Search

ஆண்களை விட பெண்களுக்கு அதிக உறக்கம் தேவை : ஏன் தெரியுமா..?

 மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஆரோக்கியமான உறக்கம் என்பது அவசியமான ஒன்று. தினசரி இரவில் போதுமான அளவு உறங்கினால் தான் அடுத்த நாள் வேலைகளை செய்வதற்கு உடல் தன்னை புதுப்பித்துக் கொள்ள முடியும். மேலும் போதுமான அளவு உறங்கினால் மட்டுமே உடல் மற்றும் மனம் இரண்டுமே ஆரோக்கியமானதாக இருக்கும். சில சமயங்களில் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் உறங்குவதில் பிரச்சனை ஏற்படும் போது அவை உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்க கூடும்.

வளர்ந்த ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 7 – 9 மணி நேரம் வரையிலான உறக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் வயது, பாலினம், வாழ்க்கைமுறை போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து இந்த நேரம் மாறுபடலாம். பெண்களைப் பொறுத்தவரையில் மாதவிலக்கு காலம், பருவமடைதல், கர்ப்பம் தரித்தல் போன்ற பல்வேறு காரணிகளை பொருத்து அவர்கள் உறங்கும் நேரத்தில் மாற்றங்கள் இருக்கலாம்.

இதில் முக்கியமாக ஆண் பெண் என இரு பாலினத்தவருக்குமே அவரவர் உறங்கும் நேரத்தில் மாற்றங்கள் இருக்கின்றன. முக்கியமாக இன்சோம்னியா எனப்படும் உறக்கமின்மை பிரச்சனையானது ஆண்களை விட பெண்களை அதிக அளவு பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத்தவிர ரெஸ்ட்லஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் மற்றும் அப்ஸ்ட்ராக்டிவ் ஸ்லீப் அப்னியா போன்ற நோய்களும் பெண்களை அதிக அளவு பாதிக்கிறது.

பருவமடைந்த பின் தான் ஆண் மற்றும் பெண்களுக்கு உறங்கும் கால அட்டவணையில் அதிக அளவு மாறுதல்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிடைத்துள்ள தரவுகளின் படி கர்ப்பமாக இருக்கும் பெண்களில் 30 சதவீதம் பேர் இரவில் சரிவர தூங்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்கள். இதுவே பிரசவத்திற்கு பின் 45 சதவீத பெண்கள் சரிவர தூங்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்கள். இதைத் தவிர மெனோபாஸ் காலத்தை கடந்த பெண்களில் 40 சதவீதம் பேர் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். மெனோபாஸ் காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்களின் 45 சதவீதம் பேரும், பருவமடைந்த பெண்களில் 41% பேரும் உறக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவே ஆண்களைப் பொறுத்தவரை உறங்கும் போது ஏற்படும் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், மேலும் கிளெயின்-லெவின் சிண்ட்ரோம் ஆகிய நோய்களால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இரவில் சரியாக தூங்காமல் இருக்கும் பெண்களில் பலரும், அதனை ஈடு செய்ய பகல் நேரங்களில் அதிக அளவு தூங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனால் உடல் சோர்வு, வாகனம் ஓட்டுவதில் பிரச்சனை மற்றும் அதிக அளவு காபி உட்கொள்ள விரும்புவது போன்ற பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படிப்பட்ட பெண்கள் அனைவருமே இன்சோமனியா நோய் அல்லது வேறுபல உறக்கம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

இந்த சம்மருக்கு 'ஏர் கூலர்' வாங்க போறீங்களா..? மொதல்ல இந்த 10 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க..!

 நாட்டில் கோடைகாலம் ஆரம்பமானதும் கூலர்ஸ் மற்றும் ஏ.சிகளின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால், கடைகள் பல ஆபர்களை அறிவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கூலர்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இருப்பினும், சரியான கூலரை எப்படி பார்த்து வாங்குவது என்பது பலருக்கு இன்னும் குழப்பமாக இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் கூலர்களை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்களை காண்போம்.

1. வாங்கவேண்டிய கூலர்களின் வகையைத் தீர்மானியுங்கள் :

ஒரு பயனுள்ள கூலிங் அம்சத்திற்கு சரியான வகை கூலர்களை தேர்ந்தெடுப்பது முக்கியம். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறைகளுக்கு, பெர்சனல் கூலர்களை தேர்வு செய்யவேண்டும். பெரிய அறைகளுக்கு, டெசர்ட் கூலர்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதாவது.

* 150 சதுர அடி முதல் 300 சதுர அடி வரை உள்ள அறையில் பெர்சனல் கூலர்களை வைக்கலாம்.

* அதுவே 300 சதுர அடிக்கு மேல் உள்ள அறையில் டெசர்ட் கூலர்களை வைக்கலாம்.

2. தண்ணீர் தொட்டியின் திறன்

ஏர் கூலர்களில் தண்ணீர் தொட்டி திறன் ஒரு முக்கிய காரணியாகும். கூலர்களின் அளவு எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ, அதே அளவு தொட்டியின் திறனும் இருக்க வேண்டும். பயனுள்ள கூலிங்கிற்கு அறை அளவை விட அதிக திறன் கொண்ட ஏர் கூலரை எப்போதும் தேர்வு செய்ய வேண்டும். அதாவது,

சிறிய அறைகள்: 15 லிட்டர் தொட்டியின் திறன்

நடுத்தர அளவிலான அறைகள்: 25 லிட்டர் தொட்டியின் திறன்

பெரிய அறைகள்: 40 லிட்டர் மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட ஏர் கூலரை தேர்வு செய்ய வேண்டும்.

3. கூலரை வைக்க வேண்டிய இடம்

உங்கள் அறைக்கு வெளியே அல்லது உங்கள் கொல்லைப்புறத்தில் அல்லது மொட்டை மாடியில் குளிரூட்டியை வைக்க விரும்பினால் டெசர்ட் கூலரை வாங்கலாம். உட்புற பயன்பாடுகளுக்கு, பெர்சனல் அல்லது டவர் கூலர்ஸ் மிகவும் பொருத்தமானவையாக இருக்கும்.

4. இடத்தின் காலநிலையை கருத்தில் கொள்ளுங்கள்

வறண்ட கால நிலைகளில் டெசர்ட் கூலர்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஈரப்பதமான பகுதிகளுக்கு, பெர்சனல் / டவர் கூலர்ஸ் பொதுவாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5. இரைச்சல் அளவை சரிபார்க்கவும்

சில கூலர்ஸ் மிகவும் சத்தமாக இருக்கும். எனவே, நீங்கள் கடையில் கூலர்களை வாங்குவதற்கு முன் அதன் இரைச்சல் அளவை சரிபார்க்க வேண்டியது அவசியம். மேலும் அதன் அளவை அதிகபட்ச விசிறி வேகத்தில் சரிபார்க்கவும்.

6. தானாக நிரப்பு செயல்பாட்டைப் பாருங்கள்

கூலர்சில் மீண்டும் மீண்டும் தண்ணீர் நிரப்புவது ஒரு சிக்கலான பணியாகும். எனவே ஆட்டோஃபில் செயல்பாட்டை வழங்கும் கூலர்ஸை தேர்வு செய்ய வேண்டும். அவை நிர்வகிக்க எளிதானவை மட்டுமல்ல, சிறந்த மற்றும் திறமையான குளிரூட்டலை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆட்டோ ஃபில் அம்சம் தொட்டியை முழுமையாக உலரவிடாமல் தடுக்கும். எனவே மோட்டார் சேதமடைவதைத் தடுக்க முடியும்.

7. கூலிங் பேட்களின் தரத்தை பார்க்க வேண்டும்

குளிரூட்டும் பேட்கள் கூலரின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். கூலர்களுக்கு பல்வேறு வகையான கூலிங் பேட்கள் உள்ளன. கம்பளி மரம், ஆஸ்பென் பட்டைகள் மற்றும் தேன்கூடு பட்டைகள் ஆகியவை மிகவும் பொதுவானவை. இதில் தேன்கூடு கூலிங் பேட்கள் மற்ற இரண்டையும் விட சிறந்தவை. ஏனெனில் அவை நீண்ட கால குளிரூட்டலை வழங்குகின்றன. மேலும் அவை பராமரிப்பிலும் எளிதாக இருக்கும்.

8. கூடுதல் ஐஸ் சேம்பர்

வேகமான கூலிங்கிற்கு, சில உற்பத்தியாளர்கள் கூலர்ஸ்களுக்கு ஒரு பிரத்யேக ஐஸ் சேம்பரை சேர்த்துள்ளனர். தொட்டியில் உள்ள தண்ணீரை விரைவாக குளிர்விக்க நீங்கள் அவற்றில் ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கலாம்.

9. மின் நுகர்வு

வழக்கமாக, நவீன கூலர்ஸ் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. அவை மின்வெட்டு ஏற்பட்டால் இன்வெர்ட்டர்களில் கூட இயக்க முடியும்.

10. ரிமோட் கண்ட்ரோல், ஆன்டி கொசு வடிகட்டி போன்ற கூடுதல் அம்சங்கள்:

இப்போதெல்லாம் கூலர்ஸ் ரிமோட் கண்ட்ரோல், ஆன்டி கொசு, டஸ்ட் ஃபில்ட்ர் போன்ற கூடுதல் அம்சங்களை வழங்குகின்றன.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்...!

 நமது உடலின் முக்கிய உள் உறுப்பான கல்லீரல் செரிமான பாதையிலிருந்து வரும் ரத்தத்தை உடலின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பும் முன்னர் இரத்தத்தை வடிகட்டும் வேலையை செய்கிறது. இது இரசாயன பொருட்களின் நச்சுதன்மையை நீக்கி மருந்துகளை வளர்சிதைமாற்றத்திற்கு உட்படுத்துகிறது. மேலும் தசைகள் கட்டமைத்தல், தொற்று நோய்களை எதிர்த்து போராடும் மற்றும் இரத்தம் உறைதலுக்கு தேவையான புரதங்களை உற்பத்தி செய்யும் பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன.

ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ் என்பது மனித உடலின் கல்லீரல் திசுக்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கும் போது ஏற்படும் ஒரு நோயாகும். இது உடலின் ஆரோக்கியமான செல்களைத் தாக்கி, தொடர்ச்சியான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இந்த நோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உறுப்பு நிரந்தரமாக சேதமடைந்து கல்லீரல் புற்றுநோய் அல்லது செயலிழப்புக்கு வழிவகுக்கும். ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்களுக்குத் தேவையான எச்சரிக்கை அறிகுறிகள், வகைகள் மற்றும் சிகிச்சையைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்...

ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்களின் வகைகள்:

”ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ்” இந்த நோய் சிரோசிஸ் என்றும் அழைக்கப்படும். இரண்டு வகையான ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ் உள்ளன. இதில் வகை 1 பெண்களை அதிகமாக பாதிக்கும் நோய்களாகும். 2ம் வகை குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. அவை முதன்மை பிலியரி கோலாங்கிடிஸ் (பிபிசி) மற்றும் முதன்மை ஸ்க்லரோசிங் கோலாங்கிடிஸ் (PSC) ஆகியன.

முதன்மை பிலியரி கோலாங்கிடிஸ் (பிபிசி) கல்லீரலின் செயல்பாட்டைத் தடுக்கிறது. கல்லீரலில் உள்ள பித்த நாளம் தொடர்பான பிரச்சனையாகும். இது ஒரு நாள்பட்ட அழற்சியாகும். இந்த வகை காலப்போக்கில் வடுக்கள் மற்றும் உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுக்கும். இந்த நோய் கல்லீரலின் பித்த நாளத்தில் சேதத்தை ஏற்படுத்துகிறது, உணவு செரிமானத்திற்கு தேவையான பித்த சாற்றை எடுத்துச் செல்லும் சிறிய குழாய்கள் விரைவில் வீக்கமடைந்து இறுதியில் நிரந்தரமாக சேதமடைகின்றன.

அறிகுறிகள்:

  • உடல் சோர்வு
  • வயிற்று அசௌகரியம்
  • மஞ்சள் காமாலை
  • கல்லீரல் வீக்கம்
  • தோல் தடிப்புகள்
  • மூட்டு வலிகள்
  • கால்கள், கணுக்கால் வீக்கம் (எடிமா)
  • அதிக கொழுப்புச்ச்த்து
  • எடை இழப்பு

ஆட்டோ இம்யூன் கல்லீரலுக்கான சிகிச்சை ஒவ்வொரு நோயாளிகளுக்கும் வேறுபடலாம். எனவே நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் அல்லது கார்டிகோஸ்டிராய்டு மருந்துகள் கல்லீரல் அதிக பாதிக்கப்படாமல் பாதுகாக்கும். ஆனால் நோய் தாக்கம் முற்றி உறுப்பின் செயல்பாட்டை சீர்குலைக்கும் போது, ​​மருத்துவர்களின் அறிவுரையின்படி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

நல்ல கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்..? அதிகமானால் குறைக்கும் வழிகள் என்ன..?

 நல்ல இதய ஆரோக்கியத்தை பேணுவது என்பது தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கை முறை மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகள் இதய ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழத்துகினற்ன. ஆரோக்கியமான செல்களை உருவாக்க நம் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவை. ஆனால் உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தால் அது இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்க செய்கிறது.

அதிக கொலஸ்ட்ரால் மூலம் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகள் உருவாக்கலாம். இறுதியில் கொழுப்பு அதாவது கொலஸ்ட்ரால் டெப்பாசிட்கள் வளர்ந்து, தமனிகள் வழியே போதுமான ரத்தம் பாயும் செலயல்முறைக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் கொலஸ்ட்ரால் டெப்பாசிட்கள் திடீரென உடைந்து மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தும் ஒரு க்ளாட்டை உருவாக்கலாம்.

கொலஸ்ட்ரால் என்பது நம் ரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். இது உடலில் பல முக்கிய பாத்திரங்களை வகிக்கிறது. இவற்றில் ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் D ஆகியவை அடங்கும். நாம் உண்ணும் இறைச்சி மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் கொலஸ்ட்ரால் காணப்பட்டாலும் இது நம் கல்லீரலாலும் உருவாக்கப்படுகிறது. நம் உடல் சரியாக வேலை செய்ய போதுமான அளவு கொலஸ்ட்ரால் தேவை தான். ஆனால் நம் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கொஞ்சமாக இல்லாமல் அல்லது போதுமானதை விட அதிகமாக இருந்தால் கரோனரி தமனி நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகம்.

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது பரம்பரையாக கூட வரலாம் என்றாலும் இது பெரும்பாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகளின் விளைவாக இருப்பதை நிபுணர்கள் சுட்டி காட்டுகின்றனர். ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சில நேரங்களில் மருந்துகள் அதிக கொழுப்பைக் குறைக்க உதவும். நம் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை உணர்த்தும் வெளிப்படையான அறிகுறிகள் என்று எதுவும் இல்லை. பெரும்பாலும் ரத்தப் பரிசோதனை மூலமே அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறதா என்பதை கண்டறிய முடிகிறது.

கொலஸ்ட்ரால் அளவுகளால் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய 9 -11 வயதிற்குள் முதல் முறை கொலஸ்ட்ரால் ஸ்கிரீனிங் செய்வது என்பது நேஷ்னல் ஹார்ட், லங் மற்றும் பிளட் இன்ஸ்ட்டிடீயூட்டின் (NHLBI) பரிந்துரை. அதன் பிறகு ஒவ்வொரு 3 - 5 வருடங்களுக்கு ஒருமுறை உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவுகளை டெஸ்ட் செய்து கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது. அதே போல 45 - 65 வயதுடைய ஆண்களும், 55 - 65 வயது வரையிலான பெண்களும் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டு தோறும் கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என NHLBI பரிந்துரைக்கிறது.

வகை:

பொதுவாக கொலஸ்ட்ரால் ரத்தத்தின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. புரதங்கள் மற்றும் கொலஸ்ட்ராலின் இந்த கலவை லிப்போபுரோட்டீன் (lipoprotein) என்று அழைக்கப்படுகிறது. லிப்போபுரோட்டீன் எதை கொண்டு செல்கிறது என்பதைப் பொறுத்து 2 வகையான கொலஸ்ட்ரால்கள் உள்ளன. அவை:

குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL -Low-density lipoprotein):

இந்த LDL "கெட்ட" கொலஸ்ட்ரால் ஆகும். இது நம் உடல் முழுவதும் கொலஸ்ட்ரால் துகள்களை கடத்துகிறது. எல்டிஎல் கொலஸ்ட்ரால் தமனிகளில் சுவர்களை கட்டமைத்து, அவற்றை கடினமாகவும் குறுகலாகவும் ஆக்குகிறது. அதிக அளவு LDLகொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL - High-density lipoprotein):

இந்த HDL, "நல்ல" கொலஸ்ட்ரால் ஆகும். உடலில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை உங்கள் கல்லீரலுக்கு எடுத்து செல்கிறது. அதாவது HDL கொலஸ்ட்ராலை உறிஞ்சி கல்லீரலுக்கு மீண்டும் கொண்டு செல்கிறது. கல்லீரல் அதை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. உடலில் அதிக அளவு HDL கொலஸ்ட்ரால் இருப்பது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. ஒட்டுமொத்தமாக குறைந்த HDL கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு அதிக HDL அளவு உள்ளவர்களை விட இதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம்.

பொதுவாக ஒரு ஆணின் கொலஸ்ட்ரால் அளவு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது, மேலும் பெண்ணின் கொலஸ்ட்ரால் அளவு மாதவிடாய் நின்ற பிறகு அதிகரிக்கிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் கூற்றின்படி, கீழே இருக்கும் அளவீடுகளின் படி வயதுக்கு ஏற்ப ஆரோக்கியமான கொழுப்பின் அளவைக் காட்டுகிறது. ஒரு டெசிலிட்டருக்கு (mg/dl) மில்லிகிராமில் கொலஸ்ட்ராலை மருத்துவர்கள் அளவிடுகின்றனர்.

71,420 Chubby Man Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock | Older chubby man, Young chubby man, Chubby man cut out

HDL மற்றும் LDL-க்கான இயல்பான ரேஞ்ச் என்ன?

ஒரு சிறந்த LDL கொலஸ்ட்ரால் அளவு 70 mg/dl-க்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும் ஒரு பெண்ணின் HDL கொலஸ்ட்ரால் அளவு 50 mg/dl க்கு அருகில் இருக்க வேண்டும். ட்ரைகிளிசரைடுகள் 150 mg/dl-க்கும் குறைவாக இருக்க வேண்டும். மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mg/dl-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

குறிப்பாக HDL கொலஸ்ட்ராலின் உகந்த அளவுகள் என்ன?

60 mg/dl- இருப்பது சிறந்தது. ஆண்களுக்கு HDL கொலஸ்ட்ராலின் அளவு 40 mg/dl- அல்லது அதற்கும் அதிகம் இருப்பது மற்றும் பெண்களுக்கு 50 mg/dl- அல்லது அதற்கு மேற்பட்டடு இருப்பது ஏற்று கொள்ளத்தக்கது. ஆண்களுக்கு 40 mg/dl-க்கும் கீழ் இருப்பதும், பெண்களுக்கு HDL கொலஸ்ட்ராலின் அளவு 50-க்கும் கீழ் இருப்பதும் குறைவான HDL கொலஸ்ட்ரால் அளவாக நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்க வேண்டிய கொலஸ்ட்ராலின் அளவு வழிகாட்டுதல்கள் ஒரே மாதிரியாக இருக்கும், இருப்பினும் மேலே பார்த்தபடி, HDL கொலஸ்ட்ரால் என்று வரும் போது அவை வேறுபடுகின்றன. ஆண்களை விட பெண்கள் அதிக அளவு HDL கொலஸ்ட்ராலை உடலில் தக்க வைப்பதை இலக்காக கொள்ள வேண்டும்.

குழந்தைகளில் கொலஸ்ட்ரால் அளவு..

நீரிழிவு, உடல் பருமன் அல்லது அதிக கொலஸ்ட்ரால் இருக்கும் குடும்ப வரலாறு போன்ற அதிக ஆபத்து காரணிகளை கொண்ட குழந்தைகள் 2 - 8 வயது வரையிலும், மீண்டும் 12 -16 வயது வரையிலும் கொலஸ்ட்ரால் டெஸ்ட்களுக்கு உட்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு இருக்க வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட HDL கொலஸ்ட்ரால் அளவு என்பது 45 mg/dl-க்கும் மேல் ஆகும். குழந்தைகளில் 40 mg/dl - 45 mg/dl அளவு HDL கொலஸ்ட்ரால் இருப்பது பார்டர் லைன் ஆகும். 40 mg/dl-க்கும் குறைந்த HDL கொலஸ்ட்ரால் அளவை கொண்டிருப்பது குழந்தைகளுக்கு மிகவும் குறைவான HDL கொலஸ்ட்ரால் இருப்பதை குறிக்கிறது.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ’வைட்டமின் சி ’ : எந்தெந்த உணவுகளில் நிறைவாக உள்ளது..?

 வைட்டமின் சி நமது உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இந்த வைட்டமின் எளிதில் நீரில் கரையக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களாகவும் செயல்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாடு, சரும பிரச்சனைகள், கண் சார்ந்த நோய்களுக்கு வைட்டமின் சி குறைபாடு காரணமாக அமைகிறது.

வைட்டமின் டி போலல்லாமல், மனித உடலால் வைட்டமின் சி உற்பத்தி செய்யவோ அல்லது சேமிக்கவோ முடியாது, அதனால்தான் அதை நல்ல அளவில் உட்கொள்வது அவசியம். இந்த ஊட்டச்சத்து சிறிய இரத்த நாளங்கள், எலும்புகள், பற்கள் மற்றும் கொலாஜன் திசுக்களுக்கும் அவசியம். உடலின் இயல்பான செயல்பாட்டிற்காகவும், குறைபாட்டின் அபாயத்தைத் தவிர்க்கவும், குறைந்தபட்சம் 90mg வைட்டமின் சியை எடுத்துக்கொள்ள வேண்டுமென ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். 100 கிராம் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை எடுத்துக்கொண்டால் அதன் மூலமாக உடலுக்கு 53.2 மில்லி கிராம் முதல் 53 மில்லி கிராம் வரையிலான வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. அதேசமயம் இந்த இரண்டு பழங்களைத் தவிர வைட்டமின் சி சத்து நிறைந்த பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வைட்டமின் சி பற்றாக்குறைய தடுத்து, உடலுக்கு அதிக அளவிலான வைட்டமின் சியை தரக்கூடிய பழங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்..

1. அன்னாச்சி பழம் : அன்னாச்சி பழத்தை பொறுத்தவரை சிலர் ஜூஸ் ஆக குடிப்பார்கள், சிலர் அதனை துண்டாக்கி சாப்பிடுவார்கள், சில உணவு பிரியர்களோ பீட்சாவில் கூட சேர்த்து சாப்பிடுகிறார்கள். இதனை நீங்கள் எப்படி சாப்பிடுகிறீர்கள் என்ற கவலையை ஒதுக்கிவைத்துவிட்டு, அன்னாச்சியை உணவில் சேர்த்துக்கொள்ளவது கட்டாயம். ஏனென்றால் வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களில் அன்னாச்சியும் ஒன்று, இதில் 79 மில்லி கிராம் அளவுக்கும் அதிகமாக வைட்டமின் சி சத்து உள்ளது. கூடுதலாக இது ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பதோடு, எலும்புகளுக்கும் வலிமை அளிக்கிறது.

2. பப்பாளி : மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பழம். பப்பாளி, நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக இருந்தாலும், ஒரு கப் பப்பாளி 88 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. எனவே இதை உணவில் சேர்த்துக்கொள்வது அதிக அளவிலான வைட்டமின் சி கிடைக்க உதவியாக இருக்கும்.

3. கொய்யா : கொய்யாவில் ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட 4 மடங்கு அதிகமான வைட்டமின் சி உள்ளது. ஒரு கொய்யா பழத்தில் 126 மில்லி கிராம் அளவிற்கு வைட்டமின் சி சத்து உள்ளது. இதை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கிடைப்பதோடு, நீரழிவு நோய் தடுப்பு, இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, கண்பார்வை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. கொய்யாவில் மாங்கனீசும் நிறைந்துள்ளது, இது நாம் உண்ணும் உணவில் இருந்து மற்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது. கொய்யா ஒரு குறைந்த கலோரி கொண்ட பழம் என்பதால் அனைத்து வயதினரும் எடுத்துக்கொள்ள உகந்தது. மேலும் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட், ஃபோலிக் ஆசிட், வைட்டபின் பி-9 உள்ளிட்ட சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன.

4. கிவி : அடர்-பச்சை நிறத்தில் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுள்ள கிவி பழத்தில் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு வைட்டமின் சி சத்து நிறைத்துள்ளது. ஒரு துண்டு கிவி பழத்தில் 273 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. கிவி பழத்தின் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி வைட்டமின் ஏ, நார்ச்சத்து, கால்சியம் உள்ளது. மேலும் இந்த பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகள் மற்றும் டயட் இருப்பவர்கள் உணவு பட்டியலியல் இடம் பிடிக்கின்றன.

5. குடைமிளகாய் : சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிற குடைமிளகாயில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நடுத்தர அளவிலான சிவப்பு நிற குடைமிளாகயில் 152 மில்லி கிராமும், பச்சை நிற குடைமிளகாயில் 96 மில்லி கிராமும் மற்றும் மஞ்சள் நிற குடைமிளகாயில் 218 மில்லிகிராமும் வைட்டமின் சி உள்ளது. உங்களது கண்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவுகிறது. உங்கள் உடலில் வைட்டமின் சி ஊட்டச்சத்தின் அளவை அதிகரித்து நுரையீரல் புற்றுநோய் ஏற்படாமல் ஏற்படாமல் தடுத்திட குடைமிளகாய் உதவுகிறது.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

உஷார்.! செல்ஃபோனை எந்த பாக்கெட்டில் வைப்பது நல்லது? இதயப்பிரச்னை, ஆண்மைக்குறைவு சிக்கலை உண்டாக்கும் மொபைல்!!

 இன்றைக்கு ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தாத நபர்களை உங்கள் கண் எதிரில் நீங்கள் கண்டுவிட்டால் அது ஆச்சரியம் தான். அதுவும் கொரோனா ஊரடங்கு முடக்க காலத்தில் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க தொடங்கியதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கூட பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் வாங்கி கொடுக்கப்பட்டன.

இளையவர்கள் வெறுமனே கேம் விளையாடுவதாக பெரியவர்கள் சாட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்லைன் கல்வி, வேலைக்கான தகவல் தொடர்பு, இண்டர்நெட் இணைப்பு, வீடியோ காலிங் வசதி, பேங்கிங் சேவைகள் நம் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாக ஸ்மார்ட்ஃபோன் மாறி விட்டது. இந்த தேவைகள் எதுவுமே இல்லை என்றாலும், அடிப்படை கல்வியறிவு கொண்ட எல்லோரிடமும் சாதாரண ஃபோன் ஒன்றாவது இருக்கிறது.

இதய பாதிப்பு ஏற்படுமா?
எல்லாம் சரி தான், ஃபோனை நாம் எங்கே வைத்துக் கொள்கிறோம். சட்டைப் பையில் அல்லது ஃபேண்ட் பையில். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஆனால், சட்டப்பையில் வைத்தால் இதய நலன் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் நமக்கு உண்டு. அதுபோல ஃபேண்ட் பாக்கெட்டில் வைத்தால் கருத்தரிக்கும் திறன் பாதிக்கலாம் என்ற அச்சம் உண்டு.
சொல்லப்போனால் இரண்டுமே சரி தான். அப்படியென்றால் ஃபோனை எங்கே வைத்துக் கொள்வது, இதன் விளைவுகள் என்ன என்பதை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

வீட்டிலும் ஃபோனும், கையுமாக
ஃபோனில் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட வேலை நிமித்தமான தேவைகள் முடிந்து விட்டாலும் கூட, அதை எப்போதும் கையில் பிடித்துக் கொண்டு எதையாவது ஸ்க்ரோல் செய்வது தவிர்க்க இயலாத பழக்கமாக மாறி விட்டது. முடிந்த வரை சமூக வலைதளங்களை லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது நல்லது. வெளியிடங்களுக்கு செல்லும்போது மட்டும் செல்ஃபோனில் உபயோகிக்கலாம்.

கழிவறை வரை வந்து செல்ஃபோன் பயன்பாடு
இப்போதெல்லாம் கழிவறைக்கு செல்பவர்கள் கையில் ஃபோன் இல்லாமல் செல்வதில்லை. அங்கே அமர்ந்து கொண்டு ஸ்டேட்டஸ் பார்ப்பது அல்லது வயர்லெஸ் ஹெட்ஃபோனுடன் இணைத்துவிட்டு பேசிக் கொண்டிருப்பது போன்றவை தொடர்கிறது. ஆனால், இவ்வாறு வயர்லெஸ் கருவியுடன் இணைப்பதால் கதிர்வீச்சு 2 முதல் 7 மடங்கு கூடுதலாக இருக்குமாம். அதுவே புற்றுநோயை வரவைக்கும் என்று எச்சரிக்கின்றனர்.

ஃபேண்ட் பாக்கெட்டில் வைப்பதால்....
செல்ஃபோனை ஃபேண்ட் பாக்கெட்டில் வைப்பதால் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படும் என்பது மட்டுமல்லாமல், கதிர்வீச்சானது எலும்புகளை வலுவிழக்கச் செய்யுமாம். அதிலும் இடுப்பு எலும்புகள் வலுவிழப்பதை தவிர்க்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எங்குதான் வைப்பது?
செல்ஃபோன் பயன்பாட்டை தவிர்க்கவும் முடியாது, அதை பாக்கெட்டுகளிலும் வைக்க கூடாது என்றால், பிறகு அதை எங்குதான் வைத்துக் கொள்வது என்று சலிப்பு தட்டுகிறதா? உங்கள் பின் பாக்கெட்டில் இதை வைத்துக் கொள்ளலாம். ஆனால், மறந்தும்கூட அப்படியே உட்கார்ந்து விட வேண்டாம்.
கார்களில் பயணிக்கும்போது முன்பக்க டிராயரில் வைத்து விடலாம். அலுவலகத்திற்கு பயணிக்கும்போது நம் கையில் உள்ள பைகளில் வைத்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்படலாம்.. மருத்துவர் சொல்லும் ஆலோசனை..!

 நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic retinopathy) என்பது நீரிழிவினால் வரும் சிக்கல்களினால் உண்டான விழித்திரையைப் பாதிக்கும் விழித்திரை நோயைக் குறிக்கும். இந்நோய், முடிவில் குருட்டுத் தன்மையை உருவாக்கும் தன்மையுள்ளது. இந்த நிலை முக்கியமாக உயர் இரத்த சர்க்கரை அளவு விழித்திரைக்கு இரத்தத்தை வழங்கும் சிறிய இரத்த நாளங்களின் வலையமைப்பை சேதப்படுத்துவதால் ஏற்படுகிறது.

நீரிழிவு விழித்திரை நோய் பொதுவாக ஒரு லேசான நோயாகத் தொடங்கும் என்கிறார், குண்டூர் சங்கரா கண் மருத்துவமனையை சேர்ந்த கண் மருத்துவருமான டாக்டர் ஆர். மது குமார். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமுள்ளவர். பல ஆண்டு காலமாக சங்கரா கண் மருத்துவமனையுடன் தொடர்புடையவர். அவர் விட்ரோரெட்டினல் சேவைகளில் நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் இன்று வரை சுமார் 20 ஆயிரம் வைட்ரியோரெட்டினல் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். இந்நிலையில் நீரிழிவு விழித்திரை நோய் யாருக்கெல்லாம் வரக்கூடும், அதன் அறிகுறிகள் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்பது பற்றி டாக்டர் ஆர். மது குமார் அளித்துள்ள விளக்கங்களை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நீரிழிவு விழித்திரை நோயால் பாதிக்கப்படுபவர் யார் ? : 

Type 1 அல்லது Type 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் நீரிழிவு விழித்திரை நோயால் அதிகம் பாதிக்கப்படுவர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை இயல்பான நிலையில் இருக்கும் சிலருக்கும் இந்த நோய் ஏற்படலாம். எனவே, அனைத்து சர்க்கரை நோயாளிகளும் வருடத்திற்கு ஒருமுறை கண்களைப் பரிசோதிக்க வேண்டும்.

நீரிழிவு விழித்திரை நோயால் சில அறிகுறிகள்  : 

இந்த நோயின் ஆரம்ப நிலையில் எந்தவித அறிகுறியும் இருக்காது. சர்க்கரை நோயாளிகள், கண்களைப் பரிசோதிக்கும்போதுதான் கண்டறிய முடியும். ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் பின்வரும் சில அறிகுறிகளை உணர முடியும். அவை, படிப்படியான பார்வையிழப்பு, திடீர் பார்வையிழப்பு, மங்கலான பார்வை, கண் வலி அல்லது கண் சிவப்பாக இருத்தல், இந்த அறிகுறிகள் தோன்றினால் பொதுவான கண் குறைபாடாகக் கூட இருக்கலாம். விழித்திரை பாதிக்கப்படாமலும் இருக்கலாம். கண் மருத்துவரை உடனடியாகச் சந்திக்கவும். முறையான இடைவேளைகளில் கண்களைப் பரிசோதித்துக் கொள்வதால் பார்வையைப் பாதுகாக்க முடியும்.முறையான இடைவேளைகளில் நீங்கள் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்பவராக இருந்தாலும் உங்கள் பார்வையில் ஏதேனும் வித்தியாசத்தை உணர்ந்தால் அடுத்த சந்திப்பு நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக கண் மருத்துவரிடம் செல்லவும்.

நீரிழிவு விழித்திரை நோயால் ஏற்படும் பிற கடுமையான பாதிப்புகள்: நீரிழிவு மாகுலர் எடிமா: 

விழித்திரையின் இரத்த நாளங்கள் பலவீனமாக இருக்கும்போது, திரவம் வடியத் தொடங்கும். இந்த திரவம், விழித்திரையில் படிந்து வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, பார்வையிழப்பு ஏற்படும்.

நியோவாஸ்குலர் கிளௌகோமா : 

இது கண்ணின் முன் பகுதி, கார்னியா மற்றும் லென்ஸுக்கு இடையில், அக்வஸ் ஹ்யூமர் எனப்படும் திரவத்தால் நிரப்பப்படுகிறது. இந்த திரவம் தொடர்ந்து வடிகட்டப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் நிலையான சமநிலையை பராமரிக்கிறது. டிராபெகுலர் மெஷ்வொர்க் அல்லது யுவியோஸ்க்லரல் வெளியேற்றம் மூலம் அக்வஸ் ஹூமர் தொடர்ந்து வெளியேறுகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் அடைப்பு கண் அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யலாம், இதன் விளைவாக பார்வை நரம்பு சேதமடைகிறது, இது இரண்டாம் நிலை கிளௌகோமா என வகைப்படுத்தலாம். இந்த நிலை கருவிழியின் மேல் புதிய நாளங்கள் உருவாகும்.

விழித்திரைப் பற்றின்மை : 

விழித்திரைக் கண்ணீருக்குக் கீழே திரவம் இடம்பெயர்ந்து, கண் சுவரின் பின்புறத்திலிருந்து விழித்திரையைத் தூக்கும்போது விழித்திரைப் பற்றின்மை ஏற்படுகிறது. கண் சுவரில் விழித்திரை இணைக்கப்படாத இடங்களில் பார்வை இழப்பு ஏற்படுகிறது. எனவே, விழித்திரைப் பற்றின்மை பார்வையை மீட்டெடுக்க அவசர அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கடுமையான சிக்கல்களும் நீரிழிவு ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்ட கண்ணில் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும்.

தொண்டை வலி குணமாக இந்த பாட்டி வைத்தியம் ட்ரை பண்ணுங்க..!

 தொண்டை வலி என்பது அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய வலியாக தான் இருக்கிறது. பொதுவாக பலருக்கு சளி பிடிக்கும் நேரத்தில் தொண்டை வலி வரக்கூடும். சுத்தமான தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளாததால் அதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் தொண்டை வலி வரக்கூடும். தொண்டை வலி உள்ளவர்களால் பல நேரங்களில் எச்சிலை கூட விழுங்க முடிவதில்லை. தொண்டை வலி வர பல காரணங்கள் இருந்தாலும் அதை எளிதில் குணமடைய செய்யும் பாட்டி வைத்தியம் குறித்த சில டிப்ஸ்-ஐ இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

ஒரு லவங்க பட்டை , 4 ஏலக்காய், ஒரு டீ ஸ்பூன் சோம்பு, 25 கிராம் தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், புதினா இலை 5 , இவை அனைத்தையும் 4 டம்ளர் நீரில் கொதிக்க விடமும். 4 டம்ளர் நீர் 2 டம்ளர் நீராக மாறும் வரை தண்ணீர் நன்கு கொதிக்க வேண்டும். பிறகு அந்த கொதித்த நீரை ஆற வைத்து காலை ஒரு கிளாஸ் இரவு ஒரு கிளாஸ் என பருகி வேண்டும். இப்படி செய்வதன் மூலம் 2 அல்லது 3 நாட்களில் தொண்டை வலி நீங்கும். தொண்டையில் ஏதேனும் புண் இருந்தாலும் சரியாகும்.

2 டம்ளர் நீரில் திரிபலா சூரணம் ( கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவை மூன்றும் சேர்ந்தது ) சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். சிறிது நேரம் கொதித்த பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு கொதித்த நீரை சிறிது ஆறவிட்டு அதை தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டை வலி நீங்கும். குறிப்பு: திரிபலா சூரணம் என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.

தொண்டை வலி குணமாக, வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அதோடு சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் தொண்டை புண்கள் ஆறும், தொண்டை வலி நீங்கும்.

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்து நன்கு போடி செய்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை வலி சரியாகும். மேலும் இதில் சிறிதளவு வசம்பை எடுத்துக்கொண்டு அதோடு சிறிதளவு மிளகு சேர்த்து மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால் தொண்டை வலி குறையும்.

தொண்டை வலி போக, துளசி இல்லை மற்றும் கற்பூரவள்ளி இலையை மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கலாம். இதன் மூலம் தொண்டை வலி குணமாகும்.

வெது வெதுப்பான நீரில் உப்பு சேர்த்து தொண்டையில் படும் படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி நிவாரணம் அடையும்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

செவ்வாழை சாப்பிட சரியான நேரம் எது..? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

 மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை. தவிர, ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருள்கள் இருக்கும். அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழமும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினால் மிகையாகாது.

செவ்வாழை சாப்பிடுவதற்கான சரியான நேரம் என்ன?
செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.

செவ்வாழையின் பயன்கள் :  நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

மாலைக்கண் நோய் கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

பல் வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

முந்தைய தினம் சாப்பிட்ட சில உணவுகளால் மறுநாள் காலையில் மலம் வெளியேற முடியாமல் இருக்கும். காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip


எச்சரிக்கை..! அதிகமாக கொட்டாவி விட்டால் உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கலாம்..

 கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து வாய், மூக்கு வழியாக ஒரே நேரத்தில் சுவாசிக்கும் ஒரு நிகழ்வு. நம்மில் பலர் அடிக்கடி கொட்டாவி விடுவோம். அது இயல்பானது என நினைத்து கொண்டிருந்தோம். ஆனால், அடிக்கடி கொட்டாவி வருவது ஒரு சில நோயின் அறிகுறி என்று மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது. என்ன நம்ப முடியவில்லையா?. உடல் சோர்வால் பெரும்பாலும் வரும் இந்த கொட்டாவியின் பின் உள்ள மற்ற காரணங்கள் குறித்து இங்கு காணலாம்.

கல்லீரல் பிரச்சனை : கல்லீரல் அழற்சி மற்றும் பாதிப்பு போன்ற காரணங்களால் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, நீண்ட நாட்களாக அடிக்கடி கொட்டாவி வந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நல்லது.

மல்டிபிள் கெலொரிசிஸ் : உடல் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாட்டினை நாம் மல்டிபிள் கொலோரிசிஸ் (Multiple sclerosis) என அழைக்கிறோம். இந்த பிரச்சனை உள்ள போது, அடிக்கடி கொட்டாவி வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூளை தொற்று : மூளை பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் அழற்சி, மூளையின் செயல்பாட்டை பாதிப்பதோடு, கொட்டாவி பிரச்சனையையும் உண்டாக்குகிறது. எனவே, அடிக்கடி கொட்டாவி வரும் நிலையில் மருத்துவரை சந்திப்பது நல்லது.

வலிப்பு பிரச்சனை : வலிப்பு எனப்படுவது ஒரு வகையில் மூளை ஆரோக்கியத்துடன் தொடர்புடைய ஒரு நோய் ஒரு பிரச்சனையாகும். அந்த வகையில் கை, கால் வலிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த கொட்டாவி பிரச்சனை சற்று அதிகமாகவே உள்ளது.

மருந்து உட்கொள்ளுதல் : அளவுக்கு அதிகமாக நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், குறிப்பாக தூக்கத்திற்கு நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் நரம்பு மற்றும் தசைகளின் தளர்வுக்கு வழிவகுத்து, கொட்டாவியை தூண்டுகிறது.

உடல் சோர்வு : அனைவரும் அறிந்த கொட்டாவியின் பொதுவான காரணம் ஆகும். உடல் சோர்வு மற்றும் களைப்பின் போது உடலில் ஏற்படும் ஆற்றல் இழப்பு, அதிக கொட்டாவிக்கு வழிவகுக்கிறது.

தூக்கமின்மை : வேலைபளு அல்லது வேறு சில காரணங்களால் நீங்கள் உங்கள் தூக்கத்தை தள்ளிப்போடுவது உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் தாக்கமின்மை கொட்டாவி வருவதற்கு காரணமாகிறது.

ஆம்! கொட்டாவி பற்றிய சிந்தனைகளும் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வர காரணமாக இருக்கலாம். அதேபோல, உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் அடிக்கடி கொட்டாவி விட்டால், உங்களுக்கும் அடிக்கடி கொட்டாவி வரும். ஏன், இந்த செய்தியை படித்த ஒரு சில நிமிடங்களுக்குள் நீங்கள் பல முறை கொட்டாவி விட்டிருக்கலாம்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip