Search

காய்ச்சல் இருக்கா..? நிமோனியாவா இருக்கலாம்.. அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்..!

 இன்றைக்கு மாறி வரும் உணவு பழக்க வழக்கங்களால் பல்வேறு நோய்களையும் நாம் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக பூஞ்சை அல்லது பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்றான நிமோனியா என்பது குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

 உலக சுகாதார நிறுவன தகவலின் படி, கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட 7,40,000 குழந்தைகள் நிமோனியாவில் உயரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நோயின் தாக்கம் மற்றும் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 ஆம் ஆண்டு உலக நிமோனியா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைக்கு நாம் நிமோனியா பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…



நிமோனியா என்றால் என்ன? 
நுரையிரல் செல்களில் ஏற்படும் அழற்சி தான் நிமோனியா என்றழைக்கப்படுகிறது. பொதுவாக நம்முடைய நுரையீரலில் அல்வியோலி என்றழைக்கப்படும் மிகவும் சிறிய காற்றுப்பைகள் உள்ளன. இவை பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகும் போது நிமோனியா உண்டாகிறது.

நிமோனியாவின் அறிகுறிகள்: 
காய்ச்சல், குளிர், மூச்சுத்திணறல், சுவாசிக்கும் போது மார்பு வலி, அதிகப்படியான இதய துடிப்பு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறுதல், இருமல், வயிறு எரிச்சல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக உள்ளன.இதுப்போன்ற அறிகுறிகள் நிமோனியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அறிகுறிகளாக அமைகிறது என்றாலும், கீழ்வரும் அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதோ அதன் விபரம்..

சளியுடன் கூடிய காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவை நீங்கள் சந்திக்க நேரிடும்.நாம் தினமும் செய்யக்கூடிய பணிகளை செய்யும் போது அல்லது ஓய்வெடுக்கும் போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டவுன் மருத்துவரை அணுக வேண்டும்.

மூச்சு விடும் போது நெஞ்சு வலி, சளி அல்லது காய்ச்சல் குணமடைந்த பின்னரும் திடீரென உடல் நிலை மோசமடைதல், இதய நோய், நீரழிவு அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய் போன்ற உடல் நல பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

நோய் கண்டறிதல் விதம் : மேற்கூறியுள்ள அறிகுறிகள் எதுவும் இருந்தால், உடனடியாக உடல் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே மூலம் கண்டறிப்படுகிறது. மேலும் இரத்த பரிசோதனை, சளி பரிசோதனையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இதோடு சில நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன் மற்றும் ப்ரான்கோஸ்கோபியும் தேவைப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

சிகிச்சை : நிமோனியா பாதிப்பு உங்களது ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் மருத்து பரிசோதனை மூலம் கண்டறிந்து விட்டீர்கள் என்றால்? வீட்டிலேயே நீங்கள் வாழ்வழி நுண்ணுயிர் எதிரப்பிகளுடன் கூடிய சிகிச்சைகளை நீங்கள் மேற்கொள்ளலாம். மேலும் ஆண்டிபயாடிக் சிகிச்சையின் மூன்று முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் மேம்படத் தொடங்குகிறார்கள்.ஒருவேளை நோயின் தாக்கம் தீவிரமாகும் பட்சத்தில், அதிக ஆபத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகள் : நிமோனியா மற்றும் அதன் சிக்கல்களைத் தடுக்க தடுப்பூசி ஒரு முக்கியமான வழியாகும். நிமோகாக்கல் தடுப்பூசி மற்றும் காய்ச்சல் அல்லது காய்ச்சல் தடுப்பூசி ஆகியவை பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பரிந்துரைக்கப்படும் மிகவும் பொதுவாக கிடைக்கக்கூடிய தடுப்பூசிகள் ஆகும்.புகைபிடிப்பதை நிறுத்துவது நிமோனியாவைத் தடுக்க ஒரு முக்கியமான படியாகும். தொற்றுகளிலிருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். மேலும் நிமோனியா அறிகுறி உள்ளவர்கள் இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்.


HAL நிறுவனத்தில் ரூ.4,52,400/- ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 Hindustan Aeronautics Limited (HAL) ஆனது Physician, Pathologist மற்றும் GDMO பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.4,52,400/- வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HAL காலிப்பணியிடங்கள்:

Physician, Pathologist மற்றும் GDMO பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Physician கல்வி தகுதி:

MBBS, Postgraduate Degree/Diploma in General Medicine, Pathology என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HAL வயது வரம்பு:

17.03.2023ம் தேதியின் படி 65 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Physician ஊதிய விவரம்:

Physician, Pathologist – பணிக்கும் தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.2,86,000/- ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்.

GDMO – பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.4,52,400/- ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்.

HAL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நடத்தப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.03.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Agricultural Extension Quiz for TNPSC AO exam - 01


மரியாதை இல்லாமல் நடந்து கொள்ளும் குழந்தையை எப்படி கையாள்வது..? பெற்றோர் செய்யும் தவறு இதுதான்..!

இன்றைக்கு உள்ள குழந்தைகள் பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்துக்கொள்கிறார்களா என்றால், நிச்சயம் கிடையாது. மார்டன் கலாச்சாரம் என்கிற பெயரில் , பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு மரியாதை என்ற விஷயத்தைக் கற்றுக்கொடுக்க மறந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு பெற்றோர்களும் நாம் எப்படி வளர்ந்தோம் என்பதை நினைவில் வைத்திருந்தாலே அதுப்போன்ற ஒவ்வொருவரும் குழந்தைகளை வளர்த்திருக்க முடியும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை மட்டும் செய்ய மறந்துவிடாதீர்கள். இனியும் பெற்றோர்களாகிய நீங்கள் இதுப்போன்று இருந்துவிடாதீர்கள். உங்களை குழந்தைகளுக்கு சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை கிடைக்க வேண்டும் என்றால், இந்த விஷயங்களை மறக்காமல் நீங்கள் பாலோ பண்ணினாலே போதும்..இதோ என்னென்ன அறிந்துக்கொள்ளுங்கள்.“

மரியாதைக்குரியதாக குழந்தையை வளர்த்தல்: பெற்றோர்களாகிய உங்களை மட்டுமில்லை, மற்றவர்களையும் மதிப்புடன் உங்களது குழந்தைகள் நடத்த வேண்டும் என்றால், அவர்களுக்கு மரியாதை என்பதைக் கற்றுக்கொடுங்கள். ஏதாவது ஒரு விஷயம் அவர்களுக்கு செய்தால், நன்றி என்ற வார்த்தையை சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுக்கவும். மேலும் மரியாதை என்பது அவர்களின் செயல்களில் மட்டுமில்லை, மற்றவர்களைப் பார்க்கும் விதத்திலும் உள்ளது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும். யாராக இருந்தாலும் வீட்டிற்கு வந்தவர்களைப் பார்த்து சிரிக்கவும் மற்றும் வாருங்கள் என்று சொல்லக் கற்றுக்கொடுக்கவும்.


குழந்தைகளுக்கு உறவின் தன்மையை வெளிப்படுத்துதல்: ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தைகளிடம் நண்பர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகளவில் இருக்கும். அதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சிறு வயதில் அவர்கள் ஏதாவது தவறுகள் செய்தால் அந்நேரத்திலும் அவர்களுக்கு நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறான ஒன்று. தவறுகளைத் தட்டிக் கேட்கவும், எது சிறந்தது? என அறிந்துக்கொள்வதற்கு ஏற்ற வகையில் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். தவறு செய்தால் தண்டிக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும். இதுப்போன்று நீங்கள் உங்களது குழந்தைகளை வளர்க்கும் போது, மரியாதை ஏற்படும். மேலும் வளர வளர உங்களது நட்பு வலுப்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.

மரியாதையுடன் குழந்தைகளைத் திருத்துதல் : உங்களது குழந்தை அவமரியாதையாக இருப்பதை நீங்கள் கண்டால், அவர்களிடம் உங்களது குரலை உயர்த்தி திட்டாதீர்கள். அவர்களை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர்களிடம் மரியாதையுடன் நடந்துக்கொள்ளுங்கள். பெற்றோர்களைப் பார்த்து தான் குழந்தைகள் வளர்கிறார்கள் என்பதால், நிச்சயம் கெட்ட விஷயங்களை மாற்ற வழியாக இது அமையும். இதை விட்டு விட்டு தேவையில்லாமல் திருத்துகிறோம் என ஆத்திரத்தில் கத்திக் கூச்சலிடுவதால் எந்த பலனும் இல்லை. இது மேலும் உங்களது குழந்தைகளை மோசமாக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் எது சரி மற்றும் எது தவறு என்பதைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். இதற்கான நேரத்தை அவர்களுக்காக நீங்கள் ஒதுக்க வேண்டும். உங்களது குழந்தைகளுக்கு யாராவது உதவி செய்திருந்தால் நன்றி எனச் சொல்வதற்குக் கற்றுக்கொடுத்தல் மற்றும் ஏதாவது தவறு செய்தால் எந்த ஈகோவும் இல்லாமல் மன்னித்துவிடுங்கள் என்று சொல்வதற்குக் கற்றுக்கொடுங்கள். இச்செயல் அவர்களை மற்றவர்களிடமிருந்து பிரிந்துக்காட்டுவதோடு மரியாதையுடன் நடத்தும்.

மேலும் வருத்தம் தெரிவிப்பது என்பது மரியாதை காட்டுவதற்கான ஒரு வழி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். இதோடு மற்ற நபர்களிடம் பணிவையும், கருணையும் எவ்வாறு செலுத்த வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip


 Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

செவ்வாழை சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..? சாப்பிட சரியான நேரம் எது..?

மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை. தவிர, ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருள்கள் இருக்கும். அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழமும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினால் மிகையாகாது. 

செவ்வாழை சாப்பிடுவதற்கான சரியான நேரம் என்ன?

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.

செவ்வாழையின் பயன்கள் :

 நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவர வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
மாலைக்கண்நோய் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
முந்தைய தினம் சாப்பிட்ட சில உணவுகளால் மறுநாள் காலையில் மலம் வெளியேற முடியாமல் இருக்கும். காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும்.

அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேரும் பெண்களுக்கு ரூ.2500 உதவித்தொகை – மத்திய அரசு அறிவிப்பு!

 

அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேரும் பெண்களுக்கு ரூ.2500 உதவித்தொகை – மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு சார்பில் அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்துள்ள பெண்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருந்தால் அவர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை அறிவிப்பு

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கவும் அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும், அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையோராக மாற்ற மத்திய அரசு பல தொழில் பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனங்களில் பெண்கள் பலர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவரை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன் படி மத்திய அரசின் தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் பெண்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருந்தால் அவர்களுக்கு உதவித்தொகையாக ரூ. 2500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை ஏழை எளிய பெண்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், இந்த பயிற்சி மூலம் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க இது வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் தொழில் தொடங்க வங்கிகளில் கடன் பெறும் வழிமுறைகள்

 தொழில் தொடங்கி இந்த சமுதாயத்தில் பெரிய ஆளாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. ஆனால் அந்த தொழில் தொடங்குவதற்கு முதலில் தன்னம்பிக்கை அவசியம் தேவை. நாம் செய்ய போகும் தொழிலை சிறப்பாக நடத்துவதற்கு பணம் தேவை. அந்த பணத்தை வைத்து தான் தொழில் தொடங்க முடியும். அந்த பணத்தை எப்படி புரட்டுவது? என்று யோசித்து, யோசித்தே சிலர் தாங்கள் தொழில் தொடங்க நினைக்கும் எண்ணத்தை விட்டு விடுவார்கள். உங்கள் எண்ணங்களை வளமாக்க தான் அரசும், பல்வேறு வங்கிகளும் தொழில் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. அந்த கடன் உதவிகளை பெறுவதற்கு நாம் தயாராக வேண்டும்.


உறுதியான நம்பிக்கை 

தொழில் தொடங்குவதற்காக வங்கி மேலாளரை அணுகி நாம் செய்ய போகும் தொழிலை எடுத்து கூறி கடன் கேட்கிறோம். கடன் கொடுக்கும் வங்கி மேலாளர், முதலில் நம்மை சோதிப்பது நம்பிக்கை தான். தொழிலில் வெற்றி கிடைக்காவிட்டால் கடனை எப்படி கட்டுவீர்கள் என்று. ஆனால் நம் நிச்சயம் இந்த தொழிலில் சாதித்து காட்டுவேன் என்று உறுதி கூற வேண்டும். நீங்கள் அப்படி கூறினாலும், உங்களை மாதிரி எனக்கு தெரிந்த நபர் ஒருவர் தொழில் செய்தார். அதில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு பிறகு அவர் வேறு ஒரு தொழில் செய்து நஷ்டத்தை ஈடுகட்டினார். அது போல் உங்களுக்கு வேறு தொழில் செய்கிற திட்டம் இருக்கிறதா? என்று கேட்பார்கள்.
இதற்கும் நீங்கள், தாங்கள் மேற்கொள்ள இருக்கும் தொழிலின் செயல்பாடுகளை விளக்கி கூறுங்கள். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் கடன் தொகையை மாதந்தோறும் தவணை மாறாமல் கட்டி விடுவேன் என்று உறுதி கூறுங்கள். 
உங்கள் உறுதி தான் கடன் தரும் வங்கி மேலாளருக்கு அசாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்தும். அவர் சொல்கிறபடி நான் மேற்கொள்ளும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் வேறு தொழில் செய்து கடன் தொகையை அடைத்து விடுவேன் என்று கூறுவது நம் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைத்து விடும். எனவே நீங்கள் மேற்கொள்ள இருக்கும் தொழில் மீது அசாத்தியமான நம்பிக்கையை முதலில் வையுங்கள். அது வங்கி மேலாளரை ஈர்த்து விடும்.

திட்ட மதிப்பீடு 
நீங்கள் செய்யப் போகிற தொழில் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான திட்டத்தை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.

இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக, குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து தொழில் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் உற்சாகத்துடன் பேசலாம். அடமானமில்லாத கடன் 
அதாவது ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி திட்டத்தில் கடன் தருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள். 

அடமான கடன் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில், அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது. அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன் பெற முடியும். ஒருவேளை இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் பெறலாம். 

முதலீடு தொகை எவ்வளவு? 
தொழில் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துவிடும். அந்த தொகையில் குறைந்தபட்சம் 1:4.5 என்ற விகிதத்தில் நம்மிடம் சொந்த பணம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் ரூ.4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதிதான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் தொழில் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கி அதிகாரிகள் முடிவு செய்வார்கள். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகிதத்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். எனவே உங்கள் தொழிலில் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம். 

வங்கிகளை எப்படி அணுகுவது? 
ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான்.

 உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை (எஸ்.எம்.இ. கிளை) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள். 

தேவையான ஆவணங்கள் அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், தொழில் நடைபெறும் இடத்துக்கான முகவரிச்சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), தொழில் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

பெண்கள் வேலைக்காக காத்திருக்காமல் சொந்தமாக தொழில் தொடங்கலாம்...

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்" என்ற பாடல் வரிகளில் புதைந்துள்ள கருத்துகள் வளர்ந்து வரும் இளைஞர்களுக்காக கூறப்பட்டது. நமது நாடு தன்னிறைவு பெறும் காலம் வரை இந்த வரிகள் உயிருடன் இருக்கும். படித்த பெண்கள் அரசு வேலைகளுக்காக காத்திருக்காமல் சுலபமாக தொழில் தொடங்கலாம். அதற்காக தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து நமக்கு என்ன தொழில் தொடங்க விருப்பமோ அந்த தொழிலில் பயிற்சிப்பெற்று தொடங்கலாம். இதற்காக தொழில் ஆலோசனை கூறும் அரசு நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் ஆலோசனை பெறலாம். அவர்கள், எளிதான முறையில் தொழில் யோசனைகளையும் வழங்குகிறார்கள்.

விவசாயத் தொழில்கள் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு, எலக்ட்ரானிக் போன்ற மின்னணு கருவிகள் தயாரிப்பு, பீங்கான் பொருட்கள் தயாரித்தல், பெயிண்டிங், வர்ணம் தீட்டுதல், மாடலிங் செய்தல், ரேடியோ, ரெப்ரிஜிரேட்டர், குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின் போன்றவற்றை பழுது பார்த்தல் போன்ற பல தொழில்களை தொடங்கலாம். மேலும் கம்ப்யூட்டர் வேலைகளுக்கு அது பற்றிய தொழில்நுட்பங்களை அறிந்து இதில் ஈடுபடலாம். இதன் மூலம் நமக்கு தினசரி வருமானம் கிடைப்பதுடன் தொழிலை விரிவுபடுத்தி பலருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கலாம்.

தொழிலை விரிவுபடுத்த அரசு மானியத்துடன் கடன் உதவிகளும் வழங்குகிறது. அதன்படி மானியத்துடன் கடன் உதவிகள் பெற்று தொழில் வல்லுனர்களை அழைத்து வந்து எளிதில் வேலைகளை முடிப்பதற்கான நுட்பங்களை அறிந்து கொள்ளலாம். பணிகளை விரைவில் முடிப்பதால் பல தொழில் ஆர்டர்களை பெறும் போது நமக்கு கூடுதலாக வருமானமும் கிட்டும். மேலும் தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் கடன் உதவி அளிக்கிறது. தொழில் முதலீட்டுக்கழகமும் கடன் உதவி வழங்குகிறது. சிறு தொழில் நிறுவனமும் கடன் தர தயாராக உள்ளன. இந்த நிறுவனங்களில் கடன் பெற்று தொடங்கிய தொழிலை அபிவிருத்தி செய்யவோ, புதிய தொழில் தொடங்கவோ கடன் பெறலாம். எந்தவொரு தொழிலையும் தள்ளி விடாது. அது பற்றி ஆராய்ந்து அறிந்து வாழ்க்கையில் முன்னேறலாம்.

 Click here to join whatsapp group for daily health tip

மாரடைப்பை தடுக்க மன அழுத்தத்தை குறைப்போம்

 மாரடைப்பு ஏற்படுவ தற்கான காரணங்களான வாழ்க்கைச் சூழல், பணிச்சுமை, தூக்கமின்மை, கட்டுப்பாடற்ற உணவு முறை, உடல்நல பிரச்சனைகள் மற்றும் இவை அனைத்தாலும் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக் குறைப் பதோடு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக பின்பற்றினால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும் என்கிறார் நெல்லை ஷிபா மருத்துவமனை இதயநோய் சிகிச்சை மருத்துவர் கிரிஷ் தீபக். மன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம்.


பொதுவாக மாரடைப்பு ஏற்படும்போது திடீர் நெஞ்சுவலி (வழக்கமாக நெஞ்சிலிருந்து இடது கை அல்லது கழுத்தின் இடப்பாகத்திற்கு பரவும்), மூச்சுதிணறல், வாந்தி, மயக்கம், வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்கு நெஞ்சு வலி இல்லாமல், நெஞ்சு எரிச்சலோ அல்லது இடது கை குடைச்சலோ இருக்கும். இது மட்டுமல்லாமல் முதுகு எரிச்சல், வலது பக்க நெஞ்சுவலி, தாடைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு வலி இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம். மாரடைப்பை கண்டறிய இதய சுருள் படம் (ECG) எடுக்க வேண்டும். மேலும் ரத்தப் பரிசோதனை மூலமும் மாரடைப்பை கண்டறிய லாம். இதய ஸ்கேன் (ECHO) மூலம் நம் இதயத்தின் செயல்திறன், மாரடைப்பைக் கண்டறியலாம்.


ஆஞ்சியோகிராம் / ஆஞ்சியோ பிளாஸ்டி ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பார்க்கும்போது இதய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்தால், கை வழியாக ஒரு சிறிய டியூப்பை செலுத்தி, அதன் மூலம் ஒரு பலூனை உட்செலுத்தி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்று அதில் இருக்கும் கொழுப்பு படிவுகளை அகற்றி (விரித்து விடுதல்) அந்த இடத்தில் ஸ்டென்ட் வைத்து அடைப்பை சரி செய்யும் சிகிச்சை முறைக்கு ஆஞ்சியோபிளாஸ்டி. பைபாஸ் சர்ஜரி யாருக்கு தேவை? இதயத்திற்கான ரத்தக் குழாய்களில் 3 அல்லது 5 இடங்களில் அடைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பைபாஸ் சர்ஜரி பரிந்துரை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையினால் சுலபமாக மற்றும் வலி இல்லாமல் அடைப்பை அகற்றலாம்.

இதய நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் என்ன? இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் அதிகளவு உப்பு, நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள சால மீன், வால்நட்ஸ், கொண்டைக்கடலை, ஓட்ஸ், சிவப்பு திராட்சை, தக்காளி போன்ற உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 6 கிராம் (3 டீஸ்பூன்) அளவிற்கு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் ஒரு நாளைக்கு 4 முதல் 6 டீஸ்பூன் அளவில் சன் பிளவர் எண்ணெய், ரைஸ்பிராண்ட் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சுழற்சி முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

மாரடைப்பை தடுக்க என்ன செய்வது? 
மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பை வராமல் தடுக்க முடியும். மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய முயற்சிப்பதோடு, முடிந்தவரை எப்போதும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ம ன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம். மாரடைப்பை தடுக்க ரத்த அழுத்தம், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். மது அருந்துதல், புகை மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். தினசரி 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி அரை மணி நேரமாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர் கிரிஷ் தீபக்.

கோயம்புத்தூர் மத்திய சிறையில் பணி.. விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ளன..!

 கோயம்புத்தூரில் உள்ள மத்திய சிறையில் இரவுக் காவலர் காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடம் பொது இன சுழற்சி மூலம் நிரப்பப்படவுள்ளது.

01.07.2022 அன்று வரை தேதியில் 32 வயதுக்கு மிகாமல் இருக்கும் நபர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித் தகுதி குறித்த விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறவில்லை..

ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கும் படி கோவை மத்தியச்  சிறை கண்காணிப்பாளர் மா.ஊர்மிளா தெரிவித்துள்ளார். விண்ணப்பதார்கள் சாதிச் சான்றிதழ் நகலுடன்  சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை  “சிறை கண்காணிப்பாளர், மத்தியச் சிறை, கோவை-18 என்ற முகவரிக்கு 28.02.2023 தேதிக்குள் தபால் மூலம் பெறும் படி விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்படி தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வு தேதி மற்றும் நேர விவரம் தகுதியுள்ள விண்ணப்பதார்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்குஇங்கே கிளிக்செய்யவும்.