Search

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான Electrician காலிப்பணியிடங்கள் – 25 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 NAPS-ன் கீழ் Power Grid Corporation Of India Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Electrician பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Power Grid காலிப்பணியிடங்கள்:

Electrician பணிக்கான காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Electrician கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Power Grid வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Electrician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.6,000/- முதல் ரூ.13,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Power Grid தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை – சம்பளம்:ரூ.70,000/- || இறுதி வாய்ப்பு!

 ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை – சம்பளம்:ரூ.70,000/- || இறுதி வாய்ப்பு!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் DGM (S & T) பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • DGM (S & T) பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் Screeing/ Interaction & Medical Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.03.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2023 Pdf

தஞ்சாவூர் விமானப்படை நிலைய ஆட்சேர்ப்பு 2023 – Accounts Clerk காலிப்பணியிடங்கள்!

 

தஞ்சாவூர் விமானப்படை நிலைய ஆட்சேர்ப்பு 2023 – Accounts Clerk காலிப்பணியிடங்கள்!

தஞ்சாவூர் விமானப்படை நிலையம் தற்போது NPF கணக்கு எழுத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் 16.03.2023 முதல் 23.03.2023 வரை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை காலிப்பணியிடங்கள்:

NPF Accounts Clerk – 2 பணியிடங்கள்

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Accounts Clerk கல்வி தகுதி:
  • வணிகவியலில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • MS Word & MS Excel பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
  • Tallyயில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு 100 மதிப்பெண்களுக்கு மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.

SBI Mutual Fund நிறுவனத்தில் Graduate முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அதனை வரும் மார்ச் 23க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.


IOCL நிறுவனத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – 500+காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

 

IOCL நிறுவனத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – 500+காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆனது Junior Engineering Assistant, Junior Quality Control Analyst, Junior Material Assistant, Junior Nursing Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 513 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Engineering Assistant, Junior Quality Control Analyst, Junior Material Assistant, Junior Nursing Assistant பணிக்கென மொத்தம் 513 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • 10ம் வகுப்பு / ITI/ Diploma/ Degree (Engg) என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு.
  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 26 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு IOCL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Written Test and a Skill/Proficiency/Physical Test (SPPT) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.03.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    IOCL தேர்வு செய்யப்படும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test and a Skill/Proficiency/Physical Test (SPPT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 01.03.2023ம் தேதி முதல் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.03.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Download Notification PDF 

    Click here for latest employment news

     Click here to join WhatsApp group for Daily employment news


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Client Delivery manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப CSB வங்கி திட்டமிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CSB Bank காலிப்பணியிடங்கள்:

Client Delivery manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Client Delivery manager கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

CSB Bank வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Client Delivery manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

CSB Bank ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு CSB வங்கியின் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

Client Delivery manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல், Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TVS Motor நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

 TVS Motor நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

TVS Motor நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Senior Digital Engineer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

TVSM காலிப்பணியிடங்கள்:

Senior Digital Engineer பணிகென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Senior Digital Engineer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / MCA / ME / BCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TVSM வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Digital Engineer முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 7 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TVSM ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு TVS Motor நிறுவன நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Senior Digital Engineer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Click here for latest employment news

Click here to join WhatsApp group for Daily employment news

இரவு நிம்மதியாக தூங்க வேண்டுமா.?அப்போ இதையெல்லாம் உடனே மாத்துங்க.!

 உலக உறக்க தினம் 2023 : ஆண்டுதோறும் மார்ச் 17 அன்று உலக தூக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த சிறப்பு தினமானது தினசரி பரிந்துரைக்கப்பட்ட நேரம் ஒருவர் அவசியம் தூங்க வேண்டும் மற்றும் சரியான உறக்கத்தினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க அனுசரிக்கப்படுகிறது.

பரபரப்பான மெஷின் வாழ்க்கைக்கு நடுவே பலரும் குறைந்த நேரமே தூங்குகிறார்கள் அல்லது நிம்மதியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இந்த சூழலில் சமீப ஆண்டுகளாக தூக்கத்தின் முக்கியத்துவத்தை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துவதை நம்மால் அடிக்கடி கேட்க முடிகிறது. எல்லாவற்றுக்கும் ஒருவருக்கு போதுமான தூக்கம் இல்லையென்றால் அது அவரது இயல்பான மன, உடல், உணர்ச்சி செயல்பாடுகளில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக இருக்க விரும்பும் ஒருவர் தினசரி தேவையான அளவு ஓய்வு மற்றும் உறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிலர் தங்களிடம் சில மோசமான தூக்க பழக்கத்தை வைத்து கொண்டே இரவில் போதுமான ஓய்வே இல்லை, சரியாக தூங்கவே இல்லை என்று புலம்புவார்கள். உங்களுக்கும் இரவில் சரியான தூக்கம் இல்லை என்றால் கீழ்காணும் மோசமான ஸ்லீப்பிங் ஹேபிட்ஸ் உங்களிடம் இருக்கிறதா என்று சரிபார்த்து அவற்றை திருத்தி கொள்ளுங்கள்.

தூங்க செல்லும் முன் எலெக்ட்ரானிக் டிவைஸ்களை பயன்படுத்துவது:

ஸ்மார்ட் ஃபோன்ஸ், கம்ப்யூட்டர்ஸ் மற்றும் டேப்லெட்ஸ் போன்ற எலெக்ட்ரானிக் டிவைஸ்களில் இருந்து வெளிவரும் ப்ளூ லைட்டானது தூக்க ஹார்மோன் என குறிப்பிடப்படும் மெலடோனின் (Melatonin) உற்பத்தியை அடக்கி, சர்க்காடியன் ரிதமை சீர்குலைக்கிறது. இது தூக்கத்தின் தரத்தை குறைப்பதோடு தூங்க போராட வேண்டிய சூழலை ஏற்படுத்தும்.

Why you should not use your mobile before going to sleep? - Lotus Eye Hospital & Institute

தூங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் காஃபின்...

மாலை நேரத்தில் ( 4 முதல் 6 மணிக்குள்) காஃபின் பானங்களை குடிப்பது வேறு. ஆனால் மாலை 6 மணிக்கு மேல் அல்லது தூங்க செல்லும் முன் காஃபின் பானங்களை குடிப்பது தூக்கத்திற்கு நல்லதல்ல. தாமதமான மாலை நேரம் அல்லது இரவில் காஃபி, டீ அல்லது சோடா குடிப்பது தூக்கத்தை தொந்தரவு செய்யும்.

வெவ்வேறு நேரங்களில் தூங்க செல்வது...

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் தூங்க செல்வது மற்றும் காலை எழுவது சர்க்காடியன் ரிதமை சீர்குலைத்து, இரவு தூக்கத்தையும் கடினமாக்கும், அதே போல காலை கண் விழிப்பதையும் கடினமாக்கும். தினசரி இரவு ஒரே நேரத்தில் தூங்க செல்வது சிறப்பான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

ஹெவி டின்னர்:

இரவு நேரத்தில் தூங்க செல்வதற்கு முன் ஹெவியான உணவுகளை சாப்பிடுவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு தூங்குவதையும் கடினமாக்கும். இரவு உணவு சாப்பிடுவது என்பது லைட்டாக இருக்குமாறு பார்த்து கொள்ளும் அதே நேரம் உறங்குவதற்கு 2 முதல் 2 1/2 மணி நேரங்களுக்கு முன்பாக சாப்பிட்டு விட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். உதவும், என்றாலும் தூங்க செல்லும் முன்போ அல்லது தூங்குவதற்கு ஓரிரு மணிநேரத்திற்கு முன்போ தீவிர ஒர்கவுட்ஸ்களில் ஈடுபடுவது தூங்குவதை கடினமாக்கும். எனவே, உறங்க செல்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன் உடற்பயிற்சியை முடித்து விட வே.

தூக்க தரத்தை மேம்படுத்த சில டிப்ஸ்கள்:

தினசரி இரவில் ஒரே நேரத்தில் (10 மணி என்றால் 10 மணிக்கு தூங்க செல்வது) தூங்க சென்று காலை கண்விழிப்பது வார இறுதி நாட்களில் கூட, சர்க்காடியன் ரிதமை சீராக்க மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்.
தூங்க செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, புத்தகம் படிப்பது அல்லது உங்களுக்கு பிடித்த இனிமையான மற்றும் அமைதியான இசை அல்லது பாடல்களை கேட்பது உங்கள் மனதை அமைதிப்படுத்தி உங்கள் உடலை தூக்கத்திற்கு தயார்படுத்த உதவும்.
கூலான, டார்க்கான மற்றும் சுறுப்புறம் அமைதியாக இருக்கும் ரூமில் தூங்குவது நன்றாக தூங்க உதவும். நலன் தரமான மற்றும் வசதியான மெத்தை மற்றும் தலையணையை பயன்படுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நிம்மதியான தூங்கத்திற்கு தூன்க்க செல்லும் 1 மணி நேரத்திற்கு முன்பே எலெக்ட்ரானிக் டிவைஸ்களுக்கு பை சொல்லி விடுங்கள், காஃபின் உட்கொள்வதையும் தவிர்க்கவும்.
தினசரி வழக்கமான குறைந்தபட்ச 30 நிமிட உடல் செயல்பாடுகள் தூக்கத்தின் தரம் மற்றும் கால அளவை மேம்படுத்த உதவும். எனினும் தூங்க செல்வதற்கு முன் ஒர்கவுட்ஸ் செய்ய கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மன அழுத்தம் மற்றும் கவலை உங்களது தூக்கத்தில் தலையிடலாம், எனவே தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம் போன்ற ரிலாக்ஸ் டெக்னிக்ஸ்களை பயிற்சி செய்யுங்கள்.
உடல் பருமன், நீரிழிவு, மனச்சோர்வு, இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்சனைகளுடன் நாள்பட்ட தூக்கமின்மை கோளாறு தொடர்புடையது. எனவே மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
நம் உடல் தன்னைத்தானே சரிசெய்து புத்துணர்ச்சியாக இயங்க ஒவ்வொரு இரவும் குறைந்தது 8 மணிநேரம் தூங்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு தூக்கமே முக்கியம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


மோர் முதல் மீன் வரை... பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்.!

 ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் அதற்கு அவரின் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். செரிமான மண்டலத்தின் முதல் பகுதியாகவும், முக்கிய பகுதியாகவும் இருப்பது வாய்ப்பகுதி. வாயில் உள்ள பற்கள் மற்றும் ஈறுகள் தான் நாம் உண்ணும் உணவை அரைத்து செரிப்பதற்கு ஏதுவாக மாற்றுகிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இல்லையெனில் அதனால் பல்வேறு பிரச்னைகள் உண்டாகக்கூடும்.

பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நாம் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். ஒரு சரியான உணவு பழக்கத்தை மேற்கொண்டாலே பல் சொத்தை ஈறுகளில் வீக்கம் போன்ற பல்வேறு வித பிரச்னைகள் ஏற்படாமல் நம்மால் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். எனவே நமது பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சில குறிப்பிட்ட உணவு வகைகளை பற்றி இப்போது பார்ப்போம்

பால், மோர் மற்றும் சீஸ் : சிகாகோ பல்கலைக்கழக அறிக்கையின் படி பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாகவும் வலிமையுடனும் வைத்திருப்பதற்கு கால்சியம் மற்றும் புரோட்டின் ஆகியவை முக்கியமானது. எனவே உங்களது தினசரி உணவில் பால், மோர் மற்றும் சீஸ் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. சீஸில் அடங்கியுள்ள பாஸ்பேட் நமது பற்களின் பி எச் (PH) அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் நமது வாயில் எச்சில் சரியாக சுரப்பதற்கும் பாஸ்பேட் தேவைப்படுகிறது. இதை தவிர மோரில் உள்ள ப்ரோபயோடிக் வாயில் அமிலத்தன்மையை குறைக்க உதவுகிறது.

தண்ணீர் : நமது உடலின் 60 சதவீதம் நீரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது உடலின் ஒவ்வொரு உறுப்பிற்குமே தண்ணீர் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். முக்கியமாக ஃப்ளூரைடு கலந்துள்ள தண்ணீரை நாம் குடிக்கும் போது அவை பற்களுக்கு மிகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக பல் சொத்தை ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது. 

உலர் பழங்கள் : டிரை ஃப்ரூட்ஸ் உட்கொள்வது நமது பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். அது தவிர நட்ஸ்களில் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை அடங்கியுள்ளன இவை அனைத்துமே பல் சொத்தை ஏற்படுவதை தடுப்பதுடன் பாக்டீரியாவோடு போராட உதவுகிறது. குறிப்பாக வைட்டமின் டி ஆனது இவர்களுக்கு அதிக நன்மையை கொடுக்கக்கூடியது. இவை பாதாமில் அதிகம் காணப்படுகின்றன.

மீன் : மீன்களில் அடங்கியுள்ள அதிக புரதச் சத்துக்களும் வேறு பல ஊட்டச் சத்துக்களும் பற்களுக்கு வலிமையை அளித்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மேலும் வாயில் எச்சில் சுரப்பதை அதிகரித்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அளவிற்கு அதிகமாக அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!

 


அன்னாசிப்பழம் ஒரு சுவையான பழமாகும். பொதுவாக இது வெயில் காலங்களில் அதிக அளவில் விற்கப்படும் பழங்களில் ஒன்றாகும். இந்த பழத்தில் எண்ணற்ற வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் நிரம்பியுள்ளது.

இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் செரிமான நொதிகள் போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கூறுகள் நிறைந்துள்ளன. இருப்பினும், அதிகப்படியான அளவில் அன்னாசிப் பழங்களை உட்கொள்வது நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இதை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது, இதன் அளவை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். பர்டூ பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறையின் கூற்றுப்படி, வைட்டமின் சி நிறைந்த பழங்களை பழுக்காமல் உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

ரத்த போக்கு : அன்னாசிப் பழத்தின் சாறு மற்றும் தண்டில் ப்ரோமெலைன் என்சைம் உள்ளது. இது நமது உடலில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்த கூடும். இயற்கையான ப்ரோமைலைன் ஆபத்தானதாகத் தெரியவில்லை என்றாலும், ரத்தத்தை மெலிக்கும் மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், இது ரத்தப்போக்கை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

ரத்த சர்க்கரை அளவு : அன்னாசிப் பழத்தில் அதிக அளவில் குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் நிறைந்துள்ளன. எனவே, சிலருக்கு இதை அதிகமாக சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். பெரும்பாலான பழங்களில் சேர்க்கப்படும் கார்போஹைட்ரேட்டுகளால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க முடியும். அந்த வகையில், அரை கப் அன்னாசிப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட் 15 கிராம் ஆகும். எனவே, இதன் அளவில் மிக கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையேல் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பற்கள் : அன்னாசிப் பழத்தின் அமிலத் தன்மையின் விளைவாக பற்கள் மற்றும் ஈறுகள் மிகவும் மோசமடையக் கூடும். மேலும், இது பல் சொத்தை மற்றும் ஈறு அழற்சியை ஏற்படுத்தலாம். நமது நோயெதிர்ப்பு அமைப்பு அன்னாசிப் பழத்தில் உள்ள புரதத்தை மகரந்தம் அல்லது வேறு ஒவ்வாமை என்று தவறாகக் கருதி கொள்ள கூடும் என்பதால் இந்த நிகழ்வு நிகழ்கிறது.

வயிற்று போக்கு : அன்னாசி ஜூஸ் குடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இது சில சமயங்களில் வயிற்று போக்கை ஏற்படுத்தலாம். அதனால் வெறும் வயிற்றில் இதை குடிக்க கூடாது. அதே போன்று, அன்னாச்சி ஜூஸை அதிக அளவிலும் எடுத்து கொள்ள கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.



கவலை, மன அழுத்தம் இனி வேண்டாம்.. தீர்வுக்கு சில வழிகள் இதோ!

 இன்றைய இயந்திர உலகில் மன அழுத்தம், கவலை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளாத நபர்களே இருக்க முடியாது. வேலைக்குச் செல்பவர்களுக்கு மட்டும் தான் மன அழுத்தம் இருக்கும் என்று சொல்ல முடியாது. வீட்டு வேலை செய்பவர்கள், மாணவர்கள், தொழில் செய்பவர்கள் என பல தரப்பினருக்கும் வெவ்வேறு ரூபங்களில் மன அழுத்தம் குடி கொண்டிருக்கும்.

பதற்றம், கவலைக்குரிய சிந்தனைகள் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற உடல் ரீதியிலான மாற்றங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படியாகக் கொண்டதாக கவலை இருக்கிறது. கவலை தோய்ந்த மனதுடன் இருப்பவர்கள் எதிலும் போதிய ஆர்வம் செலுத்தாமல், எப்போதும் சோர்வுடனே காணப்படுவார்கள். அதிகப்படியான வியர்வை, தடுமாற்றம், சீரற்ற இதயத்துடிப்பு ஆகியவை கவலையின் அறிகுறிகள் ஆகும்.

நிறைய பேர் கவலைக்கும், அச்சத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்புவார்கள். அச்சம் என்பது அந்த சமயத்தில் மட்டும் வரக் கூடியது. கவலை என்பது நீடித்து இருக்கக் கூடியது. சரி, இந்த கவலைக்கு இயற்கையாக தீர்வு காண்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

சுறுசுறுப்பாக இருப்பது : மனதுக்கு கவலை அளிக்கின்ற விஷயங்களை மீண்டும், மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தால் கவலை அதிகமாகுமே தவிர குறையாது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். அதைப் போல கவலைகளை மறந்து சிரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மாற்று நடவடிக்கைகளில் நம் கவனத்தை திசை திருப்பி சுறுசுறுப்பாக இயங்கினால் கவலைகள் பறந்து ஓடும்.

ஆரோக்கியமான உணவு : ரத்த சர்க்கரை குறைவு, நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை நிறமூட்டிய உணவுகளை சாப்பிடும்போது ஏற்படும் மன மாற்றங்களாலும் நம் மனதில் கவலைகள் நிரம்பும். இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாக நிறுத்துவது நல்லது.

மது மற்றும் புகை தவிர்க்க வேண்டும் : கவலைகளை மறக்கவே மது அருந்துவதாக சிலர் கூறுவது உண்டு. ஆனால், அது தற்காலிக தீர்வாக இருக்குமே அன்றி நிரந்தர தீர்வை தராது. இது மட்டுமல்லாமல் சிகரெட் புகைப்பதும் தீங்கானதாகும். இவையிரண்டுமே நம் உடலில் மகிழ்ச்சிக்குரிய ஹார்மோன்களை மட்டுப்படுத்தும்.

காஃபியை குறைக்க வேண்டும் : நீடித்த கவலை கொண்டிருப்பவர்கள் காஃபி அருந்துவதை கைவிட வேண்டும். ஏனெனில் அது நம் நரம்பு மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு பதற்றம் உண்டாக இதுவே காரணமாகும். மதுபோதையை போல காஃபியும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

யோகா மற்றும் தியானம் : மனதை அமைதிப்படுத்த இதைவிட சிறப்பான மருந்துகள் வேறெதுவும் இருக்க முடியாது. தினசரி 30 நிமிடங்கள் தியானம் அல்லது யோகா செய்தால் நாளடைவில் மன அழுத்தப் பிரச்சினை முற்றிலுமாக ஒழிந்து விடும். மனநலன் மேம்பட மிகவும் உதவியாக இருக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip