Search

பீட்ரூட் ஜூஸ் அருந்துவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? இந்த சம்மருக்கு ஏற்ற ட்ரிங்க்..!


வெயில் காலம் தொடங்கியுள்ளதையடுத்து நம் உடலை குளுமையாக வைத்துக் கொள்ளவும், தாகம் தணித்துக் கொள்ளவும் நாம் வெவ்வேறு விதமான ஜூஸ்களை தினந்தோறும் அருந்தி வருகிறோம். சாதாரணமாக கோடை காலங்களில் சாலையோரக் கடைகளில் கிடைக்க கூடிய கரும்பு ஜூஸ், இளநீர், நுங்கு பதநீர், தர்பூசணி, சாத்துக்குடி ஜூஸ் போன்றவை தான் நம்முடைய முதன்மையான தேர்வுகளாக இருக்கும். 


ஆனால், நிச்சயமாக நீங்கள் சாலையோரக் கடைகளில் அல்லது ஜூஸ் கடைகளிலும் கூட பீட்ரூட் ஜூஸ் விற்பனை செய்யப்படுவதை பார்த்திருக்க மாட்டீர்கள். ஆக, பீட்ரூட்டிலும் கூட ஜூஸ் அடித்து குடிக்க முடியும் என்பதோ, அதன் மூலமாக கிடைக்கும் பலன்கள் குறித்தோ நமக்கு தெரிந்திருக்காது. வெளியிடங்களில் கிடைக்காவிட்டாலும் நம் வீட்டிலேயே பீட்ரூட் ஜூஸ் தயாரித்து அருந்தலாம். இதன் மூலமாக என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்தச் செய்தியில் இப்போது பார்க்கலாம்.

சருமத்திற்கு நல்லது : நமது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் பீட்ரூட்டில் உள்ளது. ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்து, விட்டமின் சி போன்றவை பீட்ரூட்டில் நிறைந்துள்ளன. இது சரும பாதிப்பை தடுத்து, முடி உதிர்வை நிறுத்தும். பீட்ரூட் சாறு அருந்துவதால் நமது அழகுத் தோற்றமும் மேம்படும்.

நம் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செல்களை பீட்ரூட்டின் விட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துக்கள் தடுத்து நிறுத்தும். சருமத்தில் ஏற்படக் கூடிய சுருக்கம், கரு வளையங்கள் மற்றும் இதர வயது முதிர்வு அறிகுறிகள் ஆகியவற்றை பீட்ரூட் சாறு முறியடிக்கும். பீட்ரூட் ஜூஸ் அருந்துவதால் நமது சருமத்திற்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமம் வழக்கத்தைக் காட்டிலும் பிரகாசமாக காட்சியளிக்கும்.

தலைமுடி ஆரோக்கியம் : பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட் சத்து, விட்டமின் சி ஆகியவை நிறைவாக உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே முடி வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியவை மற்றும் முடி உதிர்வை தடுக்கும். இது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் அனைத்து அழற்சிகளுக்கும் இது தீர்வை கொடுக்கும்.

கழிவுகளை வெளியேற்றும் : நம் உடலில் உள்ள கழிவுகளை இயற்கையான சுத்திகரிக்கக் கூடிய உணவுப் பொருட்களில் பீட்ரூட்டிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. நச்சுக்கள் வெளியேறினால் சருமம் தெளிவானதாக காட்சியளிக்கும். இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படும். செரிமானத் திறன் மேம்படும்.

உயர் ரத்த அழுத்தம் குறையும் : உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கக் கூடிய நபர்களுக்கு பீட்ரூட் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தினந்தோறும் காலை பொழுதில் பீட்ரூட் சாறு அரை கிளாஸ் அளவு குடித்து வர ரத்த அழுத்தம் வெகுவிரைவில் கட்டுக்குள் வரும். இது மட்டுமல்லாமல் பீட்ரூட் நமது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

பச்சை, கருப்பு அல்லது சிவப்பு திராட்சை... இந்த மூன்றில் எது ஆரோக்கியம் நிறைந்தது..?

 



அன்றாடம் சாப்பிடும் பழ வகைகளில் திராட்சையும் கட்டாயம் இடம் பெறும். இதில் நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படும் ஆற்றல் என பல நன்மைகளை கொண்டுள்ளதால் அன்றாடம் ஒரு கப் சாப்பிடுவது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆய்வுகளிலும் ஒரு நாளைக்கு 3 கப் திராட்சையை ஸ்நாக்ஸ் போல் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த முடியும் என்கிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்... திராட்சை வாங்கலாம் என கடைக்கு சென்றால் அங்கு மூன்று வித திராட்சையும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் விலை மலிவானது எது என்பதை விட எது ஆரோக்கியமானது என்பதே முக்கியம். அந்தவகையில் நீங்களும் கடைக்கு திராட்சை வாங்கும்போது குழம்புகிறீர்கள் எனில் உங்களுக்காகவே இந்த கட்டுரை.

பச்சை திராட்சை : பச்சை திராட்சை அதிகமாக கிடைக்கக் கூடியது மற்றும் மலிவு விலையில் கிடைக்கும். இது அதிக சுவை கொண்டது என்பதால் குழந்தைகள் கூட விரும்பொ சாப்பிடுவார்கள். ஆய்வுகளின் படி பச்சை திராட்சையில் 104 கலோரிகள் உள்ளன. 1.4 கிராம் புரோட்டீன், 0.2 கிராம் கொழுப்பு மற்றும் 27.3 கிராம் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இந்த பச்சை திராட்சை விட்டமின் சி , விட்டமின் கே மற்றும் பொட்டாசியம் நிறைந்தது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் சிறந்தது. விட்டமின் கே இருப்பதால் இரத்தம் உறைதல் பிரச்சனை, எலும்பு பிரச்சனைகளுக்கு பலனளிக்கிறது. பொட்டசியம் இருப்பதால் இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கருப்பு திராட்சை : கருப்பு அல்லது ஊதா நிறம் கொண்ட இந்த திராட்சை ஜூஸ் வகைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும். குறிப்பாக ஒயின் தயாரிக்க இந்த திராட்சைதான் பயன்படுத்தப்படுகிறது. இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்தது என்பதால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஒரு கப் கருப்பு திராட்சையில் 104 கலோரி, 1.1 கிராம் புரோட்டீன் , 02 கிராம் கொழுப்பு மற்றும் 27.3 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. இதுவும் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே -வுக்கு சிறந்த மூலமாக உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சில வகையான புற்றுநோய்களுக்கும் பலனளிக்கிறது.

சிவப்பு திராட்சை : இது இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவை கொண்டது. இது ஃபுரூட் சாலட், ஜாம் , ஜெல்லி தயாரிப்புகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ரெட் ஒயின் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கப் சிவப்பு திராட்சையில் 104 கலோரி, 1.1 கிராம் புரோட்டீன் , 02 கிராம் கொழுப்பு மற்றும் 27.3 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. பச்சை மற்றும் கருப்பு திராட்சையை போல் இதிலும் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே உள்ளன .

கருப்பு, சிவப்பு, பச்சை... எந்த திராட்சை சிறந்தது..? 

இந்த மூன்று நிற திராட்சையிலும் நன்மைகள் என்பது ஒரே பண்புகளை கொண்டுள்ளன. கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளில் மட்டும் ரெஸ்வெராட்ரோல் (resveratrol) என்னும் பண்பு உள்ளது. இது எலும்பு ஆரோக்கியம் , இதய ஆரோக்கியம் மற்றும் சில வகையான புற்றுநோய் செல்களை தடுக்க உதவுகிறது. எதுவாயினும் மூன்றுமே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதால் மூன்றையும் கூட சாப்பிடலாம் அல்லது உங்களுக்கு இதில் பிடித்த சுவை எதுவோ அதையே சாப்பிடலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதற்கான முக்கிய காரணங்கள் இதுதான்.. முதலில் இதை தெரிந்து கொள்வோம்..!

 

பண்டைய கால மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உறுதுணையாக இருந்தது சிறு தானியங்கள் தான். காலம் மாற மாற மக்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரமும் மாற ஆரம்பித்ததினால் சிறு தானியங்களின் மவுசு குறைந்து மக்கள் அரிசி,கோதுமையை மிக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மக்கள் பல்வேறு உடல் நல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிட்டது. இதன் விளைவு தான் இன்றைக்கு பண்டைய கால உணவுமுறைக்கு மக்கள் மாறத் தொடங்கி விட்டனர்.

அதற்கேற்றால் போல் தான் 2023-யை ஐக்கிய நாடுகள் சபை சிறுதானியங்களின் சர்வதேச ஆண்டாக அறிவித்த நிலையில், இந்தியாவும் இதை முன்மொழிந்தது. இந்நிலையில் தான் மக்கள் இந்த தனித்துவமான சிறுதானியங்களால் என்னென்ன நன்மைகள் மற்றும் எப்படியெல்லாம் உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக அமைகிறது என்பது குறித்து பரவலாக ஆராய தொடங்கி விட்டனர். சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கே நாமும் அறிந்து கொள்வோம்.

கம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு,சோளம், கொள்ளு போன்றவை சிறுதானியங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. மிகக்குறுகிய காலத்தில் மற்றும் வறட்சி நேரத்தில் வளரக்கூடியது. இதில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டசத்துகள் அதிகளவில் உள்ளது. இதோடு பல நோய்களுக்கும் மருந்தாக இவை அமைகிறது.

சிறுதானியங்களில் உள்ள புரோபயாடிக்குள் : பொதுவாக புரோபயாடிக்குள் என்பது செரிமான அமைப்பை திறம்பட வேலை செய்ய உதவும் ஒருவகை புரதம் ஆகும். இது சிறுதானியங்களில் அதிகளவில் உள்ளதால், நமது குடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமான பிரச்சனையின்றி வாழவும் உதவியாக உள்ளது. எடை இழப்பிற்கும் உறுதுணையாக உள்ளது.

நீரழிவு பிரச்சனைக்குத் தீர்வு : நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் குறைந்த கிளைசெமிக் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் திணை, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சிறுதானியத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை இருப்பதால், ரத்த குழாய்களில் கொழுப்புகள் சேராது. மேலும் ஒற்றை தலைவலி மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது.

உடல் பருமன் : சிறுதானியங்களில் நார்சத்து, கொழுப்பை கரைக்க உதவியாக உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி3 இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொலாஸ்டராலைக் குறைக்க உதவுகிறது. இதோடு சிறுதானியத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் காயங்களைக் குணப்படுத்தவும் உதவியாக உள்ளது.

இதுப்போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால்தான், சிறுதானியங்களை நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கொத்தமல்லி விதையை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

 கொத்தமல்லி விதைகளை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இந்த கொத்தமல்லி விதைகளை முதல் இரவே 4 டீஸ்பூன் அளவு ஊறவைக்கவேண்டும். இதனை மறுநாள் காலையில் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.

கொத்தமல்லி விதைகளில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கண்களில் ஏற்படும் அரிப்பு, அழற்சி மற்றும் கண் சிவத்தல் போன்றவற்றை சரியாக்க பயன்படுகிறது. கொத்தமல்லி விதை ஊற வைத்த நீர் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை இதில் உள்ளது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த தண்ணீரை தினமும் குடிக்கலாம்.

இரவு தூங்கும் முன் தனியா விதைகள் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை குளிர்ந்த நீரில் ஊற வைத்து அந்த நீரை காலை எழுந்ததும் கண்களில் தெளித்து கழுவுங்கள். இந்த நீர் கண்களுக்கு நன்மை பயக்கும். இப்படி தினமும் செய்தால் கண்களில் தொற்று ஏற்படாது.

மாதவிடாய் கால பிரச்சனைகள் 6 கிராம் கொத்தமல்லி விதைகளை 500 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, வெதுவெதுப்பான நிலையில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன் சீராக்கப்பட்டு, மாதவிடாய்  சுழற்சி சிறப்பாக நடைபெற உதவும்.

சில பெண்கள் வெள்ளைப்படுதல் பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். அவர்கள், இந்த தனியா ஊறவைத்த தண்ணீரை வாரத்தில் இரண்டு முறை குடித்து வந்தால், இந்த பிரச்சனை தீரும். 3 கிராம் தனியா விதை பொடியை 150 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இவ்வாறு தண்ணீரை குடிப்பதால் எலும்புகள் வலுவாகும். மேலும் எலும்பு சம்பந்தமான நோய்கள் நெருங்காது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஹெர்னியா என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது, இதன் வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள்..!

 ஹெர்னியா என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஹெர்னியா நோயானது தமிழில் குடலிறக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. பலவீனமான வயிற்றின் தசைச்சுவர் துவாரம் வழியே குடலின் ஒரு பகுதி அல்லது கொழுப்பு திசு வெளியில் வயிற்று பகுதியில் பிதுங்கி தெரியும் பிரச்சனை ஹெர்னியா என குறிப்பிடப்படுகிறது.

ஹெர்னியாவை பற்றி இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் வலுவிழந்து பலவீனமாக இருக்கும் வயிற்று பகுதியின் அடிப்புறச் சுவர் வழியே சிறுகுடல் பிதுக்கி அல்லது துருத்தி கொண்டு, வெளிப்புறமாகப் பார்க்கும்போது புடைப்பாக இருக்கும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என கூறப்படுகிறது. ஹெர்னியா பிரச்சனையானது பொதுவாக பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஹெர்னியாவானது மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் உருவாகிறது. இது வழக்கமாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது, அல்லது சில நேரங்களில் மிக குறைவான அறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்துகிறது. ஹெர்னியாவால் தோன்றும் கட்டி அல்லது புடைப்பு நோயாளி படுத்திருக்கும்போது சில நேரங்களில் மீண்டும் உள்ளே தள்ளப்பட்டு மறைந்துவிடும். இருமும் போது ஹெர்னியா வெளிப்படக்கூடும்.

ஹெர்னியாவின் வகைகள்:

Inguinal hernia - இந்த வகையான ஹெர்னியாவானது, கொழுப்பு திசு அல்லது குடலின் ஒரு பகுதி தொடை வழியே ஏற்படுகிறது. குடலிறக்கம் ஒரு பக்கம் அல்லது இரு பக்கங்களிலும் ஏற்படலாம். இது மிகவும் பொதுவான வகை குடலிறக்கம் மற்றும் இது முக்கியமாக ஆண்களை பாதிக்கிறது.

What is Hernia | Dr. Abhimanyu Kapoor

Femoral hernia - குடல் திசுக்கள் தொடை சுவற்றை நோக்கி தள்ளப்படுவது பெமோரல் ஹெர்னியா எனப்படுகிறது. அதாவது இடுப்பு அல்லது உள் தொடையின் தசைச் சுவரில் உள்ள ஒரு பலவீனமான இடத்தில் குடல் திசுக்கள் வெளியே தள்ளப்படும்போது ஏற்படுகிறது.

Umbilical hernia - இந்த வகை ஹெர்னியாவானது கொழுப்பு திசு அல்லது குடலின் ஒரு பகுதி தொப்புளின் வழியே பிதுங்கி நீளும் போது ஏற்படுகிறது. தொப்புளில் உள்ள உறுதியான திசு மிகவும் மெல்லியதாகி, இடைவெளியை ஏற்படுத்தும்போது இந்த ஹெர்னியா ஏற்படுகிறது. வயிற்றில் மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் அல்லது கர்ப்பம் மற்றும் உடல் பருமன் காரணமாக பெரியவர்களுக்கு இது ஏற்படுகிறது.

பிற வகைகள்:

Incisional hernia - முந்தைய அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட வடு மூலம் கட்டி உருவாகிறது

Epigastric hernia - இந்த வகை ஹெர்னியா என்பது குடலின் ஒரு பகுதி வயிற்று தொப்புளுக்கு மார்புக்கும் இடையில் உள்ள வயிற்று தசைகள் வழியாயே குடலின் ஒருபகுதி வெளியே தள்ளப்படும்போது ஏற்படுகிறது.

Diaphragmatic hernia - இந்த வகை ஹெர்னியா உதரவிதானத்தில் ஒரு துளை இருக்கும் ஒரு பிறப்பு குறைபாடு ஆகும். அடிவயிற்றில் உள்ள உறுப்புகள் (குடல் மற்றும் கல்லீரல் போன்றவை) உதரவிதானத்தில் உள்ள துளை வழியாக மேல்நோக்கி மார்புக்குள் செல்லலாம். வயிற்றில் உதரவிதானம் சரியாக வளரவில்லை என்றால் இது குழந்தைகளை பாதிக்கலாம்.

Muscle hernia - இந்த வகை ஹெர்னியாவில் தசையின் ஒரு பகுதி திசு வழியே புடைத்து நிற்கும். இது விளையாட்டு காயத்தின் விளைவாக பொதுவாக கால் தசைகளில் ஏற்படுகின்றன.

கண்டறிவது எப்படி.?

பாதிக்கப்பட்ட பகுதியை பரிசோதிப்பதன் மூலம் மருத்துவர் எந்த வகை ஹெர்னியா என்பதை கண்டறிவார், தவிர நோயாளி ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கப்படுகிறார். பாதிப்பின் அளவை உறுதிப்படுத்த நோயறிதலை செய்த பின் ஹெர்னியாவை சரிசெய்ய அறுவை சிகிச்சை தேவையா என்பதை அறுவை சிகிச்சை நிபுணர் தீர்மானிப்பார்.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தீர்மானிக்கும்போது ஹெர்னியாவின் வகை மற்றும் ஹெர்னியா ஏற்பட்டுள்ள பகுதிகள் கருத்தில் கொள்ளப்படும் காரணிகளாக இருக்கின்றன. ஏனெனில் சில வகையான ஹெர்னியாக்கள் மற்றவற்றை விட குடல் அடைப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

அறுவை சிகிச்சை எப்போது.?

அறிகுறிகள் கடுமையாக இருந்தாலோ அல்லது மோசமாகினாலோ அல்லது ஹெர்னியா நோயாளியின் இயல்பான செயல்பாட்டு திறனைப் பாதித்தால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படலாம்.

பின்வரும் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவசர சிகிச்சை...

வயிற்றில் திடீர் மற்றும் கடும் வலி மற்றும் ஹெர்னியாவால் மலம் கழிப்பதில் சிரமம், மீண்டும் மீண்டும் வாந்தி, ஹெர்னியா பாதிக்கப்பட்ட பகுதிகளில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவசர சிகிச்சை தேவைப்படுகிறது.

Hernia Operation - Types, Risks, Preparation, Recovery | Sahyadri Hospital

சர்ஜரி:

ஓபன் சர்ஜரி - கட்டி அல்லது புடைப்பை மீண்டும் வயிற்றுக்குள் தள்ள செய்யப்படும் சர்ஜரி

லேப்ராஸ்கோபி - இது மிகவும் கடினமான ஒன்று என்றாலும் திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் செய்யப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அதிகப்படியான பாதிப்பை உருவாக்கும் பக்கவாத நோய்

 மூளை... மனித உடலின் தலைமைச் செயலகம் இதுதான். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் ஓர் ஒழுங்கமைவு செயல்பாட்டில் இயங்கச்செய்யும் மைய செயலகமாக மூளை செயல்பட்டு வருகிறது. உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகளின் மூலம் உறுப்புகளை இயங்கச்செய்யும் இதன் செயல்பாடுகள் ரத்த ஓட்டத்தை சார்ந்தே நடைபெறுகிறது. எலும்பு மற்றும் தசையால் சூழப்பட்ட உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்குவதற்கு ரத்த குழாய்களும், நரம்பு மண்டலமும் முக்கியமானதாகும். இந்த ரத்த குழாய்களில் ஏற்படும் திடீர் அடைப்பும், ரத்த கசிவும் பக்கவாதம் எனும் (உடல் செயல்பாடு இழப்பு) நோயை உருவாக்குகிறது.


மைய செயலகமான மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகவே 85 சதவீதம் பாதிப்பு உண்டாவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை 4 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவர்களின் உயிருக்கு மிகவும் பாதுகாப்பானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்தவொரு முன் அறிகுறியும் இன்றி உருவாகும் இந்த நோயால் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

உடலின் செயல்பாடுகளை அசைவற்று நிறுத்தி, ஓரிடத்தில் இயக்கமில்லாமல் முடங்கச் செய்யும் பக்கவாதமானது, உலகில் அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் இரண்டாவது நோயாக கருதப்படுகிறது. சர்க்கரை நோய், இதய கோளாறு, சீரற்ற ரத்த அழுத்தம் உள்ளிட்ட முக்கிய காரணங்களால் ஏற்படும் பக்கவாத நோயினால் உலகில் ஆண்டுக்கு 6 கோடி பேர் பாதிக்கப்படுவதாகவும் அதில் ஒன்றரை கோடி பேர் மரணத்தை சந்திப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

BE FAST- என்கிற அறிகுறிகளே 90-95 சதவீதம் பக்கவாத பாதிப்பு இருப்பதை உறுதி செய்யும் கூறுகளாகும். 

B- Balance- நிதானமின்றி செயல்படுதல் 

E- Eye vision- பார்வை மங்குதல்

F- Face- முகத்தில் ஒரு பகுதி அசைவற்றும் மறுபகுதி அதிக அசைவுடனும் இயங்குதல் 

A- Arm- கை, தோள்பட்டைகள் முழுமையாக செயல்படாமல் போவது 

S- Speech- பேச்சு குளறல் 

T- Time- விரைந்து நேரத்தில் மருத்துவமனை அணுகுதல் இவ்வாறு அதிகப்படியான பாதிப்பை உருவாக்கும் பக்கவாத நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 29-ந் தேதி உலக பக்கவாத தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 உடல் உறுப்புகளின் செயலினை நிறுத்தி உயிரை பறிக்கும் பக்கவாத நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், அதை பற்றிய விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்த இந்நாளில் இருந்து நாமும் செயலாற்றுவோம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

காஃபி குடிக்க சரியான நேரம் எது தெரியுமா?

 காஃபி என்றாலே நம் அனைவருக்கும் பிடித்த பானம். காலையில் எழுந்ததும் ஒரு கப் காஃபி குடித்தால் தான் அன்றைய நாளே சிலருக்கு துவங்கும். காஃபி என்பது  ஆற்றலை வழங்கும் ஒரு பானமாக கருதப்படுகிறது. புத்துணர்ச்சி தருவதாலேயே காஃபி குடிக்க பலர் விரும்புகிறார்கள். காஃபி பிரியர்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் காஃபி குடிப்பார்கள். இருப்பினும், உங்கள் காஃபி நுகர்வில் கவனம் செலுத்தாவிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தில் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒரு நாளைக்கு அதிகமான கப் காஃபி குடிப்பதால் உங்கள் உடலில் காஃபின் ஏற்றப்படுகிறது. அதிகப்படியான காஃபின் நுகர்வு பல சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்தும். அப்படியானால் நீங்கள் தினமும் எவ்வளவு காஃபி குடிக்கலாம்? எந்த சமயத்தில் குடிக்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

காஃபி குடிக்க சிறந்த நேரம் எது?

காலை எழுந்ததும் காஃபி குடிப்பதால் நாள் முழுவதும் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை உங்களால் பெற முடியாது. காரணம், உங்கள் உடலில் உள்ள கார்டிசோலின் அளவு காலையில் மிக அதிகமாக இருக்க வேண்டும். இது ஒருவரை விழித்திருக்கவும் ஆற்றல் மிக்கதாகவும் வைத்திருக்கும் மூலக்கூறாக அறியப்படுகிறது. ஆனால் காலையில் எழுந்தவுடன் காஃபி குடிப்பதால் கார்டிசோலின் உற்பத்தியை காஃபின் குறைத்துவிடும்.

கார்டிசோலின் அளவு அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் காஃபி குடித்தால், அது உங்கள் உடலில் கார்டிசோல் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. அதுவே கார்டிசோல் உற்பத்தி காலை 10 மணிக்கு பிறகு குறையும். எனவே, காஃபி குடிக்க விரும்புபவர்கள் 10 மணிக்கு மேல் அல்லது மதிய வேளையில் காஃபி குடிக்கவும். அதிலும், காலை உணவு சாப்பிட்ட பிறகு காஃபி குடிப்பது சிறந்தது என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் காஃபி குடிக்கும்போது, குறைந்த அளவு குடிப்பது தான் நல்லது. ஏனெனில் காஃபி குடித்த அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை இரத்த ஓட்டத்தில் காஃபின் உச்சம் பெறுகிறது. பின்னர் பல மணிநேரங்களுக்கு உடலில் காஃபின் அளவு உயர்ந்தே காணப்படும்.

எனவே, ஒவ்வொரு முறையும் காஃபி குடிக்கும் போது 2 அவுன்ஸ் அளவு குடிப்பதே சிறந்தது. அதேபோல, நீங்கள் மாலையில் எடுத்துக்கொள்ளும் காஃபியை மிகவும் தாமதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் மிகவும் தாமதமாக எடுத்துக் கொள்வதால் அது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஒரு கிளாஸ் பெருங்காய தண்ணீரில் 7 பிரச்சனைகளுக்கு பலன் கிடைக்கிறதா..? ட்ரை பண்ணி பாருங்க..!


பெருங்காயம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஈரான் , ஆஃப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் கூட பெருங்காயம் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்படி பெருங்காயத்தால் கிடைக்கும் நன்மைகள் காரணமாக அதன் பயன்பாடு அதிகரித்திருப்பதால் அதை இறக்குமதி செய்வதில் பல சிரமங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதில் இந்தியாவும் அடங்கும்.

எனவேதான் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையம் (CSIR) பெருங்காயத்தை இந்தியாவில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பயிரிட திட்டமிட்டுள்ளது. இது வெற்றிகரமாக நல்ல விளைச்சலை அளித்தது எனில் இதனால் பெருங்காய இறக்குமதிக்கு இந்தியா செலவு செய்யும் 900 கோடி (வருடத்திற்கு) சேமிக்க முடியுமாம்.

சரி விஷயத்திற்கு வருவோம்.. பெருங்காயம் இந்திய சமையலறையை ஆக்கிரமித்ததற்கு அதன் மணம் மட்டுமல்ல நன்மைகளும்தான் காரணம். குறிப்பாக அதில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடும் ஆற்றலும், நோய் அழற்சியை எதிர்த்து போராடும் குணமும் அதிகமாக உள்ளன.

பெருங்காயத் தண்ணீர் எப்படி உருவாக்க வேண்டும்..? ஒரு கிளாஸ் வெதுவெதுப்பாக தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதில் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பின் அதை பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். இப்படி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? ( குறிப்பு : ஒருவேளை உங்களுக்கு தண்ணீர் கலந்து குடிக்க பிடிக்கவில்லை எனில் மோரில் கலந்து குடிக்கலாம்.)

செரிமானத்தை தூண்டுகிறது : உங்களுக்கு செரிமானப் பிரச்சனை இருப்பின் பெருங்காயத் தண்ணீர் பலன் தரும். இது உடலின் செரிமானத்தை பாதிக்கும் நச்சுக்கள் இருப்பின் அதை நீக்கி செரிமான அமைப்பை சீராக செயலாற்ற உதவுகிறது. அதோடு வயிற்றின் பிஹெச் அளவை சமன் செய்வதால் குடல் இயக்கமும் சீராக இருக்கும்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது : பெருங்காய தண்ணீர் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. எனவே தேவையற்ற கொழுப்பு படிவதை தடுத்து உடல் இயக்கத்தை துரிதப்படுத்துகிறது.

சளிக்கு நல்லது : உங்களுக்கு சளி இருப்பின் வெதுவெதுப்பான நீரில் பெருங்காயம் கலந்து குடிப்பது உங்கள் மூச்சுக்குழாயில் உள்ள தொந்தரவுகளை சரி செய்து சளியை விரட்டுகிறது. இதனால் மூக்கடைப்பு , இருமல் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

தலைவலியை குறைக்கும் : அழற்சி எதிர்ப்பு பண்புகள் பெருங்காயத்தில் இருப்பதால் உங்கள் தலைவலி பிரச்சனைக்கு பலன் தரும். அதாவது இரத்தக் குழாயில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து தலைவலி தூண்டுதலை தடுக்கிறது.

மாதவிடாய் வயிற்று வலியை குறைக்கும் : நீங்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்கள் எனில் ஒரு முறை மாதவிடாய் சமயத்தில் வெதுவெதுப்பான பெருங்காயத்தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடித்துப்பாருங்கள். இது மாதவிடாயின் போது ஏற்படும் அடி வயிற்று வலிக்கு நல்ல ரிலீஃப் தரும்.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது : பெருங்காயம் கணைய செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இதனால் இரத்ததில் சர்க்கரை அளவை தானாகவே குறைத்துவிடும்.

உயர் இரத்த அழுத்ததை கட்டுப்படுத்துகிறது : இரத்த உறைதல் பிரச்சனைக்கு பெருங்காயம் நல்ல மருந்தாக இருக்கும். அதோடு இரத்த ஓட்டத்தை சீராக்கும். இவை சரியாக நிகழ்ந்தாலே இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ரூ. 50 ஆயிரம் வரை சம்பளம்: தூத்துக்குடி மாவட்ட அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு

 தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில்  காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஜீப் ஓட்டுநர், பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நியமனம் நடைபெறும்.

காலியிட விவரங்கள்: 

ஜீப் ஓட்டுநர்: 3

அலுவலக உதவியாளர்: 10

கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர், ஜீப் ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவுக் காவலர் பதவிக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வாகனங்களை ஓட்டியதற்க்கான முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள நிலை: ஜீப் ஓட்டுநர் பணிக்கு ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை சம்பளம் வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? இந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை நேரடியாக அலுவலங்களில் இருந்தும், தூத்துக்குடி மாவட்ட இணையதளம் thoothukudi.nic.inவாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை , மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), இரண்டாம் தளம் - கோரம்பள்ளம், தூத்துக்குடி. 628 101, தொலைபேசி எண் - (0461 - 2340579)  என்ற முகவரிக்கு எதிர்வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் மாலை 5.45 மணி வரை அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு பயத்தினால் உண்டாகும் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி..?

 

மாணவர்கள் அனைவரும் தங்களது ஆண்டு இறுதி தேர்வுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த சமயத்தில் தேர்வுகளை நினைத்து பல்வேறு மாணவர்களும் அதிக அளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சமயத்தில் தூங்காமல் கண் விழித்து படிப்பதும் சரியான உணவு பழக்கங்களை கடைபிடிக்காமல் இருப்பதும் நம் உடலுக்கு பல்வேறுவது பாதிப்புகளை உண்டாக்கும். முக்கியமாக இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதால் அவை நமது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றன. இதைப் பற்றி வல்லுனர்கள் கூறுகையில், தேர்வுகளின் போது உண்டாகும் “எக்ஸாம் ஸ்டிரஸ்” என்பது நம் அனைவருக்கும் உண்டாகக்கூடிய ஒரு விதமான மன அழுத்தம் தான். நம்மில் அனைவருமே இதனை கடந்து தான் வந்திருக்கிறோம்.

இந்த தேர்வு பயத்தையும், தேர்வினால் உண்டாகும் மன அழுத்தத்தையும் சில எளிய முறைகளை பின்பற்றுவதன் மூலம் தவிர்க்கலாம் என்று கூறுகிறார்கள்.

எளிதான திட்டமிடல்: நம் என்னென்ன பாடங்களை எப்போது படிக்க வேண்டும் என்பதை பற்றி திட்டங்களை முன்கூட்டியே வகுத்து அதன்படி நேர அட்டவனையை அமைக்க வேண்டும். முக்கியமாக மிகக் கடினமான பாடங்களை கடைசியாக படிக்கலாம் என்று நினைப்பதற்கு பதிலாக முதலிலேயே அவற்றை படித்து முடித்து விடுவதன் மூலம் கடைசி நேரத்தில் எளிதான பாடங்களை விரைவாக நாம் படித்து முடித்து விடலாம்.

இடைவெளி எடுத்துக் கொள்வது: நீண்ட நேரம் படிக்கும்போது அவ்வபோது தேவையான அளவு இடைவேளை எடுத்துக் கொள்வது நமது உடலையும் உடலையும் ரிலாக்சாக வைத்திருக்க உதவும். இந்த இடைவேளை நேரங்களில் உடற்பயிற்சி செய்வது, தியானம் செய்வது போன்ற மனதிற்கு இதமான மகிழ்ச்சி தரும் செயல்களை செய்யலாம்.

உதவியை நாடுவது: மாணவர்கள் தங்களைப் பற்றி விமர்சனம் செய்பவர்களை உடன் வைத்திருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் வெறுமனே உங்களை குறை கூறுபவர்களாக மட்டுமே அல்லாமல், உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி அதிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ள உதவுபவர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்களிடம் உள்ள குறைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்வதற்கு உதவும்.

பாட புத்தகங்களை சரியாக வைப்பது: உங்களது படிப்பு சம்பந்தப்பட்ட புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை சரியான இடத்தில் அடுக்கி வைப்பது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் எந்தெந்த பாடத்திற்கான புத்தகங்கள் எங்கெங்கு உள்ளன என்பதும், கடைசி நேரத்தில் ஏற்படும் தேவையற்ற பதட்டங்களையும் தவிர்க்க இது உதவும்.

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்: முடிந்த அளவு உடல் இயக்கத்தை அதிகரிக்க கூடிய விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபடுவது அவர்களது மனதையும் உடலையும் மகிழ்ச்சியாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும்.

இவை அனைத்திற்கும் மேல் மாணவர்கள தங்களுக்கு தேர்வினால் உண்டாகும் இந்த மன அழுத்தமானது மிக சாதாரணமானது என்பதை உணர வேண்டும். அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு சந்தோஷங்களை தவறாமல் அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip