Agri Info

Education News, Employment News in tamil

March 27, 2023

12ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 200 காலியிடங்கள்..!

March 27, 2023 0

 இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10, +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது. recruitment.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவி: இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் Junior Assistant-cum-Typist (JAT); சம்பள நிலை: 19,900- 63,200 (நிலை - 2)

முக்கியமான நாட்கள்: இதற்கான, விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் 20ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை பெறப்படும்.   

காலியிடங்கள்: 200

தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:  இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10,+2 வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  நிமிடத்திற்கு 40 ஆங்கில  வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் அல்லது நிமிடத்திற்கு 35 இந்தி வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:  இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.600 ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:  இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 20-04-2023 அன்று 18-27-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெறத் தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறத் தகுதியுடைவராவர்.தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

காலியிடங்கள், தேர்வு முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆட்சேர்க்கை அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், தகவல் தேவைப்படுவோர் அறிக்கையை பதிவிறக்கம் செய்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள https://recruitment.nta.nic.in/. என்ற இணைப்பைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

March 26, 2023

Breakfast Mistakes: காலை உணவின் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்

March 26, 2023 0

 காலை உணவின் போது நாம் தெரிந்தே செய்யும் தவறுகள்:

 காலை உணவு என்பது நாளின் முதல் உணவாகும், எனவே இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. உங்களின் நாள் நல்ல வகையில் தொடக்கம் வேண்டுமெனில், ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவை உண்ண வேண்டும். இதன் மூலம் தேவையான சக்தி உடலுக்கு கிடைக்கிறது. ஆனால் சிலர் காலை உணவின் போது தெரிந்தே சிறிய தவறுகளை செய்கிறார்கள், அதனால் அவர்களின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த தவறுகளால், சர்க்கரை நோய், பிபி போன்ற நோய்கள் உங்களைத் தங்கள் பிடியில் ஆட்கொள்கின்றன. எனவே காலை உணவின் போது என்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

காலை உணவில் புரதம்

நம்மில் பெரும்பாலோர் தீங்கு விளைவிக்கும் சிலவற்றை காலை உணவில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் நமது உடலுக்கு புரதம் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியுமா? இதை உட்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். அதனால்தான் காலை உணவில் புரதச் சத்து அதிகம் உள்ளவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை உணவில் புரதம் சேர்த்துக்கொள்வது தசைகளின் வளர்ச்சிக்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.

நார்ச்சத்து
சிலர் தங்களின் காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவை சேர்த்துக்கொள்வதில்லை. நார்ச்சத்து நிறைந்த உணவை காலையில் சாப்பிட்டு வந்தால் வயிறு நீண்ட நேரம் நிறைவாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து உட்கொள்வது கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது. மேலும் செரிமானமும் வலுவடைகிறது.

பேக் செய்யப்பட்ட ஜூஸ் குடிப்பது
நீங்களும் காலை உணவில் பேக்டு ஜூஸ் குடித்தால் அது தவறான உணவுமுறை, அப்படி செய்தால் உடல் எடை கூடும். இது நம் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது, எனவே பேக் செய்யப்பட்ட ஜூஸை காலை உணவில் உட்கொள்ளக்கூடாது.

போஸ்ட் ஆபிஸில் வேலை... 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்... மிஸ் பண்ணாதீங்க..!

March 26, 2023 0

 Post Office Jobs: தமிழ்நாடு அஞ்சல்துறை வட்டங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் (staff car Driver) பணியிடங்களுக்கு விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, இம்மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் போதிய கால அவகாசம் இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

பதவி: கார் ஓட்டுநர் (staff car Driver general central service, Group- C, Non-Gazetted, Non Ministerial posts)

காலியிடங்கள் எண்ணிக்கை: 58

கல்வித் தகுதி: இந்த ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இலகுரக மற்றும் கனரக வாகனம் (Light & heavy motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு குறையாமல் கனரக வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் இருக்க வேண்டும். மோட்டார் பணி (Motor Mechanism) குறித்து அறிவு இருக்க வேண்டும்.

வயது வரம்பு:  வயது வரம்பு 18 -27-க்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

சம்பளம்:  இதற்கான சம்பள நிலை ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஆகும் (Level 2 in the pay matrix)

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (Theory Test) செய்முறைத் தேர்வில் (Practical Test)  பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பப் படிவத்தை, தமிழ்நாடு அஞ்சல் துறை இணையத்தில் tamilnadupost.nic.in  இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதிச் சான்றிதழ் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31.03.2023 ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, ' The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, chennai - 600 006 ஆகும்.

யுஜிசி- நெட் தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியானது! செக் செய்வது எப்படி?

March 26, 2023 0

 UGC NET Exam Answer Key: 2022 வருட டிசம்பர் மாதத்துக்கான UGC- NET தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பை (Provisional ANswer Keys) தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை சமர்ப்பித்து விடைக் குறிப்பை சரிபார்த்துக் கொள்ளலாம்.    

முன்னதாக, 2022 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதித்தேர்வை (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதற்கான எழுத்துத் தேர்வு, பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை 5 கட்டங்களாக கணினி வழியாக எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்விற்கான உத்தேச விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. உத்தேச விடைத்தொகுப்புடன் (Provisional Answer keys) தேர்வரின் விடைகள் (attempted recorded responses) வெளியாகியுள்ளது. இதன் மூலம்,  கணினி எழுத்துத் தேர்வின் போது சமர்ப்பித்த பதில்கள் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள முடியும். மேலும், உத்தேச விடைத்தொகுப்பில் உள்ள விடைகளை சரிபார்ப்பதன் மூலம் தங்களது மதிப்பெண்களை தாங்களாகவே கணக்கீடு செய்து கொள்ள முடியும்.

மேலும், உத்தேச விடைத் தொகுப்பில் ஏதேனும் குறை இருந்தால் (தேசிய தேர்வு முகமை அளித்த பதில் தவறாக இருந்தால்), தேர்வர்கள் முகமைக்கு தெரியப்படுத்தலாம்.  இருப்பினும், இதற்கான செயல்முறைக்கு ஒரு விடைக்கு ரூ.200-வீதம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்சர் கீ பார்ப்பது எப்படி?

https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்;

'Challenge (s) regarding Answer Key’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்;

விண்ணப்ப பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை சமர்ப்பித்து உள்நுழைய வேண்டும்;

பின்பு,  “View Question Paper" என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒவ்வொரு கேள்விகளுக்கும் நீங்கள் பதிவு செய்த விடைகளை அறிந்து கொள்ளலாம்.

“Click to view /Challenge Answer Key" என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி விடைத் தொகுப்பை  காணலாம்.கட் ஆஃப் மதிப்பெண்கள்:    உதவிப் பேராசிரியர் பணிக்கு,  இரண்டு தாள்களின் மொத்த மதிப்பெண்களைப் பயன்படுத்தி ஒரு தகுதி பட்டியல் பாடவாரியாகவும் இனவகை வாரியாகவும் தயாரிக்கப்படும். தகுதி பட்டியலில் முதல் 6% இடத்தில் உள்ளவர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போதைய நிலவரங்களைத்     தெரிந்து கொள்வதற்கு, தேர்வர்கள், https://ugcnet.nta.nic.in/ மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்க்க வேண்டும். 

புதிதாக வீடு கட்டுபவர்கள் கவனிக்க..

March 26, 2023 0

 வீட்டின் முக்கிய பகுதி தரை. மணல் தரையானது சிமெண்ட் தரையாக மாறி, மொசைக் என்பது நாகரிகத்தின் வளர்ச்சியாக கருதப்பட்ட காலம் எல்லாம் மலையேறி தற்போது மார்பில் கிரானைட் என்பதே அனைவராலும் விரும்பப்படுகிறது. இதன் விலை மிக அதிகம் என்பதால் மார்பிள் கிரானைட் போன்று தோற்றத்தை தரவல்ல வெட்ரிஃபைடு டைல்ஸ் என சொல்லப்படும் செயற்கை டைல்ஸ்கள் அதிக அளவு உபயோகப்படுத்தப்படுகிறது. 

தற்போதைய புதிய செய்தி என்னவென்றால் இத்தகைய வெட்ரிஃபைடு டைல்ஸ்கள் இரண்டுக்கு இரண்டு அடி அளவு உடையதாக விற்பனைக்கு வந்தன. தற்போது இவை இரண்டுக்கு நான்கு அடி, இரண்டுக்கு ஆறு அடி என பெரிய அளவிற்கு வருவதால் வீட்டில் கூடங்களில் புழங்கும் அறைகளில் தரையில் இத்தகைய டைல்ஸ்கள் பதிக்கப்படுகிறது. இவை அதிக இணைப்புகள் இல்லாமல் இருப்பதால் தரை பார்ப்பதற்கு அழகாகவும் சிறப்பான தோற்றம் உடையதாகவும் இருக்கும். மேலும் இவைகளை பதிக்கும் பொழுதும் மேடு பள்ளம் இல்லாமல் சமநிலையோடு பிற்காலத்தில் ஒரு டைல்ஸ் ஏறி ஒரு டைல்ஸ் இறங்கி என்பது மாதிரியான பிரச்சனைகள் தவிர்க்கும் படியாக அருமையாக பதிக்கப்படுகிறது.


எம் சாண்ட் (கருங்கல் ஜல்லி மணல்) தன்மை குறித்து இன்னமும் கூட மக்கள் இது எந்த அளவுக்கு திறமான கட்டுமானத்தை தரும் என யோசிக்கின்றனர். அவ்வாறு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த சில வருடங்களில் கட்டப்படும் கட்டிடங்களில் 90 சதவீத கட்டிடங்கள் எம் சாண்ட் கொண்டு கட்டப்படுபவை தான். 10 சதவீதம் கூட ஆற்று மணல் அருகே கிடைக்கக்கூடிய கட்டிடங்கள் மட்டுமே. 

எம் சாண்ட் வாங்கும் பொழுது பார்த்து அவற்றின் தரத்தை பொறியாளருடன் கலந்தாலோசித்து வாங்குவது நலம். ஒரு வீட்டின் மாதாந்திர செலவில் மிக முக்கிய பங்கு வகிப்பது மின்சார செலவு. இதை குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் புது வீடு கட்டும்பொழுது மின்சாரம் சிக்கனமாக இருக்கும் படியாக எல்இடி பல்புகளை உபயோகப்படுத்துவது நன்மை தரும். 

தற்போது பல வகையான மாடல்களில் பார்ப்பவர்களின் கண்களை கவரும் வண்ணம் ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற வண்ணம் எல்இடி பல்புகள் கிடைக்கின்றன இவற்றின் விலை சற்றே கூடுதலாக இருப்பினும் இவற்றின் நீண்ட கால பயன்பாட்டை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் மின்சார சிக்கனத்திற்கு பெரிதும் உதவுவதால் மாதாந்திர செலவுகளில் மிச்சம் பிடிக்கலாம்.

புது வீட்டிற்க்காக வாங்கக்கூடிய மின்சார ஒயர்களில் நீங்கள் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது தரமான ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற எலக்ட்ரிக்கல் ஒயர்களை அந்தந்த தேவைக்கு ஏற்ற படி தகுதி வாய்ந்த மின்சார பொறியாளரின் ஆலோசனைப்படி தீ விபத்தின் போது பாதுகாப்பை தரவல்ல 'பயர் ப்ரூப்' ஒயர்களாக வாங்க வேண்டும். 

இது பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் எழாமல் தடுக்கும். தளத்திற்கு மேல் முன்பெல்லாம் செங்கல் ஜல்லியுடன் கடுக்காய் வெல்லம் போன்றவற்றை சேர்த்து மரக்கட்டைகளால் அடித்து அதன் மேல் சதுரவோடு பதிப்பார்கள். இது சூரிய வெப்பத்தை தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கும். மொட்டை மாடிக்கு கீழே அமைந்துள்ள வீட்டில் அதிக அளவு வெப்பத்தை தராமல் தடுக்கும். இப்போது இதற்கு மாறாக கூலிங் டைல்ஸ் எனப்படும் டைல்கள் பதிக்கப்படுகின்றன.

 இவை சூரிய வெளிச்சத்தை உள்வாங்கிக் கொள்ளாமல் 30 சதவீத வெப்பத்தை பிரதிபலித்து விடுகிறது. இதனால் வீட்டிற்குள் வெப்பம் அதிக அளவு இறங்காது. இத்தகைய டைல்ஸ்களில் தரமானவற்றை பார்த்து வாங்கி நீங்கள் உங்கள் வீடுகளில் பதிக்கலாம்

March 25, 2023

அடிக்கடி பசிக்குதா? இந்த பிரச்சனையாக இருக்கலாம்... அலட்சியம் செய்யாதீங்க..

March 25, 2023 0


உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், நார்ச்சத்து, கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உண்ணும் உணவில் இருந்துதான் உறிஞ்சிக்கொள்ளப்படுகின்றன. 

சில மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் பசி ஏற்படுவது இயல்பானது. ஆனால் சாப்பிட்ட பிறகும் பசி உணர்வு இருந்துகொண்டிருந்தால் உடல் நலனில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். 

அடிக்கடி பசி உணர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும் எப்போதுமே பசியுடன் இருப்பதாக உணர்ந்தால் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

மன அழுத்தம்: அதிகப்படியான பசி உணர்வுக்கு மன அழுத்தமும் ஒரு காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பதற்றமாக இருக்கும்போது கார்டிசோல் எனும் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். அது பசி உணர்வை தூண்டிவிடும்.

புரத உணவு: உடலில் இருந்து எரிக்கப்படும் கலோரிகளுக்கும் குறைவான கலோரிகளை கொண்ட உணவுகளை உட்கொள்வது கிரேலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்ய வழிவகுக்கும். இது பசி ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது. 

உடலுக்கு அதிக உணவு தேவைப்படும்போதெல்லாம் வயிற்றில் இருந்து இந்த ஹார்மோன் வெளியாகும். அந்த சமயத்தில் குறைந்த கலோரி கொண்ட உணவை உட்கொள்வது கிரேலின் உற்பத்தியை அதிகரித்துவிடும். 

சாப்பிட்ட சில நிமிடங்களுக்குள் பசி எடுக்க தொடங்கிவிடும். குறைந்த அளவு நார்ச்சத்து, கொழுப்பு, புரதம் கொண்ட உணவுகளை உட்கொள்வதும் பசியை தூண்டிவிடும்.

சாப்பிடும்போது கவனச்சிதறல்: சிலர் சாப்பிடும்போது ஏதாவதொரு சிந்தனையில் மூழ்கி இருப்பார்கள். சத்தான உணவை உண்டாலும் கூட கவன சிதறலுக்கு இடம் கொடுத்தால் சாப்பிட்ட திருப்தி ஏற்படாது. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது டி.வி, செல்போன் பார்ப்பதும் நல்ல பழக்கம் அல்ல. அந்த பழக்கம் சாப்பிட்ட பிறகு பசி உணர்வை தூண்டி விட்டுவிடும்.

தூக்கமின்மை: நன்றாக சாப்பிடாவிட்டால் இரவில் விழிக்கும்போதெல்லாம் பசி உணர்வு எட்டிப்பார்க்கும். போதுமான அளவு சாப்பிடாவிட்டால் உடலால் போதுமான அளவு ஆற்றலை உற்பத்தி செய்ய முடியாது. அதனால் அதிகப்படியான அளவு பசி எடுக்கும். போதுமான அளவு தூங்கவில்லை என்றால் நன்றாக சாப்பிடவும் முடியாது.

உடற்பயிற்சி: அதிகமான நேரம் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் அடிக்கடி உணவு உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நிச்சயமாக உணர்வீர்கள். உடற்பயிற்சிக்கு ஏற்ப போதுமான உணவை குறிப்பிட்ட இடைவெளிக்குள் சாப்பிடவில்லை என்றால் பசி எட்டிப்பார்க்கும். உடற்பயிற்சி எந்த அளவுக்கு முக்கியமானதோ அந்த அளவுக்கு உண்ணும் உணவும் முக்கியமானது. 

வேகமாக சாப்பிடுவது: வேகமாக சாப்பிடுவது சட்டென்று பசியை போக்கிவிடும். வயிறும் நிரம்பிவிடும். ஆனால் சில நிமிடங்கள் கழித்து பசி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உணவை மென்று மெதுவாக சாப்பிடுவதுதான் பசி உணர்வை கட்டுப்படுத்தும்.

ரத்த சர்க்கரை அளவு: உணவில் உள்ள சர்க்கரையை குளுக்கோஸாக மாற்றும் திறன் உடல் அமைப்புக்கு இருக்கிறது. ஆனால் நீரிழிவு நோய் இருந்தால் குளுக்கோஸ் எளிதில் உடலில் உள்ள செல்களை சென்றடையாது. 

சாப்பிடுவதை விட அதிக அளவில் சிறுநீர் கழிக்க நேரிடும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அதிக அளவு சாப்பிடுவார்கள். அவர்களுக்கு அடிக்கடி பசி உணர்வு எழுந்து கொண்டிருக்கும். அத்துடன் கவலை, பதற்றம், உடல் பருமன் போன்ற அறிகுறிகளும் பசி உணர்வை தூண்டிக்கொண்டிருக்கும். 

இது நீரிழிவு, தைராய்டு போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதனால் அடிக்கடி பசி உணர்வு எழுந்தால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்: உங்கள் ஊரில் அரசு இ-சேவை மையம் அமைக்க வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்

March 25, 2023 0

 படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும்  “அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின்கீழ், இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசின் சேவைகளை குடிமக்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கும் விதமாக, தமிழ்நாடு மின்ஆளுமை முகமை (Tamil Nadu e-Governance Agency) இசேவை மையங்களை  (e-sevai maiyam) செயல்படுத்தி  வருகிறது. இதுநாள் வரையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV), தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்(PACCS), தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் (Mahalir Thittam), மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள்(CSC VLEs) ஆகிய நிறுவனங்களின் மூலம் இசேவை மையங்களை அமைத்து இருந்தது.   

இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது "அனைவருக்கும் இசேவை மையம்" என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.  இந்த புதிய திட்டத்தின் நோக்கமானது, அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இசேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இசேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து இசேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.

எனவே, “அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின்கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்கள் இணைய முறையில் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://tnega.tn.gov.in/home,  www.tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும்.

விண்ணப்பங்களை, வரும் ஏப்ரல்  14ம் தேதி வரை இரவு 8 மணி வரை மட்டுமே பதிவுசெய்ய இயலும். விண்ணப்பதாரர்க்குரிய பயனர்பெயர்(Username) மற்றும் கடவுச்சொல் (Password) ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

e-Sevai for all Registration கையேடு 


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்: அரசு அலுவலகத்தில் வேலை

March 25, 2023 0

 Tamil nadu Government Jobs: மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி அலுவலகத்தில் இரவு காவலர் பொதுப்பிரிவு முன்னுரிமையற்ற (Open Competition-Non-Priority) பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இக்காலியிடத்திற்கான கல்வித்தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 01.01.2023 அன்றைய நிலையில்  18- 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர்  (SC) ஆதிதிராவிட அருந்ததி இனத்தவர் (SCA) மற்றும் பழங்குடியின இனத்தவர்கள் 37 வயதுக்குள்ளும், பிற்பட்ட வகுப்பினர்(BC), மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (MBC) மற்றும் பிற்பட்ட முஸ்லீம் இனத்தவர் (BCM) 34 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் (OC) 32 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

எனவே, மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பத்தினை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகத்தில் பெற்று கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்துடன், தங்களது அனைத்துக் கல்விச் சான்றுகள் ஜாதிச்சான்று, ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையான அட்டை ஆகியற்றின் ஒளிநகல்களுடன் மண்டல் இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு), மண்டல இணை இயக்கும் (வேலைவாய்ப்பு)அலுவலகம்,  வில்லியம்ஸ் ரோடு, மாவட்ட நிதிக்குழு வளாகம், திருச்சி, 620001 என்ற முகவரிக்கு 10.04.2023 மாலை 5.00 மணிக்குள் பதிவஞ்சல் மூவமாகவோ அவ்வது நேர வின்னப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் 281 காலியிடங்கள்: ரூ. 50,000 மேல் மாத சம்பளம்

March 25, 2023 0

 Tamil nadu government jobs: திண்டுக்கல் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், கணினி பொறியாளர், ஓட்டுநர், நடத்துனர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழும் 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமல், நேர்காணல் மூலம் மட்டுமே நியமனங்கள் நடைபெற உள்ளன.

காலிப்பணியிடங்கள்: ஆட்சேர்ப்பு அறிவிப்பில் நான்கு பிரிவுகளின் கீழ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தட்டச்சர், நூலகர் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய வெளித்துறை பிரிவின் கீழ் 174 இடங்களும், கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப பிரிவின் கீழ் 82 இடங்களும்; நாதஸ்வரம், தவில் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய உள்துறை பிரிவின் கீழ் 14 காலிப்பணியிடங்களும்; ஆசிரியை, ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளின் கீழ் 19 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்குமான வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்து அறநிலைத் துறை வெளியிட்ட அறிவிப்பில் (ஆட்சேர்ப்பு அறிவிப்பு) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறையானது அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை palanimurugan.hrce.tn.gov.inமற்றும் hrce.tn.gov.in ஆகிய இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 07.04.2023 மாலை 5.45 மணி. விண்ணப்பங்களை நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் -624 601" என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மாதம் ரூ.31 ஆயிரம் வரை சம்பளம்.. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேலைவாய்ப்பு..

March 25, 2023 0

 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி தொடர்பான விவரங்கள் :

  • பணியின் பெயர் : முதுநிலை ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow)
  • கல்வித்தகுதி: M.Sc யில் Agriculture/ Plant Physiology/ Agronomy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மாத சம்பளம்: ரூ.31,000/- வரை.
  • விண்ணப்பக் கட்டணம் :  இல்லை.
  • தேர்வுச் செயல் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • நேர்காணல் நடைபெறும் இடம்: The Director (Crop Management), TNAU, Coimbatore
  • நேர்காணல் நடைபெறும் தேதி: 29.02.2023
  • ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 29.03.2023.

  • Official Website