Search

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் 281 காலியிடங்கள்: ரூ. 50,000 மேல் மாத சம்பளம்

 Tamil nadu government jobs: திண்டுக்கல் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், கணினி பொறியாளர், ஓட்டுநர், நடத்துனர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழும் 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமல், நேர்காணல் மூலம் மட்டுமே நியமனங்கள் நடைபெற உள்ளன.

காலிப்பணியிடங்கள்: ஆட்சேர்ப்பு அறிவிப்பில் நான்கு பிரிவுகளின் கீழ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தட்டச்சர், நூலகர் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய வெளித்துறை பிரிவின் கீழ் 174 இடங்களும், கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப பிரிவின் கீழ் 82 இடங்களும்; நாதஸ்வரம், தவில் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய உள்துறை பிரிவின் கீழ் 14 காலிப்பணியிடங்களும்; ஆசிரியை, ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளின் கீழ் 19 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்குமான வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்து அறநிலைத் துறை வெளியிட்ட அறிவிப்பில் (ஆட்சேர்ப்பு அறிவிப்பு) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறையானது அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை palanimurugan.hrce.tn.gov.inமற்றும் hrce.tn.gov.in ஆகிய இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 07.04.2023 மாலை 5.45 மணி. விண்ணப்பங்களை நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் -624 601" என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மாதம் ரூ.31 ஆயிரம் வரை சம்பளம்.. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேலைவாய்ப்பு..

 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி தொடர்பான விவரங்கள் :

  • பணியின் பெயர் : முதுநிலை ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow)
  • கல்வித்தகுதி: M.Sc யில் Agriculture/ Plant Physiology/ Agronomy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மாத சம்பளம்: ரூ.31,000/- வரை.
  • விண்ணப்பக் கட்டணம் :  இல்லை.
  • தேர்வுச் செயல் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • நேர்காணல் நடைபெறும் இடம்: The Director (Crop Management), TNAU, Coimbatore
  • நேர்காணல் நடைபெறும் தேதி: 29.02.2023
  • ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 29.03.2023.

  • Official Website

காலை எழுந்ததுமே முதல்ல டீ குடிக்கும் நபரா நீங்கள்.? இனிமே இப்படி போட்டுக் குடிங்க.. உடலுக்கு ரொம்ப நல்லது.!

 நமது நாட்டில் தேநீர் அருந்தும் பழக்கம் அதிகம் உள்ளது. தேநீர் புத்துணர்ச்சி பானம் மட்டுமின்றி அதில் எண்ணற்ற மருத்துவ பண்புகளும் நிறைந்துள்ளது. நீங்கள் தினமும் அருந்த வேண்டிய ஆரோக்கியமான தேநீர் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

இஞ்சி தேநீர் : இஞ்சி ஒரு நன்மை பயக்கும் மூலிகையாக கருதப்படுகிறது. உங்கள் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்யவும், புத்துயிர் பெறவும் புதிதாய் தயாரிக்கப்பட்ட சூடான இஞ்சி தேநீர் அருந்துவது மிகவும் நல்லது. ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய இஞ்சி தேநீர் புத்துணர்ச்சியூட்டும் சுவையை வழங்கும், இது தொண்டை புண்ணை குணப்படுத்தும் சக்தி பெற்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்றது. எனவே தினமும் நீங்கள் அருந்தும் தேநீரில் சில துண்டுகள் இஞ்சிசேர்ப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எலுமிச்சை தேநீர் : நீங்கள் ஒரு சரியான பானத்தைத் தேடுகிறீர்களானால், உங்கள் தேநீரில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து, சிட்ரஸ் நன்மையுடன் கூடிய தேநீரை அருந்துங்கள். சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஆறு வாரங்களுக்கு எலுமிச்சை தேநீர் அருந்தியவர்கள் ஆரோக்கியமாக
இருப்பதாக நிரூபித்துள்ளனர் . எனவே இதய நோய், பக்கவாதம் மற்றும் மனச்சோர்வு பிரச்னை உள்ளவர்களுக்கு எலுமிச்சை தேநீர் நன்மை பயக்கும்.

செம்பருத்தி தேநீர் : செம்பருத்தி தேநீர் உங்கள் வழக்கமான பானத்தில் ஒரு வண்ணத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல், ஆன்டிவைரல் பண்புகளையும் கொண்டுள்ளது. செம்பருத்தி ரோசெல்லே எனப்படும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் ஆண்டிபராசிடிக் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் தொடர்ந்து செம்பருத்தி தேநீர் அருந்தி வந்தால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளைத் தடுப்பதில் நன்மை பயக்கும். மேலும் செம்பருத்தி தேநீர் மன அழுத்தத்தை குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. செம்பருத்தி பூக்களை காய வைத்து அரைத்து அந்த பவுடரை கொண்டும் தேநீர் தயாரிக்கலாம். இதனை சூடான தேநீராக மட்டுமின்றி, தண்ணீரில் கொதிக்கவைத்து குளிர்ந்த பானமாகவும் அருந்தலாம்.

மிளகுக்கீரை தேநீர் : உங்கள் தேநீரில் மிளகுக்கீரை சேர்ப்பது நிச்சயமாக உங்கள் தேநீர் சுவையை அதிகரிக்கும். மிளகுக்கீரை தேநீரை அருந்துவது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை ஆதரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற, ஆன்டிகான்சர், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது. குறிப்பாக தலைவலி, சைனஸ் பிரச்சினைகள் அல்லது வயிற்று பிரச்சினைகள் இருப்பவர்கள் உள்ளவர்களுக்கு மிளகுக்கீரை தேநீர் நல்ல பலன் தரும்

கெமோமில் தேநீர் : கெமோமிலலை(chamomile) பாபூன் கா ஃபால் என்று இந்தியில் அழைப்பார்கள். இதற்கு நோய் குணப்படுத்தும் தன்மைகள் உள்ளது. இந்த தேநீரை உலர்ந்த மலர்களை கொண்டு செய்வார்கள். இது உங்கள் மனதை அமைதிப் படுத்துவதோடு, நல்ல ஆரோக்கியத்தையும் தரும். நீங்கள் இந்த தேநீரை படுக்கப் போகும் முன் அருந்தினால் அது உங்கள் நரம்புகளையும் நரம்பு மண்டலத்தையும் அமைதிப் படுத்தி உங்களை விரைவாக தூக்கம் வரும். உங்களுக்கு சளி, சுரம், வறண்ட தொண்டை, மூக்கடைப்பு, போன்ற உபாதைகள் இருந்தால் இந்த தேநீர் அதில் இருந்து விரைவாக குணமடைய உதவும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உடல் எடையை குறைக்க உதவும் சீரக தண்ணீர்.. எப்படி குடிப்பது?

 நம் அனைவரது வீட்டு கிச்சனிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கும் முக்கியமான ஒரு பொருள் சீரகம். இது உணவுகளுக்கு தேவையான மசாலா தயாரிக்க மட்டும் பயன்படும் மூலிகையாக இல்லாமல் நுரையீரல் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை குணப்படுத்த கூடியது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கி சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவி நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகளை குணப்படுத்த கூடிய சீரகம் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடை எடையை குறைக்க விரும்புவோருக்கு சீரக தண்ணீரை குடிப்பதை விட மிக சிறந்த எளிய வழி எதுவுமில்லை. சீரகம் உடலில் உள்ள தளர்வான கொழுப்பு சதைகளை கரைக்க வல்லது. எடை குறைய விரும்புவோர் தங்கள் உணவில் ஜீரகம் சேர்த்து கொள்வதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஜீரணத்திற்கு உதவுவதிலும், நமது உடல் அமைப்பிலிருந்து தேவையற்ற நச்சுகளை அகற்றுவதிலும் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலில் உள்ள செரிமான அமைப்பை பிரச்சனையில்லாமல், நச்சுகள் இன்றி சரியாக வைத்திருப்பது சரியான உடல் எடையை பராமரிப்பதற்கும் , தேவையற்ற கொழுப்பு இழப்புக்கும் முக்கியமான ஒன்றாகும். எனவே அன்றாடம் சீரகம் எடுத்து கொள்வதை வழக்கமாக்கினால் எடை அதிகரிப்பு தொடர்பான காரணிகளை நிர்வகிக்க அது உதவும். சீரகமானது உடலிலுள்ள கொழுப்புகளை விரைவாக கரைக்கும் தன்மை உடையது என்பதால், எடையை குறைக்க விரும்பும் ஒரு நபரின் முயற்சியை எளிதாக்கும்.

சீரகத்தை தண்ணீரில் ஊற வைப்பதனால் பல நன்மைகளை கிடைக்கின்ற. இந்த இயற்கையான செயல்முறையின் மூலம் சீரக விதைகள் தண்ணீரை தக்க வைத்து கொள்கின்றன. சீரகத்திலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் கலக்கின்றது. சீரகத்திலிருந்து வெளி வந்த ஊட்டச்சத்து தண்ணீரில் மஞ்சள் நிறத்தில் கலந்து விடுகிறது. சீரக தண்ணீர் மிக குறைந்த கலோரி உள்ள பானம். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. காலை வெறும் வயிற்றில் அல்லது உணவிற்கு முன் சீரக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமற்ற ஒன்றை சாப்பிடுவதை தடுக்கலாம்.

சத்தான சுகாதார நன்மைகள் நிறைந்த ஒரு சிறந்த பானம் என்பதால், தேவைப்படும் பட்சத்தில் பல முறை சீரக தண்ணீரை அருந்தலாம், தவறில்லை என்கிறார்கள் நிபுணர்கள். இருப்பினும், நீங்கள் எத்தனை முறை குடிக்க வேண்டும் என்பது உங்கள் குறிக்கோள் மற்றும் தேவைகள் என்ன என்பதைப் பொறுத்தது.

விரைவான எடை இழப்புக்கு, சீரக தண்ணீரை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை குடிக்கலாம். காலை வெறும் வயிற்றில், மதியம் ஹெவியாக சாப்பிடுவதை தவிர்க்க மற்றும் இரவு உணவிற்குப் பின் (செரிமானத்திற்காக) பருகலாம்.

சீரக நீரில் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து குடித்தால் எடை குறைப்பிற்கு இன்னும் அதிக உதவும். ஒரு தேக்கரண்டி சீரகத்தை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவே ஊறவைத்து விட்டு அடுத்த நாள் காலை முதல் இரவு வரை கூட பருகலாம். வெந்தயம் மற்றும் சீரகம் இரண்டையுமே தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து அதை வடிகட்டி குடித்து வந்தால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சினைகள், செரிமான பிரச்சனை உள்ளிட்ட பல கோளாறுகளை சரி செய்யும்.

சீரகம் மட்டும் உங்கள் எடையைக் குறைக்கும் வேலையை செய்யாது. சரியான உணவு முறையை பின்பற்றுவதிலிருந்து, கலோரிகளை எரிக்க உதவும் உடல் பயிற்சிகள் வரை அனைத்தையும் பின்பற்றி கூடவே சீராக தண்ணீரை குடிப்பது மிக நல்ல பலனை கொடுக்கும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

குட் நியூஸ்! மாதம் 2 லட்சத்திற்கு மேல் சம்பளம்! சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் புதிய வேலைவாய்ப்பு வெளியீடு!

 CMRL Recruitment 2023: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் (CMRL-Chennai Metro Rail Limited) காலியாக உள்ள General Manager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த CMRL Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது B.Tech/B.E 

 ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24/03/2022 முதல் 17/04/2023 வரை CMRL Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Chennai-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த CMRL Job Notification-க்கு, ஆன்லைன் முறையில் விண்ணப்பதாரர்களை CMRL ஆட்சேர்ப்பு செய்கிறது. 

இந்த CMRL நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://chennaimetrorail.org/) அறிந்து கொள்ளலாம். CMRL Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 

CMRL ORGANIZATION DETAILS:

நிறுவனத்தின் பெயர்CMRL-Chennai Metro Rail Limited
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://chennaimetrorail.org/


RecruitmentCMRL Recruitment 2023
CMRL AddressChennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600107

CMRL CAREERS 2023 FULL DETAILS:

அரசு வேலையில் (Government Jobs) பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் CMRL Recruitment 2023-க்கு விண்ணப்பிக்கலாம். CMRL Job Vacancy, CMRL Job Qualification, CMRL Job Age Limit, CMRL Job Location, CMRL Job Salary, CMRL Job Selection Process, CMRL Job APPly Mode பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவிGeneral Manager
காலியிடங்கள்01 பணியிடம் மட்டும் நிரப்பவுள்ளன
கல்வித்தகுதிB.Tech/B.E
சம்பளம்மாதம் ரூ.2,25,000/- ஊதியம் வழங்கப்படும்
வயது வரம்புகுறிப்பிடவில்லை
பணியிடம்Chennai
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

CMRL RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:


அறிவிப்பு தேதி: 24 மார்ச் 2022
கடைசி தேதி: 17 ஏப்ரல் 2023
CMRL Recruitment 2023 Notification pdf

CMRL CAREERS 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?


  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://chennaimetrorail.org/-க்கு செல்லவும். CMRL Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (CMRL Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ CMRL Recruitment 2023 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • CMRL Vacancy 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் CMRL Recruitment 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • CMRL Vacancy 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • CMRL Careers 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! நேர்காணலுக்கு செல்லுங்க..! தமிழக அரசு வேலையில சேருங்க..!

 TNSRLM Recruitment 2023: தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM – Tamil Nadu State Rural Livelihood Mission) காலியாக உள்ள Block Coordinator பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TNSRLM Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Degree

 ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2023 முதல் 31.03.2023 வரை TNSRLM Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Tiruvannamalai-யில் பணியமர்த்தப்படுவார்கள். 

இந்த TNSRLM Job Notification-க்கு, Offline முறையில் விண்ணப்பதாரர்களை TNSRLM ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த TNSRLM நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (tiruvannamalai.nic.in) அறிந்து கொள்ளலாம். T

NSRLM Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 

TNSRLM ORGANIZATION DETAILS:

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
(TNSRLM-Tamil Nadu State Rural Livelihood Mission)
அதிகாரப்பூர்வ இணையதளம்tiruvannamalai.nic.in
வேலைவாய்ப்பு வகைTN Government Jobs
RecruitmentTNSRLM Recruitment 2023
TNSRLM Address1st Floor,Annai Teresa Mahalir Valaagam,Valluvar Kottam, Nungambakkam, Chennai, TamilNadu, India-600034.

TNSRLM RECRUITMENT 2023 FULL DETAILS:


பதவிBlock Coordinator
காலியிடங்கள்ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது
கல்வித்தகுதிTNSRLM திருவண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்As Per Norms
வயது வரம்புதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருவண்ணாமலை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 31-01-2023 தேதியின்படி 28 வயதாக இருக்க வேண்டும்.
பணியிடம்Jobs in Tiruvannamalai
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் (Interview)
விண்ணப்பக் கட்டணம்விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறைOffline
அஞ்சல் முகவரிஇணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், திருவண்ணாமலை வேங்கிக்கால் & அஞ்சல் , 606 604

TNSRLM RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:

எந்த வேலையாக இருந்தாலும், விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படும். TNSRLM-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, காலியிடங்களின் முழு விவரங்கள் என அனைத்தையும் கவனமாக படித்து அறிந்துகொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள TNSRLM Recruitment 2023 Notification-னில் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் Online முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு தேதி: 20 மார்ச் 2023
கடைசி தேதி: 31 மார்ச் 2023
TNSRLM Recruitment 2023 Official Notification & Application Form pdf

TNSRLM CAREERS 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (TNSRLM Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ TNSRLM Recruitment 2023 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

TNSRLM Vacancy 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.

தேவைப்பட்டால் TNSRLM Recruitment 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

TNSRLM Vacancy 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

TNSRLM Careers 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் .... செக் செய்வது எப்படி?

 tnpsc group 4 exam results: குரூப் 4 நிலை பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குரூப் 4 எழுத்துத் தேர்வு 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/Home.aspx) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்கள் தங்களது பதவி எண்-ஐ சமர்க்க வேண்டும். தாங்கள் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு இனவாரியான தரவரிசை, சிறப்பு வகை வாரியான தரவரிசை உள்ளிட்ட விவரங்களை திரையில் தோன்றும்.

அடுத்த கட்டமாக, இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தகுதியான நபர்கள் தங்களது அனைத்து சான்றிதழ்களை இணையவழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

ஒவ்வொரு, இடஒதுக்கீடு பிரிவுகளிலும் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட இரண்டு மடங்கு பேர் மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.ஒட்டுமொத்த தரவரிசையின் படி, கலந்தாய்வில் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆள்சேர்ப்பு முகாம்.. எப்போ தெரியுமா?

 தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை ஆகிய மாவட்டங்களுக்கான 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி வளாகத்திலுள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் மார்ச் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஒருங் கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன், தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்ஸில் பணிபுரிய ஓட்டுதர்கள் மற்றும் மருத் துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் தஞ்சாவூர் மருத் துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் மார்ச் 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், ஓட்டுநருக்கான பணியில்சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதா ரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும்.

இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந் தபட்சம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதி யமாக ரூ. 15 ஆயிரத்து 235 வழங்கப்ப டும். எழுத்து தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத்துறைநேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்து வம் தொடர்பான தேர்வு சாலை விதி களுக்கான தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.

அனைத்திலும்தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாள்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங் கும் வசதி செய்து தரப்படும். இதேபோல மருத்துவ உதவியாள ருக்கான தகுதிகள் பி.எஸ்சி. நர்சிங், பிளஸ் 2 படிப்புக்கு பிறகு ஜி.என். எம். ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. படிப்புகள் இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். அல்லது உயிர்அறி வியல், பி.எஸ்சி. விலங்கியல், தாவரவி யல், உயிரியல், வேதியியல், நுண்ணுரி யியல், உயிரி தொழில்நுட்பம் ஆகிய வற்றில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மாதம் ஊதியம் ரூ. 15 ஆயிரத்து 435 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அன்று 19 வயதுக்கு மேலும் 30 வய துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி, மனிதவளத் துறை யின் நேர்முகத் தேர்வு ஆகிய முறையில் தேர்வு நடைபெறும்.

இத்தேர்வுகளில் தேர்வு செய்யப் பட்டவர்கள் 50 நாள்களுக்கு முழு மையான வகுப்பறை பயிற்சி, மருத் துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப் படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும் விவரங்க ளுக்கு 7397701807 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IDFC தனியார் வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

IDFC தனியார் வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தனியார் வங்கி ஆன IDFC First Bank புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு Relationship Manager மற்றும் Senior Sales Manager பதவிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IDFC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Relationship Manager மற்றும் Senior Sales Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2023 1  Pdf
Download Notification 2023 2 Pdf

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய விமான நிலையத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2023 – ரூ.9,000/- உதவித்தொகை!

 

இந்திய விமான நிலையத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2023 – ரூ.9,000/- உதவித்தொகை!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள Electrician பணியிடங்களை நிரப்ப புதிய NAPS நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய விமான நிலைய ஆணைய காலிப்பணியிடங்கள்:

Apprentice (Electrician) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.6,000 முதல் ரூ.9,000/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.