Search

Airports Authority of India வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.75,000/- || நேர்காணல் மட்டுமே!

 

Airports Authority of India வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.75,000/- || நேர்காணல் மட்டுமே!

Airports Authority of India-வில் Consultant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 14 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

AAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ளன அறிவிப்பின்படி Consultant பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant தகுதி:
  • ஓய்வு பெற்ற (Retired) ATCOs Level E7/E6 (Jt. General Manager / Dy. General Manager) அளவிலான பணிகளில் பணிபுரிந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
AAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Consultant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து gmhrwr@aai.aero என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 16.04.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அதிக லெமன் ஜூஸ் ஆபத்தா.? ஒருநாளைக்கு எலுமிச்சை சாறு எவ்வளவு குடிக்கலாம்?

 எலுமிச்சை சாறைப் பிழிந்து உப்பு அல்லது சர்க்கரை கலந்துக் குடித்தால் அடிக்கும் வெயிலுக்கு அமிர்தமாய் இருக்கும். இந்த சுவையை தினமும் அருந்தத் தோன்றும். ஆனால் அப்படிக் குடிப்பதால் எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதில் உள்ள ஆசிட் எலும்புகளை அரித்துவிடும் என்று கூறப்படுகிறது. அது உண்மையா..?

ஆராய்ந்து பார்த்ததில் எலுமிச்சை ஜூஸ் உடலுக்கு நல்லது. நிறைய ஊட்டச்சத்துகளைக் கொண்டது. இருப்பினும் மூட்டு வலி கொண்டவர்களோ அல்லது அதிகமாக எலுமிச்சை எடுத்துக்கொண்டாலோ எலும்புகளுக்கு பாதிப்பு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

அப்படி ஊட்டச்சத்து நிபுணர் ரூபாளி தத்தா என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என இதுவரை எந்த ஆய்வுகளின் மூலமும் நிரூபிக்கப்படவில்லை. அதில் வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதால் மூட்டு வீக்கம், மூட்டு வலி இருப்போருக்கு நல்லது என நம்பப்படுகிறது. 

அதேபோல்  இது குறித்து பேசிய மற்றொரு ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சுவை, யாரேனும் நெஞ்சு எரிச்சல், ஆசிட் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால் எலுமிச்சை பரிந்துரைப்பதில்லை. மற்றபடி எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் எந்த பக்கவிளைவுகளும் இல்லை என்று கூறியுள்ளார்.

அதேபோல் ஒருநாளைக்கு 2 எலுமிச்சை வரை சாப்பிடலாம். அது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியது. விருப்பம் போல் உப்பு, சர்க்கரை இப்படி எது வேண்டுமென்றாலும் கலந்து குடிக்கலாம். குறிப்பாக எலுமிச்சை ஜூஸுடன் தேன் கலந்து குடிப்பது நுரையீரல் மற்றும் சிறுநீர் பையை சுத்திகரிக்க உதவும்

எனவே, இதனால் அப்படி ஆகுமோ..இப்படி ஆகுமோ என்று யோசிக்காமல் கோடைக்கு அமிர்தமாய் இருந்தால் , உங்களுக்குக் குடிக்கப் பிடித்தால் தாராளமாக தினமும் ஒரு கிளாஸ் பருகி அந்த சுவையை அனுபவிக்கலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உடல் ஆரோக்கியம் முக்கியம்.. வெயில் காலத்தை சமாளிக்க சில டிப்ஸ்!

 நாடு முழுவதும் கோடைகாலம் மெதுமெதுவாக துவங்கி வரும் நிலையில் பல இடங்களில் கடும் வெயில் இப்போதே வாட்ட துவங்கி விட்டது. இந்த கோடையில் பிஸியான வேலைநேரம் மற்றும் நீண்ட வேலை நேரங்களை கொண்டவர்கள் தங்களது உற்பத்தித்திறன் மற்றும் சீரான ஆரோக்கியத்தை பராமரிக்க ஹைட்ரேட்டாக இருப்பது அவசியம்.

பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் மற்றும் எலக்ட்ரோலைட்ஸ்களின் முக்கியத்தும் பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும். உடலையும் மனதையும் சிறந்த முறையில் செயல்பட வைக்க போதுமான திரவங்களை எடுத்து கொள்ள பல வழிகள் உள்ளன. இது குறித்து பல தகவல்களை ஷேர் செய்து இருக்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணரான சௌமியா தியாகராஜன். இவர் கூறுகையில் தண்ணீர் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள் ஆகும், இது உடலின் அனைத்து உறுப்புகள் மற்றும் அமைப்புகள் சரியாக செயல்படுவதை உறுதி செய்கிறது.

நாம் டிஹைட்ரேட்டாகி விட்டால் நம்முடைய புத்திசாலித்தனமான உடல் அதற்கான சில சிக்னல்களை வெளிப்படுத்துகிறது. தோல் சுருக்கம், உலர்ந்த மற்றும் வெடித்த உதடுகள், அதிக பசி அல்லது பொதுவான எரிச்சல் கூட உங்கள் உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும். ஆனால் காலை 9 மணி முதல் வேலையில் பிசியாகி விடுவதால் பெரும்பாலானோர் இதுபோன்ற அறிகுறிகளை புறக்கணிக்கின்றனர். பிரபல டயட்டீஷியனான மனிஷா சோப்ரா பேசுகையில், வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து பகல்நேர சோர்வை குறைப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பணியிடங்களில் இருந்தாலும் நாம் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம் என்கிறார்.

பெரும்பாலானோர் ஆஃபிஸ் டைமில் நாம் அடிக்கடி டீ மற்றும் காஃபி குடிப்பார்கள், ஆனால் இவை நம் உடலை ஹைட்ரேட் செய்து மாறாக டிஹைட்ரேட் செய்கிறது, அதாவது நீரழிப்பை ஏற்படுத்துகிறது. பிஸியான வேலை நேரத்திற்கு நடுவில் உங்களை ஹைட்ரேட்டாக வைத்து கோலவஸ்து எப்படி என்பதற்கான டிப்ஸ்களை பார்க்கலாம்.

பெரிய மற்றும் ஃபேன்ஸியான வாட்டர் பாட்டில்கள்: தண்ணீர் காலியானதும் பாட்டிலில் ரீஃபில் செய்ய செல்ல உங்களுக்கு சோம்பலாக இருந்தால் அல்லது பாட்டில் காலியாக இருக்கும் போது மீண்டும் தண்ணீரை நிரப்ப மறந்து விடுகிறீர்கள் என்றால் இந்த ஹேக் உங்களுக்கானது. தண்ணீரை குடிக்க தூண்டும் வகையிலான அழகான மற்றும் ஃபேன்ஸியான வாட்டர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்துங்கள். மேலும் அவை 2-3 லிட்டர் அளவுள்ள பெரிய பாட்டில்களாக இருக்குமாறு பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.

கோல்ட் சூப்ஸ்: ( Cold Soups) கோடை காலம் வந்துவிட்டதால் அடிக்கும் வெயிலுக்கு நடுவே சூடான சூப்களை குடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். கோடைகாலத்திற்கு ஏற்ற Cold Soups-களுக்கான ரெசிபிக்கள் ஆன்லைனில் ஏராளமாக உள்ளன. பூசணி, சுரைக்காய், வெள்ளரி, கீரை போன்ற இலை கீரைகளை கூட Cold Soups தயாரிக்க பயன்படுத்தலாம். குளிர்ச்சியான காய்கறிகளை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள சிறந்த வழியாகவும் இருக்கும்.

இளநீர்: கோடைகால விற்பனையில் மக்கள் அதிகம் குடிக்கும் ஒன்றாக இருக்கிறது இளநீர். இதில் நம் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்ஸ்கள் உள்ளன. குறிப்பாக பேக் செய்யப்பட்ட இளநீரை தவிர்க்கவும். இளநீர் தரும் அற்புத பலன்களை முழுவதுமாக பெற நேரடியாக இளநீர் கடைக்கு சென்றோ அல்லது இளநீரை வீட்டிற்கு வாங்கி வந்தோ குடிக்கவும்.

நீர்ச்சத்துமிக்க உணவுகள்: வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, சிட்ரஸ் பழங்கள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் தண்ணீரைச் சேர்ப்பதற்கான மற்றொரு சிறந்த வழி, உங்கள் பருப்பு, மோர் மற்றும் லஸ்ஸி-யில் அதிகஅளவு தண்ணீரை சேர்ப்பது.

எலக்ட்ரோலைட் சப்ளிமென்ட்ஸ்: உங்களது வேலை வெயிலில் அதிகம் அலைவதாக இருந்தால் வியர்வையால் நீங்கள் இழக்கும் எலக்ட்ரோலைட்ஸ்களை நிரப்ப நல்ல தரமான எலக்ட்ரோலைட் சப்ளிமென்ட்ஸ் எடுப்பதை உறுதி செய்யவும்.

ஆரோக்கிய ஸ்நாக்ஸ் : வழக்கமாக எடுத்து கொள்ளும் நொறுக்கு தீனிகளுக்கு பதில் கோடை காலத்தில் தர்பூசணிகள், பெர்ரி, வெள்ளரிகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடவும். இந்த கோடையில் ஊழியர்கள் நலன் மீது அக்கறை கொண்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிக தண்ணீர் குடிக்க வலியுறுத்துவதோடு பிற ஆரோக்கிய பானங்களை அவர்களுக்கு வழங்கலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வெயிட் குறையும்.. செரிமானம்.. கோடைக் காலத்தில் லெமன் ஜூஸ் பருகுவதால் இவ்வளவு நன்மைகளா?

 எலுமிச்சை பழம் கோடை காலத்தில் ஏழை எளிய மக்கள் முதற்கொண்டு அனைத்து தரப்பினரும் விரும்பி பயன்படுத்தும் பழமாக உள்ளது. நிம்பு பானி, ஷிகன்ஜி மற்றும் நிம்பு சோடா என்றும் அழைக்கப்படும் எலுமிச்சை நீர் கோடை காலத்தில் அனைவருக்கு ஏற்றது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் இதனை மக்கள் விரும்பி அருந்தும் பானமாக உள்ளது. கோடை காலம் என்று கிடையாது பொதுவான தினங்களில் கூட பலரும் காபி, டீக்கு பதிலாக இளம் சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். அப்படி பருகுவதால் ஆரோக்கியத்தோடு, சுறுசுறுப்பு மற்றும் புத்துணர்ச்சியும் கிடைத்து நாளை இனிமையாக ஆரம்பிக்க உதவுகிறது.

மேலும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. வெதுவெதுப்பான நீரில் அரை பாதி எலுமிச்சை சாறு பிழிந்து 2-3 முறை தினமும் குடிப்பது ஜீரண மண்டலத்திற்கும், இதயம், கண் போன்ற உறுப்புகளுக்கும் நல்லது என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து, ஃப்ரீ ரேடிக்கல்களை சேதப்படுத்தாமல் செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு பக்கவாதம் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட எலுமிச்சை சாறு கலந்த அல்லது எலுமிச்சை துண்டுகள் கலந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் என்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் உடலுக்கு கிடைக்கிறது என பார்க்கலாம்..

1. உடல் எடை குறைப்பு: எலுமிச்சையில் நிறைந்துள்ள அதிகப்படியான வைட்டமின் சி சத்து கொழுப்புகளின் ஆக்ஸினேற்றத்திற்கு உதவுகிறது. எலுமிச்சை பழத்தில் காணப்படும் பெக்டின் என்ற நார்ச்சத்து பசியைக் குறைக்கவும், வயிற்றை முழுமையாக உணரவும் வைக்கிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவது மற்றும் தேவையற்ற நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்வது குறைக்கப்படுகிறது. காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இது செரிமான செயல்முறையை நன்றாக வைத்திருப்பதோடு, கொழுப்பை எரித்து, எடையை எளிதில் குறைக்கவும் உதவுகிறது.

2. நீரேற்றம்: எலுமிச்சை நீர்  உடல் நீரேற்றத்தை மேம்படுத்துகிறது. ஏனெனில் தண்ணீரில் கலக்கும் புளிப்புச் சுவை அதனை அதிக அளவில் உட்கொள்ள வைக்கிறது. எலுமிச்சை நீர் நம் உடலில் சோடியம் அளவை மேம்படுத்த உதவுகிறது மற்றும் உடலுக்கு நீரிழப்பு ஏற்படாமல் தடுப்பதோடு, முக்கிய ஊட்டச்சத்துக்களை நிரப்பவும் உதவுகிறது. எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது.

3. செரிமானம்: காலையில் சூடான அல்லது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது சிறந்தது. ஏனெனில் இது சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு, செரிமானப் பாதையை சுத்திகரிக்க உதவுகிறது. உங்கள் நாளை வெதுவெதுப்பான எலுமிச்சை நீரில் தொடங்க முடிவு செய்தால், நீங்கள் மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் முயற்சி செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஆயுர்வேத அடிப்படையில், எலுமிச்சை நீர் செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவும் 'அக்னி' எனப்படும் நெருப்பு உறுப்பை தூண்டுவதாக நம்பப்படுகிறது.

4. சரும பலன்கள்: எலுமிச்சை நீரில் அதிக வைட்டமின் சி உள்ளது, இது தோல்களில் சுருக்கம் மற்றும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. 2016ம் ஆண்டு எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, முடிகளற்ற எலிகளின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை சிட்ரஸ் சாறு அமிலம் கட்டுப்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தினமும் 5 வால்நட் சாப்பிடுங்க.. இந்த 10 பிரச்சனைகளே இருக்காது..!

நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

அதோடு வால்நட்ஸில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. வால்நட்ஸில் உள்ள MUFA மற்றும் ஒமேகா 3 கொழுப்புக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா -3 ALA மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை வால்நட்ஸ் ஆகும். பிற சத்துள்ள பருப்புகளை விட இந்த வால்நட் 5 மடங்கு ALA-ஐக் கொண்டுள்ளது. வால்நட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகளை குறித்து காண்போம்.

மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது : வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். இதனை தினமும் சாப்பிடுபவதால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதை தடுக்க முடியும்.

மனச்சோர்வை குறைக்கும் : வால்நட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் உள்ள உயர்தர பருப்பு வகைகளில் ஒன்றாகும். இது மூளையின் செயல்பாட்டை நேர்மறையாக ஆதரிக்கிறது மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

தலைமுடி உதிர்வை குறிக்கிறது : வால்நட்ஸை தினமும் சாப்பிட்டால், அதில் உள்ள பயோடின் என்னும் வைட்டமின் பி7, தலைமுடியின் வலிமையை அதிகரித்து தலைமுடி உதிர்வதை குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்கள் வால்நட்ஸை சாப்பிடுவது மிகவும் நல்லது.

உடல் பருமனை குறைக்க உதவுகிறது : இந்த பருப்புகள் பசியை குறைப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகின்றன. இவற்றை ஒரு சிற்றுண்டியாக சாப்பிடலாம். இந்த வால்நட்ஸ்களை வறுத்து சிறு சிறு துண்டுகளாக பொடித்து வாழைப்பழம், மாம்பழம் ஆகியவற்றை கொண்ட சாலட்களில் சேர்ந்து சாப்பிடலாம். அவற்றை பச்சையாகவும் சாப்பிடலாம், ஏனெனில் அவற்றின் சத்து மதிப்பு அப்படியே தான் இருக்கும்.

இதயத்திற்கு நல்லது : வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும், இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும் இதய ஆரோகியத்திற்கு வழிவகுக்கிறது. இந்த பருப்புகளில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு காமா-டோகோபெரோல் வடிவத்தில் உள்ளது. இது இதய பாதுகாப்பிற்கு மிகவும் உதவுகிறது. மேலும் ஒமேகா -3, கொழுப்பின் அளவைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் தமனிகள் வழியாக இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது : இந்த அக்ரூட் பருப்புகள் அதாவது வால்நட் நல்ல செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கின்றன. அவற்றில் இருக்கும் ப்ரீபயாடிக் பண்புகள், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை : பாதாம், பிஸ்தா போன்ற பல்வேறு வகை பருப்புகள் மற்றும் பெர்ரி வகைகளை காட்டிலும், வைட்டமின் ஈ, எலாஜிக் அமிலம், மெலடோனின், கரோட்டினாய்டுகள் போன்ற சிறந்த உயர்தர ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த வால்நட்சில் உள்ளன.

விந்தணுக்களின் வளர்ச்சிக்கு நல்லது : வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதுடன், விந்து இயக்கம் மற்றும் விந்தணுவின் உருவகம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. ஆகவே தான் ஆண்கள் தினமும் 5 வால்நட்ஸை சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகிறது.

இது தவிர, சருமத்தில் சுருக்கங்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது. மேலும், ப்ரீ ராடிக்கல்களிடமிருந்து சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

சமீபத்திய ஆய்வு ஒன்றில் வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. வால்நட்ஸ்களை நாம் தினமும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இளைஞர்களே அரிய வாய்ப்பு... சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்... மிஸ் பண்ணாதீங்க..

 சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் 24 ஆம் தேதி தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கிண்டியில் மார்ச் 24 ஆம் தேதி தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், 2வது அல்லது 3வது வெள்ளிக்கிழமைகளில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மார்ச் 24 ஆம் தேதி சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 24 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளனர். கிண்டி - ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். இதில் 20க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இம்முகாம் வாயிலாகப் பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் நிறுவனங்கள் மற்றும் கலந்துகொள்கிறவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் தமிழ்நாடு தனியார்த் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவேற்றம் செய்யவேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரயில் டிக்கெட்டுகளை வழங்கும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

 Madurai Railway Division jobs: ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் (ATVMs) மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்கும் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

காலியிட விவரங்கள் பின்வருமாறு:-

1. மதுரை ரயில் நிலையம் - 6

2. திண்டுக்கல் ரயில் நிலையம் -5

3. மணப்பாறை ரயில் நிலையம் -2

4. மானாமதுரை ரயில் நிலையம் -2

5. பரமக்குடி ரயில் நிலையம்-1

7.புனலூர் ரயில் நிலையம் -1

8.கொட்டாரக்கரா ரயில் நிலையம் -1

9.திருநெல்வேலி ரயில் நிலையம் -5

10.நாசரேத் ரயில் நிலையம் -1

11.திருச்செந்தூர் ரயில் நிலையம் -1

12.விருதுநகர் ரயில் நிலையம் -2

13.கோவில்பட்டி ரயில் நிலையம் -2

14.சாத்தூர் ரயில் நிலையம் -2

15.சிவகாசி ரயில் நிலையம்-2

16.சங்கரன்கோவில் ரயில் நிலையம் -1

17.புதுக்கோட்டை ரயில் நிலையம் -1

18.உடுமலைப்பேட்டை ரயில் நிலையம் -1

19.பழனி ரயில் நிலையம்-1

20.கடையநல்லூர் ரயில் நிலையம் -1

21.கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் -1

22.செங்கோட்டை ரயில் நிலையம்-3

23.சேரன்மகாதேவி ரயில் நிலையம் -1

24.கீழ புலியூர் ரயில் நிலையம் -1

25.அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் -1

26.பாவூர் சத்திரம் ரயில் நிலையம்-1

27.தூத்துக்குடி ரயில் நிலையம் -1

28. வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் -2

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதாகும். மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் பொதுவான நிபந்தனைகள் மேற்கண்ட ரயில் நிலையங்களின் அறிவிப்புப் பலகைகளில் உள்ளது. குறிப்பிட்ட ரயில் நிலையத்தின் அருகில் குடியிருக்கும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டுமே , அந்தந்த ரயில் நிலையத்தில் உள்ள பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் (குரூப் சி மற்றும் டி பணியாளர்கள்) இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை Sr.Divisional Commercial Manager. Southern Railway DRM Office Madurai-625016 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என மதுரை ரயில்வே கோட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அதீத உடல் உஷ்ணத்தை இயற்கையாக குறைப்பதற்கான சில வழிகள்!!

 கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது.... உடலை குளிர்ச்சியாக வைக்க தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால், உடல் அதிக உஷ்ணமானால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். மனித உடலின் சராசரி வெப்பநிலை 97.8°F முதல் 99.0°F இருத்தல் வேண்டும். உடல் உஷ்ணத்திற்கு காலநிலை மாற்றம், உணவு பொருட்கள் என பல காரணங்கள் உள்ளது. நமது உடல் சூட்டை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம். அந்தவகையில், உடல் உஷ்ணத்தை இயற்கையாக கட்டுப்படுத்தும் சில உணவுப்பொருட்கள் பற்றி காணலாம்.

உடல் சூட்டை கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய உணவு பொருளாக இளநீர் உள்ளது. மேலும், கோடை காலத்தின் போது ஏற்படும் சருமம் தொடர்பான ஒவ்வாமை பிரச்சனைகளை எதிர்கொள்ள இளநீர் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. எனவே, கோடைக்காலத்தில் தினமும் குறைந்தபட்சம் ஒரு இளநீராவது குடிக்க வேண்டியது அவசியம்.

வெள்ளரிக்காய் ஒரு கோடை கால உணவு பொருள். வெள்ளரிக்காயினை அப்படியே சாப்பிடுவது (அல்லது) வட்ட வடிவில் வெட்டி கண் இமைகளுக்கு மேல் வைத்து ஓய்வு எடுப்பது, உடல் சூட்டை குறைக்க உதவும். அதுமட்டும் அல்ல, உடல் எடை குறைப்புக்கு வெள்ளரிக்காய் சிறந்த உணவாக உள்ளது.

புதினாவை சட்னி, சாறு, சாதம் என ஏதேனும் ஒரு வடிவில் தினமும் நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை குறைக்க உதவும். மேலும், புதினாவில் உள்ள மருத்து குணங்கள் வயிற்றுப்புண், குடல் புண்களையும் குணப்படுத்தும்.

தர்பூசணி பழம் சுமார் 91.45% தண்ணீரால் ஆனது. கோடைக்கு ஏற்ற இந்த பழத்தினை அவ்வப்போது சாப்பிடுவது உடல் சூட்டை கடுப்படுத்தி கோடை நோய்களில் இருந்து காக்கும். இது உடலை குளிச்சியாக்குவதுடன், சரும பிரச்சனைகளையும் தீர்க்கிறது.

தயிரை நேரடியாக எடுத்துக்கொள்ளும் போது அது உடல் சூட்டை அதிகரிக்கும். எனினும் லஸ்ஸி, ராய்த்தா மற்றும் மோர் என பல குளிர் பான வகையாக தயிரை எடுத்துக்கொள்வது உடல் சூட்டை குறைக்க உதவும். அதுமட்டும் அல்ல, இது உடலுக்கு தேவையான புரதத்தை கொடுத்து புத்துணர்ச்சியளிக்கும்.

கோடை காலத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கும் ஒரு ஊட்டச்சத்து மிக்க பழமாக வாழைப்பழம் (குறிப்பாக பச்சை வாழைப்பழம்) உள்ளது. மேலும், இந்த வாழைப்பழம் உஷ்ணத்தால் ஏற்படும் மலச்சிக்கலையும் போக்குகிறது. வாழைப்பழத்தில்,வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது அல்சர் அபாயத்தை குறைக்கிறது.

அவகோடா என அழைக்கப்படும் பட்டர் ஃப்ரூட் -யில் மோனொசாட்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இது உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவுவதோடு, செரிமான பிரச்சனைகளை போக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும், இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.

சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது, உடலின் குளிர்ச்சித்தன்மைக்கு பெரிதும் உதவுகிறது. எலுமிச்சையை ஏதேனும் ஒரு வடிவில் நம் உணவில் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை குறைக்க உதவும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஆரோக்கியம் முக்கியம்.. ஜிங்க் சத்து கிடைக்க தவிர்க்க கூடாத உணவுகள்!

 நமது உடலுக்கு தேவையான இன்றியமையாத ஊட்டச்சத்துக்களில் துத்தநாகமும் ஒன்றாகும். ஜிங்க் என அழைக்கப்படும் இது நமது உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை செய்கிறது. ஜிங்க் குறைபாடு ஏற்படும்போது இவை நமது உடலில் பல்வேறு விதமான பிரச்சினைகளை உண்டாக்கக்கூடும். எனவே தினசரி உணவில் துத்தநாகம் நிறைந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வது அவசியமாகும் அந்த வகையில் எந்தெந்த உணவு பொருட்களில் துத்தநாகம் அதிக அளவு உள்ளது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

ஷெல் மீன் : ஷெல் மீன்களில் துத்தநாகம் அதிக அளவு நிறைந்துள்ளது. இதில் உடலுக்கு தேவையான புரத சத்தும் மட்டுமின்றி மற்றும் பல ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.

இறைச்சி : உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் புரதச்சத்தையும் அளிப்பதில் இறைச்சி முக்கியத்துவம் வாய்ந்த உணவுப் பொருளாக இருந்து வருகிறது. முக்கியமாக இதில் துத்தநாகம் அதிக அளவில் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விதைகள் : பப்பாளி விதைகள், எள் விதைகள் ஆகியவற்றின் நமது உடலுக்கு தேவையான துத்தநாகம் அதிக அளவில் நிறைந்துள்ளது மேலும் இதைத் தவிர நார்ச்சத்தும் மேலும் பல தாது பொருட்களும் இவற்றில் நிறைந்துள்ளன. நமது தினசரி உணவிலோ அல்லது நொறுக்கு தீனியாகவோ இவற்றை நாம் உட்கொள்ளலாம்.

வேர்கடலைகள் : வேர்க்கடலை என அழைக்கப்படும் இந்த நிலக்கடலைகளில் நமது உடலுக்கு தேவையான துத்தநாகம் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இவை குழந்தைகளுக்கும் அதிகம் பிடித்த ஒரு நொறுக்கு தீனியாக இருப்பதால் விதவிதமான முறைகளில் நாம் இவற்றை தயார் செய்து அவர்களுக்கு கொடுக்கலாம்.

பருப்பு வகைகள் : சுண்டல், பீன்ஸ் மற்றும் பல பருப்பு வகைகளில் நமது உடலுக்கு தினசரி தேவைப்படும் அளவில் பத்து சதவீதத்திற்கும் அதிகமான துத்தநாகம் நிறைந்துள்ளது. எனவே முடிந்த அளவு நமது உணவில் இந்த பருப்பு வகைகளையும் சுண்டல் பீன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

முட்டைகள் : முட்டைகளில் துத்தநாகம் மட்டுமின்றி புரதம் வைட்டமின்கள் என பல்வேறு விதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு முட்டை ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. மேலும் முட்டைகளை நாம் விதவிதமான முறைகளில் சமைத்து உண்ணலாம் என்பதால் இவை குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.

துத்தநாகத்தின் பயன்கள் : நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும் துத்தநாகம் தான் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடலில் உண்டாகும் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்துவதற்கும் துத்தநாகம் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.

இதைத் தவிர நமது உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் காயத்தை விரைவில் குணமாக்க துத்தநாகம் உதவுகிறது. மேலும் வயதாவதால் ஏற்படும் முதிர்ச்சியான தோற்றத்தை தடுத்து, எப்போதும் இளமையாக காட்சி அளிப்பதற்கு துத்தநாகம் உதவுகிறது.

அடிக்கடி தலைமுடி உதிர்வை பிரச்சனை சந்திக்கும் நபர்களுக்கு உடலில் துத்தநாக குறைபாடு இருக்கும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு துத்தநாகம் முக்கியமானது ஆகும். இதைத் தவிர உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி சீராக வைப்பதற்கு துத்தநாகம் அவசியமாகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மகிழ்ச்சியாக இருக்கும்போது நொறுக்குத் தீனிகளை சாப்பிட விரும்பும் இந்தியர்கள்.! - ஆய்வில் தகவல்!

 நம்மில் பெரும்பாலோனோருக்கு நமது மனநிலையை பொறுத்து நமது உணவு பழக்க வழக்கமும் மாறுபடும் அந்த வகையில் சமீபத்திய ஆய்வின்படி இந்தியர்களில் 72% மக்கள் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நொறுக்கு தீனிகளை சுவைக்க விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது ஆண் பெண் என இரு பாலினத்தாருக்குமே பொதுவான ஒன்றாக இருந்து வருகிறது.

சமீபத்தில் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய அந்த ஆய்வறிக்கையில், நொறுக்கு தீனிகளை சாப்பிட்ட பிறகு 70% இந்தியர்கள் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வதாக கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த ஆய்வானது இந்தியாவின் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என மொத்தம் பத்து நகரங்களில் உள்ள மக்களில் இடமிருந்து பெறப்பட்டது. அதில் மும்பை, புனே, அகமதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, கொல்கத்தா, சென்னை. ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து தரவுகள் திரட்டப்பட்டுள்ளன.

அதில் 56%மக்கள் தாங்கள் சோகமாக இருக்கும்போது நொறுக்கு தீனிகளை சுவைக்க விரும்புவதாகவும், 40% மக்கள் சலிப்பாக உணரும்போது நொறுக்கு திணிகளை உட்கொள்வதன் மூலம் மனநிலையில் நல்ல மாறுதல்கள் உண்டாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள 81% மக்கள் தங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது நொறுக்கு தீனிகளை உட்கொள்ள விரும்புகிறார்கள். கிடைத்த தரவுகளிலேயே இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தான் நொறுக்கு தீனிகள் உட்கொள்வதில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் 77 சதவீதமும், சென்னையில் 77 சதவீதமும், கொல்கத்தாவில் 75%, மும்பை 28%, அகமதாபாத் 67%, புனே 66%, பெங்களூர் 26% மற்றும் ஜெய்ப்பூரில் 61% மக்கள் நொறுக்கு தீனியை சுவைக்கிறார்கள்.

இதில் டெல்லி, லக்னோ, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் சோகமாக இருக்கும் போது நொறுக்கு தீனிகளை சுவைக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். இதில் 50% மக்களுடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் தான் கடைசி இடத்தில் உள்ளது.

இவ்வாறு நொறுக்கு தீனிகளை சுவைப்பது என்பது பல்வேறு குடும்பங்களிலும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட இந்திய குடும்பங்களில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் நொறுக்கு தீனிகளை ஒரு மினி மீல்ஸ் ஆக கருதுகின்றனர். அதில் தற்போது அதிக அளவிலான பெற்றோர் நொறுக்கு தீனிகளை ஒருவேளை உணவாகவே உட்கொள்ளும் அளவிற்கு வந்து விட்டனர். 34 சதவீத ஆண்களும், 35 சதவீத பெண்களும் இவ்வாறு ஒரு பழக்கம் அதிகரித்து வருவதை உறுதி செய்துள்ளனர்.

இதைத் தவிர நொறுக்கு தீனிகள் உட்கொள்ளும் பழக்கமானது வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் அவற்றை செய்ய எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. 44 சதவீத இந்தியர்கள் தங்கள் வீடுகளில் வேலைக்கு பணியாளர்கள் இல்லாத போது, நொறுக்கு தீனிகள் அதிகம் உதவுவதாக குறிப்பிட்டுள்ளனர். அதில் 60% பேர் இளம் வயதினராகவும் திருமணமாகாதவராகவும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 2815 நபர்களிடமிருந்து பதில்கள் பெறப்பட்டன. அதில் 25% பேர் வட இந்தியாவில் இருந்தும், 36 சதவீதம் பேர் தென்னிந்தியாவிலிருந்தும், 25% பேர் இந்தியாவின் மேற்கு பகுதியில் இருந்தும், மீதமுள்ளவர் அனைவரும் இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருந்தும் பங்கேற்றுள்ளனர். இதில் 42% பேர் திருமணமாகாதவர் என்றும், 52% பேர் திருமணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது நொறுக்கு தீனிகளை உட்கொள்வது மக்களின் மனநிலையை மகிழ்ச்சியாக உதவுகிறது என்று தெரிய வந்துள்ளது. மேலும் வரும் காலங்களில் இந்த ஆய்வு அறிக்கை அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை குறி வைத்து புதிய நொறுக்கு தீனி வகைகளை சந்தைகளுக்கு கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip