Search

மூல நோயும் உணவு முறையும்!

 மூலம் (HEMORROIDS), என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்தக்கூடியதாகும்.

மூல நோய் மலச் சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக்கூடியது.

மூல நோயில் உள்மூலம், (Internal piles), வெளிமூலம் (External piles), பவுத்திர மூலம் (Fistula) மூன்று வகைகள் உள்ளது. அது நான்கு கட்டங்களாக பிரித்துள்ளனர். அதில் மிகவும் எரிச்சலுடன் கஷ்டப்பட்டு மலம் கழிப்பவர்கள் முதல் நிலையில் இருக்கின்றனர். மலம் கழிக்கும்போது ரத்தம் வருதல் மற்றும் ஆசன வாயை சுற்றி சிறு சிறு கொப்பளங்கள் இருந்தால் அது இரண்டாம் நிலை.மலம் கழிக்கும்போது சிறிய சதைப்பகுதி வெளியே வருவதும், மலம் கழித்து முடித்தவுடன் மீண்டும் சதைப்பகுதி உள்ளே சென்றுவிடுவதும் மூன்றாம் நிலை.

மலம் கழிக்கும்போது, வெளியே வரும் சதைப்பகுதியானது. மீண்டும் உள்ளே செல்லாமல் அப்படியே வெளியே நின்றுவிடுவது நான்காம் நிலை. இதுபோன்று கஷ்டப்பட்டு, அழுத்தம் கொடுத்து மலம் கழிக்கும் நிலை ஏற்படும்போது, உள்ளே இருக்கும் ரத்த குழாய் வெடிப்பு விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். பின்னர், அதுவே வேறு சில பிரச்னைகளையும் உடலில் தோற்றுவித்துவிடலாம். எனவே, ஆரம்ப நிலையிலேயே இதிலிருந்து விடுபட, உணவு மூலம் சரி செய்து கொள்ளலாம் என்கிறார் யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர் என். ராதிகா.

தண்ணீர்

பொதுவாக, எல்லோருமே ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 1-2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதிலும், தற்போது கோடை தொடங்கிவிட்டது. எனவே, மூல நோய் உள்ளவர்கள் தினசரி குறைந்தபட்சம் 2 - 3 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். அப்படி தண்ணீர் நிறைய குடிக்க முடியவில்லை என்றால், பழச்சாறுகள், இளநீர், மோர் அல்லது சீரக தண்ணீராகவோ எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர் போதிய அளவில் உடலில் இருந்தாலே, அவை உடலில் உள்ள கழிவுகளை சுலபமாக வெளித்தள்ளும்.

நார்ச்சத்தும் - நீர்ச்சத்தும்

நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நார்ச்சத்து நிறைந்த அவரைக்காய், கோவைக்காய், பாகற்காய், வெண்டைக்காய்,
வாழைத்தண்டு போன்ற காய்கறிகளையும், நீர்ச்சத்து நிறைந்த, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், செளசெள, முள்ளங்கி, முட்டைகோஸ், பூசணிக்காய், வெண் பூசணிக்காய் போன்றவற்றையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது. மூல நோய் உள்ளவர்கள் கிழங்கு வகைகளில், கருணைக்கிழங்கு மட்டும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேசமயம், கருணைக்கிழங்கு அதிகளவு சூடானது என்பதால், கருணைக்கிழங்குடன் பாசிபருப்பு சேர்த்து சமைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிடலாம். அதுபோன்று, சமையலில் வெங்காயம், இஞ்சி - பூண்டு ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி - பூண்டை விழுதாக இல்லாமல், பொரியல்களில் தட்டி போட்டோ அல்லது நறுக்கிச் சேர்த்தோ சமைப்பது நல்லது. பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆனால், மோர், தயிராக எடுத்துக் கொள்ளலாம்.

கீரைகள்

வாரத்திற்கு 3 நாட்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு கீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக எல்லா கீரையும் நல்லதுதான், சத்தும் நிறைந்தது.

பழங்கள்

மூல நோய் பாதிப்பு உள்ளவர்கள் முக்கியமாக தினசரி ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. வாழைப்பழம் அதிகளவில் நார்ச்சத்தும் இதர சத்துகளும் அடங்கியது. அதேசமயம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, அவர்கள் வாழைப்பழத்துக்கு பதிலாக பப்பாளி பழம் சில துண்டுகள் தினசரி எடுத்துக் கொள்ளலாம். அதுபோன்று கொய்யாக்காய், கிர்ணிப்பழம், தர்பூசணி போன்றவற்றை ஜூஸாக எடுத்துக் கொள்ளாமல் பழங்களாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர, மாதுளம் பழம், அன்னாசி, ஆப்பிள், சப்போட்டா மற்றும் உலர் பழங்களான, காய்ந்த திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், காய்ந்த திராட்சையை பொருத்தவரை, சீரகம் கொதிக்க வைத்த தண்ணீரில் ஒரு பத்து காய்ந்த திராட்சையை இரவே ஊற வைத்துவிட்டு, காலை எழுந்ததும், பல் தேய்த்துவிட்டு தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, காய்ந்த திராட்சை ஊற வைத்த தண்ணீரை குடித்து வந்தால். விரைவில் படிப்படியாக மலச்சிக்கலின்போது ஏற்படும் எரிச்சல், வலி எல்லாம் குறைந்துவிடும்.

மூலிகைகள்

துத்தி இலை பச்சையாக கிடைத்தால், அரைத்து சாறு எடுத்து குடித்து வரலாம் அல்லது சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சி, பூண்டு சேர்த்து துவையலாக செய்து சாப்பிடலாம். இது சதை வளர்ந்து ரத்தம் வடியும் நிலையில் இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பிரண்டை துவையல், வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக் கொள்வதும் பயன்தரும்.
கடுக்காய்ப் பொடி அல்லது திரிபலா சூரணத்தை அரை தேக்கரண்டி வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், மலச்சிக்கல் விரைவில் குணமாகும்.

அருகம்புல் வேர்ப்பொடி. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியது. இது ரத்தமாக வருபவர்களும், கொப்புளங்கள் இருப்பவர்களும் இந்தப் பொடியை கஷாயமாகவோ அல்லது அரை ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டுவிட்டு வெதுவெதுப்பான தண்ணீர் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும் நல்ல பலன் தரும். ரோஜா இதழ்களில் தயாரிக்கப்பட்ட குல்கந்து அல்லது ரோஜா இதழ்களுடன் சிறிது பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.

சிறுதானிய வகைகள்

சிறுதானிய வகைகளில் அனைத்துமே சேர்த்துக் கொள்ளலாம். கேழ்வரகு கூழ் மிகவும் நல்லது. அதுபோன்று பச்சைபயறு, காராமணி, கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம், இந்த சுண்டல் வகைகள் சாப்பிட்டதும், ஒரு டம்ளர் சீரகம் கலந்த வெந்நீர் அருந்துவது நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பச்சரிசி சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. மைதா சார்ந்த உணவுகளான பிரெட், பன், பிஸ்கட், ரஸ்க்,, கேக், பரோட்டா, நூடுல்ஸ், பர்கர் போன்றவற்றை தவிர்ப்பது. எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக மசாலா சேர்த்த காரமான உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது மிகமிக அவசியமானது. அடுத்த இதழில் மூல நோய்க்கான வெளிப்பூச்சுகள் குறித்து பார்க்கலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அதிகரிக்கும் வெயில், பாதிக்கப்படும் உடல்நலன்; வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

 கோடைகாலம் தொடங்கி, வெயில் வாட்டத் தொடங்கி விட்டது. எதிர்வரும் நாள்களில் வெயில் இன்னும் அதிகமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெயிலால் பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. கோடையில் ஏற்படும் வெப்ப அலையில் இருந்து மக்கள் தங்களை எப்படித் தற்காத்து கொள்ளலாம்? இது குறித்து, மருத்துவர் சரவண பாரதியிடம் கேட்டோம்...

மருத்துவர் சரவண பாரதி.

என்னென்ன பாதிப்புகள்?

``சுற்றுச்சூழல் தட்பவெப்பநிலையானது குறைந்தது 40 டிகிரி செல்சியஸை எட்டும்போது, அதை Heat waves எனக் கூறுவோம். இந்தியாவில் பொதுவாக மார்ச் மாதம் தொடங்கி, ஜூன் மாதம் வரை இந்த வெப்ப அலைகளை உணரலாம். சில சமயத்தில், ஜூலை வரை கூட இது நீடிக்க வாய்ப்புள்ளது. ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஐந்து, ஆறு வெப்ப அலைகளை இந்தியாவில் பார்க்க முடியும்.

வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும்போது, நம் உடல் அந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் உடலின் வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ள முயலும். வெளிப்புறத்தில் உள்ள வெப்பம் மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் இந்தச் செயல் கடினமானதாக மாறும். இதனால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். தசைவலி, அதீத அசதி, மயக்கம், வலிப்பு, தலைவலி, வாய் குழறுதல், மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி என பல்வேறு விதமான பாதிப்புகளை இந்த அதிக வெப்பம் ஏற்படுத்தலாம். சில சமயம் மரணம்கூட நிகழலாம்.

வெப்ப அலையும் முதலுதவியும்!

இதைத் தடுப்பதற்கு உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். யாராவது வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டால் அதற்கான முதலுதவி முறைகள் உள்ளன.

* பாதிக்கப்பட்டவரை, வெயிலில் இருந்து நிழலான ஒரு பகுதிக்கு கொண்டு வர வேண்டும்.

* அவரின் ஆடைகள் இறுக்கமாக இருந்தால் தளர்வாக்க வேண்டும்.

* பாதிக்கப்பட்டவரை படுக்க வைத்து, கால்களை சற்று உயர்வாக வைக்க வேண்டும்.

* நல்ல காற்றோட்டம் அவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய‌ வேண்டும்.

* ஸ்பான்ஜை பயன்படுத்தி உடலில் நீரால் ஒற்றடம் கொடுக்கலாம்.

கோடை காலத்தில் குழந்தைகள் விஷயத்தில் முக்கிய கவனம் தேவை. வெயில் அதிகமாக அடிக்கும்‌ போது அவர்களை வெளியே விளையாட அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்" என்று மருத்துவர் சரவண பாரதி தெரிவித்தார்.

அம்மைவெயில்கால நோய்களைத் தடுக்க உதவும் காய்கள், கனிகள், பானங்கள்!

அச்சுறுத்தும் அம்மை!

கோடை காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய்கள் பற்றி சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம்.. ``கோடை காலத்தில் பொதுவாக அம்மை, மஞ்சள்காமாலை போன்ற வைரஸால் ஏற்படும் நோய்கள் அதிகம்‌ பரவும். குளங்கள் மற்றும் ஏரிகளில் நீர் வற்றுவதால் நீர் மாசுபாடு கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். இதனால் நீர் மூலம் பரவும் டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்படலாம். இது தவிர சிறுநீரக கற்கள் ஏற்படலாம். ஆனால் இந்தக் கற்கள் உருவாகி அவற்றின் தாக்கம் கோடை முடிந்து ஜூலை மாதத்தில்தான் தெரியத் தொடங்கும்.

கோடையில் வியர்க்குரு, வேனல்கட்டிகள் போன்ற சரும பாதிப்புகளும் உண்டாகும். ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில் அதிகம் வியர்ப்பதால் உடலில் உப்புச்சத்து குறைந்து அதனால் பாதிப்பு வரலாம். இது தவிர, முக்கியமாக அதீத வெயிலில் நேரடியாக செல்லும்போது உடலில் உள்ள நீர்ச்சத்து, உப்புச்சத்து ஆகியவை வெகுவாகக் குறைந்து மூர்ச்சை (Sunstroke) ஏற்படக்கூட வாய்ப்புள்ளது‌.

உடல் சூட்டை குறைக்கும் பழச்சாறு, இளநீர்

வெயிலின் தாக்கத்தைக் குறைத்துக்கொள்ள, சில வாழ்வியல் நடைமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். முந்தைய காலங்களில் வெளியே சென்றால் தலைப்பாகை அணியும் வழக்கம் இருந்தது. இது வெயில் நேரடியாக உச்சந்தலையில் படாமல் இருப்பதற்காக செய்யப்பட்ட நடைமுறை. எனவே நாமும் வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது நேரடியாக தலையில் வெயில் படுவதைத் தவிர்க்க, தொப்பி போன்ற எதையாவது அணியலாம்.

மருத்துவர் சிவராமன்`அம்மை நோய் பாதிப்பு 300 சதவிகிதம் அதிகரிப்பு!' - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

இதுதவிர, அதிகமாக வெயில் அடிக்கும் மதிய நேரங்களில் அவசியமற்று வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். உடலில் எப்போதும் போதுமான நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

ஒருநாளைக்கு மூன்று முதல், நான்கு லிட்டர் தண்ணீர் வரை குடிக்கலாம். வீடுகளில் மண்பானை வைத்து அதில் வெட்டிவேர் இட்ட தண்ணீரை வைத்துப் பருகுவது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். இயற்கையான பழச்சாறுகள், பதநீர், இளநீர் ஆகியவற்றைப் பருகலாம்.

ஆனால், சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் இளநீர் மற்றும் பதநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். அவற்றில் இருக்கும் பொட்டாசியம் சத்து, சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கு பிரச்னையை உண்டாக்கும். தாகத்தைத் தணிப்பதற்கு என ஏரியேட்டடு பானங்கள் (Aerated drinks) பருகுவதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளரிக்காய், சுரைக்காய், வெள்ளை பூசணி போன்ற அதிக நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

  

நீராகாரம் வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

இந்தக் காய்கறிகள், வயிற்றில் உள்ள புண்களையும் குணப்படுத்தும். உண்ணும் உணவில் அதிக காரம் சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது, கோடை காலத்தில் ஏற்பட கூடிய செரிமானக் கோளாறுகளைக் குறைக்கும். இரவு உணவை கொஞ்சம் விரைவாக உட்கொள்வதும் கோடை காலத்தில் சிறந்தது. கோடைக்கு நீராகாரம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

முந்தைய நாள் தண்ணீர் ஊற்றி வைத்த சோற்றில், காலையில் நிறைய மோர் சேர்த்துப் பருகலாம். உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு மிகச் சிறந்த புரோபயாடிக் ஆகவும் இந்த உணவு உதவும்" என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்தார்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Post office: உங்களிடம் போஸ்ட் ஆபிஸ் அக்கவுண்ட் இருக்கா? உங்கள் கணக்கில் இப்போ எவ்வளவு பேலன்ஸ் இருக்கு? இதோ தெரிஞ்சுக்க ஈஸியான வழிகள்..!

 ஒருவரின் சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து வைப்பது உழைக்கும் நபர்களிடையே பொதுவான நடைமுறையாகும். சேமிப்பதற்கான முதல் படி சேமிப்புக் கணக்கைத் திறப்பது. தபால் அலுவலக சேமிப்புக் கணக்குகளை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில், தபால் அலுவலகங்கள் அல்லது எந்த வங்கியிலும் திறக்கலாம்.இதற்கிடையில், நீங்கள் திறக்கும் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகளில், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சேமிப்புக் கணக்கு இருப்பைச் சரிபார்க்க பல்வேறு விருப்பங்களை வழங்குகின்றன. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் இதில் உள்ளன. அதன்படி, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்புவது அல்லது மிஸ்டு கால் கொடுப்பது என தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் இருப்பைச் சரிபார்ப்பது என்பது எளிது. இதோ அதற்கான வழிமுறைகள்.

எஸ்எம்எஸ் மூலம் பேலன்ஸ் சரிபார்க்க, வாடிக்கையாளர்கள் "பேலன்ஸ்" என ஆங்கிலத்தில் டைப் செய்து 7738062873 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். சில நிமிடங்களில், அவர்களது தபால் நிலைய இருப்பு விவரங்கள் அடங்கிய செய்தி கிடைக்கும்.

இதேபோல், பதிவு செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து 8424054994 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அனுப்பினால், சில நிமிடங்களில் கணக்கு இருப்பு விவரங்கள் SMS அனுப்பப்படும்.

IPPB என்ற மொபைல் செயலி என்பது அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கின் இருப்பைச் சரிபார்க்க மற்றொரு வழியாகும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க இ-பாஸ்புக் வசதி அல்லது ஊடாடும் குரல் பதில் அமைப்பு (IVRS) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். ஐவிஆர்எஸ் மூலம் இருப்பைச் சரிபார்க்க, வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 155299 என்ற எண்ணை அழைத்து, வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

போஸ்ட் ஆபிஸ் சேமிப்புக் கணக்கு இருப்பைச் சரிபார்க்க நெட் பேங்கிங் மற்றொரு வசதியான முறையாகும். வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ தபால் அலுவலக வலைத்தளத்தைப் பார்வையிடலாம் மற்றும் அவர்களின் இருப்புத் தகவலை அணுக, அவர்களின் கணக்கில் உள்நுழையலாம்.

கடைசியாக, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க அஞ்சல் அலுவலகத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதில் அவர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை அடங்கிய செய்தியைப் பெற உள்ளிட வேண்டும்.


Home Loan: வீட்டுக்கடன் அதிக வட்டி கட்டி ஓய்ந்துவீட்டிர்களா? உங்கள் தற்போதைய வீட்டுக்கடன் வட்டியை எப்படி குறைக்கலாம்? இதோ உங்களுக்கு டிப்ஸ்..!

 நீங்கள் ஏற்கனவே வீட்டிக்கடன் பெற்று அதற்கான மாதத்தவணை செலுத்தி வருகிறீர்களா? அப்படியானல் இந்த பதிவு உங்களுக்குத்தான். நீங்கள் செலுத்தி வரும் தற்போதைய வீட்டுக்கடன் வட்டியை எப்படி குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.


குறுகிய காலம்

அதிக வட்டி செலுத்துவதைத் தவிர்க்க உங்கள் கடன் காலத்தை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும். இவை, நீண்ட காலத்துடன் ஒப்பிடும்போது, குறுகிய வீட்டுக் கடன் காலம், செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த வட்டியைக் குறைக்க உதவுகிறது.

முன்கூட்டியே செலுத்துதல்

உங்கள் வீட்டுக்கடனை அவ்வப்போது முன்கூட்டியே பணம் செலுத்துவது அசல் தொகையை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் செலுத்த வேண்டிய மொத்த வட்டியைக் குறைக்கலாம். இருப்பினும், நிலையான-விகிதக் கடன்களுக்கு முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் இருக்கலாம்.
வட்டி விகிதங்களை ஒப்பிட வேண்டும்.
வெவ்வேறு கடன் வழங்குபவர்கள் வழங்கும் வீட்டுக் கடன் மற்றும் வட்டி விகிதங்களை முடிவு செய்வதற்கு முன் ஆராய்ந்து ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பிற வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தெளிவான படத்தைப் பெற மூன்றாம் தரப்பு இணையதளங்களைப் பயன்படுத்தவும்.

கூடுதல் நன்மைகள்
வட்டி விகிதங்களைத் தவிர, வீட்டுக் கடனை தேர்ந்தெடுக்கும்போது, செயலாக்கக் கட்டணம், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் மற்றும் பிற மறைமுகக் கட்டணங்கள் போன்ற கூடுதல் நன்மைகளைத் பெறுங்கள்
வீட்டுக் கடன் இருப்புப் பரிமாற்றம்
உங்கள் தற்போதைய கடன் வழங்கிய வங்கி அதிக வட்டி விகிதத்தை வசூலிப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் மீதமுள்ள அசல் தொகையை மற்றொரு கடனளிப்பவருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மாற்றவும்.

அதிக டவுன் பேமெண்ட்
தேவையான குறைந்தபட்ச தொகையை செலுத்துவதற்கு பதிலாக முன்பணத்தை அதிகமாக செலுத்துங்கள். நீங்கள் ஆரம்பத்தில் எவ்வளவு அதிகமாகச் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு குறைவாக கடன் தொகை, நீங்கள் செலுத்த வேண்டிய வட்டியை நேரடியாகக் குறைக்கிறது.

ஃபிளோடிங் வட்டி விகிதம்

ஃபிளோடிங் வட்டி விகிதம் சந்தை அல்லது பிற முக்கிய வட்டி விகிதங்களுடன் மாறுபடும். வட்டி விகிதங்கள் குறைந்தால், உங்கள் வீட்டுக் கடனுக்கான மிதக்கும் வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுப்பது நன்மையை வழங்கும்.
நல்ல கிரெடிட் ஸ்கோர்
வங்கிகள் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு அல்லது நல்ல கடன் வரலாற்றைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை விகிதங்களை வழங்குகின்றன. உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால், நீங்கள் சிறந்த கட்டணங்களைப் பெறலாம். அதேபோல், ஏதேனும் பண்டிகை ஆஃபர்களைப் பாருங்கள். அதில், வங்கிகள் கட்டணங்களைக் குறைக்கலாம்.

EMI கட்டணத்தை அதிகரிக்கவும்
நீங்கள் அதிக ஊதியம் பெறும் வேலைக்கு மாறினால், ஆண்டுதோறும் உங்கள் EMI பேமெண்ட்டுகளை அதிகரிக்கவும். இது நீங்கள் செலுத்தும் ஒட்டுமொத்த வட்டியை கணிசமாகக் குறைக்கும்.

திருப்பிச் செலுத்தும் உத்தி
உங்கள் திருப்பிச் செலுத்தும் உத்தியை தவறாமல் கண்காணித்து, உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப அதைச் சரிசெய்யவும். உங்கள் கடன் விதிமுறைகள், வட்டி விகிதங்கள் மற்றும் கடனளிப்பவர் விதிக்கும் பிற கட்டணங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

கார் வாங்க போறீங்களா? ஆட்டோமெடிக் DCT, AMT, CVT, AT இதில் எது சிறந்தது? வழிகாட்டுரோம் வாங்க!!

 விற்பனை அளவு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய வாகன சந்தை பல ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. இளம் தலைமுறையினர் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட கார்களில் இருந்து விலகிச் செல்கின்றனர். மேலும் இந்த மாற்றத்தால் பல ஆண்டுகளாக தானியங்கி கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.


இதையடுத்து, கார் தயாரிப்பாளர்கள் போட்டியை வெல்வதற்காக பல்வேறு வகையான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை இப்போது வழங்குகின்றனர். CVT யூனிட்கள் சந்தையில் இன்னும் இருக்கும் அதே வேளையில், AMT ஆனது மிகவும் மலிவு விலைக்கு மாற்றாக நுழைந்தது. மேலும், மேம்பட்ட இரட்டை கிளட்ச் தானியங்கி டிரான்ஸ்மிஷன்கள் இப்போது மலிவு விலையில் கார்களாக வடிகட்டப்பட்டுள்ளன.

தங்கள் வசம் பல தேர்வுகள் இருப்பதால், வாங்குபவர்கள் தங்கள் பில்லுக்கு எது பொருத்தமானது என்பதில் பெரும்பாலும் குழப்பமடைகிறார்கள். குழப்பத்தைத் தவிர்க்க, உங்களுக்கு எந்த தானியங்கி கியர்பாக்ஸ் சிறந்தது என்பதைப் புரிந்துகொள்ள தொடர்ந்து முழுமையாக படிக்கவும்.

BEST AUTOMATIC GEARBOX - AMT
AMT இன் முக்கிய பங்கு கியர் பரிமாற்றங்களை தானியங்குபடுத்துவதாகும், இது கிளட்சை மட்டும் ஈடுபடுத்தி கியர்களை மாற்ற உதவுகிறது. AMT யூனிட் கிளட்ச் மற்றும் கியர்பாக்ஸை புரோகிராம் செய்யப்பட்ட RPM அளவுகளின்படி இயக்கும் ஆக்சுவேட்டர்கள் வழியாக வேலை செய்கிறது. AMTகள் மேனுவல் கியர்பாக்ஸைப் போலவே செயல்படுவதால், அவை தற்போது கிடைக்கக்கூடிய மிகவும் திறமையான மற்றும் செலவு குறைந்த தானியங்கி கியர்பாக்ஸ்களாகும்.

மேலும், நவீன மறு செய்கைகள் கியர் பாக்ஸ் பயன்முறையுடன் வருகின்றன. இது தேவைப்படும் போது இயக்கி கட்டுப்பாட்டை கைமுறையாக எடுத்துக்கொள்ள உதவுகிறது. எனவே, AMT அலகு மலிவு விலையில் வசதிக்காக தேடுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகியவை AMT வசதியில் கிடைக்கின்றன.

BEST AUTOMATIC GEARBOX – DCT

இரட்டை கிளட்ச் கியர்பாக்ஸ், ஹைட்ராலிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் சிக்கலான நெட்வொர்க்கால் நிர்வகிக்கப்படும் இரண்டு கிளட்ச்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிளட்ச் பெடலின் தேவையை நீக்குகிறது. ஒரு DCT இல், ஒரு தானியங்கி கியர்பாக்ஸுக்கு மாறாக, கிளட்ச்கள் சுயமாக வேலை செய்கின்றன. ஒற்றைப்படை-எண் கியர்கள் ஒரு கிளட்ச் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. மற்றொன்று இரட்டை-எண் கியர்கள். இந்த உள்ளமைவு, இயந்திரத்திலிருந்து கியர்பாக்ஸிற்கு மின் பரிமாற்றத்தை நிறுத்தாமல் கியர்களை மாற்றுவதற்கு ஆட்டோமொபைலை செயல்படுத்துகிறது. உதாரணமாக, ஆக்சிலரேட்டர் மற்றும் கிளட்ச் பெடல்களுக்கு இடையில் மாறும்போது மேனுவல் டிரான்ஸ்மிஷன் மூலம் நடக்கும்.

இதன் விளைவாக, மற்ற டிரான்ஸ்மிஷன்களுடன் ஒப்பிடுகையில் இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷன்கள் வேகமான கியர் ஷிஃப்ட்களை வழங்குகின்றன. செயல்திறனை விரும்பும் ஒருவருக்கு, DCT சரியான தானியங்கி வாகனம் ஆகும். இதில், Volkswagen Virtus, Kia Sonet மற்றும் Hyundai Creta போன்ற மாடல்கள் DCT கியர் பாக்ஸூடன் கிடைக்கின்றன.

BEST AUTOMATIC TRANSMISSION – CVT
CVT என்பது ஒரு தானியங்கி கியர்பாக்ஸ் ஆகும். இது இரண்டு புல்லீஸ் (pulleys) இடையில் எஃகு பெல்ட்டை இயக்குகிறது. எஞ்சினிலிருந்து டார்க் (torque) கடத்தும் டிரைவ் புல்லீஸ் விட்டம் மற்றும் சக்கரங்களுக்கு டார்க் கடத்தும் டிரைவ் புல்லீஸ் ஆகும். அதன் கியர் விகிதங்களை தொடர்ந்து மாற்றுவதற்கு CVT ஆல் ஒரே நேரத்தில் சரிசெய்யப்படுகிறது. CVT மென்மையான தானியங்கி பரிமாற்றமாக கருதப்படுகிறது. இது ஷிப்ட் அதிர்ச்சியை வழங்காது மற்றும் ஸ்டெப் இல்லாமல் கியர் விகிதங்களை மாற்றுவதன் மூலம் மென்மையான ஓட்டுதலை வழங்குகிறது.

சூப்பர் ஸ்மூத் டிரைவை விரும்புவோருக்கு CVT மிகவும் பொருத்தமானது. இயக்கி முழுவதும் ரெவ்கள் பொதுவாக அதிகமாக இருக்கும். நவீன உலகில், கார் தயாரிப்பாளர்கள் CVT அலகுகளிலிருந்து விலகிவிட்டனர். இருப்பினும், ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா அமேஸ் இன்னும் இந்த வகையான தானியங்கி வசதியுடன் கிடைக்கின்றன.

BEST AUTOMATIC TRANSMISSION – AT
தானியங்கி பரிமாற்றம் என்ற சொல் டார்க் கன்வெர்டர் தானியங்கி பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு திரவ இணைப்பைப் பயன்படுத்துகிறது. இந்த வகை கியர்பாக்ஸில் பவர் டிரான்ஸ்மிஷன் இயந்திர இணைப்பு இல்லாமல் நடப்பதால், பெரும்பாலான பகுதிகளுக்கு செயல்பாடு சீராக இருக்கும். மேலும், AT கள் நீண்ட காலமாக உள்ளன. எனவே இது மிகவும் நம்பகமானது

இருப்பினும், டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸின் ஒரே குறைபாடு அதன் எடை. அவை மிகவும் வெயிட்டானவை, எனவே செயல்திறனை ஓரளவு பாதிக்கின்றன. இதில், டாடா ஹாரியர், ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகியவை 6-ஸ்பீடு ஏடி யூனிட்களை அவற்றின் தானியங்கி தோற்றத்தில் பயன்படுத்துகின்றன.

அசத்தல் வருமானம் தரும் 3 திட்டங்கள்.... முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தருவதே இலக்கு

 2023-24ம் நிதியாண்டுக்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சிறு சேமிப்பு திட்டங்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் அஞ்சலக சேமிப்பு மீதான மாற்றங்களால் இனி வரும் நாட்களில் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



இந்த பட்ஜெட்டில் ஏற்கனவே உள்ள இரண்டு அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதோடு பெண்களுக்கான சிறப்பு டெபாசிட் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி விகிதம் கிடைக்கும் வகையில் இந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) அல்லது அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) ஆகியவற்றில் முதலீடு செய்துள்ள நபராக இருந்தால் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)

2023 பட்ஜெட்டில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதியோர்களுக்கு ஓய்வு காலத்தில் சிறந்த வருமானம் தரும் திட்டமாக இது அமைந்தது. மேலும் மிகவும் பாதுகாப்பான திட்டமாகவும் இந்த திட்டம் இருப்பதால் பலரும் இதில் தங்களின் முதலீட்டை மேற்கொண்டுள்ளனர்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு ஜனவரி-மார்ச் காலாண்டில் 8 சதவிகிதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டுள்ளது. SCSS வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச வைப்புத் தொகையான ரூ. 1,000 முதல் தொடங்குகிறது. 1,000 மடங்குகள் என முதலீட்டை அதிகரித்து கொள்ளலாம். மேலும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு, வட்டி என அனைத்துக்கும் வரி விலக்கு கிடைக்கும்.

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்

2023ம் ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளது போல, தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்திற்கான (POMIS) கணக்கு வைத்திருப்பவர்கள் முதலீடு செய்யும் தொகையின் அளவு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக இருந்தது. தற்போது 9 லட்சம் ரூபாயில் இருந்து ரூ. 15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர வருமான திட்ட முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி செலுத்துவார்கள். இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. ஜனவரி முதல் மார்ச் மாத வரையிலான காலக்கட்டத்தில் வட்டி விகிதம் 7.1 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது.

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்

பெண் முதலீட்டாளர்களுக்கான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது ஒரு முறை, குறுகிய கால சேமிப்புத் திட்டமாகும். இதன் முதலீட்டு காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்த முதலீட்டு குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

பட்ஜெட்டில் அறிவிப்பு படி ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் நினைவாக, இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு மார்ச் வரை இதன் முதலீட்டு காலம் ஆகும். இந்த திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் அதிகபட்சமாக முதலீடு செய்யப்படும், இதற்கு வட்டி விகிதம் 7.5 சதவிகிதம் ஆகும்.

வெறும் ரூ.250 முதலீடு போதும் முதிர்வு காலத்தில் ரூ.2.5 லட்சம் வருமானம்... இந்த திட்டம் பத்தி உங்களுக்கு தெரியுமா?

 2022-23 நிதியாண்டு முடிவடைந்தவுடன் மக்கள் வரிகளைச் சேமிக்கவும், அடுத்த நிதியாண்டுக்கான திட்டங்களைத் திட்டமிடவும் வழிகளைத் தேடுகின்றனர். அந்த வகையில், சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்பது ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது தனிநபர்கள் வரிகளைச் சேமிக்க அனுமதிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் பெண் குழந்தையின் நிதி எதிர்காலத்தையும் பாதுகாக்கிறது. இந்தத் திட்டம் ஜனவரி-மார்ச் 2023க்கு 7.6 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது காலாண்டுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த திட்டம் முற்றிலும் ஆபத்து இல்லாதது. ஏனெனில் அரசாங்கம் அதற்கு ஆதரவளிக்கிறது. மேலும் இது மற்ற சிறுசேமிப்புத் திட்டங்களை விட சிறந்த வருமானத்தை வழங்குகிறது.

பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் 10 வயதுக்குட்பட்ட பெண்ணின் பெயரில் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கைத் திறக்கலாம். மகளுக்கு 18 வயது வரை கணக்கு வைத்திருக்கலாம். ஒரு வீட்டில், அதிகபட்சம் இரண்டு பெண்கள் கணக்கு தொடங்கலாம். இரட்டைக் குழந்தைகள் அல்லது முன்று பேர் இருந்தால், இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகள் திறக்கப்படலாம். அதேபோல் அனைத்து வங்கிகள், தபால் நிலையத்திலும் கணக்கைத் தொடங்கலாம். மேலும், மற்றொரு வங்கிக் கிளை அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கு எளிதாக மாற்றலாம் என்பது இந்த திட்டத்தின் குறிப்பிடத்தக்க நன்மையாகும். இந்த திட்டத்திற்கு 15 வருட முதலீட்டு காலம் உள்ளது. இதன் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும்.

இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கைத் தொடங்க குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ. 250 மற்றும் அதிகபட்ச வருடாந்திர வைப்பு வரம்பு ரூ. 1.5 லட்சம் ஆகும். ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை ரூ.50 மடங்குகளில் அடுத்தடுத்த டெபாசிட்களைச் செய்யலாம். ஒரே நேரத்தில் மாதாந்திர அடிப்படையில் டெபாசிட் செய்ய உங்களுக்கு விருப்பம் உள்ளது. ரூ.50 அபராதம் மற்றும் குறைந்தபட்ச தொகை பராமரிக்கப்படாவிட்டால் கணக்கு இயல்புநிலையாக கருதப்படும். கணக்கு தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துவிடுவதற்கு முன், ஒவ்வொரு ஆண்டும் தவறியதற்கு குறைந்தபட்சம் ரூ.250 மற்றும் ரூ.50 செலுத்துவதன் மூலம், தவறிய கணக்கை புதுப்பிக்கலாம்.

ஜனவரி-மார்ச் 2023 காலாண்டில் இந்த திட்டத்தில் சந்தாதாரருக்கு செலுத்தப்பட்ட வட்டி விகிதம் 7.6 சதவீதமாக இருந்தது. ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும். இது 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதே விதியின் கீழ் வைப்புத் தொகையும் விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ரூ.250 உடன் SSY கணக்கைத் திறந்து, மாதம் ரூ.500 டெபாசிட் செய்வதன் மூலம், மொத்த ஆண்டுக்கு ரூ.6,000 டெபாசிட் கிடைக்கும். உங்கள் பெண் குழந்தைக்கு 1 வயது இருக்கும் போது கணக்கு தொடங்கப்பட்டது என்று வைத்துக் கொண்டால், பெண் குழந்தைக்கு 22 வயதாகும் போது, முதலீடு ரூ.90,000 ஆகவும், அதில் கிடைக்கும் வட்டி ரூ.1,64,606 ஆகவும் இருக்கும். அதாவது 21 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கின் முதிர்வு மதிப்பு ரூ.2,54,606 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கான வாய்ப்பு

பெண்களுக்கு தகுந்த மரியாதை, இடம் மற்றும் வாய்ப்பை அளித்தால், அவர்கள் நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் செல்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வீடு, தெருவைத் தாண்டி நாட்டையே வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள், இப்போது அவர்களது தேவைக்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். சுயதொழில் படைப்பாற்றலுடன் கூடிய புதிய சிந்தனைகளோடு, அவர்களது உழைப்பை பொருளாதாரப் பலன்களாக மாற்றி, குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப, தொடர்ந்து பொருள் ஈட்டும் வகையில் செயல்படுகின்றனர். சமூகத்தின் தேவையோடு, மக்களின் அவசியத்தை உணர்ந்து உத்திகளை வகுத்து வருகின்றனர்.

பெண்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி இப்படி அனைத்து நிலையிலும் சிறந்து விளங்குகிறார்கள்.சில பெண்களின் குடும்ப சூழ்நிலையால் அவர்களால் பணியிடத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை. அப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கான சில டிப்ஸ் இதோ. அதிக லாபம் ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.அந்த வகையில் தையல் தொழில், கேக் செய்வது, ஊருகாய் தயாரிப்பது, ரெடிமேட் சப்பாத்தி, மாவு வியாபாரம்,விஜிடபிள்ஸ் பேக்கிங், மசாலா பொடி செய்யும் தொழில் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இதில் நீங்கள் உங்களுக்கு நன்கு தெரிந்ததை தேர்வு செய்து கொள்ளலாம்.அதில லாபம் ஈட்டக்கூடிய குறிப்பிட்ட ஐந்து தொழில்களுக்கான சில டிப்ஸ்களை இங்கே காண்போம்.


தையல் தொழிலை பொறுத்தவரை நன்கு சம்பாதிக்க கூடிய தொழில் என்று தான் கூற வேண்டும்.ஒரு நாளைக்கு ஒரு பிளவுஸ் தைத்தால் 60 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.அதிலேயே வி ஷேப், யூ ஷேப், நாட் மாடல், டிசைன்ஸ் வைத்து தைத்தால் 200 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.பெண்களுக்கான சுடி தைத்தால் 400 ரூபாய் வரை கிடைக்கும். தையல் தொழிலை பொறுத்தவரை டிசைன் சுடி, டிசைன் பிளவுஸ்,திருமணத்திற்கான ஆரி ஒர்க் பிளவுஸ் மூலம் நீங்கள் அதிக லாபத்தை ஈட்ட முடியும். மாவு வியாபாரம் இன்றைய பரபரப்பான உலகில், வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது வீட்டில் காலையில் எழுந்து காய்கறிகள் வெட்டி சமைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்.எனவே சிலர் வெட்டி வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகளை வாங்கி சட்டென்று சமைத்து விடுகின்றனர்.அந்த வகையில் பூண்டு, வெங்காயம், பீன்ஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை சமைப்பதற்கு ஏற்றவாறு பாக்கெட்டில் பேக் செய்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

மாவு வியாபாரம் தொழிலை பொறுத்தவரை ஒரு கிலோ இட்லி அரிசி 34 ரூபாயாகும்.அதனுடன் உளுந்து 200 கிராம் சேர்த்து அறைத்தால் 3 கிலோ மாவு கிடைக்கும்.ஒரு கிலோ மாவு ரூ.40 க்கு விற்றால் ரூ.120 ஒரு நாளைக்கு எளிதாக சம்பாதிக்க முடியும்.நீங்கள் வீட்டிலேயே இட்லி மாவு தயாரித்து வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் தெரிஞ்சவர்களிடம் கூறியும் விற்பனை செய்யலாம். வீட்டில் இருக்கும் நிறைய பெண்கள் அவர்களின் பாட்டியிடம் ஆலோசனை கேட்டு விதவிதமான மசாலாக்களை தயாரித்து வருகின்றனர்.அந்த வகையில் இட்லி பொடி, சாம்பார் பொடி, மல்லி பொடி, கரமசாலா பொடி,பூண்டு பொடி, ரசப்பொடி, கறிவேப்பிலை பொடி இப்படி பொடி வகைகளை செய்து அருகில் இருக்கும் மளிகைக்கடை அல்லது அக்கம் பக்கத்தினரிடமும் கூறி விற்பனை செய்யலாம். இதற்கான விலையை உங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.அதே சமயத்தில் வாங்குபவர்களுக்கும் ஏற்ற விலையில் கொடுத்தால் சில நாட்களிலேயே உங்கள் பிசினஸ் சூடு பிடித்துவிடும். பெண்களால் முடியாதது ஏதும் இல்லை. நம்மை நாமே நம்ப வேண்டும். விடா முயற்சியும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் எல்லோரும் சாதிக்கலாம்''.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அதீத சோர்வை ஏற்படுத்தும் அட்ரீனல் ஹார்மோன் பற்றாக்குறை! அறிகுறிகளும் தீர்வும்!

 இன்றைய வாழ்க்கை முறை காரணமாக அட்ரீனல் சோர்வு என்பது ஏராளமான மக்களை பாதிக்கும் நோய். அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது அட்ரீனல் சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. . அட்ரீனல் ஹார்மோன்கள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது. நாம் எவ்வளவு சிறப்பாக வாழ்கிறோம் என்பது நமது அட்ரீனல் சுரப்பிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தது.

அட்ரீனல் சோர்வு தற்போதைய காலகட்டத்தில் ஒரு பெரிய நோயாக மாறி வருகிறது, உலகம் முழுவதும் பலர் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இது உங்கள் உடலை பலவீனமாகவும், சோம்பலாகவும் ஆக்குகிறது. இது அன்றாட வாழ்க்கையை சவாலானதாக ஆக்குகிறது. அட்ரீனல் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாதபோது, ​​உங்களுக்கு அட்ரீனல் சோர்வு அல்லது அட்ரீனல் சோர்வு எனப்படும் நிலை இருக்கலாம்.

அட்ரீனல் சோர்வு ஏற்படுதற்கான காரணம்

இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் கூறுகையில், அட்ரீனல் சோர்வு நீங்கள் உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான மன அழுத்தத்திற்கு ஆளாகும் போது, ​​இந்த நேரத்தில் சுரப்பிகள் உங்கள் உடலின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடும்.

அட்ரீனல் சோர்வு அறிகுறிகள்

1. அதிக சோர்வு மற்றும் புத்துணர்ச்சியற்ற தூக்கம், அதாவது, நீங்கள் 7 முதல் 8 மணிநேரம் தூங்கிய பிறகும் சோர்வாக உணர்தல், எரிச்சல் உணர்வு, கண்களின் கீழ் இருண்ட வட்டங்கள் ஆகியவை இருக்கும்

2. இனிப்பு மற்றும் காரம் நிறைந்த உணவின் மீது உங்களுக்கு அதிக ஆசை இருக்கும். பின்னர் இரவு முழுவதும் தூங்கினாலும், சோம்பல், குறைந்த சகிப்புத்தன்மை, உடற்பயிற்சி செய்த பிறகு அதிக சோர்வு ஆகியவை இருக்கும்

3. பெண்களுக்கு மாதவிடாய் முன் வயிற்று வலி அல்லது கால் வலி போன்ற பிரச்சனைகள், மாதவிடாய் காலத்தில் குறைந்த இரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகள் இருக்கும்.

அட்ரீனல் சோர்வுக்கு சிகிச்சையளிக்க ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவுகள்

1. வைட்டமின் B5 - இது பேந்தோதெனிக் அமிலம் ( Pantothenic Acid) என்றும் அழைக்கப்படுகிறது. இது மன அழுத்தத்தின் போது கார்டிசோல் சுரப்பை சமன் செய்கிறது.

2. அஸ்ட்ராகலஸ் (Astragalus)- இது ஒரு வகையான பூ, இது காய்கறியாக பயன்படுத்தப்படுகிறது. இதை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வீக்கம் குறையும்.

3. வைட்டமின் பி6 (Vitamin B6) - நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் இந்த ஊட்ட சத்து பைரிடாக்சின் என்று அழைக்கப்படுகிறது.

4. வைட்டமின் சி (Vitamin C)- ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது அட்ரீனல் சோர்வைக் குறைக்கிறது.

5. கார்டிசெப்ஸ் (Cordyceps)- - இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது தவிர, நோயெதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்வினைகளை ஆதரிக்கிறது.

6.லியூதெரோ (Eleuthero) - இந்த ஊட்டசத்து சைபீரியன் ஜின்ஸெங் என்றும் அழைக்கப்படுகிறது. இது கடுமையான மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

7. வைட்டமின் ஈ (Vitamin E)- இந்த சத்து அட்ரீனல் சுரப்பியில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கறும்பு ஜூசின் கலக்கல் நன்மைகள்: கோடை காலத்தில் உங்க பெஸ்ட் பிரெண்ட் இதுதான்!!

 கரும்பு சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்: கரும்பு சாறு மிகவும் சுவையானது. கோடை காலம் வர உள்ளதால் அடுத்த சில வாரங்களில் கரும்பு சாறு மக்கள் அதிகம் உட்கொள்ளும் பானங்களில் ஒன்றாகிவிடும். வெப்பமான கோடை காலத்தில் ஒரு கிளாஸ் கரும்பு சாறு மக்களுக்கு உடனடியாக புத்துணர்ச்சி அளிக்கும். கரும்பு சாறு இயற்கையானது. இதில் பல விதமான இயற்கையான சத்துக்கள் உள்ளன. இந்த சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. 

கரும்புச்சாறு பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஜூஸ் நம் உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது. கரும்பு சாற்றின் பல வித நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

கரும்பில் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளன. இது செல்களை சேதப்படுத்தும் மூலக்கூறுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. இந்த மூலக்கூறுகள் நீரிழிவு, மலேரியா, மாரடைப்பு மற்றும் தோல் புற்றுநோய் போன்ற பல பிரச்சனைகளை அதிகரிக்கும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக கரும்பு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. 

கரும்பில் உள்ள கூறுகள் உடல் அழற்சி, மஞ்சள் காமாலை, இரத்தப்போக்கு மற்றும் சிறுநீர் பாதை பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவியாக இருக்கும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்த சாறு நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டது.

கரும்பு சாற்றின் 3 முக்கிய நன்மைகள்

- கரும்பு சாறு குடிப்பதால் உடனடி ஆற்றல் கிடைக்கும். உடலில் உள்ள ஆற்றலின் முதன்மை ஆதாரம் குளுக்கோஸ் ஆகும். இது சர்க்கரை உடைக்கப்படும் போது உருவாகிறது. கரும்புச் சாற்றில் உள்ள சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது. நீங்கள் சோர்வாக உணர்ந்தால், ஒரு கிளாஸ் கரும்புச் சாறு உங்களுக்கு தேவையான ஆற்றலைத் தரும்.

- நம் உடலில் அதிகப்படியான குளுக்கோஸ் இருந்தால், உடல் கூடுதல் சக்தியை கிளைகோஜன் வடிவத்தில் சேமிக்கிறது. இந்த ஆற்றல் தசை செல்கள் மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. உடலில் இரத்தச் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்போது, ​​கல்லீரல், சேமிக்கப்பட்ட குளுக்கோஸை இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது.

- கரும்புச் சாற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலில் செரோடோனின் ஹார்மோனைத் தூண்டுகிறது. இதனால் உங்கள் மனநிலையை புத்துணர்ச்சி அடைகிறது. உங்கள் உடலில் செரோடோனின் அளவு குறையும் போது, ​​சர்க்கரைக்கான ஏக்கம் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், கரும்பு சாறு உங்கள் மனநிலையை மேம்படுத்தும்.

இந்த நபர்கள் கரும்புச் சாற்றை தவிர்க்கலாம்

கரும்பு சாறு மிகவும் இனிமையான சுவை கொண்டது. ஆகையால், மக்கள் அதை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்புச் சாற்றைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய நோயாளிகள் கரும்பு சாறு குடிப்பதற்கு முன் தங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இது தவிர உடல் பருமன் மற்றும் அதிக எடை உள்ளவர்களும் கரும்பு சாறு குறைவாக குடிக்க வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip