் மற்றும் பை போலார் டிஸார்டர் எனும் மனநிலை சீர்கேடு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்பதற்கான நிறைய ஆதாரங்களை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இயற்கையாக உடலில் நடக்கும் இயக்கத்தை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதால் நாம் தூங்கி வழிவது மட்டுமின்றி உடலில் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, இரவில் நீங்கள் நிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும்?

1. மாலைநேர வெளிச்சத்தில் கவனம் தேவை

உங்களால் செல்பேசி, திறன்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை பிரியமுடியாமல் தவிக்கிறீர்களா? நள்ளிரவு தாண்டியும் சமூக வலைதளத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறீர்களா?

இதற்கு உங்கள் விடை ஆம் எனில், உங்கள் தூக்கத்தை நீங்களே பாதித்தவராக இருக்கக்கூடும்.

ஏனெனில், இந்த சாதனங்கள் வலிமையான நீல நிற வெளிச்சத்தை உமிழ்கின்றன. இரவு நேரங்களில் இவற்றை பயன்படுத்தும்போது நமக்கு தூக்கம் வருவதுபோல உணரும் சமயங்களில் நமது உடலுக்குள் வெளியாகும் மெலட்டோனினுக்கு இந்நீல நிற வெளிச்சம் தடைபோடுகிறது.

எப்போது நமது உடலுக்குள் மெலட்டோனின் சுரக்கத் துவங்குகிறதோ, அது நாம் தூங்குவதற்கான நேரம் என்பதற்கான சைகை.

சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மால்கம் வான் ஸ்கான்ட்ச், இரவு நேரங்களில் தூங்கச் செல்வதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக நீல நிற ஒளியை உமிழும் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது நல்லது என்கிறார்.

இல்லையெனில், நீல நிற வெளிச்சத்தை தடை செய்யும் பிரத்யேக கண்ணாடிகள் அணிவது அல்லது இவ்வெளிச்சத்தை குறைக்கும் செயலிகளை பயன்படுத்துவது ஆகியவை உங்களுக்கு உதவக்கூடும்.

நமது தூக்கத்திற்கு எதிரியான டிஜிட்டல் சாதனங்களில் உமிழப்படும் நீல நிற வெளிச்சத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி. மாலை சூரியன் மறைந்த பிறகு வேறு எந்தவித மின்சார வெளிச்சத்தையும் பயன்படுத்துவதையும் குறைப்பது அதிக பலன் தரும்.

படுக்கையறையை முடிந்தவரை இருட்டறையாக வைத்துக்கொள்ள வேண்டும். மிகக்குறைவான வெளிச்சம் தரும் விளக்குகள் மற்றும் திரைச்சீலைகளை முறையாக பயன்படுத்தவது ஆகியவற்றின் மூலம் இதைச் சாதிக்கமுடியும்.

2. தூங்கும் நேரத்தை முறைப்படுத்துங்கள்

வார இறுதிகளில் அதாவது வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் நீண்ட நேரம் இரவில் விழித்திருக்க நாம் தூண்டப்படலாம். ஆனால் நாம் வாரம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்வதே சிறந்தது.

ஏனெனில் இவை வார இறுதி மற்றும் வார நாட்களில் நமது தூக்கத்தில் ஏற்படும் மாறுபாடுகளை களைந்து ஒரே மாதிரியான ஓய்வு நேரத்தை அடைந்து உடலானது புத்துணர்ச்சியாக இருக்க உதவும்.

தூங்கும் நேரத்தில் வார இறுதி மற்றும் வார நாட்களில் எவ்வளவு தூரம் மாறுபாடு இருக்கிறதோ அதே அளவுக்கு நமது உடல் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வளர்சிதை மாற்ற கோளாறு மற்றும் இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பை இவை அதிகரிக்கின்றன.

வார இறுதியில் தூங்காமல் படுக்கையில் மட்டும் அதிக நேரம் படுத்திருப்பது உங்களது உடலுக்கு மேலும் தூக்கம் தேவை என்பதற்கான ஓர் அறிகுறி என்கிறார் பேராசிரியர் வான் ஸ்கான்ட்ச்.

3. படுக்கையறையை ஓய்வுக்கான இடமாக்குங்கள்

மடிக்கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்கள் நமது படுக்கையறையை பொழுதுபோக்குக்கான அறையாக மாற்றிவிட்டன.

உங்களது தூக்கத்தை மேம்படுத்த நீங்கள் விரும்பினால் இந்த சாதனங்களை பயன்படுத்துவதில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

செல்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கணினி ஆகியவற்றை பிற அறைகளில் வைக்க வேண்டும். மேலும் அலாரம் வைப்பதற்கு பிரத்யேக கடிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களது படுக்கைக்கு அருகே மொபைலின் தேவையை தவிர்க்கமுடியும்.

படுக்கையறையை குளிர்ச்சியாக வைத்திருப்பது நல்லது.ஏனெனில் குளிர்ந்த வெப்பநிலையில் நமது உடலுக்கு தூக்கம் கிடைக்க எளிதாக இருக்கும்.

4. 'காலை' சூரிய வெளிச்சம் அவசியம் :-

சூரிய உதயம் மற்றும் மறைவுக்கு ஏற்றபடியே நமது உடல் கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நம்மில் பலருக்கு போதுமான காலை வெளிச்சம் கிடைப்பதில்லை அல்லது சூரிய அஸ்தமனத்துக்கு பிந்தைய வெளிச்சத்தை அதிகளவில் பெறுகிறோம்.

தினமும் குறிப்பிட்ட அளவு காலை நேர சூரிய வெளிச்சம் உடலுக்கு கிடைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உதாரணமாக காலை நேரத்தில் திரைசீலைகளை விலக்கி வைப்பது அல்லது அதி காலையில் சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு ஓடுவது போன்றவை நமக்கு மாலை வேளையில் எளிதில் தூக்க உணர்வு வர உதவும்.

உங்களுக்கு காலை வெளிச்சம் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது நீங்கள் வசிக்கும் பகுதி அதிக குளிர்காலத்தை கொண்டிருப்பதாக இருந்தால் பருவகால பாதிப்பு குறைபாடு போன்ற உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படக்கூடிய வெளிச்சப் பெட்டிகளை இச்சயமங்களில் பயன்படுத்துவது பலன் தரும்.

5. படுக்கைக்கு செல்வதற்குமுன் செய்யும் வேலைகளை ஒழுங்குபடுத்துங்கள்

இது தூங்குவதற்கான நேரம் என உடலை தயார்படுத்தும் விதமாக அதற்கு சைகைகளை தரும்வகையில் சில வேலைகளை செய்வது நல்ல தூக்கம் பெற உதவும் என்கிறார் லண்டனின் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் பென் கார்ட்டர்.

புத்தகம் படிப்பது, ரேடியோ அல்லது இசை கேட்பது, குளிப்பது ஆகியவை மனதை தூக்கத்துக்கு தயார்படுத்தவும் நாம் படுக்கைக்குச் செல்ல தயாராகவும் உதவும்.

''பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கத்துக்கு தயார்படுத்த இவற்றைச் செய்கிறார்கள்'' என்கிறார் மருத்துவர் கார்ட்டர்.

'' உணவு ஊட்டுவது, குழந்தைகளை குளிப்பாட்டுவது அதன் பின்னர் படுக்க வைத்து கதை சொல்லி தூங்க வைக்கின்றனர் பெற்றோர்கள். அது சரியான நடைமுறை.

தூக்கத்துக்கு முந்தைய நேரத்தை வழக்கப்படுத்தாமல் இருப்பது உங்களுக்கு தூக்கம் வர உதவாது'' என குறிப்பிடுகிறார் மருத்துவர்.

இரவு உணவை குறிப்பிட்ட நேரத்துக்கு முடிப்பது, அதாவது படுக்கைக்குச் செல்லும் சில மணி நேரங்களுக்கு முன் முடித்துவிடுவது போன்றவை இரவுத்தூக்கத்தை மேம்படுத்தும்.

6. கஃபைனை தவிருங்கள்

இரவு காபி அருந்தினால் தூக்கம் வருவது தடைபடுவதை நம்மில் பலர் உணர்ந்திருக்கலாம்.

ஆனால், உங்களுக்கு தெரிந்திருக்காமல் போயிருக்ககூடிய ஒரு விஷயம் என்னவெனில், கஃபைன் சேர்க்கப்பட்ட பானங்களான டீ, கார்பனேட்டட் குளிர்பானங்கள் ஆகியவற்றை மாலை வேளையில் அருந்தியிருந்தால், அவை உங்களுக்கு தூக்கம் வருவதை கடினப்படுத்தலாம்.

ஏனெனில், நமது உடலின் இயக்கத்தில் கஃபைன் தாக்கம் ஐந்து முதல் ஒன்பது மணி நேரம் வரை இருக்கும்.

மது அருந்துவது?

ஆம். இது மற்றொரு முக்கியமான விஷயம்.

ஒன்று அல்லது இரண்டு கோப்பை மது அல்லது பிராந்தி ஆகியவற்றை இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குடிப்பதை பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

மது குடிப்பது தூக்கத்தை மேம்படுத்த எவ்வகையிலும் உதவாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

''ஆல்கஹால் ஒரு விசித்திரமான விளைவை ஏற்படுத்தும். இது நீங்கள் எளிதில் தூக்கத்தில் விழ உதவும். ஆனால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதிலும், தூக்கத்தின் தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்'' என்கிறார் பேராசிரியர் ஸ்கான்ட்ச்.