Search

அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் வெளியீடு! - தேர்வானவர்கள் செய்ய வேண்டியது என்ன?

 

India post gds result 2023:  நாடு  முழுவதும் உள்ள 40,889 அஞ்சல் பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பதவிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் IndiaPost GDS Online என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து முடிவுகளை  தெரிந்து கொள்ளலாம்.

இந்த பதவிக்கு, எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merti List) தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதிகாரிகளின் எந்தவித நேரடித் தலையீடுகள் இல்லாமல், தொழில்நுட்ப உதவியோடு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் இடஒதுக்கீடு முறை இதில் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி? 

தமிழ்நாட்டில் மொத்தம் 3,164 தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வர்கள், வரும் மார்ச் 21ம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ் ஆவணங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Shortlist candidates பிரிவில், தமிழ்நாடு வட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்;

short listed candidates பெயர் பட்டியல் திரையில் தோன்றும். அதனை , பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு:

தகுதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வாயிலாக தகவல் பரிமாறிக் கொள்ளப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். சரிபார்ப்பு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள Divisional head முன்னிலையில் வரும் மார்ச் 21ம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ் ஆவணங்களை சரிபார்ப்பு செய்து கொள்ள வேண்டும்.

சரிபார்ப்பின் போது, தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் உறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்: பெண்கள் சேவை மையத்தில் பல்நோக்கு உதவியாளர் பணி

  அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் "சகி”- ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) செயல்படுகின்றது. அதில் பணிபுரிய, பல்நோக்கு உதவியாளர் ( Multipurpose Helper), பாதுகாவலர் (Security Guard) நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

காலியட விவரங்கள்:

பதவி - 2 பல்நோக்கு உதவியாளர்( Multipurpose Helper) மற்றும் 1 பாதுகாவலர் (Security Guard)


கல்வித் தகுதி: 8 வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி


வயது வரம்பு:  21- 40 வயதிற்குள் இருக்க வேண்டும்


தகுதி: நிர்வாக அமைப்பின் கீழ் பணி புரிந்தவராகவும்/சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும்; 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும்; உள்ளூரை சார்ந்தவராக இருக்க வேண்டும்; பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


சம்பளம்: பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு தொகுப்பு ஊதியமாக  ரூ. 6400 வரை வழங்கப்படும், பாதுகாவலர் பதவிக்கு தொகுப்பூதியமாக ரூ. 10, 000 வரை வழங்கப்படும்.



யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அரியலூர் மாவட்ட இணையதளத்தில் https://ariyalur.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி: " சகி ஒருங்கிணைந்த சேவை மையம், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்தா மருத்துவமனை எதிரில், அரியலூர் - 621704 ஆகும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC - Updated Tentative Annual Recruitment Planner - 2023 Published

 


2023-ஆம் ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட ஆண்டு தேர்வு அட்டவணையினை தமிழக அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC - Updated Tentative Annual Recruitment Planner - 2023 Pdf - Download here


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இன்ஃபுளுவன்சா தொற்றுக்கு சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது சரியா..? மருத்துவர்கள் சொல்வது என்ன..?

 காய்ச்சல் அல்லது தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்தால் அதை பற்றிய வதந்திகளும் பொய்யான சிகிச்சை முறைகளும் பரவுவதை கட்டுப்படுத்த முடியாது தற்போது பரவி வரும் இன்ஃபுளுவன்சா தொற்றுக்கு சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது சரியா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து மக்களிடையே தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது தற்போது பரவி வரும் இன்ஃபுளூவன்சா A H3N2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வுடன் மருத்துவமனைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த இன்ஃபுளூவன்சா தொற்று காய்ச்சல் சாதாரண பருவகால தொற்று தான் என்றாலும் சற்று வீரியத்துடன் இந்த ஆண்டு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் முறையற்ற மருத்துவ குறிப்புகளும் வாட்சப்பில் பரவி வருகிறது. இதுகுறித்து மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுக்கும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்க்காக தொற்றுநோய் தடுப்பு மருத்துவரான மதுமிதா அவர்கள் கூறியதாவது,

இந்த இன்ஃபுளூவன்சா காய்ச்சல் வைரஸ் தொற்றால் ஏற்படுகின்றது . ஆனால் சிலர் நோய் தொற்று தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட வதந்தியால் வைரஸ் தொற்று மருந்திற்கு மாற்றாக மருத்துவ ஆலோசனை இல்லாமல் நோய் தொற்றிற்கு தொடர்பில்லாத ஆன்டிபயோடிக் மருந்துகளை எடுத்துவருகின்றனர்.

மேலும் மருத்துவ ஆலோசனை இன்றி ஆன்டிபயோடிக் மற்றும் காய்ச்சல் மருந்துகளை உட்கொண்டால் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்.

அதுமட்டுமின்றி தற்போது பரவிவரும் இன்ஃபுளுவன்சா தொற்று மிக சாதாரணமான தொற்று என்றுகூறும் மருத்துவத்துறை அதிகாரிகள் முககவசம் அணிவது தனிநபர் இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை களை கடைபிடித்தாலே இந்த தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சமீபத்தில் வேகமாக பரவும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் நோயக்கான காரணங்களும், அறிகுறிகளும் இது தான்.!

 சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்கள் மட்டுமல்லாது இந்தியாவில் பரவலாக பல இடங்களில் மர்ம காய்ச்சல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2020 ல் வைரஸ் நோயின் தாக்கம் மக்களைப் பாடாய் படுத்திய நிலையில், இதுபோன்ற ஒரு வகை வைரஸ் தான் தற்போது மக்களைப் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்ற அச்சம் அதிகளவில் எழுந்தது. இந்நிலையில் இது பருவக்காலங்களில ஏற்படும் ஒரு வகை வைரஸ் எனவும், H3N2 இன்ஃப்ளூயன்ஸா என்கின்றனர் மருத்துவர்கள். எனவே இவ்வகையான காய்ச்சல் வந்தால் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும், அதற்கான மருந்து மாத்திரைகளை உட்கொண்டால் போதும் எனவும் கூறப்படுகிறது.

இன்ஃப்ளூயன்ஸா எவ்வாறு பரவுகிறது?

இன்றைக்கு அதிகளவில் பலரையும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இருமல் அல்லது தும்மல் வரும் போது, அதன் நீர்த்துளிகள் காற்றில் ஒரு மீட்டர் வரை பரவக்கூடியது. எனவே தான் அந்த இடத்தில் மற்றொரு நபர் சுவாசிக்கும் போது, இந்த நீர்த்துளிகள் அவரது உடலுக்குள் சென்று அவரைப் பாதிக்கிறது. கொரோனா வைரஸ் காலக்கட்டத்திலும் இந்த நிலைத் தான் ஏற்பட்டது. இருந்தப்போதும் இதற்கு அச்சம் கொள்ளத்தேவையில்லை என்கின்றனர் மருத்துவர்கள். வைரஸ் நிபுணர்களின் கூற்றுப்படி, காற்று மாசுபாடு H3N2 வைரஸை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. காற்று மாசுபாட்டால் மோசமாக இருக்கலாம். இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, உடல்வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை கூடுதல் பொதுவான அறிகுறிகளாகும்.

Nausea and Vomiting - Causes, Treatment and Prevention

H3N2 காய்ச்சலின் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் யார்?

சாதாரண காய்ச்சல் போன்ற ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான் இது. இருந்தப்போதும் ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், கடுமையான சுவாசக் கோளாறுகள் மற்றும் ஆஸ்துமா அத்தியாயங்களைத் தூண்டும் என்பதால், அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். H3N2 மட்டுமல்ல, H1N1 மற்றும் அடினோ வைரஸ்கள் உட்பட பிற வைரஸ்களும் தற்போது மக்களிடம் பரவியுள்ளதால், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் நெரிசலான இடங்களுக்கு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.

H3N2 காய்ச்சலின் அறிகுறிகள்:

இந்த நோய்த்தொற்றுகள் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற சுவாச அறிகுறிகள் மற்றும் உடல் வலிகள், குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிற அறிகுறிகளை ஏற்படுத்தும். இன்ஃப்ளூயன்ஸா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆன்டிவைரல் மருந்துகள் H3N2 விவகாரத்திற்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Shaking with chills, muscle pain: New symptoms of coronavirus identified by US Medical Body | Shaking News – India TV

குழந்தைகளைப் பொறுத்தவரை 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வரக்கூடும். மேலும் குழந்தைகளின் உடல் மற்றும் முகம் நீல நிறமாக மாறக்கூடும். மார்பு, தசை வலி மற்றும் நீர்ப்போக்கு ஏற்படலாம்.

H3N2 காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழிகாட்டுதல்கள்:

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் முடிந்தவரை நிறைய தண்ணீர் உட்கொள்ளுங்கள் மற்றும் வெளி இடங்களுக்குச் சென்றால் மக்களுடன் பழகுவதைத் தவிர்க்கவும்.

ஒருவேளை உங்களின் உடல் நலத்தில் மேம்பாடு ஏற்படவில்லை என்றால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள் மற்றும் கொமொர்பிடிட்டிகள் உள்ளவர்கள் மிகவும் தீவிரமான நோயை உருவாக்கும் அதிக ஆபத்தில் இருப்பார்கள் என்பதால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆன்டிபாடிக் மருத்துகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பீட்ரூட் ஜூஸ் அருந்துவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? இந்த சம்மருக்கு ஏற்ற ட்ரிங்க்..!


வெயில் காலம் தொடங்கியுள்ளதையடுத்து நம் உடலை குளுமையாக வைத்துக் கொள்ளவும், தாகம் தணித்துக் கொள்ளவும் நாம் வெவ்வேறு விதமான ஜூஸ்களை தினந்தோறும் அருந்தி வருகிறோம். சாதாரணமாக கோடை காலங்களில் சாலையோரக் கடைகளில் கிடைக்க கூடிய கரும்பு ஜூஸ், இளநீர், நுங்கு பதநீர், தர்பூசணி, சாத்துக்குடி ஜூஸ் போன்றவை தான் நம்முடைய முதன்மையான தேர்வுகளாக இருக்கும். 


ஆனால், நிச்சயமாக நீங்கள் சாலையோரக் கடைகளில் அல்லது ஜூஸ் கடைகளிலும் கூட பீட்ரூட் ஜூஸ் விற்பனை செய்யப்படுவதை பார்த்திருக்க மாட்டீர்கள். ஆக, பீட்ரூட்டிலும் கூட ஜூஸ் அடித்து குடிக்க முடியும் என்பதோ, அதன் மூலமாக கிடைக்கும் பலன்கள் குறித்தோ நமக்கு தெரிந்திருக்காது. வெளியிடங்களில் கிடைக்காவிட்டாலும் நம் வீட்டிலேயே பீட்ரூட் ஜூஸ் தயாரித்து அருந்தலாம். இதன் மூலமாக என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்தச் செய்தியில் இப்போது பார்க்கலாம்.

சருமத்திற்கு நல்லது : நமது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் பீட்ரூட்டில் உள்ளது. ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்து, விட்டமின் சி போன்றவை பீட்ரூட்டில் நிறைந்துள்ளன. இது சரும பாதிப்பை தடுத்து, முடி உதிர்வை நிறுத்தும். பீட்ரூட் சாறு அருந்துவதால் நமது அழகுத் தோற்றமும் மேம்படும்.

நம் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செல்களை பீட்ரூட்டின் விட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துக்கள் தடுத்து நிறுத்தும். சருமத்தில் ஏற்படக் கூடிய சுருக்கம், கரு வளையங்கள் மற்றும் இதர வயது முதிர்வு அறிகுறிகள் ஆகியவற்றை பீட்ரூட் சாறு முறியடிக்கும். பீட்ரூட் ஜூஸ் அருந்துவதால் நமது சருமத்திற்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமம் வழக்கத்தைக் காட்டிலும் பிரகாசமாக காட்சியளிக்கும்.

தலைமுடி ஆரோக்கியம் : பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட் சத்து, விட்டமின் சி ஆகியவை நிறைவாக உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே முடி வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியவை மற்றும் முடி உதிர்வை தடுக்கும். இது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் அனைத்து அழற்சிகளுக்கும் இது தீர்வை கொடுக்கும்.

கழிவுகளை வெளியேற்றும் : நம் உடலில் உள்ள கழிவுகளை இயற்கையான சுத்திகரிக்கக் கூடிய உணவுப் பொருட்களில் பீட்ரூட்டிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. நச்சுக்கள் வெளியேறினால் சருமம் தெளிவானதாக காட்சியளிக்கும். இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படும். செரிமானத் திறன் மேம்படும்.

உயர் ரத்த அழுத்தம் குறையும் : உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கக் கூடிய நபர்களுக்கு பீட்ரூட் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தினந்தோறும் காலை பொழுதில் பீட்ரூட் சாறு அரை கிளாஸ் அளவு குடித்து வர ரத்த அழுத்தம் வெகுவிரைவில் கட்டுக்குள் வரும். இது மட்டுமல்லாமல் பீட்ரூட் நமது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

பச்சை, கருப்பு அல்லது சிவப்பு திராட்சை... இந்த மூன்றில் எது ஆரோக்கியம் நிறைந்தது..?

 



அன்றாடம் சாப்பிடும் பழ வகைகளில் திராட்சையும் கட்டாயம் இடம் பெறும். இதில் நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படும் ஆற்றல் என பல நன்மைகளை கொண்டுள்ளதால் அன்றாடம் ஒரு கப் சாப்பிடுவது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆய்வுகளிலும் ஒரு நாளைக்கு 3 கப் திராட்சையை ஸ்நாக்ஸ் போல் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த முடியும் என்கிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்... திராட்சை வாங்கலாம் என கடைக்கு சென்றால் அங்கு மூன்று வித திராட்சையும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் விலை மலிவானது எது என்பதை விட எது ஆரோக்கியமானது என்பதே முக்கியம். அந்தவகையில் நீங்களும் கடைக்கு திராட்சை வாங்கும்போது குழம்புகிறீர்கள் எனில் உங்களுக்காகவே இந்த கட்டுரை.

பச்சை திராட்சை : பச்சை திராட்சை அதிகமாக கிடைக்கக் கூடியது மற்றும் மலிவு விலையில் கிடைக்கும். இது அதிக சுவை கொண்டது என்பதால் குழந்தைகள் கூட விரும்பொ சாப்பிடுவார்கள். ஆய்வுகளின் படி பச்சை திராட்சையில் 104 கலோரிகள் உள்ளன. 1.4 கிராம் புரோட்டீன், 0.2 கிராம் கொழுப்பு மற்றும் 27.3 கிராம் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இந்த பச்சை திராட்சை விட்டமின் சி , விட்டமின் கே மற்றும் பொட்டாசியம் நிறைந்தது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் சிறந்தது. விட்டமின் கே இருப்பதால் இரத்தம் உறைதல் பிரச்சனை, எலும்பு பிரச்சனைகளுக்கு பலனளிக்கிறது. பொட்டசியம் இருப்பதால் இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கருப்பு திராட்சை : கருப்பு அல்லது ஊதா நிறம் கொண்ட இந்த திராட்சை ஜூஸ் வகைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும். குறிப்பாக ஒயின் தயாரிக்க இந்த திராட்சைதான் பயன்படுத்தப்படுகிறது. இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்தது என்பதால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஒரு கப் கருப்பு திராட்சையில் 104 கலோரி, 1.1 கிராம் புரோட்டீன் , 02 கிராம் கொழுப்பு மற்றும் 27.3 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. இதுவும் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே -வுக்கு சிறந்த மூலமாக உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சில வகையான புற்றுநோய்களுக்கும் பலனளிக்கிறது.

சிவப்பு திராட்சை : இது இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவை கொண்டது. இது ஃபுரூட் சாலட், ஜாம் , ஜெல்லி தயாரிப்புகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ரெட் ஒயின் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கப் சிவப்பு திராட்சையில் 104 கலோரி, 1.1 கிராம் புரோட்டீன் , 02 கிராம் கொழுப்பு மற்றும் 27.3 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. பச்சை மற்றும் கருப்பு திராட்சையை போல் இதிலும் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே உள்ளன .

கருப்பு, சிவப்பு, பச்சை... எந்த திராட்சை சிறந்தது..? 

இந்த மூன்று நிற திராட்சையிலும் நன்மைகள் என்பது ஒரே பண்புகளை கொண்டுள்ளன. கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளில் மட்டும் ரெஸ்வெராட்ரோல் (resveratrol) என்னும் பண்பு உள்ளது. இது எலும்பு ஆரோக்கியம் , இதய ஆரோக்கியம் மற்றும் சில வகையான புற்றுநோய் செல்களை தடுக்க உதவுகிறது. எதுவாயினும் மூன்றுமே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதால் மூன்றையும் கூட சாப்பிடலாம் அல்லது உங்களுக்கு இதில் பிடித்த சுவை எதுவோ அதையே சாப்பிடலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதற்கான முக்கிய காரணங்கள் இதுதான்.. முதலில் இதை தெரிந்து கொள்வோம்..!

 

பண்டைய கால மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உறுதுணையாக இருந்தது சிறு தானியங்கள் தான். காலம் மாற மாற மக்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரமும் மாற ஆரம்பித்ததினால் சிறு தானியங்களின் மவுசு குறைந்து மக்கள் அரிசி,கோதுமையை மிக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மக்கள் பல்வேறு உடல் நல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிட்டது. இதன் விளைவு தான் இன்றைக்கு பண்டைய கால உணவுமுறைக்கு மக்கள் மாறத் தொடங்கி விட்டனர்.

அதற்கேற்றால் போல் தான் 2023-யை ஐக்கிய நாடுகள் சபை சிறுதானியங்களின் சர்வதேச ஆண்டாக அறிவித்த நிலையில், இந்தியாவும் இதை முன்மொழிந்தது. இந்நிலையில் தான் மக்கள் இந்த தனித்துவமான சிறுதானியங்களால் என்னென்ன நன்மைகள் மற்றும் எப்படியெல்லாம் உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக அமைகிறது என்பது குறித்து பரவலாக ஆராய தொடங்கி விட்டனர். சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கே நாமும் அறிந்து கொள்வோம்.

கம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு,சோளம், கொள்ளு போன்றவை சிறுதானியங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. மிகக்குறுகிய காலத்தில் மற்றும் வறட்சி நேரத்தில் வளரக்கூடியது. இதில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டசத்துகள் அதிகளவில் உள்ளது. இதோடு பல நோய்களுக்கும் மருந்தாக இவை அமைகிறது.

சிறுதானியங்களில் உள்ள புரோபயாடிக்குள் : பொதுவாக புரோபயாடிக்குள் என்பது செரிமான அமைப்பை திறம்பட வேலை செய்ய உதவும் ஒருவகை புரதம் ஆகும். இது சிறுதானியங்களில் அதிகளவில் உள்ளதால், நமது குடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமான பிரச்சனையின்றி வாழவும் உதவியாக உள்ளது. எடை இழப்பிற்கும் உறுதுணையாக உள்ளது.

நீரழிவு பிரச்சனைக்குத் தீர்வு : நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் குறைந்த கிளைசெமிக் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் திணை, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சிறுதானியத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை இருப்பதால், ரத்த குழாய்களில் கொழுப்புகள் சேராது. மேலும் ஒற்றை தலைவலி மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது.

உடல் பருமன் : சிறுதானியங்களில் நார்சத்து, கொழுப்பை கரைக்க உதவியாக உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி3 இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொலாஸ்டராலைக் குறைக்க உதவுகிறது. இதோடு சிறுதானியத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் காயங்களைக் குணப்படுத்தவும் உதவியாக உள்ளது.

இதுப்போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால்தான், சிறுதானியங்களை நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கொத்தமல்லி விதையை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

 கொத்தமல்லி விதைகளை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இந்த கொத்தமல்லி விதைகளை முதல் இரவே 4 டீஸ்பூன் அளவு ஊறவைக்கவேண்டும். இதனை மறுநாள் காலையில் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.

கொத்தமல்லி விதைகளில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கண்களில் ஏற்படும் அரிப்பு, அழற்சி மற்றும் கண் சிவத்தல் போன்றவற்றை சரியாக்க பயன்படுகிறது. கொத்தமல்லி விதை ஊற வைத்த நீர் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை இதில் உள்ளது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த தண்ணீரை தினமும் குடிக்கலாம்.

இரவு தூங்கும் முன் தனியா விதைகள் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை குளிர்ந்த நீரில் ஊற வைத்து அந்த நீரை காலை எழுந்ததும் கண்களில் தெளித்து கழுவுங்கள். இந்த நீர் கண்களுக்கு நன்மை பயக்கும். இப்படி தினமும் செய்தால் கண்களில் தொற்று ஏற்படாது.

மாதவிடாய் கால பிரச்சனைகள் 6 கிராம் கொத்தமல்லி விதைகளை 500 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, வெதுவெதுப்பான நிலையில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன் சீராக்கப்பட்டு, மாதவிடாய்  சுழற்சி சிறப்பாக நடைபெற உதவும்.

சில பெண்கள் வெள்ளைப்படுதல் பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். அவர்கள், இந்த தனியா ஊறவைத்த தண்ணீரை வாரத்தில் இரண்டு முறை குடித்து வந்தால், இந்த பிரச்சனை தீரும். 3 கிராம் தனியா விதை பொடியை 150 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இவ்வாறு தண்ணீரை குடிப்பதால் எலும்புகள் வலுவாகும். மேலும் எலும்பு சம்பந்தமான நோய்கள் நெருங்காது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஹெர்னியா என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது, இதன் வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள்..!

 ஹெர்னியா என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஹெர்னியா நோயானது தமிழில் குடலிறக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. பலவீனமான வயிற்றின் தசைச்சுவர் துவாரம் வழியே குடலின் ஒரு பகுதி அல்லது கொழுப்பு திசு வெளியில் வயிற்று பகுதியில் பிதுங்கி தெரியும் பிரச்சனை ஹெர்னியா என குறிப்பிடப்படுகிறது.

ஹெர்னியாவை பற்றி இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் வலுவிழந்து பலவீனமாக இருக்கும் வயிற்று பகுதியின் அடிப்புறச் சுவர் வழியே சிறுகுடல் பிதுக்கி அல்லது துருத்தி கொண்டு, வெளிப்புறமாகப் பார்க்கும்போது புடைப்பாக இருக்கும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என கூறப்படுகிறது. ஹெர்னியா பிரச்சனையானது பொதுவாக பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஹெர்னியாவானது மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் உருவாகிறது. இது வழக்கமாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது, அல்லது சில நேரங்களில் மிக குறைவான அறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்துகிறது. ஹெர்னியாவால் தோன்றும் கட்டி அல்லது புடைப்பு நோயாளி படுத்திருக்கும்போது சில நேரங்களில் மீண்டும் உள்ளே தள்ளப்பட்டு மறைந்துவிடும். இருமும் போது ஹெர்னியா வெளிப்படக்கூடும்.

ஹெர்னியாவின் வகைகள்:

Inguinal hernia - இந்த வகையான ஹெர்னியாவானது, கொழுப்பு திசு அல்லது குடலின் ஒரு பகுதி தொடை வழியே ஏற்படுகிறது. குடலிறக்கம் ஒரு பக்கம் அல்லது இரு பக்கங்களிலும் ஏற்படலாம். இது மிகவும் பொதுவான வகை குடலிறக்கம் மற்றும் இது முக்கியமாக ஆண்களை பாதிக்கிறது.

What is Hernia | Dr. Abhimanyu Kapoor

Femoral hernia - குடல் திசுக்கள் தொடை சுவற்றை நோக்கி தள்ளப்படுவது பெமோரல் ஹெர்னியா எனப்படுகிறது. அதாவது இடுப்பு அல்லது உள் தொடையின் தசைச் சுவரில் உள்ள ஒரு பலவீனமான இடத்தில் குடல் திசுக்கள் வெளியே தள்ளப்படும்போது ஏற்படுகிறது.

Umbilical hernia - இந்த வகை ஹெர்னியாவானது கொழுப்பு திசு அல்லது குடலின் ஒரு பகுதி தொப்புளின் வழியே பிதுங்கி நீளும் போது ஏற்படுகிறது. தொப்புளில் உள்ள உறுதியான திசு மிகவும் மெல்லியதாகி, இடைவெளியை ஏற்படுத்தும்போது இந்த ஹெர்னியா ஏற்படுகிறது. வயிற்றில் மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் அல்லது கர்ப்பம் மற்றும் உடல் பருமன் காரணமாக பெரியவர்களுக்கு இது ஏற்படுகிறது.

பிற வகைகள்:

Incisional hernia - முந்தைய அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட வடு மூலம் கட்டி உருவாகிறது

Epigastric hernia - இந்த வகை ஹெர்னியா என்பது குடலின் ஒரு பகுதி வயிற்று தொப்புளுக்கு மார்புக்கும் இடையில் உள்ள வயிற்று தசைகள் வழியாயே குடலின் ஒருபகுதி வெளியே தள்ளப்படும்போது ஏற்படுகிறது.

Diaphragmatic hernia - இந்த வகை ஹெர்னியா உதரவிதானத்தில் ஒரு துளை இருக்கும் ஒரு பிறப்பு குறைபாடு ஆகும். அடிவயிற்றில் உள்ள உறுப்புகள் (குடல் மற்றும் கல்லீரல் போன்றவை) உதரவிதானத்தில் உள்ள துளை வழியாக மேல்நோக்கி மார்புக்குள் செல்லலாம். வயிற்றில் உதரவிதானம் சரியாக வளரவில்லை என்றால் இது குழந்தைகளை பாதிக்கலாம்.

Muscle hernia - இந்த வகை ஹெர்னியாவில் தசையின் ஒரு பகுதி திசு வழியே புடைத்து நிற்கும். இது விளையாட்டு காயத்தின் விளைவாக பொதுவாக கால் தசைகளில் ஏற்படுகின்றன.

கண்டறிவது எப்படி.?

பாதிக்கப்பட்ட பகுதியை பரிசோதிப்பதன் மூலம் மருத்துவர் எந்த வகை ஹெர்னியா என்பதை கண்டறிவார், தவிர நோயாளி ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கப்படுகிறார். பாதிப்பின் அளவை உறுதிப்படுத்த நோயறிதலை செய்த பின் ஹெர்னியாவை சரிசெய்ய அறுவை சிகிச்சை தேவையா என்பதை அறுவை சிகிச்சை நிபுணர் தீர்மானிப்பார்.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தீர்மானிக்கும்போது ஹெர்னியாவின் வகை மற்றும் ஹெர்னியா ஏற்பட்டுள்ள பகுதிகள் கருத்தில் கொள்ளப்படும் காரணிகளாக இருக்கின்றன. ஏனெனில் சில வகையான ஹெர்னியாக்கள் மற்றவற்றை விட குடல் அடைப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

அறுவை சிகிச்சை எப்போது.?

அறிகுறிகள் கடுமையாக இருந்தாலோ அல்லது மோசமாகினாலோ அல்லது ஹெர்னியா நோயாளியின் இயல்பான செயல்பாட்டு திறனைப் பாதித்தால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படலாம்.

பின்வரும் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவசர சிகிச்சை...

வயிற்றில் திடீர் மற்றும் கடும் வலி மற்றும் ஹெர்னியாவால் மலம் கழிப்பதில் சிரமம், மீண்டும் மீண்டும் வாந்தி, ஹெர்னியா பாதிக்கப்பட்ட பகுதிகளில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவசர சிகிச்சை தேவைப்படுகிறது.

Hernia Operation - Types, Risks, Preparation, Recovery | Sahyadri Hospital

சர்ஜரி:

ஓபன் சர்ஜரி - கட்டி அல்லது புடைப்பை மீண்டும் வயிற்றுக்குள் தள்ள செய்யப்படும் சர்ஜரி

லேப்ராஸ்கோபி - இது மிகவும் கடினமான ஒன்று என்றாலும் திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் செய்யப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip