Search

பெண்கள்... திருமணத்திற்கு பிறகும் வேலை தேடலாம்..! வாழ்க்கையில் ஜெயிக்கலாம்...!

 திருமணமான பெண்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறார், பெங்களூருவை சேர்ந்த நேஹா பகாரியா. அதற்காக பிரத்யேக இணையதளத்தையும் வடிவமைத்திருக்கிறார். இதன் மூலம் வேலைவாய்ப்புடன், பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். இந்த இணையதளம் முழுக்க, முழுக்க பெண்களுக்கானது. 

கடந்த 7 ஆண்டுகளாக இலவச சேவையை மேற்கொண்டு வரும் நேஹாவிடம் பேசினோம். ''நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு திருமணமாகி, இரு மகன்கள் இருக்கிறார்கள். நான் பென்சில்வேனியா நாட்டில் பார்மசுட்டிகல் படித்ததோடு, மனிதவள மேம்பாட்டு துறையிலும் பட்டம் பெற்றேன். பின்பு மருத்துவ துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றினேன். 

திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தியதால் அலுவலக வேலையில் இருந்து விலகி இருந்தேன். என்னுடைய மகன்கள் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தவுடன், எனக்கான ஓய்வு நேரம் அதிகரித்தது. அதனால் மீண்டும் பணியாற்ற ஆரம்பித்தேன். ஆனால் பழைய வேகமும், புதுப்புது தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கும் தன்மையும் குறைந்திருந்தது. அதனால் கால ஓட்டத்திற்கு ஏற்ப என்னை நானே புதுப்பிக்க (அப்டேட்) வேண்டியிருந்தது. அந்த காலகட்டத்தில்தான் என்னை போன்று சிறு இடைவேளைக்கு பின்பு பணியாற்ற விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதிப்படுத்த ஆசைப்பட்டேன். அப்படி உருவானதுதான் ஜாப்ஸ் பார் ஹெர்'' என்றவர், பிரத்யேக இணைய தளத்தின் செயல்பாடுகளை விளக்குகிறார். ''இந்த இணையதளம் முழுக்க முழுக்க பெண்களுக்கானது. குறிப்பாக திருமணம், இல்லற வாழ்க்கை, குழந்தைகள் என குடும்ப பந்தம் ஏற்படுத்திய இடைவேளைக்கு பின்பு வேலை தேடும் குடும்ப தலைவிகளுக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தக்கூடியது. மேலும் புதிதாக வேலைத்தேடும் கல்லூரி மாணவிகளுக்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் இருக்கும் ஐ.டி. நிறுவனங்களும், தொழில்துறை நிறுவனங்களும் இந்த இணையதளத்தோடு இணைந்து செயல்படுவதால், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படுகின்றன. கடந்த வருட கணக்கின்படி, 50 ஆயிரம் பெண்கள் 'ஜாப்ஸ் பார் ஹெர்' இணையதளத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். 

7 ஆயிரத்து 500-க்கும் அதிகமான நிறுவனங்கள் எங்கள் இணையதளத்தோடு கைகோர்த்திருப்பதால், பெண்கள் விரும்பும் வேலையை, அவர்கள் விரும்பும் பகுதிகளிலேயே பெற முடிகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூரு பெண்கள் அதிகமாக பயன்பெறுகிறார்கள்'' என்றதோடு, இணையதளம் மூலம் திறன் வளர்ப்பு பயிற்சிகளையும் இலவசமாக வழங்குகிறார். அதை அவரே விவரிக்கிறார். 

'வழக்கமான வேலை தேடல் இணையதளங்களை போன்றே, எங்கள் இணையதளத்தில் ஒரு கணக்கு தொடங்கி, தங்களை பதிவு செய்து கொண்டால் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் பகிரப்படும். மேலும் சுயவிவர பட்டியல் (ரெஸ்யூம்) உருவாக்குவதில் தொடங்கி, பணிக்கான அழைப்பாணை பெற்றுத் தருவது வரை அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம். 

எல்லா பெண்களும், எல்லா துறைகளிலும் சிறப்பானவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில பெண்கள் நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள். ஆனால் அவர்களது ஆங்கில எழுத்து நடையில் நிறைய தவறுகள் இருக்கும்.

சில பெண்களுக்கு ஆங்கிலம் நன்றாக எழுத வரும், ஆனால் அவர்களால் திறம்பட பேச முடியாது. இதில் இரண்டிலும் சிறப்பானவர்களுக்கு, தேர்வாளர்களின் கேள்விகளுக்கு தைரியமாக பதில் சொல்ல முடியாது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிக்கல்கள் இருக்கின்றன. அதை தீர்த்து வைப்பதும் எங்களுடைய வேலை தான். 

வேலைதேடி வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதுடன், நேர்காணலில் சொதப்புபவர்களுக்கு தகுந்த பயிற்சியும் வழங்குகிறோம். 2015-ம் ஆண்டின் பெண்கள் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையதள சேவையில் வேலைவாய்ப்புடன், அது சம்பந்தமான எழுத்துத்திறன் பயிற்சி, பேச்சுத்திறன் பயிற்சி, மென்பொருள் பயிற்சி என எல்லாவற்றையும் இலவசமாகவே வழங்குகிறேன்'' என்றவர், 'இணையதள சேவையில், வேலைவாய்ப்பு பயிற்சிகள் எப்படி வழங்கப்படுகின்றன' என்ற கேள்விக்கும் பதிலளித்தார். 

''ஆன்லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இருமுறைகளில் வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்குகிறோம். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் இணையதள பக்கத்திலேயே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த வகுப்பில் பங்கேற்று, திறமைகளை வளர்த்து கொள்ள முடியும். அதேசமயம் இணையதள இணைப்பில் இருக்கும் துறை சார்ந்த வல்லுனர்களின் அறிவுரைகளையும் தனிப்பட்ட முறையில் கேட்கலாம். இது ஒரு ரகம் என்றால், ஆப்-லைன் வகுப்புகள் அடுத்த ரகம். 

இந்த வகுப்புகள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டும் பயன்பெறலாம். குடும்ப தேவைகளுக்காக சில பெண்கள் வேலை தேடுகிறார்கள். சிலர் சமூக அடையாளத்திற்காக பணியாற்றுகிறார்கள். சிலர் மன நிறைவிற்காக பணியாற்றுகிறார்கள். 

இப்படி ஒவ்வொரு பெண்களுக்கும் ஒருவிதமான தேவையிருப்பதால் குடும்ப தலைவிகளின் அலுவலக பணி, மன நிறைவான பணியாகவே அமைகிறது. 

* திருமணமான பெண்கள், அலுவலக வாழ்க்கையை விரும்புகிறார்களா?, அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்குமா? 

பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் இப்போது அதிகரித்திருக்கிறது. மனிதவள மேம்பாட்டு அதிகாரி, மென்பொருள் பொறியாளர், டீம் லீடர்... போன்ற முக்கிய பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அதனால் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து ஓரளவிற்கு செட்டில் ஆகியதும், மீண்டும் தங்களுடைய சமூக அங்கீகாரத்தை தேடுகிறார்கள். குறிப்பாக பிள்ளைகளுக்கு பள்ளிகளை தேடும்போதே, தங்களுக்கான புது அலுவலகத்தையும் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். மனைவியாக, தாயாக... 6 அல்லது 8 வருடங்கள் பணியாற்றிவிட்டு, அந்த பணியோடு புதிதாக கிடைத்திருக்கும் அலுவலக பணியையும் தொடருகிறார்கள்.

உங்களுக்கு காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கா? - இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்.!

 காபியால் நமக்கு ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளும் அளவு சரியாக இருக்க வேண்டும். காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல அதிகப்படியான காபி என்றைக்குமே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். காபி இல்லாமல் எந்த வேலைகளையும் செய்ய முடியாது என்றால், காபி எந்த அளவு அருந்த வேண்டும், எப்போது அருந்த வேண்டும், வெறும் வயிற்றில் காபி குடிப்பது நல்லதா போன்றவற்றை காபி பிரியர்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது.

ஏனெனில் அது அவர்களின் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவும். தொடர்ந்து காபி குடிப்பவர்களுக்கு நடுத்தரவயது மரணம் ஏற்படும் அபாயம் குறைவு என, ஹார்வர்ட் டி.எச்.சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது. இருப்பினும், நீங்கள் சரியான முறையில் காபி குடிக்க வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் காஃபிக்களில் செயற்கை காஃபின் சேர்க்கப்படுகிறது. இந்த காஃபின் மருந்து உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறையை பல வழிகளில் பாதிக்கிறது. காஃபின் உடலின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது இதனால் ஒருவரை ஆற்றலுடன் உணர வைக்கிறது. எனவே அதிகப்படியான காஃபின் உட்கொள்வது தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, உங்கள் தினசரி மூன்று முறைக்கு மேல் காஃபி பருகாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

நீங்கள் காபி அருந்துபவராக இருப்பின், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் காபி குடிப்பதன் விளைவாக உங்கள் உடல் அதிக சிறுநீரை உற்பத்தி செய்யலாம், இது உடலில் நீர் சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இதனால் சோர்வு, தலைவலி மற்றும் அறிவாற்றல் செயல்பாடு குறைபாடு போன்ற பலவிதமான தீங்கு விளைவிக்கும். எனவே காபி குடிப்பவர்கள் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது அவசியம்.

பில்டர் காபி குடிப்பவர்கள் காபி கொட்டைகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் நீங்கள் பழைய காபி கொட்டையை தேர்ந்தெடுத்தால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தரமான காபி கொட்டைகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

காபியுடன் சுவைக்காக கெட்டியான கிரீம், சூடான சாக்லேட் போன்றவற்றை சேர்த்து கொள்வது எடை அதிகரிப்பு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் ஆரோக்கிய விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆதலால், இனி காபியில் கிரீம் சேர்த்து அருந்தாதீர்கள்.

உங்கள் காபியில் அதிகப்படியான சர்க்கரை சேர்ப்பதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், இது இறுதியில் கொழுப்பின் அதிக திரட்சியை விளைவிக்கும், இது கொழுப்பு கல்லீரல் நோயாக உருவாகலாம் மற்றும் நீரிழிவு நோய்க்கும் பங்களிக்கிறது. மேலும், இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. சூடான நீர், தேநீர் மற்றும் காபி போன்ற சூடான பானங்களை அதிகமாகவோ அதிக சூடாகவோ குடிப்பதால், உணவுக்குழாய் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் அதிகரிக்கும். எனவே காபியை அளவாக பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

நீங்கள் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியிருக்கும் சூழல் ஏற்படும் போது காபி குடிப்பது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் தூங்க செல்வதற்கு முன் காபி குடிப்பது என்பது நல்லதல்ல. ஏனெனில் தூக்கம் சரியாக இல்லாமல் அதன் காரணமாக ஒற்றைத் தலைவலி, உடற் சோர்வு, பதற்ற மனநிலை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

உங்கள் வாழ்க்கையை ரிலாக்ஸ் ஆக்கும் 5 டிப்ஸ்..! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

 உடல்நலனை போலவே மன நலனும் முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால், தினசரி மன நலனுக்காக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், கலாச்சார ரீதியாக நாம் கடைப்பிடிக்கக் கூடிய சாதாரண வாழ்வியல் உத்திகள் நமக்கு நல்ல மன நலனையும், நிம்மதியும் தரக் கூடியவை ஆகும்.கடின முயற்சிகள் எதுவும் தேவையில்லை. 

நல்ல தூக்கம், தியானம் போன்ற எளிமையான பயிற்சிகளே போதுமானது. தினசரி நம் அன்றாட வாழ்வில் நாம் இவற்றை கடைப்பிடித்தால் கவலையின்றி வாழலாம்.

முறையான தூக்கம் : ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமான உணவு, நீர், காற்று போன்றவை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு தரமான தூக்கமும் அவசியம். தூங்கும்போது தான் நம் உடலும், மனமும் தம்மை புதுப்பித்துக் கொண்டு புத்துணர்ச்சி அடையும். 

தினசரி 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியமானது. இதற்கு குறைவான தூக்கத்தை கொண்டவர்களுக்கு நிச்சயமாக மனநல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஆரோக்கியமான உணவு : ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் உடல்நலன் காக்கப்படும். ஆனால், மனநலனுக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழக் கூடும். 

ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் குடல்நலன் மேம்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தான் பலருக்கு மன உளைச்சலை தருகிறது. வாயு, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற எந்த தொந்தரவுகளும் இல்லை என்றால் மனம் நிம்மதி அடையும்.

பொழுதுபோக்கு : எந்த நேரமும் பணி செய்து கொண்டே இருப்பது, விளையாட்டு மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களில் கவனமின்மை போன்ற இயந்திரத்தனமான வாழ்க்கையால் நாளடைவில் மன அழுத்தம் உண்டாகும். ஆகவே, விறுவிறுப்பான பணிகளுக்கு இடையிலும் நம் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.

சமூக தொடர்புகள் : இன்றைய தினம் எல்லோரும் ஸ்மார்ட்ஃபோன் உலகில் மூழ்கி விடுகின்றனர். சமூக தொடர்பு என்பதே இல்லை என்றாகிவிடுகிறது. அப்படியே இருந்தாலும் அது சமூக ஊடகங்கள் வரையில் தான். 

இவற்றை தவிர்த்து சக மனிதர்களை நேருக்கு, நேர் சந்தித்து உரையாட வேண்டும். தனிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை என்றால் அருகாமையில் உள்ள பூங்காக்களுக்கு சென்று புதிய நட்பு வட்டங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி : உடற்பயிற்சி உடல்நலனுக்கு மட்டுமல்ல. மன நலனுக்கும் உகந்தது தான். கடினமான பயிற்சிகள் தேவையில்லை. நடைபயிற்சி, உடலை நீட்டி முழங்குவது, பெருமூச்சு பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவை கூட மனநலனை மேம்படுத்தும். யோகா செய்வதும் நல்ல பலனை தரும். 

சக மனிதர்களுடன் உரையாடிக் கொண்டே உடற்பயிற்சிகளை கூட்டாக செய்தால் ஒரே சமயத்தில் இரட்டை பலன்கள் கிடைக்கும்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

கண் தொடர்பான சிக்கல்களை போக்கும் 7 பயிற்சிகள்..! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..

 நமது உடலின் குறிப்பிட்ட தசைகளை வலுப்படுத்த பிசியோதெரபி செய்யப்படுவது போல், கண்களின் செயல்பாட்டை மேம்படுத்த கண்ணிலும் தசைகளுக்கான பயிற்சிகள் உள்ளன. நமது கண்களில் 2 தசைகள் உள்ளன. அவை, வெளிப்புற தசைகள், உள்புற தசைகள். வெளிப்புற தசைகள், இரண்டு கண்களும் ஒரே திசைவில் நகர்வதை உறுதி செய்கின்றன.

உள் தசைகள், ஒரு குறிப்பிட்ட தூரம் அல்லது பொருளில் கவனம் செலுத்த கண்களுக்கு உதவுகின்றன.கண் தசைகளில் பிரச்சனை உள்ளவர்களுக்கு, ப்ளோபியா, தலைவலி, படிப்பதில் சிரமம் போன்ற நோய்கள் ஏற்படலாம். இந்நிலையில் இதுபோன்ற கண் தசை நோய்களுக்கான சிறந்த பயிற்சிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதற்கு முன்னதாக ஒளிவிலகல் பிழைகள் என அழைக்கப்படும் ஆஸ்டிஜிமாடிசம், கிட்டப்பார்வை அல்லது ஹைபரோபியா போன்ற கண் பார்வை பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த வகை கண் பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்காது. எனவே கண்மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது.

அதே போல மங்கலான பார்வை, கண் திரிபு, டிஸ்லெக்ஸியா, கண் சிமிட்டுதல், கண் தசைகள் செயலிழந்திருப்பது போன்ற சில கண் நோய்களுக்கு கண் பயிற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும். பார்வையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வகையில் உதவும் சில கண் தசை பயிற்சிகளை தற்போது காணலாம்.

பென்சில் புஷ்அப்ஸ் : பென்சில் புஷ்-அப்கள் அடிப்படையில் கண்கள் ஒன்றையொன்று நோக்கி நகர்த்த அல்லது அருகில் உள்ள பொருளைப் பார்க்கும்போது ஒன்றிணைக்க பயிற்சியளிக்கப்படும் செயல்முறையாகும். பென்சிலை மெதுவாக மூக்கின் அருகே நகர்த்தி, நுனியை ஒரே ஃபோகஸில் வைத்துப் பயிற்சியை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம்.

எண் 8 படத்தை பார்த்தல் : எண் 8 படத்தை பார்த்தல், மூலம் கண் பார்வையை மேம்படுத்தவும், கண் தசைகளை வலுப்படுத்தவும், நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்தப் பயிற்சியில், ஒருவர் உட்கார்ந்த நிலையில் இருக்க வேண்டும், அவர்களுக்கு முன்னால் 10 அடிக்கு முன்னால் தரையில் ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுத்து, படம் 8-ஐ கற்பனை செய்து அதன் மீது கவனம் செலுத்த வேண்டும். பின்னர் 30 வினாடிகள் கண்காணித்து, பின்னர் திசையை மாற்ற வேண்டும்.

கண்களை உருட்டுதல் : கண்களை உருட்டுதல் என்பது கண் அழுத்தத்தை போக்க உதவும் ஒரு பயிற்சியாகும். கண் அழுத்தத்திலிருந்து எளிதாக நிவாரணம் பெற, ஒருவர் உட்கார்ந்தவாறு , தலையை அசைக்காமல் கண்களை வலப்புறம், பின்னர் மேல்நோக்கியும் , பின்னர் இடது புறம் மற்றும் கீழே தரையில் பார்த்து, இந்த பயிற்சியை செய்யலாம்.

20-20-20 கண் தசைப்பயிற்சி  : 20-20-20 விதி என்பது ஒரு எளிய கண் தசைப்பயிற்சி நுட்பமாகும். 20-20-20 கண் தசைப்பயிற்சி மூலம், கண் அழுத்தத்தைத் தடுக்கலாம். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு இடைவெளி எடுத்து, உங்களிடமிருந்து இருபது அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை தோராயமாக 20 வினாடிகளுக்குப் பாருங்கள். குறிப்பாக அதிக நேரம் கணினி, தொலைக்காட்சி, போன்றவற்றை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பயிற்சி கண் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

உள்ளங்கை பயிற்சி : உள்ளங்கை பயிற்சி கண் சோர்வைப் போக்க உதவும். முதலில், உங்கள் உள்ளங்கைகளை ஒன்றோடொன்று தேய்த்து அவற்றை உங்கள் கண்களுக்கு மேல் வைக்கவும். இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து நிமிடங்கள் செய்யலாம்.

ப்ரோக் ஸ்ட்ரிங் (Brock String) : ப்ரோக் ஸ்ட்ரிங் என்பது காட்சி அமைப்பை பயிற்றுவிக்க செய்யப்படும் ஒரு பிரபலமான பார்வை சிகிச்சையாகும். ஒரு நூலை எடுத்து ஒரு புறம் வளையத்தை கட்டி, 3 அல்லது 4 மணிகளை குறிப்பிட்ட இடைவெளியில் கோர்த்து கொள்ளவும், இப்போது அதன் மறு முனையிலும் வளையத்தை கட்டி கதவு கைப்பிடி அல்லது ஜன்னல் கம்பிகளில் கட்டிவிட வேண்டும். இப்போது அடுத்த முனை வளையத்தை மூக்கின் அருகில் வைத்து உற்றுநோக்குதல் மூலம், கண்களை சீரமைக்கும் பயிற்சியாக மட்டும் அல்லாது கவனம் செலுத்துதலுக்கும் ஒரு சிறந்த பயிற்சியாக அமையும்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

புதுச்சேரியில் வேலைவாய்ப்பு முகாம்... 2,000 இளைஞர்களுக்கு உடனடி பணி ஆணை..!

 

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி வேலைவாய்ப்பு துறை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சிறப்பு முகாம் மூலம் ஆட்களை பணிக்கு அமர்த்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசு தொழிலாளர் நலத்துறை வேலைவாய்ப்பகம் சார்பில் முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில் சுமார் 35-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 2000-க்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு துறை செயலர் முத்தம்மா, துணை ஆணையர் ராகினி, மற்றும் பாரதிதாசன் மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ராஜ சுகுமார், வேலைவாய்ப்பு அதிகாரி ஜோஸ்பின் சித்ரா, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பெண்கள் வேலைவாய்ப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி

 திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளை மறுநாளுடன் முடிவடைகிறது.

இந்த பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் தற்காலிக பணியிடங்களாகும். எனவே, ஆர்வமுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் மார்ச் 7 மாலை 5.00 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிடங்கள்: அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் 1 இடமும், சேரன்மகாதேவி வட்டாரத்தில் 3 இடங்களும், களக்காடு வட்டாரத்தில் 2 இடங்களும், மானூர் வட்டாரத்தில் 4 இடங்களும், பாளையங்கோட்டை வட்டாரத்தில் 3 இடங்களும், பாப்பாக்குடி வட்டாரத்தில் 2 இடங்களும், இராதாபுரம் வட்டாரத்தில் 1 இடமும், வள்ளியூர் வட்டாரத்தில் 4 இடங்களும் என மொத்தம் 20 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான அடிப்படையான தகுதிகள்:  ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office-ல் குறைந்தது 3 மாத வகுப்பு முடித்து (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும் (அல்லது) Computer Science அல்லது Computer Application -ல் பட்டப் படிப்பு பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்;

01.01.2023-ல் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்;

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தை போன்ற திட்டங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்;

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரார் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய எல்லை பகுதிக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். (Residence in same block).

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை https://tirunelveli.nic.inஎன்ற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். வேறு எவ்வகையில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் (திருநங்கைகள் உட்பட).

விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி, பணி அனுபவ சான்று, கல்விச் சான்று ஆகியவைகளின் நகல் கண்டிப்பாக பதிவேற்றப்பட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபரங்கள் அனைத்தும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

தகுதியில்லாத மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. மார்ச் 7 மாலை 5.00 மணி வரை மட்டும் விண்ணப்பபங்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

 கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer – Rs.27,804/-) மற்றும் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator – Rs.13,240/-) பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer ) பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் LLB முடித்தவராகவும் பெண்கள் மற்றும் குழந்தை உரிமை தொடர்பான அரசு / அரசு சாரா நிறுவனம் / சட்டம் சார்ந்த 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் 15.03.2023 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை (Typewriting Tamil and English Senior level) முடித்திருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 15.03.2023 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 15.03.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம்,

கோயம்புத்தூர் – 641 018 ஆகும்.

மாவட்ட பாதுகாப்பு அலகு (சங்கம் ): 

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு/சங்கம்  செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களோடு இணைந்து நல்ல முறையில் செயல்படுத்துதல் இந்த அலகின் முக்கிய நோக்கமாகும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் தலைமையில் 11 பணியாளர்களுடன் இந்த சங்கம் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ. 1 லட்சம் வரை சம்பளம்: பரதநாட்டிய பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 இந்திய பாராளுமன்றத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட கலாசேத்திரா அறக்கட்டளையின் ருக்மிணி தேவி கவின் கல்லூரியில் காலியாக உள்ள பரதநாட்டியம் மற்றும் இசையைப் பயிற்றுவிக்கும் பயிற்றுநர் இடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம்: 

பரதநாட்டியம்  பயிற்றுநர்: 1 காலியிடம்.

விண்ணப்பதாரர் 10ம்  வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டயம் அல்லது முதுநிலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும். கலாசேத்திரா நிகழ்ச்சியில் குறைந்தது 2  மணி நேரம் நாட்டியம் அரங்கேற்றும் செய்யும் திறன் வேண்டும்.  நாட்டுவங்கம்  செய்ய தெரிந்திருக்க வேண்டும்.   தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் இசை/நடன விதிகளை எழுத தெரிந்தால் கூடுதல் நன்மையாகும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் வயது வரம்பு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கு, ஆரம்பகட்ட ஊதியமாக ரூ.53252 கொடுக்கப்படும். சம்பள நிலை: 35,400 - 1,12,400 ஆகும்.

இசை பயிற்றுனர்: 1 காலியிடம் விண்ணப்பதாரர் 10ம்  வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். கர்னாடிக் இசையில் பட்டயம் அல்லது முதுநிலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும். கலாசேத்திரா நடன  நிகழ்ச்சியில் பங்கேற்கும் வேண்டும்.  நாட்டுவங்கம்  செய்ய தெரிந்திருக்க வேண்டும். இசை விதிகளை எழுதவும்/படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். தென்னிந்திய மொழிகள் தெரிந்திருப்பது கூடுதல் நன்மையாகும். சம்பள நிலை: 35,400 - 1,12,400. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.53252 வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவத்தை,  Director, kalakshetra Foundatation, Thiruvanmiyur,chennai - 600 041என்ற முகவரியில் உரிய ஆவணங்களுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க  வேண்டும். விண்ணப்ப அறிவிப்பு வெளியான (மார்ச் 3ம் தேதி) 30 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கபபட்டுள்ளது .


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை: 84 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

 சேலம் மாவட்ட நகர்புற மருத்துவ நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர்கள், பல்நோக்கு சுகாதார உதவியாளர் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது, ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக பணியிடங்களாகும். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்  வரும் மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரம்: 

பதவியின் பெயர்காலியிடங்கள் எண்ணிக்கைவயதுகல்வித் தகுதி
மருத்துவர்கள்2840 வயது வரைகுறைந்தது எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்
பல்நோக்கு சுகாதார பணியாளர்2850பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி பட்டம் பெற்றிருக்க  வேண்டும்
உதவியாளர்கள்28508ம் வகுப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

 தொகுப்பூதியம்: மருத்துவர் பதவிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 60,000 வழங்கப்படும், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பதவிக்கு மாதம் ரூ. 14,0000ம், உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ . 8,500ம் தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான, விண்ணப்பப் படிவங்களை, சேலம் மாவட்ட salem.nic.inஇணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நல்வாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,பழைய நாட்டாண்மை கட்டட அலுவலகம், சேலம் மாவட்டம் - 636 001 ஆகும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் மார்ச் 10ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு தேசிய நல்வாழ்வு குழுமம் (http://nhm.tn.gov.in/en) வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது சேலம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் அலுவலக நாட்களில் நேரில் சென்று அறிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள்... தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு - புதுக்கோட்டை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!

 புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் MARCH , 11ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,  தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வருகிற 11.03.2023 (சனிக்கிழமை) காலை 08.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது.

மேலும், வேலைதேடும் இளைஞர்கள் "தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்' (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்தியேக அரங்கம் அமைத்து ஆலோசனை அளிக்கப்பட உள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இத்தனியார்துறை முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news