Search

வேலை மற்றும் படிப்பில் கவனம் ரொம்ப சிதறுதா.? இனி இதை செஞ்சு பாருங்க!

 தனிப்பட்ட வாழ்க்கை முறையோ, அலுவலக சம்பந்தப்பட்ட வேலையோ அல்லது தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளையோ சிறப்பாக செய்து முடிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வழியை பின்பற்றி வருகின்றனர். அதே சமயம் தனிப்பட்ட வாழ்க்கையும் - அலுவலக வேலைகளையும் சமாளிப்பதற்குள் பலருக்கும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்..

இவ்வாறு மன அழுத்தம் இன்றி ஒரு வேலையை சிறப்பாக செய்து முடிக்க பயன்படுத்தப்படும் ஒரு உத்தி தான் “பொமோடோரோ உத்தி” ஆகும். இந்த முறையை பயன்படுத்தி நாம் வேலை செய்யும் போது கணிசமான அளவில் நேரம் சேமிக்க முடிவதுடன் நாம் எடுத்த வேலையையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். அதிலும் குறிப்பாக வேலை நேரங்களின்போது அவ்வபோது கவன சிதறலால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த முறை அதிகம் கைகொடுக்கும்.

அது என்ன பொமோடோரோ உத்தி அது எப்படி கடைப்பிடிப்பது? : அதாவது முதலில் நீங்கள் செய்யப் போகும் வேலையை முடிவு செய்து கொள்ள வேண்டும். அது உங்கள் அலுவலக வேலையாகவும், தொழில் சம்பந்தப்பட்டதாகவும் அல்லது வீட்டு வேலையாக கூட இருக்கலாம். பிறகு அடுத்த 25 நிமிடங்களுக்கு எந்த வித கவன சிதறல்களிலும் ஈடுபடாமல் உங்களது முழு கவனத்தையும் அந்த வேலையின் மீது வைத்து செயல்பட வேண்டும். 25 நிமிடங்கள் முடிந்தவுடன் 5 நிமிடங்கள் வரை இடைவேளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த இடைவெளி நேரத்தில் டீ குடிப்பது, வாக்கிங் செல்வது, பிடித்தவர்களுடன் பேசுவது ஆகிய வேலைகளை வைத்துக் கொள்ளலாம். இது ஒரு செட் ஆகும்.. இவ்வாறு நான்கு செட்கள் செய்து முடித்த பிறகு 15 இலிருந்து 30 நிமிடங்கள் வரை மீண்டும் இடைவேளை எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் இதைத்தான் பொமோடோரோ உத்தி என்று கூறுகிறார்கள்.

என்ன பயன் ? : 1980-களில் பெரிய வேலைகளை செய்து முடிப்பதற்கு மிகச்சிறந்த உத்தியாக இந்த பொமோடோரோ முறை கடைப்பிடிக்கப்பட்டது. எந்தவித சிறப்பு முன்னேற்பாடுகளும் இல்லாமல் மிக எளிதாக செய்ய முடிவதால் பலரும் இந்த முறையை கடைப்பிடிக்க துவங்கினார்கள். முக்கியமாக மிகப்பெரிய வேலைகளை செய்வதற்கு தான் இந்த முறை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வேலை சிறிதாக இருப்பின் வழக்கத்தை விட சிறப்பாகவும் குறுகிய நேரத்திலும் நம்மால் செய்து முடிக்க முடியும்.

யாரெல்லாம் இந்த உத்தியை பின்பற்றலாம்..?  : யாருக்கெல்லாம் அவ்வபோது கவனசிதறல் ஏற்பட்டு தொடர்ந்து ஒரு வேலையை செய்ய முடியாதோ அவர்கள் எல்லாம் இந்த முறையை பின்பற்றலாம். மேலும் நீண்ட காலமாக கிடப்பிலிருந்த வேலைகளை செய்து முடிக்க அலுவலக நேரம் போக மீதி நேரத்திலும் வேலை செய்பவர்களும் வரும் இந்த முறையை பின்பற்றலாம். எழுத்தாளர்கள், வலை பக்கத்திற்கான ஆராய்ச்சி செய்பவர்கள் ஆகியோர்களுக்கும் இந்த முறை ஏற்றது.

எப்படி உருவானது இந்த முறை..? : முதன் முதலில் பிரான்சிஸகோ சிரிலோ என்ற பல்கலைக்கழக மாணவனால் இந்த முறை உருவாக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவெனில் அந்த மாணவருக்கு தனது பாடங்களை படிக்கும் போது அதிகப்படியான கவனச் சிதறல்கள் ஏற்பட்டு தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து முடிக்க முடியாத நிலை இருந்தது. இதை சரி செய்ய தொடர்ந்து பத்து நிமிடங்கள் வரை கவன சிதறல் இல்லாமல் படிக்க அவர் முயற்சித்தார். இவ்வாறு படிக்கும்போது நேரத்தை கணக்கீடு செய்ய தக்காளியின் வடிவத்தில் இருந்த ஒரு கிச்சன் டைமரை அவர் பயன்படுத்தினார். அதுவே நாளடைவில் பொமோடோரோ உத்தி என்று ஆனது. இத்தாலிய மொழியில் பொமோடோரோ என்றால் தக்காளி என்று பெயராம்.


உயர் இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கான 6 சிறந்த யோகாசனங்கள்!

 


உயர் இரத்த அழுத்தம் என்பது தற்போது மக்களிடையே மிகவும் பொதுவான பாதிப்பாக நிலையாகி வருகிறது. இந்த உயர் இரத்த அழுத்தம் உங்கள் இதயம், சிறுநீரகங்கள் மற்றும் பிற உடல் செயல்பாடுகளை ஆபத்தில் ஆழ்த்தலாம் கூறுகின்றனர். இதை சைலன்ட் கில்லர் என்றும் குறிப்பிடுகின்றனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) வரையறையின்படி, இரத்த அழுத்தம் என்பது உடலின் முக்கிய இரத்த நாளங்களான தமனிகளின் சுவர்களில் இரத்தத்தை கொண்டு செல்வதன் மூலம் செலுத்தப்படும் செயல்முறையாகும். எனவே, இந்த செயல்பாட்டில் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அதை உயர் இரத்த அழுத்தம் என்று சொல்வார்கள். ஆரோக்கியமான சமச்சீரான உணவை உட்கொள்வது, வழக்கமான உடற்பயிற்சி, வாழ்க்கை முறையை மாற்றுவது அல்லது சரியான மருத்துவ கவனிப்பு ஆகியவை இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கான சில வழிகள் ஆகும்.

இவை தவிர, உயர் இரத்த அழுத்தத்தின் அளவை சீராக வைக்க யோகா ஒரு அமைதியான மற்றும் ஆரோக்கியமான வழியாக உள்ளது. இந்த பழங்கால முறை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக உள்ளது. இந்த பதிவில் உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க கூடிய யோகா ஆசனங்களை பற்றி பார்க்கலாம்.


சக்ரவாகசனம் : இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்வது உங்கள் உடல், தோள்கள் மற்றும் கழுத்து பகுதிகளுக்கு ஸ்ட்ரெச்சிங் செய்வதாகும். இதற்காக இதை செய்வதற்கு உங்கள் நான்கு கால்களையும் பயன்படுத்த வேண்டும். முதலில் உங்கள் மணிக்கட்டுகளை உங்கள் தோள்களுக்குக் கீழேயும், உங்கள் முழங்கால்களை உங்கள் இடுப்புக்குக் கீழேயும் வைக்க வேண்டும். நீங்கள் மேலே பார்க்கும்போது மூச்சை உள்ளிழுத்து, உங்கள் வயிற்றை தரையை நோக்கி கீழே இறக்கவும். உங்கள் கன்னத்தை உங்கள் மார்பில் வைத்து, உங்கள் தொப்புளை உங்கள் முதுகெலும்பை நோக்கி இழுத்து, உங்கள் முதுகெலும்பை மேல் பகுதியை நோக்கி வளைக்கும்போது மூச்சை வெளியே விடுங்கள். இது பார்ப்பதற்கு பூனை நிற்பது போன்று இருக்கும்.




புஜங்காசன் : இது நாகப்பாம்பு போஸ் என்றும் அழைக்கப்படுகிறது, புஜங்காசனம் முக்கியமாக வயிற்றுப் பகுதியை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது, மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை செய்வதற்கு தரையில் குப்பற படுத்து, கால்களை நீட்டி, இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்து மார்பை மேலே உயர்த்த வேண்டும். இது பல்வேறு நன்மைகளை செய்ய கூடிய ஆசனமாகும்.



சுகாசனம் : இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது சுலபமான ஆசனமாகும். இது எளிதான மற்றும் பயனுள்ள யோகா ஆசனங்களில் ஒன்றாகும். இந்த ஆசனத்தை செய்ய முதுகை நிமிர்ந்தும், கால்களைக் குறுக்காகவும் வைத்து உட்கார வேண்டும். அடுத்து கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்களுக்கு மூச்சை உள்ளிழுக்கவும். இது ஒரு நிதானமான நுட்பமாகும். மேலும், இது மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது மற்றும் உடலையும் மூளையையும் அமைதிப்படுத்துகிறது.



சவசனம் : நீண்ட மன அழுத்தம் நிறைந்த வேலைக்குப் பிறகு, நாம் பெரிதும் விரும்புவது விரும்புவது நல்ல உறக்கம் தான். இந்த ஆசனத்திலும் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். இதை செய்வதற்கு, மேல் நோக்கிய படி படுத்துக் கொள்ள வேண்டும். உடலை மிக இலகுவாக வைக்க வேண்டியது அவசியம். இந்த ஆசனம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.



குழந்தையின் தோரணை : இந்த ஆசனம் பார்ப்பதற்கு நீங்கள் ஓய்வெடுப்பது போல் தோன்றலாம், ஆனால் இந்த ஆசனம்  முதுகை ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது. இது ஒரு நீண்ட, சோர்வுற்ற நாளின் முடிவில் படுக்கைக்கு முன் செய்து வந்தால், ஒரு சிறந்த மன அழுத்தத்தை நிவாரணியாக இருக்கும். இதை செய்ய, உங்கள் கைகளை உங்கள் முன் நேராக நீட்டியவாறு தொடங்குங்கள், பின்னர் மண்டியிட்ட நிலையில் ஓய்வெடுக்கும்.



பிரிட்ஜ் போஸ் : இந்த யோகா போஸ் உங்கள் உடலை வலுப்படுத்தவும், சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. இதய அடைப்புகளை சரிசெய்ய இந்த ஆசனம் பெரிதும் உதவும். இதை செய்வதற்கு, மேல் நோக்கி படுத்து கொண்டு, உங்கள் கால்களை அகலமாக வைக்கவும். அடுத்து, உங்கள் கால்களை வலுவாக அழுத்தி, பாயில் இருந்து பாதி உடலை உயர்த்தவும். பின்னர் உங்கள் கைகளை பக்கவாட்டில் வைத்து, உங்கள் உள்ளங்கைகள் தரையில் கீழ்நோக்கி இருக்கமாறு பார்த்து கொள்ளவும். இதை தினம்தோறும் செய்து வந்தால் எண்ணற்ற பலன்கள் உங்கள் உடலுக்கு கிடைக்கும்.

இன்றைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு என்பது மிகவும் முதன்மையானது. எனவே, உங்கள் அன்றாட வழக்கத்தில் 15-20 நிமிடம் யோகா செய்வதற்கு ஒதுக்கலாம். இது தசைகள், செரிமானம் மற்றும் பலவற்றை மேம்படுத்த உதவும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தூக்கம் ரொம்ப முக்கியம் பாஸ்.. உறக்கத்துக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கு!

 

குழந்தைகள் தினம், மகளிர் தினம், ஆண்கள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், பட்டிருப்போம். தூக்கத்திற்கு ஒரு தினம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? எது! தூக்கத்துக்கு எல்லாம் தனியாக நாள் இருக்கா என்று யோசிக்கிறீர்களா? உண்மையில் இருக்குங்க.

உலக உறக்க தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் மூன்றாவது வெள்ளியன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, உரக்க தினம் மார்ச் 17 ஆன இன்று வந்துள்ளது. தூரோகம் என்பதன் முக்கியத்துவத்தை பெரும்பாலான இன்றைய சமூகம் உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு நல்ல தூக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆரோக்கியமான தூக்க பழக்கங்களை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் தான் இன்று

சரியான உறக்கம் எது?

எந்த நேரத்திலும் தூங்குவது தூக்கம் அல்ல. அதே போல எப்போதும் தூங்கி வழிவதும் தூக்கம் அல்ல. சரியான உறக்கம் என்பது இரவில் படுத்து அதிகாலையில் எழுவதாகும். இரவில் நீங்கள் தூங்கும்போது பினியல் சுரப்பியால் மெலடோனின் வெளியிடப்படும். இரவு நேரத்தில் இதன் அளவு அதிகரிக்கும். அதன் பின்னர் ​​உங்கள் பிட்யூட்டரி சுரப்பி வளர்ச்சி ஹார்மோனை வெளியிடுகிறது, இது உங்கள் உடல் வளரவும், தன்னைத்தானே சரிசெய்யவும் உதவுகிறது.

இது நீங்கள் பகலில் தூங்கும் போது ஏற்படாது. உடல் தன்னை தயார்படுத்தாத போது அடுத்த நாளை நீங்கள் தொடர்ந்தால் உங்கள் உடல் சோர்வுறும். நோய் பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பராமரிப்பதில் தூக்கத்தின் முக்கிய பங்கு இருந்தபோதிலும், உலகின் பல பகுதிகள் அதை ஒரு அடிப்படை தேவைக்கு பதிலாக ஆடம்பரமாக கருதுகின்றனர். ஓய்வின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த உறக்க நாள் தொடங்கப்பட்டது

உறக்க நாள் வரலாறு:

தூக்க மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு அமைப்பான உலக தூக்க சங்கத்தால் உறக்க நாள் 2008 இல் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரப்படுகிறது.

உறக்க நாளின் முக்கியத்துவம்:

இந்த தினத்தின் முதன்மை நோக்கம் உலகளவில் தூக்கக் கோளாறுகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதும், அதை பற்றிய விழிப்புணர்வுகளை பரப்புவதும், தூக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுகாதார வழங்குநர்களை ஒன்றிணைப்பதாகும். அதே போல மக்களை சரியான நேரத்தில் நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வலியுறுத்துவதாகும்.

உலக தூக்க நாள் 2023: தீம்

இந்த ஆண்டு உலக தூக்க தினத்தின் கருப்பொருள் 'உறக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம்' என்பதாகும். நன்றாக சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது போலவே உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வைப் பேணுவதற்கு தூக்கத்தின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கான ஒரு முக்கிய நடத்தையாக தூக்கம் இன்னும் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை. அதை கொண்டு வரும் முயற்சி தான் இது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? - இந்த வழிமுறைகளை பின்பற்றினால் எளிதாக விடுபடலாம்!

 கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னதாக பெரும்பாலானவர்கள் ஒர்க் ப்ரம் ஹோம் என வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். அலுவலகத்தில் சரிசமமாக உட்கார்ந்து வேலைப்பார்க்கும் போதே நமக்கு கழுத்து மற்றும் முதுகு வலி அதிகளவில் ஏற்படும். இந்நிலையில் வீட்டில் நினைத்த இடத்தில் உட்கார்ந்து வேலைப்பார்ப்பதால் முதுகு வலி மற்றும் கழுத்துவலி அதிகரிக்கிறது. இதனால் தான் spinal எனப்படும் முதுகெலும்பில் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக முதுகெலும்பு வளைந்து இருந்தாலோ அல்லது கூன் விழுந்திருந்தாலோ மற்ற உறுப்புகள் சரியாக செயல்படாது என்பதால் அதிக வலி ஏற்படுகிறது.

பொதுவாக பெண்களுக்குத் தான் அதிகளவில் முதுகு வலி ஏற்படுகிறது. இதனைச் சரி செய்ய வேண்டும் என்பதற்காக மருத்துவமனைகளில் பல சிகிச்சைகள் மேற்கொள்கிறோம். இனி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.. உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொண்டாலே முதுகு வலி பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணமுடியும். குறிப்பாக ஹெர்னியேட்டட் டிஸ்க், ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் அல்லது தசைப்பிடிப்பு போன்ற பல காரணங்களாலும் முதுகு வலி ஏற்படுகிறது.

ஆரோக்கியமான முறையில் முதுகு வலி வராமல் பராமரிக்க உதவும் வழிமுறைகள்: உடற்பயிற்சி செய்தல் : ஆரோக்கியமான முறையில் முதுகு வலியை சரிசெய்ய வேண்டும் என்றால், தினமும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் உடற்பயிற்சியைச் செய்யும் போது முதுகெலும்பை ஆதரிக்கும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் உடலுக்கு நெகிழ்வுத்தன்மை அளிப்பதோடு உடல் சீராக இயங்க உதவியாக உள்ளது. எனவே நடைபயிற்சி, நீச்சல் மற்றும் யோகா போன்றவற்றை நீங்கள் மேற்கொண்டாலே முதுகெலும்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் 6 உணவுகள்

நேராக அமர்ந்திருத்தல் : நாம் எப்போதும்,எங்கு உட்கார்ந்திருந்தாலும் நேராக உட்கார வேண்டும். இதோடு தூங்கும் போதும் எவ்வித இடையூறு இல்லாமல் தூங்கவேண்டும். இல்லையென்றால் நமது முதுகுத்தண்டிற்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுவதோடு முதுகுவலி மற்றும் பிற உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே தான் நாம் எந்த செயல்பாடுகள் செய்தாலும் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். ஆரம்பத்தில் நிச்சயம் வலி ஏற்படும். இருந்தப் போதும் இதைத் தொடர்ச்சியாக செய்ய முயலுங்கள்.

முதுகெலும்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் 6 தவறான தோரணைகள்

முதுகெலும்பைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் தூங்கும் போது, முதுகில் அழுத்தத்தைக் குறைப்பதற்கு உங்களது கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைக்க முயற்சி செய்யவும். கழுத்து வலி அதிகமாக இருந்தால் கழுத்து குஷன் பயன்படுத்துங்கள். இதோடு உங்களது கழுத்து வலிக்காமல் இருக்கும அளவிற்கு தலையணைகளை நீங்கள் உபயோகிக்க வேண்டும்.

தரமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் : சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக தூக்கமின்மை முதுகு வலி மற்றும் அதிக கழுத்து வலியையும் நமக்கு ஏற்படுத்துகிறது. எனவே ஒவ்வொரு இரவும் குறைந்தது 7-9 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் மன அழுத்தம் குறைவதோடு உங்களது தசைகளில் பதற்றத்தைக் குறைத்து முதுகுவலியையும் குணப்படுத்துகிறது. எனவே நல்ல தூக்கத்தை நீங்கள் கடைப்பிடிப்பதோடு,மன அழுத்தத்தைக் குறைப்பதற்குத் தியானம் அல்லது மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

நாள்பட்ட முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா..? காரணங்களும்... தீர்வுகளும்...


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தமிழ்நாடு அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு : வாகனம் ஓட்டத் தெரிந்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

 

Post Office Recruitment Jobs: தமிழ்நாடு அஞ்சல்துறை துறையின் பல்வேறு  வட்டங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் (staff car Driver) பணியிடங்களுக்கான அறிவிப்பை  அஞ்சல் ஊர்தி சேவை மூத்த மேலாளர் அலுவலம் வெளியிட்டுள்ளது. இதற்கான சம்பள நிலை ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஆகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அறிவிக்கை எண்No.MSE/B9-2/XV/202127-02-2023
பதவிகார் ஓட்டுநர்-  staff car Drivergeneral central service, Group- C, Non-Gazetted, Non Ministerial posts
காலியிடங்கள் எண்ணிக்கை58
கல்வித் தகுதிஇந்த ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் நிபந்தனைகள்இலகு ரக மற்றும் கனரக வாகனம் (Light & heavy motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.3 ஆண்டுகளுக்கு குறையாமல் கனரக வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் இருக்க வேண்டும்.மோட்டார் பணி (Motor Mechanism) குறித்து அறிவு இருக்க வேண்டும்.
வயது வரம்புவயது வரம்பு 18 -27-க்குள் இருக்க வேண்டும்.நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (Theory Test) செய்முறைத் தேர்வில் (Practical Test)  பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பப் படிவத்தை, தமிழ்நாடு அஞ்சல் துறை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதிச் சான்றிதழ் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31.03.2023 ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, ' The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, chennai - 600 006 ஆகும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் வெளியீடு! - தேர்வானவர்கள் செய்ய வேண்டியது என்ன?

 

India post gds result 2023:  நாடு  முழுவதும் உள்ள 40,889 அஞ்சல் பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பதவிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் IndiaPost GDS Online என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து முடிவுகளை  தெரிந்து கொள்ளலாம்.

இந்த பதவிக்கு, எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merti List) தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதிகாரிகளின் எந்தவித நேரடித் தலையீடுகள் இல்லாமல், தொழில்நுட்ப உதவியோடு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் இடஒதுக்கீடு முறை இதில் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி? 

தமிழ்நாட்டில் மொத்தம் 3,164 தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வர்கள், வரும் மார்ச் 21ம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ் ஆவணங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Shortlist candidates பிரிவில், தமிழ்நாடு வட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்;

short listed candidates பெயர் பட்டியல் திரையில் தோன்றும். அதனை , பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு:

தகுதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வாயிலாக தகவல் பரிமாறிக் கொள்ளப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். சரிபார்ப்பு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள Divisional head முன்னிலையில் வரும் மார்ச் 21ம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ் ஆவணங்களை சரிபார்ப்பு செய்து கொள்ள வேண்டும்.

சரிபார்ப்பின் போது, தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் உறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்: பெண்கள் சேவை மையத்தில் பல்நோக்கு உதவியாளர் பணி

  அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் "சகி”- ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) செயல்படுகின்றது. அதில் பணிபுரிய, பல்நோக்கு உதவியாளர் ( Multipurpose Helper), பாதுகாவலர் (Security Guard) நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

காலியட விவரங்கள்:

பதவி - 2 பல்நோக்கு உதவியாளர்( Multipurpose Helper) மற்றும் 1 பாதுகாவலர் (Security Guard)


கல்வித் தகுதி: 8 வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி


வயது வரம்பு:  21- 40 வயதிற்குள் இருக்க வேண்டும்


தகுதி: நிர்வாக அமைப்பின் கீழ் பணி புரிந்தவராகவும்/சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும்; 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும்; உள்ளூரை சார்ந்தவராக இருக்க வேண்டும்; பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


சம்பளம்: பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு தொகுப்பு ஊதியமாக  ரூ. 6400 வரை வழங்கப்படும், பாதுகாவலர் பதவிக்கு தொகுப்பூதியமாக ரூ. 10, 000 வரை வழங்கப்படும்.



யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அரியலூர் மாவட்ட இணையதளத்தில் https://ariyalur.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி: " சகி ஒருங்கிணைந்த சேவை மையம், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்தா மருத்துவமனை எதிரில், அரியலூர் - 621704 ஆகும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC - Updated Tentative Annual Recruitment Planner - 2023 Published

 


2023-ஆம் ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட ஆண்டு தேர்வு அட்டவணையினை தமிழக அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC - Updated Tentative Annual Recruitment Planner - 2023 Pdf - Download here


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இன்ஃபுளுவன்சா தொற்றுக்கு சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது சரியா..? மருத்துவர்கள் சொல்வது என்ன..?

 காய்ச்சல் அல்லது தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்தால் அதை பற்றிய வதந்திகளும் பொய்யான சிகிச்சை முறைகளும் பரவுவதை கட்டுப்படுத்த முடியாது தற்போது பரவி வரும் இன்ஃபுளுவன்சா தொற்றுக்கு சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது சரியா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து மக்களிடையே தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது தற்போது பரவி வரும் இன்ஃபுளூவன்சா A H3N2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வுடன் மருத்துவமனைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த இன்ஃபுளூவன்சா தொற்று காய்ச்சல் சாதாரண பருவகால தொற்று தான் என்றாலும் சற்று வீரியத்துடன் இந்த ஆண்டு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் முறையற்ற மருத்துவ குறிப்புகளும் வாட்சப்பில் பரவி வருகிறது. இதுகுறித்து மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுக்கும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்க்காக தொற்றுநோய் தடுப்பு மருத்துவரான மதுமிதா அவர்கள் கூறியதாவது,

இந்த இன்ஃபுளூவன்சா காய்ச்சல் வைரஸ் தொற்றால் ஏற்படுகின்றது . ஆனால் சிலர் நோய் தொற்று தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட வதந்தியால் வைரஸ் தொற்று மருந்திற்கு மாற்றாக மருத்துவ ஆலோசனை இல்லாமல் நோய் தொற்றிற்கு தொடர்பில்லாத ஆன்டிபயோடிக் மருந்துகளை எடுத்துவருகின்றனர்.

மேலும் மருத்துவ ஆலோசனை இன்றி ஆன்டிபயோடிக் மற்றும் காய்ச்சல் மருந்துகளை உட்கொண்டால் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்.

அதுமட்டுமின்றி தற்போது பரவிவரும் இன்ஃபுளுவன்சா தொற்று மிக சாதாரணமான தொற்று என்றுகூறும் மருத்துவத்துறை அதிகாரிகள் முககவசம் அணிவது தனிநபர் இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை களை கடைபிடித்தாலே இந்த தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சமீபத்தில் வேகமாக பரவும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் நோயக்கான காரணங்களும், அறிகுறிகளும் இது தான்.!

 சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்கள் மட்டுமல்லாது இந்தியாவில் பரவலாக பல இடங்களில் மர்ம காய்ச்சல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2020 ல் வைரஸ் நோயின் தாக்கம் மக்களைப் பாடாய் படுத்திய நிலையில், இதுபோன்ற ஒரு வகை வைரஸ் தான் தற்போது மக்களைப் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்ற அச்சம் அதிகளவில் எழுந்தது. இந்நிலையில் இது பருவக்காலங்களில ஏற்படும் ஒரு வகை வைரஸ் எனவும், H3N2 இன்ஃப்ளூயன்ஸா என்கின்றனர் மருத்துவர்கள். எனவே இவ்வகையான காய்ச்சல் வந்தால் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும், அதற்கான மருந்து மாத்திரைகளை உட்கொண்டால் போதும் எனவும் கூறப்படுகிறது.

இன்ஃப்ளூயன்ஸா எவ்வாறு பரவுகிறது?

இன்றைக்கு அதிகளவில் பலரையும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இருமல் அல்லது தும்மல் வரும் போது, அதன் நீர்த்துளிகள் காற்றில் ஒரு மீட்டர் வரை பரவக்கூடியது. எனவே தான் அந்த இடத்தில் மற்றொரு நபர் சுவாசிக்கும் போது, இந்த நீர்த்துளிகள் அவரது உடலுக்குள் சென்று அவரைப் பாதிக்கிறது. கொரோனா வைரஸ் காலக்கட்டத்திலும் இந்த நிலைத் தான் ஏற்பட்டது. இருந்தப்போதும் இதற்கு அச்சம் கொள்ளத்தேவையில்லை என்கின்றனர் மருத்துவர்கள். வைரஸ் நிபுணர்களின் கூற்றுப்படி, காற்று மாசுபாடு H3N2 வைரஸை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. காற்று மாசுபாட்டால் மோசமாக இருக்கலாம். இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, உடல்வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை கூடுதல் பொதுவான அறிகுறிகளாகும்.

Nausea and Vomiting - Causes, Treatment and Prevention

H3N2 காய்ச்சலின் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் யார்?

சாதாரண காய்ச்சல் போன்ற ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான் இது. இருந்தப்போதும் ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், கடுமையான சுவாசக் கோளாறுகள் மற்றும் ஆஸ்துமா அத்தியாயங்களைத் தூண்டும் என்பதால், அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். H3N2 மட்டுமல்ல, H1N1 மற்றும் அடினோ வைரஸ்கள் உட்பட பிற வைரஸ்களும் தற்போது மக்களிடம் பரவியுள்ளதால், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் நெரிசலான இடங்களுக்கு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.

H3N2 காய்ச்சலின் அறிகுறிகள்:

இந்த நோய்த்தொற்றுகள் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற சுவாச அறிகுறிகள் மற்றும் உடல் வலிகள், குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிற அறிகுறிகளை ஏற்படுத்தும். இன்ஃப்ளூயன்ஸா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆன்டிவைரல் மருந்துகள் H3N2 விவகாரத்திற்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Shaking with chills, muscle pain: New symptoms of coronavirus identified by US Medical Body | Shaking News – India TV

குழந்தைகளைப் பொறுத்தவரை 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வரக்கூடும். மேலும் குழந்தைகளின் உடல் மற்றும் முகம் நீல நிறமாக மாறக்கூடும். மார்பு, தசை வலி மற்றும் நீர்ப்போக்கு ஏற்படலாம்.

H3N2 காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழிகாட்டுதல்கள்:

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் முடிந்தவரை நிறைய தண்ணீர் உட்கொள்ளுங்கள் மற்றும் வெளி இடங்களுக்குச் சென்றால் மக்களுடன் பழகுவதைத் தவிர்க்கவும்.

ஒருவேளை உங்களின் உடல் நலத்தில் மேம்பாடு ஏற்படவில்லை என்றால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள் மற்றும் கொமொர்பிடிட்டிகள் உள்ளவர்கள் மிகவும் தீவிரமான நோயை உருவாக்கும் அதிக ஆபத்தில் இருப்பார்கள் என்பதால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆன்டிபாடிக் மருத்துகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip