Search

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித்தொகை : தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு

 Rs. 7,500 for UPSC Exam Aspirants:  2023- 24 நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் மாதம் ரூ.7,500 நிதி வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.  இந்த தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வு (Prelims Examination) , முதன்மைத் தேர்வு (Main Examination), Interview (நேர்காணல் தேர்வு).

முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு செல்கின்றனர். இறுதியாக, முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.

இந்த தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இன்றைய நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.இந்தப் போக்கை மாற்றியமைக்க குடிமைப் பணிகள் தேர்வு மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Skill development Corporation) செயல்படுத்தும் என்று தெரிவித்தார்.

ஒவ்வோராண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்குத் தயாராகுவதற்காக மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஊக்கத்தொகையாக  ரூபாய் 25,000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TN Budget 2023: தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்ற வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன?

 

தமிழ்நாட்டில் மூன்றாவது பெரும் தொழில் தொகுப்பாக உருவெடுத்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும் என்று  தமிழ்நாடு நிதி அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, இன்று 2023-24 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். மாநிலத்தில் மனிதவளத்தை  மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பல்தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கு  ரூ. 2,783 கோடி ஒதுக்கீடு:

மாறிவரும் தொழில் சூழலுக்கு தேவைப்படும் மனிதவளத்தை உருவாக்குவதற்கு, 2,877 கோடி செலவில், 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது என்றும், வரும் கல்வி ஆண்டிலேயே, இப்பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இதன் அடுத்த கட்டமாக  தொழில்துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0 தரத்திற்கு ஏற்ப அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.  இக்கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்சார் பாடத்திட்டங்களை உருவாக்குவது, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை இத்திட்டத்தின் குறிக்கோள்களாகும். இத்திட்டத்தில் 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 2,783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிக மையங்களாக தரம் உயர்த்தப்படும் என்றும்  தெரிவித்தார்.

அம்பத்தூரில் TN - WISH அமைக்கப்படும்:  

பல்தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன்,ரூ. 120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் 'தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம்’ (TN-WISH) அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள்: 

திறன் பயிற்சி கட்டமைப்பைப் பெருமளவில் அதிகரிக்க, தற்போதுள்ள தொழிற்சாலைகள் தொழிற்பயிற்சிக் கூடங்களாகப் இளைஞர்களுக்கு பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். தொழிற்சாலைகளிலேயே பயிற்சி தொழில் அனித்திட நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் (Factory Skill Schools) என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில், 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டின் மூன்றாவது பெரும் தொழில் தொகுப்பாக உருவெடுத்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வருகிறது 3 டைடல் பூங்காக்கள்... 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு

 சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில், "தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTech city) அமைக்கப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய அவர்,  உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய மையமாக நிலைநாட்டுவதற்கும். பெருகி வரும் அலுவலகக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கும், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில், "தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTech city)- இந்த அரசு அமைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres), நிதிநுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட திறன்மிகு மையங்கள், புத்தொழில் காப்பகங்கள், வர்த்தக மையங்கள் பொழுதுபோக்கு வசதிகள் போன்ற அனைத்துக் கட்டமைப்புகளும் இந்தத் தொழில்நுட்ப நகரங்களில் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

சென்னையில் முதன்முறையாக 2000 ஆம் ஆண்டில், TIDEL பூங்காவை நிறுவி, தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.  இத்துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில், ஏழு மாவட்டங்களில் நியோடைடல் பூங்காக்கள் (Neo Tidel Parks) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் நீட்சியாக, ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலர ஒரு இலட்சம் சதுரடி கட்டடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம், சுமார் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

 

ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

ESIC ஆணையம் ஆனது Empanelment / Part Time/ Full Time Super Specialists , Professor , Associate Professor, Assistant Professor பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ESIC காலிப்பணியிடங்கள்:

Empanelment / Part Time/ Full Time Super Specialists , Professor , Associate Professor, Assistant Professor பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள்நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Professor கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ESIC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Professor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ESIC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

ESIC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 27.03.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 1


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – மார்ச் 20 ஆம் தேதி ஏற்பாடு!

 

தமிழகத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – மார்ச் 20 ஆம் தேதி ஏற்பாடு!

தமிழகத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற இருக்கும் நிலையில் வருகிற மார்ச் 20 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

முகாம் அறிவிப்பு

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள், மற்றும் அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் தொழிற்பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற அனைத்து பயிற்சியாளர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் மற்றும் பட்டயம் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் அனைவரும் அசல் சான்றிதழ்கள் மற்றும் தக்க ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையை சார்ந்த 70 முன்னனி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிற் பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின் போது உதவித்தொகை மதம் ரூ. 7700 முதல் ரூ 10000 வரை நிறுவனத்தால் வழங்கப்படும். தொழிற் பழகுநர் சட்டம் 1961ன் படி இந்நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற் பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லவும் வாய்ப்பு கிடைக்கும். இந்த முகாம் வருகிற மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பேட்டை திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, திருநெல்வேலி, பேட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04622342432/ 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான Electrician காலிப்பணியிடங்கள் – 25 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 NAPS-ன் கீழ் Power Grid Corporation Of India Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Electrician பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Power Grid காலிப்பணியிடங்கள்:

Electrician பணிக்கான காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Electrician கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Power Grid வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Electrician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.6,000/- முதல் ரூ.13,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Power Grid தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை – சம்பளம்:ரூ.70,000/- || இறுதி வாய்ப்பு!

 ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை – சம்பளம்:ரூ.70,000/- || இறுதி வாய்ப்பு!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் DGM (S & T) பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • DGM (S & T) பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் Screeing/ Interaction & Medical Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.03.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2023 Pdf

தஞ்சாவூர் விமானப்படை நிலைய ஆட்சேர்ப்பு 2023 – Accounts Clerk காலிப்பணியிடங்கள்!

 

தஞ்சாவூர் விமானப்படை நிலைய ஆட்சேர்ப்பு 2023 – Accounts Clerk காலிப்பணியிடங்கள்!

தஞ்சாவூர் விமானப்படை நிலையம் தற்போது NPF கணக்கு எழுத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் 16.03.2023 முதல் 23.03.2023 வரை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை காலிப்பணியிடங்கள்:

NPF Accounts Clerk – 2 பணியிடங்கள்

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Accounts Clerk கல்வி தகுதி:
  • வணிகவியலில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • MS Word & MS Excel பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
  • Tallyயில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு 100 மதிப்பெண்களுக்கு மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.

SBI Mutual Fund நிறுவனத்தில் Graduate முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அதனை வரும் மார்ச் 23க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.


IOCL நிறுவனத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – 500+காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

 

IOCL நிறுவனத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – 500+காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆனது Junior Engineering Assistant, Junior Quality Control Analyst, Junior Material Assistant, Junior Nursing Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 513 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Engineering Assistant, Junior Quality Control Analyst, Junior Material Assistant, Junior Nursing Assistant பணிக்கென மொத்தம் 513 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • 10ம் வகுப்பு / ITI/ Diploma/ Degree (Engg) என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு.
  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 26 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு IOCL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Written Test and a Skill/Proficiency/Physical Test (SPPT) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.03.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    IOCL தேர்வு செய்யப்படும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test and a Skill/Proficiency/Physical Test (SPPT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 01.03.2023ம் தேதி முதல் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.03.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Download Notification PDF 

    Click here for latest employment news

     Click here to join WhatsApp group for Daily employment news


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Client Delivery manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப CSB வங்கி திட்டமிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CSB Bank காலிப்பணியிடங்கள்:

Client Delivery manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Client Delivery manager கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

CSB Bank வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Client Delivery manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

CSB Bank ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு CSB வங்கியின் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

Client Delivery manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல், Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news