Search

உஷார்.! செல்ஃபோனை எந்த பாக்கெட்டில் வைப்பது நல்லது? இதயப்பிரச்னை, ஆண்மைக்குறைவு சிக்கலை உண்டாக்கும் மொபைல்!!

 இன்றைக்கு ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தாத நபர்களை உங்கள் கண் எதிரில் நீங்கள் கண்டுவிட்டால் அது ஆச்சரியம் தான். அதுவும் கொரோனா ஊரடங்கு முடக்க காலத்தில் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க தொடங்கியதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கூட பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் வாங்கி கொடுக்கப்பட்டன.

இளையவர்கள் வெறுமனே கேம் விளையாடுவதாக பெரியவர்கள் சாட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்லைன் கல்வி, வேலைக்கான தகவல் தொடர்பு, இண்டர்நெட் இணைப்பு, வீடியோ காலிங் வசதி, பேங்கிங் சேவைகள் நம் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாக ஸ்மார்ட்ஃபோன் மாறி விட்டது. இந்த தேவைகள் எதுவுமே இல்லை என்றாலும், அடிப்படை கல்வியறிவு கொண்ட எல்லோரிடமும் சாதாரண ஃபோன் ஒன்றாவது இருக்கிறது.

இதய பாதிப்பு ஏற்படுமா?
எல்லாம் சரி தான், ஃபோனை நாம் எங்கே வைத்துக் கொள்கிறோம். சட்டைப் பையில் அல்லது ஃபேண்ட் பையில். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஆனால், சட்டப்பையில் வைத்தால் இதய நலன் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் நமக்கு உண்டு. அதுபோல ஃபேண்ட் பாக்கெட்டில் வைத்தால் கருத்தரிக்கும் திறன் பாதிக்கலாம் என்ற அச்சம் உண்டு.
சொல்லப்போனால் இரண்டுமே சரி தான். அப்படியென்றால் ஃபோனை எங்கே வைத்துக் கொள்வது, இதன் விளைவுகள் என்ன என்பதை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

வீட்டிலும் ஃபோனும், கையுமாக
ஃபோனில் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட வேலை நிமித்தமான தேவைகள் முடிந்து விட்டாலும் கூட, அதை எப்போதும் கையில் பிடித்துக் கொண்டு எதையாவது ஸ்க்ரோல் செய்வது தவிர்க்க இயலாத பழக்கமாக மாறி விட்டது. முடிந்த வரை சமூக வலைதளங்களை லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது நல்லது. வெளியிடங்களுக்கு செல்லும்போது மட்டும் செல்ஃபோனில் உபயோகிக்கலாம்.

கழிவறை வரை வந்து செல்ஃபோன் பயன்பாடு
இப்போதெல்லாம் கழிவறைக்கு செல்பவர்கள் கையில் ஃபோன் இல்லாமல் செல்வதில்லை. அங்கே அமர்ந்து கொண்டு ஸ்டேட்டஸ் பார்ப்பது அல்லது வயர்லெஸ் ஹெட்ஃபோனுடன் இணைத்துவிட்டு பேசிக் கொண்டிருப்பது போன்றவை தொடர்கிறது. ஆனால், இவ்வாறு வயர்லெஸ் கருவியுடன் இணைப்பதால் கதிர்வீச்சு 2 முதல் 7 மடங்கு கூடுதலாக இருக்குமாம். அதுவே புற்றுநோயை வரவைக்கும் என்று எச்சரிக்கின்றனர்.

ஃபேண்ட் பாக்கெட்டில் வைப்பதால்....
செல்ஃபோனை ஃபேண்ட் பாக்கெட்டில் வைப்பதால் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படும் என்பது மட்டுமல்லாமல், கதிர்வீச்சானது எலும்புகளை வலுவிழக்கச் செய்யுமாம். அதிலும் இடுப்பு எலும்புகள் வலுவிழப்பதை தவிர்க்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எங்குதான் வைப்பது?
செல்ஃபோன் பயன்பாட்டை தவிர்க்கவும் முடியாது, அதை பாக்கெட்டுகளிலும் வைக்க கூடாது என்றால், பிறகு அதை எங்குதான் வைத்துக் கொள்வது என்று சலிப்பு தட்டுகிறதா? உங்கள் பின் பாக்கெட்டில் இதை வைத்துக் கொள்ளலாம். ஆனால், மறந்தும்கூட அப்படியே உட்கார்ந்து விட வேண்டாம்.
கார்களில் பயணிக்கும்போது முன்பக்க டிராயரில் வைத்து விடலாம். அலுவலகத்திற்கு பயணிக்கும்போது நம் கையில் உள்ள பைகளில் வைத்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்படலாம்.. மருத்துவர் சொல்லும் ஆலோசனை..!

 நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic retinopathy) என்பது நீரிழிவினால் வரும் சிக்கல்களினால் உண்டான விழித்திரையைப் பாதிக்கும் விழித்திரை நோயைக் குறிக்கும். இந்நோய், முடிவில் குருட்டுத் தன்மையை உருவாக்கும் தன்மையுள்ளது. இந்த நிலை முக்கியமாக உயர் இரத்த சர்க்கரை அளவு விழித்திரைக்கு இரத்தத்தை வழங்கும் சிறிய இரத்த நாளங்களின் வலையமைப்பை சேதப்படுத்துவதால் ஏற்படுகிறது.

நீரிழிவு விழித்திரை நோய் பொதுவாக ஒரு லேசான நோயாகத் தொடங்கும் என்கிறார், குண்டூர் சங்கரா கண் மருத்துவமனையை சேர்ந்த கண் மருத்துவருமான டாக்டர் ஆர். மது குமார். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமுள்ளவர். பல ஆண்டு காலமாக சங்கரா கண் மருத்துவமனையுடன் தொடர்புடையவர். அவர் விட்ரோரெட்டினல் சேவைகளில் நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் இன்று வரை சுமார் 20 ஆயிரம் வைட்ரியோரெட்டினல் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். இந்நிலையில் நீரிழிவு விழித்திரை நோய் யாருக்கெல்லாம் வரக்கூடும், அதன் அறிகுறிகள் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்பது பற்றி டாக்டர் ஆர். மது குமார் அளித்துள்ள விளக்கங்களை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நீரிழிவு விழித்திரை நோயால் பாதிக்கப்படுபவர் யார் ? : 

Type 1 அல்லது Type 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் நீரிழிவு விழித்திரை நோயால் அதிகம் பாதிக்கப்படுவர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை இயல்பான நிலையில் இருக்கும் சிலருக்கும் இந்த நோய் ஏற்படலாம். எனவே, அனைத்து சர்க்கரை நோயாளிகளும் வருடத்திற்கு ஒருமுறை கண்களைப் பரிசோதிக்க வேண்டும்.

நீரிழிவு விழித்திரை நோயால் சில அறிகுறிகள்  : 

இந்த நோயின் ஆரம்ப நிலையில் எந்தவித அறிகுறியும் இருக்காது. சர்க்கரை நோயாளிகள், கண்களைப் பரிசோதிக்கும்போதுதான் கண்டறிய முடியும். ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் பின்வரும் சில அறிகுறிகளை உணர முடியும். அவை, படிப்படியான பார்வையிழப்பு, திடீர் பார்வையிழப்பு, மங்கலான பார்வை, கண் வலி அல்லது கண் சிவப்பாக இருத்தல், இந்த அறிகுறிகள் தோன்றினால் பொதுவான கண் குறைபாடாகக் கூட இருக்கலாம். விழித்திரை பாதிக்கப்படாமலும் இருக்கலாம். கண் மருத்துவரை உடனடியாகச் சந்திக்கவும். முறையான இடைவேளைகளில் கண்களைப் பரிசோதித்துக் கொள்வதால் பார்வையைப் பாதுகாக்க முடியும்.முறையான இடைவேளைகளில் நீங்கள் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்பவராக இருந்தாலும் உங்கள் பார்வையில் ஏதேனும் வித்தியாசத்தை உணர்ந்தால் அடுத்த சந்திப்பு நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக கண் மருத்துவரிடம் செல்லவும்.

நீரிழிவு விழித்திரை நோயால் ஏற்படும் பிற கடுமையான பாதிப்புகள்: நீரிழிவு மாகுலர் எடிமா: 

விழித்திரையின் இரத்த நாளங்கள் பலவீனமாக இருக்கும்போது, திரவம் வடியத் தொடங்கும். இந்த திரவம், விழித்திரையில் படிந்து வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, பார்வையிழப்பு ஏற்படும்.

நியோவாஸ்குலர் கிளௌகோமா : 

இது கண்ணின் முன் பகுதி, கார்னியா மற்றும் லென்ஸுக்கு இடையில், அக்வஸ் ஹ்யூமர் எனப்படும் திரவத்தால் நிரப்பப்படுகிறது. இந்த திரவம் தொடர்ந்து வடிகட்டப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் நிலையான சமநிலையை பராமரிக்கிறது. டிராபெகுலர் மெஷ்வொர்க் அல்லது யுவியோஸ்க்லரல் வெளியேற்றம் மூலம் அக்வஸ் ஹூமர் தொடர்ந்து வெளியேறுகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் அடைப்பு கண் அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யலாம், இதன் விளைவாக பார்வை நரம்பு சேதமடைகிறது, இது இரண்டாம் நிலை கிளௌகோமா என வகைப்படுத்தலாம். இந்த நிலை கருவிழியின் மேல் புதிய நாளங்கள் உருவாகும்.

விழித்திரைப் பற்றின்மை : 

விழித்திரைக் கண்ணீருக்குக் கீழே திரவம் இடம்பெயர்ந்து, கண் சுவரின் பின்புறத்திலிருந்து விழித்திரையைத் தூக்கும்போது விழித்திரைப் பற்றின்மை ஏற்படுகிறது. கண் சுவரில் விழித்திரை இணைக்கப்படாத இடங்களில் பார்வை இழப்பு ஏற்படுகிறது. எனவே, விழித்திரைப் பற்றின்மை பார்வையை மீட்டெடுக்க அவசர அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கடுமையான சிக்கல்களும் நீரிழிவு ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்ட கண்ணில் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும்.

தொண்டை வலி குணமாக இந்த பாட்டி வைத்தியம் ட்ரை பண்ணுங்க..!

 தொண்டை வலி என்பது அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய வலியாக தான் இருக்கிறது. பொதுவாக பலருக்கு சளி பிடிக்கும் நேரத்தில் தொண்டை வலி வரக்கூடும். சுத்தமான தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளாததால் அதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் தொண்டை வலி வரக்கூடும். தொண்டை வலி உள்ளவர்களால் பல நேரங்களில் எச்சிலை கூட விழுங்க முடிவதில்லை. தொண்டை வலி வர பல காரணங்கள் இருந்தாலும் அதை எளிதில் குணமடைய செய்யும் பாட்டி வைத்தியம் குறித்த சில டிப்ஸ்-ஐ இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

ஒரு லவங்க பட்டை , 4 ஏலக்காய், ஒரு டீ ஸ்பூன் சோம்பு, 25 கிராம் தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், புதினா இலை 5 , இவை அனைத்தையும் 4 டம்ளர் நீரில் கொதிக்க விடமும். 4 டம்ளர் நீர் 2 டம்ளர் நீராக மாறும் வரை தண்ணீர் நன்கு கொதிக்க வேண்டும். பிறகு அந்த கொதித்த நீரை ஆற வைத்து காலை ஒரு கிளாஸ் இரவு ஒரு கிளாஸ் என பருகி வேண்டும். இப்படி செய்வதன் மூலம் 2 அல்லது 3 நாட்களில் தொண்டை வலி நீங்கும். தொண்டையில் ஏதேனும் புண் இருந்தாலும் சரியாகும்.

2 டம்ளர் நீரில் திரிபலா சூரணம் ( கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவை மூன்றும் சேர்ந்தது ) சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். சிறிது நேரம் கொதித்த பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு கொதித்த நீரை சிறிது ஆறவிட்டு அதை தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டை வலி நீங்கும். குறிப்பு: திரிபலா சூரணம் என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.

தொண்டை வலி குணமாக, வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அதோடு சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் தொண்டை புண்கள் ஆறும், தொண்டை வலி நீங்கும்.

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்து நன்கு போடி செய்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை வலி சரியாகும். மேலும் இதில் சிறிதளவு வசம்பை எடுத்துக்கொண்டு அதோடு சிறிதளவு மிளகு சேர்த்து மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால் தொண்டை வலி குறையும்.

தொண்டை வலி போக, துளசி இல்லை மற்றும் கற்பூரவள்ளி இலையை மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கலாம். இதன் மூலம் தொண்டை வலி குணமாகும்.

வெது வெதுப்பான நீரில் உப்பு சேர்த்து தொண்டையில் படும் படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி நிவாரணம் அடையும்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

செவ்வாழை சாப்பிட சரியான நேரம் எது..? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

 மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை. தவிர, ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருள்கள் இருக்கும். அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழமும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினால் மிகையாகாது.

செவ்வாழை சாப்பிடுவதற்கான சரியான நேரம் என்ன?
செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.

செவ்வாழையின் பயன்கள் :  நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

மாலைக்கண் நோய் கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

பல் வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

முந்தைய தினம் சாப்பிட்ட சில உணவுகளால் மறுநாள் காலையில் மலம் வெளியேற முடியாமல் இருக்கும். காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip


எச்சரிக்கை..! அதிகமாக கொட்டாவி விட்டால் உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கலாம்..

 கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து வாய், மூக்கு வழியாக ஒரே நேரத்தில் சுவாசிக்கும் ஒரு நிகழ்வு. நம்மில் பலர் அடிக்கடி கொட்டாவி விடுவோம். அது இயல்பானது என நினைத்து கொண்டிருந்தோம். ஆனால், அடிக்கடி கொட்டாவி வருவது ஒரு சில நோயின் அறிகுறி என்று மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது. என்ன நம்ப முடியவில்லையா?. உடல் சோர்வால் பெரும்பாலும் வரும் இந்த கொட்டாவியின் பின் உள்ள மற்ற காரணங்கள் குறித்து இங்கு காணலாம்.

கல்லீரல் பிரச்சனை : கல்லீரல் அழற்சி மற்றும் பாதிப்பு போன்ற காரணங்களால் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, நீண்ட நாட்களாக அடிக்கடி கொட்டாவி வந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நல்லது.

மல்டிபிள் கெலொரிசிஸ் : உடல் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாட்டினை நாம் மல்டிபிள் கொலோரிசிஸ் (Multiple sclerosis) என அழைக்கிறோம். இந்த பிரச்சனை உள்ள போது, அடிக்கடி கொட்டாவி வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூளை தொற்று : மூளை பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் அழற்சி, மூளையின் செயல்பாட்டை பாதிப்பதோடு, கொட்டாவி பிரச்சனையையும் உண்டாக்குகிறது. எனவே, அடிக்கடி கொட்டாவி வரும் நிலையில் மருத்துவரை சந்திப்பது நல்லது.

வலிப்பு பிரச்சனை : வலிப்பு எனப்படுவது ஒரு வகையில் மூளை ஆரோக்கியத்துடன் தொடர்புடைய ஒரு நோய் ஒரு பிரச்சனையாகும். அந்த வகையில் கை, கால் வலிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த கொட்டாவி பிரச்சனை சற்று அதிகமாகவே உள்ளது.

மருந்து உட்கொள்ளுதல் : அளவுக்கு அதிகமாக நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், குறிப்பாக தூக்கத்திற்கு நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் நரம்பு மற்றும் தசைகளின் தளர்வுக்கு வழிவகுத்து, கொட்டாவியை தூண்டுகிறது.

உடல் சோர்வு : அனைவரும் அறிந்த கொட்டாவியின் பொதுவான காரணம் ஆகும். உடல் சோர்வு மற்றும் களைப்பின் போது உடலில் ஏற்படும் ஆற்றல் இழப்பு, அதிக கொட்டாவிக்கு வழிவகுக்கிறது.

தூக்கமின்மை : வேலைபளு அல்லது வேறு சில காரணங்களால் நீங்கள் உங்கள் தூக்கத்தை தள்ளிப்போடுவது உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் தாக்கமின்மை கொட்டாவி வருவதற்கு காரணமாகிறது.

ஆம்! கொட்டாவி பற்றிய சிந்தனைகளும் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வர காரணமாக இருக்கலாம். அதேபோல, உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் அடிக்கடி கொட்டாவி விட்டால், உங்களுக்கும் அடிக்கடி கொட்டாவி வரும். ஏன், இந்த செய்தியை படித்த ஒரு சில நிமிடங்களுக்குள் நீங்கள் பல முறை கொட்டாவி விட்டிருக்கலாம்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

டீயுடன் சேர்த்து ரஸ்க் சாப்பிடுகிறீர்களா..? இந்த பக்கவிளைவுகளை தெரிஞ்சுக்கோங்க..!

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் ரஸ்க்கை விரும்பி சாப்பிடுகிறார்கள். பெரும்பாலான மக்கள் டீ அல்லது காபியோடு ரஸ்க்கை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அப்படியல்ல. நீங்கள் ரொம்ப காலமாக பின்பற்றி வரும் இந்த பழமையான கலவையானது உங்கள் ஆரோக்கியத்தை அமைதியாக அழிக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

மேலும் ரஸ்க் மிகவும் மலிவானது மற்றும் சாப்பிட எளிதானது. அதனால் வேலைக்கு செல்லும் போது காலையில் டீயுடன் ரஸ்க் சாப்பிட அனைவரும்  விரும்புகிறார்கள். இது வயிற்றையும் நன்றாக நிரப்பும். இது ரொட்டியை விட ஜீரணிக்க எளிதானது என்று கருதப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. ரஸ்க் பொதுவாக மாவு, சர்க்கரை, ஈஸ்ட் மற்றும் நெய் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால்  சுகர் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதும் மற்றவர்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்வதும் ஆப்பத்தானது.

ஒரு ஆய்வு அறிக்கையின்படி, ரஸ்க் பெரும்பாலும் பழைய ரொட்டியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது உங்கள் உடல்நலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ரஸ்க் பிஸ்கட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று ஈஸ்ட், சர்க்கரை, எண்ணெய் மற்றும் மாவு, ஆனால் பெரும்பாலான கடைகளில் வாங்கும் ரஸ்க் பழமையான ரொட்டிகள் ரஸ்க் பிஸ்கட்களை உருவாக்குவதற்கு மாற்றியமைக்கப்படுகின்றன. காலாவதியான ரொட்டிகளில் நோய்க்கிருமிகள் இருக்கலாம், அவை வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் உணவு நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

இதயத்திற்கு கேடு: ரஸ்க் மாவு, எண்ணெய் மற்றும் சர்க்கரையை அதிகமாக சேர்த்து செய்தால், அது இதய நரம்புகளை பலவீனப்படுத்துகிறது. இது மாரடைப்பு போன்ற இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

செரிமான அமைப்பு பிரச்சனைகள்: ரஸ்க்குகள் செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. ரஸ்க் சாப்பிட எளிதாக இருந்தாலும் ஜீரணிக்க கடினமாக இருக்கும். இது வயிறு சம்பந்தமான பல நோய்களை உண்டாக்கும்.

சத்துக்கள் குறைவு: ரஸ்க் சாப்பிடுவதால் சத்துக்கள் குறைவு. இதை சாப்பிட்டால் வயிறு நிரம்புகிறது. ஆனால் எந்த ஆரோக்கிய நன்மைகளும் இல்லை. வயிற்றை பசியின்றி மந்தநிலைக்கு தள்ளுகிறது.

உயர் இரத்த சர்க்கரை: ரஸ்க் அதிகமாக சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு காரணமாக, நீரிழிவு நோய் தவிர, இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகளின் அபாயமும் அதிகரிக்கிறது.


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

டீ பிரியர்களே.. மறந்து கூட இந்த உணவுப் பொருட்களை டீயுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.!

 நம்மில் பலருக்கு டீ இல்லை என்றால், அன்றைய நாளை கடப்பது கடினம். அதுவும் நீங்கள் டீ பிரியராக இருந்தால், கப் சூடான டீ இல்லாத நாளை உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஏனென்றால், டீ நமது வாழ்க்கையில் அவ்வளவு முக்கியத்தும் பிடித்துள்ளது. வேலைப்பளுவும் நடுவில், சூடான ஒரு கப் டீ கோப்பையை விட ஆறுதல் எதுவும் இல்லை.

உலகில் மிகவும் விரும்பப்படும் பானங்களில் டீ ஒன்றாகும். அது, ப்ளாக் டீ, பால் கலந்த டீ, தந்தூரி டீ, மசாலா டீ என கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட டீக்கள் உலகம் முழுவதும் உள்ளது. அதும், சுவையான தின்பண்டங்களுடன் ஒரு கப் சூடான தேநீர் இருந்தால் அன்றைய நாளை விட சிறப்பான நாள் இருக்கவே முடியாது.

தேநீர் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. வெள்ளை தேயிலையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது மற்றும் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தத்தை குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. தேயிலை பிரியர்கள் பெரும்பாலும் தங்கள் தேநீரை சிற்றுண்டி அல்லது உணவுகளுடன் சேர்த்து குடிப்பார்கள். ஆனால், அது பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. டீயுடன் ஒரு போதும் சேர்த்து சாப்பிடக்கூடாத.

 உணவுகளை பற்றி காணலாம்:

இந்திய வீடுகளில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ஸ்நாக்ஸுடன் சேர்த்து தேநீர் வழங்குவது வழக்கம். தின்பண்டங்கள் பொதுவாக கடலை மாவு  அல்லது மைதா மாவு மூலம் தயாரிக்கப்படுகின்றன. டீயுடன் பச்சரிசி மாவால் செய்யப்படும் பக்கோடா அல்லது மிக்சர் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்ல அல்ல. இது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும், இது மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

கடலை மாவு:

பச்சை காய்கறிகள்:

சில உணவுகளை ஒன்றாக இணைப்பது அவை வழக்கமாக வழங்கும் ஊட்டச்சத்திற்கு தீங்கு விளைவிக்கும். அந்தவகையில், தேநீரில் டானின்கள் மற்றும் ஆக்சலேட்டுகள் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. கீரை அல்லது பச்சை காய்கறிகளில் அயர்ன் சத்து உள்ளது. எனவே, டீயுடன் சேர்த்து இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

எலுமிச்சை:

பலர் லெமன் டீயை விரும்புகிறார்கள், ஆனால் தேயிலை இலைகளை எலுமிச்சையுடன் சேர்த்தால் அது அமிலமாக மாறும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. இரண்டையும் தனித்தனியாக உட்கொள்ளும்போது நல்ல பலன்களை பெறலாம். இவற்றை ஒன்றாக உட்கொள்ளும் போது,வயிற்று உப்புசத்தையும் ஏற்படுத்தும். லெமன் டீயை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

மஞ்சள்:

மஞ்சள் அதிகமுள்ள உணவுகளுடன் தேநீர் அருந்துவதைத் தவிர்க்கவும். தேநீர் மற்றும் மஞ்சளில் உள்ள வேதியியல் கூறுகள் செரிமான அமைப்பை பாதிக்கலாம். இது ஆசிட் ரிஃப்ளக்ஸை உருவாக்கும் என கூறப்படுகிறது. இவை அசிடிட்டி மற்றும் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

நட்ஸ்:

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை பாலுடன் சாப்பிடுவது நல்லதல்ல. தேநீருடன் உளர் பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். தேநீரில் உள்ள டானின் என்ற சேர்மம், பருப்புகளுடன் உட்கொள்ளும்போது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கும்.

ஐஸ்கிரீம்:

ஐஸ்கிரீம் குளிர்ச்சியாகவும், டீ சூடாகவும் இருப்பதால் செரிமான அமைப்பை பலவீனப்படுத்துகிறது. எனவே, இவற்றை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதே போல, தயிருடன் டீ அருந்துவதும் நல்லதல்ல.

மீன் பொரியல்:

சில சமயங்களில் நாம் பொரித்த மீனுடன், சூடான இஞ்சி டீ அல்லது சாதாரண டீயை சாப்பிடுவோம். அப்படி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது அல்ல என கூறப்படுகிறது.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip


பூண்டு தரும் இந்த 8 ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரியுமா..?

 பூண்டு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு உணவு வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருளாகும். உடலின் இரத்த அழுத்தத்தை சமச்சீராக வைக்க உதவும் பூண்டை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதய நோய்களைத் தடுப்பது முதல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது வரை, பூண்டின் சில ஆச்சரியமான நன்மைகள் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொஞ்ச காலத்திற்கு பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது சிறந்தது. இங்கு பூண்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி காண்போம்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது: பூண்டு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். ஏனெனில், இரத்த அழுத்தத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துகிறது: நம் உடலில் எப்போதும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருக்க வேண்டும். உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் அவசியம். உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலைத் தயாரிப்பது கல்லீரல். நாம் உண்ணும் உணவில் இருந்தும் கொலஸ்ட்ரால் கிடைக்கிறது. கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL), கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) என இரு வகைகள் உள்ளன.

பூண்டு உணவில் சேர்க்கப்படுவதால், (எல்.டி.எல்) "கெட்ட" கொழுப்பைக் குறைப்பதன் மூலமும், (எச்.டி.எல்) "நல்ல" கொழுப்பை அதிகரிப்பதன் மூலமும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த பூண்டு உதவக்கூடும். பூண்டு சேர்த்துக்கொள்ளும் அதே வேளையில், புகைப்பிடிப்பதை தவிர்த்தல், உடல் எடையைக் குறைத்தல், ஒமேகா 3-யை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் நல்ல கொழுப்பை உயர்த்தலாம்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் : பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கலவைகள் உள்ளன, இது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது: பூண்டு புற்றுநோயை எதிர்க்கும் உணவாக கருதப்படுகிறது. உணவுக்குழாய், வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய் வளர்ச்சியின் அபாயத்தைக் குறைப்பதில் பூண்டை அதிகமாக உட்கொள்வதால் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது: மனதை அமைதிப்படுத்தி தன்னம்பிக்கையை உணர்த்துவது பூண்டு, செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல், பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு அதிக பங்கு இருக்கிறது. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் உயிர் வாழ்கிறது, எனவே ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டை அதிகம் உணவில் எடுத்து கொள்ளுங்கள். வயதானவர்களுக்கு நினைவாற்றல் மேம்படுத்த பூண்டு பயன்படுவதாக சில ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

இதய ஆரோக்கியம் : இதய நோய் ஆபத்தில் உள்ள ஆண்களுக்கு பூண்டு சாப்பிடுவது நன்மை பயக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், (எல்டிஎல்) கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் பூண்டு உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க: எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது. பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் கலவைகள் உள்ளன, இது நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு நன்மை பயக்கும். பூண்டில் அல்லிசின் போன்ற கலவைகள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களுக்கு எதிராக போராடவும் உதவுகிறது.

உங்கள் அன்றாட உணவில் பூண்டை எவ்வாறு சேர்ப்பது? பச்சை பூண்டை நசுக்கி அல்லது நறுக்கி, அதை உட்கொள்வதற்கு முன் சில நிமிடங்கள் உட்கார வைப்பது, பூண்டில் காணப்படும் ஒரு நன்மை பயக்கும் கலவையான அல்லிசின் உருவாவதை மேம்படுத்தும். உணவுகளுக்கு சுவை மற்றும் ஊட்டச்சத்தை சேர்க்க பூண்டை சமையலில் பயன்படுத்தலாம். இருப்பினும், நீண்ட காலத்திற்கு அதிக வெப்பநிலையில் பூண்டை சமைப்பது அதன் ஆரோக்கிய நன்மைகளை குறைக்கும். காப்ஸ்யூல்கள், மாத்திரைகள் மற்றும் சாறுகள் உட்பட பல்வேறு வடிவங்களில் பூண்டு சப்ளிமெண்ட்ஸ் கிடைக்கின்றன.

இருப்பினும், பூண்டு சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். ஒரு நாளைக்கு 1-2 கிராம்பு பூண்டு உட்கொள்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மேலும், இஞ்சி, மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு போன்ற பிற பொருட்களுடன் பூண்டை சேர்த்து உணவில் சமைப்பதன் மூலமும் அதன் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

மார்ச் மாதம் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகள் ....

Last date to apply :March-2,2023
Last Date to Apply: March-15,2023

100 நாள் வேலை திட்டத்தில் சேர யாருக்கெல்லாம் தகுதி? சம்பளம் எப்போ கிரெடிட் ஆகும்?

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொருவருக்கும் இத்திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற உரிமை உண்டு எனத் தெரிவித்துள்ளது. அந்தப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் குறுக்கீடு செய்தால் தாராளமாக மாவட்ட குறைதீர் அலுவலரிடம் முறையிடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரகப் பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இத்திட்டம் மட்டுமே சட்டப்பூர்வ பாதுகாப்பு கொண்ட ஒரே வறுமை ஒழிப்பு திட்டமாகும்.

18வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொருவருக்கும் இத்திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெறவும் திறன்சாரா வேலை பெறவும் உரிமை உண்டு. கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நலிவுற்ற பிரிவினருக்கான தனிநபர் பணிகளை அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது.

இத்திட்ட தொழிலாளர்களின் வேலைக்கான தேவை, வருகைப்பதிவேடு, ஊதிய பட்டியல் உருவாக்கம், நிதி விடுவிக்கும் ஆணை போன்றவை அனைத்தும் இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் தொழிலாளர்கள் வேலை செய்து முடித்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கான ஊதியம் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இத்திட்ட செயல்பாட்டினை ஆய்வு செய்யும் பொருட்டு ஊராட்சி அளவிலான பிரதிநிதிகளை கொண்டு சமூக தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதில் சுட்டிகாட்டப்படும் குறைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைதீர் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு குறைகள் அவ்வப்போது களையப்பட்டு வருகின்றன. எனவே, மேற்கண்டவாறு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் வெளிப்படை தன்மையுடன் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news