Agri Info

Education News, Employment News in tamil

March 10, 2023

தர்பூசணி விதையில் கூட இத்தனை நன்மைகள் இருக்கா..? இனி வேஸ்ட் பண்ணாதீங்க..!

March 10, 2023 0

 கோடைக்காலம் தொடங்கினாலே மூலை முடுக்குகள் எங்கும் தர்பூசணிக் கடைகள் களைகட்டும். அதுவும் தற்போது அடிக்கும் வெயில் தாகத்தைத் தவிரிக்க தர்பூசணியின் தேவையை இன்னும் அதிகரித்துவிட்டது. 92 சதவீதம் தண்ணீரை உள்ளடக்கிய தர்பூசணியை ஊர் பக்கங்களில் தண்ணீர் பழம் என்றே அழைப்பார்கள்.

உடலில் நீர் ஏற்றத்தை அதிகரிக்க தர்பூசணி சாப்பிடும் பலரும் அதன் விதைகளை சாப்பிடாமல் துப்பிவிடுவோம். அப்படியே தெரியாத்தனமாக சாப்பிட்டு விட்டாலும் வயிற்றுக்குள் செடி வளரும் என 90ஸ் கிட் பரிதாபங்கள் வேறு..! ஆனால் உண்மையில் அது பல மருத்துவகுணங்களை உள்ளடக்கியது என்பது தெரியுமா..?

தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிக மிகக் குறைவு. அதேசமயம் உடலுக்குத் தேவையான காப்பர், ஸிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற மினரல் சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் உள்ளன. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இது நேரடியாக இதயத்தோடு தொடர்பு கொண்டது என்பதால் இதய ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

இந்த ஒட்டுமொத்த மினரல் சத்துக்களின் ஆற்றல் எலும்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றங்களையும் சீராக்குகிறது. தர்பூசணி சாப்பிட்டதும் அது வெளியிடும் ஆசிட் உடலின் செயல்பாடுகளை சீராக்கும். மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

தர்பூசணி விதைகளை வெயிலி காய வைத்து வறுத்து சாப்பிடலாம். தர்பூசனி விதைகளில் பர்பி செய்யலாம். வெல்லம் போட்டு உருண்டை பிடித்து சாப்பிடலாம். பொடியாக்கி சாப்பிடலாம். விதைகளை அரைத்து watermelon seed shake, watermelon seed butter செய்து சாப்பிடலாம்.

தர்பூசணி உடல் நலத்தை பாதுகாப்பது மட்டுமன்றி சருமத்தை பாதுகாக்கவும் உதவும். தலைமுடி ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். தர்பூசணி விதை எண்ணெய் விற்கப்படுகிறது. அதை சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம். அதை தலையின் வேர்களில் தேய்த்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


தினமும் 10 நிமிடங்கள் குளித்தால்...

March 10, 2023 0

 தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.


எத்தனை முறை குளிக்கலாம்? 
வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சினை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு 5 முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சருமத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம். அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்? பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத் துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.

குளிக்கும் நேரத்தை குறையுங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், குளிக்கும் நேரத்தை குறையுங்கள். உதாரணமாக, தினமும் 10 நிமிடங்கள் குளித்தால், அதை 5 நிமிடங்களாக குறையுங்கள். எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படிகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சினைகள் ஏற்படும். சூடான நீரை தவிருங்கள்: அதிகமாக குளித்தால், சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். சரும துளைகள் திறப்பதை தடுக்கும். கூடுமானவரை15 நிமிடங் களுக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

மென்மையான குளியல் சோப்பைப் பயன் படுத்துங்கள்: குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் உள்ளிட்டவை ரசாயன கலப்பு அதிகம் அல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்துவிட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பதுதான் நல்லது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளை குறைக்கும். உடலை உலர வையுங்கள்: குளித்து முடித்ததும் உடலை உலர்வடைய செய்வதற்கு டவலை கொண்டு அழுத்தமாக தேய்க்கக்கூடாது. அது சருமத்தில் உராய்வை, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும். டவலை கொண்டு மென்மையாக துடைப்பதுதான் சரியானது. உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில்தான் துடைக்க வேண்டும். குளித்து முடித்ததும் 'பாத் ரோப்' எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கால்சியம் சத்து குறைபாடு இருக்கலாம் என சந்தேகமா..? இந்த அறிகுறிகளை கவனியுங்கள்..!

March 10, 2023 0

 உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானது. முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிக்கப்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடே காரணம். குறிப்பாக பெண்கள்தான் கால்சியம் சத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நடுத்தர வயது ஆண்கள் நாள்தோறும் 1000 மி.கி கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு 1,300 மில்லி கிராம், 4 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1,300 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது.

கால்சியம் குறைப்பாட்டை ஹைபோகால்சீமியா என்று குறிப்பிடுவர். கால்சியம் குறைபாடு உடையவர்களுக்கு குழப்பம் மற்றும் ஞாபகமறதி, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியின்மை, மன அழுத்தம், பலவீனமான நகங்கள், பற்கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் தேய்மானம் ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். பொதுவாக, கால்சியம் சத்து என்றாலே பால் பொருட்களில் இருந்து மட்டுமே கிடைக்கும் என நினைப்பவர்கள் உண்டு. பால் பொருட்கள் அல்லாத காய்கறி, பழங்களிலும் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.

குறிப்பாக, பாதாம், பீன்ஸ் மற்றும் பருப்பு, அத்திப்பழம், ஆரஞ்சு, கிவி, பெர்ரி, பப்பாளி, அன்னாசி, கொய்யா, லிச்சி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழ வகைகளில் கால்சியம் நிறைந்துள்ளது.

பழங்களில் உள்ள கால்சியத்தின் அளவு

பீன்ஸ் 100 கிராமில் 140 மில்லி கிராம் கால்சியம் இருக்கும். பாதாம் 100 கிராம் - 260 மி.கி கால்சியம், 8 அத்தி பழங்கள் - 241 மி.கி, 100 கிராம் டோஃபு - 680 மி.கி, 30 கிராம் எள் - 300 மி.கி கால்சியம் உள்ளது. 45 கிராம் சியா விதைகள் - 300 மி.கி, ஒரு கிண்ணம் அளவுள்ள அடர் பச்சை காய்கறிகளில் - 300 மில்லி கிராம், ராகி மாவு 100 கிராம் - 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.

உலர்ந்த முருங்கை தூளில் 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. இதேபோல், ப்ரோக்கோலி, இனிப்பு உருளைக்கிழங்கு, சூரியகாந்தி விதைகள், வெண்டைக்காய், ஆரஞ்சு பழங்களிலும் அதிகளவிலான கால்சியம் சத்துகள் நிறைந்திருக்கின்றன.

கால்சியம் குறைபாட்டை கண்டுபிடிப்பது எப்படி..?
கால்சியம் குறைப்பாட்டை ஆரம்பக் காலங்களிலேயே கண்டுபிடிக்க முடியும். உடலில் தோன்றும் சில அறிகுறிகள் கால்சியம் குறைப்பாட்டை உணர்த்தும். கால் வலி, தசைப்பிடிப்பு ஆகியவை தொடர்ந்து இருந்தால் கால்சியம் குறைபாடு காரணமாக இருக்கலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த வலிகளுக்கும் கால்சியம் குறைப்பாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்பது கூட பலருக்கும் தெரிவதில்லை.

இதேபோல், அஜீரணக்கோளாறு, வாயுத்தொல்லை ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் கால்சியம் குறைபாடு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் முன்கூட்டியே உணர்ந்து, அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது ஆரம்ப நிலையிலேயே கால்சியம் குறைபாடு காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

March 9, 2023

EPFO நிறுவனத்தில் 577 காலியிடங்கள் அறிவிப்பு : டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

March 09, 2023 0

 மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (Employment Provident Fund Organisation) காலியாக உள்ள அமலாக்க அதிகாரி (Enforcement Officer/Accounts Officer), உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner) ஆகிய பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள் : மொத்தம் 577 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு நிர்ணயித்துள்ள 8-வது நிலையிலான ஊதியம் வழங்கப்படும்

வயது வரம்பு: Enforcement Officer/Accounts Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 30 வயதுக்குள் இருக்க வேண்டும். Assistant Provident Fund Commissioner பதவிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கு 75 சதவிகித விழுக்காடும், நேர்காணல் தேர்வுக்கு 25 சதவிகித விழுக்காட்டும் முன்னுரிமை அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு: பல பதில்கள் தேர்வு அம்ச வினாக்கள் (Multiple Choice Questions) கொண்ட கேள்களைக் கொண்டதாக எழுத்துத் தேர்வு இருக்கும். தேர்வு நேரம் : இரண்டு மணி நேரம். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 3ல் 1 பங்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

பாடத்திட்டம்: ஆங்கில அறிவு, இந்திய சுதந்திர போராட்டம், சமீப நிகழ்வு, இந்திய அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரம், கணக்கு பதிவியல் கோட்பாடு( General Accounting Principles), தொழிற்துறை தொடர்புகள் மற்றும் தொழிலாளர் சட்டம் (Industrial Relations & Labour Laws) பொதுஅறிவியல், மனக்கணக்கு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். கணக்கு பதிவியல் கோட்பாடு தவிர்த்து பார்த்தால், இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும், ஐஏஎஸ் , குரூப் 1, குரூப் 2, SSC போன்ற தேர்வுகளோடு அதிகம் ஒத்து போகிறது. எனவே, டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பம் செய்வது எப்படிwww.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். வேறு எவ்வகையில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விளம்பர அறிவிக்கையை மேற்கண்ட இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

March 8, 2023

இரவு சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள்..!

March 08, 2023 0

 சிலர் எவ்வளவுதான் கடினமாக உழைத்தும் எடை குறையவில்லையே என கவலைப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் சில தவறுகளை செய்வார்கள். அந்த வகையில் இரவில் நீங்கள் செய்யும் இந்த பழக்கங்களாலும் உடல் எடை அதிகரிக்கலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.

தாமதமாக உண்பது : இரவு தாமதமாக உண்பது அதிகமாக சாப்பிடத் தூண்டும். அதேபோல் செரிமானமும் பாதிக்கப்படும். இதனால் கொழுப்பு சேர்ந்து உடல் எடை அதிகரிக்கலாம். எனவே ஆரோக்கியமான உணவுக்கு சீக்கிரம் சாப்பிடுவதே நல்லது.

சரியான ஊட்டச்சத்தின்மை : நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு என அனைத்தையும் சம அளவில் உட்கொள்ள வேண்டும். இரவு உணவில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும்.

சரியான ஊட்டச்சத்தின்மை : நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு என அனைத்தையும் சம அளவில் உட்கொள்ள வேண்டும். இரவு உணவில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும்.

சாப்பிட்டதும் உறக்கம் : சாப்பிட்ட உடனேயே படுக்கச் செல்வது உடல் எடையை அதிகரிக்கும். எனவே குறைந்தது 20 - 30 நிமிட இடைவேளை இருக்க வேண்டும். அந்த இடைவேளையில் அப்படியே உட்காராமல் நடப்பது போன்ற எளிய பயிற்சி மேற்கொள்ளலாம். இதை வீட்டிற்குள்ளேயும் செய்யலாம்.

இனிப்பு உண்பது : சாப்பிட்ட பின்பு சாக்லெட், பிஸ்கெட் , ஸ்வீட் என ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடுவதால் தேவையற்ற உடல் எடைக்கு வழி வகுக்கும். இரவு உணவுக்குப் பின் பசித்தால் பாதாம், முந்திரி போன்ற ஊட்டச்சத்தான ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடலாம்.

குளிர்ச்சி : உடல் குளுமைக்கும் செரிமானத்திற்குமே தொடர்பு உண்டு. எனவே இரவு தூங்கும்போது உடலைக் குளுமைப்படுத்துவதாலும் எடை அதிகரிப்பைக் குறைக்கலாம். ஏ.சி இருந்தால் உடல் சூட்டை தனிக்க அளவைக் குறைத்து வையுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இரத்த சோகையை அதிகரிக்கும் வைட்டமின் K குறைபாடு : சரி செய்யும் வழிகள் என்ன..?

March 08, 2023 0

 ஒவ்வொரு வகை ஊட்டமின்களும் உடலுக்கு ஒவ்வொரு விஷயத்திற்கு தேவையானது. உடலில் ஏற்படும் விட்டமின் குறைபாடு நமது ஆரோக்கியத்தை பாதிக்கும். அதே போல விட்டமின்கள் அதிகரித்தாலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அந்தவகையில், இன்று வைட்டமின் கே அதிகம் இருக்கும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

திராட்சை பழம் : 1/2 கப் திராட்சை பழத்தில் 6.7 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. திராட்சை பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பாலிபினால்கள் காணப்படுகிறது.

ஆலிவ் ஆயில் : 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலில் 8.1 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இது தினசரி விட்டமின் கே அளவில் 9% தேவையை பூர்த்தி செய்கிறது. ஆலிவ் ஆயிலில் நிறைய விட்டமின் ஈ சத்தும் காணப்படுகிறது.

ப்ளூ பெர்ரி : ப்ளூ பெர்ரியில் 13.1 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. ப்ளூ பெர்ரியில் நார்ச்சத்துக்கள், விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற சத்துக்களும் ஏராளமாக காணப்படுகிறது.

கேரட் : கேரட்டில் விட்டமின் கே யும் காணப்படுகிறது. எனவே விட்டமின் கே சத்தை பெற கேரட்டை நீங்கள் சாலட் இவற்றில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். கேரட் உங்கள் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.

முந்திரி : முந்திரியில் 9.7 மைக்ரோ கிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. தினசரி விட்டமின் கே அளவில் 10% தேவையை முந்திரி பூர்த்தி செய்கிறது. முந்திரியில் உடலுக்கு தேவையான இதர சத்துக்களும் காணப்படுகிறது.

முட்டை கோஸ் : முட்டைக்கோஸில் 13.7 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. எனவே விட்டமின் கே பற்றாக்குறையை போக்க இந்த முட்டை கோஸை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்து வரலாம்.

நட்ஸ் : நட்ஸ் வகைகளில் 15.3 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இந்த பைன் நட்ஸை சாலட், சூப் மற்றும் இதர உணவுகளில் சேர்த்து வரலாம். இதில் தாதுக்கள், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் காணப்படுகிறது.

பூசணிக்காய் : பூசணிக்காயில் 19.6 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இந்த பூசணிக்காய் பழத்தை ஸ்மூத்திகள், சூப்கள் மற்றும் சாஸ்களில் பயன்படுத்தி வரலாம். இதன் மூலம் நல்ல விட்டமின் கே ஆதாரத்தை நாம் பெறலாம்.

மாதுளை ஜூஸ் : மாதுளை பழ ஜூஸில் 19.4 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இது தினசரி தேவையில் 21.5% தேவையை பூர்த்தி செய்கிறது. மாதுளை பழம் ஜூஸில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வளரும் இளம் பருவத்தினர் சந்திக்கும் சவால்களும்.. அதனை எதிர்கொள்ளும் வழிகளும்.!

March 08, 2023 0

 ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இளமை பருவம் என்பது மிகவும் முக்கியமான அதேசமயம் அதிக கவனத்துடன் கடக்க வேண்டிய ஒரு பருவமாகும். இந்த காலத்தில் தான் உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு வித மாற்றங்கள் உண்டாகக்கூடும். இளமைப் பருவத்தினருக்கு அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோருக்கும் இது ஒரு சவாலான காலகட்டமாகத்தான் இருக்கும்.

மன அழுத்தம் : இன்றைய காலத்தில் இளம் பருவத்தினர் மனநிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பதுதான் மிக முக்கியமான ஒரு சவாலாக இருந்து வருகிறது. பல்வேறு இளம் வயதினரும் மிக எளிதாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுகின்றனர். மேலும் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதமும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், கல்வியில் ஏற்படும் மன அழுத்தம், உளவியல் ரீதியான பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன. இவற்றில் இருந்து வெளிவருவதற்கு கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு துணை தேவைப்படுகிறது.

போதை பழக்கம் : இளம் பருவத்தினர் இடையே போதை பொருள் பழக்கமானது மற்றொரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மது அருந்த ஆரம்பித்து விட்டாலே சுய ஒழுக்கம் சீர்குலைவது மட்டுமல்லாமல் அவர்களின் பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் உண்டாகும்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, பாதுகாப்பற்ற உடலுறவு போன்ற பல்வேறு விதமான ஆபத்தான செயல்களில் அவர்கள் ஈடுபடுவார்கள். இவை உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே முடிந்த அளவு இடம் பெறுவதற்கு மது அருந்துவதன் தீய விளைவுகளை பற்றியும் அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு தேவையான அறிவுரைகளை வழங்கியும் அவர்களின் வாழ்க்கையை சீர்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும்.

பாலுறவு பற்றிய சரியான ஒரு புரிதலை இளம் வயதிலேயே அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். எவ்வாறு பாதுகாப்பாக உடலுறவு கொள்வது என்பதை பற்றியும் எச்ஐவி போன்ற நோய் தொற்றுக்களை பற்றியும் இளம் வயதிலேயே அவர்களுக்கு புரிய வைப்பதின் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து அவர்களை காப்பாற்ற முடியும்.

உடற்பயிற்சி : தினசரி உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை பற்றி அவர்களுக்கு புரியவைப்பது முக்கியமானது. ஏதேனும் ஒரு விளையாட்டுப் போட்டிகளில் அவர்களை ஈடுபட வைக்க வேண்டும். சரியான உணவுப் பழக்கத்தை பற்றியும் எவ்வாறு நம்மை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பதை பற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். உடற்பயிச்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி எடுத்துரைக்க வேண்டும்.

உணர்சிவசப்படுதல் : இன்றைய இளைஞர்கள் அதிக அளவில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருக்கிறார்கள். எவ்வாறு உணர்வுகளை சரிவர வெளிப்படுத்துவது என்பதை பற்றிய புரிதல் அவர்களுக்கு இருக்க வேண்டும். மேலும் அவர்கள் மனதளவில் சோர்வாக இருக்கும் சமயத்தில், அவர்களின் சவாலான காலகட்டங்களை கடப்பதற்கு பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் அவர்களுக்கு உதவி செய்வது அவசியமாகும்.

மேலே கூறிய இந்த மன ஆரோக்கியம் போதை பொருள் பழக்கத்தை பற்றி விழிப்புணர்வு உடல் இயக்கம் மற்றும் சுகாதாரங்கள் பற்றிய கல்வி பாலுறவு பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றை பற்றி நிலம் பருவத்தினர் சரியாக புரிந்து கொண்டாலே அவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் அறிவாற்றலுடனும் வளருவார்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

March 7, 2023

தேனி மாவட்ட பெண்களுக்கு அருமையான வாய்ப்பு.. தொழில்முனைவோராக்கும் இலவச பயிற்சி மையம் பற்றி தெரியுமா?

March 07, 2023 0

 தேனி தாலுகா அலுவலகம் எதிர்ப்புறம் அமைந்துள்ள கனரா வங்கி தேனி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புற பொதுமக்களை தொழில் முனைவோராக்கும் நோக்கத்தோடு பல்வேறு இலவச தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற பெண்களை தொழில் முனைவோராக்கும் நோக்கத்தோடு 30 நாட்கள் நடைபெறும் இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற வருகிறது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் தேனி அரண்மனை புதூர், திம்மரச நாயக்கனூர் , அல்லிநகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு இலவச பயிற்சியை கற்று வருகின்றனர். இந்த பயிற்சி வகுப்பில் பெண்களுக்கு தையல் பயிற்சி, எம்ராய்டரி, ஆரி ஒர்க், ஓவியம், துணிகளில் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட பெண்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

RSETI ( RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE )-ல் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள் மூலம் தரமான முறையில் பயிற்சி அளிக்கப்படுவதாக பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வரும் பெண்கள் கூறினர். தற்போது தையல் தொழில் அதிகமாக வளர்ந்து வரும் நேரத்தில் பெண்கள் தையல் மற்றும் எம்பிராய்டிங் தொழில் பயிற்சியை தேர்ந்தெடுத்து பயிற்சி பெற்று வருகின்றனர் எனவும், பயிற்சி வகுப்பின் நிறைவு நாளில் பயிற்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு தேர்வில் வெற்றி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என பயிற்சியாளர் துர்கா பாரதி கூறினார்.

மேலும் பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சிகள் உதவும் எனவும், தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டும் பெண்களுக்கு அரசின் திட்டங்கள் மூலம் கடன் உதவி வாங்குவதற்கும் உதவிகள் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து மேலும் தகவல்கள் அறிய விரும்புவோர் 95856 68811 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

March 6, 2023

பெண்கள்... திருமணத்திற்கு பிறகும் வேலை தேடலாம்..! வாழ்க்கையில் ஜெயிக்கலாம்...!

March 06, 2023 0

 திருமணமான பெண்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறார், பெங்களூருவை சேர்ந்த நேஹா பகாரியா. அதற்காக பிரத்யேக இணையதளத்தையும் வடிவமைத்திருக்கிறார். இதன் மூலம் வேலைவாய்ப்புடன், பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். இந்த இணையதளம் முழுக்க, முழுக்க பெண்களுக்கானது. 

கடந்த 7 ஆண்டுகளாக இலவச சேவையை மேற்கொண்டு வரும் நேஹாவிடம் பேசினோம். ''நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு திருமணமாகி, இரு மகன்கள் இருக்கிறார்கள். நான் பென்சில்வேனியா நாட்டில் பார்மசுட்டிகல் படித்ததோடு, மனிதவள மேம்பாட்டு துறையிலும் பட்டம் பெற்றேன். பின்பு மருத்துவ துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றினேன். 

திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தியதால் அலுவலக வேலையில் இருந்து விலகி இருந்தேன். என்னுடைய மகன்கள் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தவுடன், எனக்கான ஓய்வு நேரம் அதிகரித்தது. அதனால் மீண்டும் பணியாற்ற ஆரம்பித்தேன். ஆனால் பழைய வேகமும், புதுப்புது தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கும் தன்மையும் குறைந்திருந்தது. அதனால் கால ஓட்டத்திற்கு ஏற்ப என்னை நானே புதுப்பிக்க (அப்டேட்) வேண்டியிருந்தது. அந்த காலகட்டத்தில்தான் என்னை போன்று சிறு இடைவேளைக்கு பின்பு பணியாற்ற விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதிப்படுத்த ஆசைப்பட்டேன். அப்படி உருவானதுதான் ஜாப்ஸ் பார் ஹெர்'' என்றவர், பிரத்யேக இணைய தளத்தின் செயல்பாடுகளை விளக்குகிறார். ''இந்த இணையதளம் முழுக்க முழுக்க பெண்களுக்கானது. குறிப்பாக திருமணம், இல்லற வாழ்க்கை, குழந்தைகள் என குடும்ப பந்தம் ஏற்படுத்திய இடைவேளைக்கு பின்பு வேலை தேடும் குடும்ப தலைவிகளுக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தக்கூடியது. மேலும் புதிதாக வேலைத்தேடும் கல்லூரி மாணவிகளுக்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் இருக்கும் ஐ.டி. நிறுவனங்களும், தொழில்துறை நிறுவனங்களும் இந்த இணையதளத்தோடு இணைந்து செயல்படுவதால், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படுகின்றன. கடந்த வருட கணக்கின்படி, 50 ஆயிரம் பெண்கள் 'ஜாப்ஸ் பார் ஹெர்' இணையதளத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். 

7 ஆயிரத்து 500-க்கும் அதிகமான நிறுவனங்கள் எங்கள் இணையதளத்தோடு கைகோர்த்திருப்பதால், பெண்கள் விரும்பும் வேலையை, அவர்கள் விரும்பும் பகுதிகளிலேயே பெற முடிகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூரு பெண்கள் அதிகமாக பயன்பெறுகிறார்கள்'' என்றதோடு, இணையதளம் மூலம் திறன் வளர்ப்பு பயிற்சிகளையும் இலவசமாக வழங்குகிறார். அதை அவரே விவரிக்கிறார். 

'வழக்கமான வேலை தேடல் இணையதளங்களை போன்றே, எங்கள் இணையதளத்தில் ஒரு கணக்கு தொடங்கி, தங்களை பதிவு செய்து கொண்டால் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் பகிரப்படும். மேலும் சுயவிவர பட்டியல் (ரெஸ்யூம்) உருவாக்குவதில் தொடங்கி, பணிக்கான அழைப்பாணை பெற்றுத் தருவது வரை அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம். 

எல்லா பெண்களும், எல்லா துறைகளிலும் சிறப்பானவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில பெண்கள் நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள். ஆனால் அவர்களது ஆங்கில எழுத்து நடையில் நிறைய தவறுகள் இருக்கும்.

சில பெண்களுக்கு ஆங்கிலம் நன்றாக எழுத வரும், ஆனால் அவர்களால் திறம்பட பேச முடியாது. இதில் இரண்டிலும் சிறப்பானவர்களுக்கு, தேர்வாளர்களின் கேள்விகளுக்கு தைரியமாக பதில் சொல்ல முடியாது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிக்கல்கள் இருக்கின்றன. அதை தீர்த்து வைப்பதும் எங்களுடைய வேலை தான். 

வேலைதேடி வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதுடன், நேர்காணலில் சொதப்புபவர்களுக்கு தகுந்த பயிற்சியும் வழங்குகிறோம். 2015-ம் ஆண்டின் பெண்கள் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையதள சேவையில் வேலைவாய்ப்புடன், அது சம்பந்தமான எழுத்துத்திறன் பயிற்சி, பேச்சுத்திறன் பயிற்சி, மென்பொருள் பயிற்சி என எல்லாவற்றையும் இலவசமாகவே வழங்குகிறேன்'' என்றவர், 'இணையதள சேவையில், வேலைவாய்ப்பு பயிற்சிகள் எப்படி வழங்கப்படுகின்றன' என்ற கேள்விக்கும் பதிலளித்தார். 

''ஆன்லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இருமுறைகளில் வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்குகிறோம். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் இணையதள பக்கத்திலேயே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த வகுப்பில் பங்கேற்று, திறமைகளை வளர்த்து கொள்ள முடியும். அதேசமயம் இணையதள இணைப்பில் இருக்கும் துறை சார்ந்த வல்லுனர்களின் அறிவுரைகளையும் தனிப்பட்ட முறையில் கேட்கலாம். இது ஒரு ரகம் என்றால், ஆப்-லைன் வகுப்புகள் அடுத்த ரகம். 

இந்த வகுப்புகள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டும் பயன்பெறலாம். குடும்ப தேவைகளுக்காக சில பெண்கள் வேலை தேடுகிறார்கள். சிலர் சமூக அடையாளத்திற்காக பணியாற்றுகிறார்கள். சிலர் மன நிறைவிற்காக பணியாற்றுகிறார்கள். 

இப்படி ஒவ்வொரு பெண்களுக்கும் ஒருவிதமான தேவையிருப்பதால் குடும்ப தலைவிகளின் அலுவலக பணி, மன நிறைவான பணியாகவே அமைகிறது. 

* திருமணமான பெண்கள், அலுவலக வாழ்க்கையை விரும்புகிறார்களா?, அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்குமா? 

பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் இப்போது அதிகரித்திருக்கிறது. மனிதவள மேம்பாட்டு அதிகாரி, மென்பொருள் பொறியாளர், டீம் லீடர்... போன்ற முக்கிய பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அதனால் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து ஓரளவிற்கு செட்டில் ஆகியதும், மீண்டும் தங்களுடைய சமூக அங்கீகாரத்தை தேடுகிறார்கள். குறிப்பாக பிள்ளைகளுக்கு பள்ளிகளை தேடும்போதே, தங்களுக்கான புது அலுவலகத்தையும் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். மனைவியாக, தாயாக... 6 அல்லது 8 வருடங்கள் பணியாற்றிவிட்டு, அந்த பணியோடு புதிதாக கிடைத்திருக்கும் அலுவலக பணியையும் தொடருகிறார்கள்.

உங்களுக்கு காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கா? - இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்.!

March 06, 2023 0

 காபியால் நமக்கு ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளும் அளவு சரியாக இருக்க வேண்டும். காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல அதிகப்படியான காபி என்றைக்குமே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். காபி இல்லாமல் எந்த வேலைகளையும் செய்ய முடியாது என்றால், காபி எந்த அளவு அருந்த வேண்டும், எப்போது அருந்த வேண்டும், வெறும் வயிற்றில் காபி குடிப்பது நல்லதா போன்றவற்றை காபி பிரியர்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது.

ஏனெனில் அது அவர்களின் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவும். தொடர்ந்து காபி குடிப்பவர்களுக்கு நடுத்தரவயது மரணம் ஏற்படும் அபாயம் குறைவு என, ஹார்வர்ட் டி.எச்.சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது. இருப்பினும், நீங்கள் சரியான முறையில் காபி குடிக்க வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் காஃபிக்களில் செயற்கை காஃபின் சேர்க்கப்படுகிறது. இந்த காஃபின் மருந்து உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறையை பல வழிகளில் பாதிக்கிறது. காஃபின் உடலின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது இதனால் ஒருவரை ஆற்றலுடன் உணர வைக்கிறது. எனவே அதிகப்படியான காஃபின் உட்கொள்வது தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, உங்கள் தினசரி மூன்று முறைக்கு மேல் காஃபி பருகாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

நீங்கள் காபி அருந்துபவராக இருப்பின், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் காபி குடிப்பதன் விளைவாக உங்கள் உடல் அதிக சிறுநீரை உற்பத்தி செய்யலாம், இது உடலில் நீர் சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இதனால் சோர்வு, தலைவலி மற்றும் அறிவாற்றல் செயல்பாடு குறைபாடு போன்ற பலவிதமான தீங்கு விளைவிக்கும். எனவே காபி குடிப்பவர்கள் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது அவசியம்.

பில்டர் காபி குடிப்பவர்கள் காபி கொட்டைகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் நீங்கள் பழைய காபி கொட்டையை தேர்ந்தெடுத்தால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தரமான காபி கொட்டைகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

காபியுடன் சுவைக்காக கெட்டியான கிரீம், சூடான சாக்லேட் போன்றவற்றை சேர்த்து கொள்வது எடை அதிகரிப்பு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் ஆரோக்கிய விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆதலால், இனி காபியில் கிரீம் சேர்த்து அருந்தாதீர்கள்.

உங்கள் காபியில் அதிகப்படியான சர்க்கரை சேர்ப்பதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், இது இறுதியில் கொழுப்பின் அதிக திரட்சியை விளைவிக்கும், இது கொழுப்பு கல்லீரல் நோயாக உருவாகலாம் மற்றும் நீரிழிவு நோய்க்கும் பங்களிக்கிறது. மேலும், இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. சூடான நீர், தேநீர் மற்றும் காபி போன்ற சூடான பானங்களை அதிகமாகவோ அதிக சூடாகவோ குடிப்பதால், உணவுக்குழாய் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் அதிகரிக்கும். எனவே காபியை அளவாக பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

நீங்கள் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியிருக்கும் சூழல் ஏற்படும் போது காபி குடிப்பது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் தூங்க செல்வதற்கு முன் காபி குடிப்பது என்பது நல்லதல்ல. ஏனெனில் தூக்கம் சரியாக இல்லாமல் அதன் காரணமாக ஒற்றைத் தலைவலி, உடற் சோர்வு, பதற்ற மனநிலை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip